அனாதை இல்ல நிர்வாகி பாபா இறக்கும் தருவாயில் கண்ணனிடம் அவன் அனாதையில்லை, அப்பா அம்மா இருக்கிறார்கள் என்று கூறி, விவரம் அறிந்து கொள்ள டாக்டர் ராஜுவிடம் அனுப்புகிறார். கண்ணன் அனாதை இல்லத்திலேயே தன் முகத்தில் ஒரு பக்கம் இருக்கும் தழும்பு காரணமாக பல துன்பங்களையும் அவமானங்களையும் அனுபவித்தவன். டாக்டரிடம் கண்ணன் வந்து தான் யார் என்று விவரம் சொல்வதற்கு பதிலாக, சட்டென தன் முகத்தின் விகார பக்கத்தை கதவைத் திறந்த டாக்டரிடம் காட்டுகிறான். திகைத்துப் போகும் டாக்டர், அதிர்ச்சியடைந்து, பின் சுதாரித்து பின்வாங்குகிறார். முதலில் தனக்கு ஒன்றும் தெரியாது என்று மறுக்கும் டாக்டர் பின்னர் கண்ணனின் முரட்டுத்தனத்தில் ஆத்திரமடைந்தும் பின்னர் அவன் குணம் அறிந்து இரக்கப்பட்டும் விவரம் சொல்கிறார். காலையும் கையையும் உதைத்து சிவாஜி மிரட்டும் நடிப்பு.. "ஐயோ அப்பா மேல சத்தியமா சொல்ல மாட்டேன்" என்பார். "யாரிடமும் சொல்லக் கூடாது" என்று மேஜர் கேட்டதும் வேகமாக மண்டையை ஆட்டி, "ஊஹூம்.. நான் யார்கிட்ட டாக்டர் சொல்லப்போறேன்?" என்றும், "அப்பா அம்மா கிட்ட நீ யார்னு காட்டிக்கக் கூடாது" என்றதும் "ஐயோ.. நான் ஏன் டாக்டர் சொல்லப்போறேன்..? அவங்கதான் என்னை வெறுத்துட்டாங்களே" என்பதும்...
பாபா - நாகையா ; கண்ணன் - சிவாஜி ; டாக்டர் - மேஜர்.
தெய்வமகன் நான் எத்தனைமுறை பார்த்தாலும் அலுக்காத ஒரு படம். கண்கலங்க வைக்கும் சிவாஜியின் நடிப்பு. மூன்று வேடங்கள். மூன்றுக்கும் அவர் காட்டும் வித்தியாசம். மூன்றாவது சிவாஜியின் மேனரிஸங்களை அவர் இயக்குனர் ஸ்ரீதரிடமிருந்து பார்த்து செய்தாராம்.
எனக்கு இந்தப் படத்திலிருந்து சில காட்சிகளை பகிர விருப்பம். நான் பகிர நினைக்கும் காட்சி கீழுள்ள காணொளியில் 1:52 நிமிடங்களில் தொடங்குகிறது. மேஜர் கண்ணனுக்காக பரிதாபப்படுகிறாரா, சிவாஜியின் நடிப்பைப் பார்த்து வியக்கிறாரா என்றே தெரியாது. மேஜர் ஒரு பேட்டியில் இதே படத்தில் மேஜர் கேட்ட வாக்குறுதியை மீறி சிவாஜி தன் அம்மாவைப் பார்த்து விட்டு வந்து ஆடிப் பாடும் காட்சியில் (தெய்வமே... தெய்வமே...) அவர் நடிப்பை பிரமித்து பார்த்துக் கொண்டிருந்தேன் என்று சொல்லி இருக்கிறார்.
தெய்வமகன் படத்தை அரைகுறையாக எப்போதோ பார்த்த நனைவு. முழுப் படத்தைப் பார்த்ததில்லை.
பதிலளிநீக்குபாடல்களுக்குப் பதிலாக இந்த வாரம் காட்சிகளா?
நல்லா எழுதியிருக்கீங்க. வாய்சிலிருந்து டெக்ஸ்ட் என்பதால் சிவாஜியை என்பது பிலாலியை என வந்திருக்கிறதோ?
சிவாஜிக்கு கொஞ்சம் மைல்டாக நடிக்கச் சொல்லி எந்த டைரக்டராவது தேசிய விருதினைப் பெற்றுத் தந்திருக்கலாம். சிவாஜி மாதிரி, சாதாரணமாக வீட்டில் உணர்ச்சிகரமாகவோ இல்லை சாதாரணமாகவோ பேசினால், இவனுக்கு என்ன ஆச்சு எனப் பயப்படும்படியாக இருக்கும் இயல்பற்ற தன்மையால், கஷ்டப்பட்டு நடித்தும் ஒரு விருதும் வாங்காமலிருந்துவிட்டார் சிவாஜி. (தேசிய)
வாங்க நெல்லை..
நீக்குசிவாஜி நடிக்கும் காலங்களில் இருந்த இயல்பை நினைத்துப் பார்க்க வேண்டும். நாடகங்களிலிருந்து அப்படியே வந்தவர்கள். இன்று இப்படி நடிக்கலாம், அப்படி நடிக்கலாம் என்றெல்லாம் இம்ப்ரொவைஸ் செய்ய முடிகிறதென்றால் அதற்கெல்லாம் அடிப்படை கல்தூண் போலவோ, மிருதங்க சக்கரவர்த்தி போலவோ சிவாஜி. இந்தப் படத்தில் அவர் அப்படி எல்லாம் ரொம்ப ஓவராக நடிக்கவில்லை என்பது என் எண்ணம். நான் ரசித்த படங்களில் ஒன்று.
நடிப்பு என்பது என்ன? பார்வையாளர்களைக் கட்டிப்போடணும். செத்தவன் கையில் வெத்தலை பாக்கு கொடுத்ததைப்போல இருக்கக்கூடாது. அப்படிப்பட்ட நடிப்பை வெளிப்படுத்திய சிவாஜிக்கு விருது கொடுக்காததற்கு தேர்வுக்குழு வெட்கப்படணும். ஒருவேளை அவங்க எல்லாருமே தேசத் துரோகிகளாக இருந்திருப்பார்களோ? நம் தேசக் கலாச்சாரத்தைத் தெரிந்துகொள்ளாமல், நம் தேசத்து உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல், வெளிநாட்டவர் சொல்லும் அளவுகோலைப் பின்பற்றியதால் அவர்களைத் தேசத் துரோகிகள் என்று சொன்னாலும் தகும் என்றே பலர் கருதுகின்றனர்.
நீக்குசிவாஜியின் சோகப்படங்களைப் பார்த்து அழாதவர்கள் உண்டா? (சிரித்தேன் என்று சொல்பவர்களுக்கு மனித உணர்வு இல்லை, அல்லது 'எனக்கு ஆங்கிலப் படங்கள் மாத்திரமே பிடிக்கும். டமில் நோ' என்று சொல்பவர்களாக இருக்கும்). அந்த உணர்வைக் கொண்டுவரும்படி நடித்தவருக்கு விருது கொடுக்காதவர்கள் 'கபோதிகள்' என்று சொன்னால் என்ன தவறு?
அதே சமயம், அவரை அதீத நடிப்புக்கு உள்ளாக்குமாறு, கிளைமாக்ஸ் காட்சியில் வாயிலிருந்து ரத்தம் தெறிப்பது, அளவுக்கு அதிகமாக நடிக்கவைப்பது போன்ற தவறுகளை இயக்குநர்கள் செய்திருக்கிறார்கள் என்பதும் உண்மை.
நீக்குநிஜமாகத்தான் சொல்லி இருக்கிறீர்களா, அல்லது எதிர்மறையில் சதிராடுகிறீர்களா என்று தெரியவில்லை. எனினும், நீங்கள் சொல்லி இருப்பதை ஏற்றுக் கொள்கிறேன் நெல்லை!
நீக்குஅவரது ஓவர் ஆக்டிங் நம்மைக் கடுப்பேத்தினாலும், நடிப்பு என்பது என்ன? நம்மை ஒன்ற வைப்பது. அப்படிச் செய்ததில் சிவாஜி அவர்கள் வெற்றி பெற்றார் என்பதில் சந்தேகமே இல்லை. அவருக்கு சிறந்த நடிகர் விருது கொடுக்காதது (பல படங்களுக்கு) தவறுதான் ஸ்ரீராம்.
நீக்கு__/\__
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா.. வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய வெள்ளி பகிர்வு அருமை. நடிகர் திலகத்தின் தெய்வ மகன் படத்தை தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன். நீங்கள் கூறுவது மூன்று கதாபாத்திரத்திலும் நன்றாக நடித்திருப்பார்.(ஏற்கனவே நவராத்திரி என்ற படத்தில் 9 வேடங்களில், நடித்துள்ளாரே.) அந்தந்த வேடங்களில் நிலையுணர்ந்து நடிப்பது சிரமம்தான். ஒரு சிறந்த நடிகர்தான் அது இயலும்.
தாங்கள் தந்த காணொளிகளை பிறகு பார்க்கிறேன். நேற்றைய பதிவை படித்து விட்டேன். அதற்கு கருத்துரையும் பிறகு தருகிறேன். கொஞ்சம் வீட்டில் வேலைகள் வந்து விட்டன. அதனால் தாமதம் ஏற்பட்டு விட்டது. இன்றும் வெளியில் செல்ல வீட்டில் ஏற்பாடுகள். நான் உடன் போகா விடனும், போகும் மற்றவர்களுக்கு உதவ வேண்டுமே..! பிறகு வர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
*ஒரு சிறந்த நடிகர்தான் அது இயலும். என திருத்திப் படிக்கவும்.
நீக்கு"நடிகரால்தான்". எத்தனை முறை முயன்றாலும் என்ன ஒரு பிடிவாதம் இந்த கைப்பேசி தட்டச்சுவுக்கு
நீக்குஹா.. ஹா... ஹா... நடிகர் உங்களை ரொம்பப் படுத்தறார் போல கமலா அக்கா...
நீக்குஅதானே... நேற்றிரவு உங்களிடமிருந்து முத்தாய்ப்பாக ஒரு கருத்து வருமே என்று பார்த்தேன். பின்னர் 'இம்மாம்பெரிசா பதிவு போட்டா அக்கா மற்றும் படிப்பபவர்கள்தான் என்ன செய்வார்கள் என்று நினைத்துக் கொண்டேன்!
/இம்மாம்பெரிசா பதிவு போட்டா அக்கா மற்றும் படிப்பபவர்கள்தான் என்ன செய்வார்கள் என்று நினைத்துக் கொண்டேன்!/
நீக்குஅப்படியில்லை.. எம்மாம்பெரிசாக இருந்தாலும், வியாழன் கம்பத்தை நான் ரசிக்காமல் விட்டதில்லை. நேற்றும் அத்தனைப் பகிர்வும் நன்றாக இருந்தது. மதுரைக்கதையை அவர் (தங்கள் பாஸின் உறவு) பகிர்ந்தது நீங்களும் மிக் பொறுமையாக கேட்டிருக்கிறீர்கள். அடுத்த வாரம் சென்னை கதையும் இப்படித்தானோ ? அதை விட நீங்கள் அவரை வாட்டுவித்த கதையை எதிர்பார்க்கிறேன். அதுதான் எங்களுக்கும் உங்களோடு சேர்ந்து மிக உற்சாகமாக இருக்கும். ஹா ஹா ஹா.
ரோஜா மலரின் அ(பெ)ருமை கவிதை நன்றாக இருந்தது. நேற்றைய பதிவின் பக்கத்தில் கருத்தை எழுதுவதை விட, இன்றைய பதிவிலேயே அதையும் கூறி விட்டேன். இது தவறோ? அத்தனைப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
முருகா சரணம்
பதிலளிநீக்குமுருகா.. முருகா..
நீக்குவாங்க செல்வாண்ணா... வணக்கம்.
சிறப்பு.... அப்போது ஆறேழு தடவை பார்த்து இருப்பேன்... இப்போது அப்படி இயலவில்லை..
பதிலளிநீக்குநல்ல இடைவெளி விட்டு அவ்வப்போது நான் ரசிக்கும் காட்சிகள். இன்னும் சில காட்சிகளையும் அப்படிதான். புதிய பறவை, குலமா குணமா கிளைமேக்ஸ்
நீக்குபட்டி மன்றம் போல நெல்லை அவர்களும் ஸ்ரீராம் அவர்களும் வாதங்களை வைக்கின்றனர்...
பதிலளிநீக்குபல அரைவேக்காடுகள் பிறவிக் கலைஞனை ஏளனம் செய்து வயிறு வளர்க்கின்ற காலம் இது
இந்தக் காட்சிகளையே எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டு சிவாஜிகளும் சந்தித்துக் கொள்ளும் காட்சியில் கண்ணன் சிவாஜி முகத்தில் உணர்ச்சியே இல்லாமல் விஜய் ஆன்ட்டனி போல அந்த வசனங்களை பேசுவது போல கற்பனை செய்து பாருங்கள்...
நீக்குஅந்தக் கால விருதுக் குழுவினர் கலைத் தாய்க்குத் துரோகம் செய்த விட்டனர்.,
பதிலளிநீக்குபாரத் ரிச்சாக்காரன்!...
அப்போது வேறு அரசியல்களும் இருந்தன. மதியா அரசுக்கு என்ன அழுத்தங்களோ...
நீக்குஇயல்பாக ஏப்பம் விட்டவனுக்கு எதற்கு விருது?...
பதிலளிநீக்குகழைக் கூத்துக்காரர் காளை மாடாக நடித்த கதை தெரியுமா!..
ஹா.. ஹா... ஹா.. சூப்பர்.
நீக்குசிங்கம் மூப்புற்ற காலத்தில் சிற்றெலிக் குஞ்சுகள் வீரம் பேசிய கதைகளும் இருக்கின்றன..
பதிலளிநீக்குஇப்போது கூட கமல் தேவர் மகன் படத்தில் சிவாஜி காட்டிய டெடிகேஷன் பற்றி பேசியதைக் கேட்டேன். சிவாஜி உடல் நலம்மில்லாமல் இருந்த காலம்.
நீக்குமருத்துவர் கட்டாயமாக முழு ஓய்வு எடுக்கச் சொல்லி இருந்த நேரம்.
புர்ச்சியின் காலத்தில் தமிழன் தானே சுவரொட்டிகளின் மீது சாணியடித்தவன்...
பதிலளிநீக்குசிவாஜி திருமலை சென்று வந்தபோதா?
நீக்குமுழு படமும் பார்த்த நினைவில்லை. சில காட்சிகள் தொலைக்காட்சி வாயிலாகப் பார்த்ததுண்டு. சினிமாவில் அத்தனை ஈடுபாடு அப்போது மட்டுமல்ல, இப்போதும் இல்லை.
பதிலளிநீக்குநல்லது வெங்கட். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நீக்கு. நடிகர் திலகத்தின் தெய்வ மகன் படத்தை பார்த்திருக்கிறேன்அப்பா சிவாஜி ரசிகர்.
பதிலளிநீக்கு. நாடகத்தில் இருந்து சினிமாவுக்கு முன்னேறியவர். அந்த காலகட்டத்துக்கு ஏற்ற நடிப்பு இப்பொழுது ஓவர் என்பாராகள்.நீங்கள் கூறுவது போல மூன்று கதாபாத்திரத்திலும் நன்றாக நடித்திருப்பார்.
சரியாகச் சொன்னீர்கள் மாதேவி. நன்றி.
நீக்குபடம் பார்த்ததில்லை, ஸ்ரீராம், சீன் அசாத்தியம். என்ன அருமையான கதை இல்லையா? சைக்கலாஜிக்கலாக....ஒரு குழந்தை ஜஸ்ட் முகம் கொஞ்சம் இப்படி இருக்கறதுக்காக வெறுக்கப்பட்டு ஒதுக்கப்படுதல் என்பது சிவாஜி கேட்கும் கேள்விகளை வசனம் எழுதியவர் யாரோ?
பதிலளிநீக்குஇந்த சீனுக்கு ஒன்று இங்கு சொல்ல நினைத்து விடுகிறேன்.....அது வேறு வடிவமாக உள்ளதால்..
இந்த உணர்வுகள் வசனங்களை ஒரு மகனுக்கு வருவதைச் சும்மா கண்ணை மூடிக் கொண்டிருத்தல், எங்கேயோ பார்த்தல், முகத்தை மூடிக் கொண்டு அழுதல் என்று எப்படி வெளிப்படுத்த முடியும் அது பார்வையாளர்களைக் கட்டிப் போடாது இந்த உணர்ச்சிகளை இப்படிக் கொடுத்தால்தான் அந்த வசனங்கள் கவர்ந்து பார்வையாளர்களைச் சென்றடையும். கண்டிப்பாக் கண்களில் கண்ணீர் வர வழைத்திருக்கும்.
சிவாஜிக்கு நடிப்பிற்கான விருதும் கிடைக்காதது வருத்தமான விஷயமே.
கீதா
சரியாகச் சொன்னீர்கள் கீதா. சும்மா மேம்போக்காக நடித்தால் இந்த அளவு தாக்கம் படத்தில் இருக்காது.
நீக்குஅப்பா சிவாஜிக்கும் முகம் அப்படித்தான் இருக்குமா? அப்புறம் ஏன் மகனைக் கொல்லச் சொல்கிறார்?
பதிலளிநீக்குகீதா
அதைத்தான் மகன் கேட்கிறார், படத்தில்.
நீக்குஇன்னும் பார்க்கவில்லையா? அது அவருக்குள்ள தாழ்வு மனப்பான்மை என்று கொள்ளலாம்.
இப்பதான் பார்க்கிறேன் ஸ்ரீராம் அதை
நீக்குகீதா
நடிகர் திலத்தின் படங்கள் வெளியாகியிருக்கின்ற அரங்குகளில் விசிலடிச்சான் குஞ்சுகள் ரகளை செய்து ஜனங்களை அச்சுறுத்திய சம்பவஙளும் நிறையவே...
பதிலளிநீக்குநல்லவேளையாக நான் பார்த்த தியேட்டர்களில் அபப்டி ஒரு சம்பவம் நடந்ததில்லை!
நீக்குஅப்புறம் அறிமுகப்படுத்திக் கொள்வான். "என் பேரு கண்ணன்... நீங்க கூப்பிட்டு நான் தெரிஞ்சுக்க வேண்டிய பெயரை நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ளளவேண்டிய நிலை" //
பதிலளிநீக்குஅழகான வசனம். வசனங்கள்.
கீதா
ஆமாம்.
நீக்குஅப்பா, மகன்கள் இருவரும் வரும் சீன் முகத்தில் அப்படி இருக்கும் சிவாஜி ஒளிந்து பார்க்கும் இடம்.....அந்த சிவாஜிக்கும் மற்ற ஊதாரி சிவாஜிக்கும் உடல் மொழியில் என்ன வித்தியாசம் இல்லையா? மூன்று கதாபாத்திரத்திங்களையும் நடிப்பில் வித்தியாசப்படுத்திக் காட்ட செமை....
பதிலளிநீக்குகண்கள் கூட அசைவதில் ...புருவம் கன்னம்...என்று அந்த எக்ஸ்ப்ரஷன்ஸ்.
அப்போதைய காலகட்டத்தில் தேவைப்பட்ட ஒன்று.
கதையும் வசனங்களும் அசாத்தியம். யார் நடிக்க வேண்டும் என்ற தேர்வு செய்து சிவாஜியை வைத்துச் செய்தது...யார் டைரக்டர் பார்க்கிறேன்.
கீதா
ஒரு சிவாஜிக்கு புருவங்களை அடர்த்தியாக வைத்துக் கொண்டு வந்தாராம் சிவாஜி. பெரும்பாலும் எந்தப் படத்தில் நடித்தாலும், அந்தப் படத்ஜின் கேரக்டருக்காக மேக்கப்பை அவரே போட்டுக் கொண்டு வந்து விடுவாராம்.
நீக்குஇப்படியான வசனங்களை இப்படி மாடுலேஷன் கொடுத்துப் பேசினால்தான் தாக்கம்.
பதிலளிநீக்குஇப்படி மாடுலேஷன் கொடுத்துப் பேச இப்ப எந்த நடிகர்னு யோசிக்கிறேன்.
ஏன் நாம் கதைகளில் கூட அந்த உணர்வுகளைக் கொண்டு வர முயற்சி செய்கிறோமே. வாசிப்பவர்கள் விஷுவலைஸ் செய்ய.
அப்படி இருக்கும் போது இப்படி விஷுவலில் இல்லைனா இப்படியான அழகான வசனங்கள் ரீச் ஆவது மிகவும் கஷ்டம்.
கீதா
சிவாஜிக்கு இணையான, சமயங்களில் சிவாஜியை மிஞ்சும் அளவு நடிகர் கமல்.
நீக்குநடிப்பு மட்டும்தான் எனக்கு அவரிடம் பிடிக்கும். மற்ற எதுவும் இல்லை.
டைரக்டர் திரு லோகச்சந்தர். வசனம் யாரென்று தெரியலை
பதிலளிநீக்குகீதா
வசனங்கள் ஆரூர்தாஸ். சில வாரங்களுக்கு முன்னால் பாசமலர் படத்தில் அவர் வாய்ப்பு பெற்றதை ஒரு வெள்ளி பதிவில் பகிர்ந்திருந்தேன்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்று நீங்கள் தந்த தெய்வ மகன் காட்சிகளை கண்டு ரசித்தேன். இப்போது முழுவதுமாக தெய்வமகன் படம் பார்க்கும் ஆவலும் எழுந்துள்ளது. நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் நடிப்புக்குச் சொல்ல வேண்டுமா? அந்தந்த கதாபாத்திரங்களுக்குள் நம்மையும் இணைத்து ஒன்ற வைத்து விடுபவராயிற்றே..! உயர்ந்த மனிதன் படத்திலும், இவர் நடிப்பும், மேஜர் அவர்களின் நடிப்பும் மறக்க முடியாதது. இன்றைய வித்தியாசமான பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.