இந்த விடுமுறை நாளில் சும்மா படம் பார்த்து கமெண்ட் அடிச்சிட்டுப் போய்விட முடியாது. உங்களுக்கு ஓர் எளிய படைப்பாற்றல் பயிற்சி.
படைப்பாற்றல் பற்றிய புத்தகம் ஒன்றை சென்ற மாதம் படித்தேன். அதில், படைப்பாற்றலைப் பெருக்கிக் கொள்ள, ஒவ்வொருவரும் ஒரு நாளில் 'இரண்டே நிமிடங்கள்' செலவழித்தால் போதும் என்று எழுதி இருந்தார் அந்த நூலாசிரியர்.
ஒரு சிறிய வெள்ளைத் தாள், பென்சில் அல்லது பேனா (கலர் கிரேயான்ஸ் - இருந்தால் அதையும்) எடுத்துக்குங்க.
நேரம் : இரண்டு நிமிடங்கள் மட்டும்தான். (நூற்று இருபது வினாடிகள்)
வெள்ளைத் தாளில், இங்கே காணப்படும் வழிமுறையைப் பின்பற்றி, படம் வரையுங்கள்.
START :
ஸ்டெப் ஒன்று:
ஸ்டெப் இரண்டு:
ஸ்டெப் மூன்று :
ஸ்டெப் நான்கு : (கலர் பென்சில் / பென் / கிரேயான் இருப்பவர்கள் மட்டும்)
ஸ்டெப் மூன்று / ஸ்டெப் நான்கு முடித்தவர்கள், அதை வரைந்தவரின் பெயரை, படத்தின் மீது (" Art by : ....................." ) எழுதுங்கள்.
CAMERA :
பிறகு, அந்தப் படத்தை டிஜிட்டல் காமிராவால் கிளிக்குங்கள். ( Or scan and save the image in digital format.)
ACTION :
அந்தப் படத்தை, அப்படியே, engalblog@gmail.com என்ற எங்கள் முகவரிக்கு அனுப்புங்கள். (JPG format preferred)
ஒருவர் அல்லது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எல்லோரும், எவ்வளவு படங்கள் வேண்டுமானாலும் அனுப்பலாம்.
எல்லா படங்களும் - எங்கள் பிளாகின் சைடு பாரில் ஒரு நாளுக்கொன்றாக வெளியிடப்படும்.
குறிப்பு: இது போட்டி அல்ல. படைப்பாற்றல் பயிற்சி.
வாசகர்களுக்கு / வாசகர்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு இந்தப் படைப்பாற்றல் பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கின்றோம்.
அடுத்த ஞாயிற்றுக் கிழமைக்குள் வருகின்ற படங்கள் அனைத்தும் பிரசுரத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும்.


