வெள்ளி, 25 டிசம்பர், 2009

ஆவலைத் தூண்டும் புதிர்க் கதை?

 ஒரு ஊரில் நாய்க் கட்சி நரிக் கட்சி என்று இரண்டு அரசியல் கட்சிகள் இருந்தன.  நாய் அல்லது நரி மட்டும் தான் ஆட்சி செய்ய வேண்டும் என்ற அவல நிலை அந்த ஊரில் ஏற்பட்டு விட்டது. காரணம் முன்பு செல்வாக்காக இருந்த மாட்டுக் கட்சி ஒரு மடத் தனம் செய்து தன செல்வாக்கை முற்றிலும் இழந்தது.
 
நாயும் நரியும் சதா சண்டை போட்டுக் கொள்வதிலும் ஒருவரை ஒருவர் குறை சொல்லிக் கொள்வதிலும் காலம் கழித்துக் கொண்டிருந்ததால் நாடு குட்டிச் சுவர் ஆகிக் கொண்டு வந்தது. இப்படி சேற்றை வாரி இரைக்காத நேரங்களில் நாயும் நரியும் தமது செல்வத்தை வளர்த்துக் கொள்வதிலும், கண்டு பிடிக்க முடியாத திருட்டு புரட்டுகளிலும் சுறு சுறுப்பாக ஈடு பட்டிருந்தன.
 
இப்படி இருக்கும் போது ஒரு சிறந்த பக்தர் ஒரு சிறந்த குருவை அணுகினார். அவரிடம் ஒரு அரசியல் கேள்வி மற்றும் கோரிக்கை வைத்தார். 
 
அது என்ன?  நீங்கள் ஊக்குவித்தால் சொல்கிறேன். அதுவரை ஜூட்.  
 

16 கருத்துகள்:

  1. அந்த குரு இந்த்ரா சாமி..ச்சீ...மந்த்ரா சாமியா இருந்தா கூட எங்களுக்கு ஓகே . ஊக்கு குடுங்க விக்கறோம்...

    பதிலளிநீக்கு
  2. கேள்வி: என்னை நாயா நரியா மாத்த முடியுமா?
    கோரிக்கை: முடியாதென்றால், அவர்களை மனிதர்களாக்குங்கள்.

    பதிலளிநீக்கு
  3. ஊக்கு என்ன, சொல்லுங்கள்! ஊரையே வித்துடுவோம்!

    பதிலளிநீக்கு
  4. ஏதோ உள்குத்து கதை மாதிரி தெரியுது....சஸ்பென்ஸ் வைக்காம கதைய சொல்லுங்க.

    பதிலளிநீக்கு
  5. எதுவான்னாலும்... சொல்லுங்க..... அந்த நாய் நரியை கொல்லுங்க.

    பதிலளிநீக்கு
  6. கே:பாம்பும் கீரியும் ஆட்சி செய்தால் எப்பிடி இருக்கும் ?
    கோரிக்கை : சாக்கடை இல்லாமல் உலகம் இருக்க வேண்டும்

    பதிலளிநீக்கு
  7. என்ன இலங்கையின் அரசியலை இவங்களும் நடத்துராங்கபோல. எதிர் கட்சி அரசியல்வாதிகளை பேரம்பேசி விலைக்கு வாங்கினால் உண்மை வெளியில வரும் என்று சொல்லி இருப்பார்.
    அனைவருக்கும் இனிய நத்தார், மற்றும் புதுவருட வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. //chandru said...

    கோரிக்கை : சாக்கடை இல்லாமல் உலகம் //

    சந்துரு

    இது நியாமா ?

    சுகாதார மந்திரியே நாடு ரோட்டில் லுங்கியை தூக்கி பிஸ் அடிக்கும் அவலம், நீங்கள் ரொம்பத்தான் ஆசபடுரீக !

    பதிலளிநீக்கு
  9. மாட்டு கட்சி, நரி கட்சி, நாய் கட்சி எல்லாம் புரியுது எதுன்னு தெரியுது.

    ஆனா அந்த சீடரும் குருவும் தான் யார்னு விளங்கமாட்டுது.

    பதிலளிநீக்கு
  10. தமிழ்நாட்டு அரசியல் மாதிரில்ல இருக்கு..

    பதிலளிநீக்கு
  11. சஸ்பென்ஸ் வைக்காம கதைய சொல்லுங்க.

    பதிலளிநீக்கு
  12. சிறந்த பக்தர் சிறந்த குருன்னு சொல்லியிருக்கீங்க.அதனால அவங்களை நாய் நரிகூட கூட்டு வச்சிருவாங்கன்னு பயமில்ல.

    இது இலங்கை அரசியல்.ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன என்கிற கதைதான்.எங்கட நாட்டில இப்ப இந்தக் கதைதானே நடந்துகொண்டிருக்கு.
    கேட்பாரேயில்லாமல்.

    பதிலளிநீக்கு
  13. //நீங்கள் ஊக்குவித்தால் சொல்கிறேன்//

    எனக்கு ஊக்கு வாங்கவே தெரியாது. விக்க சொல்றீங்களே! ரங்க நாதன் ஸ்ட்ரீட்ல வித்தா கொஞ்சமாவது போனியாகும். ஆனா அங்கெ ஏற்கனவே ஊக்கு விக்கிறவங்க நிறைய இருக்காங்க. நான் புதுசா போய் ஊக்கு வித்தா சண்டைக்கு வருவாங்களே. எதுக்கும் யோசிச்சு ஒரு முடிவுக்கு வரேன்.

    நீங்க தொடருங்க.

    பதிலளிநீக்கு
  14. இயேசு தாகூர் எல்லாம் தெரியவில்லை என்று வருந்தும் நண்பர்களே, நீங்கள் கருத்தில் கொண்டுள்ள மையப் புள்ளியை மாற்றி வைத்துப் பாருங்கள் எல்லாம் தெரியும்.

    பதிலளிநீக்கு
  15. ரவி,

    நீங்க யாரச் சொல்ல வரீங்கன்னு தெரியுது....
    --------------------

    ஆஹா, அனானி,

    அரசியல்னதும் ஊரை விக்கட் தயார் ஆயட்டீங்களே..
    --------------------------

    பெரிய கதை அது பெயர் சொல்ல விருப்பமில்லை....தொடர் கதை அது...
    --------------------------------

    அரசு,
    துப்பாக்கியைத் தூக்கிடறீங்க....
    ----------------------------------

    சந்துரு,
    பாம்பு மேலே விழுந்து கீறினாமாதிரி இருக்கலாம்....!
    சாக்கடை இல்லாமல் இருந்தாலும் நாறிடுமே...
    ----------------------------------

    சந்ரு,
    அரசியல்வாதிகள் உலகம்பூரா ஒன்றுதான்...
    ----------------------------------

    பின்னோக்கி,
    சாட்டையால் அடித்தால் வரும் இல்லை?
    -----------------------------

    சரியா சொன்னீங்க சாய்...
    ----------------------------------

    அட ஆதி,
    பாதி விளங்கிடுச்சே உங்களுக்கு... எங்களுக்கு ஒண்ணும் புரியலை போங்க...
    ---------------------------------

    புலிகேசி,
    ஆல் இந்தியா அரசியலிலும் வித்யாசம் இல்லை...
    ----------------------------------

    ஹேமா..
    சந்ருவுக்கு சொன்ன பதில்தான் உங்களுக்கும்...அரசியல்...அது தனி ஜாதி.
    ------------------

    hayyram,
    தொடர்கிறது....
    ----------------------------------

    அனானி,
    இயேசு தாகூர் மையப் புள்ளியை மாற்றச் சொல்லும் நீங்கள் பின்னூட்டம் இடும் இடத்தின் புள்ளியை மாற்றி விட்டீர்கள்...!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!