வெள்ளி, 4 மார்ச், 2011

படப் புதிர்

   
இது என்ன?

கற்பனைக் குதிரையை கடிவாளம் இல்லாமல் ஓட்டி
எங்கள் ஓவியர் என்ன நினைத்து இதை தீட்டி
இருக்கிறார் என்று கருத்து பதியுங்கள்.



22 கருத்துகள்:

  1. மொட்டை தலை ஆள்.... பேப்பர் வாசிக்கிறார்.

    பதிலளிநீக்கு
  2. என்னாத்துக்கு வெத்துப் பேப்பர் படிக்கறாரு ? ... தெரியலை..

    பதிலளிநீக்கு
  3. மொட்டைமாடில கொடில துணி காயுது...
    அதன்மேல கொஞ்சமா நிலா காயுது...
    :)

    பதிலளிநீக்கு
  4. நான் பேப்பரே படிக்கறதில்லையே. இது புனைவு படம். செல்லாது=))

    பதிலளிநீக்கு
  5. மேலே சிதிலமாகி, நடுவில் கீறல் விழுந்த உயரமான மதில் சுவர். இரவு வானம். எட்டிப் பார்க்கும் நிலா.

    இரவு வானம் இத்தனை நீலமா இருக்குமா எனக் கேட்டால், இருக்கும். பாருங்க இங்கே :)!

    பதிலளிநீக்கு
  6. ராமலெஷ்மி மேடம் சொன்னது சரியாக இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  7. பார்க், நடுவில் இருப்பது குடை. படத்தின் இடது வலது ஓரங்களில் மரங்களின் கிளைகளில் உள்ள இலைகள் #ரொம்ப அபத்தமா படுதோ

    பதிலளிநீக்கு
  8. பின்னூட்டம் முதலேயே பாக்கக்ட்கூடாது.அதனால மொட்டைத்தலை,நிலா,வானம்,பேப்பர்,கைவிரல்கள்,கொடில துணி,
    மரம்,இலை எல்லாமே தெரியுது !

    பதிலளிநீக்கு
  9. பெண்டாட்டிக்கு தெரியாம பேப்பரில் வைத்து பலான படம் பார்க்கிறார் !! எப்படிடா சாய் எப்படி யோசிக்கறே நீ ?

    பதிலளிநீக்கு
  10. ஹேமா,
    அதனால்தான் நான் பின்னூட்டம் பார்க்காமலே முதலில் கருத்தை சொல்லி விட்டேன்:)! பிறகு பார்த்தால் என் கட்சிக்கு புவனா இருக்காங்க, நிலவைக் காட்ட.

    பதிலளிநீக்கு
  11. கைவிரல்கள்,கொடியில் இருக்கும் வேட்டியைச் சரிபடுத்துகிறதோ.

    பதிலளிநீக்கு
  12. இல்லையில்லை புதிதா மொட்டை அடித்துக் கொண்டவர் பேப்பர் படிக்கிறார்:)
    3,பின்னாடி நீல சேலயில் ஒரு வெள்ளை வட்டம் டிசைன்.

    பதிலளிநீக்கு
  13. திருப்பதிக்கு போய் முடி காணிக்கை செலுத்திட்டு வந்த கையோட சோபாவுல உட்கார்ந்து பேப்பர் படிக்கும் ஒருவர். (இவ்ளோ ஜவ்வு மாதிரி இழுத்தும் சொல்லலாம்!!!)

    பதிலளிநீக்கு
  14. பார்த்த உடனே எனக்கென்ன தோணித்துன்னா, ஒரு விசாலமான மலைப்பாதை.. அது கீழ் நோக்கி போகுமிடத்தில் நிலா மேலெழும்புகிறது.. எப்பூடீ?

    பதிலளிநீக்கு
  15. காந்தி முதுகு துடைக்கும் பொழுது.

    பதிலளிநீக்கு
  16. - நீலவானின் சூரியனை மறைத்து கடலோரத்தில் வெள்ளை குதிரை

    பதிலளிநீக்கு
  17. //முனைவர்.இரா.குணசீலன் said...
    நிலவு செய்தித்தாள் படிக்கிறதா..//

    Super

    பதிலளிநீக்கு
  18. மொட்டை / வழுக்கைத் தலையர் தினசரித் தாள் படிக்கிறார் என்று சொன்னவர்கள் ஒவ்வொருவருக்கும் 250 பாயிண்டுகள். நிலவை சம்பந்தப் படுத்தி எழுதியவர்கள் ஒவ்வொருவருக்கும் 300 பாயிண்டுகள். நகைச்சுவை கருத்து சொன்னவர்களுக்கு 400 பாயிண்டுகள். படத்தில் உள்ள ஐந்து மேட்டர்களையும் கற்பனையில் இணைத்தவர்களுக்கு 500 பாயிண்டுகள். இலக்கியமாக கருத்துரைத்தவர்களுக்கு 700 பாயிண்டுகள். நேராகவும், வித்தியாசமாகவும் கருத்துரைத்த அப்பாதுரை அவர்களுக்கு ஆயிரம் பாயிண்டுகள். பங்கேற்ற வாசகர்கள் அனைவருக்கும் எங்கள் நன்றி.

    பதிலளிநீக்கு
  19. பின்னூட்டங்களும் புதிரும் சூப்பர்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!