திங்கள், 13 ஜனவரி, 2014

திங்க கிழமை 140113:: பொங்கலோ பொங்கல்!

     
பச்சரிசி : அரை லிட்டர்
பயற்றம் பருப்பு : இருபது கிராம்.
முந்திரிப் பருப்பு: நூறு கிராம்
மிளகு: இருபது.
சீரகம் : ஒரு டீ ஸ்பூன்.
நெய் : நூறு மி லி
இஞ்சி : இரண்டு கன செ மீ
உப்பு : தேவைக்கு ஏற்ப.
மஞ்சள் பொடி: இரண்டு சிட்டிகை.
கறிவேப்பிலை: இரண்டு ஈர்க்கு.
 
 

 
பயற்றம் பருப்பை, ஓர் இரும்பு சட்டியில் இட்டு, மிதமான சூட்டில், இரண்டு மூன்று நிமிடங்கள் ஈரப்பதம் போகும் அளவிற்கு சூடு செய்து கொள்ளுங்கள். சட்டியில் சூடாகும் பருப்பை, ஒரு கரண்டியால் புரட்டிக் கொண்டு இருந்தால், நல்லது.

சூடு ஆறிய பயற்றம் பருப்பை, பச்சரிசியோடு நன்கு கலந்து, தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு பாத்திரத்தில், ஒன்றே முக்கால் லிட்டர் சுத்தமான தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள்.

அடுப்பில் அந்தத் தண்ணீர்ப் பாத்திரத்தை ஏற்றி, அடுப்பைப் பற்றவைத்து நீரைக் கொதிக்க வைக்கவும்.

நீர் கொதிக்கும் பொழுது அதில் பச்சரிசி + பயற்றம் பருப்புக் கலவையை போடவும்.

அரிசி & பருப்புக் கலவை நீரில் வெந்தவுடன், மஞ்சள் தூள் மற்றும் தேவைக் கேற்ப உப்பு சேர்த்து, கலக்கிக் கொள்ளவும்.

இஞ்சியை தோல் நீக்கி, பொடிப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

இரும்பு சட்டி (வாணலி) யில் நெய் ஊற்றி, அடுப்பில் வைத்து, அடுப்பைப் பற்றவைக்கவும்.

நெய் காய்ந்ததும், மிளகைப் போடவும். மிளகு வெடிக்கத் துவங்கியவுடன் சீரகத்தைப் போடவும்.

உடனேயே முந்திரிப் பருப்பு, கறிவேப்பிலை இலைகளைக் கிள்ளிப்போட்டு, இஞ்சித் துண்டுகளையும் போடுங்கள்.

முந்திரிப் பருப்புகள் சிவந்ததும், அடுப்பிலிருந்து இறக்கிவிடவேண்டும். (எச்சரிக்கை: முந்திரிப் பருப்புகள் கருக்கக் கூடாது.)

இந்த மிளகு, மு ப, நெய், சீ, க வே, கலவையை, ஏற்கெனவே செய்து வைத்துள்ள பொங்கலில் போட்டு, நன்றாகக் கலக்கவும்.

சிலர் இதோடு கொத்துமல்லித் தழைகள் கூட சேர்ப்பது உண்டு.

அப்புறம் என்ன?
   
பொங்கலோ பொங்கல்!  தேங்காய் சட்டினியுடனோ அல்லது கத்தரிக்காய் கொத்சுவுடனோ சேர்த்து நாலு கரண்டி பொங்கல் சாப்பிட்டு மகிழுங்கள்!
           

15 கருத்துகள்:

  1. பொங்கலோ பொங்கல்...!

    தித்திக்கும் தைப்பொங்கல் மற்றும் உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. இனிய பொங்கல் வாழ்த்துகள்..!
    SUBBU THATHA

    பதிலளிநீக்கு
  3. குறிப்புகளைக் கவனமாக வழங்குகிறீர்கள்:)!

    எங்கள் ப்ளாக் ஆசிரியர்களுக்கும் குடும்பத்தினருக்கும் வாசகர்களுக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!!

    பதிலளிநீக்கு
  4. தங்களுக்கும் தங்களின் அன்பான குடும்பத்தினர், நண்பர்களுக்கும் என் இனிய உழவர் திருநாள் மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துகள் - நா.முத்துநிலவன்

    பதிலளிநீக்கு
  5. கூடுதல் தகவல்கள்: அரிசியையும் வறுத்துக்கலாம். பாதி நீரைக் குறைத்துவிட்டுப் பாலை விடுங்க. அப்புறமாப் பாருங்க பொங்கலின் சுவையை! மிளகை முழுசாகப் போடாமல் பாதி மிளகைப் பொடி செய்து கொண்டு மீதி மிளகை முழுசாப் போடுங்க. மிளகுக்காரம் இறங்கி, பால் சுவையோடு, கத்தரிக்காய், முருங்கைக்காய், தக்காளி, பச்சைமிளகாய் சேர்த்த கொத்சு அல்லது குழம்போடு பொங்கலைச் சுவைக்கவும். :))) குழம்பு செய்முறை சாப்பிடலாம் வாங்க பக்கத்தில்.

    ஹிஹி இலவச விளம்பரம்!

    பதிலளிநீக்கு
  6. எல்லோருக்கும் பொங்கல் வாழ்த்துகள் பொங்கல் ஜோராக இருக்கு. அவரவர்கள் செய்வதில் சிறிது வித்தியாஸமிருந்தாலும்,ருசியும்,தேவையான பொருட்களும் ஒன்றே. வடையும் கன ஜோராக உள்ளது. அன்புடன்

    பதிலளிநீக்கு
  7. சர்க்கரைப் பொங்கல் செய்ய மாட்டீங்களா?
    எங்கள் ப்ளாக் ஆசிரியர்களுக்கு இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு

  8. எங்கள் ப்ளாக் ஆசிரியர்களுக்கும் குடும்பத்தினருக்கும் வாசகர்களுக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!!

    சர்க்கரைப்பொங்கல் எங்கே??

    பதிலளிநீக்கு
  9. வெண்பொங்கல் குறிப்பு அருமை!
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  10. நல்ல தகவல் அண்ணா...
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

    எனது முகநூல் முகவரி : நித்யா குமார்

    பதிலளிநீக்கு
  11. சட்டினி கொத்சுடன் சேர்த்து சாப்பிடுங்கள்னு கடைசியில் சொல்லியிருக்கீங்க.. ஓஓ.. அதையும் செய்யணுமோ?

    நாலு கரண்டியா? கரண்டி அளவு சொல்லலியே.. எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர் தினம் காலையில் ஒரு டம்ளர் ஜூஸ் மட்டும் குடிப்பதாகச் சொல்லிட்டிருப்பார்.. ஒரு நாள் டம்ளர் சைஸ் சொன்னார் பாருங்க..

    பொங்கல் வாழ்த்துக்கள். புத்தகக் கண்காட்சி புண்காட்சி ஆகாதிருக்கட்டும். கிழக்குப் பதிப்பகத்தார் வாடிக்கையாளரை மதித்து நடகட்டும்.

    பதிலளிநீக்கு
  12. அருமையான பொங்கல். படங்கள், பொங்கல் செய்முறை அருமை.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  13. பொங்கல் செய்முறை ..... மிக நன்று.

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்....

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!