புதன், 9 அக்டோபர், 2019

நம்பவே முடியாத உண்மை



க.ப. அதிரா  :

1. பேய் பார்த்த அனுபவம் உண்டோ?  பழைய கதைகளை நம்புறீங்களோ? நாங்க பார்த்தமே  ..:)).




#   பணப்பேய் சந்தேகப்பேய் நினைவுக்கு வருகின்றன.  மற்றது ஏதும் கண்டதில்லை.

*  சிலரை பேயாய்ப் பார்த்த அனுபவம் உண்டு.   அது இருக்கட்டும்...  நீங்கள் ஒரு அனுபவம் சொல்லத் தயாராய் இருப்பது தெரிகிறது.  கேட்க நாங்கள் ரெடி!


2. நாங்கள் எல்லோரும் விழுந்து புரண்டும் சிரிக்கும்படியா ஒரு ஜோக் சொல்லுங்கோவன்.





#  அது தெரிந்தால் தினமலருக்கு இந்நேரம் அனுப்பியிருப்பேனே.

*  நீங்கள் விழுந்து புரண்டு சிரிக்கிறீர்கள் என்று எப்படித் தெரியும்? வீடியோ எடுத்து அனுப்புவதாய் இருந்தால் சொல்லலாம்!


3. தன்குஞ்சு மட்டும்தான் பொன்குஞ்சு என நினைப்போரைப் பற்றி உங்கள் கருத்து?

#  என்னைப் போலவே..

*  இயற்கைதானே!


4. எந்தச் செயலைப் பார்க்கும்போது, இதெல்லாம் ஒரு பைத்தியக்காரத்தனம் எனத் தோன்றும்?  

#  டாட்டூ & தோனி கிராப்

*  நிறைய இருக்கிறது!  முள்ளம்பன்றி போல தலைமுடி வெட்டிக்கொள்வது, சற்றே குனிந்தாலும் பின்னால் உள்ளுடை தாண்டியும் தெரியும் வண்ணம் பேண்ட்ஸ் போடுவது... 






டி ஏ மாலதி சென்னையிலிருந்து சுஜாதாவைக் கேட்கிறார் :  "ஆவி, பேய், பிசாசு...   இவைகள் எல்லாம் இல்லாத தொலைக்காட்சித் தொடர்களைப் பார்ப்பது அரிதாக இருக்கிறதே, ஏன்?

சுஜாதா பதில் அளிக்கிறார் :  "மக்கள் பயமில்லாமல் பயப்படவிரும்புகிறார்கள் என்று தெரிகிறது!"


==========================================


ஏஞ்சல் :

1)  ஒரு எழுத்தாளரின் கதைகள் எழுத்துக்கள் அவர் இளவயது மற்றும் வாழ்க்கையின் அனுபவங்களை பிரதிபலிக்கிறதா ?




#  பெரும்பாலும் ஆம்.

* அப்படி அவசியமில்லை. எவ்வளவு அப்படி எழுத முடியும்?  கேட்ட கதைகளாகவுமிருக்கலாம்.  கற்பனையாகவும் இருக்கலாம்.

2) பொதுவாக வீடுகளில் அன்றைய சமையல் யாரால் தீர்மானிக்கப்படுகிறது ?  சமைப்பவராலா அல்லது சாப்பிடுபவராலா ?




#  ஃப்ரிட்ஜில் உள்ள பண்டங்களால் தான்.

*  குறை சொல்பவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்தால் இரண்டு நாட்களில், அதிக பட்சம் ஒரு வாரத்தில் வழிக்கு வந்து விடுவார்!

3) பேசியே கொல்வது பேசாமலே கொல்வது  எது சிறப்பு ? எதை பொறுத்துக்கொள்ளலாம் ?





#  பேசிக் கொள்வதை.

*  அதீதமாய் எதுவும் வேணாம்.  அளவோடு இருந்தால் போதும்!

4)  உயர் கல்வி எதை வைத்து தீர்மானிக்கப்படுகிறது ? எதிர்காலத்தில் வாழ்க்கைக்கான ஸ்ட்ரோங் அஸ்திவாரம், நிரந்தர வருமானம் பட்டம் பதவி அந்தஸ்து  இவற்றில் எது ?





#  ஆசை மற்றும் வசதிதான் தீர்மானம் செய்ய வைக்கிறது.

*  எல்லாம்.  தெரிந்து கொள்ள நினைப்பவர்கள் அதைக் கல்வியாக நினைக்க மாட்டார்கள்!


5) சுவை என்பது மனம் சம்பந்தப்பட்டதா அல்லது பசியுணர்வு சம்பந்தப்பட்டதா ?




#  அனுபவம் பாற்பட்டது.

*  பசி வந்ததும், மனம் தனக்குப் பிடித்த லிஸ்ட்டை மூளை நியூரான்களில் நிரடி ஆசையைத் தூண்டுகிறது!


6)  நீங்க நம்பவே முடியாத உண்மை என்ன ?

#  இதுவும் கடந்து போம் என்பதுதான்.

*  "இறந்தவனைச் சுமந்தவனும் இறந்துட்டான்...    அதை இருப்பவனும் எண்ணிப்பார்க்க மறந்துட்டான்..."



தெரியாத உண்மை எது?  தெரிந்த பொய் எது? -  இரா.  திருக்குமரன், நாமக்கல்.

தெரியாத உண்மை - கடவுள்.  தெரிந்த பொய் - தேர்தல் சபதங்கள்.- சுஜாதா.



7) வெளியிடங்களில் தெரியாம வழுக்கி விழுந்து, விறுவிறுன்னு எழும்பி யாரவது பார்த்திருப்பாங்களோன்னு சுற்றுமுற்றும் பார்த்து  திருப்தி பட்டிருக்கீங்களா :) ??? 




#  இல்லை.

*  இல்லை.  ஆனால் அப்படி விழுபவர்களில் பெரும்பாலானோர் ஆறுதல் தேடி சுற்றுமுற்றும் புலம்பலாய்ப் பார்த்ததைப் பார்த்திருக்கிறேன்!  அதிலும் எப்பவுமே அடுத்தவர் மேல் பழி!


8) குண்டு குண்டா இருக்கிற கொழுக் மொழுக் பாப்பாவை ஹெல்த்தினும் ஆரோக்கியமா இருக்குன்னும் ஏற்கும் மனம் அதே குண்டா ஆன பெண்களை மட்டும் ஆரோக்கியமில்லைன்னும் வெயிட்டை குறைக்கணும்னும்  சொல்வதேன் ?





#  முன்னது எதிர்கால வளர்ச்சிக்கு உத்தரவாதம் பின்னது கடந்த கால மிகைமீறல்களின் அடையாளம்.

*  பாப்பாவையே அப்படி நான் ஏற்பதில்லை!  அது சரி, பெண்களை மட்டும்தான் சொல்வார்களா?


9) பாராட்டும்போது இரு கரங்களை சேர்த்து தட்டுவோர் எதிர்ப்பு தெரிவிக்கும்போது ஒரு கரத்தை ஒங்கி மேஜையில் தட்டுவதேன்?





#  முன்னது ரசனையின் ஒலிக்குறிப்பு. பின்னது எதிரி மண்டையின் இடுகுறி.

*  அறிவிழக்க வைக்கும் ஆத்திரம்!  உணர்வுக் குழப்பம்.


10)  எல்லாத்துக்கும் நிறம் இருக்கா ?  நீரின் நிறம் என்ன? கண்ணாடியின் நிறம் என்ன ?

#  சுத்தமானதானால் நிறமற்றது என்றுதானே அறிவியல் சொல்கிறது !

*  எல்லா நிறமும் அதற்குச் சொந்தம்!





"நீங்கள் கவனிக்கும் விஷயங்களை எழுதுகிறீர்களா? அல்லது எழுதுவதற்காக கவனிக்கிறீர்களா?  இரண்டாவது என்றால் விஷயங்களை இயல்பாய் ரசிக்க முடியாமல் போய்விடுமே" -  இது ஜே. அர்விந்தின் கேள்வி.


சுஜாதா பதில் :  "கவனிக்கும்போது இரண்டும் இயங்கும்.  எங்காவது ஒரு மூலையில் மூளையில் பதிவாகும்.  பின்பு எழுத்தாகும்."



============================================

துளசிதரன்: 

வேலைக்குச் சென்று கொண்டிருக்கும் ஆண்களுக்கு விடுமுறை தினங்கள் வரமா? சாபமா?

#  வேலையை ரசித்துச் செய்வோருக்கு ஓய்வு மட்டுமே.  ஈட்டிய விடுப்பு.

*  வரமே!

பள்ளிக் கூடம் இல்லாமல் ஆன்லைனில் கல்வி கற்கலாம் என எதிர்காலத்தில் வந்துவிடும் என்று பேசப்படுவது சிறந்ததா? இதனால் பாதிப்புகள் என்ன நன்மைகள் என்ன?

#  ஆன்லைனில் கல்வி:  பணச்செலவு குறைவதால் லாபம்.  நட்புகள் நஷ்டம்.

$  பள்ளி செல்லாமல் கற்கலாம்.  ஆனால் பட்டம் பட்டயம் என்று சான்று கேட்குமிடத்தில் வேலை வேண்டும் என்றால்?





"​கேபிள்​ டீவியில் திரையுலகுக்குப் பாதிப்பு என்பதுபோல், இன்டர்நெட் வாயிலாக எத்துறைக்கு பாதிப்பு ஏற்படும் ஸார்?"​  என்று இரா. மாதவராமன் கிருஷ்ணகிரியிலிருந்து எழுத்தாளர் சுஜாதாவைக் கேட்டிருக்கிறார்.

சுஜாதாவின் பதில்  :  "எந்தத்துறைக்கும் பாதிப்பு ஏற்படாது.  எல்லாத்துறையும் செழிக்கும்."


================================================================================


வாட்ஸாப் கேள்விகள் 

நெல்லைத்தமிழன் :

1. இப்போ தென்னாப்பிரிக்காவுக்காக ஆடும் செனூரன் முத்துசாமி அவர்களின் முன்னோர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இந்த 'செனூரன்' என்பது செந்தூரன் என்று அவர்கள் பெற்றோர் திருச்செந்தூரை மனதில் வைத்து, அவருக்கு வைத்த பெயராக இருக்குமா?



$  மெய்வழிசாலை சேர்ந்தவர்கள் செந்நூரன் என்றெழுதி செந்தூரன் என்று படிப்பார்கள். இவரும் அனந்ந ரோ?

#  இருக்கும். 

*  கேசவ் மகராஜுக்கு என்ன கற்பனை வைத்திருக்கிறீர்கள்?  


2. புலம் பெயர்பவர்கள், தங்களுடைய வேர்களை, கலாச்சாரத்தை மெது மெதுவாக இழந்துவிடுகிறார்களா?

#  இழக்கிறார்கள் அதை சரிக்கட்ட சிரமமும் படுகிறார்கள்.

$  எத்தனை தலைமுறைக்கு முன் புலம் பெயர்ந்தனர், பின்னர் எத்தனை முறை திரும்ப வந்து உறவுகளை புதுப்பித்துக்கொண்டார்கள் என்பதெல்லாம் பொறுத்து மாறுதல்கள் வரலாம்.

* பெயர்ந்தவர்கள் அனுபவம் சொன்னால் பிரசுரிக்கலாம்;  சுவாரஸ்யமாக இருக்கலாம்.  விவாதிக்கலாம்.


​3)  சினிமா போன்ற, குறுகிய காலத்தில் மட்டும்தான் பெரும்பாலும் லைம் லைட்டில் இருக்க முடியும் என்பது போன்ற ப்ரொஃபஷன்களுக்கு எல்லோருக்கும் போடுவது மாதிரியான வரிவிதிப்பு நியாயமா? உதாரணமா, 20 வருஷம் சோத்துக்குச் செத்திருப்பான், 3 வருஷம் புகழ்ல இருக்கும்போது வருஷத்துக்கு 15-30 லட்சம் சம்பாதிச்சா, அதுக்கு அதிக வரி போட்டுவிட்டு, அப்புறம் வேலையில்லாமல் வீட்டுல இருக்கும்போது திரும்ப பிச்சை எடுக்க வைப்பதா அரசாங்க நோக்கம்?



#  வரிவிதிப்பு தவிர்க்க இயலாத சுமை. எனினும் கலைத்துறை வருமானத்துக்கு வரிச் சலுகைகளும் கணிசமான அளவில் உண்டு.

$  லாட்டரி அடித்தால் வருமானவரி கேட்க மாட்டீர்களா?

189 கருத்துகள்:

  1. அனைவருக்கும் நல்வரவு..
    அன்பின் வணக்கத்துடன்....

    பதிலளிநீக்கு
  2. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் வணக்கங்களுடன் இன்றைய நாளான புதன் பொன்னாளாகவும் மலர மனமாற பிராத்தனைகள் செய்கிறேன்.

    இன்று கேள்வி பதில்கள் கொஞ்சம் வித்தியாசமாக படங்களுடன் அழகாக இருக்கிறது. முதலில் விழுந்து புரண்டு வீடியோ எடுத்து அனுப்பச் சொல்லி இருப்பது தமாஷாக இருக்கிறது. ரசித்தேன். அனைத்தையும் படித்து விட்டு பின் வருகிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா...

      நம் அனைவருக்குமான பிரார்த்தனைகளுக்கு நன்றி.  

      ரசித்து விட்டு பதில் சொல்லுங்கள்.

      நன்றி.

      நீக்கு
  3. அந்த முதல் படம்...

    சந்தேகப் பேயா?.. பணப்பேயா?...

    எதுவாக இருந்தாலும் பல் விளக்கி விட்டு வந்திருக்கலாம்!...

    பதிலளிநீக்கு
  4. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    பளிச் பளிச் கேள்விகள். அதற்கேற்ற பதில்கள்.
    இன்றைய புதன் வெகு அருமை.
    அதுவும் சுஜாதாபதில்கள் பதிவிட்டது மிக மிக சுவை.
    கேள்விகள் கேட்ட அதிரா, ஏஞ்சல், நெல்லைத்தமிழனுக்கு
    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் வல்லிம்மா...  வாங்க...   வாங்க...

      நீக்கு
  5. அனைத்து இந்திய நண்பர்களுக்கும் காலை வணக்கம், துரைக்கு நடு இரவு? வணக்கம், மற்றவர்களுக்கு வணக்கம், நல்வரவு, பிரார்த்தனைகள், வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதாக்கா...     மாலை வணக்கம்.  பிரார்த்தனைகளுக்கு நன்றி.   நல்வரவு.

      நீக்கு
  6. * பதில்கள் ஸ்ரீராம் தானே, இந்தப் பதிவிலும் அவர் கைவண்ணம் தெரிகிறது. என்றாலும் கௌதமன் இல்லாமல் அவருடைய நகைச்சுவை பதில்கள் இல்லாமல் ருசிக்கவில்லை. விரைவில் குணம் பெற்று வரப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதிலேயே அவர் வந்து பதில்களை அளிப்பார் என்று நம்புவோம்!  எதிர்பார்ப்போம்.

      நீக்கு
    2. அடேடே என்னையும் ஆட்டத்துல சேர்த்துக்க ரெடியாயிட்டீங்களா! நன்றி! சந்தோஷம்!

      நீக்கு
    3. வாங்க... வாங்க...

      ஹப்பாடி...   நான் கழண்டுக்கலாம்!

      நீக்கு
    4. அதெல்லாம் நடக்காது ஸ்ரீராம்! ஒவ்வொரு வாரமும் * பதில்கள் வந்தேயாகவேண்டும் என்று தேம்ஸ் நதிக்கரையிலிருந்து சத்தம் கேட்குது. அது உலகெங்கும் எதிரொலிக்கிறது!

      நீக்கு
  7. //* இல்லை. ஆனால் அப்படி விழுபவர்களில் பெரும்பாலானோர் ஆறுதல் தேடி சுற்றுமுற்றும் புலம்பலாய்ப் பார்த்ததைப் பார்த்திருக்கிறேன்! அதிலும் எப்பவுமே அடுத்தவர் மேல் பழி!// வன்மையாகக் கண்டிக்கிறேன். நானெல்லாம் எத்தனை முறை கீழே விழுந்து எழுந்து, எழுப்பப்பட்டுப் பின்னர் சகஜமாகப் பயணங்கள் செய்திருக்கேன்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என் மாதிரி ஆட்கள் எல்லாம் புலம்பல் கேஸ் இல்லை. விழுந்த விதம் பற்றி ஆராய்ச்சிகள் தான் செய்வேன். :)))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த பதில் உங்களைக் குறிக்கிறது என்று நினைக்கிறீர்களா கீதா அக்கா?!!!

      நீக்கு
    2. அப்படி நினைச்சிருந்தால் இத்தனை விபரமாகவும் நகைச்சுவையாகவும் பதில் வந்திருக்குமா? என்னைப் பொறுத்தவரை கீழே விழுவது மீண்டும் எழுவதற்காகவே! :))))

      "வன்மையாகக் கண்டிக்கிறேன்" க்குப் பின்னர் :P :)))) போட்டிருந்தேன். விட்டுப் போயிருக்கு போல. அதனால் நீங்க என்னோட பதிலைத் தீவிர பாவனையில் எடுத்துக் கொண்டிருக்கீங்க! :)))))

      நீக்கு
    3. நீங்கள் ஒரு பாஸிட்டிவ் அக்கா என்பது எனக்குத் தெரியாதா?   என் பதிலைத்தான் நீங்கள் சீரியஸாக எடுத்துக்கொண்டு விட்டீர்கள்!!!!!!!   (ஆச்சர்யக்குறிகளை கவனிக்கவும்!)

      நீக்கு
    4. ஆனால் எனக்கு ஒரே ஒரு விஷயம் பிடிக்காது. அம்மாதிரித் தவறி விழுகிறவர்களை, அல்லது இடித்துக்கொண்டே விழுபவர்களைப் பார்த்துச் சிரிப்பது! எங்க வீட்டில் இது ரொம்ப சகஜம். நாம் விழுந்தால் சிரிப்பார்கள். அவங்க விழுந்தால் நம்மேல் கோபப்படுவார்கள். எல்லாமும் இருக்கும். :)))))) பழகி விட்டது.

      நீக்கு
    5. //ஸ்ரீராம்.9 அக்டோபர், 2019 ’அன்று’ முற்பகல் 6:28
      அந்த பதில் உங்களைக் குறிக்கிறது என்று நினைக்கிறீர்களா கீதா அக்கா?!!!//

      பின்ன நினைக்கமாட்டாவோ கீசாக்கா:)) சொல்றதையும் சொல்லிப்போட்டு, முகத்தை அப்பாவிபோல வச்சுக்கொண்டு இப்பூடிக் கிளவி கேட்டால்ல் விட்டிடுவமோ:)) ஹா ஹா ஹா கொழுத்திப் போட்டு விட்டேன்ன்.. என் வேலை இனிதே முடிஞ்சுது.. மீ அப்போ போட்டு வரட்டே:))

      நீக்கு
  8. இதுவும் கடந்து போகும் என்பது கொஞ்சம் புளிக்கத்தான் செய்கிறது.

    வேறெப்படி வாழ்வை எதிர்கொள்வது என்று தான் புரியவில்லை.

    இப்பொழுது நவராத்திரி முடிந்து தீபாவளியை எதிர்பார்க்கும்
    மக்கள் போல,
    துன்பமோ ,சங்கடமோ நிலைப்பதில்லை என்ற நம்பிக்கை
    கொஞ்சம் ஆறுதல் அளிக்கவே இந்தச் சொல் வந்திருக்கும்.
    அனுபவித்துக் கடக்க வேண்டியதுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'உம்' கொட்டிக் கேட்டுக் கொள்கிறேன்.  வேறென்ன சொல்வது என்று புரியவில்லை.  உபசார வார்த்தைகளால் உபயோகமில்லையே...

      நீக்கு
  9. குண்டாக இருக்கும் குழந்தைகள் ஆரோக்கியமானவை எனச் சொல்ல முடியாது. அதிலும் படத்தில் இருக்கும் குழந்தைகள்! அதே போல் குண்டாக இருக்கும் மனிதர்களும் ஆரோக்கியமானவர்கள் எனச் சொல்ல முடியாது. அவர்களுக்குத் தான் வியாதி அதிகம் பிடுங்கும்! ஆனால் மக்களின் பொதுவான கருத்து குண்டாக இருப்பவர்கள் நிறையச் சாப்பிடுவார்கள் என்பதே! நான் சாப்பிடும்போது கவனித்த ஒரு மாமி, "அப்புறமா வீட்டிலே போய் மறுபடி சாப்பிடுவீங்க!" என்றார். வீட்டுக்கு வந்து பாருங்க அடுப்பே மூட்டலை எனப் பதில் சொன்னேன். என்றாலும் அவங்க நம்பவில்லை என்பதே உண்மை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ...     நான் அப்படி நினைப்பதில்லை.  நிறைய சாப்பிடுபவர்கள் ஒல்லியாக இருப்பதையும், அதைவிடக் குறைவாகச் சாப்பிடுபவர்கள் குண்டாக இருப்பதையும் கவனித்திருக்கிறேன்.  உடல் வாகு, வேறு குறைகள்...

      நீக்கு
  10. வதன,முக நூல் பக்கம் போகாமலிருந்தால் என்ன ஆகும்?
    இது என்னுடைய கேள்வி இந்த வாரத்துக்கு.

    பதிலளிநீக்கு
  11. //$ ​பள்ளி செல்லாமல் கற்கலாம். ஆனால் பட்டம் பட்டயம் என்று சான்று கேட்குமிடத்தில் வேலை வேண்டும் என்றால்?//படிப்பு இணைய வழி எனில் தேர்வுகளும் இணையவழியாகவே நடக்கும். சான்றிதழ்களும் இணையவழியாகவே பெறலாம். ஏற்கெனவே இங்கெல்லாம் வந்து விட்டது. எங்கள் பெண்ணின் சின்னப் பெண் (அப்பு) எல்லாம் இணைய வழி தான் கற்று வருகிறாள்.

    பதிலளிநீக்கு
  12. சுஜாதா பதில்கள் ரசிக்க வைத்தன...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கில்லர்ஜி !! எங்கள் பதில்கள் ரசிக்கவில்லை என்பதை மறைமுகமாக குறிப்பிட்டிருக்கிறார்!

      நீக்கு
  13. இந்த நவராத்திரி விருந்துகளில் வயிற்றுக்குப் பயந்து
    கொறித்து வந்தேன். சிலபேர்கள் இரண்டு மூன்று முறை
    தட்டை நிரப்பிக் கொள்வதைப் பார்த்தேன்.

    என் எடை அதிகம். அவர்கள் எல்லாம் 50 கேஜியிலியே இருக்கிறார்கள்.
    மிக மிக சோகமான விஷயம்.:(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை. நானும் கொஞ்சமாய்த் தான் சாப்பிடுவேன். வயிறே அப்படி! கொஞ்சம் ஏறினாலும் வாந்தி வந்துடும்.அதிலும் இரவு நேரம் ரொமப் பார்த்துப் பார்த்துச் சாப்பிடுவேன். ஆனாலும் என்னைப் பார்த்தால் யாரும் நம்புவதில்லை. :)))))))))

      நீக்கு
    2. என்னையும் உங்க ஆட்டத்துல சேர்த்துக்கோங்க. மனசுல வன்மம், பொறாமை, கெட்ட எண்ணங்கள் இல்லாதவங்களுக்கு உண்ணும் உணவு உடம்பில் சேர்ந்து எடை கூடும். இதெல்லாம் இருக்கறவங்களுக்கு உடல் எடை கூடாமல் ஒல்லியா இருப்பாங்கன்னு சொன்னா, எனக்கு இப்போ எத்தனை எதிரிகள் கூடுமோ

      நீக்கு
    3. // மனசுல வன்மம், பொறாமை, கெட்ட எண்ணங்கள் இல்லாதவங்களுக்கு உண்ணும் உணவு உடம்பில் சேர்ந்து எடை கூடும். இதெல்லாம் இருக்கறவங்களுக்கு உடல் எடை கூடாமல் ஒல்லியா இருப்பாங்க// சின்ன வயதில் என்னை இப்படி சொல்லிச்சொல்லி வெறுப்பேற்றிய நண்பர்கள் ஏராளம்!
      எனக்குத் தெரிந்து, உணவுக்கும், உருவத்துக்கும் உறவோ பகையோ கிடையாது. அதது அவரவர்கள் உடல்வாகு, பரம்பரை , ஜீன்ஸ் , ஐஸ்வர்யா ராய் - அவ்வளவுதான்.

      நீக்கு
    4. என்னையும் உங்க ஆட்டத்துல சேர்த்துக்கோங்க. மனசுல வன்மம், பொறாமை, கெட்ட எண்ணங்கள் இல்லாதவங்களுக்கு உண்ணும் உணவு உடம்பில் சேர்ந்து எடை கூடும். இதெல்லாம் இருக்கறவங்களுக்கு உடல் எடை கூடாமல் ஒல்லியா இருப்பாங்கன்னு சொன்னா, எனக்கு இப்போ எத்தனை எதிரிகள் கூடுமோ//

      ஹா ஹா ஹா ஹா நெல்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....நான் தான் முதல் எதிரி அப்ப உங்களுக்கு ஹா ஹா ஹா ஹா ஹா...(ஹையோ இன்று அதிரா நெல்லைக்குக் கை கொடுத்துருவாங்களே...கோர்த்துருவாங்களே!!!!!!!!)

      கீதா

      நீக்கு
    5. கௌ அண்ணா செம ரிப்ளை!!! ரசித்தேன் அதானே ...சாப்பாட்டுக்கும் உருவத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை..

      அது சரி இப்பூடி தமன்னாக்காவை மட்டும் விட்டுடலாமா...ஏற்கனவே நெல்லை அவங்களை இஞ்சி இடுப்பழகின்னு அப்ப தமனக்கா அவர் சொல்ற டெஃபினிஷன் அனுஷ் க்கு சப்போர்ட்டா பேசுறார்!!!!!!!
      ஹா ஹா பாயின்டு!!!

      ஸ்ரீராம் நோட் திஸ் நெல்லை அனுஷ்கு சப்போர்ட்டு!!!

      கீதா

      நீக்கு
    6. ஆஹா நல்ல பாயிண்டு. தமன்னா = வினை, வன்மம், பொறாமை, கெட்ட எண்ணம். அனுஷ்கா இது எதுவும் இல்லை. நெல்லைத்தமிழன் டெப்பாசிட் காலி. ஹையா ஜாலி, ஜாலி!

      நீக்கு
    7. //தமன்னா = வினை, வன்மம், பொறாமை, கெட்ட எண்ணம். அனுஷ்கா இது எதுவும் இல்லை.// - இந்த கேஜிஜி சாருக்கு புரியறதே இல்லை. இதுக்கும் கோனார் நோட்ஸ் போடணுமா?

      தமன்னா, அவங்களைப் பார்க்கறவங்க மனசுல, (அவங்க ரொம்ப அழகா இருப்பதால்) இந்த மாதிரி எண்ணங்களை ஏற்படுத்துவதால் அவங்க ஒல்லியா இருக்காங்க, இஞ்சி இடுப்பழகி, காற்றடைத்த பலூன் போல் ஆகிவிட்டதால் இந்த மாதிரி எண்ணங்களை அவரைப் பார்க்கும் பிறருக்கு ஏற்படுத்தாததால் இன்னும் எடை குறைய முடியலை.

      இப்படி புரிஞ்சுக்கக்கூடாதா?

      நீக்கு
  14. இனிய காலை வணக்கம் கௌ அண்ணா அண்ட் ஸ்ரீராம்...மற்றும் அனைவருக்கும்

    நெட் படுத்தலில் தாமதம்..ஆனால் 5.30க்கு வந்தும் பதிவு இல்லையே ஓஹோ அப்ப 6 என்று வெங்கட்ஜி தளம் போய் வாசித்து கருத்திடும் போது நெட் போய்ச்!!!

    ஸோ இப்பத்தான்...இனி முழுவதும் வாசித்துவிட்டு வரேன்..

    அதுக்கு முன்னர்.....பூஸாரின் குருவின் ரகசிய படங்களை அதான் பூசாரை திட்டிச் சிரிப்பது போல இப்பூடியா போடுவது சிரிக்கறதுனா!!! ஹா ஹா ஹா என் சிஷ்யையா இப்பூடி ஒரு கிளவி கேட்டிருக்கா...என்னிடம் பயின்று நல்ல ஞானியாகிட்டான்னு நினைச்சுட்டேனே!!!!!!!!!! என்று சொல்வது போல இருக்கு...பூஸார் வந்து என்ன சொல்லப் போகிறாரோ...ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  15. தலைவர் பதில்கள் வேற இருக்கே ..ஹையோ இப்ப வாசிக்க முடியலியே...அப்புறம் தான்...கடமைகள்...!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  16. அனைத்து பதில்களுமே அருமை. இடையில் சுஜாதாவின் பதில்களையும் தேடிப் பிடித்து பதிவு செய்திருப்பது உங்கள் பதிவின் தரத்தை கூட்டுகிறது. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  17. கேள்வி பதில்கள் அருமை. அப்புறம் எதுக்கு சுஜாதா கேள்வி பதிலையும் சேர்த்துக்கணும்?

    பதிலளிநீக்கு
  18. லாட்டரிக்கு வருமான வரி பிடித்தம் செய்துதான் பணம் தருவாங்க. ஆனால் குறுகிய கால லைம் லைட்டுக்கு அரசு ஏதேனும் தீர்வு சொல்லணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் முன் காலத்தில் நினைத்துக்கொள்வதுண்டு. குடும்பத்தில் நான் ஒருவன் மட்டுமே சம்பாதிக்கிறேன் என்றால், என் வருமானத்தை நம்பி வயதான பெற்றோர், மனைவி, குழந்தைகள் உள்ளனர் என்றால், என்னிடம் வருமான வரி பிடித்தம் செய்வது சரியில்லை என்று. நான் கட்டவேண்டிய வரியை, என் வருமானத்தை நம்பியிருக்கும் ஜீவன்களின் எண்ணிக்கையால் வகுத்துதான் என்னிடம் வசூலிக்கவேண்டும் என்று நினைப்பேன். அம்பானி குடும்பத்தில் உள்ள அனைவருமே வரிகட்டுவார்களா என்றும் யோசிப்பேன். ஆனால் இந்த வரிக்குழப்பங்களை அவ்வளவு எளிதாக அரசால் தீர்க்க இயலாது. அப்படி ஏதேனும் மாற்றங்கள் கொண்டுவந்தாலும் அதை வைத்து creamy layer மக்கள்தான் அரசை வரி விஷயத்தில் ஏமாற்றுவார்கள்.

      நீக்கு
    2. சிங்கப்பூர்ல, வயதான பெற்றோரை பசங்க கைவிடக்கூடாது. அவங்களைப் பார்த்துக்கற சுமை அரசாங்கத்துக்கு வரக்கூடாது என்பதற்காக, பசங்க பார்த்துக்கிட்டா, அவங்களுக்கு வரிச் சலுகை கொடுக்கறாங்க என்று என் நண்பர் முன்பு சொன்னார்.

      எந்த விதமான வரிச்சலுகையும் வருடம் 15 லட்சத்துக்குக் குறைவா சம்பாதிப்பவர்களுக்கு மட்டும்தான் இருக்கணும்.

      நீக்கு
    3. எனக்குத் தெரிஞ்சு அம்பேரிக்காவில் அதிகம் குழந்தைகள் பெற்றுக்கொண்டால் வரி குறையும் என்று சொல்கின்றனர். அதற்காகவே சிலர் 4 குழந்தைகள் கூடப்பெற்றுக்கொள்வார்கள் என்கின்றனர். ஆனால் பொதுவாகவே இங்கே ஒற்றைக்குழந்தையைப் பார்க்க முடியாது. இப்போத் தான் நம் இந்திய வம்சாவளியினர் சிலருக்கு ஒற்றைக்குழந்தை!

      நீக்கு
    4. ஒற்றைக்குழந்தை முறை கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு முன்பே படித்த மக்கள் குடும்பங்களில் தொடங்கிவிட்டது என்று தோன்றுகிறது.

      நீக்கு
  19. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  20. கேள்விகளும், பதில்களும் அருமை.

    //அது தெரிந்தால் தினமலருக்கு இந்நேரம் அனுப்பியிருப்பேனே.

    *நீங்கள் விழுந்து புரண்டு சிரிக்கிறீர்கள் என்று எப்படித் தெரியும்? வீடியோ எடுத்து அனுப்புவதாய் இருந்தால் சொல்லலாம்!//

    அதிராவின் கேள்வியை உங்கள் பதிலை இரண்டையும் சேர்த்து தினமலருக்கு அனுப்பினால் நிச்சயம் சிரிப்பார்கள்.
    நன்றாக இருக்கிறது கேள்வியும் பதிலும்.

    // ​ஃப்ரிட்ஜில் உள்ள பண்டங்களால் தான்.//

    உண்மைதான். வாரம் ஒரு முறை காய் வாங்குபவர்களுக்கு இந்த பதில் பொருந்தும். தினம் வாங்குபவர்கள் இன்று என்ன சமைக்க வேண்டும் முடிவு செய்து கொண்டு காய் வாங்க்கலாம்.


    /"இறந்தவனைச் சுமந்தவனும் இறந்துட்டான்... அதை இருப்பவனும் எண்ணிப்பார்க்க மறந்துட்டான்..."//

    இரவும் பகலும் படத்தில் அசோகன் பாடிய பாடல் எனக்கு பிடித்தபாடல்.

    பதிலளிநீக்கு
  21. // பெயர்ந்தவர்கள் அனுபவம் சொன்னால் பிரசுரிக்கலாம்; சுவாரஸ்யமாக இருக்கலாம். விவாதிக்கலாம்.//

    நல்ல பதில்.

    பதிலளிநீக்கு
  22. //சுஜாதா பதில் : "கவனிக்கும்போது இரண்டும் இயங்கும். எங்காவது ஒரு மூலையில் மூளையில் பதிவாகும். பின்பு எழுத்தாகும்."//

    சுஜாதா பதில்கள் நன்றாக இருந்தது, குறிப்பாக இந்த பதில்.

    பதிலளிநீக்கு
  23. சற்றே சிரமம். ஆனாலும் தொகுத்துத் தந்துள்ள விதம் ரசிக்கும்படி வைத்தது.

    பதிலளிநீக்கு
  24. சுவாரஸ்யமான கேள்வி பதில்கள்.

    பதிலளிநீக்கு
  25. இனி ஒவ்வொரு புதனும் ஊறுகாய் இருக்குமா, தொட்டுக்கொள்ள? (இந்த வாரம் சுறுசுறு சுஜாதா!)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேரம் அமைவதைப் பொறுத்து...    கிடைக்கும் சரக்கைப்பொறுத்து!

      நீக்கு
  26. பேய்!! நாங்கல்லாம் பேயையே ஓட்டிடுவோமாக்கும்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!ஹா ஹா ஹா...

    ஆனா எங்க ஊர்ல இருந்தப்ப ஸ்கூல் காலேஜ் சமயத்துல ஊருக்குப்போற பஸ் வரலைனா முக்கால் மைல் நடக்கணும் மெயின் ரோட்டிலருந்து. அதுவும் மாலை 6.40 பஸ் இல்லைனா வேற பஸ்ல வந்து இப்படி நடக்கணும். அப்ப இருட்டாகிடுமா என் கூட வர என் கஸின்ஸ் எல்லாம் அங்க பாருடி ஒரு உருவம் போகுது..இங்க பாருடி இங்க நு அதுவும் இடையில் காவல் தெய்வம் வேற அதைச் சொல்லி வேற பயப்பட்டுக்கிட்டே வருவாங்க..ஒரு பக்கம் பெரிய வாய்க்கால் இன்னொரு பக்கம் வயல்...வெட்ட வெளி, ஊர் வரும் போதுதான் ஒரு சின்ன காலனி வரும்...செம கதை ஓடும்...

    அப்படி ஒரு அனுபவம் இருக்கு சொல்றேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  27. சிலரை பேயாய்ப் பார்த்த அனுபவம் உண்டு//

    ஹா ஹா ஹா அது நானும் நிறையவே பார்திருக்கேனே!!! ஹ்ஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
  28. ஆஆஆஆவ்வ்வ் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    நைட் கண் முழிச்சனா:) எங்கட 12.50... அப்பொ அவசரப்பட்டு இந்திய நேரம் 6.20 என நினைச்சு ஓடினால்.. போஸ்ட் வரல்ல:) ஹையோ ஸ்ரீராம் இம்முறை நிறுத்திட்டார் போலும் என நினைச்சிட்டு விட்டிட்டேன்ன்:)).. பின்புதான் கணக்குப் பார்த்தால் அப்பொ இந்திய நேரம் 5.20:)).. இப்பூடி இருக்குது பாருங்கோ என் ஜொந்தக் கதை ஜோகக்கதை:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா வாங்க அதிரா உங்களுக்கு வயசாகிப் போச்சுனு இங்க நெல்லை, உங்க செக் எல்லாரும் சொல்லியும் உரைக்கலை கண்ணாடி போட்டுப் பார்க்கலையோ!!!!!!!!!!!! ஹா ஹா ஹா..

      கீதா

      நீக்கு
    2. இந்திய நேரம்னு பார்த்திருந்தால் நு சொல்ல வந்தது விட்டுப் போச்சு அடிக்கும் போது...!!!!!!!

      கீதா

      நீக்கு
    3. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கீதா, தூக்கத்தில ஒரு மணித்தியாலத்தை குறைச்சுக் கணக்குப் பார்த்திட்டேன்ன்:))

      நீக்கு
  29. ஆஆஆஆ என் பெயரின் பாதியைக் கட் பண்ணிப் போட்டா ஸ்ரீராமுக்கு என் வன்மையான கண்டனங்கள்.. இதுக்காக நான் 4 மணித்தியாலங்களுக்குக் கோபம்:)).. பேச மாட்டேனாக்கும்:))..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அச்சச்சோ...     அது போன வாரம் என்று நினைத்தேன்....    இந்த வாரமும் அதுதானா?

      நீக்கு
    2. ஹா ஹா ஹா அநேகமாக இன்று மாறலாம்:) நான் பெயரைச் சொன்னேன்:))

      நீக்கு
    3. இதுவரை மாறவில்லை.  இனி  நாளைதான்.  

      நீக்கு
    4. என்னா சேஞ்சு :) கவரி சவுரி இல்லைன்னா சவாரி மான் ஆகப்போதா :)))))))))))))))))))))))
      யாராச்சும் என்னை பிடிங்க நான் சிரிச்சி சிரிச்சே விழப்போறேன் 

      நீக்கு
    5. ஆஆஆஆ இந்தக் கொமெண்ட்டைத்தான் இப்போ வன் அவரா தேடினேன்:)
      அஞ்சுவைப் பிடிக்க ஆள் வேணுமாமே:).. டக்குப் பக்கென அந்த அழகிய பேயை அனுப்புங்கோ ஶ்ரீராம்:).. அஞ்சுவைப் பிடிக்கத்தான்:)...

      நீக்கு
  30. ஆஆஆஆஆஅ இப்போதான் உத்துப் பார்க்கிறேன் அதிரா எனப் போட்டு கீழே பேயாகிவிட்ட அதிராப் படம்:) கர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஹையோ ஆண்டவா புதுசா வருவோரெல்லாம் இதுதான் அதிரா என நினைக்கப்ப்போகினமே:)) இப்போ மீ என்ன பண்ணுவேன்ன்ன்:)...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதுசா வரவங்களா!!!! ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா...ஹையோ எங்கே ஜெர்ரி!!

      நீங்க ஒன்னும் செய்ய வேண்டாம் கவரிமான் பரம்பரை யை எடுத்துட்டு....ஹிஹ்ஹி நான் ஜொல்லமாட்டேனாக்கும்!!! பாவம் அதிரா என்று!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

      கீதா

      நீக்கு
    2. அப்படி நினைத்து விடுவார்களே என்று நினைத்துதான் கேள்விக்கு மேலே ஒட்டியிருந்த படத்தை எடுத்து கீழே  ஒட்டினேன்!  அப்படியும் இப்படிக் கேட்டால் எப்படி?!!

      நீக்கு
    3. இருந்தாலும் ஸ்ரீராம் கொஞ்சம் அழகான ...."................" ஆகப் போட்டிருக்கலாம்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ஹா ஹா ஹா ஹா அப்போ கப அ வுக்கு அந்தக் கேள்வியே வந்திருக்காதோ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

      கீதா

      நீக்கு
    4. இப்போதைய க ப வுக்கு அஞ்சுவுக்கு நல்ல பெயர் வரும் என நினைக்கிறேன்:)).. நல்லவேளை அதில் ப எனத்தான் இருக்கு பே என இல்லையாக்கும்:)) ஹா ஹா ஹா..

      நீக்கு
  31. 2) பொதுவாக வீடுகளில் அன்றைய சமையல் யாரால் தீர்மானிக்கப்படுகிறது ? சமைப்பவராலா அல்லது சாப்பிடுபவராலா ?//

    சாப்பிடுபவர்களால். அதாவது பெரும்பாலும் சமைப்பவர் தன் குழந்தைகள், கணவர், வீட்டிலுள்ளோர் என்ன சாப்பிடுவார்கள் என்று பார்த்துதானே சமைப்பாங்க...அதனால..அதுவும் பிடிக்கும் பிடிக்காது என்று இருந்தால்.

    இதற்கு ரெண்டாவது பதில் சரிதான் ஆனால் வழிக்கு வருவார்களா என்றெல்லாம் சொல்ல முடியாதே!!!! ஏஏஏஏஏ

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்..    சொல்ல முடியாதுதான்  (ப்ரெண்ட்ஸ் சார்லி மாதிரி சொல்லிப் பார்க்கவும்)

      நீக்கு
    2. கீதா ரங்கன்.. உண்மையில் காய்கறிகள், மளிகை வாங்கிவருபவரால்தான் இது தீர்மானிக்கப்படுகிறதுன்னு நினைக்கறேன். மத்தவங்கள்லாம் ரிக்வஸ்ட் மட்டும்தான் வைக்கமுடியும்.

      நீக்கு
  32. //* சிலரை பேயாய்ப் பார்த்த அனுபவம் உண்டு. அது இருக்கட்டும்... நீங்கள் ஒரு அனுபவம் சொல்லத் தயாராய் இருப்பது தெரிகிறது. கேட்க நாங்கள் ரெடி!//

    ம்ஹூம்ம்:)) நீங்க எதுக்கும் ரெடியாத்தான் இருக்கிறீங்க.. நான் உண்மையில் இதுபற்றி ஒரு போஸ்ட் போடவே பலகாலமாக நினைச்சுக் கொண்டிருக்கிறேன்ன்... ஆனா இதுவும் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதைப்போல ஆகிடும், ஆனாலும் நேரில் பார்த்ததைச் சொன்னாலும் நம்ப மாட்டினம்.. எங்கட அனுபவத்தை சொன்னால் போஸ்ட் போலாகிடும்.

    ஊரின் முந்தின காலங்களில்... இரவில், புளிய மரத்துக்குக் கீழே, மற்றும் சந்திகளில்.. ஒரு கிளவி குந்திக்கொண்டிருப்பாவாம்ம்.. அதுக்குப் பெயர் “கொத்தாத்தை” எனவும் சொல்லுவினம்.. அம்மம்மாவிடம் கேட்டால் நிறையக் கதை சொல்லுவா. சாமத்தில் வேலையால, படம் பார்த்திட்டு வருவோர்.. இக்கிழவி குந்திக்கொண்டிருப்பதைப் பார்த்தால்.. காறித்துப்பிப்போட்டு வருவார்களாம்..

    ஒரு தடவை ஒரு கோயில் வாசலில் இக்கிழவி குந்திக்கொண்டிருந்தாவாம்.. மாமா சைக்கிளில் வந்தாராம் நைட் 1 மணியளவில்.. சைக்கிளை ஸ்பீட்டாக உளக்க, கிளவி அப்படியே எழும்பி வந்துதாம், சைக்கிளில் மோதியதைப்போல இருந்துதாம், மாமா விழுந்திட்டாராம் பார்த்தால் கிளவியைக் காணவில்லையாம், சைக்கிள் செயின் அறுந்து விட்டதாம்..

    பின்பு நடுங்கிக்கொண்டு தேவாரம் சொல்லிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தாராம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லவேளை, எனக்கு இப்படி ஊரை விட்டு ஒதுங்கி வெளியில்போகும் ஊரில் எல்லாம் நான் இருக்கவில்லை!

      நீக்கு
    2. நீங்க எதுக்கும் ரெடியாத்தான் இருக்கிறீங்க.. நான் உண்மையில் இதுபற்றி ஒரு போஸ்ட் போடவே பலகாலமாக நினைச்சுக் கொண்டிருக்கிறேன்ன்... ஆனா இதுவும் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதைப்போல ஆகிடும்,//

      அதிரா உண்மைதான்....நான் என் மகனின் நண்பனிடம் (அவருக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது. மறுப்பு என்றே சொல்லலாம்...) நண்பர் குழு நம் வீட்டில் பேய் திகில் படம் பார்த்துக் கொண்டிருந்தாங்க. ஆங்கிலப்படம் பேர் மறந்து போச்சு....அப்ப எல்லாரும் த்ரில் ஆ ஊ என்று சத்தம் போட்டுக் கொண்டிருந்தாங்க..அப்ப நண்பர் கேட்டார், அம்மா நீங்க இந்தப் படம் பாருங்க செமையா இருக்கும், (நான் அவர்களுக்காகச் சமைத்துக் கொண்டிருந்ததால் அவர்களோடு பார்க்க முடியவில்லை) ஆனா நீங்க பயப்படுவீங்கனா வேண்டாம் பார்க்காதீங்க என்று சொன்னார். நான் கேட்டேன்...பேய்னு ஒன்னு இருந்தா தானே நான் பயப்பட அதெல்லாம் மனப்பிராந்தி என்றேன்..உடனே அவர், "நீங்க சாமி கும்பிடறீங்களே கோயிலுக்குப் போறீங்களே என்றார். ஆமாம் என்றதும் அவர் "நீங்க ஏன் போறீங்க கடவுளை நம்புறீங்க..." இல்லையா அப்ப பேய் மட்டும் எப்படி இல்லைனு சொல்லுவீங்க...

      நான் சொன்னேன் கடவுள் நம்பிக்கை...இதில் நம்பிக்கை இல்லை அதனால் என்று உடனே அவர் நீங்க பார்க்காத கடவுள் இருக்கார்னா பார்க்காத பேயும் இருக்கும் தானே கடவுள் உண்டுனா பேயும் உண்டு என்றார். ஏன் பேய் மட்டும் இல்லைன்றீங்க பேய் மனம் சம்பந்தப்பட்டது என்றால் கடவுளும் மனம் சம்பந்தப்ப்ட்டதுதானே என்றார்.

      விளக்கம் கொடுக்கலாம்...ஆனால் நான் அவரோடு விவாதத்திற்கு ரெடியாக இல்லை..இதை நானும் ஒரு போஸ்டாக எழுதி முடிக்காமல் வைச்சிருக்கேன் அதிரா..

      அது போல பேய் அனுபவம் ஒன்றும் அதான் இங்கு தரவில்லை....ஹிஹிஹி

      கீதா

      நீக்கு
    3. சபாஷ்...   நல்ல விவாதம்!  ஜி எம் பி ஸார் ரசிப்பார்...

      நீக்கு
    4. @ க.ப.அ: அந்தக் கிளவி அங்கின ஒக்காந்துட்டுத்தான இருந்தா.. ஏன் துப்பிவிட்டு வரணும்? கொழுப்புத்தானே?
      சரி, சைக்கிள் மிதிச்ச மாமாவுக்கு தேவாரம் தெரியாமப்போயிருந்தா..!

      கவரிமானிடம் இன்னும் இருக்கக்கூடும் பேய்கள்.. அவ்வப்போது ஸ்ரீராம் ஊக்குவிக்கவும்.

      @ கீதா: அதுபோல பேய் அனுபவம் ஒன்றும்.. என்று பேய்க்காட்ட முடியாது இங்கே! இருந்தால் கவரியைப்போல் கதவைத் திறந்துவிட்டிட வேண்டியதுதானே!

      @ ஸ்ரீராம்: ஞாயிற்றுக்கிழமையைப் பேய்களுக்கென சமர்ப்பித்தால் என்ன!

      நீக்கு
    5. இன்னமும் உண்மையான பேய் வெளியே வரவில்லை என்று நினைக்கிறேன்.

      நீக்கு
    6. ஆஆஆ கீதா உங்களின் மகனின் நண்பனின் விவாதம்தான் எனக்குள்ளும்.. நானும் கடவுளை நம்புகிறேன்ன்.. அதுபோல பேயையும் நம்புகிறென், ஆனா பேய் நமக்கு ஒண்டும் தீங்கு செய்யாது... நாம் தான் பேய் எனப் பயப்படுகிறோம்ம்.. இங்கு ஸ்கொட்லாந்திலும் மிகப் பழைய காசில்கள் இருப்பதால்.. அங்கு பழைய ராஜா ராணி எல்லாம் இருக்கிறார்களாம். இங்குள்ள மக்கள் நேரில் பார்த்ததுண்டு... இன்னொரு கதை ஜொள்ளட்டோ:)) கீழே சொல்கிறேன்:))

      நீக்கு
    7. //ஏகாந்தன் !9 அக்டோபர், 2019 ’அன்று’ பிற்பகல் 1:06
      @ க.ப.அ: அந்தக் கிளவி அங்கின ஒக்காந்துட்டுத்தான இருந்தா.. ஏன் துப்பிவிட்டு வரணும்? கொழுப்புத்தானே?//

      இல்லை அப்படித்துப்பினால் பேய் கிட்ட வராதாமே ஹையோ ஹையோ:))..

      ///சரி, சைக்கிள் மிதிச்ச மாமாவுக்கு தேவாரம் தெரியாமப்போயிருந்தா..!///
      ஹா ஹா ஹா கூச்சல் கூக்குரல் போட்டிருப்பார்ர்:)).. இதில உண்மை என்னவெனில்.. மாமா நினைச்சார் அது உண்மையில் ஆரோ கிளாவி என:)).. உடனேயே பேய் என நினைச்சிருந்தால். அதிலேயே மயங்கியிருப்பாரெல்லோ:))..

      //கவரிமானிடம் இன்னும் இருக்கக்கூடும் பேய்கள்.. அவ்வப்போது ஸ்ரீராம் ஊக்குவிக்கவும்.//

      ஹா ஹா ஹா கதை சமையல் கவிதை என ஊக்குவிச்சு முடிஞ்சு இப்போ பேய்க்கோ?:)).. ஹா ஹா ஹா ஹையோ ஆண்டவா.. ஒருநாளைக்கு மிட்நைட் மச் நடக்கும்போது ஏ அண்ணனின் கதவைத் தட்டோணும்:))

      நீக்கு
    8. //கௌதமன்9 அக்டோபர், 2019 ’அன்று’ பிற்பகல் 1:09
      இன்னமும் உண்மையான பேய் வெளியே வரவில்லை என்று நினைக்கிறேன்.//

      கெள அண்ணன்.. அஞ்சு இன்னமும் வரவில்லை என்பதை இங்கு நினைவுக்குக் கொண்டு வாறேன்ன்:)) ஹா ஹா ஹா ஹையோ மீக்கு இன்று பேய் பிடிச்சுப்போச்ச்ச்ச்:)).. அடிக்கிறதுக்கு வேப்பங்குழை கூட இல்லையே:))

      நீக்கு
    9. ஏகாந்தன் ஸார் கேள்விமேல் கேள்வி கேட்கிறார்.  ஒன்றையும் அடுத்த புதனுக்கு தூக்க முடியவில்லை!

      நீக்கு
    10. கௌதமன் சார் ப்ளீஸ் அந்த மேதகு ,திருமிகு பேயாரை கொஞ்சம் இன்வைட் பண்ணுங்க :) அடுத்த புதன் அவர் வந்து பேய்க்காட்டும் கவரியை பேயோட்டட்டும் 

      நீக்கு
    11. லக லக லக லக ........... தாம் தகிட தீம் தகிட தீம் தீம் ..... என்று சொன்னால் இன்வைட் பண்ணியது போலாகுமோ?

      நீக்கு
  33. 3) பேசியே கொல்வது பேசாமலே கொல்வது எது சிறப்பு ? எதை பொறுத்துக்கொள்ளலாம் ?//

    "கொல்வது" நு வந்தாச்சே கேள்வியில்!!!!!!!!!!!அப்புறம் எதைப் பொறுப்பது!! ஹிஹிஹி ரெண்டுமே கஷ்டம்தான். ஸோ அளவோடு...பேசினாலும் சரி பேசாட்டாலும் சரி!!!!!!!!!!!!!!!!!!

    ஸ்‌ரீராம் என்று நினைக்கிறேன் ஸ்டார்...பதில்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  34. எதிர்காலத்தில் வாழ்க்கைக்கான ஸ்ட்ரோங் அஸ்திவாரம், நிரந்தர வருமானம் பட்டம் பதவி அந்தஸ்து இவற்றில் எது ?//

    உயர்கல்வியும் சரி முதல் டிகிரியும் சரி பெரும்பான்மைக்கு இவை எல்லாம் தான்.

    ஒரு சிலருக்கு மட்டும் எது கற்றாலும் பாஷன்/ஈடுபாடு என்று கற்று, வருமானம் கிடைக்குமா வேலை கிடைக்குமா எதிர்காலம் என்று பார்க்காமல் தாங்கள் கற்பதை தங்களுக்கு வருமானம் கிடைக்குமாறும் செய்து ப்ராஸ்பெரஸ் ஆக ஆக்கிக் கொண்டுவிடும் புத்திசாலிகள்/ஸ்மார்ட் ஆனவர்கள் அவர்கள்என்று சொல்லலாமோ. அப்படியானவர்களையும் பார்ப்பதால்...

    கீதா

    பதிலளிநீக்கு
  35. நாங்களும் அக்கா குடும்பமும், அப்பா அம்மாவும் கொழும்பிலிருந்து கதிர்காமம் போய்க் கொண்டிருக்கிறோம் ஒரு வான் ஹயர் பண்ணி. இரவு 10,11 மணியளாவில் வெளிக்கிட்டால், விடியக் கதிர்காமத்தில் நிற்கலாம். ஆனா இந்தப் பாதை இடையில் மிகக் காட்டுப் பாதை, எங்காவது இடைக்கிடை ஒரு வாகனம் கடக்கும் அவ்வளவுதான்.

    என் கணவரில் ஒரு பழக்கம், கார் பிரயாணம் எனில் நித்திரை கொள்ளவே மாட்டார்ர்.. நானும் முக்கால்வாசியும் அப்படித்தான், அப்போ அந்தக் காட்டுப் பாதையில் வான் போய்க் கொண்டிருக்கிறது[ட்றைவர் தான் ஓட்டினார்], நம் இருவரையும் தவிர எல்லோரும் நல்ல நித்திரை, நேரம் 1-2 மணி இருக்கலாம்... திடீரென சடின் பிரேக் போட்டார் ட்றைவர்.... பார்த்தால் அந்தக் காட்டில் அந்தக் கும்மிருட்டில், ஒரு 40-50 மதிக்கத்தக்க ஒரு பெண் வெள்ளைச்சாறி.. முழுக்க வெள்ளை உடையுடன், மெதுவாக எந்த சலனமுமில்லாமல், வானின் அந்த லைட் வெளிச்சத்தில் மெதுவாக வானில் முட்டிப்போவதைப்போல ரோட்டைக் குரொஸ் பண்ணியது.. சடின் பிரேக்குக்கு அதிரவே இல்லை, ஆடவில்லை, முகம் திரும்பவில்லை... அந்தக் காட்டில் அந்தச் சாமத்தில்...

    ஆனா நமக்கும் பெரிதாக இதில் நம்பிகை இல்லை என்பதால் உடனே கிட்னியில் பதியவில்லை.. பின்பு யோசிக்க யோசிக்க நடுங்கத்தொடங்கிட்டுது:)..

    இப்பவும் அந்த உருவம்.. அந்த வான் லைட் வெளிச்சத்தில் மூவ் ஆகிப்போனது கண்ணில் தெரியுதே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது...    இதுதான் நிஜமாகவே பேய்க்காட்டுவது என்பது..   

      ஹா... ஹா... ஹா...   கொலையுதிர்காலம் படிச்சுட்டு பயணம் போனீர்களா?

      நீக்கு
    2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) நான் ஜொன்னனே நீங்க நம்பமாட்டீங்க:).... ஆனா கெள அண்ணன் நம்புவார் பாருங்கோ:)..

      நீக்கு
    3. ஆம். நம்பிட்டேன். எனக்கும் அது கனவில் பார்த்த ஞாபகம்.

      நீக்கு
    4. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஆஆஆஆஆஆ கெள அண்ணன்.. ஓவரா கொம்.. பார்க்காதீங்கோ:))

      நீக்கு
    5. பிலிப்பைன்ஸில் ஒரு டிரைவரோடு நீண்ட பிரயாணம் டாக்ஸியில் சென்றேன். அவர் குறிப்பிட்ட மலைப்பகுதி வந்ததும், இங்கு 10 வருடங்களுக்கு முன்னால் ஒரு பெண், 4 அடி உயரம் இருக்கலாம், தலைமுடி கால்வரை இருந்தது, மெதுவா ரோடை க்ராஸ் பண்ணிப்போனது. அதிகாலை 3 மணி இருக்கும். அது திரும்பிப் பார்த்தது. காரை வேகமாக ஓட்டிக்கொண்டு சென்றுவிட்டேன். பிறகு அந்தப் பகுதியில் நிறைய பேய்கள் உண்டு என்றும் அவற்றை அதிகாலையில் சிலர் கண்டிருக்கிறார்கள் என்றும் சொன்னார்கள்..இப்போ உங்க கிட்ட அதைச் சொல்லும்போதும் எனக்கு நடுங்குது என்றார்.

      என் அம்மா சின்ன வயசிலிருந்தே, அந்தி சாய்ந்துவிட்டால், தனியாக ஆற்றங்கரை (நாங்கள் இருந்த மலைப்பகுதியில்) போன்ற இடங்களுக்குச் செல்லக்கூடாது என்பார்.

      எனக்கென்னவோ, இந்தப் படத்தை (முதல் படம்) போட்டவங்களை அந்த ஆவி சும்மா விடாதுன்னு தோணுது. ஹா ஹா

      நீக்கு
    6. // எனக்கென்னவோ, இந்தப் படத்தை (முதல் படம்) போட்டவங்களை அந்த ஆவி சும்மா விடாதுன்னு தோணுது. ஹா ஹா//

      பொறாமை...

      இருந்தாலும்....

      அப்படியா சொல்றீங்க...   இருங்க ரெண்டு பூண்டை எடுத்து மடியில் கட்டிக்கொள்கிறேன்.  அந்த விபூதி டப்பா எங்கே?

      நீக்கு
    7. ஹா ஹா ஹா ஒரு தும்புத்தடியையும் கைல எடுங்கோ ஶ்ரீராம்:)

      நீக்கு
  36. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்:)) ஆ எண்டாலும் ஊ எண்டாலும் எங்களிடம் படம் போடச் சொல்வதே.. ஸ்ரீராமுக்கும் நெல்லைத்தமிழனுக்கும் பழக்கமாகிப்போச்சு:) கர்ர்ர்ர்ர்ர்:))

    இதுக்கு..மேலே கோமதி அக்காவின் பதில் எனக்கும் ரொம்பப் பிடிச்சுப்போச்சூ:)) ஹா ஹா ஹா

    https://media.giphy.com/media/6eQYX4B4OGjBK/giphy.gif

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிரிங்க...   சிரிங்க...    சந்தோஷமா இருந்தா சரிதான்!

      நீக்கு
  37. பசி வந்ததும், மனம் தனக்குப் பிடித்த லிஸ்ட்டை மூளை நியூரான்களில் நிரடி ஆசையைத் தூண்டுகிறது!//

    அதே அதே!!! சபாபதே!! (இந்தப் பாட்டு கேட்டதிலிருந்து ரொம்பப் பிடித்துவிட்டது!!!)

    பதில் ரசித்தேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  38. ஆஆஆஆஆ மீதான் 100 ஊஊஊஊஊஊ:)...

    இனி அஞ்சு இங்கின வந்தா என்ன?:) வராட்டா என்ன:) ஹா ஹா ஹா:)

    பதிலளிநீக்கு
  39. //க.ப. அதிரா ://

    karrrrrrrr:)) இதுக்கு இங்கின பலர் எப்பூடி எல்லாம் மீனிங் எடுக்கப் போகினமோ?:)) கடவுளே கீதா நீங்களாவது இதைக் கண்டிக்கப்படாதோ?:)).. கீழே அந்தப் பொம்பிளைப்பேயின் தலைமயிரை உத்துப் பார்க்கிறேன்ன்.. அச்சு அசல்ல அதிராடதைப்போலவே இருக்கே:)) ஹையோ நேக்கு இப்போ லெக்ஸ்ச்சும் ஆடல்ல காண்ட்ஸ்ஸும் ஓடல்ல:))..

    ஏன் உலகத்தில ஆம்பிளைப் பேய்களே இல்லையோ?:).. என் அக்தையில வந்ததும் எல்லாமே பொம்பிளைப் பேய்தானே...

    இன்னொரு கதையும் ஜொள்ளட்டோ.. ஒரு ஊரில தனியாக ஒரு வீடு இருந்ததாம், அங்கு எங்கள் அப்பாவின் மாமி குடும்பம் இருந்தார்களாம்.. அப்போ நீண்ட காலத்தின் பின்பு அப்பா அங்கு போயிருக்கிறார்ர்.. அங்கு மாமி ஆட்கள் இல்லையாம்.. கதவை மெதுவாக தட்டினாராம்.. கதவு திறந்ததாம்.. உள்ளே போனால்ல். ஒரு பெண் இடுப்பில் குழந்தையுடன் நின்றதாம்... எங்கே இவர்கள் என அப்பா கேட்டாராம்.. அது பதில் சொல்லவில்லையாம்ம்.. வீடு வேறு ஆருக்கோ கொடுத்திட்டார்கள் போலும் என நினைச்சு.. அவர்கள் வந்தால், நான் இன்னார் வந்திருக்கிறேன் எனச் சொல்லு எனச் சொல்லிப்போட்டு வெளியே வந்திட்டாராம்ம்..

    பின்பு விசாரிச்சால்ல்.. அந்த வீட்டில் இரவில் பயமாக இருக்கு வெளிச்சம் எல்லாம் தெரியுது, பேய் நடமாட்டம் இருக்குது என அவர்கள் வீட்டை விட்டுவிட்டு வேறிடம் போயிருக்கினமாம்.. ரெலிபொன் இல்லாத காலமென்பதால்ல். இது அப்பாவுக்கு தெரிஞ்சிருக்கவில்லை..

    பின்பு பேசினார்களாஅம்.. அது ஆள் அல்ல:)).. அங்கு ஏன் போனாய் என்று..

    ஆனா கடசிவரைக்கும் அப்பாவுக்குப் பேய்ப் பயமும் இல்லை, நம்பிகையும் இல்லை:)) கர்ர்ர்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //karrrrrrrr:)) இதுக்கு இங்கின பலர் எப்பூடி எல்லாம் மீனிங் எடுக்கப் போகினமோ?:)) கடவுளே கீதா நீங்களாவது இதைக் கண்டிக்கப்படாதோ?:)).. //

      ஹா ஹா ஹா ஹா அதிரா கீதா கண்டுபிடிச்சாளே!! கொஞ்சம் மேலே போய்ப் பாருங்க!!

      இன்னொன்றும் கண்டு பிடிச்சேனே!!! இன்று இந்தப் பேய்க்குப் பயந்து நெல்லை வரலையோ வந்துட்டு ஓடிவிட்டாட் பாருங்க...மற்றொரு பேய் இங்க் உலாவிட்டிருந்துச்சு..புதன் நா வந்துரும் அதையும் காணும் பாருங்க!!!

      அந்தப் பேயும் கூடவே சேர்ந்து கொண்டா ஸ்வாரஸ்யமா இருக்கும்!!!! ஹா ஹா

      நான் கௌ அண்ணனை சொல்லலையாக்கும்!!!! கௌ அண்ணனோடு என்றுதான் சொன்னேன்னாக்கும்!!! ஆனா ஸ்‌ரீராம் பயந்து ஓடிப் போய்விடுவார்!!!! ஹிஹிஹி

      கீதா

      நீக்கு
    2. ஒன்று சொல்லலாம்.   பேய் எல்லோர் கண்களுக்கும் தெரியாதாம்.   வேவ்லெங்த் ஒத்துப்போனால்தான் தெரியுமாம்.   (ஒரு பேய் இன்னொரு பேயிடம் சொன்னதை ஒட்டுக்கேட்டது)

      நீக்கு
  40. //ஏஞ்சல் ://

    இப்பூடிப் போட்டு கீழே ஆவி பறக்கும் படம் போட்டு.. டெவடைக் கிச்சினில் ஏதோ அச்சப்பம் கருகி புகைப்புகையாப் போவதைப் போட்டிருக்கிறீங்க ஸ்ரீராம்:)).. ஹா ஹா ஹா அதனாலதான் நைட் எனக்கு மூக்கில கருகின வாசம் வந்துதே:)).. அது புகையா இல்லை ஏதேனும் ஆவியோ?:)) ஹா ஹா ஹா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புகையில்லை அது அழகான நட்சத்திர தேவதையாக்கும் :) ஆராய்ச்சியாளர் கண்டுபிடிச்சதுக்கு பாராட்ட வந்திருக்கு :) 

      நீக்கு
  41. //# ​பேசிக் கொள்வதை.//

    ஆஆஆஆஆஆஆ இங்கின ஸ்பெல்லிங் மிசுரேக்கூஊஊஊஊ:)) இது கொல்வது என வந்திருக்கோணுமாக்கும்:)) அதிராட கண்ணுக்கு எல்லாம் தெரியுமெல்லோ:))

    பதிலளிநீக்கு
  42. வெளியிடங்களில் தெரியாம வழுக்கி விழுந்து, விறுவிறுன்னு எழும்பி யாரவது பார்த்திருப்பாங்களோன்னு சுற்றுமுற்றும் பார்த்து திருப்தி பட்டிருக்கீங்களா :) ??? //

    ஸ்டார் பதில் சரிதான் நானும் சிலரைப் பார்த்திருக்கிறேன்.

    நான் கல்லூரி பள்ளி படிக்கும் சமயத்தில் என் கஸின் இதுக்கு ரொம்பவே கூச்சப்படுவாள். அப்ப டீன் ஏஜ் ஸோ பசங்க பார்த்துட்டாங்கனா கலாய்ப்பாங்களேனு. ஆனா நான் அப்படி நினைச்சா கூட, வெளில காட்டிக்காம கூடக் கொஞ்சம் ஜம்பமாய் நிமிர்ந்து நடப்பேன். ஒன்னுமே நடக்காதது போல!!!!!. ஏற்கனவே குனிஞ்சு நடக்கும் பழக்கம் கிடையாது...அப்படியே பசங்க கேலி செஞ்சாலும் பதிலும் கொடுத்திருவேன் அந்த வயசு அப்படி. அப்புறம் எல்லாம் விழுந்தப்ப கூட ...இதுல என்ன யாருமே விழாமயா இருக்காங்கனு தட்டி விட்டு எழுந்து நடப்பேன்...ஆனால் யாராவது விழுவதைப் பார்த்தால் உதவ் முடிந்தால் உதவுவேன். அதுவும் ஹெல்ப் கேட்டால் கண்டிப்பாக உதவியதுண்டு ஆனால் சமீபகாலமாகச் செய்வதில்லை தனியாகச் சென்று செய்வதில்லை. ஏமாற்றுதல் இருக்கிறது என்பதால்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விழுந்தவர்களைப் பார்த்து சிரிக்கிறார்களா?  அப்படி எல்லாம் கூடவா செய்கிறார்கள்? ஆனாலிப்பொதெல்லாம் உடனே செல்லிலிபோட்டோ எடுத்து ஸ்டேட்டஸ் போட்டு விடுவார்கள்!

      நீக்கு
    2. எனக்கும் இப்படிக் கேலி செய்வோரைப் பார்க்க கெட்ட கோபம்தான் வரும்.. எனக்கு இப்படிக் கேலி கிண்டல் நக்கல் பண்ணுவதும், பண்ணுவோரையும் பிடிக்காது.

      என் 6ம் வகுப்பில் கையில் முள்ளுக் குத்தி விட்டது.. ரத்தம் வந்துது.. அப்போ பயம்தானே ரத்தம் எனில்.. என் ஒரு நண்பியிடம் காட்டினேன்ன்.. இங்கு பார் ரத்தம் என.. உடனே அவ சொன்னா.. “ஆவ்வ்வ்வ் பியூட்டிஃபுல்” என.. என்னால அதை இன்றுவரை மறக்க முடியவில்லை..:(.

      நீக்கு
  43. நெல்லைத்தமிழனுக்கு மட்டும் நல்ல கிரிக்கெட் பிளேயராப் பார்த்துப் படம் போட்டிருக்கிறீங்களே இது ஞாயமோ?:))) நோஓஓஓஓஓஒ எம் பாலாரை ஒரு பப்புளிக்குப் பிளேசில வச்சு மானபங்கப் படுத்தியமைக்காக:)).. இப்பவே மேன்மை தங்கிய மதிப்பிற்குரிய அன்பான அழகான பண்பான நீதிபதி அவர்கள[அது நாந்தேன்ன்:))] பிரித்தானியக் காண்ட் கோர்ட்டுக்கு வரும்படி அழைப்பு விடுறார்ர்ர்ர்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹையோ ஆமாம் அதிரா நானும் இப்பத்தான் பார்த்தேன்...விடாதீங்கோ நானும் உங்களுடன் கை கொடுக்க உங்கள் கோர்ட்டுக்கு வரேன்...

      பாருங்க எல்லாரும் பயந்து ஒளிந்து கொண்டு இருக்காங்க எங்க இருக்கப் போறங்க மேசைக்கடிலதானே போய் இழுத்துட்டு வருவோம்...

      கீதா

      நீக்கு
  44. * பாப்பாவையே அப்படி நான் ஏற்பதில்லை! அது சரி, பெண்களை மட்டும்தான் சொல்வார்களா?//

    மீண்டும் அதே அதே!!!! அதானே பெண்களை மட்டும்தான் சொல்லுவாங்களா என்ன?!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குண்டு ஆண்களை வைத்து தமிழ்ப்படத்தில் நகைச்சுவைக் காட்சிகள் அமைப்பார்கள்!

      நீக்கு
  45. இருப்பினும் சந்தடி சாக்கில கீசாக்கா வழுக்கி விழுந்து சேற்றுடன் எழும்பி வந்த கதையைப் போட்டமைக்கும் என் மென்மையான சே..சே... வன்மையான கண்டனங்கள்.. கீசாக்கா விடாதீங்கோ:)).. நித்திரையோ இப்ப முக்கியம் எழும்பி வாங்கோ ஜண்டைப்பிடிக்கலாம்ம்:))...

    ஆனா குண்டானவர்கள் ஆரோகியமாகவும் ஹப்பியாகவும் இருக்கினமாம்ம்.. மெலிதானவர்கள் உடலில்தான் நோய் அதிகமாம்.. ஹார்ட் அட்டாக்கூட மெலிதானவர்களுக்கே அதிகம் வருகுதாமே... அதனாலதான் அதிரா.. மீடியமாக இருக்கிறேனாக்கும்:)) ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா நானும் இப்படிக் கேட்டதுண்டு குண்டானவர்கள் நகைச்சுவை அதிகமாக இருப்பவர்கள் என்று...இதுக்கு கௌ அண்ணா பொருந்தமாட்டாராக்கும்!! அவர் ஒல்லியாக்கும் அதிரா!!!!!

      கீதா

      நீக்கு
    2. //..அதிரா.. மீடியமாக இருக்கிறேனாக்கும்:))

      ’மீடியமாக’ வா? ஐயய்யோ! அப்ப, ஆவியோடல்லாம் பேசுறது உண்டா? கடசியா எந்த ஆவிய சந்திச்சீங்க? அதுக்கிட்டே என்னென்ன கேள்வி கேட்டீங்க.. அதுல சிலத அடுத்த புதனுக்கு அனுப்பி வைய்ங்க! அப்படியே ’ஆவி’ உங்கள்ட்ட மட்டும் சொன்ன பதிலையும்..

      நீக்கு
    3. ஹா ஹா ஹா ஏகாந்தன் அண்னா மீடியத்தை பிடிச்சிட்டீங்களா!!! அப்ப நீங்க புதன்ல எபில பதில் சொல்லுமே அந்த ஆவியைத்தானே சந்திச்சாங்களானு கேட்கிறீங்க? கூப்பிடச் சொல்றீங்க!!! அப்ப ஒரு மாசம் முன்னாடி சந்திச்சிருப்பாங்க!!

      அடுத்த புதனுக்கு எபில வர நகைச்சுவை ஆவி ரெடியா இருக்கணுமே!!!

      கீதா

      நீக்கு
    4. மீடியம் என்றதும் எனக்கும் அதேதான்  தோன்றியது!

      நீக்கு
    5. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) மீடியம் ஆவியா?:))

      நீக்கு
    6. நோ ! ‘ஆவி’ல மீடியம் ஆவி, லைட் ஆவி, ஸ்ட்ராங் ஆவி என்கிற பேதங்கள் இல்லை !

      நீக்கு
    7. அப்போ ஏ அண்ணனுக்கு “ ஆவி” தெரியும்:)

      நீக்கு
  46. சுஜாதாவின் பதில்கள் செம மிக மிக ரசித்தேன் அதிலும்...//சுஜாதா பதில் : "கவனிக்கும்போது இரண்டும் இயங்கும். எங்காவது ஒரு மூலையில் மூளையில் பதிவாகும். பின்பு எழுத்தாகும்."//
    இதை....

    சுஜாதாவின் பதில்களை இடையில் செருகி யிருப்பது ரசனை !!! அருமையான ஐடியா!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓரளவு பொருத்தமாக இருந்தவற்றை மட்டும் பகிர்ந்தேன்!

      நீக்கு
  47. வேலைக்குச் செல்லும் ஆண்கள் லீவில் வீட்டில் ஓய்வு எடுத்து தூங்க நினைத்தால் மனைவிகள் வேலை கொடுத்துக் கொண்டே இருப்பாங்களாம் லீவு தானே சும்மா ஏன் இருக்கீங்க லீவுனா தூங்கணுமா வெட்டியா இருக்கணுமா என்று இப்படிச் சொல்லும் ஆண்களையும் பார்த்திருக்கிறேன் ஸ்ரீராம்...அது சும்மா சொல்றாங்களா இல்லை நிஜமாகவேவானு தெரியலை...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்..     பாவம் ஆண்கள்...    ஆபீஸிலும் வேலை...வீட்டிலும் வேலை...

      ஆபீஸ்லதான் தூங்கிடறீங்களே.. இங்கயாவது வேலை செய்யலாமேன்னு 1950 ம் வருஷத்து ஜோக் அடிக்கலாம்!

      நீக்கு
  48. புலம் பெயர்பவர்கள், தங்களுடைய வேர்களை, கலாச்சாரத்தை மெது மெதுவாக இழந்துவிடுகிறார்களா?//

    ஆஹா நெல்லையின் இந்தக் கேள்விக்கு ஓவர் டு அதிரா அண்ட் ஏஞ்சல் இங்கு..இப்ப ஹூஸ்டன்ல இருக்கும் கீதாக்கா!!!

    பூஸார் அங்கு போயும் பாருங்க புரட்டாசி விரதம் எல்லாம் இருந்து மே மே எல்லாம் சமைக்காம ஏஞ்சலையும் சமைக்கக் கூடாது னு, அம்மனுக்கு சிவப்பு பிடிக்கும்னு சிவப்பா ஏதோ செஞ்சு வைச்சு, வைரவ விரதம் இருந்து கவசம் படிச்சு, குழை சாதம் செஞ்சு, கொண்டை வைத்த குண்டு தோசை செஞ்சு,கம்பபாரதம் எழுதி தமிழ்ல டி வாங்கி, குருவைப் பிடித்து பூஸாநந்தாவாகி ஞானியாகி தத்துவம் உதிர்த்து பாரம்பரியம் கலாச்சாரம் காக்கும் அதிராவை நோக்கி இந்தக் கிளவி!!!!!!!!!!!!!!!!!!!!!!!! அவங்க ஊர் வேர் எல்லாம் கூட வைச்சுருக்காங்க தெரியுமா தேம்ஸ்ல!!!! இல்லையா பூஸார்!! அதுவும் கவரிமான் பரம்பரை அதிரா இக்கேள்வி கண்டு பொயிங்கிடப் போறார்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா இப்போ கேதார கெளரி விரதம் ஆரம்பமாகிட்டுது... லிங்கப்பாட்டுப் போகுது கேய்க்குதோ?:)...
      ப்ரம்மமுராரி ஸ்ராஜ்ஜித லிங்கம்....
      ......
      .....
      தத் ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்ம்ம்ம்

      நீக்கு
  49. ஏஞ்சலைக் கூட நம்ம பூஸார் சாரி கட்டத் தெரியாதுனு கலாய்க்க அவங்களோ சாரி கட்டி ஃபோட்டோ எல்லாம் போடறதா சொல்லிருக்காங்க பாரம்பரியச் சமையல் சமைக்கறவாங்களாக்கும்!!!

    நெல்லை இந்தக் கேள்வி புலம் பெயர்ந்தவர்களுக்குத்தானே!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். இழந்துடுவாங்க என்பது என் அவதானிப்பு. அதுக்குக் காரணம் வாய்ப்பின்மை, அவங்களைச் சுத்தி இருக்கும் சமூகம், எல்லாவற்றையும் அடுத்த ஜெனெரேஷனுக்குக் கடத்த முடியாத தன்மை.

      நீக்கு
  50. அந்த மற்ற ஆவிக்கதை:)..

    இங்கு முன்பு..ஒவ்வொரு திங்களிலும் காலையில், இன்னொரு ஊருக்கு கிளினிக்குக்காகப் போவார் என் கணவர். அந்த கிளினிக் இருக்கும் பில்டிங்.. மூன்று மாடிக் கட்டிடம், 2 வது மாடியில் இவரின் கிளினிக் றூம், ஆனா 3வது மாடி படியேற முடியாமல் எப்பவும் லொக் பண்ணியே இருக்குமாம். இவர் அதுபற்றி யோசிக்கவில்லை.

    ஒருநாள் காலை றூம் போனதும், ஒரே அல்ககோல் வாசனையாக இருந்ததாம், அப்போ நேர் ஐக் கேட்டிருக்கிறார்ர்.. ஏன் இப்படி வாசம் வருகிறது என, உடனே நேர்ஸ் துடிச்சுப் பதைச்சு.. ஆஆஆ உங்களுகு வாசம் வந்துதா வந்துதா என கேட்டுப்போட்டு சொன்னாவாம்ம்..

    அந்த பில்டிங் ஒரு பழைய கட்டிடம், அதில் யாரும் குடி இருப்பதில்லை. 3 வது மாடி மூடியிருப்பதன் காரணம், அங்கு பழைய ஆவி இருப்பதாக நம்புகிறார்களாம். சனி ஞாயிறில் மூடித் திறக்கும்போது திங்கள் கிழமைகளில் இப்படி வாசம் வருவதுண்டாம்.

    இந்த பில்டிங்க்கு எதிர் வீடுகளில் இருப்போர் சொல்லியிருக்கிறார்களாம், பல இரவுகளில் 3 வது மாடி ஜன்னலில் ஒரு பெண் வெள்ளை ஆடையுடன் வெளியே பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கின்றனராம்.

    இங்கு வெள்ளையர்களின் நம்பிக்கை, அவர்கள் [இப்படி ஆவிகள்] தன் பாட்டில் இருப்பார்கள், நாமும் நம் பாட்டில் இருக்கோணும் என்பதே.

    சனி ஞாயிறில் பூட்டப்பட்டிருக்கும்.. திங்கள் முதல் வெள்ளிவரை திறந்திருக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதே போல நானும் ஒரு மருத்துவமனை அனுபவம் கேட்டிருக்கிறேன். மருத்துவமனையில் பணிபுரியும் என் உறவு ஒருவர் ஒருமுறை சொல்லியிருக்கிறார்.  இரவுப்பணியில்ஆபரேஷன் தியேட்டருக்குச் செல்லும் வழியில்  அதன் அருகில் அமானுஷ்யமான குரல்கள் கேட்குமாம்!

      நீக்கு
    2. தன் பாட்டில்//

      இதனால்தான் நான் ஸ்பிரிட் ட்ரிங்க்ஸ் குடிப்பதில்லை .கோக் கூட திறக்க மாட்டேன் ஆவி அது பாட்டிலில் இருக்கட்டும்னு நல்லெண்ணம்தான் .அப்பா இப்போ தான் திருப்தி இதை படிச்சி பூஸ் நறநறன்னு பல்லை கடிச்சி பல்செட் பீஸ் பீஸாகி விழப்போகுது ஜாலி ஜாலி

      நீக்கு
    3. //..தன் பாட்டில் இருப்பார்கள், நாமும் நம் பாட்டில் ..//

      வருது..வருது. எனக்கும் .. ஆல்கஹால் வாடை !

      நீக்கு
  51. சரி முடிவுரைக்கு வருகிறேன்ன்:)).. இம்முறை மாமா 8 அடி பாய்ந்தால் மருமகன் 16 அடி பாயும் கதையாக போஸ்ட் அலங்கரிச்சிருப்பது மிக அருமை:)[இதை எழுதுவதற்காகவே கெள அண்ணனை மிரட்டி விட்டேன்.. அதிகம் கொம்.. பார்க்காமல் ரெஸ்ட் எடுங்கோ என:))] பூஸொ கொக்கோ:)..

    சுஜாதா அங்கிளை[அவரின் ஆவியை:))] அடிக்கடி கூட்டி வந்திருப்பது அழகு.

    ஸ்ரீராம் படிச்சதும் கிழிச்சு அந்த உங்கள் வீட்டருகில் இருக்கும்:) நத்தைக் குடும்ப மரத்தின் கீழே போட்டு விடுங்கோ பிளீஸ்ஸ்ஸ்:))

    பதிலளிநீக்கு
  52. பதில் சொல்ல முடியாவிட்டால் விவாதம்வேண்டாமென்று ஒதுங்கிக் கொள்பவர் அதிகம் சுஜாதா கை கொடுக்க மாட்டாரா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அபுரி ஜி எம் பி ஸார்.     இங்கு இதுவரை யாரும் ஒதுங்கவில்லையே...

      :)))

      நீக்கு
    2. ஈரம் படத்தை மீண்டும் மீண்டும் பார்ப்பது என் வழக்கம்.

      பழி வாங்கும் ஆவியின் கதை. மிகப் பிடித்த படம்.
      எங்கள் சிங்கம் இறைவன் அடி அடைந்த சில நாட்களுக்கு எங்கள் வீட்டு உதவி செய்யும் ராணி,
      அம்மா ,நான் வேலைக்கு வரலைமா.
      ஐய்யா அந்த மூலைல நிக்கறாரு என்று அழுதாள்.
      அடப்பாவமே என் கண்ணில படவில்லையே என்று வருத்தமாக இருக்கும்..
      அப்புறம் அது போல நிகழ வில்லை.

      அதிரா சொல்வது நிஜம்தான். லண்டன் டவரில் இன்னும் கொல்லப்பட்ட
      தலைதுண்டிக்கப்பட்டவர்களின் ஆவிகள் நடமாடுவது வெகு பிரசித்தம்.

      நீக்கு
    3. ஆஆஆ வல்லிம்மாவுக்கும் தெரியுது பாருங்கோ...

      நீக்கு
  53. / * அப்படி அவசியமில்லை. எவ்வளவு அப்படி எழுத முடியும்?  கேட்ட கதைகளாகவுமிருக்கலாம்.  கற்பனையாகவும் இருக்கலாம்.//#
    ஒருமுறை மதன் கார்ட்டூனிஸ்ட்  கேள்வி பதிலில் சொன்னார் பெரும்பாலும் பேசும்போது சிலர் தனக்கு நடந்ததை எனக்கொரு நண்பன் நண்பனுக்கு ஏற்பட்ட என்று சொல்வார்களாம் :)

    பதிலளிநீக்கு
  54. ஹயோ இன்னிக்கு ரொம்ப லேட்டாகிடுச்சே :) பந்தியில் ஒண்ணுமே இல்லை .யாரவது எனக்காக ஏதாச்சும் எடுத்து வச்சிருக்கீங்களா :)))

    பதிலளிநீக்கு
  55. க.ப. அதிரா  :

    1. பேய் பார்த்த அனுபவம் உண்டோ?  பழைய கதைகளை நம்புறீங்களோ? நாங்க பார்த்தமே  ..:)).//

    ஹலோவ் நாங்க கூடத்தான் பார்த்திருக்கோமே :) அடிக்கடி பேசறோமே அது ஊஞ்சலில் உக்கார்ந்து படம் எல்லாம் இங்கே வந்திருக்கு 

    பதிலளிநீக்கு
  56. *  இல்லை.  ஆனால் அப்படி விழுபவர்களில் பெரும்பாலானோர் ஆறுதல் தேடி சுற்றுமுற்றும் புலம்பலாய்ப் பார்த்ததைப் பார்த்திருக்கிறேன்!  அதிலும் எப்பவுமே அடுத்தவர் மேல் பழி!//

    ஸ்ரீராம் இந்த அனுபவம் எனக்கிருக்கு ஒரு பெண் எப்பவும் தயாரா இருக்கும் பழியை என் மேலே போட.
    ஆனால் அது வேறு 
    நான் விழுந்துட்டு அசோ அவமானமாயிடுச்சே னு தான் அரக்கப்பரக்க எழும்பியிருக்கேன் :) 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அல்லோ மிஸ்டர் நீங்க விழுந்ததெல்லாம் புல்லுத் தடக்கி எல்லோ:)... அப்போ பழியைப் புல்லிலதான் போடோணுமாக்கும்:)

      நீக்கு
  57. எல்லா பதில்களும் அருமை ஸ்ரீராம் .அடிக்கடி சுஜாதாவை அழைத்து வரவும் :)

    பதிலளிநீக்கு
  58. /"நீங்கள் கவனிக்கும் விஷயங்களை எழுதுகிறீர்களா? அல்லது எழுதுவதற்காக கவனிக்கிறீர்களா?  இரண்டாவது என்றால் விஷயங்களை இயல்பாய் ரசிக்க முடியாமல் போய்விடுமே" -  இது ஜே. அர்விந்தின் கேள்வி.//செம ரிப்லை ..
    ஆனால் கவனிக்கும்போது ரசித்தல் ஆழமாய் பதிஞ்சிடுச்சின்னா நிச்சயம் பல நாள் கழித்தும் நினைவில் நிற்கும் பசுமையா 

    பதிலளிநீக்கு
  59. //அதிரா எனப் போட்டு கீழே பேயாகிவிட்ட அதிராப் படம்:) கர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஹையோ ஆண்டவா புதுசா வருவோரெல்லாம் இதுதான் அதிரா என நினைக்கப்ப்போகினமே:)) இப்போ மீ என்ன பண்ணுவேன்ன்ன்:)...//
    ஆஹா ஆஹாஹா:) என் என் ஆனந்தம் சந்தோஷமே :)
    இனிக்குதான்  ஸ்ரீராம்  கவரியின் சரியான படத்தை போட்டிருக்கிறார் 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கர்ர்ர்ர்ர்ர்:)... நில்லுங்கோ உங்களுக்கும் மெனு சே சே மனு அனுப்புறேன்:)

      நீக்கு
  60. /இந்த 'செனூரன்' என்பது செந்தூரன் என்று அவர்கள் பெற்றோர் திருச்செந்தூரை மனதில் வைத்து, அவருக்கு வைத்த பெயராக இருக்குமா?//
    தென்னாப்பிரிக்காவுக்கு புலம்பெயர்ந்த பலரின் மூன்றாவது நாலாவது தலைமுறை குடும்ப பெயர்கள் இப்படி பாதியாகி நிற்கின்றது .
    ஒருமுறை  தென்னாப்பிரிக்காவில் ஒரு டாக்சி ட்ரைவர் சந்திரன்பல நராடூ என்ற பெயர் சொன்னாராம் ..கடைசியில் அது பால சந்திர நாய்டு ..
    இன்னொரு சம்பவம் இருக்கு அதை பதிவில் சொல்கின்றேன் :) 

    பதிலளிநீக்கு
  61. எல்லாரும்  புதுமையா பேரை அடைமொழியா வைப்பாங்க :) ஆனாலு அந்த அடைமொழிப்பெயரை ஈஸியா கலாய்க்கலாம்னா அது கவரி மியாவ் வச்சிக்கிற பேர்கள்தான் ஜூப்பர் ஹயோ ஹயோ .கவரி கவரினு எழுதும்போதெல்லாம் சவ்ரசவுரி  சவுரி என்று வியந்து புரண்டு சிரிச்சிங் :))நான் 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் அடுத்த பட்டம் பார்த்து நீங்களெல்லாம் மருந்தடிச்ச பூச்சிமாதிரி மயங்கப்போறீங்கபாருங்கோ:)

      நீக்கு
  62. 1, ஒருவருக்கு சொந்த ஊர் என்பது எது ?
    2, இது பேய்ப்பற்றிய ஒரு கேள்வி :)    ஆலமரப்பேய் ,அரசமரப்பேய் ,புளியமரப்பேய் எல்லாம் கேள்விப்பட்டிருக்கோம் ஆனா ரோஜாச்செடி பேய் செம்பருத்திச்செடி பேய்னு இல்லியே ஏன் ? 
    3, ஒருவரை ஒரு காணொளியில் பார்த்தேன் .யாரையும் பேசவிடாமல் காமெடி என்ற பெயரில்  பிறர் பேசும்போது குறுக்கே குறுக்கே பேசிக்கொண்டிருந்தார் இது நார்மலா இல்ல அப்நார்மலா ?  இல்லை எனக்கு ரசிப்புத்தன்மையில்லையா ? அதற்க்கு கைதட்டியது அரங்கம் முழுதும் .
    4, Greta Thunberg பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள் .ட்ரம்ப் அங்கிள் நடக்கும்போது முறைத்து பார்த்த காட்சி உலகெல்லாம்  டிவிக்களில் வலம் வந்தது .     ஒரு குழந்தையை குழந்தையாக அதனியல்பில் இருக்க விடாமல் செய்தது எது ? அதன் வளர்ப்பா அல்லது சமூகமா ?
    5, //ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் //இதில் எனக்கொரு மாற்று கருத்து இருக்கு  ..யாராவது தவறை தெரிந்தே செய்வார்களா ?? தெரிந்து தவறு செஞ்சா அவர்களில் பிரச்சினை இருக்கு என்றுதானே அர்த்தம் ? அப்புறம் எப்படி MGR அங்கிள் உணர்ச்சி பொங்க யோசிக்காம தேவன் என்றாலும் விடமாட்டேன் என்று பாடலாம் ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அல்லோ மிஸ்டர் அஞ்சூஊஊஊ.. தெரிஞ்சு செய்யும் தவறு என்பது தப்பு எனப்பொருள்படும்.. தவறுதலாகச் செய்வதே தவறு.

      இந்த தப்பு எனப்படுவது, தெரிஞ்சே செய்வது.. அப்படி நிறைய நடக்கின்றதே.. கொலை, கொள்ளை, கற்பழிப்பு இதெல்லாம் தெரிஞ்சு செய்யும் தப்புக்கள்தானே...

      நீக்கு
    2. எங்கள் பதில்கள் அடுத்தவாரம்.

      நீக்கு
  63. எனது கேள்விகளுக்கு அழகான பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி.

    சகோதரிகள் அதிரா, ஏஞ்சல், நெல்லைத்தமிழன் அவர்களின் கேள்விகள் மற்றும் ஆசிரியர்களின் பதில்கள் எல்லாமே ஸ்வாரஸியம்.

    வெளிநாட்டில் வாழ்பவர்களும் கூட பலரும் இங்கு போல் விழாக்கள் எல்லாமும் கொண்டாடுவதாகத்தான் தெரிகிறது அவர்களின் சில வாழ்க்கை முறைகள் அந்தந்த நாட்டிற்கு ஏற்ப மாறியிருந்தாலும்.

    ரசனையான பகுதியாக இருக்கிறது

    துளசிதரன்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!