ஞாயிறு, 1 மார்ச், 2020

போகுமிடம் வெகு தூரமில்லை..... 


என்னப்பா  வீட்டுக்குப்  போகிறோம் என்று சொல்லிவிட்டு எங்கே போய்க்கொண்டிருக்கிறோம்?



ஒரே நிமிடத்தில் மலையை லோடு செய்துகொண்டு வந்துவிட்டாரே  எங்கே டெலிவரி?


இன்னும்  சற்று  நேரத்துக்கு சாலை, மலை, சோலை தான்


 எங்கே போறோம் எங்கே போறோம்னு  திரும்பத் திரும்ப கேட்டாலும் ...பதில் என்னவோ அதே தான்

 இன்னும் கொஞ்ச நேரத்தில் வண்டியை விட்டு இறங்குவோம் ...



 அண்ணன் வீடு எங்கே?.. ஆத்துக்கு அந்தாண்டே ..

தமிழ் சீரியல் பார்த்து பார்த்து, எதையும் சுருக்கமாக ஹனுமான் மாதிரி  "கண்டேன்...."  என்று சொல்ல வர மாட்டேங்குது

 சூளகிரி வரை வந்த நாம் ...


இதோ இன்னும் கொஞ்ச நேரத்தில்.....











தாமரை தெரிகிறதா? சேற்றில் மட்டும்தான் மலர வேண்டுமா? சேலத்திலும்...

35 கருத்துகள்:

  1. ரசனையான வார்த்தைகள் ஜி ஸூப்பர்

    பதிலளிநீக்கு
  2. அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன்பழிப்ப தில்லாயின் நன்று..

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
  3. ஆகா.. மாருதம் வீசுவதாலே!...

    அதுக்காவ வண்டியிலேயே போய்க்கினுருக்க ஏலுமா!?...

    பதிலளிநீக்கு
  4. காலை வணக்கங்கள்.

    உங்கள் படத தலைப்புகள் ரசனை

    பதிலளிநீக்கு
  5. படங்களும் தலைப்புகளும் மிக அருமை. சேலமா. பங்களூர் போகவில்லையா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சேலமோ, பெங்களூருவோ என்று நினைக்கிறேன் அம்மா!

      நீக்கு
  6. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்ததாக இருக்கவும் ஆண்டவனை மனதாற பிரார்த்தித்து கொள்கிறேன்.

    படங்கள் அருமை. தலைப்புக்கும் பொருத்தமாக உள்ளது.

    மலைகள் எப்போதுமே அழகு. மலைகளின் முதல் படங்கள் கண்ணை கவர்கிறது. மலையை லோடு ஏற்றிய படம் பொருத்தமான ஷாட்டாக உள்ளது.

    /தாமரை தெரிகிறதா? சேற்றில் மட்டும்தான் மலர வேண்டுமா? சேலத்திலும்.../

    வாசகம் ரசிக்கும்படி உள்ளன. தாமரை எங்கு தேடியும் என் கண்களுக்கு தென்படவில்லையே.. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ.. ஜன்னலில் மலர்ந்த தாமரை.. இப்போதுதான் கண்டு கொண்டேன்.

      நீக்கு
    2. வாங்க கமலா அக்கா...  வாழ்த்துக்கு நன்றி.  நல்வரவும் வணக்கமும்.

      படங்களை ரசித்ததற்கு நன்றி.

      நீக்கு
    3. ஜன்னலில் மலர்ந்த தாமரை...   நன்றாயிருக்கிறதே இதுவும்!

      நீக்கு
  7. அனைவருக்கும் காலை வணக்கம். இணையம் இணையாததால் உங்களோடு இணைய முடியவில்லை. நாளை சரியாகும் என்ற நம்பிக்கை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்பிக்கைகளால் ஆனது வாழ்க்கை!   சரியாகட்டும்!

      நீக்கு
  8. ஆகா.. மாருதம் வீசுவதாலே!...

    ஆனந்தம் பொங்குது மனசிலே!..

    பதிலளிநீக்கு
  9. பதிவைப்படிக்கும்போது ஒரு மலையாள படம் நினைவுக்கு வந்தது படம் பெயர் ’இதா இவிடம்வரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா...    ஹா...  ஹா...    தமிழில் அதை  சம்பந்தமில்லாத பெயரில் விளம்பரம் செய்திருந்தார்கள் அப்போது!

      நீக்கு
  10. போகும் இடம் வெகு தூரமில்லை பாடல் தலைப்பி கொடுத்தது மலையைப் பார்த்தா, போகும் பாதையை பார்த்தா?
    நன்றாக இருக்கிறது தலைப்பு.
    தாமரையை கண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயணம் செல்வதைச் சொன்னவர் எங்கே செல்கிறார்கள் என்று சொல்லவிலையே என்று அப்படித் தலைப்பு வைத்தேன் அக்கா.

      நீக்கு
  11. https://www.blogger.com/profile/13626774474019425545 http://kankaatchi.blogspot.com/

    இப்போது ஏழெட்டு மாதங்களாக இங்கே இவர் எழுதுவதில்லை போலிருக்கிறதே ஸ்ரீராம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஸார்.   சென்று விசாரித்திருக்கிறேன்.

      சுஜாதா லிஸ்ட்லிங்க்  உங்கள் மெயிலுக்குஅனுப்பி விட்டேன்.

      நீக்கு
  12. புகைப்படத் தொகுப்பு அருமை

    தமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை .
    இதேநேரம் நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக எட்டு வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் தங்களது போகுமிடம் வெகு தூரமில்லை… பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அடுத்த மாதம் முதல் தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!