ஞாயிறு, 14 நவம்பர், 2021

கீரிப்பாறை எஸ்டேட் பயணம் : 08.

 















































தொடர்ச்சி - அடுத்த வாரம். 

= = = = 

45 கருத்துகள்:

  1. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  2. இப்போது இருக்கும் நிலையில் தண்ணீரைச் பார்த்தாலே சென்னை நகர வெள்ளமோ என்றுதான் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், சென்னை கெட்டுப்போய்விட்டது!!

      நீக்கு
    2. சென்னை கெட்டுப் போகவில்லை. கெட்டுப் போகும்படி மக்கள் விட்டு விட்டார்கள். இதோ, இப்போ அலறும் மக்கள் அனைவரும் ஓரிரு மாதங்களில் நடந்ததை மறந்துவிடுவார்கள் அடுத்த மழைக்காலம் வரும் வரை! அரசும் அப்படியே மறந்து விடும். பராமரிப்பு வேலைகள் எல்லாம் முந்தைய ஆட்சியை விடச் செவ்வையாகச் செய்திருப்பதாகக் கூறி இருக்கும் அரசு நிர்வாகம் அப்புறமாய் இத்தனை இடங்கள் மூழ்கிப் போய் இருப்பதற்கு என்ன காரணம் சொவார்கள்? எரிகளைக் கண்காணிப்பது பெரிதில்லை. அவற்றைக் கோடை நாட்களிலேயே ஆழப்படுத்தி இருக்க வேண்டாமா? ஏரிகளுக்குத் தண்ணீர் செல்லும் வாய்க்கால்களைச் சுத்தப்படுத்தி இருக்க வேண்டாமா? ஆங்காங்கே அந்த வாய்க்கால்களில் ப்ளாஸ்டிக் குப்பைகள்! அடிப்படையே சரியில்லை. முந்தைய அரசைக் குற்றம் சொன்னதோடு இந்த அரசின் வேலை முடிந்து விட்டது.

      நீக்கு
    3. பேரிடர் நிவாரண நிதியின் தன் பங்கான 75 சதவீதத்தை மத்திய அரசு எப்போதோ கொடுத்துவிட்டது. ஆனால் இந்த அரசின் அமைச்சர் ஒருவர் 25 சதவீதம் பணம் நிலுவையில் உள்ளது வந்து சேரணும் என்கிறார். அந்த 25சதவீதம் குறித்துக் கேட்க வேண்டியது முதல்வரிடம் என்பது கூட அவருக்குத் தெரியவில்லை. :( இருக்கும் 75 சதவீதப் பணத்தில் இருந்தாவது செலவு செய்யவேண்டியது தானே!

      நீக்கு
    4. தமிழக அரசுக்கு நிறைய நிதி இருந்தால் மக்களுக்குச் செய்ய மாட்டாங்களா? நம்ம கடமை, டாஸ்மாக்உபயோகிக்கும் மக்கள் எண்ணிக்கையை அதிகரிக்கணும். நாமும் கஸ்டமர்களாயிடணும் (ஏற்கனவே ஆகலைனா). அப்புறம் வரும் வரவை வைத்து மைதானம் முதற்கொண்டு எல்லாத்தையும் தமிழக அரசு தூர்வாரிடும்.

      நீக்கு
    5. மைதானத்தை எதற்கு தூர் வாரணும் ?

      நீக்கு
    6. அங்கயும் மழைநீர் சேகரிப்புத் திட்டம், காணாமல் போன குளம் ஏரி இவர்களுக்கு மாற்றாக குளம் அமைக்கும் திட்டம் போன்றவற்றிர்க்குத்தான்.

      நீக்கு
  3. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். இனி வரப்போகும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறாமல் இத்துடன் நின்று பலவீனம் அடையப் பிரார்த்திக்கிறோம். கன்யாகுமரி மக்களை எல்லாம் வல்ல இறையருளால் காப்பாற்றும்படியும் பிரார்த்திக்கிறோம். தி/கீதா அவர் தந்தையுடன் பாதுகாப்பான இடத்துக்குச் சென்றிருப்பார் என நம்புகிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி

      நேற்றைய கருத்தில் சகோதரி கீதா ரெங்கன் அவர்கள் நாகர்கோவிலில் தங்கியிருக்கும் பகுதியெங்கும் சூழ்ந்திருக்கும் வெள்ள அபாய இக்கட்டுகளில் மாட்டிக் கொண்டிருப்பதை பற்றி எழுதியிருந்தீர்கள். அவர் நலமுடன் அந்த இடத்தை விட்டு சென்று விட்டாரா? தகவல் ஏதும் அவரிடமிருந்து வந்ததா? அவரும், அவர் தந்தையும் நலமுடன் வேறு இடத்திற்கு சென்று பத்திரமாக இருக்க நானும் இறைவனை பிரார்த்துக் கொள்கிறேன். என்னவோ.. இந்த தடவை வருண பகவான் அதீதமான மழையை தருகிறார். அனைவரையும் அவர்தான் பத்திரமாக காப்பாற்ற வேண்டும். பிரார்த்திப்போம். நன்றி.

      அன்புடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    2. முயற்சித்துக் கொண்டே இருக்கிறேன்.  தகவல் எதுவும் வரவில்லை.

      நீக்கு
    3. கீதா ரெங்கன் சற்றுமுன் அனுப்பியுள்ள தகவல்.  அவர் நலமாக இருக்கிறார்.  இதுவரை இவர் இருக்கும் இடத்துக்கு மீட்புக்குழு வரவில்லை.  ஊரில் ஒரு இடத்தில் இருக்கும் மின்சார வசதியைக் கொண்டு அவ்வப்போது கொஞ்சம் போனை சார்ஜ் செய்து கொள்கிறாராம்.  மடைபோன்ற நம் கேள்விகளுக்கு பதில் சொல்ல அவருக்கு முடியவில்லை. மிகச்சுருக்கமாக தான் நலமாக / பத்திரமாக  இருப்பதை சொன்னார்.  ஆனால் அவரும் அவர் அப்பாவும் நலமாகவே இருக்கிறார்கள்.  வெள்ளம் இன்னும் வடியவில்லை.

      நீக்கு
    4. நிம்மதியான செய்தி..

      மீட்புக் குழு விரைவில் வந்து சேரவும் நல்லபடியாக இல்லம் திரும்பிடவும் வேண்டிக் கொள்வோம்..

      நீக்கு
    5. வணக்கம் சகோதரரே

      சகோதரி கீதா ரெங்கன் நலமாக இருக்கிறேன் என்றது நல்ல செய்தி. விரைவில் அங்கு மழை நின்று,வெள்ள பாதிப்புக்கள் ஏதுமின்றி அவர் தன் தந்தையுடன் இங்கு பயணித்து வந்து விட்டால் நல்லது. அவ்வாறே நடக்க இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். தகவல் தந்தமைக்கு தங்களுக்கும் மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    6. கீசா மேடம் வித விதமா ப்ரார்த்திக்கும்படி நாட்டு நிலைமை இருக்கு

      நீக்கு
    7. தி/கீதாவின் தெளிவான குரலைக் கேட்டதும் கொஞ்சம் ஆறுதலா இருக்கு. நல்லபடியாக அவங்க ஊர் வந்து சேரட்டும்/அப்பாவுடன்.

      நீக்கு
  4. நல்ல வேளையாக 2020 ஆம் ஆண்டில் அவ்வளவாக மழை இல்லாதப்போவே போயிட்டு வந்துட்டாங்க. இப்போ எனில் நினைச்சுப் பார்ப்பது கூட முடியாது. அனைத்துப் படங்களும் நன்றாக இருக்கின்றன. இங்கே கொஞ்சம் போல் நீருடன் காட்சி அளிக்கும் இடமெல்லாம் இப்போது வெள்ளப் பெருக்கில் மூழ்கி இருக்கின்றன. அங்கே சென்று வந்தவர்களுக்கு வித்தியாசங்கள் தெரிந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
  5. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    படங்கள் அனைத்தும் அழகாக இருக்கிறது. பசுமையான இடங்களும், நீரின் ஜிலு ஜிலுப்புடன் கூடிய கோவில் தரிசனமும் மனதுக்கு உற்சாகத்தை தந்திருக்கும். நானும் தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..

    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  8. காய்ச்சல் இன்னும் விடவில்லை.. காய்ச்சலோடு காய்ச்சலாக வேலைக்கு வந்திருக்கின்றேன்..

    தஞ்சையம்பதிக்கு வருகை தந்து நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விரைவில் பூரண நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம்.

      நீக்கு
  9. பிரார்த்தித்து அனைவருக்கும் உங்கள் அன்பிற்கும் மிக்க மிக்க நன்றி. நானும் அப்பாவும் பதந்திரமாக இருக்கோம். கரண்ட் வந்துவுட்டது. தண்ணீர் நன்றாக வடிந்திருக்கிறது.மழை இல்லை ஆனால் கருமேகம் சுற்றுகிறது.மலைகள் மூடுகின்றன (இன்றைய படங்களின் சொந்த மலைதா ன்....).அங்கு மழை என்று தெரிகிறது. அங்கங்கே உடைப்புகள் எனவதால் போக்குவரத்து சிரமம். அதற்கு எங்கள் கிராமமே பாதுகாப்பு. மலையில் மழை பெய்தால் மீண்டும் பேசிப்பாரை பொதிகை டேம் திறக்க வேண்டிவரும்..மீண்டும் கிராமத்துல வெள்ளம் வரும்...என்றாலும் நாங்கள் பாதுகாப்புடன் இருக்கோம். மீட்புக்குழு வந்த பகுதி வேறு. அது மக்களின் தவறு,அதை பற்றி எல்லாம் விரிவாக பதிவு போடுகிறேன். நிலைமை சீரானதும். அப்பாவும் நலம். மீண்டும் மிக்க மிக்க நன்றி அனைவருக்கும்.ஸ்ரீராம்கும் மிக்க நன்றி. எப்பித்து கரண்ட் போகும்..வரும் தெரியல..எங்களுக்கு வெள்ளம் புதிதல்ல. சிறு வயதிலிருந்தே அனுபவம். இந்த முறை பயத்திற்கு காரணம் பல. பதிவில் சொல்றேன்.

    மீண்டும் அனைவருக்கும் என் உளமார்ந்த அன்புடன் மிக்க மிக்க நன்றி.

    கீதா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நடந்தது எல்லாம் நாரணன் அருள்...

      நலமே சேர்க..
      வாழ்க நலம்..

      நீக்கு
    2. காணொளிகள் கண்டேன். பணம் உடையவர்கள் மட்டும்தான் நீச்சல் குளம் கட்டணுமா, ஏழைகளுக்கெல்லாம் வீட்டின் பக்கத்திலேயே நீர் நிலையை உண்டாக்குகிறேன் என்று கடவுள் நினைத்திருப்பாரோ?

      பாம்புலாம் ஒதுங்கியிருக்குமே... கரண்ட் கட். மளிகை சாமான்கள் எப்படிக் கிடைத்தன? எப்படி உணவு தயாரிக்க முடிந்தது? கஷ்டம்தான்.

      இந்த மாதிரி வெள்ளம் புகுவதை நான் இதுவரை கண்டதில்லை/அனுபவித்ததில்லை. 2015ல் என் உறவினர், 10 லட்சத்தை இழந்தார், கீழ்த்தளம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்ததால்.

      நீங்கள் இருவரும் பத்திரம் என்பதறிந்து மகிழ்ச்சி.

      நீக்கு
    3. பத்திரமாக இருப்பது அறிந்து மகிழ்ச்சி கீதா.
      நலமுடன் ஊர் திரும்ப வாழ்த்துக்கள்.

      நீக்கு
    4. நாகர்கோயிலின் ஏதோ ஓர் ஊரில் வெள்ள நீரில் குதித்துப் பெண்கள் தைரியமாக நீந்திக் கொண்டு பாதுகாப்பான இடம் தேடிச் செல்வதைக் காணொளிகள் மூலம் கண்டேன். இறை அருளால் அவர்கள் நல்லபடியாக இருக்கட்டும். ஒட்டுமொத்த நாகர்கோயில்-கன்யாகுமரி மக்களுக்காகப் பிரார்த்திக்கிறோம்.

      நீக்கு
  10. ஓடையா ? நீரில் நடந்துதான் எதிர்கரையில் இருக்கும் கோவிலுக்கு போக வேண்டும் போல் உள்ளது.
    ஒருவர் கீழே இருக்கும் கல்லை எடுத்து நீர்ல் போடுகிறார் எதை பார்த்து கல்லால் அடிக்கிறார் என்று தெரியவில்லை.

    படங்கள் எல்லாம் அந்த இடத்தின் பசுமையை சொல்கிறது.

    பதிலளிநீக்கு
  11. படங்களும் காட்சிகளும் நன்று. தொடரட்டும் பயணம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!