திருமதி பானு நட்ராஜ் அவர்களின் படைப்புகளை விருட்சம் இதழில் படிக்க முடியும். 2025ல் நடைபெற்ற அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு சிறுகதை போட்டியில் முதல் பரிசு பெற்றவர்களில் இவரும் ஒருவர். சிவசங்கரி-குவிகம் சிறுகதை போட்டியிலும் பரிசு பெற்றிருக்கிறார். நல்ல ரசனை, தெளிந்த சிந்தனையோடு தன் எண்ணங்களை தயங்காமல் வெளிப்படுத்தக் கூடியவர். அவருடைய முதல் சிறுகதையான 'ஊர்மிளா'வை நம் பார்வைக்கு தந்திருக்கிறார். அவரை எ.பி. வாசகர்களுக்கு அறிமுகப் படுத்துவதில் மகிழ்ச்சி.
- பானுமதி வெங்கடேஸ்வரன்.
ஊரே புதிதாகிவிட்டது. எங்கும் வண்ணத் தோரணங்களும், தென்னங்கூந்தல்களும், பட்டு விதானங்களுமாகக் கண்களைக் கவருகின்றன. கூத்தும், பாட்டும்,களைகட்டுகின்றன. இலைமடக்குகளில் ஆவியெழும் கோதுமை அப்பங்களையும், தெள்ளரிசி புட்டினையும், கதலிகளையும் வாங்கிக் கொண்டே மக்கள் நிழல் தரும் விதானக் கூரைகளின் கீழே குழுமி உண்கிறார்கள்.
எங்கிருந்துதான் இத்தனைமலர்கள் வந்தன?
ரோஜா, சாமந்தி ,மல்லி, முல்லை, தும்பை, துளசி, அரளி, வில்வம், பவழமல்லி, தாமரை, தாழம்பூ,நாகலிங்கப் பூ, மனோரஞ்சிதம், செண்பகம், மருதோன்றி, மருக்கொழுந்து ஊரே மலர்களின் வாசத்தால் தேவர்களையும் அழைத்து வந்துவிடும் என ஊர்மிளை நினைத்தாள். மறுபக்கம் பார்த்தால் கனி வகைகள் வானை எட்டுவது போல் குவிந்து கிடக்கின்றன. அவரவர் விருப்பமானவற்றை எடுத்து சுவைக்கிறார்கள். பச்சை உருமால் கட்டிக் கொண்டு வணிகர்கள் ராஜ வீதியையொட்டிய சாலை ஓரங்களில் முத்து, பவழம், கோமேதகம், மரகதம், மாணிக்கம், வைரம், வைடூரியம் என அடக்க விலைக்கு விற்றுக் கொண்டிருக்கிறார்கள். இளங்காளைகள் கன்னியரைக் கவரும் முனைப்புடன் வீர நடை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். மிகச் சிறந்த அலங்காரங்களுடன் பெண்கள் அவர்களைப் பார்த்தும், பாராதது போல் ஆற்றுப் படுகையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள்.
இன்று காமன் திருவிழாவுடன் அவர்கள் அன்பிற்குரிய இராமன் பட்டம் சூடி அமர்ந்த பெருவிழாவும் சேர்கிறது. அவர் அரியணை அமர்ந்ததிலிருந்து ஏழு நாட்களாக இதே கோலாகலம்தான். இராமன் இன்று சீதையுடன் அயோத்தி மக்களை சரயு நதிப் படுகையில் சந்திக்கிறார். மக்களின் உற்சாகத்திற்குக் கேட்பானேன்?
‘இன்று இரவு முதல் ஜாமத்தில் வருவேன். நாம் படகில் உல்லாசமாகச் சென்று வரலாம்’ என்று இலக்குவன் சொல்லிச் சென்றதிலிருந்து ஊர்மிளைக்கு நிலை கொள்ளவில்லை. எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன ஒருவரை ஒருவர் பார்த்து? ’தனிப் படகா?’ எனகேட்கத் தவறிவிட்டோமே என அவள் வருந்தினாள். அக்காவும், அவள் கணவனும் இவரைத் தனியாகவே விடமாட்டார்களா எனக் கூட அவளுக்குத் தோன்றியது. ‘ஆக்கப் பொறுத்தோம், ஆறப் பொறுக்க முடியாதா’ எனத் தன்னையே வினவிக் கொண்டு ஆடியில் பார்த்துக் கொண்டாள். ’நன்றாகத்தான் இருக்கிறேன்; அவருக்குப் பிடித்த நிறத்தில் சேலை,ஆபரணங்கள்.’
வானில் மதி எழுந்துவிட்டது. தன் பிரிய ரோகிணியுடன் அவன் மலர்ந்து சிரிக்கிறான்.
ஆனால், அவன் ஒளியில் நட்சத்திரங்கள் தெளிவாகத் தெரியவில்லை. இந்த நியதி ஏன் ஏற்பட்டுள்ளது? அவர் தொலைவில் உள்ள ரோகிணியா? நான் தேய்ந்து வளரும் நிலவா? கூடி இருப்பது போல் வெறும் தோற்ற மயக்கங்களா? பதினாங்கு ஆண்டுகள்..உண்மையிலேயே நான் உறங்கிக் கொண்டாயிருந்தேன்? அதுதான் முடிந்துபோயிற்றே, ஏன் அவர் இன்னமும் வரவில்லை? ஒருக்கால், இரவின் முதல் ஜாமத்தில், படகில் என்று அவர் சொன்னதாக நானே கற்பனை செய்துவிட்டேனோ?
என் ஆசைகளை கிளறிவிட்டுவிட்டு மறைவது அவருக்கு வாடிக்கையாகிவிட்டது.
‘தேவி’ என்று இலக்குவன் குரல் அவளை அழைத்தது. ‘தேவியென்ன தேவி, பெயரைக் கூட மறந்துவிட்டார் போலும். ஒருக்கால் வேறு யாரேனும் வந்திருக்கிறார்களோ?’
அவள் நினைத்ததும் சரிதான். ஒளி பொருந்திய முகத்தோடு, தூய துவராடையில் கருணை ததும்ப ஒரு மூதாட்டி இலக்குவனுடன் வந்திருந்தார். அவர் காலில் விழுந்து வணங்கிய ஊர்மிளாவை ”பூரண நிலவென வாழ்க” என்று அவர் வாழ்த்தினார்.
திகைப்பும், குழப்புமாக அவள் கணவனைப் பார்த்தாள்.”தேவி, இவர், அகலிகை, ஆம் அதே அகலிகை. உன்னைச் சந்திக்க வந்திருக்கிறார். நான் ‘நித்ரா’தேவியிடம் கொடுத்த வாக்கை இப்பொழுது நிறைவேற்ற வேண்டும். என்னை மன்னித்துவிடு”
கொதிக்கும் உள்ளத்துடன் அவள் அவனைப் பார்க்கையிலேயே அவன் மஞ்சத்தில் துயின்றுவிட்டான். மனைவியின் காதலும், தாயின் பரிவுமாக அவள் மனது கடைந்தது.
முடிவில் ஆற்றாமையில் அவள் கண்களில் நீர் மல்கியது. அகலிகை அவளை அணைத்துக் கொண்டாள்.
“அழாதே,மகளே! இது வினைப்பயன்.”
‘என்ன வினை? யார் செய்தது?’
“நீதான், ஊர்மிளா”
‘என்னது, நானா?’
“நீ அவன் உறக்கத்தைப் பெற்றுக் கொண்டாய். இப்பொழுது அவன் உன் தூக்கத்தை”
‘இல்லை, அப்படியல்ல அவர் சொன்னது. அண்ணனுடன் காட்டுக்குப் போன அன்று இரவு
உறக்கத்தின் தேவதை அவரை அணுகியது.
ஒரு ஒப்பந்தத்தின் பேரில் நான் இடைவிடாது பதினான்கு ஆண்டுகள் அவருக்காக
உறங்கினேன். வனவாசம் முடிந்த பிறகு இந்த உறக்கம் மீள்வது ஏன்?’
“அப்போ, உன் பங்கு தூக்கம் என்னாயிற்று?”
‘பகல் பொழுதின் தூக்கம் எனக்கானது, இரவு அவருக்கானது’
“இல்லை, மகளே, நீயே சிந்தித்துப் பார்.நாலு நாட்கள் இரவில் தூங்காதிருந்தால் நாம் உறக்கத்தின் வசம் வீழ்ந்துவிடுவோம்.ஆனால், நீ அவனாகவே அந்த நாட்களில் தூங்கியிருக்கிறாய். உனக்கான தூக்கத்தை அவன் எடுத்துக்கொண்டுவிட்டான்.”
‘இல்லை, இது நேர்மையில்லை. மரக் கட்டையாகக் கிடந்தவளுக்கு தெய்வங்கள் செய்யும் அநீதி’
‘நீ மரமாகக் கிடந்தாய்; நான் கல்லாக’
வெறி பிடித்தவள் போல் ஊர்மிளா சிரித்தாள். அவள் உள்ளே குமுறிய இயலாமையும், கசப்பும் வார்த்தைகளாய் வெடித்தன.
‘நீங்களும், நானும் ஒன்றா? நீங்கள் கல்லாக ஆனது உங்கள் காமத்தால்; நான் உணர்வற்ற கட்டையெனக் கிடந்தது காதலால்’
“சொல். நீயும் சொல்;சொல்லாதவர் யார் இந்த உலகில்?’’
‘உண்மை உங்களைச் சுடுகிறது.’
“இல்லை மகளே. உணர்வுகளோடு வாழ்ந்தவருக்குத் தான் அந்தந்தக் கணங்களின் உண்மை புரியும்”
‘நேரடியான பதிலில்லை இது.’
“சரி, நீஅரசகுமாரி; இளவரசியாகப் பிறந்தவள்; அரண்மனையில் வாழப்புகுந்தவள். ஒரு நாளின் எத்தனை நாழிகைகள் நீ அவருடன் இருந்திருப்பாய்? உன் எத்தனை தேவைகளை அவர் அறிந்திருப்பார்? அவரின் எத்தனை செயல்களில் நீயும் பங்கேற்றிருப்பாய்?”
‘இது ஒரு அளவீடா? அவரை நான் மறந்ததுமுண்டா?’
“சரி, இதையே திருப்பிக் கேட்டுப்பார். அவன் உன்னை எப்பொழுதெல்லாம் நினைத்தான் என்று?”
‘அன்பு, காதல் என்பதெல்லாம் சமன் செய்யும் கணக்கு அல்ல’
“நல்லது. நம்மை இப்படி நம்ப வைத்த ஆண்களைப் போற்றுவோம்! துலாத்தட்டுக்கள் சமமாகத்தான் இருக்க வேண்டும் பெண்ணே! ஏறு மாடுகள் ஏறத்தாழ இருந்தால் நிலம் உழுதல் என்னாகும்?”
‘அப்படியென்றால்?’
“ஊர்மிளா, நான் காட்டில் வாழ்ந்தவள். மிக எளிமையாக இருக்கத் தெரிந்தவள். இயற்கையின் பருவ விளையாடல்களை இரசித்தவள். அவற்றினூடாக மனமும், மணமும் வளர்த்தவள்.
என்னை விட மிக முதிர்ந்தவரை மணம் செய்ய நேர்ந்ததில் வருந்தாதவள். அவரிடத்தில் எனக்கு சில எதிர்பார்ப்புகள் இருந்தன. அறிவை வளம் படுத்தும் ஆசானாகவும், விளையாட்டுத் தோழனாகவும், காமக் களியாட்டுக் கணவனாகவும் அவர் இருக்க வேண்டுமென எனக்குக் கனவுகள்.
ஆனால், நான் ஒரு பணிவிடைப் பெண்ணாகத்தான் பார்க்கப்பட்டேன். ஆனால், அதையும் காதலுடந்தான் செய்தேன். எதிலும் குறைவைக்கவில்லை; எப்பொழுதும் சோம்பியதில்லை.”
‘ஓ..’
“என் கனவுகள் பின்னிப்பின்னி ஒரு நிஜ உருவத்தை ஏற்படுத்தின. அதிலும் இவரே கணவர்.
ஆனால், அழகர், அன்பானவர், காட்டின் செய்திகளையும், நாட்டின் செய்திகளையும் சிரிக்கச் சிரிக்கச் சொல்பவர். காட்டின் உள்ளே அழைத்துச் சென்று நான் அறியா கனிகளைப் பறித்து இருவருமாக அவற்றை உண்போம், தன் ரிஷி நண்பர்களின் குடில்களுக்கு என்னையும் அழைத்துச் செல்வார் என்றெல்லாம் எத்தனை மனக்கோட்டைகள்!”
‘இவைகள் பெரும் ஏமாற்றமாகக் கூட இருக்கட்டும்! ஆனாலும்,இந்திரனை நெருங்க விட்டிருக்கலாமா நீங்கள்?’
“ஊர்மிளா, நான் முன்னரே சொன்னேன். அழுத்தமான கற்பனைகள் ஒருபுறம்; உணர்வுகள் ஒருபுறம். அத்தனையையும் மீறிய தேவை என ஒன்றிருக்கிறது .நீ யாழ் வாசித்திருக்கிறாய் அல்லவா?முறுக்கேற்றி நரம்புகளை விண்ணென்று அதிர வைத்து சுதி கூட்டி அப்படியே வைத்துவிட்டால், சுதி கலையாமலே எப்போதும் அப்படியே இருக்காது, மகளே. மீண்டும் சுதி அமைக்கும் கைகளில் இராகம் எனப் பொங்கிவிடும்.”
“அழகாகப் பேசுகிறீர்கள்.ஆனால்,ஒழுங்கு மீறலை நியாயப்படுத்த முடியுமா?”
“முட்டாளே! நீ யாழில்லையடி! உன் உடம்பில் உனக்கு முதல் அதிகாரமில்லயா? கற்பென்பது உடல் சம்பந்தப்பட்டது என்பது பெரும் அபத்தம். நான் கற்பித்துக் கொண்ட அந்தப் புனைவோடுதான் நான் புனைந்தேன். அதில் தவறொன்றுமில்லை.”
‘பின் ஏன் கல்லாகிக் கிடந்தீர்கள்?’
“அதன்பின் நான் யாரை தண்டிக்க வேண்டும்? எவரையுமில்லை அல்லவா? என் கற்பனைக் காட்சி முடிந்த பின்னர் எனக்கு வேறு நிறைவு வேண்டுமா என்ன?”
‘பின் ஏன் எழுந்தீர்கள்?’
அகல்யா சிரித்தாள்.”பெண்ணே! கல்லும் அசைபோடும்; அதில் திளக்கும்; பின்னர் வானத்தில் ஆடும் மயில், குயிலெனத் தோன்றுகையில் முழுதுமாக எல்லாவற்றையும் கடந்துவிடும்”
‘இவர் இப்படி உறங்கினால்..’
“துருவக் கரடிகளைப் பற்றி அறிந்திருப்பாய். அவை மிகக் குளிரில் பல மாதங்கள் உறங்கிவிடும்; ஏனெனில் அந்த மாதங்களில் அவை உண்ண உணவு கிடைக்காது.உறங்குகையில் சக்தியும் அதிகம் தேவைப்படாது. நீ கும்பகர்ணன் உறங்கியதைப் பற்றியும் அறிந்திருப்பாய். பெண்ணெனப் பிறந்துவிட்டாய். அரண்மனையின் கட்டுக்கோப்பில் வாழ்கிறாய். பொறுத்திருக்க உனக்குத் தெரியும். வேறென்ன நான் சொல்ல?”
இந்த அகலிகை கதைன்னு வந்தா, பொதுவா சொல்லுற ஒரு விஷயம் இருக்கு: “அகலிகைதான் உணர்ந்திருக்கணும்… இந்த ஆள் கௌதமரா இல்ல… இந்திரனா…” அப்படின்னு.
பதிலளிநீக்குஅப்போ எனக்கு ஒரே கேள்வி தான்:
கௌதம மகரிஷி மாதிரி தபோபலத்துல, ஞானத்துல, சக்தியில உச்சத்துல இருந்த ஒரு மகரிஷியே இந்திரன் சேவல் வேஷம் போட்டுப் போய் அவரை ஏமாத்தினதை அப்போ கண்டுபிடிக்க முடியலையாம். அப்படின்னா… ஒரு சாதாரண குடும்பப் பெண் எப்படி கண்டுபிடிக்க முடியும்?
இங்க தான் male chauvinism நுழைகிறது.
கதையில நடக்குற பாவத்துக்கான முழுப் பொறுப்பும் பெண்ணுக்கு மட்டும் தள்ளி விடுற ஒரு வசதி...நம்ம சமூகம் ரொம்ப நாளா யூஸ் பண்ணிட்டு இருக்கு.
ஆண் தவறு பண்ணினா → “அவன் இயல்பு”
பெண் ஏமாந்தா → “அவள் ஏன் கவனிக்கல?”
அகலிகை என்ன தவறு செய்தார்?
கதவத் திறந்து யாரையும் உள்ளே வரவழைக்கல. காம வெறியோட வெளியே போகல. “இந்திரன் வேணும்”ன்னு ஆசைப்பட்டு ஓடல
தன் கணவன் போலத் தோன்றிய ஒருவரை நம்பினா. இந்திரன் யாரு?
தேவர்களின் ராஜா...மாயை, வேஷம், illusion-ல master....தேவலோகமே ஏமாறும் அளவுக்கு cunning.... அப்படிப்பட்ட ஆள் கௌதமர் மாதிரி தோற்றத்துல வந்து நிற்கிறான். அப்போ அவரைப் பார்த்து, அகலிகை
“ஓ… இந்த நடையில சிறிய மாற்றம் இருக்கு…குரல்ல 0.5 Hz வித்தியாசம் இருக்கு…”ன்னு forensic analysis பண்ணணுமா? அதுக்காகக் கல்லாக்கி சபிக்கற அளவுக்குக் குற்றமா? இது தான் பிரச்சனை.
மற்றபடி, பானுமதி நட்ராஜின் கதை ரசிக்கத்தக்கதே. நல்ல நடை. நல்ல வர்ணனைகள். புதுக் கோணத்தில் ஊர்மிளையைக் (சென்ற புதனா? ஏதோ கேள்வியில் யார் வாழ்க்கை துயரம் என்று ஒரு லிஸ்ட் .....குந்தி, காந்தாரி, த்ரௌபதி என்று வந்திருந்தது. அது போல், தியாகம் பண்ணின பெண்கள்னு ஒரு லிஸ்ட் போட்டால், கண்டிப்பாக ஊர்மிளையின் பெயர் இருக்கும்) காண்பித்திருக்கின்றார். பாராட்டுகள். கதையைக் கேட்டு வாங்கிப்போட்ட பானுமதி வெங்கடேஸ்வரனுக்கு நன்றி.
சூர்யாவின் கருத்துக்களை
நீக்குவழிமொழிகின்றேன்...
சூர்யா நான் சொல்ல நினைத்ததை நீங்க அப்படியே சொல்லிட்டீங்க...டிட்டோ!!
நீக்குகீதா
விரிவான கருத்திற்கு நன்றி சூர்யா. கதாசிரியை பானு நட்ராஜ் அவர்களுக்கு லிங்க் அனுப்பியிருக்கிறேன். வந்து பதில் தருவார் என்று நம்புகிறேன்.
நீக்குகௌதமருக்கும் ஞான திருஷ்டியால் வந்திருப்பது இந்திரன் தான் என்று தெரிந்தே அவர் கோபத்துடன் ஆசிரமத்துக்கு வருவதாய் வால்மிகி சொல்லி இருப்பார்.
நீக்குமற்றபடி நான் ஆணாதிக்கத்தை எல்லாம் ஆதரிப்பவள் இல்லை. அகலிகையை மணப்பதற்கு என வைத்த சுயம்வரப் போட்டியில் இந்திரன் தோற்றுப் போனதால் தான் அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளவில்லை.
நீக்குபானுமதி நடராஜ், நல்ல மிகவும் பரந்த சிந்தனைகள் தாங்கிய கதை எழுதுபவர் என்று வெற்றி பெற்ற அவருடைய கதையை வாசித்த போது தெரிந்து கொண்டேன். கூடவே விருட்சத்திலும் வாசிக்கிறேன் அவ்வப்போது. இவங்க சொல்வனத்தில் கட்டுரைகளும் எழுதுறாங்க.
பதிலளிநீக்குகீதா
விருட்சத்திற்குதான் கதைகள் அனுப்புவதாக சொன்னார். பொருளாதாரம் தொடர்பான கட்டுரைகளும் எழுதுகிறாராம். எ.பி.க்கும் கதை தானம் செய்வதாக கூறியிருக்கிறார்.
நீக்குவாசிக்கும் போதே அசாத்திய கற்பனை வர்ணனைகள் மனதில் காட்சிகளாய் விரிவது அவரது திறமையைச் சொல்கிறது.
பதிலளிநீக்குகீதா
Yes
நீக்குஅவர் தொலைவில் உள்ள ரோகிணியா? .........ஒருக்கால், இரவின் முதல் ஜாமத்தில், படகில் என்று அவர் சொன்னதாக நானே கற்பனை செய்துவிட்டேனோ?//
பதிலளிநீக்கு14 வருடங்கள் பிரிந்திருந்த ஒரு பெண்ணின் மனதை மிக அழகாகச் சொல்லியிருக்கிறார்.
இது முதல் கதையா!!!? எழுத்து நடை நன்றாக இருக்கிறது.
ஓ! அகலிகையும் வருகிறார். அப்பகுதி எனக்குச் சட்டென்று புரியவில்லை. அகலிகை - ஊர்மிளா பகுதி சட்டென்று முடிந்துவிட்டது போன்று எனக்குத் தெரிகிறது. ஒரு வேளை எனக்குதான் அப்படித் தோன்றுகிறதோ? என்னவோ அங்கு மிஸ்ஸிங் போல.
கீதா
ஊர்மிளா, அகலிகை பற்றி நாம முன்னரே இங்கு பேசி கருத்துகள் பரிமாறிக் கொண்டிருந்திருக்கிறோம். குறிப்பாக அகலிகை...ஜெ கே அண்ணா நான் படிச்ச கதையில் அகலிகை கதையை புதுமைப்பித்தனும் வையவனும் புனைவுகளாக மூன்று கதைகளைப் பகிர்ந்திருந்தார்.
பதிலளிநீக்குகீதா
ஜெ கே அண்ணா பகிர்ந்ததன் தொடர்ச்சியாக, கமலாக்கா அகலிகை கதை எழுதியிருந்தாரே. அவரது கோணத்தில்.
நீக்குகீதா
தங்களின் நினைவாற்றல் வியக்க வைக்கிறது சகோதரி. நான்கூட முதலில் மறந்து விட்டேன். பிறகுதான் நானும், சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்களின் ஒரு சனிக்கிழமை பதிவை படித்த தாக்கத்தில், கருமத்துரையாக சொல்ல ஆரம்பித்து என் பதிவில் அகல்யை கதையை விபரங்கள் படித்து திரட்டி எழுதினேன். ஆனால், உங்கள் ஞாபக சக்தி அபரிமிதம்.பாராட்டுக்கள் சகோதரி.
நீக்குஅகலிகை பற்றிய உங்க கோணம் பற்றி எழுதினதுக்கும் சுட்டி கொடுங்க. படிச்சுப் பார்க்கிறேன். நன்றி.
நீக்குவணக்கம் சகோதரி
நீக்குசகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்களின் ஒரு சனிக்கிழமை பதிவை படித்ததும் கற்புக்கரசி அகல்யை பற்றி எனக்கும் ஏதோ எழுத தோன்றியது. அதன்படி எனக்கு தெரிந்த/படித்தவற்றை கொண்டு என் சிற்றறிவுக்கு எட்டியபடி எழுதினேன். உங்கள் அளவுக்கு நான் பல புராணங்களோ , நன்னெறி கதைகளோ படித்ததில்லை / விவாதித்ததில்லை என்பது என் எண்ணம். எனினும், நீங்கள் அன்பு கொண்டு கேட்டமையால் மகிழ்வுற்று அந்த பதிவின் சுட்டியை தேடி எடுத்து தந்துள்ளேன். நீங்களும் படித்து கருத்து தந்தால் இப்போதும் மகிழ்வடைவேன். நன்றி சகோதரி.
http://kamalathuvam.blogspot.com/2024/10/blog-post.html#comment-form
அகலிகை கதையை நான் உளவியல் ரீதியாகவும் அங்கு சொன்ன நினைவு.
பதிலளிநீக்குஅகலிகைக்கான சாபம் என்பது என்னைப் பொருத்தவரை ஆண் சமூகத்தின் டாமினேஷனின் பிரதிபலிப்பு.
கீதா
முருகா சரணம்
பதிலளிநீக்குபானுமதி நடராஜ் அவர்களுக்கு
பதிலளிநீக்குநல்வரவு
சிறப்பு...
பதிலளிநீக்குநன்றி சார்.
நீக்குஅகலிகை தெரிந்தே தவறு செய்ததால் தான் அவளுக்கும் சாபம், இந்திரனுக்கும் சாபம்.
நீக்குகை விரல்கள் மீண்டும்
பதிலளிநீக்குவலிக்கின்றன...
என்னாச்சு?
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள்.அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய கதை பகிர்வு நன்றாக உள்ளது. சகோதரி பானு நட்ராஜ் அவர்களுக்கு நல்வரவு. ஊர்மிளையும், அகல்யாவும் பெண்ணின் இயல்புகள் குறித்து பேசிக் கொள்வது போன்ற இக்கதையை ரசித்துப்படித்தேன். நான் ஒரு அகல்யை குறித்த கதை எழுதியதும் நினைவில் வந்தது.
தெளிவான எழுத்துக்களில் கதை வடித்த சகோதரி பானு நட்ராஜ் அவர்களுக்கு மிக்க நன்றி. இக்கதாசிரியையை இங்கு அறிமுகப்படுத்திய சகோதரி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களுக்கும் என் அன்பான நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நிறைய யோசிக்க வைக்கும் பாத்திரமாயிற்றே அகலிகை. பலரின் கற்பனையையும் தூண்டியதில் ஆச்சர்யம் என்ன? நன்றிக்கு ஒரு நன்றி.
நீக்குஇருவரும் உரையாடிக் கொண்டிருக்கையிலேயே கதை திடுதிப்பென்று
பதிலளிநீக்குமுடிந்து விட்டதோ?..
கமான், ஊர்மிளை! அகல்யை சொல்வதற்கு உன் பதிலென்ன?
ஹா ஹா ஹா ஜீவி சார்... இதுதான் நானும் கேட்டேன்! ஆனால் உங்களைப்போல ரசனையாய் கேட்கவில்லை.
நீக்குOpen end ஆக கதையை முடிப்பது தனி திறமை இல்லையா ஜீவி சார்?
நீக்குஅகல்யைக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் ஊர்மிளை திகைத்தாள் என்று ஒற்றை வரியாவது கடைசியில் இருந்திருக்கலாம்.
நீக்குகதையை சமைத்தவரின் உணர்வுகளோடையே அதே அலைவரிசையில் வாசிக்கும் நாமும் பயணிக்கையில் இந்த மாதிரியெல்லாம் தோன்றுவது சகஜம் தான்
நீக்குகதாசிரியர் நான் சொல்வதைப் புரிந்து கொள்வார்,, பா.வெ
// அகல்யைக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் ஊர்மிளை திகைத்தாள் என்று ஒற்றை வரியாவது கடைசியில் இருந்திருக்கலாம். //
நீக்குஅல்லது "ஊர்மிளை என்ன பதில் சொல்வது என்று இன்னும் யோசித்துக் கொண்டிருக்கிறாள்" என்று முடித்திருக்கலாம்!!
இந்தக் கதை என்ன என்பதை நான்கு வரிகளில் சொல்லிவிடலாம்.
பதிலளிநீக்குஅகல்யை லக்ஷ்மணன் மூலமாக ஊர்மிளையை சந்திக்கிறாள். இவர் தம்மில் நிகழும் உரையாடல் அவர் அவர் சென்ற வருடங்களில் செய்த மற்றவர்கள் தவறு என்று கருதும் செயல்களைப்பற்றி நிகழ்கிறது. ஊர்மிளை 14 வருடங்கள் உறங்கினால் அகல்யை கல்லாகக் கிடந்தாள்.
//‘நீங்களும், நானும் ஒன்றா? நீங்கள் கல்லாக ஆனது உங்கள் காமத்தால்; நான் உணர்வற்ற கட்டையெனக் கிடந்தது காதலால்’
“சொல். நீயும் சொல்;சொல்லாதவர் யார் இந்த உலகில்?’’
‘உண்மை உங்களைச் சுடுகிறது.’// என்று ஊர்மிளை கூற
அகல்யை
//உன் உடம்பில் உனக்கு முதல் அதிகாரமில்லயா? கற்பென்பது உடல் சம்பந்தப்பட்டது என்பது பெரும் அபத்தம். நான் கற்பித்துக் கொண்ட அந்தப் புனைவோடுதான் நான் புனைந்தேன். அதில் தவறொன்றுமில்லை.”
‘பின் ஏன் கல்லாகிக் கிடந்தீர்கள்?’
“அதன்பின் நான் யாரை தண்டிக்க வேண்டும்? எவரையுமில்லை அல்லவா? என் கற்பனைக் காட்சி முடிந்த பின்னர் எனக்கு வேறு நிறைவு வேண்டுமா என்ன?”
‘பின் ஏன் எழுந்தீர்கள்?’
அகல்யா சிரித்தாள்.”பெண்ணே! கல்லும் அசைபோடும்; அதில் திளக்கும்; பின்னர் வானத்தில் ஆடும் மயில், குயிலெனத் தோன்றுகையில் முழுதுமாக எல்லாவற்றையும் கடந்துவிடும்”
என்று வாதிக்கிறாள்.
இவ்வாறு ஒரு வாதப் பிரதிவாதமே கதையின் முக்கிய அம்சம்.
கதையில் புதுமைப் பித்தனின் தாக்கம் அதிகம். ஒரு அறிமுக புதுமை எழுத்தாளர் என்ற முறையில் கதை பாராட்டைப் பெறுகிறது.
அகல்யைப் பற்றி அப்பாதுரை சாரும் பெருங்கதை எழுதியுள்ளார். சிறுகதைகள்.காமில் உண்டு
//“அகல்யை விவகாரம் பொய்ங்கறேளா?”னேன்.
“ஓய், அதைச் சொல்லலை. அகல்யை விவகாரம் நடந்தது வாஸ்தவம். ஆனா வெவரம் எல்லாம் மாத்திட்டா”.
“அப்படின்னா?”
“சொல்றேன் கேளும்”னுட்டு என்னமோ பகுஜனப் பிரசங்கம் பண்ற மாதிரி, த்ருஷ்டாந்தமா நானா பக்கமும் பாத்துட்டு, மாமா சொல்ல ஆரம்பிச்சார்.//
என்று https://www.sirukathaigal.com/%e0%ae%b8%e0%af%8d%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%a3-%e0%ae%af%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b0%e0%af%88/
ஸ்மரண யாத்திரை என்ற கதையில் தர்க்கம் நடத்தியிருக்கிறார்.
சரி மேலும் விமரிசனம் செய்யவில்லை. இது போதும்.
Jayakumar
சில/பல வருடங்கள் கழிச்சு அப்பாதுரையின் எழுத்தில். :)))) அங்கே கருத்துச் சொல்ல முடியாது. ப்ளாக் செய்திருக்காங்க. அதான் இங்கே சொல்லி இருக்கேன். கமலா ஹரிஹரன் எழுதினதையும் படிக்கணும்.
நீக்குஜேகேசி சார்! நீங்க எழுதினதுக்கும் சுட்டி கொடுங்க. படிச்ச நினைவு இருந்தாலும் மறுபடி படிக்கணும்.
நீக்கு@ பானுமதி வெங்கடேஸ்வரன்
பதிலளிநீக்கு/// என்னாச்சு?... ///
சில வருடங்களாக பனிக் காலம்
என்றாலே பிரச்னை தான்..
கைத்தல பேசியில் தட்டச்சு செய்வது
எனில் வெகுசிரமம்..
///இல்லை, இது நேர்மையில்லை. மரக் கட்டையாகக் கிடந்தவளுக்கு தெய்வங்கள் செய்யும் அநீதி’..///
பதிலளிநீக்குஎல்லாம் முன்னரே தீர்மானிக்கப்பட்டப் பட்டவைகளே...
கனமான கதைக்களம்...
இலகுவாக கையாண்டிருக்கின்றார்...
"அகல்யா த்ரொளபதி சீதா தாரா மண்டோதரி ததா பஞ்ச கன்யா ஸ்மரே நித்யம் மஹா பாதாக நாசனம்" என்று ஒரு ஸ்லோகம் உண்டு. தினசரி காலை எழுந்ததும் அல்லது குளிக்கும் பொழுது சொல்ல வேண்டும் என்பார்கள். இதில் மண்டோதரியைத் தவிர மற்ற நான்கு பெண்களுமே அதிகம் துயரத்தை அனுபவித்தவர்கள். அன்னிய ஆடவனை பார்ப்பதே பதிவிரதா தர்மத்திற்கு விரோதம் என்று கருதப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர்கள். அவர்களை தினசரி நினைக்க வேண்டும் என்று சொன்னால் அப்படிப்பட்ட பெண்கள் மீது இரக்கம் கொள்ள வேண்டும், மதிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள் என்றுதானே பொருள்?
பதிலளிநீக்குஅதெல்லாம் சரிதான் பானு அக்கா.. உன்னால் முடியும் தம்பி படத்தில் வாத்தியம் வாசிக்கும் மீசை முருகேஷிடம் கமல் "ஒரு வீச்சு குறைகிறது" என்று சொல்வது போல விவாதம் பாதியில் நிற்கிறது! அவ்வளவுதான்!
நீக்குமத்யமரில் பானுமதி என்னும் பெயரில் 2, 3 பெண்மணிகள் இருக்கிறார்கள். அவங்களில் இவர் இருப்பதாய்த் தெரியலை. படிக்கையில் மைதிலி சரண் குப்தாவின் "சாகேத் ராமாயணம்" நினைவில் வந்தது. அகலிகையின் நியாயமும், ஊர்மிளையின் துக்கமும் இருவரின் வாதங்களும் ரசனையாக அமைந்துள்ளன. ஆனால் நான் அறிந்தவரையில் அகலிகை வந்திருப்பது "இந்திரன்" என்பது தெரிந்தே அவனுடன் இணைந்தாள் எனப் படிச்சிருக்கேன். புதிய கோணத்தில் சிந்தித்திருக்கார். இவரைப் பற்றி இன்றே முதல் முதலாய் அறிகிறேன்.
பதிலளிநீக்குஆனால் இப்படி கிஞ்சித்தும் மனத்தால் நினைப்பது கூட பாவம்.
நீக்குகுணங்களால் உயர்ந்த வள்ளலாகிய இராமன், கெளதமருடைய தாமரைத் திருவடிகளை வணங்கி, வலம் வந்து போற்றி அகலிகையை அவரிடம் ஒப்படைக்கிறான். அகலிகை எப்படிப்பட்டவள் என்பதை கம்பற் இந்த இடத்தில் சொல்கிறார்:
நீக்குமாசு அறு கற்பின் மிக்க அணங்கினை
அவன் கை ஈந்து ஆண்டு அருந்தவனோடும்
வாசமணம் கிளர் சோலை நீங்கி
மணி மதில் கிடக்கை கண்டார்
.
கம்பற் -- கம்பர் (தட்டச்சுப்பிழைக்கு மன்னிக்கவும்)
நீக்குகம்பர் பெருமானை நினைக்கும் பொழுதெல்லாம், அவர் வரிகளை எடுத்தாளும் பொழுதெல்லாம் மனம் பெருமிதத்தில் விம்முகிறது. கண்கள் பனிக்கின்றன. உணர்வுகளை அடக்க முடிவதில்லை.
நீக்குஇந்த முடிவைத் தொடர்ந்து அவர்கள் விவாதம் வெவ்வேறு கோணங்களில் பயணிக்கலாம்.
பதிலளிநீக்கு///வந்திருப்பவன் "இந்திரன்" என்பது தெரிந்தே
பதிலளிநீக்குஅகலிகை அவனுடன் இணைந்தாள் எனப் படிச்சிருக்கேன்.///
நானும் கூட அறிந்துள்ளேன்..
அகலிகை கல் போலக் கிடந்ததனால் தான் மீண்டும் கல்லாகிக் கிடந்தாள்.
இதனை விவாதிப்பதற்கு நமக்குத் தகுதி கிடையாது..
இதனை விவாதிப்பதற்கு
பதிலளிநீக்குமனிதர்களாகிய நமக்குத் தகுதி
கிடையாது..
ஏறு மாடுகள் என்று ஓரிடத்தில்
பதிலளிநீக்குவருகின்றது..
ஏர் மாடுகள் என்று இருத்தலே சரி
@ ஜீவி
பதிலளிநீக்கு///குணங்களால் உயர்ந்த வள்ளலாகிய இராமன், கெளதமருடைய தாமரைத் திருவடிகளை வணங்கி, வலம் வந்து போற்றி அகலிகையை அவரிடம் ஒப்படைக்கிறான்....///
ஸ்ரீ ராமசந்திர மூர்த்தியே அகலிகையை
கற்புக்கரசி என்று மொழிந்த பின்
நாமெல்லாம் யார்!?..
அவர் ரிஷிபத்தினி. எந்தளவுக்கு சிரேஷ்ட பூர்வமான கொடுப்பினையான வாழ்க்கை அவருக்கு வாய்த்திருக்கும் என்பதே நம் சிந்தையில் பதியாமல் போய்விடுவது காலத்தின் கோலம் தான்.
நீக்குஉண்மை.. உண்மை...
நீக்குஆத்மார்த்தமான கருத்து
ஜீவி அண்ணா அவர்களுடையது...
பானுமதி நடராஜ் அவர்கள் எபி தளத்திற்கு
பதிலளிநீக்குவருவாரா!?...
அஹல்யா த்ரௌபதி ஸீதா தாரா மண்டோதரி ததா .
பதிலளிநீக்குபஞ்சகன்யா ஸ்மரேந் நித்யாம் மஹாபாதகனாசனம் ..
அழியாத கன்னிகை
பதிலளிநீக்குஐவரும் போற்றி போற்றி..
வெகுமதியான
பதிலளிநீக்குகருத்துகள் இன்று...
நன்று...
அனைவருக்கும் நன்றி. திருமதி. பானுமதி வெங்கடேஷிற்கும், கருத்துச் சொன்ன அனைவருக்கும் சிறப்பு நன்றிகள். உங்கள் கருத்துக்களை அறிந்து கொண்டேன். இக்கதை வெளியான போது கூட இத்தனை கருத்துக்கள், சிந்தனைகள், கேள்விகள் வரவில்லை. எனக்கு கண்களில் சிகிட்சை நடந்து கொண்டிருப்பதால், தனித்தனியே பதிலளிக்க முடியவில்லை. தயவு செய்து மன்னியுங்கள்.
பதிலளிநீக்குகதையின் முடிவில் ஒரு வாசகம் வந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று சிலர் சொல்லியிருந்தனர். அதை மதிக்கிறேன்; என்றாலும், வாசகருக்கு இடமில்லாமல் போய்விடுமே?
ஊர்மிளாவும், அகலிகையும் தங்கள் நிலையை தங்கள் உரையாடலில் சொல்லி விட்டார்களே.
ஸ்ரீ ராமன் அகலிகையை, கற்புக்கரசி என்று சொன்னதையும் கதை சொல்கிறதே- அதாவது, உடலோடு மட்டுமே பிணைவது அல்ல அந்தக் கருத்து. கௌதமர் தனக்கு உற்றவராக இல்லாதபோது, தன்னை வேலை செய்யும் ஒரு உயிரியாகப் பார்த்த போது, இன்னும் சில காரணங்களால், அகலிகை ஒரு கற்பனை உருவத்துடன் தன்னைப் பொருத்திக் கொள்கிறாள்; அது நிஜத்தில் கிடைக்கும்போது நெகிழ்ந்து விடுகிறாள்.அகலிகையே சொல்கிறாளே- கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் நபருக்கு விடுதலை என்பது எளிதல்ல. லேடி டயானாவை நாம் அறிவோமே? கதைக்குப் பொருள் அனைவரும் அகலிகையைப் போல நடந்து கொள்ள வேண்டுமென்பதல்ல. அதனால் தான் ஊர்மிளா, மிக உஷ்ணமாக கேள்வி கேட்கிறாள் என்று வைத்தேன். அகலிகையைப் புரிந்து கொள்ளுங்கள், அவ்வளவுதான். கற்பு நெறி இரு பாலாருக்கும் உண்டு, அது சமம் என்று சொல்லியிருக்கிறார் பாரதி. அனைவருக்கும் மீண்டும் நன்றிகள்-- பானு நடராஜ்