திங்கள், 27 மே, 2019

"திங்க"க்கிழமை : வாழைக்காய் அப்பளம் - கோமதி அரசு ரெஸிப்பி


எங்கள் ப்ளாக் ஸ்ரீராம்  திங்கள் பதிவுக்கு சமையல் குறிப்பு கேட்டார்கள். 


கீதா அக்கா சொல்லி இருப்பது போல உங்களிடமிருந்து கட்டாயம் ஒரு சமையல் குறிப்பு உடனேஎதிர்பார்க்கலாமா? பேராசை எனக்கு!

//உற்சாக மன நிலையில் உணவு சமைத்தபோது படம் எடுத்து குழந்தைகளுக்கு அனுப்புவேன்.//

என்ற என் பின்னூட்டத்தில் போட்டதை வைத்தே என்னை எழுத வைத்து விட்டார் ஸ்ரீராம்.


//இங்கிருக்கும் குழந்தைகளுக்கும் அனுப்பலாமே....! தயிர் சாதம் கூட வித்தியாசமாக செய்திருந்தால் அதைக்கூட அனுப்பலாம். நீங்களோ புகைப்படங்கள் எடுப்பதிலும் மன்னி!//


இப்படி வேறு   கூடை நிறைய ஐஸ் வைத்தால் எழுதாமல் இருக்க முடியுமா?

//திங்கட்கிழமை. "திங்க"ற கிழமை! //  


திங்கட்கிழமை வெளியாகும் சமையல் பதிவை  பாராட்டி கீதா சாம்பசிவம் அவர்கள்  அழகாய் சொல்லி இருக்கிறார்கள். நீங்கள் எல்லோரும்  படித்து இருப்பீர்கள். அந்த புகழ் பெற்ற திங்கட்கிழமையில் நானும்  இணைவதில் பெருமை கொள்கிறேன்.



இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் சமையல் குறிப்பு வாழைக்காய் அப்பளம்

உங்களுக்கு எல்லாம் தெரிந்த சமையல் குறிப்பாக இருக்கலாம். 

சர்க்குலேசன் புத்தகங்கள் வாங்கிக் கொண்டு இருந்த காலம் .
நான் மாத இதழ், வார இதழ் ஆகியவற்றில் வரும் சமையல் குறிப்புகளை அவசர அவசரமாய் எழுதி வைத்துக் கொண்டு  மறுநாள் கொடுத்து விடுவேன் புத்தகத்தை.  

இப்படி பதிவு எழுதுவேன் என்று தெரிந்து இருந்தால் எந்த பத்திரிக்கையில் வந்தது, எழுதியவர் பெயர் எல்லாம் எழுதி வைத்து இருப்பேன்.  மஞ்சரி புத்தகத்தில் வந்தது என்று நினைக்கிறேன்.
   
மாசி மாதம் வத்தல் வடகம் போட ஆரம்பித்து சித்திரைக்குள் முடித்து விடுவார்கள் . சித்திரை வத்தல் சிவந்து விடும் என்பார்கள். இந்த வாழைக்காய் அப்பளம், இலைவடாம் எல்லாம் எப்போதும் போடலாம்.

அதுவும் கிராமத்தில்( திருவெண்காடு) இருக்கும் போது  எங்கள் வீட்டுக்கார அம்மா அவர்கள் வாழைக்காய் காய்த்த போதெல்லாம் தருவார்கள். அக்கம் பக்கத்து    வீடுகளிலிருந்து வேறு  கொடுப்பார்கள். மாயவரத்தில் இருந்த போதும் வாழைக்காய் பஞ்சமில்லாமல் கிடைக்கும். 

என் அனுபவத்தில்  வாழைக்காய் மிகவும் முற்றலாக இருக்கக் கூடாது, பிஞ்சாகவும் இருக்கக் கூடாது. நடுத்தரமாய் இருக்க வேண்டும். அப்போதுதான் நன்றாக இருக்கும் அப்பளம்.

நான் எழுதி வைத்து இருந்த 'வாழைக்காய் அப்பளம்' குறிப்பை இங்கு  கொடுத்து இருக்கிறேன். 



ஜன்னல் வழியே பறவைகளை  பார்த்தீர்கள் !  வாழைக்காய் அப்பளம்  காய்வதைப் பாருங்கள்.எங்கள் வீட்டுப் பால்கனிக்கு வெயில் 12 மணிக்கு மேல் தான் வரும், மாலை 3.30 வரை இருக்கும் அதில் காய வைத்து எடுத்தேன். கொடிக் கம்பியில்  துணியைக் கட்டி காய வைத்து எடுத்தேன்.



வீட்டுக்குள்  3.30 மணி வரை வெயில் இருக்கும்

என் மகனிடம் ,"கூழ் வத்தல் சித்தி, அத்தை எல்லாம் போட்டு கொடுத்து இருக்கிறார்கள் அனுப்பி வைக்கிறேன்" என்றேன். அதற்கு," அம்மா! உங்களுக்கு  முடிந்தால்  வாழைக்காய் அப்பளம் செய்து அனுப்புங்கள்" என்றான். இப்படிக் கேட்கும்போது செய்யாமல் இருக்க முடியுமா? கொஞ்சம் கொஞ்சமாக மூன்று நாள் போட்டு எடுத்து வைத்து விட்டேன். அனுப்ப வேண்டும்.


சோம்பிக் கிடக்கும் உடல். குழந்தைகள் ஆசைப்பட்டால் சுறுசுறுப்பாய் செயல் படுகிறது. என் கணவருக்கும்  வாழைக்காய் அப்பளம் பிடிக்கும்.




கொஞ்சம் காரம் - கொஞ்சம் காரம் குறைச்சலாக -என்று போட்டு செய்து இருக்கிறேன்.



அந்தக்கால முறையில் எழுதிய சமையல் குறிப்பு . அதைத் தற்காலத்திற்கு ஏற்றமாதிரி கீழே கொடுத்து இருக்கிறேன்.



தேவையான பொருட்கள் 6 என்று சொல்லி விட்டு இரண்டு வாழைக்காய் படம் போட்டு இருக்கிறீர்கள் என்று கேட்க வேண்டாம்  வீட்டில் இருந்த காயைப் படம் எடுத்துப் போட்டு இருக்கிறேன் .

வாழைக்காய் அப்பளத்திற்குத்  தேவையான பொருட்கள்:-
வாழைக்காய் பெரியது  6

பச்சைமிளகாய் -6  காரம் வேண்டுமென்பவர்கள் அப்படியே 6 போட்டுக் கொள்ளலாம். காரம் குறைச்சலாகப் போதும் என்பவர்கள் 4 போட்டால் போதும்.

தேங்காய் எண்ணெய் ஒரு கரண்டி என்று போட்டு இருக்கிறது அவ்வளவு வேண்டாம், 1ஸ்பூன் இருந்தால் போதும். அது கூட வேண்டாம் லேசாக ஷீட்டில் தடவினால் போதும் வாழைக்காய் கலவை ஒட்டாமல் இருக்கும் அளவு தடவினால் போதும்.

உப்பு, பெருங்காயம் தேவையான அளவு  போட்டுக் கொள்ளலாம்.
உப்பு வாழைக்காயில் இயற்கையாக இருக்கும், அதனால் கொஞ்சம் குறைத்தே போட்டுக் கொள்ளலாம். பெருங்காயம் சிலருக்குப் பிடிக்காது, அதனால்.   அது மட்டும் அல்ல நிறைய போட்டாலும் நன்றாக இருக்காது. நான் சின்ன ஸ்பூனால் ஒரு ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்தேன்.

வாழைக்காய் குக்கரில் வேக வைத்தால் கலர் வெள்ளையாக இருக்காது அதனால் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் வாழைக்காயைத் தோலுடன் வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். தோலை உரித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

 உப்பு, பெருங்காயம், பச்சைமிளகாய் இவற்றை மிக்ஸியில் அரைத்து எடுத்து க்கொள்ளலாம்.

இளஞ்சூட்டில் இருக்கும் போதே வாழைக்காயை பச்சைமிளகாய் , உப்பு, பெருங்காயம் அரைத்த விழுதைச் சேர்த்து மிக்ஸியில் ஒரு ஓட்டு ஓட்டினால் மசிந்து விடும் . அரைத்த கலவையை  உருண்டையாக கொஞ்சம் எண்ணெய் தடவி உருட்டிக் கொண்டு இரண்டு ஷீட்டுகளுக்கு நடுவில் வைத்து அப்பளமாய் அப்பளக் குழவியால்  தேய்த்துக் கொள்ளலாம். நான் பெரிதாக ஷீட்டுகள் வைத்து பெரிதாக அப்பளம் தேய்த்துக்  கொண்டு பின் காப்பி  பில்டர் மூடியால் வட்டமாக வெட்டி எடுத்துக் கொண்டேன். அப்புறம் காய வைக்க வேண்டியது தான். மூன்று நாள் காய்ந்தால் போதும்.

மொட்டை மாடி என்றால் இரண்டு நாள் போதும். என்னைப் போல் பால்கனி என்றால் மூன்று நாள் வேண்டும்.

சிறுகுறிப்பு:-
வாழைக்காய்த்  தோலை வீணாக்காமல் அதைச் சிறு சிறு துண்டாக வெட்டிக் கொண்டு கொஞ்சம் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் போட்டுப் பிசறிக் கொண்டு அதை கடுகு உளுத்தம்பருப்பு போட்டுத் தாளித்து இறக்கும் போது தேங்காய் துருவல் கலந்து இறக்கினால் சத்து மிகுந்த  வாழைக்காய் தோல் பொரியல் (துவரம் ) கிடைக்கும். 

//நெல்லைச் சிறப்புச் சமையல்கள் நிறையத் தெரிந்து வைத்திருப்பீர்கள். 
அவற்றைப் பகிரலாம். //

கீதா சாம்பசிவம் நெல்லை சமையல் குறிப்பு கேட்டார்கள் இந்த துவரம் நெல்லை சமையல் குறிப்புதான்.

முன்னாள் பாரதபிரதமர் இந்திராகாந்தி அவர்களுக்கு எழுத்தாளர் சிவசங்கரி அவர்கள் சத்து மிகுந்த வாழைக்காய் தோல் சமையலைப் பற்றி சொன்னார்கள் என்று படித்த நினைவு இருக்கிறது.



சிறு வயதில் என் மகன் என்னுடன் சேர்ந்து நான் வெட்டித் தருகிறேன் அம்மா என்று உற்சாகமாய்ச் செய்வான், அவன் செய்ததைப் பெருமையாக நான் வெட்டினேன் எப்படி இருக்கு? என்று அவன் அப்பாவிடம் கேட்பான்.

அதை என் கணவரிடம் சொல்லி வரைந்து தரச் சொன்னேன். ஒரு மணி நேரத்தில் இந்தப் படத்தை வரைந்து தந்தார்கள்.

 எழுத்து வேலைகளுக்கு இடையில் எனக்கு வரைந்து தந்தார்கள். ஸ்ரீராம் சார் படம் வந்து மிகவும் நாளாச்சு என்று கேட்டார் என்றதும் மகிழ்ச்சியாக படம் உருவானது.

ஏதோ எனக்குத் தெரிந்த முறையில் சமையல் குறிப்பு எழுதி இருக்கிறேன்.உடனே செய்வது போல் இல்லையே என்று கேட்காதீர்கள்.  ஸ்ரீராம் உடனே அனுப்பச் சொன்னார். கைவசம் படங்கள் உள்ளது இதுதான்.

எல்லாக் காலங்களிலும் வாழைக்காய் கிடைக்கும்.  ஆனால் அக்னி நட்சத்திரம் ஆரம்பித்து விட்டது, வத்தல் வடகம் போட மாட்டார்கள். 

வாழ்க வளமுடன்.

========================================================================

183 கருத்துகள்:

  1. வந்திருக்கும் நண்பர்களுக்கும் இனி வரவிருக்கும் நண்பர்களுக்கும் நல்வரவும், வாழ்த்துகளும் வணக்கமும் வைச்சுக்கறேன். இன்னிக்கு அநேகமா நெ.த. சமையலா இருக்குமோ என்னும் எதிர்பார்ப்பு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் கீதா அக்கா... நல்வரவு.

      நீக்கு
    2. நன்றி கீசா மேடம்.. இன்னும் இரண்டு மூணு வாரத்தில் அனுப்புவேன் (அப்புறம் எப்போ வெளியிடுவாரோ)

      நீக்கு
    3. ஆஆஆஆ எல்லோரும் ஓடிவாங்கோ நெல்லைத் தமிழனின் குறிப்பு வந்து கொண்டிருக்கூஊஊ.... :)... நான் இண்டைக்கு நெ தமிழன் குறிப்பென நினைச்சேன்ன்ன்:)...

      ஓடிவாங்கோ/// மேலே எழுதும்போது ஸ்பெல்லிங் மிசுரேக் ஆச்சூ:) சரி அப்பூடியே விட்டிடலாம் ஹா ஹா ஹா:)..

      நீக்கு
    4. //இன்னும் இரண்டு மூணு வாரத்தில் /

      அடேங்கப்பா.... அனுப்பும் நாளே அதிகம்! அப்புறம் நான் மட்டும் சீக்கிரம் வெளியிட முடியும் நெல்லை? இப்போ அனுப்பறீங்களா.... சீக்கிரம் வெளியிடுகிறேன்!

      நீக்கு
    5. வாங்க வாங்க அதிரா... உங்களிடமிருந்தும் குறிப்பு வந்து வெகுநாட்களாகி விட்டன என்று நினைவு"படுத்த" விரும்புகிறேன்!

      நீக்கு
  2. அட! கோமதி அரசு! படிச்சுட்டு வரேன். தட்டை மாதிரித் தெரியுதே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தடை இல்லை! படிச்சுட்டு வாங்க! (தப்பா டைப் பண்ணவில்லை!!!)

      நீக்கு
  3. அன்பின் ஸ்ரீராம்,
    கீதாக்கா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கும் இனி வரப்போகும் நம் நட்புறவுகள் அனைவருக்கும் நல்வரவு துரை செல்வராஜூ ஸார்.

      நீக்கு
    2. வரவேற்கும் துரைக்கும் நல்வரவு, நன்றி

      நீக்கு
  4. காலை வணக்கம்.

    அட கோமதி அரசு மேடம் ரெசிப்பி. வித்தியாச தலைப்பா இருக்கே! இதோ படிக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படித்து விட்டு கருத்து சொல்லுங்கள் நெல்லை

      நீக்கு
    2. தலைப்பு மட்டும் இல்லை, ரெஸிப்பியே வித்தியாசம்தான்.. அட ரெஸிப்பிதான் வித்தியாசம்னா காயவைக்கும் முறை ரொம்பவே வித்தியாசம்!

      நீக்கு
  5. இது வரை கேள்விப் படாத புத்தம்புதிய செய்முறை. செய்து பார்க்க வேண்டும். வாழைக்காய் அடிக்கடி வாங்குவோம். கோமதி சொல்லி இருக்கிறாப்போல் துவரம் அடிக்கடி செய்வது உண்டு. ஆனால் காயிலேயே செய்துடுவேன். தோலில் அல்ல. தோலிலும் செய்து பார்க்கணும். ஒரே பதிவில் இரண்டு சமையல் குறிப்புக்கள். திரு கோமதி அரசு அவர்கள் வரைந்திருக்கும் படம் மிக அழகு! கோமதி எடுத்திருக்கும் படங்களும் நன்றாக வந்திருக்கின்றன. நான் தட்டையோ என நினைச்சேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // இதுவரை கேள்விப்படாத...//

      ஆகா...
      வெற்றி.. வெற்றி!...

      நீக்கு
    2. வணக்கம் கீதாசாம்பசிவம், வாழ்க வளமுடன்!
      தட்டை போல் தான் இருக்கும், மாலை வேளை சாப்பிடலாம்.
      பொரிச்ச குழம்பு, ரசத்திற்கு நன்றாக இருக்கும்.
      சார் படத்தை பாராட்டியதற்கு நன்றி.
      கனமான தோல் துவரம் நன்றாக இருக்கும்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
    3. வணக்கம் சகோ துரை செல்வாராஜூ வாழ்க வளமுடன்!
      வெற்றியா? கீதா அவர்கள் சமைக்கும் நிறைய சமையல் எனக்கு தெரியாது.

      நீக்கு
    4. கீதா அக்காவே புதுசு என்று சொன்னது எனக்கும் ஆச்சர்யம் துரை செல்வராஜூ ஸார்.

      நீக்கு
    5. அநியாயமா இல்லையோ ஶ்ரீராம், எனக்குத் தெரியாத சமையல் செய்முறைகள் ஆயிரத்துக்கும் மேல் இருக்கும்! அப்படி எல்லாம் ரொம்பக் கெட்டிக்காரி இல்லை! ஏதோ ஃபில்ம் காட்டறேன் உங்களிடம் எல்லாம்!:)))))

      நீக்கு
    6. அப்படியில்லை கீதா அக்கா... நீங்கள், காமாட்சி அம்மா, ஏன், கீதா ரெங்கன் கூட நிறைய நிறைய வித்தியாசமாய் முயற்சி செய்திருப்பவர். அதிலும் காமாட்சி அம்மாவின் அனுபவமும் அதிகம். நீங்கள் எல்லாம் புதுசு என்றால் எங்களைப்போன்றவர்களுக்கு ஆச்சர்யமாய்த்தானே இருக்கும்!

      நீக்கு
  6. இதுவரை கேள்விப்படாத்து இந்த வாழைக்காய் அப்பளம். கடைகள்லயும் பார்த்ததில்லை.

    எனக்கு மரச்சீனி அப்பளம் ரொம்பப் பிடிக்கும். அதுவும் இப்படித்தான் செய்வார்கள் போலிருக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்.
      இது கடைகளில் கிடைக்காது . வீட்டில் தான் செய்வார்கள்.
      மரச்சீனீ அப்பளம் பொடியாக்கி காச்சி செய்வார்கள் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
    2. நெல்லை.. ஏனோ மரச்சீனி அப்பளம் அவ்வளவு விருப்பமில்லை. அரிதாகக் கிடைத்தால் சாப்பிடுவேன்! அரிசிற்ப்பலம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஆனால் காரமாக இருக்கவேண்டும். அதேபோல மெலிதான இலவடாம்!

      நீக்கு
    3. நெல்லை மரச்சீனிக் கிழங்கு அப்பளம் மரச்சீனிக் கிழங்கு மாவு கிடைக்குமே அந்த மாவில் தான் கூழ் காய்ச்சி வற்றல் மீளகாய் அரைத்துவிட்டு உப்பு பெருங்காயம் கொஞ்சம் போட்டு ஓலைப்பாயில் தோசை வார்ப்பது போல் விடுவது மெலிதாக...கூழ் போல் அத்தனை கெட்டியாக இருக்காது. எங்க வீட்டில் அடிக்கடிச் செய்வது. நான் திருவனந்தபுரத்தில் இருந்த வரை செய்திருக்கேன் நெல்லை. சென்னை வந்தபிறகுதான் அவ்வளவாகச் செய்ததில்லை.

      கிழங்கைக் சீவிப் போட்டு வெயிலில் நன்றாகக் காய வைத்து மெஷினில் மாவாக்கிக் கொள்வதுதன மரச்சீனிக் கிழங்கு மாவு.....நாகர்கோவிலில் மாவு நன்றாகக் கிடைக்க்ம் திருவனந்தபுரத்திலும்...

      எனக்கு ரொம்பப் பிடிக்கும். அரிசி அப்பளமும் பிடிக்கும் இலை வடாமும். இலை வடாம் எப்போது வேண்டுமானாலும் போடலாம். இலை வடாம் மெலிதாக வரும்..

      கீதா

      நீக்கு
    4. @கீதா ரங்கன் - நீங்க நிறைய தெரிஞ்சு வச்சிருக்கீங்க. பாராட்டுகள். (அப்புறம் எப்போ அப்பளாம்லாம் கொரியர்ல வருது?)

      நீக்கு
  7. படம் ரொம்ப நன்றாக இருக்கு. சாருக்கு பாராட்டுகள்.

    இந்த அப்பளம் நிறைய எண்ணெய் குடிக்குமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சார் படத்தை பாராட்டியதற்கு நன்றி நெல்லை.
      இந்த அப்பளம் எண்ணெய் குடிக்காது.
      உங்கள் கருத்துக்கு நன்றி

      நீக்கு
    2. அப்பளத்தை அவனில் கூடபொறிக்கலாம். இல்லையா கோமதி அக்கா?

      நீக்கு
    3. நான் செய்ய ஆரம்பித்த காலங்களில் அவன் இல்லை, அப்புறம் அதைல் அப்பளம் பொரித்து இருக்கிறேன் இந்த அப்பளத்தை பொரித்தது இல்லை.
      இப்போது அது கெட்டு போய் விட்டது வேறு வாங்க வில்லை.

      நீக்கு
  8. வெகு நாட்களுக்குப் பிறகு
    கோமதி அரசு அவர்களது கைவண்ணம்..

    சித்திரமும் செந்தமிழுமாக குறிப்புகள் அருமை...

    கடைகளில் அப்பளம் வாங்கி சந்தேகத்துடன் சாப்பிடுவதை விட
    நம் கையாலேயே செய்வது - சாலச் சிறந்தது...

    அப்போதெல்லாம் வீட்டிலேயே அப்பளம் இடுவார்கள்....

    அதற்கெல்லாம் நேரமின்றி - மனமும் இன்றி, வீட்டு அப்பளத்துக்கு டாட்டா காட்டியாயிற்று...

    பெரும்பாலான மக்கள் வாழைப் பழச் சோம்பேறிகள் ஆனார்கள்...

    மசாலா அரைக்கக் கூடமுடியாமல்
    மங்குனியாகிப் போனார்கள்...

    நீராகாரத்தை எங்கோ விலைக்கு விற்கிறார்களாம்....

    என்னமோ.... நடக்கட்டும்...

    செய்முறை எளிது தான்.. ஆனாலும்,
    உடம்பு வளைய வேண்டுமே!...

    வாழ்க வாழைக்காய் அப்பளம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வது போல் கோடைக்காலத்தில் நிறைய வத்தல், வடகம் அப்பளம் எல்லாம் போட்டு வைத்துக் கொள்வார்கள்.
      மழைக்காலங்களில் அவை பயன்படும் என்று. இப்போதும் போடுபவர்கள் இருக்கிறார்கள். நானும் எல்லாம் போட்டேன் இப்போது வேலைகளை குறைத்துக் கொண்டேன்.
      அடுக்குமாடி குடியிருப்பு வேறு இப்போது வீட்டுத்தயாரிப்பு என்று எல்லாம் வசதியாக கிடைக்கிறது.
      அப்போது உள்ள வாழ்க்கை முறை வேறு, இப்போது உள்ள வாழ்கை முறை வேறு.
      உங்கள் வாழ்த்துக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  9. திருச்செந்தூர் போகும் வழியில் நேந்திரங்காய் வாழை தோப்பு முதல்முறையா பார்த்தேன். நேந்திரங்காயிலும் இதைச் செய்யலாமோ? இயல்பான மஞ்சள் நிறம் வரும். தேங்காய் எண்ணெயில் பொரித்தெடுக்கலாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேந்திரங்காயில் வெய்து பாருங்கள் நெல்லை.
      தேங்காய் எண்ணெயில் பொரித்தால் நன்றாக இருக்கும்.

      நீக்கு
    2. எனக்கும் கூட நேந்திரங்காயில் செய்தால் எப்படி இருக்கும் என்று தோன்றியது.

      நீக்கு
    3. நேந்திரங்காயில் செய்தாலும் ரொம்ப நன்றாக இருக்கும் நெல்லை கோமதிக்கா அண்ட் ஸ்ரீராம்....சூப்பரா அதே போலத்தான் இருக்கும். நேந்திரன் டேஸ்டோடு..

      கீதா

      நீக்கு
  10. சிறிய வயதில் என் பெரியம்மா, கச்சக்காயை தோலெடுக்காமல் கரேமது செய்வார்கள். எனக்கு அவ்வளவாகப் பிடிக்காது. வாழைத் தோலி கறி சத்துள்ளதுதான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் அம்மாவும் கச்சக்காயில் செய்வார்கள் லேசான துவர்ப்பு இருக்கும், அது உடலுக்கு நல்லது என்று செய்வார்கள்.
      நிறைய தேங்காய் பூ சமைத்து கீழே இறக்கிய பின் தூவி சாப்பிடால் உடலுக்கும் நல்லது துவர்ப்பும் குறையும்.

      நீக்கு

    2. எங்கள் வீட்டிலும் கச்ச வாழைக்காயில் கறி, கூட்டு,சிப்ஸ் செய்வதுண்டு.எனக்கு மிகவும் பிடிக்கும்.

      நீக்கு
    3. பிஞ்சு வாழைக்காய்(கச்சக்காய்) உடலுக்கு நல்லது என்று அந்தக்கால மக்கள் விட மாட்டார்கள்.
      கூட்டு செய்து அதில் வடகம் வறுத்து போட்டால் சுவை இன்னும் அதிகமாய் இருக்கும். வடகம் இல்லையென்றால் சின்ன வெங்காயத்தை பொடியாக அரிந்து நன்கு சிவப்பாய் வறுத்து போடலாம். நன்றாக இருக்கும்

      நீக்கு
    4. நான் அதிகம் வாங்கச்சொல்வதே கச்சல் வாழைக்காய் தான்! அதுக்கப்புறமா இந்த மாதிரி நாட்டுக்காய். வாழைக்காய்ப் பொடிமாஸ் அல்லது காரம் போட்டுச் செய்யும் வாழைக்காய்ப் பொடி பண்ண வாங்கச் சொல்லுவேன். கச்ச வாழைக்காய்க் கூட்டு ரொம்பப் பிடித்தமான ஒன்று. புக்ககத்தில் அது தெரியாது. நான் வந்து பண்ணிப் போட்டு மாமனார் விரும்பிச் சாப்பிட்டிருக்கார்.

      நீக்கு
    5. எங்கள் வீட்டிலும்... அம்மா ஸ்பெஷலிஸ்ட்!

      நீக்கு
    6. கச்சல் வாழைக்காய் கூட்டு உங்கள் மாமனாருக்கு பிடிப்பது போல், என் மாமியாருக்கும், மாமனாருக்கும் பிடிக்கும்.
      நெல்லை பக்கம் வாழைக்காய் புட்டு என்போம் பொடிமாஸை அதற்கு ஏற்றது இந்த நாட்டு வாழைக்காய் தான்.
      வேகவைத்து துருவிக் கொண்டு வெங்காயம் பச்சைமிளகாய் வதக்கி தேங்காய் பூ போடுவார்கள் அடுப்பில் வைக்க மாட்டார்கள். துருவியது அப்படியே பார்க்க அழகாய் இருக்க வேண்டும் என்பார்கள்.

      நீக்கு
    7. மீண்ட்ம் கணினி சொங்கி படுத்துவிட்டது..அதான் ஆஃப் செய்து..வந்தாச்சு...

      வாழைக்காய் ரெசிப்பிஸ் அனைத்தும் இங்கு சொல்லப்பட்டிருப்பது செய்வது...அப்புறம் கோமதிக்கா தோல் துவரன் செய்வதுண்டு சூப்பரா இருக்கும்...நேந்திரங்காய் தோல் துவரனும் சூப்பரா இருக்கும்...

      கீதா

      நீக்கு
  11. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கோமதி அக்கா... கொஞ்சம் லேட்!

      நீக்கு
    2. வணக்கம் ஸ்ரீராம், வேலைதான் முக்கியம் பதிவு எங்கே போக போகிறது.
      வாழைக்காய் கூட்டு அம்மாவின் நினைவை கொண்டு வந்து விட்டதோ!

      நீக்கு
  12. என் சமையல் குறிப்பை இன்று வெளியிட்ட எங்கள் ப்ளாக்கிற்கு நன்றி.
    சமையல் குறிப்பை கேட்டு வாங்கி போட்ட ஸ்ரீராமுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சமையல் குறிப்பை கேட்டு வாங்கி போட்ட ஸ்ரீராமுக்கு நன்றி.//

      உடனே அனுப்பி வைத்ததற்கு நன்றி. அடுத்த ரெசிப்பி ரெடியா?

      நீக்கு
    2. அடுத்த ரெசிப்பியா அதற்குள்!

      நீக்கு
  13. வணக்கம் சகோதரரே

    இன்றைய "திங்க" பதிவாக சகோதரி கோமதி அரசு அவர்களின் தயாரிப்பான சுவைமிகும் வாழைக்காய் அப்பளம் படங்கள் செய்முறை அனைத்தும் மிக நன்றாக உள்ளது. இதுவரை நான் கேள்விப்படாத அப்பளமும் கூட.. மிகவ்ம் ருசியாக இருக்குமென்று நினைக்கிறேன். சமயம் கிடைக்கும் போது செய்து பார்க்கிறேன்.

    நானும் பொதுவாக வாழைக்காய் நன்றாக அமையும் பட்சத்தில் தோலுடனே சமைத்து விடுவேன். அதன் தோல்களை வீணாக்குவதில்லை. அந்த தோலின் பயனை குறிப்பிட்டு அதை உபயோகம் செய்யும் முறையையும் சொல்லியதற்கும் மிக்க நன்றி.

    சகோதரி ஒவ்வொன்றையும் விளக்கமாக எழுதியிருக்கும் விதத்தையும் மிகவும் ரசித்தேன். அவர் எழுதி வைத்துள்ள குறிப்புகள், அவர் கையெழுத்து அனைத்தும் மிகவும் அழகாக இருக்கிறது.

    அத்தனை வேலைகள் நடுவிலும், அவர் கணவர் வரைந்துள்ள ஓவியமும் மிகவும் அழகாக உள்ளது.மொட்டை மாடியில் வடாம் இடும் போதும். அப்பளங்களை காய வைத்து காவல் இருக்கும் போதும், சில காகங்கள் நாம் ஏமாறும் சமயங்களுக்காக காத்திருக்கும். அதை தத்ரூபமாக படம் வரைந்து காட்டியிருக்கும் அவரின் ஓவியத்தை ரசித்தேன். அவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.

    இந்த புது விதமான வாழைக்காய் அப்பள முறையினை எங்களுக்கு கற்றுததந்த சகோதரி கோமதி அரசு அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்களும். நன்றிகளும். பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்.
      எங்கள் வீட்டில் எல்லோருக்கும் பிடிக்கும் கொஞ்சம் தட்டை போல் இருக்கும் அப்பளம் போல் மெதுவாக இருக்காது.
      நீங்களும் தோலுடன் வாழைக்காயை சமைப்பது மகிழ்ச்சி.
      படத்தை ரசித்து மதில் மேல் இருக்கும் காகம் படத்தையும் கவினித்து கருத்து சொன்னதற்கு நன்றி கமலா.
      சாரிடம் சொன்னேன் உங்கள் பாராட்டுக்களை எல்லாம். மகிழ்ந்தார்கள்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
    2. கமலா மாதிரி ஓவியத்தில் நான் காகத்தையும் பார்த்தேன், உங்கள் முகத்தில் கண்ணாடியையும் பார்த்தேன். காலையிலேயே குறிப்பிட நினைத்து அவசர வேலையில் விட்டுப் போய் விட்டது. நுணுக்கமாகக் கவனித்திருக்கிறார்.

      நீக்கு
    3. ஸார் சர்வசாதாரணமாக கோடுகள் இழுத்து ஓவியமாக்கி விடுவதை அவரது பதிவுகளில் நீங்கள் பார்த்திருக்கலாம். குறிப்பக சிலகோவில் ஓவியங்கள். கண்ணில்பட்டதை எல்லாம் எளிதாக ஓவியம் வரைந்துவிடும் ஸார் கண்ணுக்குள்ளேயே இருக்கும் அக்காவை வரைவதில் குறை வைப்பாரா என்ன?

      என்ன கோமதி அக்கா?!!!

      நீக்கு
    4. அப்படிப் போடுங்க ஸ்ரீராம்...அதே அதே...

      அந்தக் காகம், பாத்திரம் அக்கா கையில் அக்கா காதில் ஜிமிக்கி என்று (இதைக் கீழே கருத்திலும் சொல்லிருக்கேன் ஜிமிக்கி!!!) சூப்பர்

      கீதா

      நீக்கு
    5. கீதா, ஓவியத்தைப் பார்த்து மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி .
      கமலா நன்றாக கவனித்து இருக்கிறார்.
      நான் 22 வயதில் கண்ணாடி அணிந்து விட்டேன்.

      நீக்கு
    6. ஸ்ரீராம் சார் வரையும் படத்திற்கு ரசிகர் .
      கண்ணில் பட்டத்தை நினைவில் வைத்து வரைந்து விடுவார்கள் தான்.
      //கண்ணுக்குள்ளேயே இருக்கும் அக்காவை வரைவதில் குறை வைப்பாரா என்ன?//
      ஆஹா ! மகிழ்ந்தேன்.



      நீக்கு
  14. இது புதுமையாக இருக்கிறதே வீட்டில் செய்ய சொல்கிறேன்.

    எனது அம்மா சோறு மிச்சமாகி கஞ்சியானதை உடனே வடகம் போட்டு விடுவார்கள்.

    பகிர்வுக்கு வாழ்த்துகள் சகோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
      நானும் சாதம் நிறைய மிச்சமான போது ஒரு முறை போட்டேன்,காரம் , பெருங்காயம், கருவேப்பிலை, பச்சை மிளகாய் எல்லாம் போட்டு பிசைந்து கிள்ளி வைத்து போட்டு இருக்கிறேன். அவல் வத்தல் போல் நன்றாக இருக்கும்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
    2. நீங்கள் சொல்வது உண்மைதான், இது குடும்பபதிவுதான் பானு நம் வலைக்குடும்ப அன்பர்கள் விருப்பத்திற்காக எழுதி அனுப்புவதால்.

      நீக்கு
    3. ஒருமுறை நாங்களும் பழைய சாத வடகம் செய்த நினைவு!

      நீக்கு
    4. பழைய சாதம் என் அம்மா சின்ன வெங்காயம், கலந்தோ அல்லது பூஷணிக்காய் வெள்ளை அல்லது மஞ்சள் எதுவாக இருந்தாலும் அல்லது இரண்டும் கலந்து போட்டு கறிவேப்பிலையும் நிறைய போட்டு செய்வாங்க...

      உளுந்து ஊற கெட்டியாக அரைத்து அதில் கலந்தும் போடுவாங்க அம்மா. நானும்...

      இந்த வாழ்கைக்காயில் செய்வதை அம்மா அப்பளம் என்று சொல்லாமல் வடாம் என்றே சொன்னாங்க. இதை வாழ்கைக்காஅய் பொரித்த குழம்பு செய்தால் அதில் இதியப் பொரித்தும் சேர்ப்பாங்க...இல்லைனா தொட்டுக் கொள்ள...

      கீதா

      நீக்கு
    5. ஸ்ரீராம் சோற்று வத்தல் போடலாம், போட்டால் விரத காலத்தில் எடுக்க கூடாது, அதை பொரித்த எண்ணெயை சமையலுக்கு சேர்க்க கூடாது என்று கண்டிஷன் போடுவார்கள். அப்புறம் எதற்கு இந்த வத்தலைப் போட்டு கொண்டு என்று போடுவதில்லை.

      நீக்கு
    6. கீதாரெங்கன், உளுந்து அரைத்து அதில் மிளகாய்த்தூள், சின்னவெங்காயம் கருவேப்பிலை, பூண்டு, கடுகு, சீரகம் எல்லாம் போட்டு குட்டி குடியாய் கிள்ளி வைத்து காய்ந்த வடகத்தைதான் . கூட்டாம்சோறு, மோர்குழம்பு, வத்தக்குழம்பு, இதற்கு வறுத்துக் கொட்டுவார்கள்.தனியாக வறுத்து துவையல் அரைப்பார்கள்.
      வறுத்து தனியாக வத்தல் போல் சாப்பிடுவோம்.
      துவரம் பருப்பு, தட்டைபயிறு, வெண் பூசணி சேர்த்து அரைத்து கிள்ளி வைத்து காய வைத்து குழம்பு வடகம் செய்வார்கள்.
      எல்லா கூட்டுகளில் இந்த வடகத்தை பொரித்து போடலாம்.

      நீக்கு
    7. இன்னிக்கு அது போட்டுத் தான் குழம்பு! :) எனக்கு ரொம்பப் பிடிக்கும். வழக்கம்போல் மாமியார் வீட்டில் பழக்கம் இல்லை. முன்னெல்லாம் செய்ய முடியாது! இப்போ அவரும் சாப்பிடுவதால் பண்ணுவேன். அதுவும் கீரையில் போட்டால்/ இதோடு மோர்மிளகாயும் வறுத்துச் சேர்த்தால் அன்றைய சாப்பாடு ஒரு சிறப்பு விருந்து! நாங்க கூடியவரை வெங்காயம், பூண்டு சேர்ப்பதில்லை. பூண்டு அறவே சேர்ப்பதில்லை. வெங்காயம் போட்டால் அதைத் தனியாக வைச்சுப்போம். எல்லா நாட்களிலும் சாப்பிட முடியாது.

      நீக்கு
    8. மிச்ச சாதத்தைச் சாப்பிட்டுத் தான் செலவு செய்வோம். வத்தல் எல்லாம் போடுவதில்லை. அதைத் தனியா வைச்சாலும் ஒவ்வொரு தரம் எடுக்கும்போதும் எடுத்துக் கொண்டு தனி அடுப்பில் பொரிக்கணும். எண்ணெய் மிஞ்சினால் பயன்படாது. பொதுவாகவே நான் சுட்ட எண்ணெய் அதிகம் பயன்படுத்துவது இல்லை.

      நீக்கு
    9. குழம்பு வடகம் போட்டால் சமையல் அதிக ருசி கொடுக்கும். வெங்காயம், பூண்டு சேர்க்க கூடாத நாள் இருக்கே!
      உப்புமா , தயிர் சாதம் இவற்றுக்கு எல்லாம் மோர் மிளகாய் சேர்ப்போம்.

      நீக்கு
    10. மிச்ச சாதம் எல்லாம் இப்போது பறவைகளுக்குதான்.
      சுட்ட எண்ணெய் பயன் படுத்தாமலே நெஞ்சு கரிக்குது, அதையும் பயன் படுத்தினால் நம் போன்றவருக்கு கஷ்டம் தான்.

      நீக்கு
  15. அனைவருக்கும் காலை வணக்கம். கோமதி அரசு அவர்களின் கை வண்ணத்தில் வாழைக்காய் அப்பளம். அழகாக வந்திருக்கிறது. முதல்முறையாக கேள்விப்படுகிறேன். செய்து பார்க்க வேண்டும்.
    அவர் கணவரின் கைவண்ணமும் சிறப்பு.
    ஒரு குடும்ப பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வனக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்
      செய்முறை குறிப்பு எடுத்து வைத்துக் கொள்ளவில்லை. காய வைக்க பயன்படுத்திய புதுமுறையை குழந்தைகளுக்கு காட்ட அதை மட்டும் படம் எடுத்து வைத்து இருந்தேன், ஸ்ரீராம் சமையல் குறிப்பு கேட்ட போது அனுப்ப கைவசம் இரண்டு படம் தான் இருந்தது, அப்பளம் இடும் படம் இல்லை அதுதான் சார் வரைந்து தந்தார்கள். குடும்ப பதிவாக ஆகி விட்டது.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
    2. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். தங்கச்சி கோமதியின் கை வண்ணம் மதுரை வண்ணத்தில் பச்சையாக வந்திருக்கிறது.
      கூடவே துவரன் ரெசிப்பியும்.
      கொடியில் துணி காய்வது போல, அப்பளத்தையும் காய வைத்துவிட்டீர்கள் கோமதி.
      மிக அழகு.
      வாழயில் இரும்பு சத்தும் உண்டே.
      புதிதாகச் செய்து உண்ணத் தோதாக வெளியிட்டிருக்கிறீர்கள். உங்கள் கையெழுத்து அழகாக
      இருக்கிறது. சாரின் கைவண்ணத்துக் கேட்பானேன்.
      ஆமாம் மகனோ மக்ளோ கேட்டால், மறுக்க முடியாதுதான்.

      ஸ்ரீராமுக்கும் உங்களுக்கும், சாருக்கும் மன்ம் நிறைய நன்றி.

      நீக்கு
    3. வணக்கம் அக்கா, வாழ்க வளமுடன்

      மதுரை வண்ணம் ? மீனாட்சியின் பச்சை வண்ணமோ!
      ஆமாம் அக்கா, வெயில் பட வேண்டுமே அதுதான். அந்த யோசனை.
      என் கையெழுத்தை அழகா அக்கா அன்பால் விளைந்த பாராட்டு.
      சாரின் கைவண்ணத்தை பாராட்டியதற்கு நன்றி.
      உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.
      ஸ்ரீராமுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் எப்படியோ என்னை சமையல் குறிப்பு கொடுக்க வைத்து உங்கள் எல்லோரிடமும் இருந்து பாராட்டு வாங்கி கொடுத்தமைக்கு.
      சார் படம் வரைந்து கொடுத்ததும் ஸ்ரீராமுக்காகத்தான்.

      நீக்கு
    4. //சார் படம் வரைந்து கொடுத்ததும் ஸ்ரீராமுக்காகத்தான்.
      //

      ஆஹா... தன்யனானேன் கோமதி அக்கா. என் நெஞ்சார்ந்த நன்றியை ஸாரிடம் சொல்லுங்கள்.

      நீக்கு
    5. சொல்லி விடுகிறேன். ஸ்ரீராம் கேட்டு இருக்கிறார் உங்கள் படம் என்ற உடன் தானே உடனே வரைந்து கொடுத்தார்கள்.

      நீக்கு
  16. இது வரை கேள்விப்படாத ரிசிப்பி செஞ்சு பார்க்கணும் என்று பொய் சொல்வதை விட என்றாவது ஒரு நாள் உங்கள் வீட்டில் வந்து சாபீடனும் என்று சொல்லலாம் காரணம் இங்கு வெயிலில் காயவைச்சு செய்வது எளிதல்ல

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் Avargal Unmaigal, வாழ்க வளமுடன்.
    வெயில் இல்லையென்றாலும் ஓவனில் வைத்து காய வைத்து பொரிக்கலாம் என்று நினைக்கிறேன்.
    வாங்க அப்படியாவது எங்கள் வீட்டுக்கு. மதுரை தானே உங்களுக்கு ஊர்?
    வடையாக தட்டி போடலாம் சிறி அரிசு மாவு கலந்து.
    கட்லெட்டாக ரஸ்க் தூள் போட்டு பிரட்டி செய்யலாம் தோச்சைக்கல்லில் .வேகவைத்தை வாழைக்காய் தானே!

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் பூந்தோட்ட கவிதைக்காரரே, வாழ்க வளமுடன்
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  19. அடடாஆஆ என்னா ஸ்பீட்டூஊஊஊ இன்று கோமதி அக்கா ரெசிப்பியா..... கோமதி அக்காவின் கன்னி ரெசிப்பிதானே இது புளொக்குகளில்..:).... ஶ்ரீராம் போடப்பண்ணிட்டாரே.....
    இப்போ நான் வாழ்த்தை ஶ்ரீராமுக்குச் சொல்லோணுமோ இல்ல கோமதி அக்காவுக்குச் சொல்லோணுமோ??:)))..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்

      கோமதி அக்காவின் கன்னி ரெசிப்பிதானே இது புளொக்குகளில்..:).... ஶ்ரீராம் போடப்பண்ணிட்டாரே.....//

      https://mathysblog.blogspot.com/2012/12/blog-post_21.html
      ஆஹா உருளை! ரசித்தவர்கள் (3145 பேர் அதிரா) முதல் சமையல் குறிப்பு

      ஜலீலாவிற்கு ' பேச்சிலர் சமையலுக்கு' அனுப்பி இருக்கிறேன்.

      என்று ஒரு பதிவு எழுதி இருக்கிறேன், "வாழைப்பூ உசுலி "எழுதி இருக்கிறேன் அதிரா.
      எங்கள் ப்ளாக்கிற்கு இது முதல் முறை.
      ஸ்ரீராமுக்கே சொல்லுங்கள். இங்கே எழுத வைத்தவர் அவர் தானே!

      நீக்கு
    2. ஓ இவ்வளவும் நடந்திருக்கோ... அப்படி எனில் நானும் கொமெண்ட்ஸ் போட்டிருப்பேனோ என்னமோ..

      நீக்கு
    3. நன்றி அதிரா... ஆரம்பம் நீங்கள்தானே? ஆமாம்.. உங்கள் ரெஸிப்பி வந்து நாளாச்சே என்று ரசிகர்கள் ஏங்குகிறார்களே .. கண்ணில் படவில்லையா அதிரா?

      நீக்கு
    4. அக்கா அதே போட்டியில் நான் மேதகு மியாவ் அனைவரும் பங்கேற்றோம் அதில் எனக்கு ஆரஞ்சு ஹேண்ட்பேக் 4 th பரிசாக கிடைத்தது :)))
      https://1.bp.blogspot.com/-oOYVD8LF8Ys/XOuRgRGPL-I/AAAAAAAASTw/K0SSwp-S2OgqEkTdEzKWJasg_C6ioKqTwCLcBGAs/s320/hand%2Bbag.jpg

      நீக்கு
    5. ஹையோ ஹையோ ஆண்டவா டக்கென மலையால குதிக்கவும் முடியல்ல..... ஓ மை வைரவா என் ஒரேஞ் காண்ட் பாக் இப்போ எங்கே... எனக்கு பரிசாக ஜல் அக்கா தந்தவ:) அஞ்சுவுக்கு கர்ர்ர்ர்ர்ர்:) ஓடுறா விடமாட்டேன்ன் வேர்க்குள் போனாலும் பொஸ் ஐத் தள்ளிப்போட்டு அஞ்சுவைப் பிடிப்பேன்ன்ன்ன்ன்:) இது இந்த மலைக் காசில் மேல் இருக்கும் பிங் பூ மேல் ஜத்தியம்ம்ம்ம்ம்:)..

      நீக்கு
    6. ///. கண்ணில் படவில்லையா அதிரா?//
      இப்போ அடிக்கடி கண்ணு தெரியாமல் போகுதூஊஉ:) ஹா ஹா ஹா... நான் அனுப்பாமல் இருப்பதற்கு காரணம்.. திங்கள் செவ்வாய் வேர்க் எல்லோ... கும்மி போட்டு பதில் கொடுக்க முடியாது என்பதால்தான்ன்ன்... முயற்சிக்கிறேன்

      நீக்கு
    7. அதிராவுக்கு கண்ணில் பட்டு விட்டது இனி சமையல் குறிப்புகள் தடை இல்லாமல் வரும்.

      நீக்கு
    8. ஆரஞ்சு ஹேண்ட்பேக் பார்த்தேன் ஏஞ்சல் அழகாய் இருக்கிறது.

      நீக்கு
    9. ஹாஹா கோமதி அக்கா :) வெரி வெரி சாரி :) எனக்கு உங்களை ஏமாத்த மனசு வரல :) அது அதிரடிஞானாநந்தா மியாவ் வாங்கின பரிசு :) எனக்கு அவங்க சம்பளம் தராததால் :) அந்த பேகை என்ணுதாக்கிட்டேன் :)))

      நீக்கு
    10. ஆஆஆஆஆஆ என் ஒரேஞ் காண்ட் பாக்கை இங்கினதானே வச்சேன்ன்.. ஹையோ காணல்லியே... நில்லுங்கோ வாறேன்ன் ஓடிப்போய் அஞ்சுட கபேட் ஐ செக் பண்ணிக்கொண்டு...:)) கர்:))

      நீக்கு
  20. நெல்லைத்தமிழன் வெளியில வாங்கோ..:).. பாருங்கோ அஞ்சு இன்னும் நித்திரையால எழும்பேல்லையாக்கும்:).. அதிரா ஹோட்டேல்ல இருந்தே எழும்பிட்டேன்ன்ன்:).. கடமை முக்கியம் எல்லோ:)...
    இப்போ சொல்லுங்கோ அதிரா இஸ் எ குட் கேள் எல்லோ:)..
    ஆஆஆ கீதாவும் இன்னும் வந்தமாதிரித் தெரியேல்லையே:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா ஹோட்டலில் தங்கி இருக்கும் போதும் அக்காவின் சமையல் குறிப்பை படித்து கருத்து சொல்ல வந்ததற்கு நன்றியும், அன்பும்.
      கீதாவுக்கு கணினி படுத்தல் வருவார் அது சரியான உடனே.

      நீக்கு
    2. ///கடமை முக்கியம் எல்லோ:)... ///

      yes :) அதனால்தான் என் பரிசை அக்காக்கு காட்டிட்டு work புறப்படறேன் :)

      நீக்கு
    3. ஆமாம் ஏஞ்சல் , நினைவு இருக்கிறது . முதல் பரிசு வை. கோபாலகிருஷ்ணன் சார்.
      அவர் செய்த அடைக்கு முதல் பரிசு.
      மீண்டும் போய் பார்க்கிறேன் உங்கள் பதிவை.

      நீக்கு
    4. ஹாஹா கோமதி அக்கா :) வெரி வெரி சாரி :) எனக்கு உங்களை ஏமாத்த மனசு வரல :) அது அதிரடிஞானாநந்தா மியாவ் வாங்கின பரிசு :) எனக்கு அவங்க சம்பளம் தராததால் :) அந்த பேகை சுட்டி என்ணுதாக்கிட்டேன் :)))

      நீக்கு
    5. அதிராவின் பரிசா? அதுதான் உங்களை துரத்தி எங்கு போனாலும் வருவேன் என்றாரா அதிரா!

      நீக்கு
  21. கோமதி அக்கா.. ஆரம்பமே அசத்தலான ரெசிப்பி தந்திருக்கிறீங்க.. நான் வாழைக்காய் பஜ்ஜிதான் கேள்விப்பட்டிருக்கிறேன்... இது அப்பளம் அழகா வந்திருக்கு... ஆனா எப்படித் தட்டினனீங்க இவ்ளோ மெல்லிசாக... தட்டைவடை போல இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா, சப்பாத்தி மாதிரி போட்டு வட்டமாய் வெட்டி எடுத்து இருக்கிறேன்.
      தட்டை வடை போல் மாலை பொரித்து சாப்பிடலாம். குளிருக்கு நல்ல கார சாரமாக நன்றாக இருக்கும்.

      நீக்கு
    2. வித்தியாசமான ரெசிப்பியென்று எல்லோருமே சொல்லி இருப்பதை கவனியுங்கள். அடுத்தது எப்போ கோமதி அக்கா? எல்லோரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். காத்திருக்கும் யாரையும் ஏமாற்றக்கூடாது பாருங்கள்...

      நீக்கு
    3. அதே அதே கோமதிக்கா மீண்டும் வாருங்க...ஒரு ரெசிப்பி கொடுங்க...

      கீதா

      நீக்கு
    4. காத்திருக்கும் யாரையும் ஏமாற்றக்கூடாது பாருங்கள்...//

      ஆமாம், ஆமாம் ஏமாற்றாமல் இன்னொரு சமையல் குறிப்பு அனுப்புகிறேன்
      கீதா, உங்களுக்கும் இந்த பதில் அனுப்புகிறேன்.


      நீக்கு
  22. வாழைக்காயில் அப்பளம் பார்க்க அருமையா இருக்கு. நானும் கேள்விபடவில்லை அக்கா. வாழைக்காய் தோலை நானும் வீணாக்குவதில்லை. சார் வரைந்த படம் ரெம்ப அழகா இருக்கு. உங்க குறிப்புகளை தொடர்ந்து பதிவு செய்யுங்க அக்கா. படங்களும் நன்றாக இருக்கு. வாழ்த்துக்கள் அக்கா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வனக்கம் பிரியசகி அம்மு, வாழ்க வளமுடன்.
      எல்லோருக்கும் தெரியாத புதுவகை அப்பளத்தை அக்கா சொல்லி விட்டது மகிழ்ச்சிதான்.
      வாழைக்காய் தோல் கறி இலங்கையில் ஒரு ஓட்டலில் நல்ல காரசாரமாக சாப்பிட்டோம். மரக்கறி உணவகம் என்ற கடையில்.
      சார் வரைந்த படத்தை பாராட்டியதற்கு நன்றி அம்மு.
      உங்கள் உற்சாகமான பின்னூட்டத்திற்கு நன்றி முடிந்த போது போடுகிறேன் அம்மு.
      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      நீக்கு
  23. கோமதி அக்கா பிளேனிலதானே பார்சல் அமெரிக்காவுக்கு பிளேனில போகும்போது இடையில ஜன்னலால ஒரு கிலோவை அதிரா வீட்டு மொட்டை மாடியில் போட்டுவிடச் சொல்லுங்கோ பைலட் அங்கிளிடம்:)...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா, மகனுக்கு போய் விட்டதே பார்சல். இன்னொரு தடவை செய்து அனுப்பி விடுவோம் .

      பயணத்தில் இருக்கும் போதும் வந்து கருத்து சொல்லி அக்காவை மகிழ்வித்த அன்பு தங்கைக்கு நன்றி நன்றி நன்றி.

      நீக்கு
    2. கோமதி அக்கா அந்த பார்சல் ஸ்கொட்லாந்து பிளைட்டில் இல்லை லண்டன் ப்லைட்டில்னு பைலட்கிட்ட சொல்லிடுங்க :)

      நீக்கு
    3. // அந்த பார்சல் ஸ்கொட்லாந்து பிளைட்டில் இல்லை லண்டன் ப்லைட்டில்னு பைலட்கிட்ட சொல்லிடுங்க :)//

      இரண்டு ஊருக்கும் பார்சலை அனுப்பி விட்டால் போச்சு.பைலட் நம்ம தம்பிதான், ஸ்ரீராம் போல் நல்ல குண்ம கொண்டவர்.

      நீக்கு
  24. நீங்கள் சிறு வயதில் எழுதி வைத்த குறிப்பு, இந்திரா காந்திக்கு எழுத்தாளர் சிவசங்கரி சத்து மிகுந்த வாழைத்தோல் கறி பற்றி கூறிய தகவல்,உங்கள் கணவர் வரைந்த படம், இலவச இணைப்பாக துவரன் செய்முறை, ஒரு சமையல் குறிப்பில் எத்தனை விஷயங்கள்! பத்துக்கு பதினைந்து மார்க் போட வைத்து விட்டீர்கள். சபாஷ்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீண்டும் வந்து அருமையான கருத்து சொன்னது மட்டுமல்லாமல் மார்க் வேறு போட்டு விட்டீர்கள்.
      அதுவும் வழக்கில் இல்லாத மிக அதிகமார்க்.
      நன்றி பானு.

      நீக்கு
    2. //பத்துக்கு பதினைந்து மார்க் போட வைத்து விட்டீர்கள். சபாஷ்!//

      அடடே....

      நீக்கு
  25. கோமதி அக்கா, மாமாவின் ஓவியம் மிக அழகு... சாறியை எவ்ளோ அழகாகக் கீறியிருக்கிறார் பற்றனை... கம்பியில் காகமும் இருக்கிறதே...
    பாருங்கோ நீங்கள் உசாராகி குறிப்பு அனுப்புவதால் மாமாவும் உசாராகிட்டார்ர்... இனி அடிக்கடி குறிப்பனுப்புங்கோ...

    இன்று ஶ்ரீராமுக்கு ஓவ் டே ஹா ஹா ஹா:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அதிரா, நான் உசாராக இருக்க நீங்கள் எல்லாம் காரணம் . நான் உசாராக இருப்பதால் மாமாவும் உசாரா இருக்கிறார் என்பதுதான் உண்மை.

      சொல்லி விட்டேன் மாமாவிடம் அதிராவின் அழகான கருத்துக்களை மாமாவும் நன்றி சொல்கிறார் அதிராவுக்கு.
      சமையல் குறிப்புகள் அனுப்ப முயற்சிக்கிறேன் கண்டிப்பாய்.

      இன்று ஸ்ரீராம் ஓய்வா! வேலை நேரம், வரட்டும் மெதுவாய்

      நீக்கு
    2. //ஶ்ரீராமுக்கு ஓவ் டே ஹா ஹா // - அதிரா... காலையில் பழமுதிர்ச்சோலையில் காய் வாங்கிக்கொண்டிருந்தபோது, பின்னால், 'முத்தல் வாழைக்காய் வேண்டாம். மீடியமா... 6 வாழைக்காய் தாங்க'ன்னு குரல் கேட்டது. யாரது, எபி இடுகைல படித்த மாதிரி யாரோ கேட்கிறாங்களேன்னு திரும்பினா, ஒருத்தர் வாழைக்காய்களோடு போவதைப் பார்த்தேன். இப்போ அனேகமா அவங்க வீட்டு மொட்டை மாடில வாழைக்காய் அப்பளம் போட்டுக்கிட்டிருப்பார்னு நினைக்கிறேன். அதான் இந்தப் பக்கம் எட்டிப் பார்க்கலை. (பின்ன..காக்காய் அப்பளாத்தைக் கொத்திடக்கூடாது இல்லயா?)

      நீக்கு
    3. அது கோமதி அக்கா... நீங்க ஓடி ஓடிக் கொமெண்ட்ஸ் க்குப் பதில் கொடுப்பதால் ஶ்ரீராம் ரிலாக்ஸ் ஆக இருப்பார் எனச் சொன்னேன்:)..

      எனக்கு மாமா , அதிராவைக் கீறித் தரச் சொல்லுங்கோ ஒரு நாளைக்கு:)..

      நீக்கு
    4. ///முத்தல் வாழைக்காய் வேண்டாம். மீடியமா... 6 வாழைக்காய் தாங்க'ன்னு குரல் கேட்டது. ///

      ஹா ஹா ஹா அப்போ வாழைக்காய் வடகப் படத்தோடுதான் ஆள் வெளியே வருவாபோல:)....

      நீக்கு
    5. ஓய்வு இல்லை அதிரா.. தாமதம்!

      நெல்லை.. நான் அவரில்லை. நான் வாழைக்காய் வேண்டுமென்றால் பக்கத்துக்கு வீட்டுக் கொள்ளைக்குப்போய்ப்பறித்துவிடுவேன் - ஹிஹிஹி.. அவர்கள் பார்க்காதபோது!

      நீக்கு
    6. // நீங்க ஓடி ஓடிக் கொமெண்ட்ஸ் க்குப் பதில் கொடுப்பதால் ஶ்ரீராம் ரிலாக்ஸ் ஆக இருப்பார் எனச் சொன்னேன்:).. //

      அது உண்மைதான்!

      நீக்கு
    7. ஓ அப்போ வாழைக்காய் வாங்கியது ஶ்ரீராமோ மீ நம்மட செக் ட ஆத்துக்காரர் ஆக்கும் என நினைச்சுட்டேன்ன் ஹா ஹா ஹா :)

      நீக்கு
    8. //அது கோமதி அக்கா... நீங்க ஓடி ஓடிக் கொமெண்ட்ஸ் க்குப் பதில் கொடுப்பதால் ஶ்ரீராம் ரிலாக்ஸ் ஆக இருப்பார் எனச் சொன்னேன்:)..

      எனக்கு மாமா , அதிராவைக் கீறித் தரச் சொல்லுங்கோ ஒரு நாளைக்கு:)..//

      நீங்கள் தானே சொன்னீர்கள் போஸ்ட் போட்டவர்கள் பதில் கொடுத்தால் தான் நன்றாக இருக்கும் என்று அதுதான் .
      நீண்ட கூந்தலுடன் இருக்கும் பழைய படம் நினைவு இருக்கு எனக்கு, மாமா பார்ததது இல்லை. பூனையார் தான் இப்போது உள்ள பதிவுகளில் இருக்கிறது அதை அழகாய் கீறி தருவார்கள். நீங்கள் விடும் செல்ல கொட்டவி சத்தமும் சேர்த்து வரைந்து தரலாம்.

      நீக்கு
    9. //நீங்கள் தானே சொன்னீர்கள் போஸ்ட் போட்டவர்கள் பதில் கொடுத்தால் தான் நன்றாக இருக்கும் என்று அதுதான் .//

      அதேதான் கோமதி அக்கா.. நீங்களும் இப்படிப் பதில்கள் கொடுபது மகிழ்ச்சி.

      ஆனா ஸ்ரீராம் பாவம் ஹா ஹா ஹா அவருக்கு நான் சொன்னது, யாருமே பதில் தராவிட்டால்.. ஸ்ரீராமாவது வந்தோருக்கு ஒரு வார்த்தை சொல்லோணும் என:)).. இன்று கோமதி அக்கா அனைவருக்கும் பதில் கொடுப்பதால்.. அவரும் குடுக்கோணும் என நாம் எதிர்பார்க்கப் போவதில்லை:).. ஆனாலும் அவர் வந்து குடுத்திருக்கிறார்:))..

      ஸ்ரீராம்.. இப்படி போஸ்ட் போடுபவர்கள் பதில் தந்தால், நீங்கள் றிலாக்ஸ் ஆக இருங்கோ:)).. ஹையோ என் பாஷை புரிவதற்குள் எல்லோருக்கும் வயசாகிடும் போல இருக்கே:)) எக்செப்ட் அதிரா:))

      நீக்கு
  26. வாழைக்காய் அப்பளம்
    வியப்பு
    இப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
      நன்றி உங்கள் கருத்துக்கு.

      நீக்கு
  27. எல்லோர்க்கும் மதிய வணக்கம்! என்னடா இது இப்பத்தானே ஒரு வழியா கணினியை சரி செய்து வந்து கமென்ட் போட்டா மீண்டும் அதிருது ஸ்க்ரீன் ஹையோ மீண்டும் படுத்துவிடுமோ என்று பார்த்தால் கமென்டும் போக மாட்டேங்குது...என்னடா என்றால் இப்பத்தான் புரியுது அப்பாவி அதிரடி மேலே கமென்ட்ஸ் போட்டது!! அதான் காலைலதான் வந்து என்னைத் தள்ளிவிட்டு ஃபர்ஸ்ட்டூஊஊஊஊஊஊஊஊஊஊஊனு வராங்கனா இப்பவும் ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

    கோமதிக்கா வந்தாச்சு உங்க உங்க ரெசிப்பி சாப்பிட...இன்னும் அதிரடி இங்கதான் குதிச்சுட்டுருக்காங்களோ அங்க ஹாலிடே எஞ்சாய் பண்ணாம.ஹா ஹா ஹா கமென்ட் போகாம அதிருது!!!!!

    .அங்க போய் எஞ்சாய் பண்ணுங்க அங்க பாருங்க உங்க குரு கூப்பிடறார்....அப்படி நகந்துக்கோங்க... ஹா ஹா ஹா ஹா ஹா

    கீதா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
      எனக்கு கருத்து சொல்ல கணினி சரியாகி விட்டது மகிழ்ச்சி.
      கீதா, நீங்கள் சாப்பிட என்றவுடன் பொரித்த அப்பளம் போட்டு உங்களை எல்லாம் எடுத்துக்க சொல்லி இருக்கலாம் என்று தோன்றியது.
      அதிரா பாவம் உங்களை தேடினால் நீங்கள் அவரை நகர சொல்கிறீர்களே!
      ஓய்வாய் ஹோட்டல் அறையில் இருக்கும் போது நம்மை தேடி ஓடி வந்து இருக்கிறார் அதிரா.

      நீக்கு
    2. ஆஆஆ கீதா லாண்டட்டூஊஊஊஊ:)... மீ மலைக்காசிலுக்கு ஓடப்போறேன்ன்ன்ன்ன்ன் ஹா ஹா ஹா புவஹா புவஹா:)..

      நீக்கு
    3. கீதா... வாங்க வாங்க...

      பெஞ்ச் மேலேருந்துதானே டைப் பண்றீங்க? லேட்!

      நீக்கு
    4. ஆமாம் ஸ்ரீராம்!! பெஞ்ச் மேலருந்துதாம்ன்..ஹா ஹா ஹாஅ ஹா அப்படியும் மறைக்குது எல்லாம் இந்த அப்பாவி ஞானியால் ஹா ஹா ஹா
      கோமதிக்கா அது சும்மா கலாய்த்தல் அதிராவை...அவர் வாலைப் பிடிச்சு இழுக்கலைனா எனக்குத் தூக்கம் வராதே கோமதிக்கா!!!!!!!

      கீதா

      நீக்கு
    5. நானும் சும்மதான் சொன்னேன் கீதா

      நீக்கு
  28. கோமதிக்கா சூப்பர் ரெசிப்பி முதல்ல எங்க மாமாவுக்கு பாராட்டு சொல்லிடுங்க அக்கா..செமையா வரைஞ்சுருக்கார். மிக மிக ரசித்தேன்….படத்தை……அதுவும் ஒரு மணி நேரத்துல வரைஞ்சு கொடுத்துட்டார் பாருங்க...என்ன அழகா வரைஞ்சுருக்கார்....சூப்பர்!! நான் அடுத்த வாட்டி செய்யற விருந்து மாமாவுக்கும் உண்டுனு சொல்லிடுங்க ஹா ஹா ஹாஹ்ஹா .....

    எபில முதல் ரெசிப்பி இல்லையா கோமதிக்கா வந்த்துமே அசத்தலான ரெசிப்பியோடு வந்திருக்கீங்க. அதுவும் நான் சில வருடங்களாக மறந்து போன ரெசிப்பி ஹா ஹா ஹா…இந்த ரெசிப்பி நான் அம்மாவிடம் கற்றுக் கொண்ட்து. அம்மா ஒரு திப்பிசம் செய்து தெரிந்து கொண்டு அப்புறம் இதே போன்று செய்து சோதனை பார்த்து நன்றாக வரவும் அப்புறம் செய்யத் தொடங்கினார். நான் சொல்லுவது 35 வருடங்களுக்கு முன்……
    நீங்க பச்சை மிளகாய் சேர்த்திருக்கீங்க இல்லையா அக்கா அம்மா சிவப்பு வற்றல் மிளகாய் சேர்த்துச் செய்தார்….அப்புறம் கூடவே ஓமம் அல்லது ஜீரகம் சேர்த்துக் கொள்வார் அக்கா.

    ஒரு முறை இதனுடன் கறிவேப்பிலையையும் ஒரு சுற்று சுற்றிக் கொண்டு செய்தார் மிளகாய் அரைக்கும் போது. அதுவும் நன்றாக இருந்த்து….

    அம்மா கற்ற கதையை அடுத்த கருத்தில் சொல்கிறேன்..

    அக்கா ரொம்ப ரொம்ப நன்றி மீண்டும் நினைவு படுத்தியமைக்கு. நான் பச்சை மிளகாய் சேர்த்துச் செய்த்தில்லை. அடுத்து செய்யும் போது ப மி சேர்த்துச் செய்கிறேன். ரொம்ப எளிதான ரெசிப்பியும் கூட……இதோ இன்னும் இருக்கே கருத்து வரேன் அடுத்து…

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாமாவுக்கு பாராட்டுக்களை சொல்லி விட்டேன். விருந்து உண்டா மாமாவுக்கு மேலும் மகிழ்ச்சி.
      எபில முதல் ரெசிப்பி தான்.

      ஆஹா1 கீதா உங்களுக்கு தெரிந்த சமையல் குறிப்பா?
      நல்லது , மகிழ்ச்சி.

      அம்மா கற்ற கதையை சொல்லுங்கள், கேட்க ஆவல்.

      வாங்க வாங்க மெதுவாய் நானும் இடை இடையே மதிய ஆகார வேலைகளை பார்த்து விட்டு இங்கு வருகிறேன்.

      நீக்கு
    2. //அதுவும் ஒரு மணி நேரத்துல வரைஞ்சு கொடுத்துட்டார் பாருங்க...என்ன அழகா வரைஞ்சுருக்கார்..//

      கீதா.. நீங்கள் சரியாய்ப் படிக்கலை! ஸார் அக்காவுக்காக 20 சதவிகிதமும், ஸ்ரீராமுக்காக 80 சதவிகிதமும் வரைந்து கொடுத்திருக்கார்...

      இல்லையா கோமதி அக்கா?

      நீக்கு
    3. நோஓ அதிராவுக்கு 40 சதவிகிதமாக்கும்:)

      நீக்கு
    4. நோ... வேணும்னா 10 சதவிகிதம்...

      நீக்கு
    5. பார்த்துட்டேன் ஸ்ரீராம் உங்கள் வேண்டுதலை ஏற்று ...கரீக்டு!! இதாரு இடையே எல்லாத்துக்கும் புகுந்து ஷேர் கேட்பது!!! ஹா ஹா ஹா ஹா ஏற்கனவே உள்ள ஷேர் கணக்கை முடிங்க அதான் ஸ்ரீராம் 10 % கொடுத்திருக்காரே!! அது..ஹா ஹா ஹா ஹா..

      கீதா

      நீக்கு
    6. உங்கள் எல்லோர் அனபையும் சாரிடம் சொல்லி விடுகிறேன். இனி முடிந்த போது படம் வரைந்து தர சொல்கிறேன்.

      நீக்கு
    7. //
      ஸ்ரீராம்.27 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 1:36
      நோ... வேணும்னா 10 சதவிகிதம்...//

      கீதா
      //கரீக்டு!! இதாரு இடையே எல்லாத்துக்கும் புகுந்து ஷேர் கேட்பது!!! ஹா ஹா ஹா ஹா ஏற்கனவே உள்ள ஷேர் கணக்கை முடிங்க அதான் ஸ்ரீராம் 10 % கொடுத்திருக்காரே!!///

      ஹா ஹா ஹா ஹையோ மாமா இதைப்பார்த்தாரோ இனி படம் கீறுவதை நிறுத்திடப்போறாரே ஹா ஹா ஹா..

      நீக்கு
  29. நான் கூட வாழைக்காய் அப்பளாம் கேள்விப்ட்டதில்லை.உருளைக்கிழங்கில் இதே செய்முறையில் செய்துள்ளேன். காட்மாண்டுவில். உங்கள் குறிப்பு,படங்கள் நன்றாக உள்ளது. படத்தில் காட்டியுள்ள வாழைக்காயை மொந்தன் வாழைக்காய் என்று சொல்லுவோம். எல்லா சமையலுக்கும் ஏற்றது. அருமையான குறிப்பு. யாவருக்கும் உதவும். நன்றி கோமதிம்மா அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வண்க்கம் காமாட்சி அம்மா, வாழ்க வளமுடன்.
      உருளை கிழங்கை இதே செய்முறையில் செய்து இருக்கிறீர்களா? மகிழ்ச்சி.
      நான் உருளையை கொஞ்சம் தடிமனாக வட்ட வட்டமாய் வெட்டி வேக வைத்து காய வைத்து உருளை வத்தல் செய்து இருக்கிறேன்.
      நீங்கள் சொன்னது போல் செய்து பார்க்கிறேன்.
      ஆமாம் மொந்தன் வாழைதான். உங்கள் அன்பான கருத்து மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது, உற்சாகமாக இருக்கிறது.

      நீக்கு
    2. காமாட்சி அம்மா சொல்றாப்போல் உருளைக்கிழங்கு அப்பளம் ஜாம்நகரில் இருந்தப்போ நானும் பண்ணி இருக்கேன். இதே செய்முறைதான் கிட்டத்தட்ட! வாழைக்காயில் பண்ணியதில்லை.

      நீக்கு
    3. அடடே.... ஆச்சர்யக்குறி. கடைசியில் காமாட்சி அம்மாவும் இது புதுசுன்னுட்டாங்க... பலே... பலே...

      நன்றி காமாட்சி அம்மா. நன்றி கோமதி அக்கா.

      நீக்கு
    4. கீதா, நீங்களும் காமாட்சி அம்மா செய்த உருளை கிழங்கில் அப்பளம் போட்டு இருக்கிறீர்களே!
      ணான் உருளை வத்தல் தான் போட்டு இருக்கிறேன்.

      நீக்கு
  30. கோமதிக்கா உங்க அளவையும் குறித்துக் கொண்டுவிட்டேன்...மிக்க நன்றி அக்கா. படங்கள் சூப்பரா வந்திருக்கு கோமதிக்கா...ரொம்ப நல்லா இருக்கு செய்திருப்பது. கம்பிலியில் போட்டதும் ஐடியா நல்லாருக்கு.

    பச்சை மிளகாய் நல்ல குண்டாக இருக்கு. முதலில் கோவைக்காயோ என்று நினைத்துவிட்டேன்...அப்புறம் தான் தெரிந்து கொண்டேன் பமி...

    வெள்ளை வேட்டித் துணி இதற்கென்று வைத்திருக்கேன். அதை இரண்டாகக் கட் செய்து வைத்திருக்கிறேன். கம்பிகளில் குறுக்காகப் போட்டு நன்றாக சுருக்கம் இல்லாமல் ஸ்டிஃப்ஃபாக இருக்கும் படியாகக் க்ளிப் போட்டு விடுவேன். அப்புறம் ஒரு ஸ்டூல் போட்டுக் கொண்டு அதில் ஏறி சின்ன பாத்திரத்தில் கூழை வைத்துக் கொண்டு வற்றல் வடாம் போடுவது (ஹிஹிஹிஹி கொடி கொஞ்சம் உயரம் நான் நாலடியாராச்சே!!! ) இன்னொரு முறை வீட்டினுள் வடாம அல்லது வற்றல் பிழிந்து விட்டு போட்டு கொஞ்சம் அது கலையாமல் இருக்கும் பருவம் வரை உலர்ந்ததும் இப்படிக் கம்பிகளில் க்ளிப் செய்துவிடுவது....

    கோமதிக்கா படத்தில் ஜிம்கி எல்லாம் போட்டுவிட்டுருக்கார் மாமா சூப்பர். கிட்டத்தட்ட அதே ஜாடையில் வரைந்திருக்கார்....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா, நீங்கள் சொல்லும் முறையிலும் காய வைத்து எடுக்கலாம்
      வடகத்தை. நல்ல வெயில் இருந்தால் நன்றாக இருக்கும்.
      இப்போது வீட்டுக்குள் மின்சார விசிறியின் கீழே வெயில் படுகிற மாதிரி இருந்தாலே வடகம் போடலாம் வெயில் வேண்டியது இல்லை என்று சொல்கிறார்கள். காலத்துக்கு ஏற்றார் போல் நிறைய யோசனைகளுடன். YouTube சமையல் குறிப்புகளில்.

      நான் சிறு வயதில் பெரிய குடை ஜிமிக்கி, வளையம் எல்லாம் போடுவேன் கீதா.

      நீக்கு
    2. ஆமாம்...கோமதிக்கா நானும் பார்த்தேன் வீட்டிற்குள்ளேயே போடலாம் என்று சொல்லப்படுவதை. நானுமே இடையில் அப்ப்டிப் போட்டாலும் கொஞ்சம் உலர்ந்ததும் வெயிலில் எடுத்து வைத்தேன் போன முறை...

      சிறு வயதில் நீங்கள் போடுவது சூப்பர். பெரும்பாலும் ஜிமிக்கி வளையம் எல்லாம் போடுவாங்க அந்த வயசில்...அக்கா இப்பவும் போடலாம் அக்கா நீங்க நல்லாத்தான் இருக்கும். சின்ன ஜிம்கிக்கி கூட...

      நீங்கள் அப்ப்டிப் போட்ட அந்த வயது ஃபோட்டோ இருந்தா போடுங்க கோமதிக்கா....

      கீதா

      நீக்கு
    3. வீட்டுக்குள் போட சொன்ன முறையில் போட்டீர்களா ? நன்றாக இருந்ததா?

      சிறு வயது படங்கள் முக நூலில் போட்டேன் ஏதாவது சந்தர்ப்பம் வரும் போது போடுகிறேன் கீதா.
      சனிக்கிழமை பதிவில் 62 (எனக்கு அதுக்கு மேல்) வயதை மூதாட்டி என்று சொல்லி விட்டார்கள். மூதாட்டிகள் எல்லாம் போட்டால் நன்றாக இருக்காது கீதா. வட நாட்டில் எல்லோரும் எத்தனை வயதானலும் ஜிமிக்கி, பெரிய தொங்கட்டான்கள் போடுவார்கள். நம் நாட்டில் மகள் வயதுக்கு வருவதற்குள் அம்மா எல்லாம் போட்டு அனுபவித்து விட வேண்டும்.

      நீக்கு
  31. கணினி மீண்டும் ஹேங்க் ஆவது போல் இருக்கிறது. எப்படியோ பல ஃபைல்களையும் எடுத்து எக்ஸ்ட்ரா ஹார்ட் டிஸ்கில் (மகன் இங்கு விட்டுப் போனதை நான் யூஸ் செய்து கொள்ளக் கொடுத்துவிட்டான்) சேமித்து வைத்து கணினியின் மெமரியை கொஞ்சம் க்ளியர் செய்து, அடிக்கடி இங்கு கரன்ட் போவதால் கணினி வேலை செய்து கொண்டிருக்கும் போதே ஆஃப் ஆகிவிடுவதால் சில ஃபைல்கல் கரெப்ட் ஆகிப் போகுது. ஏதோ எனக்குத் தெரிந்த மட்டில் சரி செய்து வந்தால் இன்னும் ஒரு பிரச்சனை இருக்கு ஸ்க்ரீன் அடிக்கடி டிம் ஆகுது…திடீர்னு ஒளிருது….அப்படி டிம் ஆகும் போது கணினி ஹேங்க் ஆகுது குறிப்பாக நெட் ஹேங்க் ஆகுது…(கணினிக்கும் வயசாகுகு கண் மங்குது போல!!!! அதுக்கு என்ன அப்பரேஷன் செய்யணுமோ!!!!) ..கணினி டாக்டர் (என் மைத்துனர்) சென்னையில் இல்லை… …அம்பேரிக்கா போயிருக்கார், அவர் வந்த்தும் சரி பார்க்க வேண்டும்…
    கொஞ்சம் சரியாக்கி இப்ப வந்தால் மீண்டும் பிரச்சனை வருது…

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @கீதா ரங்கன் - /அடிக்கடி டிம் ஆகுது…திடீர்னு ஒளிருது….அப்படி டிம்// - ஏதேனும் 'ஆவி' சமாச்சாரமாக இருக்குமா? 'குட்டிச்சாத்தான் மந்திரித்துத் தந்த தாயத்தை கணிணியில் அல்லது ஸ்கிரீனில் தொங்கவிட்டுப் பாருங்களேன். "காளியார்மடம்" அட்ரஸ் வேணுமா? ஹாஹாஹா

      நீக்கு
    2. கீதா , இத்தனை கணினி படுத்தல் இருக்கும் போதும் வந்து கருத்து சொன்னது மகிழ்ச்சி.

      நன்றி உங்கள் கருத்துக்களுக்கு.

      நீக்கு
    3. ஹா ஹா ஹா நெல்லை ஹைஃபைவ்..செமையா சிரித்துவிட்டேன்....நான் என் கணினியில் பூதம் புகுந்திருக்கு போல சூடன் காட்டணும் என்று சொல்ல வந்து கணினி படுத்ததும் மறந்தே போய்ட்டேன்...இப்ப எனக்குப் பதிலா சொல்லிட்டீங்க...

      நெல்லை நான் நம்ம புலியூர் பூஸானந்தார்மடம் ஞானி பூஸானந்தாவைக் கேட்கலாம்னு இருக்கேன்!!!!!!!!!!!!!! ஹிஹிஹி

      கீதா

      நீக்கு
    4. கீதா , இத்தனை கணினி படுத்தல் இருக்கும் போதும் வந்து கருத்து சொன்னது மகிழ்ச்சி.//

      அக்கா நேற்று முழுவதும் ஓப்பனே ஆகலை. அட்லீஸ்ட் இன்று ஓப்பன் ஆகி.... அது அப்பப்ப மூடும் வ்ரும்....இது கடமை கடமை....ஹிஹிஹி ...திங்க பதிவுனா நமக்குத்தான் நிறைய சொல்ல வருமே அதான்...

      கீதா

      நீக்கு
    5. கீதா , இத்தனை கணினி படுத்தல் இருக்கும் போதும் வந்து கருத்து சொன்னது மகிழ்ச்சி.//

      நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
    6. //திங்க பதிவுனா நமக்குத்தான் நிறைய சொல்ல வருமே அதான்...//

      அதேதான், திங்கள் என்றால் நிறைய சொல்ல விஷயம் இருக்கே!
      திப்பிசம், சமாளிப்பு. புதிய செய்முறை ஆராய்ச்சி என்று எக்க சக்கமாய் இருக்கே சொல்ல விஷ்யங்கள்.

      நீக்கு
    7. //நெல்லைத்தமிழன்27 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 12:49
      @கீதா ரங்கன் - /அடிக்கடி டிம் ஆகுது…திடீர்னு ஒளிருது….அப்படி டிம்// - ஏதேனும் 'ஆவி' சமாச்சாரமாக இருக்குமா? 'குட்டிச்சாத்தான் மந்திரித்துத் தந்த தாயத்தை கணிணியில் அல்லது ஸ்கிரீனில் தொங்கவிட்டுப் பாருங்களேன். "காளியார்மடம்" அட்ரஸ் வேணுமா? ஹாஹாஹா///

      ////நெல்லை நான் நம்ம புலியூர் பூஸானந்தார்மடம் ஞானி பூஸானந்தாவைக் கேட்கலாம்னு இருக்கேன்!!!!!!!!!!!!!! ஹிஹிஹி

      கீதா///

      ஓம்...பூம்ம்.. புவன ஜோதி... ஓம் பூம் புவன ஜோதி.. புகாம் பீமாம்ம்:).... ஆஆஆஆஆஆ விடை கிடைச்சிடுச்சூஊஊஊஊஉ:)).. கீதா உங்கட கொம்பியூட்டரை.. நெல்லைத்தமிழனிடம் கொடுத்து[அந்த பாயாசம் கீதா செய்ததைக் குடிச்ச பின்னர்:))].. அவரிடம் கொடுத்து அதை காவேரில கீசாக்கா வீட்டுப் பக்கமாகப் போட்டு விட்டு திரும்பிப் பார்க்காமல் வரச் சொல்றார்ர் என் குரு:)) ஹா ஹா ஹா.

      நீக்கு
    8. பூஸானந்தா அருள் வாக்கில் கீசாக்கா வீட்டு பக்கம் ஏன் போட சொல்கிறார் என்று தெரிந்து விட்டது கீசாக்கா வீட்டுக்கு கணினி நிபுணர்கள் இரண்டு நாளாக வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள். அதனால் உங்கள் கணினியை கீசாக்கா சரி செய்து தந்து விடுவார் என்கிறார்.
      அப்படியே நெல்லைத்தமிழனிடம் கொடுத்து விடுங்கள் கீதா.

      நீக்கு
  32. ஊரில் ஒரு முறை ஒரு அமாவாசை தினத்தில் வீட்டுக்கு எங்கள் தூரத்து உறவினர் குடும்பம் வருவதாகச் சொல்லியிருந்தார்கள். அவர்கள் வைதீகக் குடும்பம். வெளியில் எங்கு சாப்பிட மாட்டார்கள் எனவே அமாவாசை என்பதால் அம்மா வாழைக்காய் (தேங்காய் போடாமல் துவரனாக இல்லாமல்) கறி செய்திருந்தார். கடைசியில் அக்குடும்பம் வரவே இல்லை. அதுவரை அம்மா தனியாகச் சமையல் செய்ததில்லை அம்மாவின் அம்மா இருந்ததால் அம்மாவைக் கூட கிச்சனில் அவ்வளவாக அனுமதிக்க மாட்டாங்க. அம்மாவுக்கு அளவும் தெரியாமல் நிறைய செய்திட்டாங்க. வீட்ட்டிலுள்ளோர் சாப்பிட்டதும் போக நிறைய இருந்தது.

    அப்பா மாலை வந்தால் கோபப்படுவாரே என்று அதையே வற்றல் மிளகாய் அரைத்து விட்டு மிக்சியிலேயே கொஞ்சம் கொஞ்சமாக அரைத்து வடை போல தட்டி அன்று வெயிலில் காய வைத்து எடுத்து அப்படி மூன்று நாலு தினம் வைத்து எடுத்து பொரித்துப் பார்த்தால் நன்றாக இருக்கவும் , அப்புரம் அம்மா வாழைக்காயைத் தனியாகவே அப்படிச் செய்து பார்த்தார்...ஓமம் அல்லது ஜீரகம் சேர்த்து. மெலிதாகச் செய்தார். அடுத்த முறை நீங்கள் செய்திருப்பது போல தேய்த்து வட்டமாகக் கட் செய்து அடுத்த முறை அப்படித் தேய்த்து கீறல் போல போட்டு டைமன்ட் வடிவில் போட்டு காய வைத்து எடுத்தார். நான் செய்த போதும் கீறலாகவே போட்டு விட்டேன்...ரவுடாக இல்லாமல்....மைதா கீறல் சிப்ஸ் செய்வோமே அப்படி...

    என் அம்மா புதுசு புதுசாகத் தானாகவே சோதனை செய்து பார்ப்பார். இல்லை என்றால் மீந்தால் அது ஏதேனும் உருவெடுக்கும்....அப்புறம் இது போல ஏதேனும் யாரிடமேனும் தெரிந்து கொண்டால் செய்வார். என் அம்மாவும் நிறைய வாசிப்பார். ஆனால் வீட்டில் எந்தப் புத்தகமும் வாங்க மாட்டாங்க. கிராமத்துல சில வீடுகளில் பேப்பர், இதழ்கள் எல்லாம் வாங்குவாங்க. ஸோ அம்மா அந்த வீடுகளுக்குச் செல்லும் போது அங்கிருந்து எடுத்து வந்து வாசிப்பார். யாரையேனும் அனுப்பி வாங்கிக் கொண்டு வந்து வாசிப்பார். அப்படிக் கற்றுக் கொண்ட ரெசிப்பிஸ் கூட அம்மா வீட்டுல செய்வாங்க. அப்போதெல்லாம் ஊர் லைப்ரரிக்குப் பெண்கள் போக மாட்டாங்களே.....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்மாவின் பொருளை வீணாக்க கூடாது என்ற எண்ணம் அழகான செய்முறை கிடைத்து விட்டது.
      எத்தனை வகையான வத்தல்கள வித விதமாய்.

      அம்மாவின் சோதனை முயற்சிகள் எல்லாம் வெற்றி அளித்தது அவர்களின் நல்ல மனசு காரணம்.

      அந்தக்காலத்தில் எங்கள் அம்மாவையும் வெளியில் விடமாட்டார்கள், என் மாமா நூலகத்திலிருந்து நிறைய புத்தகம் வாங்கி வந்து கொடுப்பார்கள். கல்யாணம் ஆனதும் அப்பா நிறைய மாத, வார இதழ்கள் வாங்கி தருவார்கள். கதை புத்தகங்கள் வாங்கி தருவார்கள்.

      உங்கள் அம்மாவின் சமையல் கலைதான் உங்களுக்கு வந்து இருக்கிறது. வித விதமாய் செய்து பார்க்கும் ஆசையும் அவர்கள் போலதான்.

      நீக்கு
  33. கோமதி அக்கா வேலைக்கு புறப்படறேன் ஈவ்னிங் விரிவா பின்னூட்டமிடறேன் .

    பதிலளிநீக்கு
  34. சமையலில் உங்கள் கை வண்ணம்தெரிந்ததே உங்கள் வீட்டில் இட்லி சாப்பிட்டிருக்கிறேனே ஒரு ஆர்நிதாலஜிஸ்டின் சமையல் குறிப்பு பிரமாதம் செய்து பார்க்க வேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
      இட்லி சாப்பிட்டதை இன்னும் நினைவில் வைத்து இருக்கிறீர்கள்.
      பறவை ஆர்வலர் சமையல் குறிப்பு பிரமாதமாய் இருக்குமா? செய்து பாருங்கள்.
      உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி சார்.

      நீக்கு
  35. கோமதிக்கா இதைப் நான் பச்சை மிளகாய் சேர்த்துச் செய்யலை....செய்துவிடுகிறேன்....செய்துட்டு சொல்றேன் இங்கு.

    கோமதிக்கா நான் வலைத்தளம் தொடங்கி வரும் வரை, வீட்டில் பெரும்பாலும் சமையலறைதான் என் இடம். அப்புறம் கைவேலை..வீட்டு வேலை....இதுதான் உலகமாக... அதுவும் சென்னை வந்த பிறகு புகுந்த வீட்டினரும் அங்குதான் விசேஷங்கள் நிறைய வரும். அல்லது வீட்டிற்கு வருவாங்க ஸோ நிறைய தெரிந்து கொண்டேன். ஒவ்வொருவரிடமும் புதிது புதிதாக...

    மற்றொரு வடகமும் அம்மா செய்வாங்க. சேம்பு வடகம். அதை வடை போன்றோ அல்லது கிள்ளி வைத்தோ செய்வாங்க அதற்கும் வத்தல்மிளகாய் அரைத்துவிட்டு...கையாலேயே பிசைந்துவிடுவாங்க. கறிவேப்ல்லையும் அரைத்துப் போடுவாங்க. அதிலேயே உருளை, சேனையையும், மரச்சீனியையும் வெந்து சேர்த்து மசித்து கிழங்கு வடகம்னு போடுவாங்க. இந்தக் கிழங்கு வடகத்தைப் பொரித்து புளிக் குழம்பு செய்து அதில் கடைசியில் இறக்கியதும் போடுவாங்க.

    அம்மா கையெழுத்தில் எழுதிய குறிப்புகள் பேப்பர்கள் எல்லாம் கிழியும் நிலையில் இருக்கு. நேற்று கிடைத்தன. அவை. ஊரிலிருந்து அப்பா இங்கு வருபவர் ஒருவரிடம் கொடுத்து விட்டிருந்தார். அம்மா உனக்காக எழுதி வைச்சுருந்திருக்கா போல என்று சொல்லி. அதில் ரயில் கட்டிடம் என்று ஒரு குறிப்பு பார்த்தேன்...அப்புறம் மிக்ஸட் வெஜிட்டபிள் பர்ஃபி என்று ஒன்றும். அம்மா செஞ்சுருக்காங்க ரெண்டுமே ஆனால் எனக்காக எழுதி வைச்சுருந்தது எனக்கு இது நாள் வரை தெரியவில்லை. இதை நான் செய்ததும் இல்லை. நேற்று இதைப் பார்த்ததும் அம்மாவின் கையெழுத்து பேப்பர் அனைத்தும் கிழியும் நிலை கையெழுத்து பல இடங்களில் மங்கி வாசிப்பதும் சிரமமாக இருக்கிறது...அதைப் பார்த்ததும் என் கண்கள் கலங்கி....அதை லேமினே செய்ய எடுத்து வைத்துள்ளேன்...முடிந்தால் அவை என்ன குறிப்புகள் என்று பார்த்து செய்ய முடிந்தால் செய்து பார்த்து பகிர வேண்டும் என்று நினைக்கிறேன் பார்க்கிறேன்...

    இன்னும் தெரியாதது நிறைய இருக்குதான்...நீங்கள் உங்கள் குறிப்புகளில் புதியதாக இருப்பதைப் போடுங்கள் அக்கா.. இங்கு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கோமதிக்கா நான் வலைத்தளம் தொடங்கி வரும் வரை, வீட்டில் பெரும்பாலும் சமையலறைதான் என் இடம். அப்புறம் கைவேலை..வீட்டு வேலை....இதுதான் உலகமாக... அதுவும் சென்னை வந்த பிறகு புகுந்த வீட்டினரும் அங்குதான் விசேஷங்கள் நிறைய வரும். அல்லது வீட்டிற்கு வருவாங்க ஸோ நிறைய தெரிந்து கொண்டேன். ஒவ்வொருவரிடமும் புதிது புதிதாக...//

      கூட்டுக் குடும்பம் என்றால் ஒவ்வொருவர் சமையலும் நாமும் கற்றுக் கொள்ளலாம்.

      சேனைகிழங்கில் இது போன்று அப்பளம் செய்து இருக்கிறேன்.
      அம்மா கையெழுத்து குறிப்புகள் கிடைத்தது மகிழ்ச்சி. இத்தனை நாள் கிடைத்து இருப்பது அம்மாவின் நினைவுகளில் கண்ணீர்வந்தது நெகிழவு.
      முதலில் அம்மாவின் குறிப்புகளை செய்து அனுப்புங்கள்

      நீக்கு
  36. பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
      காணவில்லையே என்று நினைத்தேன்.
      ஊருக்கு போவதாய் சொன்னீர்களே ! அதனால் வரவில்லை என நினைத்துக் கொண்டேன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  37. கோமதி அக்கா சூப்பரா இருக்கு வாழைக்காய் அப்பளம் .இதுவரை நான் கேள்விப்பட்டதுமில்லை சாப்பிட்டதுமில்லை தொடர்ந்து வெயில் வந்தா நிச்சயம் செய்வேன் .இங்கே ஒருநாள் வெயில் அடிச்சா 3 நாள் மழையும் இருளுமா இருக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்போது முடியுமோ அப்போது செய்து பாருங்கள் ஏஞ்சல்.
      மழையை இங்கே கொஞ்ச்சம் அனுப்பி வையுங்கள்
      மழை இல்லாமல் நாங்கள் கஷ்டப்படுகிறோம்.

      நீக்கு
  38. நெல்லைத்தமிழன் சொன்னதுபோல நேந்திரங்காயில் செய்து பார்க்க ஆசை தொடர்ந்து 4 நாள் வெயிலை பார்த்தா செஞ்சிடுவேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கர்ர்ர்ர்ர்:) முதல்ல என் குழைஜாதம்:)) பின்புதான் நேத்திரம் விழுப்புரமெல்லாம் கர்ர்ர்ர்:)) விடமாட்டேன் பூஸோ கொக்கோ:))

      நீக்கு
    2. ஏஞ்சல், அதிரா , நெல்லைத்தமிழன் மூவரில் யார் முதலில் நேந்திரங்காயில் அப்பளம் செய்கிறீர்கள் என்று பார்க்கிறேன்.

      நீக்கு
  39. சார் வரைந்த ஓவியம் செம அழகு .காரியமே கண்ணாக மெல்லிய புன்னகையுடன் சிரத்தையா ஜிம்மிக்கி அசைந்தாட நீங்கள் அப்பளம் இடுவதை அழகா வரைந்திருக்கார் ,அம்மா என்ன செய்கிறார்னு மகன் உற்று பார்ப்பது அவரோடு சேர்ந்து காகமும் :) அப்பளத்தை பார்வையிடும் காட்சி என்று அனைத்தும் அருமை அக்கா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாரின் ஓவியத்தை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி ஏஞ்சல்.
      ஓவியருக்கு இப்படி பாராட்டும் அன்பர்கள் இருந்தால் மேலும் வரைய ஆவல் ஏற்படும்.
      அவர்களிடம் சொன்னேன் உங்கள் ரசிப்பை. நன்றி சொல்ல சொன்னார்கள் புன்னைகையுடன்.

      நீக்கு
  40. நானும் சமீபத்தில்தான் வாழைத்தோலில் துவரம் செய்தேன் சூப்பரா இருந்தது ,இரும்புசத்து நல்லதுன்னு அனைவரும் சொன்னாங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அல்லோ மிஸ்டர்ர்ர்ர் அப்போ என் வாழைத்தோல் பச்சடி நீங்க இன்னும் செய்யல்ல:))

      நீக்கு
    2. வாழைத்தோல் துவரம் செய்து இருப்பது அறிந்து மகிழ்ச்சி ஏஞ்சல், அதிரா வாழைத்தோல் பச்சடி செய்தாரா நான் பார்க்கவில்லையே!

      நீக்கு
  41. இதுமாதிரி இன்னும் நிறைய வற்றல் வடகங்கள் குறிப்பு எதிர்பார்க்கிறோம் திங்கற கிழமையில் :)
    பேச்சிலர் ரெசிபிக்களில் உங்க குறிப்பு உருளை வறுவல் மிகவும் பிடித்தது நானும் செய்யணும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதே அதே.. எனக்கும் வடகம் செய்ய ஆசையா இருக்குது.. வெயிலையும் ஹொலிடேயையும் நினைக்க செய்ய மனம் வரவில்லை..:(

      நீக்கு
    2. ஏஞ்சல், உருளை வறுவல் என் அப்பாவுக்கு மிகவும் பிடித்தது.
      தோசைகல்லில் உருளையை வெட்டிவைத்து ரோஸ்ட் செய்து மிளகுதூள், உப்புதூள் போட்டு கொடுப்பார்கள்.
      எல்லாஉணவுகளுக்கும் தொட்டுக் கொள்ள ஏற்ற வறுவல்.

      உங்கள் கருத்துகளுக்கு உடன் பதில் அளிக்க முடியவில்லை, 9.30 க்கு எல்லாம் தூங்கி விடுவேன்.
      காலை எழுந்து முதல் வேலையாக பதில் கொடுத்தபின் தான் மனது ஆறுதல் அடைந்தது.
      நன்றி நன்றி ஏஞ்சல்.

      நீக்கு
  42. அதிரா, ஏஞ்சலுடன் சேர்ந்து வந்து மீண்டும் பின்னூட்டங்கள் கொடுத்து அக்காவை மகிழ வைத்ததற்கு நன்றி நன்றி.
    விடுமுறை நாட்களை சந்தோஷமாக குடும்பத்துடன் மகிழ்ந்து இருங்கள்.

    பதிலளிநீக்கு
  43. ரொம்ப புதுசான செய்முறை ..

    அருமையா இருக்கு மா...

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!