வெள்ளை அப்பம் 
தேவையான பொருட்கள்:
தேவையான பொருட்கள்:
வெள்ளை உளுந்து : நூறு கிராம். 
பச்சை (கலர் அல்ல Raw)) அரிசி: முன்னூறு கிராம். 
வெள்ளை உப்பு : ஒரு கரண்டி (உத்தேச அளவு. தேவைக்கேற்ப எடுத்துக்கொள்ளவும்)  
கருப்பு மிளகு: அரை  தேக்கரண்டி. 
சீரகம்: ஒரு தேக்கரண்டி. (சீரகம் என்ன கலர் என்று அண்ணனுக்கு போன் செய்து கேட்டேன். குதிரைச்சாணி கலர் என்றார். ஹூம் இதைக் கேட்காமலேயே இருந்திருக்கலாம்!) 
பச்சை மிளகாய் : ஐந்து. 
இஞ்சி : பாதி கட்டை விரல் அளவு. (இஞ்சி என்ன கலர் என்று அண்ணனிடம் கேட்கவில்லை புத்தி , புத்தி!) 
பச்சைக் கறிவேப்பிலை : பதினைந்து இலைகள். 
நல்லெண்ணெய் : அரை லிட்டர் 
முதலில், உளுந்து எடுத்து, கழுவி, சுத்தமான தண்ணீரில் ஊற வைக்கவும். 
பச்சரிசியையும் அவ்வாறே கழுவி, சுத்தமான தண்ணீரில் வேறொரு பாத்திரத்தில் ஊற வைக்கவும். 
இப்போ போய் ஏதாவது தமிழ் சானலில் ஒரு முழு தமிழ்ப்படம் விளம்பரங்கள் சேர்த்துப் பார்த்து முடித்துவிட்டு (அல்லது உருப்படியாக ஏதாவது செய்யவேண்டும் என்றால் - படுத்துத் தூங்கிவிட்டு ) மூன்று மணி நேரம் கழித்து வாருங்கள். 
உளுந்தை, இட்லிக்கு அரைப்பது போல, கிரைண்டரில் அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள். அரிசியையும் அவ்வாறே நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும். 
இரண்டு மாவையும் கூட்டணி சேருங்கள். உப்பு போட்டுக் கலக்கவும். 
மாவுக் கலவை கெட்டியாக இருக்கவேண்டும். 
இப்போ மிளகு, சீரகம் இரண்டையும் மேற்படி மாவில் போட்டுக் கலக்கவும். 
(சிலர் மிளகு சீரகம் போடாமலும் வெள்ளை அப்பம் செய்வார்கள்) 
பிறகு, பச்சை மிளகாய்களை நறுக்கவேண்டும். ஒவ்வொரு துண்டும் மூன்று முதல், ஐந்து மி மீ நீளம் இருக்கலாம். இஞ்சியை தோல் நீக்கி, சிறு சிறு துண்டுகளாக  வெட்டி, இஞ்சித் துண்டுகளையும், ப மி துண்டுகளையும் மேற்படி மாவில் போட்டுக் கலக்கவும். கறிவேப்பிலையையும் சிறு துண்டுகளாக நறுக்கி, மாவோடு சேர்த்துக்கொள்ளவும். 
இப்போ மாவு தயார். 
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, பூரி செய்ய எவ்வளவு எண்ணெய் விடுவீர்களோ அந்த அளவுக்கு எண்ணெய் விடவும். 
எண்ணெய் காய்ந்ததும், ஒரு இட்லிக் கரண்டியால், (ஒரு இட்லி அளவுதான் மாவு எடுத்துக்கொள்ளவேண்டும்) மாவு எடுத்து, எண்ணெயில் ஊற்றவும்.  
வெள்ளையப்பம் முதலில் எண்ணையில் கீழே போய் செட்டில் ஆகும்; பிறகு மிதக்கும். ஒருபுறம் சிவக்கப் பொரிந்ததும், அதைக் கண் கரண்டியால் திருப்பிவிடவும். இரு பக்கங்களும் சிவக்கப் பொரிந்தவுடன், வெள்ளையப்பத்தை, இரண்டு கண் கரண்டிகளுக்கு இடையே வைத்து அமுக்கி, எண்ணையை  வடித்து, எடுத்துக்கொள்ளவும். 
இப்படியாகத்தானே எல்லா வெள்ளையப்பத்தையும் செய்து எடுத்துக் கொள்வீர்களாகுக! 
பச்சைக் கமெண்ட்: (இதில் அரிசி, உப்பு தவிர வேறு எதுவும் வெள்ளை கிடையாது. அதையும், சிவக்கப் பொறித்து எடுக்கிறோம்! அப்புறம் ஏனப்பா வெள்ளை அப்பம் என்று பெயர்? ) 
                 ========================================================   
ஏழு  நாள் தொடர்கதை ::  वह कौन है?
நீண்டு நிமிர்ந்திருந்த அந்தத் தெருவின் கடைசியில் - அல்லது முதலில் என்றும் சொல்லலாம். அது நீங்கள் எந்தத் திசையிலிருந்து பார்க்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது - அவன் உதயமானான்.
நீண்டு நிமிர்ந்திருந்த அந்தத் தெருவின் கடைசியில் - அல்லது முதலில் என்றும் சொல்லலாம். அது நீங்கள் எந்தத் திசையிலிருந்து பார்க்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது - அவன் உதயமானான்.
மதியம் இரண்டரை மணி இருக்கலாம்.  பாதி வீடுகளில் அலுவலகத்துச் சென்றிருக்கக் கூடியவர்களைத் தவிர்த்து வீட்டிலிருப்பவர்கள் மதிய உணவை முடித்து தொலைக்காட்சியின் அழுகைத் தொடர்களிலோ, அல்லது நித்திரையின் வசப்படும் நேரமாகவோ இருக்கலாம்.  
                                                                                                                                              நாளை.....




 
 






























