ஞாயிறு, 2 பிப்ரவரி, 2020

வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே...



விமான நிலையம் நோக்கி .....



அடடா மரம் மறைக்குதே!


என்ன இது...    என்ன இது...   சும்மா இருங்களேன் கொஞ்சம்...!


உலகம் பெரிது...   சாலைகள் சிறிது...


ஒலி கொடுத்தால் வழி கிடைக்கும்...!

இது கோவில் இல்லை!


விமான நிலையத்தின் அருகில் இருக்கும் உணவகத்தில்


உணவகம் எது என்று கேட்பவர்களுக்கு......

சாப்பிட்ட திருப்தி?


அந்த ஹோட்டலுக்குப் போயிருக்கலாமோ?!!


லெஃப்ட்... ரைட்....லெஃப்ட்...

காத்திருந்தபோது...



செவியுணவுப் படங்கள்!


தெளிவில்லையோ....!


இங்க ஒருத்தர் நின்னு பார்த்துக்கினு இருந்தாரே.....  எங்கே காணோம்?!



ஆகாய வீதியில் அசைந்தாடிச் செல்லத் தயார்...


தரையிறங்கும் முன் செங்கல்பட்டு வரை போய்  திரும்பி வந்தோம்


மருத்துவமனையில் இருந்த முதன்மந்திரியைப் பார்க்க வந்திருந்த VVIP யாரோ புறப்பட்டு செல்லும் வரை சுற்றினோம்

36 கருத்துகள்:

  1. அட? பதிவு வெளிவந்து எட்டு மணி நேரம் ஆகி இருக்கே! நான் மத்தியானம் இந்தப் பக்கமே வரலை. அதனால் தெரியலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனி காலை ஐந்தரை மணிக்கு நம் பதிவுகள் வெளியாகும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்!

      நீக்கு
    2. நல்லது. அதற்குக் காரணம் பெங்களூர் ஆசிரியரா என்பதைத் தெளிவுபடுத்தி இருக்கலாம்

      நீக்கு
    3. //அதற்குக் காரணம் பெங்களூர் ஆசிரியரா // இல்லை என்று பணிவன்போடு தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்!

      நீக்கு
  2. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். தலைப்பு "வீடு நோக்கி" என இருந்தாலும் இன்னமும் அசாமின் படங்களே அதிகம். அந்த உயரமான பையரைப் போலத் தான் எங்க பையரும் பத்தாம் வகுப்புப் படிக்கையில் இருந்தார். ஒன்றாம், இரண்டாம் வகுப்புக் குழந்தைகள் "அங்கிள்" எனக் கூப்பிடுவதாய்ச் சொல்லி அழுவார். :)))) பின்னர் ஜிம்முக்கு தினமும் போய் மேலும் உயராமல் பார்த்துக் கொண்டார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா அக்கா...   வணக்கம், நல்வரவு, நன்றி.

      நீக்கு
    2. ஜிம்முக்குப் போனால் உயரமாட்டர்களா! ஆச்சரியமா இருக்கே!

      நீக்கு
    3. ஆமாம், கௌதமன் சார், அப்படித் தான் சொல்றாங்க. என் தம்பியோட 2 ஆவது பையரும் இப்படித் தான் ஜிம்முக்குச் சென்று தன் உயரத்தை ஒரு நிலைப்படுத்திக்கொண்டார். முதல் பையர் நல்ல உயரம்! :))))) குறிப்பிட்ட அளவோடு நின்னுடும் என்கிறார்கள். எவ்வளவு தூரம் உண்மை எனத் தெரியாது.

      நீக்கு
  3. ஜெயலலிதா அவர்கள் மருத்துவமனையில் இருந்தப்போப் போனதா? விமானத்திலிருந்து கீழே பார்த்தால் தெரியும் விளக்கு வரிசை எப்போவுமே அழகு தான். எல்லாப் படங்களும் நன்றாக இருக்கின்றன. அந்தச் செடிகள் உள்ள படம் உண்மையா? எல்லாம் நிஜச் செடிகள் தானே? அப்படித் தான் தெரியுது. முடிஞ்சாக் காலம்பர வரேன்.

    பதிலளிநீக்கு
  4. அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன்பழிப்ப தில்லாயின் நன்று..

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
  5. முந்தைய பதிவின் படங்களை விட இன்றைய படங்கள் மிகவும் அழகாக இருப்பதாகத் தெரிகிறது....

    பதிலளிநீக்கு
  6. முடிந்ததா? தொடருமா? ஆரம்பமா? முன்னோட்டமா என்று தெரியாத அளவில் வரும் எங்கள் பிளாக்கின் கன்னித்தீவின் இன்றைய படங்கள் எப்போதும்போல்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா !! சிந்துபாத் $ தான் பதில் சொல்லவேண்டும்!

      நீக்கு
  7. அன்பின் எங்கள் ப்ளாக், மற்றும் அனைவருக்கும் இனிய
    காலை வணக்கம்.
    அவர்கள் கிளம்பி அவர்கள் ஊருக்கு வரும்வழியில் செங்கல்பட்டைப்
    பார்த்துவிட்டு வருகிறார்கள்:)
    நம்ம அம்மா கிளம்பி மூன்று வருடங்கள் ஆச்சே.
    அப்போவா மேகாலயா சுற்றுலா போனார்கள்?
    நெ.த.,:) கன்னித்Note:தீவா. ஹாஹ்ஹா.

    பதிலளிநீக்கு
  8. கடைசி இரு புகைப்படங்கள் மிகவும் அருமை.

    பதிலளிநீக்கு
  9. வீடு நோக்கி வந்து விட்டார்கள். படங்கள் முடிந்து விட்டதா?

    படங்கள் நன்றாக இருக்கிறது.

    வரிசையாக தொட்டிகள் வைத்து இருப்பது அழகு.

    விமானத்தில் இருந்து இரவு எடுக்க பட்ட படம் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  10. அது சரி, இதிலே சிலர் காமாக்யா போனதாகச் சொன்ன நினைவு. அந்தப் படங்கள் வந்தனவா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கு இருக்கின்ற ஞாபகசக்தி அபாரம்! பதிவாசிரியர் ஏதேனும் பதில் சொல்வாரா என்று பார்ப்போம்!

      நீக்கு
    2. அதை ஏன் கேட்கறீங்க? 2,3 ஜன்மத்து ஞாபகங்களெல்லாம் வந்துடறதாலே நம்மவருக்கு அப்போப்போ சந்தேகம் வந்துடுது. :))))))

      நீக்கு
  11. வணக்கம் சகோதரரே

    படங்கள் அருமை. அதற்கேற்ற பொருத்தமான வாசகங்களும் அருமை. சாலைகள்,உணவகம், அடுக்கி வைக்கப்பட்ட செடிகள், ஆகாய வீதி படங்கள் அத்தனையும் அழகாக உள்ளது.

    /இங்க ஒருத்தர் நின்னு பார்த்துக்கினு இருந்தாரே..... எங்கே காணோம்?!/

    "ஒருத்தர் இல்லை இருவர்... எதையுமே என்னைப் போல சரியா கவனிக்கனும்." என்கிறாரோ அந்த மூவரில் ஒருவர்.

    கடைசி ஒளி வெள்ள வரிசைப்படங்ககள் பார்க்க மிக அழகு.. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  12. படங்கள் நன்று.

    அடுத்த ஞாயிறிலிருந்து வேறு ஊர் படங்களா? இல்லை இன்னும் கௌஹாத்தி படங்கள் தொடருமா? பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
  13. ஒரு வழியாய் அசாம் மரம் செட் கொடி மலைகளுக்கு டாட்டாவா வீடு நோக்கி வரும் படங்கள் அழகு

    பதிலளிநீக்கு
  14. /மருத்துவமனையில் இருந்த முதன்மந்திரியைப் பார்க்க வந்திருந்த VVIP யாரோ புறப்பட்டு செல்லும் வரை சுற்றினோம் அவ்வளவு பழைய சம்பவங்களா பதிவாய்வந்து கொண்டிருந்தது

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!