புதன், 25 மார்ச், 2020

புதன் 200325 : கற்றல் சிறப்பா? கற்பித்தல் சிறப்பா ?

     
ஏஞ்சல் :

1, கற்றல் சிறப்பா?  கற்பித்தல் சிறப்பா ?


$ ஒன்றில்லாமல் மற்றொன்று இருப்பதற்கு வாய்ப்பில்லை.

# இரண்டுமே சிறப்பு . கற்றல் நமக்கு நன்று. கற்பித்தல் சமூக நலனுக்கு நல்லது. 

& கற்பவர்கள், கசடறக் கற்று, கற்றதை மற்றவருக்கும் கற்பித்தல் சிறப்பு. 
                   
2, தலையாட்டுதலுக்கும் ஜால்ராவுக்கும் வித்யாசம் இருக்கா ?

$ நிறைய. ஒன்று வெறும் ரசனையாக இருக்கலாம். மற்றதில் பங்களிப்பு இருக்கிறது.

# இருக்கிறது.  ஜால்ரா பலன் கருதிச் செய்வது. 

3, இதை செய்தா சந்தோஷமும் மனநிம்மதியும் கிடைக்கும்னு தெரிஞ்சும் பலர் அதை செய்யாமலிருப்பதேன் ?

$ சோம்பேறி?

# அவநம்பிக்கை ?

& // இதை செய்தா //  எதை? 

4, நீங்கள் முதல் கேள்வியை படிச்சிட்டு அடுத்த கேள்விக்கு தாவுபவரா அல்லது ஆர்வக்கோளாறில் கடைசி கேள்வி என்னவா இருக்கும்னு அங்கே செல்பவரா ?

 $ இல்லை.

# வரிசையை மீறிச் செல்ல மாட்டேன்.  

& சற்று விளக்கமான பதில் சொல்கிறேன். 
எங்கள் அலுவலக (communication workshop) பயிற்சி வகுப்பில் நடந்த ஒரு நிகழ்வை சொல்கிறேன். 
பயிற்சி வகுப்பில் இருபது பேர். 
பத்து நிமிட பயிற்சி. 
யாரும் பேசக்கூடாது, ஒருவரோடொருவர் கலந்தாலோசிக்கக்கூடாது என்று சொன்னார்கள்.
ஒவ்வொருவரிடமும் அச்சடிக்கப்பட்ட ஒரு தாள் கொடுத்தார்கள். 
எல்லோரும் படித்தார்கள். 
இருபது குறிப்புகள்.  

1. நீங்கள் இதை முழுவதுமாகப் படித்து முடிக்கும் வரையில் வேறு எந்த செயலையும் செய்யவேண்டாம். 
2. எந்தப் பகுதியில் வேலை செய்கிறீர்கள்? 
3.  இந்தத் தாளின் வலதுபக்க மேல் மூலையில் உங்கள் பெயரை எழுதவும்.
4. இந்த சோதனையில் நீங்கள்தான் வெற்றியாளர் என்றால், ஒருமுறை உங்கள் பெயரை உரக்கக் கூறுங்கள். 
5. மேலே எழுதப்பட்டிருக்கும் உங்கள் பெயரைச் சுற்றி பேனாவால் ஒரு வட்டமிடவும். 
6. ஏதேனும் ஒரு பக்கத்தில் இருப்பவரை செல்லமாக ஒரு தட்டு தட்டுங்கள். 
7. நானே ராஜா என்று சொல்லுங்கள். 
8.  சமீபத்தில் நீங்கள் படித்த ஜோக்கை நினைவுபடுத்திக்கொண்டு வாய் விட்டு சிரியுங்கள். 

............ இப்படி முதல் பதினெட்டு பாயிண்டுகள் இருந்தன. 
.
.

19. இந்தப் பயிற்சித்தாளில் உள்ளவைகளில், மூன்றாவதையும், ஐந்தாவதையும் மட்டும் செய்யுங்கள். 

20. பத்தொன்பதாவது பாயிண்டில்  சொல்லியுள்ளவைகளை செய்து முடித்தவர்கள் கைகட்டி உட்கார்ந்து, மற்றவர்களை வேடிக்கை பாருங்கள். 

முதல் மூன்று நான்கு நிமிடங்களுக்கு எல்லோரும் மௌனமாகப் படித்துக்கொண்டிருந்தார்கள். விற்பனைப்பிரிவு இளரத்தம் ஒன்று முதலில் தன் பெயரை உரக்கக்கூறி, பேனாவை எடுத்து தாளில் ஒரு வட்டம் போட்டார். அவ்வளவுதான், எல்லோரும் ஒவ்வொருவராக பெயரைக் கூறுவது, வட்டம் போடுவது, சிரிப்பது, அடிப்பது என்று பொளந்து கட்டிட்டாங்க. இருபது பேரில் மூன்று பேர் மட்டும் இவை எதையும் செய்யாமல், புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள். 
நான் எல்லாக் கேள்விகளையும் வரிசைக்கிரமமாக படிப்பவன். 

 5, ஒருவர்  செய்யும் விஷயங்களில் அவருக்கு  திருப்தி ஏற்படுவது முக்கியமா ? அல்லது அவரை சுற்றியுள்ளவர்களை அது திருப்திப்படுத்தணுமா ? (மனநல சம்பந்தப்பட்டது :)

$ முதல்வர் எளிதில் திருப்தி அடையக்கூடும். சுற்றியுள்ளவரைத் திருப்திப் படுத்த நினைப்பவர்களுக்கு சுற்றம் கூடும். நேரம் குறையும்.

 # நமக்கு உண்மையான திருப்தி தரும் செயல், அடுத்தவரையும் திருப்திப் படுத்தும். 


6, போதும் என்ற மனம் கிடைக்க என்ன செய்யணும் ?

$ போதுமான அளவு எல்லாவற்றையும் சம்பாதிக்க வேண்டும்.
              
# பேராசையை அறிந்து அடையாளம் கண்டு விலக்க வேண்டும். 

& கிடைத்தது போதும் / அல்லது அதுவே அதிகம் என்ற எண்ணம் இருந்தால் போதும். 


7,  நம்மை நடிப்பால் மகிழ்விக்கும் நடிகர்களை/நடிகையர்களை  திரையில் ரசிக்கிறோம் ஆனால் அவர்கள் பொதுவாழ்வில் அரசியலுக்கு வருகிறேன் என்றதும் மனதின் மூலையில் எதற்கு என்ற கேள்வி உதிப்பது ஏன் . ??? நமக்கு பிடிச்சவங்கதானே என்னும் எண்ணம் இதில் உடைபட்டுவிடுவதேன் ?

$ உங்களை இப்படி அடையாளம் காட்டிக் கொள்கிறீர்கள்.

# டிரைவர் ஓட்ட வேண்டும். குக் சமைக்க வேண்டும். ரோல் மாறினால் பிடிக்காதுதானே. 

& நடிகர்களும் சமுதாயத்தின் ஓர் அங்கம்தான். அவர்களுடைய பாபுலாரிடியை மக்கள் ஆதரவாக மாற்றி, வோட்டு பெறமுடியுமா என்று அவர்கள் பார்ப்பதில் தவறு இல்லை. ஜெயித்தபின், என்ன செய்கிறார்கள், எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதில்தான் இருக்கின்றது மீதி எல்லாம். நான் அதிகம் எதிர்பார்த்து ஏமாந்தது விஜயகாந்தின் அரசியல் எழுச்சியும், வீழ்ச்சியும். 


8,  அதிகாரம்  பதவி, முக்கியபொறுப்பு இவை ஒருவரின் குணநலன்களை மாற்றிவிடுமா ?

$ குண நலன்கள் மாறி விட்டதாக மற்றோர் கருத வாய்ப்புண்டு.


# மாற்றாமல் இருந்தால் அதிசயம். 

9,  முந்திக்காலத்தில் சீப்பு பிரஷ் இல்லாத காலத்தில் எப்படி தலை வாரி இருப்பாங்க ?

$ கையால் ஒதுக்கிக் கொண்டிருப்பார்கள்.


# எண்ணெய் பூசி சேர்த்து வைத்து  முடிபோட்டு வைத்திருப்பார்கள்.


 


சீப்பு கண்டுபிடிக்கப் படுமுன்பு ... 






10,  நமது வாழ்நாள்  100 வயது என்பதற்குப்பதில் 300 ஆகிட்டா என்னாகும்?

$ 300 ஆண்டுகள் ஆனதும் 60 வயது வரை கல்லூரியில் படிக்க வேண்டியிருக்கும். சொந்தக்காலில் துணையுடன் நடக்க முடியாத காலம் அதிகரிக்கலாம்.இன்னும் எவ்வளவோ..

# போர் அடித்துப் போகும்.

& அந்தக் கால கட்டத்தில் பேப்பர் இருக்காது. பெர்சனல் டிவி ஆளுக்கு ஒன்று இருக்கும். இ.கு.ம எண் A2KZG545.1952 அவர்கள் தன்னுடைய இருநூற்று ஐந்தாவது வயதில் அகால மரணம் அடைந்தார் என்று ஒரு இருநூற்றுத் தொண்ணூறு வயது ஆசாமி அறிவித்தால் பார்க்கின்ற பல்லுபோன கிழங்கள் எல்லாம் கண்ணீர் விடுவார்களா? 

11. பணம்  கொடுக்கும்போது 101 ,1001,501 என்று ஒரு ரூபாய் சேர்த்து ஒன்றாம் இலக்கத்தில் தரக்காரணம் என்ன ?

$ 10 க்குப் பிறகு கேள்விகள் இல்லையோ என்று பார்த்தால்....
101,1001 எல்லாம் தொடரப்படாமல் limit செய்ய ஒரு உத்தி.

 # "0" க்கு சூனியம் என்ற பெயர் உண்டு. மொய்யில் அதிகமாக சூன்யம் வைக்கக் கூடாது.

& முதலில் மொய் வைத்தவர், கவரின் மீது எழுதிய Rs 10/ - என்பதை 101 என்று நினைத்து ஒவ்வொருவரும் நூற்று ஒன்று ரூபாய் கொடுத்தார்களாம். அப்புறம் எல்லோருமே சரிதான், 51, 101, 501, ..... என்றுதான் கொடுக்கவேண்டும் என்று நினைத்துவிட்டார்களாம்! 

12, கலை ஐ மீன் ஆர்ட் மனதுக்கு உற்சாகமூட்டுமா ? கலையென்ற பெயரில் சில கொலைகள் நிகழ்வது எரிச்சலூட்டுவதால் எழுந்த கேள்வி இது .

$ ஆம், கொலையாக உள்ளது கலையாக மட்டுமே இருந்தால்.

# மகிழ்ச்சி சிலிர்ப்பு தருவதுதான் உண்மையான கலைக்கு அடையாளம்.

& மூட்டும். 

13, சடங்குகள் சம்பிரதாயங்கள்  மன அமைதியை தந்திருக்கா ?உங்கள் அனுபவங்களை பகிரவும்.    (நான்  சடங்கு எனக்குறிப்பது எப்பவும் வீட்டை விட்டு வெளியே கால் வைக்குமுன் ப்ரே செஞ்சுட்டுதான் வெளியேறுவேன் அதுமாதிரி )

$ அவ்வப்போது மாறும். 

# எனக்கு அந்த மாதிரி சடங்குகளில் நம்பிக்கை இல்லை.

& நான் மட்டும் தனியாக இருந்தால், சாஸ்திரம், சம்பிரதாயம், சடங்கு என்பதெல்லாம் சௌகரியம்போல செய்வேன் / செய்யாமல் இருப்பேன். ஆனால் என் கூட இருப்பவர் என்னுடைய திருமதியோ அல்லது வயதில் பெரியவர்களாகவோ  இருந்து, அவர்கள் சா, ச, இவற்றை வற்புறுத்தினால், அவர்களுக்காக செய்வதுண்டு. 

14, மந்திர சிந்தனையில் உங்களுக்கு நம்பிக்கையுண்டா ?? உங்களுக்கு எதெல்லாம் மந்திர சிந்தனை  என தோன்றும் ? இது ஒரு அளவுடன் இருப்பது நல்லதா ?

# மந்திர சிந்தனை என்ன என்றே புரியவில்லை.  ஜபத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. 

& தியானமா? சில சமயங்களில் தியானம் மன அமைதியைக் கொடுத்துள்ளது. 

15, நீதி கிடைப்பது பழிக்குப்பழி இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கா ?

$ அவரவர் மன நிலையால் மாறுபடும்.

 # இரண்டும் ஒன்றல்ல. சில சமயம் அநீதிக்குப் பரிகாரம் / நஷ்ட ஈடு தேவையானதாக இருக்கும். 

& நீதி =  slow process.  அறிவுபூர்வமானது. தவறுகள் நடக்க சந்தர்ப்பம் குறைவு.    பழிக்குப்பழி = quick process. உணர்வுபூர்வமான எதிர் வினை. தவறுகள் நடக்க சந்தர்ப்பங்கள் அதிகம். 

வல்லிசிம்ஹன் :

1, கிழமைகளில் நம்பிக்கை,  அவநம்பிக்கை உண்டா?

 $ செவ்வாய்க்கிழமை சந்தை கூடும் என்றால் புதன் கிழமை போகலாகுமா? பொது வாழ்க்கையில் இருக்கும் நடைமுறைகளை மாற்றாத வரை கிழமைகள் நம் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதில்லை.
ஆகையால் நம்பிக்கை அவநம்பிக்கை என்ற கேள்விக்கு இடமில்லை.

 # கிடையாது. 

& ஏதோ கொஞ்சம் உண்டு. 

2, என்னைப் பொறுத்த வரையில் புதன் மேல் ஒரு பயம் உண்டு.
அனேக நெகடிவ் விஷயங்களைக் கண்டதனால்.....

$ 3 blade razor வருவதற்கு முன் சுமார் 60 வருடங்களுக்கு முன் பள்ளி ஆசிரியர்கள் சில குறிப்பிட்ட நாட்களில் கோபம் கொள்வதைப் பார்த்திருக்கிறோம்.

& எனக்கு புதன் கிழமைகள்தான் நல்ல பொழுதுபோக்கு! 

அதிரா :

கெள அண்ணன் என் கொஸ்ஸனையும் நோட் பண்ணிக்கோங்க.. இது ஒன்றுதானே என கைதவற விட்டிடாதீங்கோ கர்ர்ர்ர்:))..

1. கில்லர்ஜியின் போஸ்ட் பார்த்ததும், எனக்குள் எழுந்த கேள்வி இது.. ஒரு பேய்க்கு, இன்னொரு பேயைத் தெரியுமோ? அதாவது கண்ணுக்கு தெரியுமோ? அவர்கள் ஒற்றுமையாக இருப்பினமோ? பேசிக்கொள்வார்களோ? பயப்பட மாட்டினமோ?:)).

$ அப்போ என்னை எல்லோரும் பேய், பிசாசு என்று சொன்னதெல்லாம் பொய்தானா?

 # கொஞ்ச நாளைக்கு பேய்களை நிம்மதியாக அலைய விடுங்கள். 

& பேய் அறியும் பேயின் கால். பேய்கள் ஒற்றுமையாக இருந்தால்தான் மனிதன் பயப்படுவான். ஒரு பேய்க்கும் இன்னொன்றுக்கும் சண்டை என்றால், மனிதன் அதில் ஏதாவது ஒன்றின் கட்சியில் சேர்ந்து, இன்னொரு பேயை கவிழ்க்க முயல்வான்! 

2. தண்ணி மட்டும் குடிச்சே ஒருவரால் பல நாட்கள் இருக்க முடியுமோ?

$ முடியும். வெகு என்பது எவ்வளவு நாள்? 3 வாரம்?

# சில நாட்கள் இருக்கலாம்.

& யார் அந்த ஒருவர்? 


நெல்லைத்தமிழன் : 

கேள்வி 3. ஒரே கேள்வி என்று சொல்லிவிட்டு ரெண்டு கேள்வி கேட்கிறவங்க, கணக்கில் A வாவது (டி அல்ல) வாங்கியிருக்க வாய்ப்பு உண்டா?

# "ஒரு விஷயம்" என்று பலதையும் சொல்வது இயல்பானதுதான். அது பெரிய தவறு என்று நினைப்பதுதான் ஆராய்ச்சிக்குரியது.  

& ஹா ஹா ! கணக்குல, தமிழ்ல எல்லாத்துலேயும் D+ வாங்கினவங்க அவங்க! கராத்தேயிலும் ஏதாவது பெல்ட் வாங்கியிருப்பாங்களோ! வாங்க ஓடிடலாம்! 

பானுமதி வெங்கடேஸ்வரன் :


குழந்தைகள் எப்போது உங்களை கவர்கிறார்கள்?
a. ) படிப்பில் சிறப்பாக விளங்கும் பொழுது
b.)  பாட்டு,படிப்பு,நடனம்,பேச்சு என்று extra curricular activitiesகளில் தூள் கிளப்பும் பொழுதா?
c.)  விஷமம் செய்யும் பொழுதா?
d.)  அவர்கள் சகாக்களோடு விளையாடும் பொழுதா?

# குழந்தைகள் எப்போதும் கவர்கிறார்கள்.  அதிகபட்சமாக விளையாடும் போது. ஆனால் இதெல்லாம் நபருக்கு நபர் வேறுபடும். 

& கள்ளமில்லா சிரிப்பாலும், வெளிப்படையான பேச்சாலும். 

தந்திரம், சாமர்த்தியம் என்ன வித்தியாசம்?
               
# எனக்கு வேறுபாடு தெரியவில்லை. பேச்சளவில் பார்க்கும்போது தந்திரம் என்பதில் ஒரு அத்துமீறல் அல்லது துடுக்குத்தனம் இருக்குமோ என்று தோன்றுகிறது.


$ தந்திரம்=cunning
சாமர்த்தியம்=clever
எனலாம்.



தந்திரம் : " காக்கா காக்கா, நீ இம்புட்டு அழகா இருக்கியே, ஒரு பாட்டு பாடேன் "

சாமர்த்தியம் :  (வடையைத் தின்று முடித்துவிட்டு ) " கா, கா , கா ..... ஆகாரம் உண்ண எல்லோரும் ஒன்றாக  அன்போடு ஓடிவாங்க ... " 

சீர்காழி கோவிந்தராஜன் குரலில் காதல் பாட்டையும், எஸ்.பி.பி. குரலில் பக்திப் பாடலையும் ரசித்திருக்கிறீர்களா?

# இதற்கு என்னிடம் விடை இல்லை. என் ரசனைப் பட்டியலில் மெல்லிசைக்கு சொற்ப இடம்.

& ஓ ! ரசித்ததுண்டு. 'அமுதும் தேனும் எதற்கு '  ' அருணாச்சலனே ஈசனே'

நெல்லைத் தமிழன்: 


1. தவறு செய்தவன் அதிலும் கொடிய தவறு செய்தவன் என்று தெரிந்தும் நீதிக்கெதிரான வாதங்கள் வைக்கும் வக்கீல்கள், சமுதாயக் குற்றங்கள் பெருக முதல் காரணம் என்று சொல்ல முடியுமா?  

 # வக்கீல்களின் உத்யோக தர்மம் கட்சிக்காரரின் நலன் சட்டத்தை சரியாக பயன்படுத்தாததால் பாதிப்படையாமல் பார்த்துக் கொள்வது. உத்யோக லட்சியம் நிறைய சம்பாதிப்பது. உத்யோக லாபம் கேஸில் வெற்றி பெறுவது.  தொழில் நேர்மையற்ற வக்கீல், நீதி"யரசர்", டாக்டர், போலீஸ்காரர் முதலிய யாரானாலும் சமூகத்துக்கும் தனிநபருக்கும் பெரும் தீங்குதான். 


2.  பாலியல் பலாத்கார குற்றங்களில், சிறார் என்று சொல்லி ஒரு கயவனை விடுதலை செய்வது, சிறார்கள் பாலியல் குற்றங்கள் செய்ய அரசு அனுமதிக்கிறது என்பதைப் போலல்லவா இருக்கிறது. இதில் சாமானியனுக்கு என்ன நீதி கிடைக்கும்?   

# சட்டம் அறியாமல் தவறிழைத்த சிறுவர்களுக்கு சில சலுகைகள் காட்டப்படுவது நியாயம் இல்லை எனச் சொல்ல முடியாது.


3.  கிராமத்துப் பஞ்சாயத்தில்-ஆலமரத்தடி  நீதி தேவதை இன்னும் மிகச் சிறப்பாகவும் வேகமாகவும் நீதியைப் பெற்றுத்தந்தார் என்பதில் உங்களுக்குச் சந்தேகம் உள்ளதா?

 # நீங்கள் சினிமா பஞ்சாயத்து அடிப்படையில் தான் இப்படிச் சொல்ல முடியும்.


ஒரு பொறுப்புள்ள அரசியல் அமைப்புப் பதவியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள், அரசியல் பதவிகளுக்கு வருவது நியாயமான ஒன்றா? (உ.நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள் கவர்னர், நியமன எம்.பி போன்றவர்களாவது)

# ராஜ்யசபா என்பது அடிப்படையில் சமூகத்தில் பல துறைகளைச் சார்ந்த மேன்மக்கள் இருக்க வேண்டிய இடம்.  அந்த வகையில் சட்டம் இயற்றும் சபைக்கு தலைமை நீதிபதி நியமனத்தில் தவறு ஏதும் இல்லை.  

கவர்னர் பதவியில் நீதிபதி அரசியல் சாசனத்தை அறிந்து செயல் படலாம்.  பதவி "பரிசாக" தகுதியற்றவருக்குத் தந்தால்தான் ஆட்சேபம் எழ வேண்டும்.
          
மத்தவங்க அவங்க குற்றச் செயல்களுக்காக தண்டிக்கப்படும்போது நாம இரக்கப்படுவதும், அதே குற்றச் செயல் நமக்குச் செய்யப்பட்டிருந்தால் அவர்கள் மீது நாம கோபப்படுவதும் எந்த விதமான மனநிலை?

# மிக இயல்பான எங்கும் காண்கிற மனநிலைதான்.   எந்த சூழ்நிலையிலும் ஒரு உயிர் "பறிக்கப்" படுவது மனதை என்னவோ செய்கிறது.  அந்த அபலைப் பெண்ணின் தாய் கூட தன் "மகிழ்ச்சி"யை இந்த அளவு பொதுத் தளத்தில் சொல்லியிருக்க வேண்டாம் என்று தான் தோன்றுகிறது.

=======================================

7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்கள் பற்றி வாசகர்கள் கருத்துரைக்கவும். எனக்குத் தெரிந்த ஏழாம் எண்காரர்கள்  எம் எஸ் சுப்பலக்ஷ்மி, வாஜ்பாய். 

       
=======================================
                           

191 கருத்துகள்:

  1. தாளாற்றித் தந்த பொருள் எல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு..

    நலம் வாழ்க...

    பதிலளிநீக்கு
  2. விடைகளைப் படிக்கும் போதே
    தலை சுற்றுகின்றது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரவாயில்லையே, சட்டென திரும்பி கடிகாரத்தில் மணி பார்க்க வேண்டும் என்றால் சிரமப்படவேண்டாம்!

      நீக்கு
    2. //ஸ்ரீராம்.25 மார்ச், 2020 ’அன்று’ முற்பகல் 6:43
      பரவாயில்லையே, சட்டென திரும்பி கடிகாரத்தில் மணி பார்க்க வேண்டும் என்றால் சிரமப்படவேண்டாம்!//

      ஹையோ ஹையோ இந்தக் கொரொனாக் காலத்திலயும் போய்ப் பழைய ஜோக்கையே சொல்லிக்கொண்டு:))...... ஹா ஹா ஹா..

      நீக்கு
    3. சரி - அப்போ இந்த ஜோக்கைக் கேளுங்க.
      " டாக்டர் - தலை சுத்துது டாக்டர்!"
      " முதுகு தெரியுதா?"

      நீக்கு
    4. " டாக்டர் - தலை சுத்துது டாக்டர்!"
      " முதுகு தெரியுதா?"
      - உங்க முதுகும் தெரியுது, அதுக்குப் பின்னால முறைச்சுக்கிட்டு நிற்கிற உங்கள் இறந்துபோன மனைவியும் தெரியுது டாக்டர்.

      நீக்கு
    5. ஹா ஹா ஹா
      டாக்டர் இந்த ஒபரேசனுக்கு முதல் ஒருக்கால் இந்த ஹொஸ்பிட்டலைச் சுத்திப் பார்க்க ஆசையாக இருக்கு....

      கொஞ்சம் பொறுங்கோ... என்ன அவசரம், ஒபரேசனுக்குப் பிறகு, இந்தக் ஹொஸ்பிட்டலைத்தானே சுத்தி சுத்தி வரப்போறீங்க:)...

      ஹா ஹா ஹாஅ

      நீக்கு
  3. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் மனப்பூர்வமாக ஆண்டவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா...    காலை வணக்கம், நன்றி.   போன பாஹ்வில் எல்லாம் உங்களைக் காணோமா, நான்தான் சரியாய்ப் பார்க்கவில்லையா?

      நீக்கு
    2. பிரார்த்தனைகளுக்கு நன்றி.

      நீக்கு
    3. வணக்கம் சகோதரரே

      ஆம் போன வாரம் வெள்ளி,சனி ஞாயிறு, நேற்றைய செவ்வாய் என வரிசையாக விடுமுறை எடுத்து விட்டேன். நடுவில் திங்கள் வந்து பானுமதி சகோதரிக்கு (சப்பாத்தி அல்வா பதிவு) பாராட்டுகள் தந்தேன். தாங்களும் அக்கறையாக கவனித்தமைக்கு மிக்க நன்றி.

      நேற்றைய ரமா சகோதரி அவர்களின் கதை இப்போது படித்தேன். நன்றாக உள்ளது. குழந்தைகளை நம்மால் முடிந்த அளவுக்கு செம்மையாக வளர்த்து விட்டால் நல்லதுதான்."ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?" என்ற பழமொழிப்படி சிறு வயதிலேயே இத்தகைய நீதி போதனைகள் அவசியம்தான். சகோதரிக்கு பாராட்டுக்கள்.(இதை அங்கே தெரிவித்தால் கவனிக்க சிரமாகயிருக்குமே என இங்கே கூறி விட்டேன்.)

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    4. இந்த உங்கள் பாராட்டை திருமதி ரமா ஸ்ரீனிவாசனும் படித்திருப்பார் என்று நம்புகிறேன்.

      உங்கள் பின்னூட்டங்களை வெவ்வேறு தளங்களில் படித்தபோது எபியில் அக்கா கமெண்ட்டைக் காணோமே என்று தோன்றியது.  அதனால் கேட்டேன்!

      நன்றி கமலா அக்கா.

      நீக்கு
    5. ////உங்கள் பின்னூட்டங்களை வெவ்வேறு தளங்களில் படித்தபோது எபியில் அக்கா கமெண்ட்டைக் காணோமே என்று தோன்றியது. அதனால் கேட்டேன்!///

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) விடவே மாட்டார் போலிருக்கே:)) கீசாக்காவுக்குத் தம்பியேதேன்ன்ன்ன் ஹா ஹா ஹா ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:)).. நான் சிரிக்கப்போகிறேன்ன்:)).. இ... தோஓஓஓஓ:))

      நீக்கு
    6. ஹா ஹா. ஊரடங்கிய இந்த நேரத்தில், ஊர் வம்பஸ் கவலை மறந்து பொழுதை போக்க நன்றாகத்தான் இருக்கிறது அதிரா சகோதரி.

      நீக்கு
  4. அன்பின் துரை மற்றும் அனைவருக்கும் இனிய
    காலை வணக்கம்.
    கேள்விகள் பதில்கள் எல்லாம் உயர்ந்த பாதையில் சஞ்சரிக்கின்றன.

    என் கேள்விக்கு நான் எதிர்பார்த்த பதில் வரவில்லை.
    ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு அனுபவம்
    ஆராய்ச்சி தனியாக மேற்கொள்ள வேண்டியதுதான்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏழாம் நம்பர் ஜீசஸ் நம்பர் என்று சொல்வார்கள்.
      நம் ஊர்க் கமல்ஹாசனும் நவம்பர் 7 தானே.

      நீக்கு
    2. வல்லிம்மா.... ஜீசஸ். எங்கே.... நம்ம ஊரு உலக்கை கமலதாசன் எங்கே.... காலையிலேயே படிக்க பகீர் என்றிருக்கிறது... ஹா ஹா ஹா

      நீக்கு
    3. இன்ன பதில்தான் வரவேண்டும் என்று நினைத்தீர்களா திருவேங்கடவல்லிம்மா?!  அனுஷ் கூட ஏழாம் நம்பர்தான்!  மறந்து விட்டீர்களே...

      நீக்கு
    4. ஆ ! மறந்துட்டேனே! (வடை போச்சே!)

      நீக்கு
    5. இந்த ‘ஜீசஸ் நம்ப’ரில் பிறந்தவர்களே சரோஜா தேவி, ஹேமமாலினி, கட்ரீனா கைஃப் !

      நீக்கு
    6. நடிகைகளின் லிஸ்டுகளை எழுதி, கிடைத்த கிளு கிளு படங்கள் வெளியிடும் வாய்ப்பை நழுவ விட்டுவிட்டேனே என்று கேஜிஜி சாரை யாரும் வருத்தப்பட வைக்காதீர்கள். (எனக்கென்னவோ வேண்டுமென்றே அ படம் வெளியிடலைனு நினைக்கிறேன். ஹா ஹா ஹா)

      நீக்கு
    7. பத்த வெச்சுட்டியே பரட்ட!

      நீக்கு
    8. //இன்ன பதில்தான் வரவேண்டும் என்று நினைத்தீர்களா திருவேங்கடவல்லிம்மா?! //  திருவேங்கட வல்லிம்மா? சென்ற வாரம் வல்லி அக்கா தனக்கு புதன் கிழமை ராசியில்லை என்று சொல்லியிருந்தார்கள். அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ள விரும்பியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். வல்லி அக்கா சொல்வதை வைத்துப் பார்க்கும் பொழுது, அவருக்கு புதன் பாதகாதிபதியாக இருக்கலாம். மேலும் அவருடைய பிறந்த ஜாதகத்தில் புதன் இருக்கும் இடம், எந்த நட்சத்திரத்தின் காலில் நிற்கிறார், எந்தெந்த கிரகங்களால் பரக்கத் படுகிறார் போன்ற விஷயங்கள் இருக்கின்றன. அவருடைய ஜாதகத்தை பார்க்காமல் சொல்ல முடியாது. 

      நீக்கு
    9. எந்தெந்த கிரகங்களால் பார்க்கப்  படுகிறார் என்று திருத்திக் கொள்ளவும். 

      நீக்கு
    10. அட! ஜாதகம் பார்க்கத் தெரியுமா உங்களுக்கு?

      நீக்கு
    11. ஜாதகத்தைக் கூரியரில் அனுப்பிவிட்டீர்களா!

      நீக்கு
    12. //என் கேள்விக்கு நான் எதிர்பார்த்த பதில் வரவில்லை.
      ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு அனுபவம்
      ஆராய்ச்சி தனியாக மேற்கொள்ள வேண்டியதுதான்:)//

      கரீட்டு வல்லிம்மா.. எனக்கும் சில சமயங்களில் இப்படித்தான், நம் மனது திருப்திப்பட மறுக்கும்:))

      நீக்கு
    13. // ஜாதகத்தைக் கூரியரில் அனுப்பிவிட்டீர்களா!// ஒரு கேள்விக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தால்தான் பதில் சொல்வார்களாம்!

      நீக்கு
    14. அன்பு பானுமா,
      மிக மிக நன்றி. அரவத்துக்குப் பிறகு நான்பயப்படுவது இந்த புதனைப் பார்த்துதான்.
      ஆதரவாகச் சொன்னதற்கு நன்றி.
      உகாதியும் அமாவாசையும் சேர்ந்த நாளில் பிறந்ததாகச் சொல்வார்கள்.
      வெறும் ஆவலாதி தான்.
      பாதை வகுத்தபின்னே பயந்தென்ன லாபம். பாடல் மாதிரி,
      இனி என்னை இறைவன் பாதுகாப்பாக அழைத்துச் செல்வார்
      என்று நினைக்கிறேன்..

      நீக்கு
    15. எல்லோரும் இனிதாக, நலமாக வாழ வேண்டும்.

      நீக்கு
  5. காலை வணக்கம் அனைவருக்கும்.

    கேள்வி பதில்களைப் படித்துக்கொண்டிருக்கிறேன்.

    குழந்தைகள் எப்போதுமே என்னைக் கவர்வார்கள், ஆனால் வயதுக்கு மீறிய பேச்சு, மனப்பாடம் செய்து போட்டியில் அனுபவத்துக்கு மீறிய பெரிய விஷயங்கள் சொல்லும்போது, இயல்புக்கு மாறாக பெரியவர்கள் பேச்சு பேசும்போது, எனக்கு ரசிக்க முடியாது. குழந்தையின் இயல்பை முறிக்க முயலும் பெரியவர்களை எண்ணி எரிச்சல்தான் வரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் நெல்லை.   உங்கள் கருத்தில் எனக்கும் உடன்பாடு!

      நீக்கு
    2. சிலசமயங்களில், the so-called ‘பெரியவர்கள்’ குழந்தைகளுக்கு வழிகாட்டுவது என்பது, குருடன் கண் நன்றாகத் தெரிபவனுக்கு வழி சொல்வதைப் போன்றதாக அமைந்துவிடுகிறது!

      நீக்கு
    3. பெரியோரெல்லாம் பெரியரும் அல்லர்;
      சிறியோரெல்லாம் சிறியரும் அல்லர்.
      அதனால்தான் பெரியோருக்கு சின்ன ர
      சிறியோருக்கு பெரிய ற!

      நீக்கு
    4. //ஆனால் வயதுக்கு மீறிய பேச்சு, மனப்பாடம் செய்து போட்டியில் அனுபவத்துக்கு மீறிய பெரிய விஷயங்கள் சொல்லும்போது, இயல்புக்கு மாறாக பெரியவர்கள் பேச்சு பேசும்போது, எனக்கு ரசிக்க முடியாது.// correct!

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    இன்றைய மன கலவரங்களில் பண்டிகைகள் கொண்டாடும் எண்ணங்கள் குறைந்திருந்தாலும், உகாதி பண்டிகை கொண்டாடும் அனைவருக்கும் இன்றைய உகாதி வருட வாழ்த்துகள்.

    கேள்வி பதில்கள் எப்போதும் போல் அனைத்தும் அருமை. ஏழாம் எண்ணில் பிறந்தவர்கள் பற்றி பதிவில் படித்து தெரிந்து கொள்ள முடியவில்லை. வரும் அனைவரின் கருத்துக்களையும் அறிய ஆவலாக உள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் கமலா அக்கா...   அனைவருக்கும் இன்றைய சூழல் என்பது மனக்கிலேசத்தைக் கொடுத்திருக்கிறது.  சீக்கிரம் நிலைமை சரியாக வேண்டும்.  அதற்கு மக்கள்தான் ஒத்துழைக்க வேண்டும்.  உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.

      நீக்கு
    2. சத்தியம் காப்போம், பத்தியம் காப்போம்.

      நீக்கு
  7. உகாதி பண்டிகை வாழ்த்துகள். அந்தப் பண்டிகைக்குச் செய்யும் சிறப்பு உணவு என்ன என்ன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பண்டிகையை நினைவுபடுத்தாதீர்கள். பையைத் தூக்கிக்கொண்டு வெளியே ஓடிவிடப்போகிறார்கள்!

      நீக்கு
    2. வெளில போனா போலீஸ் அடி உண்டாமே... இந்த சப்ஜெக்ட் பற்றி இன்று இங்கு குறிப்பிடறேன்.

      நீக்கு
    3. //..வெளில போனா போலீஸ் அடி உண்டாமே... இந்த சப்ஜெக்ட் பற்றி இன்று இங்கு குறிப்பிடறேன்.//

      கொரோனா காலத்தில் சட்டத்தின் கீழ் வர மறுப்பவருக்கு, குஜராத் போலீஸ் கொடுத்த ‘on the spot' தண்டனையின் படத்தை என் பக்கத்தின் ‘பொறுப்பற்று அலையும் Covidiots!' -ல் இப்போது இணைத்துள்ளேன்! நேரமிருப்பின் பார்க்கவும்..

      நீக்கு
    4. //நெல்லைத்தமிழன்25 மார்ச், 2020 ’அன்று’ முற்பகல் 7:18
      உகாதி பண்டிகை வாழ்த்துகள். அந்தப் பண்டிகைக்குச் செய்யும் சிறப்பு உணவு என்ன என்ன?///

      ஆஆஆஆஆஆ கொஸ்ஸன் கொஸ்சன்:)) ஹா ஹா ஹா..

      நீக்கு
  8. சீர்காழி குரலில் காதல் பாட்டு...... - இது தமன்னா உடலும் சிவாஜி நடையும் என்பதுபோல கொடூரமான சிந்தனையா இருக்கே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன இப்படி சொல்லி விட்டீர்கள்!...

      சீர்காழி குரலில் காதல் பாட்டு...

      குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவை நிறையவே இருக்கின்றன... என்ன அவையெல்லாம் தனி ஒரு ரகமானவை...


      அமுதும் தேனும் எதற்கு?..
      நீ அருகினில் இருக்கையிலே - எனக்கு!...

      நீக்கு
    2. சீர்காழி - மிக அருமையான குரல். அவருடைய நடத்தை (அதாவது தன்னுடன் இருக்கும் குழுவினருக்கும் ஒவ்வொரு பாராட்டையும் கிடைக்கச் செய்வார்.... நல்ல மனிதர்) மனதில் நிற்கும். இசையுலகில் முன்னேற அவர் மிகவும் கஷ்டப்பட்டிருப்பார். நான் அவருடைய பாடல்களின் ரசிகன். (அதனால் அவரைக் குறைத்துச் சொல்லும் எண்ணம் இல்லை).

      பொதுவா காதல் பாடல்கள்னா, எஸ்பிபி, ஏஎம் ராஜா-ஜிக்கி போன்றவர்கள்தாம் நினைவுக்கு வருவர். டி.எம்.எஸ்-சுசீலா ஜோடியும் காதல் பாட்டுகளுக்கு ஓகே-என்னுடைய முந்தைய ஜெனெரேஷனுக்கு என்பது என் அபிப்ராயம். (நடிகர் விஜய் கூட ஒரு தடவை, எஸ்பிபி குரல் வேண்டாம், அது பழசு..வேறு புதுப்பாடகர்களைப் போடுங்கள் என்று சொல்லி எஸ்பிபியின் மன வருத்தத்தைப் பெற்றுக்கொண்டாராமே)

      நீக்கு
    3. சினிமா கிசு கிசு வாசகர்தான் பதில் சொல்லவேண்டும்.

      நீக்கு
    4. //சினிமா கிசு கிசு வாசகர்தான்// - அது கொஞ்சம் கஷ்டம். அவர் செய்த அல்வா மீந்து போனதால் அதை வைத்து போளி அல்வா செய்தாராம். அடுத்த வாரத்துக்கு எபி திங்கக் கிழமைக்கு எழுதி அனுப்புவதில் மும்மரமாக இருக்கிறார்.

      நீக்கு
  9. எல்லோருக்கும் இனிய யுகாதி நல்வாழ்த்துகள்! பிறக்கும் புது ஆண்டு எல்லோருக்கும் நன்மையை கொண்டு வர இறைவனை வேண்டுகிறேன். 

    பதிலளிநீக்கு
  10. ஒரு காலத்தில் தமிழகத்திலும் யுகாதிதான் புத்தாண்டாக  கொண்டாடப் பட்டதாம். நாயக்கர்கள் ஆண்ட காலமாக இருக்குமோ? 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிசய தகவலாக இருக்கே. தமிழ்ப் போராளிகள் என்ன சொல்வார்களோ!

      நீக்கு
    2. கேஜிஜி சார்... 'நாயக்கர்கள்' என்று சொன்னால் கொஞ்சம் குறைவு (தமிழினம் அல்ல என்ற எண்ணம்) என்பதுபோல உங்கள் பின்னூட்டம் தொனிக்கிறது. உண்மையில், அந்நியப் படையெடுப்புகளினால் (முஸ்லீம்) நமது கோவில்கள், சனாதன தர்மம் பழுதுபட்டுக் கிடந்தது. அதை மீட்டெடுத்து கோவில்களை புனருத்தாரணம் செய்து மீண்டும் தழைக்கச் செய்தவர்கள் நாயக்கர்கள். அவர்கள் இந்து தர்மத்துக்குச் செய்த சேவை அளவிடற்கு அரியது என்பது என் எண்ணம்.

      இப்போதும் எந்தக் கோவில்களிலும் அல்லது திவ்யதேசங்களிலும், கொடையோ இல்லை மடமோ இருந்தால் அதன் பெயர் அல்லது அந்தக் கொடையை அளித்தவர் யார் என்று பார்த்தால், எதோ 'செட்டி' என்று முடியும், இல்லை தெலுங்கு பேசும் மக்களின் பெயராக இருக்கும் (.... நாயுடு என்பது போல).

      நீக்கு
    3. ஆம், உண்மை. நான் சொன்ன தமிழ்ப் போராளிகள் தை ஒன்றாம் தேதி தமிழ்ப் புத்தாண்டு என்று சொல்லும் போராளிகள்!

      நீக்கு
    4. //நான் சொன்ன தமிழ்ப் போராளிகள் தை ஒன்றாம் தேதி தமிழ்ப் புத்தாண்டு என்று சொல்லும் போராளிகள்!// - ஆனால் விவசாயிகளுக்கு ஒரு துரும்பையும் கிள்ளிப்போடாதவர்கள். நிலத்தினைக் கூறு போட்டு ப்ளாட் போட்ட இடத்தில் இடம் வாங்கிப்போடத் தயங்காதவர்கள்.... - என்றெல்லாம் சொல்ல வந்தீர்களோ? (நாராயண நாராயண)

      நீக்கு
  11. //உத்யோக தர்மம் கட்சிக்காரரின் நலன் சட்டத்தை சரியாக பயன்படுத்தாததால் // - இது எப்படி நியாயமாகும்? திருடனைப் பிடித்து போலீஸிடம் ஒப்படைக்காமல், என் தொழில் தர்மம் இது என்று, திருடனுக்கு தப்பிச் செல்லும் வழியைக் காண்பித்தல் எப்படி தர்மமாகும்? சட்டப் புத்தகத்தின் துணை கொண்டு, நீ கொலை செய்த போது, மனநிலை பாதிப்பு என்று ஒரு சர்டிஃபிகேட் வாங்கி கோர்ட்டிடம் கொடுத்தால், சட்டப்படி நீ விடுதலை ஆகிவிடலாம் என்று சொல்லிக்கொடுப்பதுதான் வக்கீலின் தர்மமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்குத் தெரிந்து வக்கீலின் தொழில் தர்மம் என்பது, குற்றம் சாட்டப்பட்டவரின் பக்கம் தர்மம் இருந்தால், அவர் செய்த குற்றச் செயல் அதர்மம் அல்ல என்ற உண்மை அவர் பக்கம் இருந்தால், அவர் பக்க நியாயத்திற்கு வாதாடுவதுதான். அதை விடுத்து கட்சிக்காரனின் பக்கம் வாதாடி, அவரை விடுவித்து, அவரிடமிருந்து பணம் வாங்கிக்கொள்வது அல்ல தொழில் தர்மம். பெரிமேசன் (ஏர்ல் ஸ்டான்லி கார்ட்னர்) கதைகளில் இந்த தொழில் தர்மத்தைக் காணலாம்.

      நீக்கு
  12. //நீதி = slow process. அறிவுபூர்வமானது. தவறுகள் நடக்க சந்தர்ப்பம் குறைவு. பழிக்குப்பழி = quick process. உணர்வுபூர்வமான எதிர் வினை. தவறுகள் நடக்க சந்தர்ப்பங்கள் அதிகம். // - அருமையான பதில். பாராட்டுகள். பழிக்குப் பழியில் உணர்வு வேலை செய்யும் அறிவு வேலை செய்யாது. அருமை.

    பதிலளிநீக்கு
  13. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    கேள்வி பதில்கள் ஸ்வாரஸ்யம். இந்த முறை கேள்விகள் சற்றே அதிகமோ?

    பதிலளிநீக்கு
  14. //அபலைப் பெண்ணின் தாய் கூட தன் "மகிழ்ச்சி"யை இந்த// - இதில் அர்த்தம் இருக்கிறது. தனக்கு ஏற்பட்ட தவறுக்காக, இன்னொரு உயிர் போவதில் என்ன மகிழ்ச்சியைப் பெற்றுவிட முடியும்? இதனால்தான் ஷரியா சட்டத்தில், குற்றவாளியிடமிருந்து, பாதிக்கப்பட்டவரின் இரத்த சம்பந்தம், 'இரத்தப் பணம்' பெற்றுக்கொண்டு குற்றத்தை மன்னிக்கமுடியும் என்று இருக்கிறது. நியாயமாக, என்ன இழப்பு ஏற்பட்டதோ அந்தத் தொகையைத்தான் கேட்கணும், ஆனால் அதற்கு எந்த அளவீடும் சொல்லப்படலை. குற்றவாளி அந்தப் பணத்தை காம்பன்சேஷனாகக் கொடுத்துவிட்டால், கோர்ட் விடுதலை செய்துவிடும்.

    இதைப் பற்றி உங்கள் அபிப்ராயம் என்ன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒருவகையில் பார்த்தால், நாட்டில் பணக்காரக் கொலைகாரர்கள் பெருகிவிடுவார்கள். கொலை செய்துவிட்டு, இரத்தப்பணம் கொடுத்துக் கொடுத்து கை சிவந்துவிடுவார்கள். ஏழைகள் கொலை செய்ய முடியாது தவிப்பார்கள். தண்டனைகள் கடுமையாக இருந்தால்தான் குற்றங்கள் குறையும்.

      நீக்கு
    2. அப்படி இல்லை கேஜிஜி சார்... ஒருவன் வண்டி ஓட்டி, தவறுதலாக இன்னொருவர் மீது ஏற்றிக் கொன்றுவிடுகிறார் என்றால், உடனேயே ஆக்சிடண்ட் செய்தவரைக் கைது செய்து சிறையில் வைத்துவிடும். அங்கெல்லாம் போலி வக்கீல்கள் பிஸினஸ் கிடையாது. சில மாதங்களிலேயே தீர்ப்பு வந்து உள்ளேயே இருக்க வேண்டியதுதான். அப்போ, செத்துப்போனவனின் நெருங்கிய ரத்த சொந்தத்தை, குற்றம் செய்தவரின் சார்பாக அப்ரோச் செய்வார்கள். அந்த நெருங்கிய சொந்தம், 'சரி.. எனக்கு 10 லட்சம் ரத்தப் பணம்' கொடுத்துவிடுங்கள் என்று சொல்லி அதனை குற்றவாளி ஏற்றுக்கொண்டால், பணம் வந்த பிறகு கோர்ட்டுக்குச் சொல்லி விடுதலை நடக்கும். பணம் பெறாமலேயே மன்னிக்கலாம். இல்லை, எந்தப் பணமும் தேவையில்லை நான் மன்னிக்கவே மாட்டேன் என்றும் சொல்லலாம்.

      தண்டனை கடுமையாக இருந்தால் குற்றம் குறையாது. நீதி ஸ்விஃப்ட் ஆக இருக்கணும். நிர்பயா மாதிரியான குற்றங்களில், குற்றம் சட்டத்தைவிடப் பெரிதாக ஆகிவிடுகிறது (சமூக மாரலை பாதிப்பதால்). அதனால் 18 வயதுக்கு சில நிமிடங்கள் குறைவு என்ற சட்டப் பாயிண்டெல்லாம் கூடாது. செய்த குற்றத்தின் அளவுதான் முக்கியம். 3 மாதங்களில் கேஸ் க்ளோஸ் செய்யப்பட வேண்டும். நம்ம நாட்டில் நீதி ஸ்விஃப்ட் ஆக இல்லை என்பது என் எண்ணம்.

      நீக்கு
    3. ///இதைப் பற்றி உங்கள் அபிப்ராயம் என்ன?//

      ஆஆஆஆஆஆஅ கொஸ்ஸன் மார்க்கூஊஊஊஊஉ:)) கெள அண்ணன் அடுத்த புதனுக்கு ரெடீஈஈஈ:)) நான் கலெக்ட் பண்ணித்தாறேன் கெள அண்ணன் நீங்க ஒழுங்கா குறிச்சுக்கோங்க அடுத்த புதனுக்கு:)) ஹா ஹா ஹா:))

      நீக்கு
    4. // நீதி ஸ்விஃப்ட் ஆக இருக்கணும். நிர்பயா மாதிரியான குற்றங்களில், குற்றம் சட்டத்தைவிடப் பெரிதாக ஆகிவிடுகிறது (சமூக மாரலை பாதிப்பதால்). அதனால் 18 வயதுக்கு சில நிமிடங்கள் குறைவு என்ற சட்டப் பாயிண்டெல்லாம் கூடாது.// நீங்க சொல்வது சரிதான்.

      நீக்கு
  15. //300 வயது என்றால் 60 வயதுவரை படிக்க வேண்டியது இருக்கும்//

    ஹா . ஹா.. ரசித்த பதில்.
    நான் இதுவரை பேயை பார்த்ததில்லை அதிரா தைரிய'ஜாலி'தான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேள்விகள், பதில்கள் அருமை. எனக்கும் இந்த பதில் ரசிக்கதக்கதாய் இருந்தது. அறுபது வயதிலும் கூட படிக்கச் செல்ல வேண்டிய நிர்பந்தம் கற்பனையில் ரசிக்க முடிகிறது.ஆனால் அப்போது அனைவரும் அறுபதிலும் கூட இளவட்டங்களாகத்தான் இருப்பார்கள். ஹா.ஹா.ஹா. இதற்கு முதலில் பூமி மாதாதான் போர் அடிப்பவர்களுடன் முன்னின்று அடிக்கடி போராட்டங்கள் நடத்துவார்.

      நீக்கு
    2. //கற்பனையில் ரசிக்க முடிகிறது// - என்னத்தை ரசிக்க முடியுதோ கமலா ஹரிஹரன் மேடம்... 260 வருடங்கள் ஒருத்தியுடன் வாழ்ந்து, அவ்வளவு வருடம் ஒருவர் செய்யும் உணவையே உண்டு, அவர்கள் பார்வையில், 260 வருடம் சமைத்துப் போடணுமா ஐயோ என்று நினைக்கும்படியாக - 300 வருட வாழ்க்கை இருந்துவிடுமோ?

      நீக்கு
    3. //260 வருடங்கள் ஒருத்தியுடன் வாழ்ந்து, அவ்வளவு வருடம் ஒருவர் செய்யும் உணவையே உண்டு, அவர்கள் பார்வையில், 260 வருடம் சமைத்துப் போடணுமா ஐயோ என்று நினைக்கும்படியாக - 300 வருட வாழ்க்கை இருந்துவிடுமோ?// ஹாஹா ! நெல்லை சான்ஸே இல்லை. ஆனால் நாம் இப்போது இருக்கும் 100 வயது என்னும் லிமிட்டை வைத்துப் பார்க்கிறோம். 300 வயது என்றிருந்தால் அது பழகி விடும்.   


      நீக்கு
    4. ஹா. ஹா. நீங்கள் (நெல்லை தமிழர்) சொல்வது போல் கொஞ்சம் போர்தான் அடிக்கும். ஆனால் 260 வருடங்கள் ஒட்டு மொத்தமாக ஏன் ஒரு(வர்)த்தியுடன் வாழ வேண்டும்? பிறப்பிலேயேவா இந்த பந்தம் உருவாகும்? 60வயது வரை கல்வியென்றால், அதன் பின் மேற்படிப்பு, வேலை, வாழ்க்கை ஸ்திரம், அதன் பின் கூடிவரும் நேரங்கள் என திருமண பந்தம் ஒவ்வொருவர் அதிர்ஷ்டத்தைப் பொறுத்து 100க்கும் மேலாகும். ஆக கூடுதலாக மேலும் 100 வருடங்கள் தொடரும் இந்த பந்தம். அதற்குள் அங்கும் இறைவனின் கணிப்புக்கள் உள்ளதல்லவா?

      ஆனால் சகோதரி பானுமதி வெங்கடேஷ்வரன் அவர்களின் பதில் உண்மை.. இப்போது நூறு வயதை பழக்கி இருப்பதை போல் (சாப்பிடுவதற்கும். சமையல் செய்து போடுவதற்கும்,பெண், ஆண், இல்லை ஆண், பெண் என முறையே பழகுவது போல்,) அந்த 300ம் பழகிதான் விடும்.ஹா.ஹா.ஹா.

      நீக்கு
    5. //நெல்லைத் தமிழன்25 மார்ச், 2020 ’அன்று’ முற்பகல் 10:26
      //கற்பனையில் ரசிக்க முடிகிறது// - என்னத்தை ரசிக்க முடியுதோ கமலா ஹரிஹரன் மேடம்... 260 வருடங்கள் ஒருத்தியுடன் வாழ்ந்து, அவ்வளவு வருடம் ஒருவர் செய்யும் உணவையே உண்டு, அவர்கள் பார்வையில், 260 வருடம் சமைத்துப் போடணுமா ஐயோ என்று நினைக்கும்படியாக - 300 வருட வாழ்க்கை இருந்துவிடுமோ?//

      அல்லோ நெல்லைத்தமிழன்:)) ஓவர் ஆசை உடம்புக்கு ஆகாதாக்கும்:)).. 300 வருடத்தில உங்களுக்கு 40 லயேயே திருமணமோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா அப்பூடி எனில் ஒரு 220 அல்லது 250 லதான் திருமணம் முடிக்க விடுவாங்க:)) அதுவரை பேரன்ஸ் ஐயும் சகோதரங்களையும் கவனிக்கோணுமாக்கும்.. ம்ஹூம்ம்:)) ஹா ஹா ஹா..

      நீக்கு
    6. ///KILLERGEE Devakottai25 மார்ச், 2020 ’அன்று’ முற்பகல் 8:44
      //300 வயது என்றால் 60 வயதுவரை படிக்க வேண்டியது இருக்கும்//

      ஹா . ஹா.. ரசித்த பதில்.
      நான் இதுவரை பேயை பார்த்ததில்லை அதிரா தைரிய'ஜாலி'தான்...//

      நோஓஓஓஓஓ நா இத ஒத்துக்க மாட்டேன்ன்:)) அப்போ அன்று போஸ்ட்டில் காரோட்டி வரும்போது முடிவில பேய் வருதே:) அதை எல்லாம் வென்றுதானே பரிசை வாங்கினதாகச் சொன்னீங்க:)) என்னை ஆரும் பேய்க்காட்ட முடியாதாக்கும்:)) கெள அண்ணன் உடனேயே பஞ்சாயத்தைக் கூட்டுங்கோ:))

      நீக்கு
    7. ஆர்டர், ஆர்டர், ஆர்டர். கோர்ட் தொடங்கட்டும்!

      நீக்கு
    8. /அப்பூடி எனில் ஒரு 220 அல்லது 250 லதான் திருமணம் முடிக்க விடுவாங்க:)) // - அதிரா... யோசித்துத்தான் எழுதுனீங்களா? திருமணம் முடியும் வரை பையனோ பெண்ணோ தம் பெற்றோர் வீட்டில்தான் இருப்பாங்க. 25-30 வயசு ஆகிறதுக்குள்ளேயே, அவங்க பத்து வருடம் அடல்டா இருப்பதையே தாங்க முடியலை (பெற்றோர் எதைச் செய்தாலும் கேள்வி கேட்கிறது என்றெல்லாம் ஹா ஹா. அப்பா இடது பக்கம் போ என்றால், வலது பக்கம் போய்ப்பார்த்தால் என்ன என்றெல்லாம் அடம் பிடிப்பது...). 200 வருடம் அடல்டோட வாழ்க்கையா? அம்மாவும் அத்தனை வருடங்கள் பசங்களுக்கு உணவு செய்துபோடணுமா? யோசிக்கவே அதிர்ச்சியான விஷயத்தை சர்வ சாதாரணமாகச் சொல்லிடறீங்க. ஹா ஹா ஹா

      நீக்கு
  16. கற்றலைவிட கற்பத்தலே சிறப்பு என்பது என் எண்ணம்.

    பதிலளிநீக்கு
  17. கேள்விகளும் பதில்களும் அருமை.

    ரசித்த பதில்கள்.



    //ஒன்றில்லாமல் மற்றொன்று இருப்பதற்கு வாய்ப்பில்லை.

    கிடைத்தது போதும் / அல்லது அதுவே அதிகம் என்ற எண்ணம் இருந்தால் போதும்.

    பேய் அறியும் பேயின் கால். பேய்கள் ஒற்றுமையாக இருந்தால்தான் மனிதன் பயப்படுவான். ஒரு பேய்க்கும் இன்னொன்றுக்கும் சண்டை என்றால், மனிதன் அதில் ஏதாவது ஒன்றின் கட்சியில் சேர்ந்து, இன்னொரு பேயை கவிழ்க்க முயல்வான்!


    ஓ ! ரசித்ததுண்டு. 'அமுதும் தேனும் எதற்கு ' ' அருணாச்சலனே ஈசனே'//

    குழந்தைகள் விளையாடுவதை ரசிப்பேன் .


    பதிலளிநீக்கு
  18. நையாண்டி தர்பார் என்னும் யூகி சேது நடத்திய நிகழ்ச்சிக்கு விருந்தினராக வந்த வக்கீல் சுமதியிடம் யூகி சேது," ஒருத்தன் கிரிமினல் என்று ஊருக்கே தெரிகிறது அவனுக்காக நீங்கள் எப்படி வாதாடுகிறீர்கள்? கான்ஷியஸ் என்று ஒன்று கிடையாதா?" என்று அவர் ஆட்டோ சங்கர் கேசில் அவர் ஆஜரானதை குறித்து கேட்டதற்கு அவர், "நான் என்னுடைய தொழிலுக்கு ஜஸ்டிஸ் செய்தால் போதும்" என்றார். என்னால் ஒத்துக் கொள்ள முடியாத விஷயம் இது.   

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதே, அதே. ஆனால், கோர்ட் / நீதிபதி குற்றவாளி சார்பில் ஒரு வக்கீலை நியமிக்க அதிகாரம் உண்டு. அப்படி நியமித்திருந்தால், வேறு வழி இல்லை.

      நீக்கு
  19. //தலையாட்டுதலுக்கும் ஜால்ராவுக்கும் வித்யாசம் இருக்கா ? // இந்த கேள்விக்கு # அளித்த பதிலையும், 
    4, நீங்கள் முதல் கேள்வியை படிச்சிட்டு அடுத்த கேள்விக்கு தாவுபவரா அல்லது ஆர்வக்கோளாறில் கடைசி கேள்வி என்னவா இருக்கும்னு அங்கே செல்பவரா ?// இந்த கேள்விக்கு & அளித்த பதிலையும் மிகவும் ரசித்தேன். 

    பதிலளிநீக்கு
  20. இன்றைக்கு கேள்விகள் அதிகமாக இருக்கின்றனவே. இதில் சில கேள்விகளை அடுத்த வாரத்திற்கு வைத்துக் கொண்டிருக்கலாமே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எ.பி. ஆசிரியர் கேஜிஜி சார்.. இன்னும் கொரோனா செய்திகளின் தாக்கத்துலயே இருப்பதால், அடுத்த வாரமும் உண்டு என்று நம்பாமல், இன்றைக்கே அரிசி பருப்பு வகையறாக்களை வாங்கிக் குவிக்கும் மக்கள் போல, இந்த வாரமே எல்லாவற்றிர்க்கும் பதில் அளித்துவிட்டார்.

      கேள்விகள் குறைவாக இருந்தால் 'நம்பர் ஜோசியம்' தலைப்பில் நிறைய எழுதலாம். ஆனால் அடுத்த வாரம் 1ம் நம்பர். என்ன செய்யப்போகிறாரோ...

      நீக்கு
    2. ஒன்றாம் எண்ணுக்கு ஏற்கெனவே சொல்லியாச்சு. Feb 19 ஆம் தேதி.

      நீக்கு
    3. //இன்றைக்கு கேள்விகள் அதிகமாக இருக்கின்றனவே. இதில் சில கேள்விகளை அடுத்த வாரத்திற்கு வைத்துக் கொண்டிருக்கலாமே?///
      கவலை வேண்டாம்ம்.. நான் மாட்டு வண்டில் அனுப்பியாவது என் செக்:) ஐ கூட்டி வந்திடுறேன், இன்று அவ ஜாட்டெல்லாம் ஜொள்ள முடியாது வந்தே தீரோணும்:)).. அவவிடம் இருக்குது கூடை கூடையாக:)) ஹா ஹா ஹா:))..

      நீக்கு
  21. ஏழாம் எண்ணில் பிறந்தவர்கள் கலை, மற்றும் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள்.  மண வாழ்க்கை அத்தனை இனிமையாக இருக்காது.  இவர்களில் சிலருக்கு தன்னை எரித்துக் கொண்டு உலகிற்கு வெளிச்சம் தரும் மெழுவர்த்தி போல வாழ்க்கை இருக்கும். பல மூத்த குழந்தைகள், மூத்த மருமகள்கள்  ஏழாம் எண்காரர்களாக இருப்பதை பார்த்திருக்கிறேன். இன்னும் சொல்லப் போனால் மற்றவர்களுக்கு உழைக்கும் பொழுதுதான் அவர்கள் வாழ்க்கை சிறக்கும். 
    இளம் இசையமைப்பாளர் அனிருத் கூட ஏழாம் எண்காரர் என்கிறது கூகுள்.  இளையராஜாவின் கூட்டு எண் ஏழு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏழிசைக்கும் ஏழாம் எண்ணுக்கும் நல்ல ராசி போலிருக்கு! நன்றி.

      நீக்கு
    2. ஏழாம் எண்ணைப்பற்றி நீங்கள் கூறியிருக்கும் விஷயங்களை தெரிந்து கொண்டேன். ஒரளவு ஒத்துதான் வருகிறது. நன்றி சகோதரி.

      நீக்கு
  22. ///
    நெல்லைத்தமிழன் :

    கேள்வி 3. ஒரே கேள்வி என்று சொல்லிவிட்டு ரெண்டு கேள்வி கேட்கிறவங்க, கணக்கில் A வாவது (டி அல்ல) வாங்கியிருக்க வாய்ப்பு உண்டா?

    # "ஒரு விஷயம்" என்று பலதையும் சொல்வது இயல்பானதுதான். அது பெரிய தவறு என்று நினைப்பதுதான் ஆராய்ச்சிக்குரியது.

    & ஹா ஹா ! கணக்குல, தமிழ்ல எல்லாத்துலேயும் D+ வாங்கினவங்க அவங்க! கராத்தேயிலும் ஏதாவது பெல்ட் வாங்கியிருப்பாங்களோ! வாங்க ஓடிடலாம்! ///

    ஹா ஹா ஹா ஹையோ காலையில எழும்பினதும் இது என் கண்ணில பட்டிட்டுதே:)) எல்லோரும் கொஞ்சம் ஒதுங்கி நில்லுங்கோ.. அதிரா தனியாகச் சிரிக்கப் போகிறேன்ன்ன்ன் ஹா ஹா ஹா:))..

    கீழே எவ்ளோ டீசண்ட்டாக ஜிந்திச்சு, ஓசிச்சுப் பல கேள்விகளைக் கேட்டிருக்கிறார்ர்:) அதை மானபங்கப் படுத்தவென்றே:)).. இப்பூடி ரகசியமாக நடந்த உரையாடலை இங்கு தூக்கிப் போட்டு அம்பலப்படுத்தலாமோ:)) ஹா ஹா ஹா புதன் கிழமையில மட்டும் கேள்விக்குறி போடாதீங்கோ.. கேள்விக்குறி போட்டிடாதீங்கோ என்றால் ஆரு கேய்க்கிறா.. ஹா ஹா ஹா என்னால முடியுதில்ல:)).. இது கொரொனாவை விட மோசமாக இருக்கே:))..

    கற்ரறக் ஒபரேஷன் கெள அண்ணனுக்குப் பண்ணிவிட்ட டொக்டருக்கு நான் கிஃப்ட் குடுக்கப்போறேன்:)).. இப்போ எல்லாமே கண்ணுக்குத் தெரியுதே:)).. ஹா ஹா ஹா

    சரி சரி நான் கதிரைக்காலைப்பிடிச்சு மேசைக்காலைப்பிடிச்சு சுவரைப் பிடிச்சு நோர்மலுக்கு வந்திடுறேன் இப்போ:)) ஹா ஹா ஹா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // கற்ரறக் // இதை நாலு தடவை சொன்னா என் பல்லுக்கு ஓபரேஷன் செய்யவேண்டியதுதான்!

      நீக்கு
    2. எதையும் ஒரு தடவைக்கு மேல பண்ணப்பிடாது, சொல்லப்பிடாது கர்ர்ர்ர்ர்ர்:)..

      நீக்கு
  23. //நெல்லைத்தமிழன்25 மார்ச், 2020 ’அன்று’ முற்பகல் 6:17
    வல்லிம்மா.... ஜீசஸ். எங்கே.... நம்ம ஊரு உலக்கை கமலதாசன் எங்கே.... காலையிலேயே படிக்க பகீர் என்றிருக்கிறது... ஹா ஹா ஹா//

    ஹா ஹா ஹா:))

    //ஸ்ரீராம்.25 மார்ச், 2020 ’அன்று’ முற்பகல் 6:45
    இன்ன பதில்தான் வரவேண்டும் என்று நினைத்தீர்களா திருவேங்கடவல்லிம்மா?! அனுஷ் கூட ஏழாம் நம்பர்தான்! மறந்து விட்டீர்களே...//

    ஹையோ ஹையோ:)) ஹா ஹா ஹா..

    //
    ஏகாந்தன் !25 மார்ச், 2020 ’அன்று’ முற்பகல் 10:16
    ஜாதகத்தைக் கூரியரில் அனுப்பிவிட்டீர்களா!//

    ஹா ஹா ஹா:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்வீட் அதிரா,இப்போதுதான் படித்துக் கொண்டு வருகிறேன்.
      @ஸ்ரீராம் நன்றி மா.
      ஆமாம் எதிர்பார்த்ததது அன்பு பானு வெங்கடேஸ்வரன்
      வழியாகக் கிடைத்தது.

      என் சுபாவப்படி, எந்த நிகழ்வுக்கும் பின்னால் இருக்கும் காரணத்தை அறிய
      மிக விருப்பம் உண்டு.
      சும்மா விட்டுவிடப் பிடிக்காது.
      தேடல் தொடரும்.

      நீக்கு
  24. //1, கற்றல் சிறப்பா? கற்பித்தல் சிறப்பா ?//
    கற்றலில் மகிழ்ச்ச்சி வராது:), ஆனா கற்பித்தலில் மகிழ்ச்சி கிடைக்கும்:)).

    //6, போதும் என்ற மனம் கிடைக்க என்ன செய்யணும் ?//
    போர்த்துக்கொண்டு படுத்து நித்திரை கொள்ளோணும்:)) ஒரு கட்டத்தில, படுத்தது போதும் எழும்பி ஒரு ரீ குடி என மனம் சொல்லும் ஹா ஹா ஹா:))..

    ///9, முந்திக்காலத்தில் சீப்பு பிரஷ் இல்லாத காலத்தில் எப்படி தலை வாரி இருப்பாங்க ?//

    ஹையோ ஹையோ.. அப்போ எங்கே தலை வாரினார்கள்... தலைமயிரெலலம் வாழை நார்போலவும் சணல் கயிறுபோலவும் திரண்டு திரண்டெல்லோ இருக்குமாம்.. படங்களில் பார்த்தோமே:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // போர்த்துக்கொண்டு படுத்து நித்திரை கொள்ளோணும்:)) ஒரு கட்டத்தில, படுத்தது போதும் எழும்பி ஒரு ரீ குடி என மனம் சொல்லும் ஹா ஹா ஹா:))..// அட! இது நல்லா இருக்கே!

      நீக்கு
  25. அனைத்து கேள்வி பதில்களும் அருமை... முதல் கேள்வி பதிலை செயல்படுத்திக் கொண்டிருக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  26. //வல்லிசிம்ஹன் :

    1, கிழமைகளில் நம்பிக்கை, அவநம்பிக்கை உண்டா?//
    நம் நாட்டிலும் இது உண்டு.. எனக்கு சரியாக எல்லாம் நினைவில்லை, நினைவில் உள்ளதைச் சொல்கிறேன்..

    ஞாயிற்றுக் கிழமை எனில் மலட்டுநாள், அன்று எதையும் செய்யக்கூடாது.

    செவ்வாய் - வெறுவாய் என்பினம், எதையும் ஆரம்பிக்கக்க்கூடாது.

    செவ்வாய் வெள்ளியில்.. வீட்டிலிருந்து பயணம் போகவோ அல்லது ஏதும் பொன் பொருள் குடுக்கவோ கூடாது என்பார்கள்.

    பொன் கிடைச்சாலும் புதன் கிடைக்காதெனவும் பழமொழி உண்டெல்லோ.

    வியாளனில் புது ஆடை அணிஞ்சால், அதிகம் இன்னும் கிடைக்கும் என்பினம்.

    திங்கள் புதன் வெள்ளி எல்லாம் மேலோட்டமாக நல்ல நாட்களாகவே நினைப்பதுண்டு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிழமைக் கவிஞர் அதிரா வாழ்க!

      நீக்கு
    2. @ வல்லிம்மாவுக்கும் - நான் எதைத் தொடங்கினாலும் வியாழன் அன்றுதான் தொடங்குவேன். அன்றுதான் புதிய ப்ராஜக்டுகளுக்கான ப்ரொபோசலை கையெழுத்திட்டு அனுப்புவேன். ஒருவேளை வியாழன் முடியவில்லை என்றால் ஞாயிறு. மற்ற நாட்களில் அதனைச் செய்ய மாட்டேன். அதிலும் புதிய ப்ராஜக்ட் வியாழன் அல்லது அது முடியாத பட்சத்தில் ஞாயிறு ஆரம்பிப்பதுபோலச் செய்வேன்.

      ராகு காலத்தில் பெரும்பாலும் மீட்டிங்குகளுக்குச் செல்ல மாட்டேன். அதிலும் முடிவு எடுக்கும் மீட்டிங்குகளுக்கு.

      எந்த ப்ராஜக்ட் ரிப்போர்ட் (மேலிட அனுமதிக்கு) அனுப்பினாலும் பக்கங்களின் கூட்டுத் தொகை 1ல் முடியும்படி என் ரிப்போர்ட்டுகள் இருக்கும். சில சமயம் எதுக்கு வெறும் கோடு போட்ட பக்கங்கள் கடைசியில் இணைத்திருக்கிறார் என்று சந்தேகம் வராதபடி இதனைச் செய்வேன். ஹா ஹா ஹா.

      நீக்கு
    3. இதுவும் ஒவ்வொருவரின் மனப் பொருத்தப்படிதான் அமையும்.
      நாங்கள் பொதுவஆக அமாவாசையில் எந்த நல்ல விசயமும் பண்ணுவதில்லை, ஆனா ஒரு மாமா ஒருவர் தக்கு அமாவாசைதான் பொருத்தம் என, அன்றுதான் திருமணம் முடித்தார்...

      நீக்கு
    4. பல வருடங்களுக்கு முன் ஒரு அஷ்டமி அன்றுதான் என் ரேஷன் கார்ட் புதுப்பித்தேன்.    ஒரு சௌகர்யம்.  கூட்டம் அதிகமில்லை.  இன்றுவரை எந்தப் பிரச்னையுமில்லை!

      நீக்கு
    5. அதிரா..   சிலபேர் அமாவாசையில் செய்தால் நல்லது என்று நினைப்பார்கள்.  சிலர் அமாவாசையில் வேண்டாம் என்று நினைப்பார்கள்.  சிலர் செவ்வாய்க்கிழமையில் எந்தக் காரியமும் செய்ய மாட்டார்கள்.  சிலர் முருகனுக்கு உகந்த நாள், எனக்கு நல்ல நாள் என்பார்கள்.  அவரவர் பழக்கம்...  அவரவர் நம்பிக்கை!

      நீக்கு
    6. வீட்டுக்கு வந்த பெண்ணை வெள்ளிக்கிழமைகளில் புகுந்த வீடு செல்ல அனுமதிக்க மாட்டார்கள்.  வீடு காலி செய்ய மாட்டார்கள்.  விளக்கு வைத்தபின் காசு தரமாட்டார்கள், உறைமோர் என்று கேட்டாலும் விளக்கு வைத்ததும் தரமாட்டார்கள்.  நிலையில் நின்று எதையும் வாங்கக்கூடாது என்பார்கள்.  ஒன்று உள்ளே வந்து விடவேண்டும், அலலது வெளியில் நின்று கொடுக்கல்/வாங்கல் செய்ய வேண்டும்! 

      நீக்கு
    7. அஷ்டமி நவமியிலே... தொட்டது நாசம் எனச் சொல்லிச் சொல்லியே வெருட்டிப் பழக்கிப்போட்டினம் என்னை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)

      நீக்கு
  27. //
    & யார் அந்த ஒருவர்?//

    நாங்கள் கொஸ்ஸன் கேட்டால், பதிலுக்குக் கொஸ்ஸன் கேய்க்கப்பிடாதாக்கும் கர்ர்ர்ர்ர்:))

    //
    குழந்தைகள் எப்போது உங்களை கவர்கிறார்கள்?//

    எங்கள் பிள்ளைகளாகட்டும், அடுத்தவர் பிள்ளைகளாகட்டும் என்னைக் கவர்வது எப்போதெனில், அவர்கள் பெரியவர்களுக்கு மரியாதை கொடுத்து, சொல்வதைக் கேட்டு, எதிர்ப்பேச்சுப் பேசாமல் அமைதியாக இருக்கும்போது மட்டுமே... நல்ல வளர்ப்பென நினைப்பேன்.

    எங்கட பிள்ளைகள் கெட்டிக்காரர்கள் எனக் கேட்கும்போது வரும் சந்தோசத்தை விட, எம்மிடம் நேரடியாகவே.. உங்கள் பிள்ளைகளைப்பார்க்க ஆசையாக இருக்கு, எவ்வளவு அடக்க ஒடுக்கமாக மரியாதையானவர்களாக இருக்கிறார்கள், சொல் பேச்சுக் கேட்கிறார்கள்.. மிக அருமையாக வளர்த்திருக்கிறீங்கள்... இப்படி பலர் சொல்லியபோதும் வந்த மகிழ்ச்சியே அதிகம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதே அதிரா குழந்தைகள் நன்றாக வளர்க்கப்பட்டிருக்கிறார்கள் எனும் போது வரும் சந்தோஷமே அதிகம்.

      முதலில் கவர்வது கௌ அண்ணன் சொன்னது போல அவர்களது கள்ளம் கபடமில்லா பேச்சும் அந்தச் சிரிப்பும் எனக்கு அது மிகவும் பிடிக்கும்...

      கீதா

      நீக்கு
  28. //2. பாலியல் பலாத்கார குற்றங்களில், சிறார் என்று சொல்லி ஒரு கயவனை விடுதலை செய்வது, சிறார்கள் பாலியல் குற்றங்கள் செய்ய அரசு அனுமதிக்கிறது என்பதைப் போலல்லவா இருக்கிறது. இதில் சாமானியனுக்கு என்ன நீதி கிடைக்கும்?///

    16 வயசுக்குக் கீழேதானே சிறார் எனச் சொல்லப்படுகிறது..
    இந்நேரம் செய்யப்படும் குற்றங்களுக்கு நிட்சயம் அந்த சிறார் காரணமாக இருக்க வாய்ப்பில்லை, ஆரோ ஒரு பெரியவர்களைப்பார்த்தோ அல்லது கேட்டோ தானே அக்குழந்தைக்கு அப்படி ஒரு எண்ணம் வந்திருக்கும்.. அதனால அதனை திருத்தி வெளியில் விடுவதே நல்லது என்பேன் நான்...

    இது கிட்டத்தட்ட 16 வயசுக்குக் கீழ்ப்பட்ட பெண்ணுக்கு திருமணம் செய்வதைப்போலாகும்.. அந்த வயசில நல்லது கெட்டது தெரியாது, ஏதோ ஆவ்வ் நல்லா இருக்கே இது எனத்தான் தோணும், ஆனா ஒரு 20 வயதாகும்போதுதான் உலகம் புரிஞ்சு, தன் மனதுக்குப் பிடிச்ச ஒருவரை நேசிக்கத் தொடங்குகின்றனர், இதனை கள்ளக் காதல் எனச் சொல்லி , அப்பெண்ணைச் சித்திரவதை பண்ணுகின்றனர், என்னைப்பொறுத்து இதுதான் தப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இந்நேரம் செய்யப்படும் குற்றங்களுக்கு நிட்சயம் அந்த சிறார் காரணமாக இருக்க வாய்ப்பில்லை, ஆரோ ஒரு பெரியவர்களைப்பார்த்தோ// - மேடம்.... இங்கு நிர்பயா கற்பழிப்பு குற்றம் செய்தவன், அந்தப் பெண்ணுக்குக் கொடும் செயலைச் செய்தவன், 18 வயது ஆகவில்லை என்பதால் சட்டப்படி தப்பித்தான், அவனுக்கு மாநில முதல்வர் 10,000 ரூபாய்களை அள்ளிக்கொடுத்து டைலர் கடை இல்லைனா அயர்ன் கடை வைத்துப் பிழைத்துக்கொள் என்று சொன்னார். அதைத்தான் இங்கு குறிப்பிட்டிருக்கிறேன்.

      நீங்கள் ஒருவேளை நீதிபதி ஆனால், 'என்றும் பதினாறுகள்' என்ன செய்தாலும் மன்னித்து விட்டுவிடுவீர்கள் போலிருக்கு. ஹா ஹா

      நீக்கு
    2. கடும் தண்டனை கிடைக்க வேண்டிய பெரியவர்கள், தப்பித்து விடுகிறார்கள் அல்லது பணத்தைக் கொடுத்து வெளியே வந்துவிடுகிறார்கள்....

      தலையை விட்டுப்போட்டு வாலைப்பிடிப்பது தப்பெல்லோ:)...
      16 ஐ என்றும் மன்னிக்கோணும் எல்லோரும் ஹா ஹா ஹா

      நீக்கு
    3. அதிரா அந்தச் சிறுவனும் அந்த நிர்ப்யா குற்றம் செய்ததில் ஒருவன். கூடா நட்பு.

      அவனை கண்டிப்பாகச் சீர்திருத்தப் பள்ளியில் போட்டிருக்க வேண்டும். அதன் பின் வெளியில் விட்டிருக்கலாம்...இப்போது வெளியில் விட்டது சரியாகபடவில்லை.

      கீதா

      நீக்கு
    4. இப்போதான் கீதா நேக்குப் புரிஞ்சது:), இந்தக் கேள்வி பதில் பகுதியில் உள்ள ஒரு பிரச்சனை, மனதில ஒரு விஷயத்தை நினைத்துக்கொண்டு, ஆனா அதைச் சொல்லாமல் பொதுக் கேள்விபோல கேட்கும்போது, விடையும் பொதுவாகத்தானே சொல்ல வரும், இப்போ நெல்லைத்தமிழன், இக்கேள்வியை நேரடியாக இந்தப்பிரச்சனையில் இப்படிச் செய்தது சரியோ எனக் குறிப்பிட்டுக் கேட்டிருந்தால்.. அது தப்பு எனத்தான் சொல்லியிருப்பேன்... பொதுவாக என நினைக்கும்போது, குழந்தைகளை சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி, திருத்தி வெளியே விடுவதுதானே சரி.. அப்படி நினைச்சேன்.

      இப்படித்தான் முன்பு அஞ்சுவும், மனதில ஒன்றை நினைச்சு, அதற்குப் பதில் தேடி, பொதுக் கேள்வியாக கேட்டு, பின்பு சொன்னவ, இதற்குத்தான் கேட்டேன், என, இனிமேல் ஆரும் ஒரு விசயம் பற்றிய கேள்வி எனில், அதைக் குறிப்பிட்டுக் கேட்டால் நல்லதெல்லோ..

      ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஸப்பாஆஆஆ... இதைவிட 23ம் புலிகேசியைப் பார்த்து முடிச்சிருக்கலாம் எனத் தோணுது:)) ஹா ஹா ஹா.

      நீக்கு
    5. //இந்தப்பிரச்சனையில் இப்படிச் செய்தது சரியோ எனக் குறிப்பிட்டுக் கேட்டிருந்தால்.. அது தப்பு எனத்தான் சொல்லியிருப்பேன்..//

      நாங்க கேள்வி கேட்பதே இப்படி உளவியல் ரீதியா போட்டு வாங்கத்தான் :) எனக்கு புரிஞ்சது நெல்லைத்தமிழன் எதை கேட்கிறார்னு :))))))) பட் மீ பிசியா இருந்ததில் ரிப்லி கொடுத்து அலெர்ட் பண்ணலை உங்களை :)

      நீக்கு
    6. @ pinju poetess உங்க பதிலை உங்க லக்ஸ்மி ராமசந்திரன்  கஸ்தூரி ,சின்மயிலாம் பார்த்தா அவ்ளோத்தேன் :) 

      நீக்கு
    7. நான் ஜொன்னனே மீ ஒரு அப்பாவீஈஈஈஈஈஈ:)) எதுவும் நேரடியாகச் சொன்னால்தானே புரியும்:)) கர்ர்ர்ர்ர்:))

      நீக்கு
  29. ///3. கிராமத்துப் பஞ்சாயத்தில்-ஆலமரத்தடி நீதி தேவதை இன்னும் மிகச் சிறப்பாகவும் வேகமாகவும் நீதியைப் பெற்றுத்தந்தார் என்பதில் உங்களுக்குச் சந்தேகம் உள்ளதா?//

    அம்மம்மா சொன்ன ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது.

    அம்மம்மா குழந்தையாக இருந்த காலத்தில், ஊரில் ஒரு களவு எனில்.. அதாவது அப்போது களவெனில், கோழி, ஆடு, கத்தி, அலவாங்கு, மண்வெட்டி.. இப்படி வெளியே இருக்கும் பொருட்கள் திருடுவது..

    இப்படி எனில் விதானையாரிடம்[கிராம சேவகர்] முறையிடுவர், சந்தேகத்தின் பேரில் ஆட்களை கைது செய்வினமாம், கோயிலில் சத்தியம் பண்ண வைத்தே கண்டு பிடிப்பார்களாம். முடியாத பட்சத்தில் பொலிஸ் ஐக் கூப்பிடுவினமாம், பொலிஸ் வந்தால் ஊரே நடுங்குமாம்.

    அபோ ஒருவர் ஆடு ஒன்ரைக் களவெடுத்திட்டாராம், அவரைக் கையும் களவுமாகப் பிடிச்சு விதானையாரிடம் கூட்டிச் சென்றார்களாம், அவர் எவ்வளவோ வெருட்டியும், கள்ளன் ஒத்துக் கொள்ள வில்லையாம். அப்போ விதானையார் சொன்னாராம், சரி கோயிலுக்கு வா கற்பூரம் கொழுத்தி சத்தியம் பண்ணு என...

    அயலட்டை மக்கள் எல்லாம் திரண்டு நிற்க, விதானையார் முன்னால நிற்க, பிள்ளையார் கோயில் வாசலில் கள்ளனை நிற்க வச்சுக் கற்பூரம் கொளுத்தி, இப்போ சத்தியம் பண்ணு என்றாராம்..

    அந்தக் கள்ளனோ, கையை முகத்துக்கு நேரே தூக்கிக் கும்பிட்டபடி, சைட்டில திரும்பி மெதுவாக “பிள்ளையாரே என்னை மன்னிச்சுக் கொள், பிள்ளையாரே என்னை மன்னிச்சுக்கொள்” எனச் சொல்லிபோட்டு, நேரே பார்த்தபடி,
    “சத்தியமாக நான் ஆட்டைத் திருடவில்லை” என்றாராம்.. சரி போ என விட்டாச்சாம்..:)

    ஆனா அருகில் நின்ற மக்களுக்கு இது தெரியுமாம், போனாப்போகுது பாவம் என விட்டுவிட்டார்களாம் என அம்மம்மா சொல்லிச் சிரிப்பா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடக் கடவுளே! விநாயகா - இது உனக்கே நல்லாயிருக்கா!

      நீக்கு
    2. சத்தியம் செய், சத்தியம் செய்.. என்றால் மனதுக்குள் அ சொல்லிக்கொண்டு சத்தியம் செய்வார்களே, அப்படியா?!!

      நீக்கு
    3. அவ்ளோ தூரம் அக்கால மக்கள் சத்தியத்துக்குப் பயப்பட்டிருக்கிறார்களே என நினைக்க .... புல்லரிக்குதே...

      நீக்கு
    4. ரு காலத்தில் எல்லாம் நல்லாதான் இருந்தது என்றும் சொல்லலாம்.  அல்லது இந்த அளவு கெட்டுப்போகாத காலம் அது என்றும் சொல்லலாமோ!

      நீக்கு
  30. பதில்கள்
    1. அப்படீன்னா நீங்க இதுவரை சொன்னபடி ஸ்வீட் 16 இல்லையா? நான் நினைத்தேன்.. உண்மை ஒருநாள் வந்தே தீரும் என்று. எவ்வளவு நாள்தான் ஒருவர் பொய் சொல்லிக்கொண்டே இருக்க முடியும்? இப்போ பார்த்து ஏஞ்சலினைக் காணோமே..

      நீக்கு
    2. பிஞ்சுக் கவிஞரிடம் இப்படி ஒரு கேள்வியா! வைரவா!

      நீக்கு
    3. அதானே நல்லாக் கேளுங்கோ கெள அண்ணன்:)... தட்டிக் கேய்க்க ஆள் இல்லை என நினைச்சுட்டார் நெ தமிழன் கர்ர்ர்ர்ர்ர்ர்:)...

      அதுசரி ஶ்ரீராமுக்கு பகல் 12 மணிக்கு மேல் என்ன பிரச்சனைyaam ? enkum varar illai..... haiyoo en damil font kku ennamo aachu oooooo:)...

      நீக்கு
    4. வர்றேனே...   நேரம் கிடைக்கும்போதெல்லாம் வந்துடறேனே...

      நீக்கு
    5. ஹா ஹா ஹா நீங்கள் கமலாக்காவை வோச் பண்ணுவதைப்போல, இப்போ சில நாளாக நானும் உங்களை வோச் பண்ணுகிறேனாக்கும் ஶ்ரீராம்:)..

      நீக்கு
    6. நீங்கள் கவனித்திருப்பது சரிதான் அதிரா...    ஜனவரி வரை வந்தது மாதிரி இப்போதெல்லாம் என்னால் வரமுடியவில்லை என்பது உண்மை.

      நீக்கு
    7. ///இப்போ பார்த்து ஏஞ்சலினைக் காணோமே..//

      @நெல்லைத்தமிழன் ஒரு மாபெரும் சதி நடந்துடுச்சி அதான் லேட்டா வந்தேன் இன்னிக்கு 

      நீக்கு
    8. அல்லோ மிஸ்டர் ஓவரா பில்டப்பூக் கொடுக்கப்பிடாது:)) கொரொனா இஸ் வோச்சிங்:))

      நீக்கு
  31. கேள்வி கேட்கும்போது நாம் நினைத்த பதில்வருவதையே எதிர்பார்க்கிறோம் சரிதானே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது கேள்வியா அல்லது பதிலா?

      நீக்கு
    2. @கௌதமன் ஜி அருமையான பதில்களுக்கு எபிக்கு மிக நன்றி

      @நெல்லைத்தமிழன் ,முரளி மா.
      எனக்கும் வியாழன் மிகப் பிடிக்கும். அன்று தெய்வம் காக்கும் என்ற நம்பிக்கை
      மேலிடும்.
      என் தம்பிகளுக்கோ, இங்கே இருப்பவர்களுக்கோ
      என் நம்பிக்கைகள் தொடரவில்லை .நல்ல படியாக.

      செவ்வாய் என்னைப் பொறுத்தவரை நல்ல நாள்.
      வைத்தியரைப் பார்க்க சனிக்கிழமை நல்லது என்பார்கள்.

      நீக்கு
    3. ஓஹோ அப்படியா? எனக்கு கிழமை b(i)ased நம்பிக்கைகள் கிடையாது.

      நீக்கு
  32. ஹப்பா இன்று கேள்விகளே நிரப்பிவிட்டதே! கொஞ்சம் தலை கிர்ர்ர்ர்ர்ர்ர்ர். ஹா ஹா ஹாஹா.

    முழுவதும் வாசிக்க அதுவும் நெட் வேறு இல்லை...யுகாதி இன்று ஸோ இப்பதான் நெட் வந்து வந்தா முழுவதும் படிக்கவே சரியா இருந்தது.

    கேள்விகள் பதில்கள் எல்லாம் ரசித்தேன்...

    //கள்ளமில்லா சிரிப்பாலும், வெளிப்படையான பேச்சாலும். // இதாற்கு ஹைஃபைவ்...என் பதிலும் இதுவாகத்தான் இருக்கும்...

    // எனக்கு புதன் கிழமைகள்தான் நல்ல பொழுதுபோக்கு! // ஹா ஹா ஹா ஹா....

    ஏஞ்சலின் முதல் கேள்வி....கற்றல் இருந்தால்தானே கற்பித்தல் முடியும். அதுவும் நாம் கற்றதை மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுத்தல் என்பது மிகப் பெரிய நல்லதொரு விஷயம்.

    ஷட்டவுன் என்பதால் வலைப்பக்கம் வருவதே சிரமமாக இருக்கு. ஹிஹிஹிஹி...வீட்டில் சரியாக இருக்கு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி.

      நீக்கு
    2. //ஷட்டவுனில் வீட்டில் சரியா இருக்கு // இது உண்மைதான். பசங்க பள்ளிக்கூடத்துக்கோ கணவர் வேலைக்கோ போனால் 9-3 வரையாவது அக்கடான்னு இருக்க நேரம் கிடைக்கும். வீட்டில் எல்லோரும் இருந்துவிட்டால் நேரமே கிடைக்காது. அரசுக்கு எங்க பெண்களோட கஷ்டம் புரியுது?

      நீக்கு
    3. ///வீட்டில் எல்லோரும் இருந்துவிட்டால் நேரமே கிடைக்காது. அரசுக்கு எங்க பெண்களோட கஷ்டம் புரியுது?////
      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)... எல்லோரும் வீட்டில் இருப்பதைப்போல மகிழ்ச்சி ... வேறேதும் இல்லையாக்கும்:)... அது முழுநேரமும் வேலை வேலை என ஓடும் உங்களுக்கெங்கே புரியப்போகுது:) ஹா ஹா ஹா

      நீக்கு
    4. டாங்ஸ்ஸூ வல்லிம்மா.. ஹை ஃபைஃப்.. இல்ல இல்ல தொடக்குடாதாம். வணக்கம் தான் சொல்லோணும்:))

      நீக்கு
  33. கேள்வி பதில்கள் அருமை. வயது 300 ரசனை.

    பதிலளிநீக்கு
  34. எல்லாருக்கும் வணக்கம் :) பணிச்சுமையால் கொஞ்சம் பிஸி .னது கேள்விகளுக்கு பதிலளித்த ஆசிரியர்கள் அதை பாராட்டிய ரசித்த நட்புக்கள் அனைவருக்கும் நன்றீஸ் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அல்லோ மிட்நைட் ல வந்து வணக்கம் சொல்லி ஒரு சுவீட் சிக்ஸ் டீன் பிள்ளையை உப்பூடி மிரட்டக்கூடாது எதுக்கும் 4 அடி தள்ளி நிண்டே ஜொள்ளுங்கோ... என்ன இம்முறை ஸ்ரைக்கோ?:)).. கூடையையும் காணவில்லை:))

      நீக்கு
    2. ஆங் !! கூடை பின்னிக்கிட்டிருக்கேன் 

      நீக்கு
    3. https://wallpaperstream.com/wallpapers/full/cute-cat/Cute-White-Cat-in-Basket.jpg

      நீக்கு
    4. ஹா ஹா ! அதிரா ஏஞ்சல் காம்பினேஷன் என்றைக்குமே சுவாரஸ்ய பரிமாற்றங்கள்!

      நீக்கு
  35. நம்முடைய சிந்தனை எண்ணம் செயல் இதெல்லாம்  நடக்கப்போற ஒரு விஷயத்தை influence செய்யபோதுன்னு நம்புறது மந்திர சிந்தனை :)இன்னிக்கு ப்ளூ ஷேர்ட் போட்டேன் அதனால் எல்லாம் பாசிட்டிவா இருக்கும்னு நினைக்கிறது ,இன்னிக்கு வலப்பக்கம் எழும்பினதால் லாட்டரியில் பணம் விழும்னு நம்புறது இதெல்லாம் மந்திர சிந்தனை 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மந்திர சிந்தனை //

      என்னாதூஊஊஊஊ மந்திர சிந்தனையா?:)).. என்னை விடுங்கோ நான் 23ம் புலிகேசியையே பார்க்கப் போறேன்:))

      நீக்கு
    2. ஹலோ வேணாம் அப்புறம் மயக்கத்தில் 20 கேள்வியா கொட்டுவேன் 

      நீக்கு
    3. ம்ஹூம்ம் இப்போ கெள அண்ணன் உசாராகிட்டார்ர்.. பத்துப் பத்தாத்தான் பதில் சொல்லுவாராம்:)) ஹா ஹா ஹா

      நீக்கு
    4. நடக்கட்டும், நடக்கட்டும்!

      நீக்கு
  36. 1,போலி உண்மையற்ற கோட்பாடு இதை நம்புகிறவர்களை என்ன செய்யலாம் ? எ .கா=  குளோபல் வார்மிங் இல்லைன்னு ஒரு அதிகாரவர்க்க  கூட்டம் சொல்கிறது
    2, வாழ்க்கை வட்டமா ? சதுரமா ? அல்லது நேர்கோடா ?
    3,எதெல்லாம் உலக நியதி ?
    4,உறவுகளை பராமரிப்பதில் அழகா வழிநடத்தி செல்வதில் முக்கியப்பங்கு வகிப்பது எது ? நேரடி உரையாடலா அல்லது கடிதம் ,தொலைத்தொடர்பு சாதனங்களா ? 
    5,ஸ்கூல் கல்லூரி நாட்களில் ஆசிரியர் கேள்விக்கு உடனே பதில் சொல்ல முந்தி பிறகு அதற்காக பிற மாணவர்களிடம் குட்டு வாங்கிய அனுபவம் உண்டா ?ஹிஹி :) நம்மை போல் ஓரிருவர் இருக்காங்களான்னு தெரிஞ்ஜிக்க ஆசை 
    6, ஒரு வைரஸிடம்  ஆறறிவு படித்த மானிடம் அடிபணிந்து பயந்து நிற்பது பற்றி உங்கள் எண்ணம் கருத்து ??
    7, இவ்வளவு நாளா தெரியாமப்போச்சே என்று சமீபத்தில் நினைத்த ஒரு விஷயம் என்ன ?
    8, இந்த பாடங்களை இந்த விஷயங்களை  பள்ளிகளில் கற்றுக்கொடுக்கவேண்டும் என்று கட்டாயமாக்கினால் உங்கள் சாய்ஸ் எதுவாக இருக்கும் ?
    9,நீங்கள் பார்த்த சினிமா படித்த கவிதை படித்த புத்தகம் பார்த்த ஓவியம் இப்படி இவற்றில் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய சிலவற்றை கூறவும் ?
    10,உங்களுக்கு தெரிந்த அடிக்கடி சந்திக்கும் மிகுந்த புத்திசாலியான படைப்பாற்றல் அறிவு செறிந்த ஒரே ஒரு பெண்மணியின் பெயரை கூறவும் ?
    11, உறவுகளின் நினைவாக பொருட்களை பத்திரப்படுத்தி வைப்பது நல்லதா ? அல்லது நினைவுகளை மறவாமல் நெஞ்சில் வைத்திருப்பது நல்லதா ?
    12, நீங்கள் வலையுலகில் அல்லது வேலையிடத்தில் வெளியிடத்தில்  சந்தித்த இன்ட்ரெஸ்டிங் பெர்சனாலிட்டி யாரேனும் உண்டா ? இதற்கு பிஞ்சு கவிஞர் என்ற பதில் தடை செய்யப்பட்டுள்ளது :)
    13, உங்கள் வாழ்க்கையில் கிடைத்த சிறந்த அட்வைஸ் மற்றும் மோசமான அட்வைஸ் எது ?
    14, நீங்க காஃபி பிரியரா ? அல்லது தேநீர் பிரியரா ?
    15, விக்கல் வந்தா தண்ணி குடிப்பிங்களா இல்லை சர்க்கரை சாப்பிடுவீங்களா ?
    16,உங்கள் நட்புகள் அனைவருக்கும் பொதுவாய் அமைந்த நற்குணம் எது ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதில்கள் அளிக்கிறோம்.

      நீக்கு
    2. 17,ஒரு காணொளி கொரோனா விழிப்புணர்வுக்கு வெளியிட்டுள்ளனர் சமூக தளங்களில் . ஒரு குழந்தை 10 வயதுக்கும் குறைவுதான் இருக்கும் உங்களுக்கு அறிவில்லையா என்றெல்லாம் பேசுகிறது . இது சைல்ட் எக்ஸ்ப்ளோய்டேஷனுக்கு வழி வகுக்காதா ?சிறுவர் சிறுமியரை பயன்படுத்தி இப்படிப்பட்ட காணொளிகள் தேவையா ?

      நீக்கு
    3. இதற்கும் பதில் அளிப்போம்.

      நீக்கு
  37. @கௌதமன் ஸார் அடுத்த வாரம் கேள்விக்கூடை எடுத்துவர டைமிருக்குமான்னு தெரில அதனால் இதை பாதியா பிரிச்சி பதில் சொன்னாலும் ஓகே :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்ப்போம். புதன் கிழமைகளில், கேள்வி பதில்களுக்குதான் முதலிடம்.

      நீக்கு
    2. //புதன் கிழமைகளில், கேள்வி பதில்களுக்குதான் முதலிடம்.//
      அப்போ ஸ்ரீராமுக்கு?:)).. ஹா ஹா ஹா எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ் மீ ரொம்ப நல்ல பொண்ணு:))

      நீக்கு
    3. அவரும்தான் பதில்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார். தேடிப்பார்த்தால் கிடைக்கும்.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!