திங்கள், 28 செப்டம்பர், 2020

"திங்க"க்கிழமை : ராவல்பிண்டி ச்சோலே  - கீதா ரெங்கன் ரெஸிப்பி 


(ராவல்) பிண்டி ச்சோலே


ஹாய் எபி வாசகர்கள், கமுக்காமாக வாசிக்கும் வாசகர்கள், பார்வையாளர்கள் நம் நட்புகள் அனைவருக்கும் வணக்கம். வாங்க எல்லாரும் ராவல்பிண்டிக்குப் போவோம். பூஸார் ஸ்பான்ஸர்.

ராவல்பிண்டி - பொதுவாகப் பிண்டி என்று சொல்லப்படும் ராவல்பிண்ட் பாகிஸ்தானின் பஞ்சாபில் இருக்கும் ஊர். இந்த ஊரின் பெயருடனேயே  பிண்டி ச்சோலே அல்லது ராவல்பிண்டி ச்சோலே என்று சொல்லப்படுகிறது.

பட்டூரேயுடன் சாப்பிட  மிகவும் சுவையாக இருக்கும் இந்த ச்சோலே. வெள்ளை கொண்டைக்கடலைக்குப் பதில் கருப்பு கொண்டைக்கடலையிலும் செய்யலாம். 






எபி கிச்சன் டைரக்டர்கள், ஆசிரியர்கள், கருத்திடும் நட்புகள், பார்வையாளர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி கூறி அடுத்த திங்கவில் சந்திப்போம் என்று சொல்லி இப்ப டாட்டா பைபை ஃப்ரம் எபி கிச்சன் குழு. 

==========


====


58 கருத்துகள்:

  1. உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாருக்கும் ஒரு பெரிய வணக்கம்!!!

      சென்ற திங்கவுக்கும் முழுமையா பதில் கொடுக்க முடியலை அதுக்கு ஒரு பெரிய ஸாரி.

      இன்றைக்கும் முடிந்த அளவு கொடுக்கிறேன். விரைவில் தளம் பக்கம் வந்துவிடுவேன் என்று நினைக்கிறேன்.

      எபி க்கு மிக்க நன்றி

      கீதா

      நீக்கு
  2. அப்படி இப்படின்னு அடுத்த ரவுண்டு
    அந்தப் பக்கமாக இருக்குமோ!?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். அடுத்து அவங்க எழுதப் போறது அனேகமா பங்களாதேஷ் அக்காரவடிசல்தான். இருந்தாலும் வித விதமா கீதா ரங்கனுக்கு செய்துபார்க்கும் ஆர்வமும் திறமையும் அதிகம்.

      நீக்கு
    2. ஹா ஹா ஹா ஹா ஹா ஹா துரை அண்ணா அண்ட் நெல்லை!!!

      நன்றி துரை அண்ணா..

      கீதா

      நீக்கு
    3. நெல்லை அட ஹைஃபைவ்! எப்படி இப்பூடி கரெக்ட்டா ஜோஸ்யம் சொல்றீங்க!!!!

      பங்களாதேஷ் ஒரு ஸ்வீட் டெசர்ட் ஈகைப்பெருநாளுக்குச் செய்யறது ஜவ்வரிசி பேஸ், பேசில் சீட்ஸ்/சப்ஜா விதைகள் வைச்சு வேறு வேறு வகையில் செய்வது என் மகனுக்கு மிகவும் பிடிக்கும். ஃப்ரிட்ஜ் இருந்தா நல்லாருக்கும். இல்லைனாலும் ஓகே தான் அது செஞ்சு கொஞ்ச நாளாச்சேன்னு சமீபத்தில் நினைத்தேன்.

      கிட்டத்தட்ட ஃபெல்லூடாவின் கசின் என்று சொல்லலாம்.

      //கீதா ரங்கனுக்கு செய்துபார்க்கும் ஆர்வமும் திறமையும் அதிகம்.//

      ஹிஹிஹி ஆர்வம்னு சொல்லிக்கோங்க நெல்லை அதுக்கு அடுத்த சொல் ஹிஹிஹி நஹி!

      உணவுன்னு இல்லை எல்லாத்துலயும் கால் வைச்சு நுனிப்புல் மேயறதுதான்.. அதென்னவோ தெரியலை புதுசு புதுசா செய்யறப்ப ஒரு உற்சாகம் புத்துணர்ச்சி தொற்றிக் கொள்கிறது. இப்போதிருக்கும் சூழலுக்கு எனக்கு அது மிக மிக அவசியமாக இருக்கிறது. தொற்று இன்னும் சோகம் கொண்டு வராமல் இருந்தால் சரி.

      மிக்க நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
  3. அன்பு நட்புகளுக்கு இனிய காலை வணக்கம்.
    என்றும் இறைவன் நம் பக்கம் இருக்கும் இறைவனை உணர்வோம்.

    பதிலளிநீக்கு
  4. அன்பு துரை,அன்பு ஸ்ரீராம், ரெசிப்பி வழங்கிய அன்பு கீதா இன்னும் வரப்போகும் அனைவருக்கும் எல்லா நாட்களும் நல்ல நாட்களாக இருக்க வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. அன்பு கீதாமா,
    ராவல்பிண்டியாக இருந்தால் என்ன. அதுவும் நம்மோடு இருந்தது தானே.

    மிக அற்புதமான ரெசிப்பி.
    மசாலா விவரமே இவ்வளவு இருக்கிறதே. மலைப்பாக இருக்கு. கொஞ்சம் முந்திரிப்பருப்பு கடைசியில் வறுத்துப் போடலாமான்னு பார்க்கிறேன்.
    இன்னிக்குத் திருவோணத்துக்கு பகவானுக்கு ஸ்வீட் செய்தாச்சு.
    பாதாம் கேசரி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அம்மா அதுவும் நம்மோடு இருந்ததுதான்! அப்புறம்தானே பிரிந்தது!. அதனால் இப்போதைய அதன் இருப்பிடத்தைச் சொன்னேன் அம்மா

      ஓ முந்திருப் பருப்பு வறுத்துப் போட்டுச் செய்யுங்க அம்மா. வித்தியாசமா நல்லாருக்கும். சொல்லப் போனால் பருப்புகள் கொஞ்சம் நெய்யில் வறுத்துப் போட்டால் க்ரஞ்சியா நல்லாருக்குமோ!! நல்ல ஐடியா வல்லிம்மா.

      நவரத்னகுர்மா/சப்ஜி/ரைஸ் இதெல்லாம் கூட அவர்களின் ஃபேமஸ் ரெசிப்பிதானே. அதிலும் நட்ஸ் இருக்கும் ரொம்ப நல்லாருக்கும்.

      பாதாம் கேசரி.// யம்மி!

      மிக்க நன்றி வல்லிம்மா

      கீதா

      நீக்கு
  6. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. மிக அருமையான சோலே வித் பூரி.
    ஜம்முனு இருக்கு.
    இத்தனை அழகாகப் படங்கள் எடுத்து,
    செய்முறையும் விளக்கமாகச் சொல்லி
    இருக்கும் முறை சிறப்பு.
    பார்க்கும் போதே கொடுக்கும் ருசி,
    சாப்பிட்டால் சொல்லவே வேண்டாம்.
    அருமை வாழ்த்துகள் கீதா மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இத்தனை மசாலா இருந்தாலும் சப்ஜி மைல்டாதான் இருக்கும் அம்மா அத்தனை மசாலா தூக்கலா இருக்காது நல்லாருக்கும்.

      மிக்க நன்றி அம்மா

      கீதா

      நீக்கு
  8. அன்பு பானு மாவின் சகோதரி குரல் மிக மிக
    அருமை. இன்று ஹயக்ரீவர் அவதார தினம்,திருப்பதி பெருமாள் அவதார
    தினம், ஸ்ரீ வேதாந்த தேசிகர் அவதார தினம்.
    எல்லாவற்றுக்கும் சுபமாக நல்ல பாசுரத்தைக் கொடுத்ததற்கு மிக நன்றிமாமின் நிலா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @வல்லி அக்கா: நான்  நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பல சிறப்புக்கள் கொண்ட இந்த நாளில்தான் இது வெளியிடப்பட வேண்டும் என்பது கடவுள் சித்தம். உங்களுக்கும் மின் நிலாவுக்கும் நன்றி. 

      நீக்கு
    2. கௌ அண்ணா மின் நிலா எல்லாம் டவுன்லோட் செய்து வைத்திருக்கிறேன். இனிதான் மெதுவாக வாசிக்க வேண்டும். நான் வாசித்துவிட்டு கருத்து சொன்னா பெரிய பதிவாகிடுமோ?!!! ஹிஹிஹிஹி..

      இந்த் மின் நிலாவில் ஏதோ புதுசா வித்தியாசமா குரல் எல்லாம் வந்திருக்கு போல!! பானுக்கா குரல்னு வல்லிமா சொல்லிருக்காங்க பாட்டா?!!! ஆஹா கேட்டுவிட்டு வாசித்துவிட்டு எல்லாம் சேர்த்து கருத்து பதிகிறேன் கௌ அண்ணா

      கீதா

      நீக்கு
  9. மின் நிலா, படங்களும், பூக்களும் அஞ்சலியாக நம் பாலு சாருக்குப் படைத்தது அருமை.
    மனதின் கனம் விலக நாட்களாகும் என்று நினைக்கிறேன்.


    என் பதிவையும் வெளியிட்டதற்கு மிக நன்றி கௌதமன் ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனதின் கனம் விலக நாட்களாகும் என்று நினைக்கிறேன்.//

      அதே அம்மா. என்னால் இன்னும் முடியவில்லை. அதுவும் நம் வீட்டில் நிறை உண்டு நான் உட்பட.
      ஸ்ரீராம் வெள்ளிக்கிழமை பாடல் பகிர்வில் எஸ் பி பியின் தியாகையா படப் பாடல் ஏதேனும் பகிரலாமோ? கர்நாட்டிக் பேக் க்ரவுன்ட் இல்லாமல் அசாத்தியமாகப் பாடிய மாஸ்டர் பீஸ் பாடல்கள்.

      கீதா

      நீக்கு
  10. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். இப்போது இருக்கும் இயல்பு நிலை நீடித்து நிலைத்து நிற்க இறைவன் அருள் புரியப் பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  11. சனா செய்முறை நல்லா இருக்கு. ஆனால் நாங்கல்லாம் கொஞ்சம் வெல்லம் சேர்ப்போம். அல்லது சனாவை வேக வைத்துக்கொண்டு மசாலாசாமான்களுடன் பண்ணிட்டுக் கடைசியில் அதில் புளிச்சட்னி, பச்சைச் சட்னி சேர்ப்போம். புளிச்சட்னியில் வெல்லம் சேர்ப்பதால் அது சுவையைக் கொடுக்கும். டீத்தூளாகவும் சேர்ப்பதில்லை. டீத்தூளைத் துணியில் கட்டிப் போடுவோம். ஆனால் நம்மவருக்கு இது என்னமோ அவ்வளவாப் பிடிக்கிறதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கீதாக்கா.

      ஓ வெல்லம் சேர்ப்பதுண்டா? நீங்கள் சொல்லுவது சாட் போல இருக்கே.

      டீத் தூள் பேக் தான் போடுவது. சிலப்போ அதுக்கு வசதியா துணி இல்லைனா அப்படியே போட்டுவிடுகிறேன். இது செய்யறப்பவும் அந்த மசாலா கட்டிய துணிப் பொட்டலத்தில் இடம் இல்லை அதான் நேரடியா போட்டுவிட்டேன். வித்தியாசம் தெரியாதுக்கா.

      மிக்க நன்றி கீதாக்கா

      கீதா

      நீக்கு
  12. எஸ்பிபிக்கு அஞ்சலி செலுத்தி இருக்கும் மின் நிலா தொகுப்பு நன்றாக வந்திருக்கிறது. ரேவதியின் கட்டுரை புத்தம்புதுசு. மின் நிலாவுக்கென எழுதினதோ? அவர் பதிவில் பார்த்த நினைவு இல்லை. பானுமதியின் அக்காவின் யூ ட்யூப் இப்போத் திறக்க மறுக்கிறது. மத்தியானமாக் கேட்கணும். திடீர் திடீர்னு நம்ம கணினிக்கு இப்படி எல்லாம் விளையாடத் தோணும். வரேன் அப்புறமா! ஏற்கெனவே நேரம் ஆயிடுச்சு! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி. ஆம், மின்நிலாவுக்கு பிரத்யேகமாக அவர்கள் அனுப்புகின்றவைகள்தான் பொருளடக்கத்தில் நீல நிற எழுத்துகளில் காணப்படும் தலைப்புகள். அதற்கு பொருளடக்கத்திற்கு கீழே குறிப்பு வெளியிட்டுள்ளோம்.

      நீக்கு
    2. ஒவ்வொருவரின் கருத்தும் மின் நிலாவை வாசித்துவிட வேண்டும் என்று தூண்டுகிறது.

      கீதா

      நீக்கு
  13. ராவல்பிண்டி சோலே - செய்முறை நல்லா எழுதியிருக்கீங்க. நல்லா கொலாஜ் பண்ணியிருக்கீங்க. பாராட்டுகள்.

    இந்த கும்மிடிப்பூண்டி, உளுந்தூர்பேட்டை உணவுலாம் எழுதாம நேர பாகிஸ்தான் போயிட்டீங்களே

    அடுத்து எத்தியோப்பியாவின் எஞ்சிரா செய்முறை எதிர்பார்க்கலாமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நெல்லை!!

      இந்த கும்மிடிப்பூண்டி, உளுந்தூர்பேட்டை உணவுலாம் எழுதாம நேர பாகிஸ்தான் போயிட்டீங்களே//

      ஹா ஹா ஹா போட்டா போச்சு!!

      அடுத்து எத்தியோப்பியாவின் எஞ்சிரா செய்முறை எதிர்பார்க்கலாமா?//

      ஹா ஹா ஹா ஹா

      இஞ்சிராவே அங்கிருந்து வந்துச்சு. மாவும் வந்தது செஞ்சுருக்கேன் நெல்லை. அந்த இஞ்சிரா மாவு வந்திச்சே!! அங்க ஒரு கஞ்சி கொண்டைக்கடலை எல்லாம் போட்டு.. மாவு கஞ்சி செம டேஸ்டியா இருக்கும்

      அங்கு எல்லாமே ரொம்ப செழுமையா இருக்கும் நெல்லை. கடலை முதல். பீன்ஸ் வரை. கோதுமை மாவு எல்லாமே. நல்ல வளமான பூமி. எந்த கெமிக்கலும் கலக்காத விளைச்சல். அருமையான ஊர் ஆனால் பாழாக்கிறாங்க.

      கீதா

      நீக்கு
  14. எதனை வாசனை திரவியங்கள், குறுமிளகு மட்டும் தான் இல்லை. இவை அனைத்தையும் இந்த கோவிட காலத்தில் எப்படி வாங்கமுடியும். இதற்கு பதில் ராவல்பிண்டியில் இருந்து ஒன்லைனில் ஆர்டர் கொடுத்து வாங்கிடலாம். 

    அதனால் என்ன படித்தாச்சு அப்படியே  சாதா சோலே செய்து பட்டூராவுடன் சாப்பிடலாம். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோவிட் காலமானாலும் இங்கும் எல்லாம் கிடைக்கிறதே.

      இதற்கு பதில் ராவல்பிண்டியில் இருந்து ஒன்லைனில் ஆர்டர் கொடுத்து வாங்கிடலாம். //

      ஹா ஹா

      மிக்க நன்றி ஜேகே அண்ணா.

      கீதா

      நீக்கு
  15. அணைவருக்கும் காலை வணக்கம்.
    எங்களுக்கு ராவல்பிண்டி எக்ஸ்பிரெஸ் ஶோயப் அக்தர் தான் இதுவரை தெரியும்.
    இப்ப ராவல்பிண்டி சோலே பற்றியும் தெரிந்துகொண்டோம்.
    சீக்கிரம் செஞ்சு பார்க்க சொல்கிறேன்.
    நன்றி கீத்தா மேடம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா அரவிந்த்!

      செஞ்சு தரச் சொல்லுங்க அரவிந்த்.

      மிக்க நன்றி

      கீதா

      நீக்கு
  16. பெயரே வித்தியாசமாக இருக்கிறது.

    பாகிஸ்தானின் பஞ்சாபில் இருக்கும் ஊர் ???

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கில்லர்ஜி பிரிந்த போது அங்கும் ஒரு பிட் போச்சே. அந்த பஞ்சாப் ப்ராவின்ஸில் இது ஒரு மாவட்டம். வடக்குப் பக்கமாக. இவை எல்லாம் பிரிவினைக்கு முன் நம்மோடு இருந்தவைதானே. மேப் பார்த்தீங்கனா புரிஞ்சிரும் கில்லர்ஜி.

      மிக்க நன்றி

      கீதா

      நீக்கு
  17. பிண்டி சோலே செய்முறை விளக்கமும், படங்களும் பிரமாதம்! இதை செய்யும் நேரத்தை விட இந்த பதிவு எழுத அதிகநேரம் ஆகியிருக்கும் என்று நினைக்கிறேன். சூப்பர் ஜி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி பானுக்கா பாராட்டிற்கு

      அதென்னவோ உண்மைதான் பதிவு எழுத நேரம் ஆனதுதான் படங்கள் எல்லாம் கோர்த்து...மசாலா சாமான் பெயருடன் இருக்கும் படம் பெயின்டில் செய்து கொலாஜ் போர்டில் போட்டேன் பானுக்கா.

      மிக்க நன்றி

      கீதா

      நீக்கு
  18. வண்டிச் சோலை சின்னராசுக்கு அதிகம் பிடித்த சைட்  டிஷ் எது?பிண்டிச் சோலே ஹி ஹி .. யாரும் அடிக்க வரும் முன் ஓடி விடுகிறேன்.  

    பதிலளிநீக்கு
  19. மைசூர் அரண்மனை படங்கள் எ.பி.யில் பார்த்ததை விட மின் நிலாவில் துல்லியமாக இருக்கின்றன.  

    பதிலளிநீக்கு
  20. அடுத்து வர இயலுமா என்று தெரியவில்லை. எனவே இனி வந்து கருத்திடுபவர்களுக்கு இப்பவே நன்றி சொல்லிக் கொள்கிறேன். முடிந்தால் வந்து சொல்கிறேன்.

    மிக்க நன்றி அனைவருக்கும்

    கீதா

    பதிலளிநீக்கு
  21. ராவல்பிண்டிச்சோலே செய்முறை படங்களுடன் நன்றாக இருக்கிறது கீதா.

    பதிலளிநீக்கு
  22. மின் நிலா நன்றாக இருக்கிறது.
    எஸ்பிபிக்கு அவர் பாடிய அஞ்சலி பாடல் வரிகளே அஞ்சலியாக அமைத்த் அவிதம் அருமை.
    பகிர்ந்த அவர் படங்களும் நன்றாக இருக்கிறது.

    வல்லி அக்காவின் பதிவும் நன்றாக இருக்கிறது. எல்லோரும் கவனமாய் இருப்பது நல்லதுதான்.

    பானுமதி வெங்கடேஸ்வரன் சகோதரி பாடிய பாடல் மிக நன்றாக இருக்கிறது. நன்றாக பாடினார்கள். காணொளியில் இடம் பெற்ற பொருத்தமான படங்களும் அருமை.

    மேலும் நிறைய புதுமைகளை தர போகும் மின் நிலாவிற்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  23. வித்தியாசனமான உணவு வகை. ரசித்தேன்.
    மின் நிலாவின் சாதனைகள் தொடர்வதறிந்து மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  24. ஆத்தாடி "ச்சோலே" பெயரே சாப்பிட்டு போ என்கிறது...!

    படமெடுத்து பதிவையே இப்படி போட்டு விடலாமோ...? (ஆனால், கைப்பேசி உலகத்தில் - சரி வராது...!)

    பதிலளிநீக்கு
  25. Pபிண்டி chசோலே - இதில் ஒரே ஒரு விஷயம் உங்களுக்குச் சொல்ல வேண்டும்! எனக்குத் தெரிந்தவரை இந்த Pபிண்டி என்பது ராவல்பிண்டியைக் குறிப்பதல்ல! பஞ்சாபி மொழியில் Pபிண்ட் என்றால் கிராமம் - கிராமத்தில் செய்யப்படும் வகையில் இருப்பதால் இது Pபிண்டி chசோலே! இங்கே குறிப்பாக இதனை அம்ருத்ஸரி Pபிண்டி chசோலே என்று தான் சொல்வார்கள். நானும் சில சமயங்களில் செய்வதுண்டு - நிறையவே பொறுமை வேண்டும் என்பதால் அடிக்கடி செய்வதில்லை!

    சுவையான குறிப்பினை பகிர்ந்து கொண்ட கீதாஜி அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானுமே இதைக் குறித்து உங்களைக் கேட்க இருந்தேன். ஆனால் கடந்த இரண்டு நாட்களாக இருந்த வேலை மும்முரத்தில் மறந்தே போனது என்பதோடு அதிகம் பதிவுகளுக்கும் வர முடியலை! என்னடா நாம் கேள்விப் பட்டது வேறேயா இருந்ததே, அதிலும் அம்ரித்சர் போனப்போக் கூட ஓட்டல்களில் சொன்னாங்களே நாம கேட்டதுக்கும் இங்கே தான் பிரபலம் என்றார்களே என்றெல்லாம் நினைவு வந்தது. இங்கே நீங்க கொடுத்த விளக்கத்துக்கு நன்றி.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!