ஞாயிறு, 30 மே, 2021

செம்பருத்திப் பூக்கள்

 

ரோஜா போய் செம்பருத்தி 


செம்பருத்தி என்று வெண்பருத்தியைக் காட்டறீங்களே?


இப்போ சரியா?


சொல்லவேண்டுமா என்ன செம்பருத்தி(?) மஞ்சளிலும் ...


எல்லா மஞ்சள் செம்பருத்திப் படங்களும் தங்கை வீட்டு மாடியிலிருந்து 


பிங்க் 

ஆனால் இதுவரை எல்லாமே ஒற்றை செம்பருத்திதான் 


ஒன்று - 


இரண்டு - - 


மூன்று - - - 





நிறைய மொட்டுக்கள் வந்தாலும் நம்மை விட 



பக்கத்து வீட்டுப் புறாவுக்கு தான் நிறைய பிடிக்கிறது ! 



அப்படியே சாப்பிட்டுவிடுகிறது 
















மறைந்திருந்தே பார்க்கும் மர்மம் என்ன? 


இந்த மொட்டு அழகா - 


அல்லது மலரழகா என்றே -  


தளிர் இலைகளுக்கு நடுவே தனிப்பூ 


பூவுக்கும் நிழல் உண்டு 



சித்திரமா அல்லது உண்மையா ? 


டா - - - டா !





51 கருத்துகள்:

  1. இந்தப் பதிவு டாஷ்போர்டுக்கே வரலை. இங்கே வந்து பார்த்தால் எல்லோரும் ஞாயிற்றுக்கிழமைக் கொண்டாட்டத்தில் தூக்கம்! :)

    பதிலளிநீக்கு
  2. நான் தான் ஃப்ரஷ்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டா? இல்லைனா யாரானும் எட்டிப் பார்த்துட்டீங்களா?

    பதிலளிநீக்கு
  3. யாரையும் காணோம். அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். நம்பிக்கை தரும் செய்திகள் ஆங்காங்கே கிடைத்தாலும் கோவை நிலவரம் கலவரமாக உள்ளது. விரைவில் சீரடையப் பிரார்த்திக்கிறோம். எல்லோரும் கணித்திருப்பது போல் ஜூன் மாதத்தில் இருந்து தொற்றில் இருந்து முழுமையாக விடுபடவும் பிரார்த்திக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதுசா ஒண்ணு வியட்நாமிலே வந்திருக்காம். காற்றிலே பரவும் தன்மையுடையதாம்! நிஜமா பொய்யானு தெரியலை. ஆனால் செய்தியைக் கேட்டதில் இருந்து மனசே சரியில்லை. :( என்ன நடக்குமோ!

      நீக்கு
  4. எல்லா நிறச் செம்பருத்திகளும் நம்மிடமும் இருந்தன. செம்பருத்தி மொட்டுக்கள் மட்டுமில்லாமல் அந்த இதழின் கீழ்ப்பகுதி/அழுத்தமாய் இருக்குமே அது! நாங்களும் அவ்வப்போது சாப்பிடுவோம். இட்லிப்பூ எனப்படும் விருட்சிப் பூக்களின் கொத்தை அப்படியே பறித்து ஒவ்வொன்றாக வாயில் வைத்துத் தேனை உறிஞ்சி இருக்கோம். அதெல்லாம் ஒரு பொற்காலம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ... அதுனாலத்தான் அம்பத்தூர் பகுதில இருந்த தேன் சிட்டுகள் எல்லாம், இந்தம்மா நமக்கு மிச்சம் வைக்காதுன்னு சொல்லி வேற ஊருக்கு டிரான்ஃபர் வாங்கிட்டுப் போயிடுத்தா?

      நீக்கு
    2. சொல்லாமல் கொள்ளாமல் பறந்திருக்கும்!

      நீக்கு
  5. விருட்சியிலும் பல நிறங்கள் வந்துவிட்டாலும் அந்த ஆரஞ்சுச் சிவப்பு உதிக்கின்ற செங்கதிரின் நிறத்தில் உள்ளது தான் அழகு/அருமை/தொடுக்கவும் வாங்குவோம். இங்கே எல்லா உம்மாச்சிங்களுக்கும் அதை வைத்துத் தான் மாலை கட்டுவாங்க! அழகான மாலைகள். இரண்டு நாட்கள் வாடாது!

    பதிலளிநீக்கு
  6. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், நான் வந்தால் மட்டும் தனியே பேசிக்க விட்டுட்டு எல்லோரும் தூங்குவீங்க/இல்லைனா போய் ஒளிஞ்சுக்குவீங்க. நான் கோவிச்சுண்டு உள்ளிருப்புப் போராட்டம் செய்யப் போறேன். வேறே பதிவுகளில் போய்! இஃகி,இஃகி,இஃகி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லோரும் மறைந்திருந்து வேடிக்கை பார்க்கிறார்களோ?

      நீக்கு
  7. இன்னுமா யாரும் வரலை? கும்பகர்ணன் தூக்கம் போல எல்லோருக்கும். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இந்த சத்தத்திலாவது எழுந்துக்கறீங்களா பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
  8. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..

    பதிலளிநீக்கு
  9. அனைவருக்கும் காலை வணக்கம். பூ வணக்கம். அழகான படங்கள்.

    பதிலளிநீக்கு
  10. இனிய காலை வணக்கங்கள்! அனைவரும் நன்னலத்துடனிருக்க பிரார்த்தனைகள்!
    செம்பருத்திப்பூக்கள் ஒவ்வொரு புகைப்படத்திலும் ஒவ்வொரு அழகுடன் இருக்கின்றது! இதுவரை மஞ்சள், வெள்ளை செம்பருத்திப்பூக்களை நான் பார்த்ததில்லை. அவை மிக மிக‌ அழகு!

    பதிலளிநீக்கு
  11. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  12. புகைப்படங்களின் வரிசை செம்பருத்தி சீரியல்?

     Jayakumar

    பதிலளிநீக்கு
  13. செம்பருத்திப் பூக்கள் எல்லாம் அழகாய் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  14. அழகிய வண்ணங்களில். அருமை.
    எங்கள் வீட்டிலும் நான்கு இனங்கள் பூக்கின்றன. இரண்டு அடுக்கு இனம்.

    பதிலளிநீக்கு
  15. ஹையோ என்ன அழகு வண்ணங்கள்! செம்பருத்தி! அத்தனையும் அழகோ அழகு! மனதைக் கொள்ளை கொள்கிறது! அந்த ரோஸ் நிறம் வாவ்!!! மஞ்சளில் சிவப்பு உள் ஆஹா!

    ரசித்தேன் அத்தனையையும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  16. படங்கள் அனைத்தும் மிக அழகாக இருக்கின்றன. செம்பருத்திகளும் தான்!

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  17. அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள்.
    அனைவரும் ஆரோக்கியமாகத் தொற்று பயமில்லாமல் சுதந்திரமாக
    இயங்க இறைவன் அருள் புரியட்டும்.

    பதிலளிநீக்கு
  18. வண்ண செம்பருத்திகளின் அழகு பிரமிக்க வைக்கிறது. எத்தனை மென்மை.!!!

    மஞ்சளும் சிவப்பும்,பிங்க்கும் வெள்ளையும்
    அத்தனையும் அருமை. இதை வைத்து காப்பவர்களுக்கு
    கோடி நமஸ்காரங்கள். செம்பருத்தி இரத்த விருத்திக்கு நல்லது.
    உள்ள மலர்ச்சிக்கும் நல்லது. இறைவனுக்கு மிகப் பிடித்த மலர்.
    அன்பு வாழ்த்துகளும் நன்றிகளும்.

    பதிலளிநீக்கு
  19. செம்பருத்தி - பிடித்த பூ! இங்கே தந்திருக்கும் செம்பருத்தி மலர்களின் படங்கள் அனைத்தும் அழகு.

    பதிலளிநீக்கு
  20. வண்ணமயம்...கண்கள் குளிர்ச்சி பெற்றது..வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  21. செம்பருத்தி.. செம்பருத்தி..
    அழகான பூக்கள்.. அழகான படங்கள்...

    செம்பருத்தி மருத்துவ குணங்களை உடையது என்பார்கள்... அவை இப்படியான வண்ணப் பூக்களிலும் இருக்குமா?.. தெரியவில்லை...

    பதிலளிநீக்கு
  22. மாடித் தோட்டமும் பல வர்ணங்களில் செம்பருத்திகளும் அழகு.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!