வெள்ளி, 18 அக்டோபர், 2024

தென்றல் என்னும் தேரில் ஏறி…. ஊர்வலங்கள் போகும் மேகம் மோகம் தந்ததடி ..ஒரு வேகம் வந்ததடி

 

கவிஞர் ராதா எழுதிய பாடலை தானே இசை அமைத்து பாடி இருக்கிறார் T M சௌந்தரராஜன்.

மெல்ல சிரிக்கும் கந்தன் புன்னகையில்
எந்தன் பிள்ளை மனம் பறி கொடுத்தேன்
மெல்ல சிரிக்கும் கந்தன் புன்னகையில்
எந்தன் பிள்ளை மனம் பறி கொடுத்தேன்
அள்ளிக் கொடுப்பதில் வள்ளலவன்
கவிகள் ஆயிரம் பாடவைத்து கேட்பதில் ரசிகன்
மெல்ல சிரிக்கும் கந்தன் புன்னகையில்
எந்தன் பிள்ளை மனம் பறி கொடுத்தேன்

வள்ளி இள மயிலுக்கு இன்பமாய்
வாய்த்த பெருமை தரும் கட்டழகன்

வள்ளி இள மயிலுக்கு இன்பமாய்
வாய்த்த பெருமை தரும் கட்டழகன்
தெள்ளு தமிழ் அமுதுடன் நல்லிசை
தெள்ளு தமிழ் அமுதுடன் நல்லிசை
தெளிவும் தந்து வைத்த பேராளன்
மெல்ல சிரிக்கும் கந்தன் புன்னகையில்
எந்தன் பிள்ளை மனம் பறி கொடுத்தேன்

வெள்ளை மனம் கோயில் கொள்ளும் மன்னவன்
வெற்றி வடிவே..லன் அவன் தென்னவன்

வெள்ளை மனம் கோயில் கொள்ளும் மன்னவன்
வெற்றி வடிவேலன் அவன் தென்னவன்
உள்ளமுடன் உயிர்இனிக்க செய்தவன்
உள்ளமுடன் உயிர் இனிக்கச் செய்தவன்
எங்கும் உவமை இல்லா அன்புமலர் கொய்தவன்
மெல்ல சிரிக்கும் கந்தன் புன்னகையில்
எந்தன் பிள்ளை மனம் பறி கொடுத்தேன்
அள்ளிக் கொடுப்பதில் வள்ளலவன்
கவிகள் ஆயிரம் பாடவைத்து கேட்பதில் ரசிகன்
மெல்ல சிரிக்கும் கந்தன் புன்னகையில்
எந்தன் பிள்ளை மனம் பறி கொடுத்தேன்


================================================================================================

1975 ல் வெளியான அமெரிக்க படமான  Race with the Devil என்கிற படத்தை கட்டிப்பிடித்து - அதாங்க தழுவி - 1981 ல் தமிழில் ஒரு படம் எடுத்தார் பஞ்சு அருணாச்சலம்.  அதற்கு கழுகு என்று பெயரிட்டார்.  S P முத்துடாமல் இயக்கிய அந்தப் படத்துக்கு பாடல்களை பஞ்சு அண்ணனே எழுத இசை அமைத்தார் இளையராஜா.

தெரியும் இல்லையா, பஞ்சு அண்ணன்தான் இளையராஜாவை அன்னக்கிளி மூலம் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர்.  அப்போதைய காலகட்டத்தில் ஒரு பஸ்ஸில் பயணம், சாமியார் திருடர், திகில், நரபலி, ஹிப்னாடிஸம் என்று படம் ஒரு புதிய அனுபவத்தைக் கொடுத்தாலும் முதலில் வெற்றி பெறவில்லை.  ஆனால் ரஜினி ரசிகர்களுக்கு பிற்காலத்தில் சொல்லிச் சொல்லி ரசிக்கும் ஒரு படமாக அது மாறியது.

ரஜினி, YGM, ரத்தி, VKR, தேங்காய் நடித்த  இந்தப்படத்தின் பாடல்கள் எல்லாமே ரசிக்கத் தக்கவை.  இந்தப் படத்தில் 'காதல் என்னும் கோவில்' என்னும் ஒரு பாடலை சூலமங்கலம் சகோதரிகள் மகனான சூலமங்கலம் முரளி பாடி இருந்தார்.

இந்தப் படத்திலிருந்து SPB பாடிய ஒரு இனிமையான பாடல் இன்று...  சரணங்களில்  விளைவையும், நெளிவையும் குழைவையும் கேட்டு கேட்டு ரசிக்கலாம்.  புல்லாங்குழல் ஒலிக்கு பாடலில் முக்கிய இடம்.  

ஒரு பூவனத்திலே...
சுகம் குளு குளுங்குது...
வண்டு தேன் குடிக்குது...
மனம் கிளு கிளுக்குது...

ஒரு பூவனத்திலே சுகம் குளு குளுங்குது
வண்டு தேன் குடிக்குது மனம் கிளு கிளுக்குது
மலர்ச் சோலை வண்ணத்திலே பல கோடி எண்ணங்களே…
மலர்ச் சோலை வண்ணத்திலே பல கோடி எண்ணங்களே…     ஒரு பூவனத்திலே...

தென்றல் என்னும் தேரில் ஏறி….
ஊர்வலங்கள் போகும் மேகம்
மோகம் தந்ததடி ..ஒரு வேகம் வந்ததடி……
ஜோடிக் குயில் கூடு கண்டேன்
கூட்டில் ஒரு ஆசை கொண்டேன்
காதல் பொங்குதடி ..உனை காவல் கொண்டதடி
பூவில் மெல்லிய சாயல் கொண்டவள்
தேனில் ஊறிய திராட்சை கொண்டவள்…..
உன் பூஞ்சிரிப்பில் வரும் கோடி முல்லை
உன் கண்ணழகில் தேனருவி ஓடி வந்ததே…  

ஒரு பூவனத்திலே.. 

மஞ்சள் வெயில் மாலை சூட
பட்டு வண்ண ஊஞ்சல் ஆட
நேரம் வந்ததடி இளம் காதல் வந்ததடி …ஹா...
காற்று வந்து மூங்கில் மீது
தொட்டுச் செல்லும் நேரம் பார்த்து
ராகம் வந்ததடி ஒரு பாடல் வந்ததடி
பாடல் வந்ததும் ஆடல் வந்தது
ஆடல் வந்ததும் கூடல் வந்தது……
கொடி தேன் மணக்கும் உடல் பூ மணக்கும்
விழி தான் மயங்கும் பேரழகை காட்சி தந்ததே

ஒரு பூவனத்திலே 

16 கருத்துகள்:

  1. முருகன் திருவருள் முன் நின்று காக்க..

    பதிலளிநீக்கு
  2. இரண்டாவது பாடல் நான் மிகவும் ரசித்த பாடல்

    பதிலளிநீக்கு
  3. இரண்டாவது பாடலில் 'பூவனம்' பிடித்த வார்த்தையாயிற்று. :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கு ஒன்று தெரியுமா ஜீவி ஸார்?

      ஒவ்வொருமுறை உங்கள் தளத்தின் பெயரைப் பார்க்கும் போதெல்லாம் நான் இந்தப் பாடலை மனதுக்குள் பாடுவேன் என்று...   

      வெங்கட் தளம் பார்க்கச் செல்கையில் முத்துக்களோ கண்கள் பாடல் மனதில் ஓடும்.  ராமலக்ஷ்மி தளம் பார்க்கச் செல்கையில் முத்துதேரே தேரே பாடல் மனதில் வரும்.

      நீக்கு
  4. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  5. முதல் பாடல் பிடித்த பாடல்.
    அடுத்த பாடல் அடிக்கடி கேட்ட பாடல், இனிமையான பாடல்.
    இரண்டு பாடல்களையும் கேட்டு ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  6. சிறப்பான பாடல்களே... ஜி

    கழுகு படத்திற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட அந்த பேருந்து செலவு ஐந்து லட்சம் ரூபாய் மிகப்பெரிய செலவாக பேசப்பட்டது.

    இன்று கூத்தாடனின் சம்பளம் மட்டுமே இருநூறு கோடி.

    நடுத்தர மக்களின் வாழ்வு உயராமலேயே இருப்பதற்கான காரணங்களில் இதுவும் ஒன்று.

    எஸ்.பி.முத்துராமன் டமால் ஆகி விட்டாரே... ஹா.. ஹா.. ஹா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​எல்லாம் காலத்தின் கோலம் ஜி. கோடிகள் அவர்களுக்கெல்லாம் சர்வசாதாரணமாக விட்டன.

      நீக்கு
  7. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். அனைவருக்கும் நல்லதே நடக்கட்டும்.

    இரண்டு பாடல்களும் கேட்டு ரசித்த பாடல்கள். இரண்டாம் பாடல் அதிகம் கேட்டு இருக்கிறேன்.

    S P முத்துடாமல் - S P முத்துராமன்

    பதிலளிநீக்கு
  8. என் தளம் குறித்தும் தளம் நினைவுபடுத்தும் பாடலும்… :) எதனால் என்று சொல்லுங்களேன்.

    பதிலளிநீக்கு
  9. இரண்டாவது பாடல் அந்தக் காலத்திலேயே பிடிக்காது..

    அந்தப் பேருந்து அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது..

    இத்தனைக்கும் கழுகு திரைப் படத்தை
    நான் பார்த்ததில்லை..

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!