இறந்தவர்களுடன் தொடர்பு கொள்வது மறுபிறவி பற்றிய புத்தகம் படித்துக் கொண்டிருந்தேன்.
Dr. Walter Semkiw ஆராய்ச்சியின் படி டொனால்ட் ட்ரம்ப் முற்பிறவியில் நீரோ மன்னர். லாடிமிர் புதின் ஜூலியஸ் சீசராம். மகாத்மா காந்தி வான் ஜோன்ஸ் ஆக மறுபிறப்பு எடுத்திருக்கிறாராம். பிரதமர் நரேந்திர மோடி முற்பிறவியில் சையத் அகமத் கானாம்.முற்பிறவி, மறுபிறவி பற்றிய புத்தகங்கள் சுவாரஸ்யமாக வாசிக்க முடிகிறது. 'சட்' என்று தெரிந்துகொள்ள முடியாத மர்ம வகையில் இருப்பதாலோ என்னவோ நமக்கு நமது முற்பிறவி பற்றி தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வம் வந்து விடுகிறது.
தெரிந்து கொள்ள முடியாத மர்மமான விஷயங்களில் மனிதனுக்கு ஆர்வம் இருப்பது இயற்கைதான்.
ஒரு நகைச்சுவை கதை ஒன்று உண்டு. காந்தியும் நேருவும் ஒரு சமயம் ஒரே நேரத்தில் சிறையில் இருந்த போது நேரு உறக்கத்தில் கனவு காண்பதாக! கனவில் இந்திரன் வந்து நேருவுக்கு சகல வசதிகளும் செய்து கொடுத்துவிட்டு, ஒரு அறையை மட்டும் திறக்க கூடாது என்று சொல்லிவிட்டு செல்வார். அத்தனை வசதிகள் கிடைத்தும் நேருவுக்கு அந்த திறக்கக் கூடாத கதவின் மீது தான் அதிக சுவாரஸ்யம் ஏற்படும்.
இது மனித இயல்பு. இது போல நமக்கு தெரியாத, புரிந்து கொள்ள முடியாத விஷயங்களில் தான் ஆர்வம் அதிகம் வருகிறது. அப்படியான ஆர்வம் நேருவுக்கும் வந்ததால் ஏற்படும் ஒரு நகைச்சுவைக் கற்பனைக் கதை.
இந்து மதத்தில்தான் மறுபிறப்பு உண்டு போன்ற நம்பிக்கைகள்இருக்கின்றன. கிறிஸ்தவ மதத்திலோ, முஸ்லிம் மதத்திலோ இந்த நம்பிக்கை கிடையாது. ஆனால் முற்பிறவி பற்றிய ஆராய்ச்சிகள் வெளிநாடுகளில் தான் அதிகம் நடக்கின்றன. இந்தியாவில் அதிகம் நடப்பதில்லை. நம்புபவர்கள் குறைவு ; எதிர்ப்பவர்கள் அதிகம். இது ஒரு நகைமுரண்.
முன்பு எங்கள் நண்பர் ஒருவர் நங்கநல்லூரில் ஒரு ஜோசியரை பார்த்தார். அவர் ஒரு சாமியார். அவரைப் பார்ப்பதற்கு நிறைய பேர் பெரிய ஹாலில் கூட்டமாகக் காத்திருப்பார்கள். நீங்கள் அவரிடம் ஒன்றுமே சொல்ல வேண்டாம். உங்கள் முறை வந்து உங்கள் பெயர் அழைக்கப்பட்டதும் அந்த சாமியார் கட கட கடவென்று விஷயங்களை சொல்லுவார், பக்கத்தில் ஒருவர் பேப்பரில் எழுதி நம்மிடம் கொடுத்து விடுவார். கிறுக்கலாக இருக்கும்.
( இன்னொரு மாம்பலம் ஜோசியர் - பாலன் நாயர் - அவர் பலன்களை சொல்லும்போது நாம்தான் வேகமாக பேப்பரில் எழுதிக்கொள்ள வேண்டும்)
அதில் நாம் எங்கே இருக்கிறோம், நாம் யார், பெயர் என்ன, தொழில் என்ன, எதற்காக வந்திருக்கிறோம் என்றெல்லாம் வரிசையாக சொல்வார். சரியாக இருக்கும். நமக்கு வியப்பு மேலோங்கும். பிறகு இனி நடக்கவிருப்பதாக, நான் எதற்காக அவரை நாடிப் போயிருக்கிறோமோ அதையும் நாம் சொல்லாமல் அவரே சொல்வார். ஆனால் அதற்கான பலனாக, தீர்வாக அதற்காக, அவர் சொல்வதில், அவ்வளவு பலன் இருக்காது.
உதாரணமாக தன் லாரி காணாமல் போய்விட்டது என்றுதான் என் நண்பர் அங்கு போயிருந்தார். இத்தனை விவரங்களையும் அவருக்கு - அவரைப் பற்றிய விவரங்களை அவருக்கு சரியாக சொன்னார். பிறகு லாரி எங்கு இருக்கும் என்பதை பற்றி இரண்டு இடங்கள் சொன்னார். நம்பிக்கையாக வந்து தேடித் பார்த்தபோது இரண்டு இடங்களிலுமே அவை இல்லை. அவர் சொன்ன நேரத்திற்குள் அது நகர்ந்து போய் விட்டதா என்ன என்று தெரியாது!!
சொல்ல வருவது என்னவென்றால், முன்னால் நடந்தது பற்றி சரியாக சொல்ல முடிகிறது. நாடி ஜோசியத்திலும் அப்படித்தான் என்று நினைக்கிறேன். ஆனால் அப்புறம் நடக்கப்போவது பற்றி யாராலும் சரியாக சொல்ல முடிவதில்லை. எந்த விஞ்ஞானமும், எந்த மெய்ஞானமும் அதை செய்(சொல்)வதில்லை. செய்ய / சொல்ல முடிவதில்லை. முற்பிறவியில் நான் என்னவாக இருந்தேன் என்று கண்டுபிடித்து சொல்பவர்கள், அடுத்த பிறவியில் நான் என்னவாக இருப்பேன் என்று சொல்ல முடிவதில்லை. ஒருவேளை அதற்கு காரணம் என்னுடைய கர்மா கணக்கு இன்னும் மிச்சம் இருப்பதால், அதை பொறுத்துதான் அடுத்த பிறவி அமையும் என்பதால் இருக்கலாம்.
அந்த நங்கநல்லூர் ஜோசியரை பார்த்து வந்த நண்பரிடம் நான் இப்படி சொன்னேன்... "இதுவரை நான் என்ன செய்தேன், நான் யார், எங்கு வேலை செய்கிறேன் என்று தெரிந்து கொள்வதற்காக ஆயிரம் ரூபாய் கொடுத்து நான் போய் கேட்டு தெரிந்து கொள்ள மாட்டேன். அதெல்லாம் எனக்கே தெரியும். அடுத்து என்ன நடக்கும் என்பது தான் எனக்கு தெரிய வேண்டும். அது பெரும்பாலும் அவர்கள் சொல்வது நடப்பதில்லை. அப்புறம் எதற்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து நான் அங்கு போக வேண்டும்?" என்று கேட்டேன்.
இங்கு யாருக்காவது அனுபவத்தில் இது மாதிரி ஜோசியர்கள் அல்லது ஆன்மீகத்தில் உயர்ந்தவர்களோ அடுத்த என்ன நடக்கும் என்பது சொன்னது பலித்திருக்கலாம். விதிவிலக்குகள் இருக்கும். அவர்கள் ஆன்மீக உயர்நிலை உடையவர்கள் என்பது என் கணக்கு. சொல்பவர்கள் மிக உயர்நிலையும், அதை பெறுபவர்கள் ஆன்மீக உயர் நிலையில் உடையவர்கள். உங்களில் யாருக்காவது இப்படி அனுபவம் இருந்தால் சொல்லுங்களேன்...
=====================================================================================
தன்னைவிட வயது மூத்த (மோகமுள் அளவு அல்ல!) பெண்ணைக் காதலிக்கிறான் பிச்சுமணி. உமாவுக்கு அவனைப் பிடித்திருக்கிறதுதான். ஆனால் சமூகத்துக்கு பயந்தும் அவன் தாத்தா ராமதுரைக்கு பயந்தும் பேசுகிறாள்..
எனக்குப்பிடித்த கதைகளில் ஒன்று.
"பிச்சுமணி! உன் தாத்தாவுக்கு இருப்பதெல்லாம் நீ ஒருவன்தான்.அவரைப் போல உன் மீது அன்போ உன் எதிர்கால நன்மைகளில் அக்கறையோ வேறு யாராலும் வைக்க முடியாது. அதனால் உன் அந்தஸ்துக்கும் வயசுக்கும் உன் எதிர்காலத்துக்கும் சரியான ஒரு பெண்ணைத்தான் நீ கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்றும், பொருத்தமில்லாத பெண்ணை நீ நாடக் கூடாது என்றும், அவர் (ராமதுரை) நினைப்பதும், அதற்காக உன்னோடு சண்டை பிடிப்பதும் இயற்கைதான். அது நியாயந்தான்! அவரைப் போலவே நானும் நினைக்கிறேன். ஆகவே என்னை முன்னிட்டு உங்களுக்குள் இப்படி ஒரு சண்டை மூன்டிருக்கவே வேண்டியதில்லை"
"சரி உமா! என் கல்யாணத்துக்கு உங்களுக்கு ஒரு இன்விடேஷன் அனுப்ப வேண்டும் என்றோ, என் தாத்தா நிச்சயித்த பெண்ணையே நான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்றோ நீங்கள் ஏன் சொல்லவில்லை?"
குண்டு மல்லிகை - அரு ராமநாதன்.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
பெரும்பாலான கதைகள் ஒரு பேசப் பட்ட வாக்கியத்தில் முடிகின்றன.
வாழ்க்கையின் அபத்தத்தை சுட்டிக்காட்டி ஒரு அபத்தத்தில் முடிகின்றன. சிறுகதை ஒரு தனிப்பட்ட சுருக்கமான அனுபவத்தைப் பேசுகிறது. அன்றாட அலுப்பு வாழ்க்கையில் உயிரின் புதிர் சட்டென்று புரியும் கணம் ஒன்றை அது சொல்லும். அந்த கணத்தை ரெவேலேஷன் அல்லது வெளிப்பாடு அல்லது epiphany என்கிறார்கள். அவதாரம், அற்புதத் தோற்றம் என்று பலதும் சொல்கிறார்கள். இது zen தத்துவத்திலும் உண்டு. Satori என்பார்கள்.
- சுஜாதா ஓரிரு எண்ணங்கள் சும்மா
===================================================================================================================
\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\
ரீல்ஸில் பார்த்தேன். நன்றாகத்தான் பாடினார். ஆனால் ஆடம் போட்டிருப்பது மறுபடியும் காதுக்காக! காது ரிங்!
==========================================================================================
மாக்னெட்டா? மாக்னடேயா?!
======================================================================================
======================================================================================
ஜோக்ஸ்... ஜோக்ஸ்....
எப்போதும் சொல்வதுதான். நேற்று என்பது கடந்த காலம். தீரும்ப திருத்த முடியாதது. நாளை என்பது வரப் போகும் ஒன்று. எப்படி இருக்கும் என்று தெரியாது. இன்று என்பதே நிஜம். செய்வன திருந்தச் செய்.
பதிலளிநீக்குஇது பிறவிகளுக்கும் பொருந்தும்.
ஒரு காலத்தில் ஜோஸ்யத்தின் மீது நம்பிக்கை இருந்தது தற்போது ஜோஸ்யரிடம் செல்வதில்லை.
சுஜாதா சுஜாதா தான்.தத்துவத்தை விளக்குவதில் ஆசான்.
என்னங்க இது உச்ச நீதி மன்றம் படம் போட்டு ஹை கோர்ட் சொன்னது என்னு துணுக்கு போடுகிறீர்கள்.
நல்லார் ஒருவர் உளரேல் எல்லார்க்கும் பெய்யுமாம் மழை. நல்லார் யாரும் இல்லை தாண்டிச்செல்கிறது மழை மேகம். கவிதையை சொல்கிறேன்.
ஜோக்ஸ் இந்தத் காலத்திற்கு ஒத்து வரவில்லை. ஒரு ரகசியம். ஆஃபிஸில் கோழித்தூக்கம் போட்டிருக்கிறேன் பல விடைகளும் கிடைக்கும் கனவாக.
Jayakumar
'நேற்று என்பது உடைந்த பானை .நாளை என்பது மதில் மேல் பூனை. இன்று என்பது கையில் இருக்கும் வீணை' என்று சொல்வார் எங்கள் யோகா ஆசிரியர் அது போல இருக்கிறது!
நீக்குஎனக்கு அதிகம் லிபக்காததால் ஜோசியத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை !! பலிக்கும் போது நம்ப தொடங்கி விடுவேன் என்று நம்பலாம்!
நானும் ஆபீஸில் அப்படி தூங்குவது சாத்தியமா என்று எனக்கு அடிக்கடி சந்தேகம் வரும் என்னுடைய வேலை முறை அப்படி தூங்க விடாது! முடியாது!
நீக்குஏன் தனி கேபின் அல்லது சாப்பாட்டு அறை, ரெக்கார்ட் ரூம் எதுவும் இல்லையா?
நீக்குஎல்லா நடைமுறையிலும் அது சாத்தியமில்லையே
நீக்குதெற்கே வறட்சி என்று எப்படிச் சொல்கிறீர்கள்? நேற்றுக்கூட இங்கு நல்ல மழை. எனக்கு சிறு தூரல்கள் பெய்யும்போது நடந்து செல்வது மிகவும் பிடிக்கும். தாங்க முடியாத காற்றுடன் கூடிய அடைமழையில் நடந்து செல்வதும் பிடிக்கும், மற்றவர்கள் ஏதேனும் நினைக்கக்கூடாதே எனத் தவிர்த்துவிடுவேன்.
பதிலளிநீக்குஉங்கள் ஊர் நேற்றும் இன்றும் செம கிளைமேட். நானும் இங்கு தானே இருக்கிறேன்! ரொம்பவும் ரசிக்கும்படி இருக்கிறது.
நீக்குமழையில் நனைந்து கொண்டு செல்வது எனக்கும் பிடிக்கும். நானும் இரண்டு காரங்களால் செய்வதில்லை. ஒன்று, வயது. இன்னொன்று உடல்நிலை!
நாங்கள் மெஜெஸ்டிக் அருகில் இருக்கிறோம். ஹரப்பனஹல்லி 300 கிமீக்கும் அதிக தூரம் என்று நினைக்கிறேன். நீங்க இதைச் சாக்கிட்டு அந்தப் பகுதியில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்குச் சென்றிருக்கலாம்.
நீக்குநேரமும் இல்லை. சந்தர்ப்பமும் சரியில்லை நெல்லை.
நீக்குகுருடி, குரூபி நொண்டி போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் ரொம்ப rudeஆகிருப்பதாகத் தோன்றுகிறது.
பதிலளிநீக்குநாம் ரொம்பவும் நாசூக்குக்குப் பழகி விட்டோம்!
நீக்குஜோதிடம் பலவும் பலித்திருக்கின்றன. பலிக்காதவைகளும் உண்டு. அது ஜோசியர்களையும் நம் நேரத்தையும் பொறுத்தமு.
பதிலளிநீக்குஜோசியம் பலிப்பது என்பது, ஜோசியர்களின் வாக்கு காலம், நாக்கு ராசி மட்டும் இல்லை! அதிர்ஷ்டமும் கலந்து இருக்கிறது!!
நீக்குஜோசியம் பலிப்பதற்கும் ஆன்மீகத்தில் உயர்வுக்கும் சம்பந்தமில்லை. ஆன்மீகத்தில் உயர்வு பெற்றால் ஜோசியம் பார்க்கச் செல்ல மாட்டார்கள். ஜோசியருக்கு வாக்குப் பலிதம் இருக்கவேண்டும். வத வதவென காசுக்காக ஜோசியம் சொல்பவர்களது ஜோசியம் நாற்பது சதவிகிதம் பலித்தாலே அதிகம். அதிலும் யூடியூபுகளில் இந்த ராசிக்கு இத்தனாம் தேதியிலிருந்து வாழ்க்கை மாறப்போகிறது, அதிர்ஷட் அடிக்கிறது என்று உளரும் ஜோசியர்கள் மிகவும் பெருகிவிட்டனர். துடைப்பக்கட்டைக்கு பட்டுக் குஞ்சலம் போல இவர்கள் ஶ்ரீ ஶ்ரீ, பிரம்மஶ்ரீ, திலகம், பூஜ்யஶ்ரீ என்றெல்லாம் பட்டங்களைப் போட்டுக்கொள்வது எரிச்சலைத் தருகிறது.
பதிலளிநீக்குநீங்கள் சொல்லியிருப்பதை நூறு சதவீதம் ஏற்றுக் கொள்கிறேன் நெல்லை!
நீக்குஅது சரி, அகத்தியர் வாக்கு படிக்கும் ஜோசியர் ஜோசியம் பார்த்து இருக்கிறீர்களா?!
அதையும் விட்டுவைப்பேனா ஸ்ரீராம். அதையும் பார்த்திருக்கிறோம். இருந்தாலும் அவை பலித்தமாதிரி எனக்குத் தெரியவில்லை.
நீக்கு50 ; 50. நடந்தால் நல்ல ஜோசியர்! நடக்காவிட்டால்?
நீக்குஎன்னாது..?? மோடி போன ஜென்மத்தில் சையத் அகமது கானா..???!!! ஜாக்கிரதை இந்துத்துவாகாரர்கள் அடிக்க வந்துவிடப் போகிறார்கள்.
பதிலளிநீக்குபுத்தகம் போன வண்டமே வெளியாகிவிட்டது இன்னும் எவர் கண்ணிலும் படவில்லை போலிருக்கிறது
நீக்குநான் ஜோசியம் கேட்டு பலித்ததும் உண்டு, ஜோசியம் சொல்லி பலித்ததும் உண்டு. என் கணவரின் பாஸாக இருந்த ஓமானி ஒருவர் அரசாங்க வேலையைத் துறந்து விட்டு பிரைவேட் கம்பெனி ஒன்றில் சேர்ந்த புதிது, என்னிடம் தன் கையை காட்டினார். நான் அவர் இன்னுமொரு வேலைக்கு மாறுவார் என்றேன். அதற்கு அவர், "நோ! நோ! ஐ வில் நாட்சேஞ்ச்!" என்றார். ஆனால் அடுத்த மாதமே அந்த் கம்பெனியை விட்டு விலகி கோகோ கோலாவில் சேர்ந்தார். கடைசி வரை அதில்தான் இருந்தார்.
பதிலளிநீக்குஎன் அக்காவின் பக்கத்து வீட்டுப் பெண்மணி ஒரு முறை என்னிடம் கையை நீட்டி, "என் கை எப்படி இருக்கிறது என்று பார்த்து சொல்லுங்கள்" என்றார். நான் அவர் கையை பார்த்து விட்டு, "உங்களுக்கு பெரிய வீடு உண்டு" என்றேன். அவர், " இந்த வீடுதான் இருக்கு" என்றார். அவர்கள் அப்போது இருந்தது எல்.ஐ.ஜி. ஃப்ளாட், 500 சதுர அடியில் சிங்கில் பெட் ரூம். இரண்டே மாதங்களில் அந்த வீடுகளை விரிவாக்கிக் கொள்ளலாம் என்று கார்பரேஷன் அப்ரூவல் கொடுக்க, அவர்கள் வீடு 1500 அடியில் பெரிதாகி விட்டது. அவருக்கு ஒரே சந்தோஷம்.
எல்லாவற்றிர்க்கும் நேரம் இருப்பது போல ஜோசியர்களுக்கும் நேரம் உண்டு. ஒரு சமயம் பலிக்கும் ஜோசியம், இன்னொரு சமயம் பலிக்காது.
பாவெ மேடத்தைப் பார்த்தால் கை நீட்டிவிட வேண்டியதுதான் (கையில் பிரம்பு இல்லாத சமயமாகப் பார்த்து)
நீக்குஎனக்கும் இது இவ்வளவு நாளாக தெரியாமல் போய்விட்டதே...
நீக்குகையை நீட்டிடுவோம்!
எனக்கும் இது இவ்வளவு நாளாக தெரியாமல் போய்விட்டதே...
நீக்குகையை நீட்டிடுவோம்!
நகர்ந்து செல்லும் மேகம் பற்றிய கவிதை அருமை. ஜோக்குகள் எல்லாமே நினைவில் நின்றவை.
பதிலளிநீக்கு//ஆனால் ஆடம் போட்டிருப்பது மறுபடியும் காதுக்காக!// ஆடம் என்றால் என்ன?
Magnate என்பதி மேக்னடே என்று உச்சரிக்கக் கூடாது, மேக்னெட் என்றுதான் உச்சரிக்க வேண்டும்.
நன்றி பானு அக்கா. படம் ஆடம் ஆகிவிட்டது.
நீக்குமிக நல்லா பதிவு ரசித்தபடி தேன் இப்படிக்கு பாரதி
பதிலளிநீக்குமன்னிக்கவும். எனக்குப் பக்கத்தில் உட்கார்திருந்தவர்
பதிலளிநீக்குஎன்னுடைய ஃபோனை வாங்கி அதன் மூலம்
கருத்துப் பதிந்துவிட்டார். என்னைக் கேட்டால் மிக நல்ல
பதிவு என்று சொல்லியிருப்பேன்.
அவருக்கே எபிக்கு வரணும்னு தெரிந்திருக்கிறது. நீங்களானா நேற்று வராமல் மட்டம் போட்டுவிட்டீர்கள். விருந்து பலமோ?
நீக்குYes. Zzzzzzzzzzz
நீக்குமுதல் பகுதி சுவாரசியமான சப்ஜெக்ட். கேட்கவும் வாசிக்கவும்...
பதிலளிநீக்குஆனால் எனக்குத் தனிப்பட்ட வகையில் எந்த அனுபவமும் இல்லையே. நான் சென்றதில்லையே...
கீதா
சுவாரசியமான விஷயங்கள் தான் எத்தனை இருக்கின்றன உலகில், இல்லையா கீதா?
நீக்குபிறகு நடக்கப்போவதை யாராலும் சொல்வது கடினம். உங்களுடைய முடிவுகள் நிறைய இருக்குமல்லவா? ஆனாலும் கிரக நிலைகளை வைத்து வெளிநாடு போவான் அங்குதான் பல வருடங்கள் என்றெல்லாம் சொல்ல முடியும். நல்ல ஜோசியர் என்னிடம் சொன்னது பிரியங்கா பிரதமர் ஆனபின் இந்தியா ஏழாகப் பிரியும் என்று. ஆனால் அவருக்கு மோடி என ஒருவர் வருவார் என 97ல் தெரிந்திருக்கவில்லை. அப்போதே வீராணம் மறையுமென்றார். பாலாஜி ஹசன் கூட மூன்றாவதாண்டு இறுதியில் ஒருவன் ஒழிவான் என்றாரே
பதிலளிநீக்குஅவர்கள் தான் என்ன செய்வார்கள்! சொல்லி பார்க்கிறார்கள்... ஒரு லாஜிக் பார்த்து.... ஒரு கணக்கு போட்டு....
நீக்குநடக்க வேண்டுமே!
மீதிக்கு அப்புறம் வருகிறேன், ஸ்ரீராம்.
பதிலளிநீக்குகீதா
மெதுவா வாங்க கீதா...
நீக்கு.
நமக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை கிடையாது. கடவுள் நம்பிக்கை உண்டு.
பதிலளிநீக்குகவிதை. பிடித்திருந்தது.
கடுதாசி கிழித்த இலட்சணம், கோலி , நீர் யானை, எட்டணா கடன் சிரிப்பை வரவைத்தது.
எனக்குப்பிடித்த கதைகளில் ஒன்று.//
பதிலளிநீக்குநன்றாக இருக்கிறதே டயலாக். முழுக்கதையும் கிடைத்தால் நல்லாருக்கும்.
கீதா
சுஜாதாவின் எண்ணங்கள் - அவர் தனிதான்!
பதிலளிநீக்குஇது என்ன திடீர்னு மனைவியின் சமையல் உடை பற்றி விமர்சிப்பது தவறல்ல என்று? ஒரு வேளை இதுக்கு விவாகரத்து கேட்டு ஏதாச்சும் பெண் வழக்கு போட்டிருக்குமோ?
ஐகோர்ட் தீர்ப்பு - பின்ன அதை எழுதிய நீதிபதிகளும் வீட்டில் விமர்சிச்சிருக்க மாட்டாங்களா என்ன!!! அப்ப எப்படி தப்புன்னு சொல்ல முடியுமாம் ஹிஹிஹிஹி....
அப்ப வைவெர்ஸா!! இது பொருந்தும்? ஹாஹாஹாஹாஹா...(இதுக்கு எதுக்கு தீர்ப்பு? ஏற்கனவே நடக்கறதுதானேன்னு இங்க ஆண் கிச்சன் கில்லாடிகளின் மைன்ட் வாய்ஸ்!!!!!!!! பெயர் எல்லாம் எனக்கு தெரியாதுங்கோ!)
கீதா
ஸ்ரீராம் கவிதை நல்லாருக்கு. அதானே அது எங்க ஊருக்கு வந்து பெய்யுது!
பதிலளிநீக்குஎன்னா வெதர்....என்னா வெதர்....குளு குளுன்னு...சிலு சிலுன்னு...
கீதா
யமுனை - கவிதை சூப்பர், ஸ்ரீராம். அதானே உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்தால் பின்ன என்ன நடக்குமாம்?
பதிலளிநீக்குகீதா
ஸ்ரீராம், நீங்க இப்பலாம் பாடகிகளின் காது தொங்கட்டான்களைத்தான் பார்க்கறீங்க போல!!! வீட்டுல காதுக்கு விஷயம் போனா...!!!
பதிலளிநீக்குபெங்களூர்/கர்நாடகா மருமகளாகிட்டாங்க!
கீதா
பிஸினஸ் மாக்னடே - ஆமாம்.
பதிலளிநீக்குபொதுவா காந்தம் என்ற பொருளில் சொல்லி சொல்லிப் பழகிட்டோம்.
கீதா
கடிதாசு கிழிச்ச லெட்சணம் பல வீடுகளில் நடக்கும் ஒன்று...நானும் எழுதுகிறேன் எழுதுகிறேன்....ஹூம்
பதிலளிநீக்குகீதா
படக் கதை - எல்லா காலத்திலும் நடக்கும் ஒன்றுதான் போல.
பதிலளிநீக்குநீர் யானை - சிரித்துவிட்டேன்.
கீதா