15.8.25

தஞ்சமென்றே யுரைப்பீர் அவள் பேர் சக்தி ஓம் சக்தி , ஓம்சக்தி, ஓம்

 இன்று இந்தியாவின் 79 வது சுதந்திர தினம்.

A V மெய்யப்ப செட்டியார் தயாரித்து அவரே இயக்கிய கடைசி படம்.  இந்தப் படத்துக்குப் பின் அவர் தன் நிறுவனத்தை காரைக்குடியிலிருந்து சென்னை கோடம்பாக்கத்துக்கு மாற்றி விட்டார்.  V K ராமசாமியின் முதல் பாடம்.  தனது 21 வயதில் கிழவனாக நடித்திருக்கிறார்.  1947 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியான இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றது.   செம வசூல்.ப. நீலகண்டன் 1936 ல் வெளியான இரு சகோதரிகள் படக்கதையைத் தழுவி தியாக உள்ளம் என்ற ஒரு கதையை எழுதி இருந்தார்.  அதுதான் நாம் இருவர் என்று படமாக்கப்பட்டது.  சில காட்சிகள் கலரில் கூட வெளியாகி இருக்கிறது.  குமாரி கமலாவின் நாட்டியம் வெகு பிரபலம்.  எஸ் வி சகஸ்ரநாமம்தான் நாயகனாக நடித்திருக்க வேண்டியது.  அவருக்கு தேதிகள் ஒத்துவராததால் டி ஆர் மகாலிங்கம் நடித்தார்.

இசை ஆர். சுதர்சனம்.  பாரதியார் பாடல்.

ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று
ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று
ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று
ஆடுவோமே

பெண் : எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு
எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு
நாம் எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு
எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு
நாம் எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு
சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே
சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே

பெண் : சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே
இதைத் தரணிக்கெல்லாம் எடுத்தோதுவோமே
சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே
இதைத் தரணிக்கெல்லாம் எடுத்தோதுவோமே
ஆடுவோமே

பெண் : உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்
வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்
வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்
வீழலுக்கு நீர் பாய்ச்சி மாயமாட்டோம்
வீழலுக்கு நீர் பாய்ச்சி மாயமாட்டோம்
வெறும் வீணருக்கு உழைத்துடலம் ஓயமாட்டோம்
ஆடுவோமே

பெண் : நாமிருக்கு நாடு நமதென்பறிந்தோம்
நாமிருக்கு நாடு நமதென்பறிந்தோம்
இது நமக்கே உரிமையாம் என்பறிந்தோம்
நாமிருக்கு நாடு நமதென்பறிந்தோம்
இது நமக்கே உரிமையாம் என்பறிந்தோம்
பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம்
பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம்
பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம்
பரிபூரணனுக்கே அடிமை செய்து வாழ்வோம்

பெண் : ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று
ஆடுவோமே….
ஆடுவோமே….ஆடுவோமே….ஆடுவோமே….ஆடுவோமே…


=========================================================================================

அப்போது மட்டுமல்ல, இப்போதும் பாரத இளைஞர்களை பாரதத்தைக் காக்க இதுபோல அழைக்க வேண்டிதான் இருக்கிறது.


1.ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா 
உறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா 
களிபடைத்த மொழியினாய்  வா வா வா 
கடுமை கொண்ட தோளினாய் வா வா வா 

தெளிவு பெற்ற மதியினாய்  வா வா வா 
சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா
தெளிவு பெற்ற மதியினாய்  வா வா வா 
சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா  
எளிமைகண் டிரங்குவாய் வா வா வா 
எளிமைகண் டிரங்குவாய் வா வா வா 
ஏறுபோல் நடையினாய் வா வா வா 

2.மெய்மை கொண்ட நூலையே =அன்போடு வா வா வா 
வேதமென்று போற்றுவாய் வா வா வா 
பொய்மை கூற லஞ்சுவாய் வா வா வா 
நொய்மையற்ற சிந்தையாய்  வா வா வா 
நோய்களற்ற உடலினாய் வா வா வா 
தெய்வ சாபம் நீங்கவே -நீங்கள் சீர்த் 
தேசமீது தோன்ருவாய் வா வா வா 

3.இளையபார தத்தினாய் வா வா வா 
எதிரிலா வலத்தினாய் வா வா வா 
இளையபார தத்தினாய் வா வா வா 
எதிரிலா வலத்தினாய் வா வா வா 
ஒளியிழந்த நாட்டிலே-நின்றேறும் 
ஒளியிழந்த நாட்டிலே-நின்றேறும் 
உதய ஞாயிரறோப்ப  வா வா வா 

களையிழந்த நாட்டிலே-முன்போலே 
கலைசிறக்க வந்தனை வா வா வா
களையிழந்த நாட்டிலே-முன்போலே 
கலைசிறக்க வந்தனை வா வா வா 
விளையுமாண்பு யாவையும் -காத்தல் போல் 
விளையுமாண்பு யாவையும் -பார்த்தன் போல் 
விழியினால் விளக்குவாய் வா வா வா 

4.விந யநின்ற நாவினாய்  வா வா வா 
முற்றிநின்ற வடிவினாய் வா வா வா 
முழுமைசேர் முகத்தினாய வா வா வா 
கற்றலொன்று பொய்கிலாய் வா வா வா 
கருதிய தியற்றுவாய் வா வா வா 
ஒற்றுமைக்கு ளுய்யவே -நாடெல்லாம் 
ஒரு பெருஞ் செயல்செய்வாய் வா வா வா 


=============================================================================================


நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்
நிறைந்த சுடர்மணிப்பூண்
நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்
நிறைந்த சுடர்மணிப்பூண்
பஞ்சுக்கு நேர்பல துன்பங்க ளாம் இவள்
பார்வைக்கு நேர்பெருந்தீ.
வஞ்சனை இன்றிப் பகையின்றிச் சூதின்றி
வையக மாந்தரெல்லாம்
வஞ்சனை இன்றிப் பகையின்றிச் சூதின்றி
வையக மாந்தரெல்லாம்
தஞ்சமென்றே யுரைப் பீர் அவள் பேர் சக்தி
ஓம் சக்தி , ஓம்சக்தி, ஓம்
தஞ்சமென்றே யுரைப் பீர் அவள் பேர் சக்தி
ஓம் சக்தி , ஓம்சக்தி, ஓம்

2.நல்லதும் தீயதுஞ் செய்திடும் சக்தி
நலத்தை நமக்கிழைப்பாள்;
அல்லது நீங்கும்" என்றேயுல கேழும்
அறைந்திடு வாய்முரசே
சொல்லத்தகுந்த பொருளன்று காண் இங்குச்
சொல்லு மவர்தமையே
அல்லல் கெடுத்தம ரர்க்கினை யாக்கிடும்
ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம்.


3.நம்புவதேவழி என்ற மறைதன்னை
நாமின்று நம்பிவிட்டோம்
கும்பி ட்ட நேரமும் "சக்தி" யென்றாலுனைக்
கும்பிடுவேன் மனமே .
ம்புக்குந தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும்
அச்சமில்லாதபடி 
ம்புக்குந தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும்
அச்சமில்லாதபடி 
உம்பர்க்கும் இம்பர்க்கும் வாழ்வு தரும் வரம் 
ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம்.

5. வெள்ளை மலர்மிசை வேதக் கருப்பொரு
ளாக விளங்கிடுவாய்!
வெள்ளை மலர்மிசை வேதக் கருப்பொரு
ளாக விளங்கிடுவாய்!
தெள்ளு கலைத்தமிழ் வாணி நினக்கொரு
விண்ணப்பம் செய்துடுவேன் .
எள்ளத் தனைப்பொழு தும்பய னின்றி
யிராதென்றன் நாவினிலே
எள்ளத் தனைப்பொழு தும்பய னின்றி
யிராதென்றன் நாவினிலே
வெள்ள மெனப்பொழி வாய்சக்திவேல் சக்தி,
வேல்சக்திவேல் சக்தி வேல்!
வெள்ள மெனப்பொழி வாய்சக்தி வேல் சக்தி,
வேல் சக்தி வேல் சக்தி வேல்!

 

33 கருத்துகள்:

  1. அனைவருக்கும் இனிய சுதந்திரதின நல்வாழ்த்துகள்.

    பாரதி பற்றிப் படிக்கும்போது என்னவோ எனக்கு கீதா சாம்பசிவம் மேடம் மற்றும் அனு பிரேம் அவர்கள் நினைவுக்கு வருகிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை.
        
      கீதா அக்கா இன்று தோஹா செல்கிறார்.  குட்பை டு ஸ்ரீரங்கம் என்று அவர் எழுதி இருந்ததைப் படிக்கும்போது மனதுக்குள் கஷ்டமாக இருந்தது.  

      நீக்கு
    2. ஓ...முகநூலில் தெரிவித்திருந்தாரா? அவரது பதிவில் படித்த நினைவு இல்லையே என்று யோசித்தேன். தோஹாவும் நல்ல இடம்தான். அக்டோபரில் வெயில் குறைந்திருக்கும். இப்போ செம்ம வெயில் அங்கு. கத்தார் பற்றிப் படிக்கும்போது எனக்கு அந்த ஊர் நினைவுகள் எழுகின்றன. பிறகு ஒரு சமயம் அவற்றைப்பற்றி எழுதுகிறேன்.

      நீக்கு
    3. தோஹாவில் நெட், வாட்சாப்பெல்லாம் கிடையாது என்று சொல்லி இருந்தார்.

      நீக்கு
    4. சகோதரி கீதா சாம்பசிவம் அவர்களின் பேச்சு எனக்கும் மன வருத்தத்தை உண்டாக்கியது. எங்கிருந்தாலும் அவர் மனது சமாதானமாகி நலமுடன் இருக்க வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.🙏.

      நீக்கு
    5. அவருடன் பேசினீர்களா?

      நீக்கு
    6. இல்லையே..! அவர் ஃபோன் நம்பர் என்னிடமில்லை. அவரைப் பற்றி நானே இங்கு( எபியில்) கேட்க வேண்டுமென்று இருந்தேன். மன வருத்தத்தில் அவரின் பதிவுகளில் அவர் சரியாக பதில்கள் ஏதும் அளிப்பதில்லை. அவர் பையனுடன் சிறிது காலம் இருந்து வந்தால் அவர் மனதுக்கும் ஆறுதலாக இருக்கும். அவரின் ஆசைப்படி இருந்து விட்டு வரட்டும். இப்போதைக்கு அவருக்கு இந்த மன நிம்மதி தேவைதான். இறைவன் அவருக்குத் துணையாக இருக்கட்டும்.

      நீக்கு
    7. நெட் உண்டு. வாட்சப் பொதுவா மிடில் ஈஸ்ட்ல கிடையாது, காரணம் அரசு போன் நிறுவனத்துக்கு நஷ்டம் ஏற்படும் என்று. ஸ்கைப் வந்த புதிதில் துபாயில் இன்ஸ்டால் செய்வது முடியாது. அதனால் வேறு தேசத்தில் இன்ஸ்டால் செய்து அங்கு உபயோகிக்க முடியும். எடிஸலாட்டை உபயோகிக்காம வாட்சப்பிலயும் ஸ்கைப்பிலயும் பேசிட்டீங்கன்னா....

      நீக்கு
    8. திருமதி. கீதா சாம்பசிவம் அவர்களை அடிக்கடி நினைப்பதற்கு. அவர் மகனுடன் மன ஆறுதலாக இருப்பது நல்லது.

      நீக்கு
    9. தோஹா சென்று அடைந்து விட்டதாக கீதா அக்கா தகவல் அனுப்பி இருக்கிறார்.

      நீக்கு
  2. மகவுப் பொருத்தமான பாடல்களைப் பகிர்ந்துள்ளீர்கள்.

    முதல் பாடலையும், செந்தமிழ் நாடென்னும் போதினிலே பாடலையும், பசங்களைத் தூங்கவைக்கும்போது நான் பாடுவது நினைவுக்கு வருகிறது.

    வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின் வேறொன்றும் கொள்வாரோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுதந்திரமில்லா வாழ்க்கசி எப்படி இருக்கும் என்பதை இந்த தலைமுறை மக்கள் அறியவில்லை என்று தெரிகிறது.  இன்றும் அவர்கள் கேடு கெட்ட அரசியல் கட்சிகளின் அடிமைகளாகத்தான் இருக்கிறார்கள்.

      நீக்கு
  3. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா.. வணக்கம். பிரார்த்திப்போம்.

      நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள். அருமையான பாடல்கள். பாரதியாரின் பாடல்களை எப்போதும் கேட்டாலும், உள்ளம் நெகிழ்ந்து உணர்ச்சி வசபபடுவதென்னவோ உண்மை. காலத்தால் அழியாத பாடல்கள். காலத்தை வென்ற பாடல்கள்.

    "ஒளிப்படைத்த கண்ணினாய் வா. வா. வா." நாம் அனைவரும் பள்ளியில் படிக்கும் போதே பயின்றது. இப்போதுள்ள கால கட்டத்தில் தமிழ் பாட நூல்களில் இவை இடம் பெற்றுள்தோ என்னவோ.? பாடல்கள் இடம் பெற்ற படங்களின் தகவல்களுக்கும், இனிமையான பாடல்களுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாடல்கள் நம் மனதில் நின்ற பாடல்கள். வா வா வா பாடல் போலவே போ போ போ பாடல் ஒன்று இருந்ததாக நினைவு. தேடினேன் கிடைக்கவில்லை.

      நீக்கு
    2. இதயகமலம் படப் பாடலா! நீ போகும் இடம் எல்லாம் நானும் வருவேன், போ போ போ!

      நீக்கு
    3. இல்லை.  'ஒளியிழந்து கண்ணினாய் போ போ போ' என்று வரும் என்று நினைவு.

      நீக்கு
  5. நாம் இருவர் படத்தில் கலர் பகுதிகள் இல்லை. அப்போது வண்ணக் காட்சிகள் நமக்கு எட்டாத கொம்புத்தேனாகவே இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // The film, primarily in black-and-white, was released with a few sequences in colour.[11]//

      என்று விக்கியில் போட்டிருந்ததைப் படித்து அதை இங்கு கொடுத்தேன்.  நான் படம் பார்த்ததில்லை!

      நீக்கு
  6. திடீரென்று சம்பந்தா சம்பந்தமில்லாமல் T R மகாலிங்கம் ஒரு சிறு கூட்டத்தில் " விடுதலை விடுதலை " என்று பாடும் காட்சி வரும். அவரது கிட்டத் தட்ட கடைசி வெற்றிப் படம் நாம் இருவர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  அவர் சேர்த்தி வைத்த பணம் யாவையும் சொந்தப படம் எடுத்தே அழித்திருப்பார்.

      நீக்கு
  7. சுதந்திர தினத்தன்று மிகவும் அருமையான மூன்று தேசபக்திப்பாடல்கள். கேட்கும் போதே மனம் சந்தோஷம் அடைகிறது. சுதந்திர உணர்வு பொங்கும் தேசபக்திப் பாடல்களை என்றென்றும் கேட்கலாம் ரசிக்கலாம். அப்படியான பாடல்கள். பகிர்விற்கு மிக்க நன்றி. பாடல்களை ரசித்தேன்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  8. மூன்றும் முத்தான பாடல்கள், ஸ்ரீராம்.

    அதுவும் எனக்கு ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் பாட்டு ரொம்ப ரொம்பப் பிடித்த பாடல் கண்ணை மூடிக் கொண்டு கேட்கும் போது நம்மை அறியாமலேயே உணர்வு ஒன்று ஏற்படும் பாருங்க!! மனம் கொஞ்சம் சோர்ந்து இருக்கறப்ப அதைப் போட்டு கேட்டால் ..ஆஹா...அப்படியான வார்த்தைகள், மெட்டு.

    இப்பவும் மூன்றும் கேட்டு விட்டேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் அப்படிதான் கீதா.  முதலில் முதல் இரண்டு பாடல்கள் மட்டும் பகிர்வதாக இருந்தேன்.  பின்னர் இந்தப் பாடல் நினைவு வந்ததும் அதைப் பகிராமல் இருக்க முடியவில்லை.

      நீக்கு
  9. அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்.

    இன்றைய நாளுக்கு ஏற்ற பாடல்களைத் தந்துள்ளீர்கள்.

    சி. சு. செல்லப்பா அவர்களின் சுதந்திர தாகம் முதல்பாகம் மூன்று நாட்களாக படித்துக் கொண்டு இருக்கிறேன் நண்பர் குடுத்தார்.இந்திய. சுதந்திர நாளுக்கு அண்மையில் இப் புத்தகம் படிக்கக் கிடைத்தது மகிழ்ச்சி முதல் பாகத்தின் அரைவாசிக்கு வந்துவிட்டேன் .இன்னும் இரண்டு பாகம் இருக்கிறது.முடித்து விடுவேன் என நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா... மாதேவி.. அந்தப் புத்தகம் நான் சில வருடங்களுக்கு முன் தேடிக்கொண்டிருந்தேன். நீங்கள் படித்ததும் அந்தப் புத்தகம் பற்றி விரிவான விமர்சனம் அல்லது பகிர்வு ஒன்று எழுதி அனுப்புங்களேன். புத்தகம் பற்றியும் ஒரு ஐடியா கிடைக்கும் எங்களுக்கு அல்லது எனக்கு.

      நீக்கு
  10. பதில்கள்
    1. முருகா சரணம்.  வாங்க செல்வாண்ணா..  வணக்கம்.

      நீக்கு
  11. சிற்ப்பான பதிவு

    அனைவருக்கும் சுதந்திர நாள் நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  12. அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல் வாழ்த்துகள்..... நல்லதே நடக்கட்டும். மூன்று பாடல்களும் இனிமை. மீண்டும் கேட்டு ரசித்தேன்..
    //V K ராமசாமியின் முதல் பாடம்.// படம்?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!