2.8.25

பிள்ளையை காப்பாற்ற, தன் உடலையே கேடயமாக மாற்றிய..... மற்றும் நான் படிச்ச கதை

1000 அபிப்ராயங்கள், 1000 விமர்சனங்கள் இருந்தாலும்...


============================================================================================



========================================================================================

சுட்டெரித்த நெருப்பில் இருந்து சேயை காப்பாற்றிய தாய்; ஆமதாபாத் விமான விபத்தில் நெஞ்சை உருக்கும் சம்பவம்

ஆமதாபாத்: தீக்குள் விரலை விட்டாலே துடித்து போவோம்! ஆலையில் இருக்கும் உலை போல தகிக்கும் வெப்பத்துடன் தீ கனன்று எரிந்தால் என்ன ஆகும். அப்படியான சூழலிலும், பிள்ளையை காப்பாற்ற, தன் உடலையே கேடயமாக மாற்றியும், புராணக் கதையில் வரும் மன்னர் சிபி சக்கரவர்த்தி போல சதையை அறுத்து கொடுத்தும் வாழும் தெய்வமாக திகழ்கிறார் ஒரு தாய்.  கரும்புகை சமீபத்தில், ஆமதாபாதில் நடந்த விமான விபத்தின்போது தான் இந்த நெஞ்சை உருக்கும் சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.  குஜராத்தின் ஆமதாபாதில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில வினாடிகளிலேயே, அருகில் இருந்த மருத்துவ விடுதி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணித்தோர், விடுதியில் தங்கியிருந்தோர் என 260 பேர் உயிரிழந்தனர்.  விமானம் விபத்துக்குள்ளானபோது விடுதியில் தங்கியிருந்த மணிஷா கச்சாடியா, அவரது 8 மாத பச்சிளம் குழந்தை தியான்ஷும் சிக்கிக் கொண்டனர்.  கணவரான கபில் கச்சாடியா அங்கிருந்த பி.ஜே., மருத்துவ கல்லுாரியில் சிறுநீரகத் துறையில் முதுநிலை மருத்துவப் படிப்பு படித்து வருகிறார். இதனால், அந்த சமயத்தில் அவர் மருத்துவக் கல்லுாரியில் பணியில் இருந்தார்.  விமான விபத்து தொடர்பான தகவல் அவரை எட்டுவதற்குள், விடுதி முழுதும் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இதில் சிக்கிய மணி ஷா செய்வதறியாமல் திகைத்து போனார்.  விடுதியில் இருந்து குழந்தையை அப்படியே வாரி அணைத்துக் கொண்ட மணிஷா, அங்கிருந்து வெளியே ஓடிச் செல்ல முயன்றார்.  ஆனால், எந்த பலனும் இல்லை. அதற்குள் தீயும், கரும்புகையும் அடர்த்தியாக சூழ்ந்தது. அதனால், எதிரே இருப்பது கூட கண்ணுக்கு தெரியவில்லை.  அவசர சிகிச்சை   :  ஒரு நிமிடம் துணிச்சலை வரவழைத்துக் கொண்ட மணிஷா, குழந்தை தியான்ஷை தீ சுடாதவாறு தன் மார்ப்புடன் அணைத்து கேடயம் போல செயல்பட்டு விடுதியில் இருந்து வெளியேறினார்.  ஆனாலும், பயங்கரமாக பற்றி எரிந்த தீ இருவர் மீதும் பரவியது. இதில் முகம், கைகள் என 25 சதவீத அளவுக்கு மணிஷாவுக்கு தீக்காயம் ஏற்பட்டது. மணிஷாவின் தடுப்பு முயற்சிகளையும் மீறி, குழந்தை தியான்ஷின் முகம், கைகள், மார்பு, வயிறு என முக்கியமான பகுதிகளில் 36 சதவீத அளவுக்கு தீ சுட்டெரித்தது.  இதை கண்டு மணிஷா கதறிய நிலையில், இருவரும் அருகில் உள்ள கே.டி., மருத்துவ கல்லுாரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.  செயற்கை சுவாச கருவியுடன் குழந்தைக்கு அவசர சிகிச்சை அளிக்கும் முயற்சியில் டாக்டர்கள் ஈடுபட்டனர்.  பச்சிளம் குழந்தை என்பதால், தீப்புண்ணுக்கான சிகிச்சை தருவதில் டாக்டர்களுக்கே பெரும் சவால் ஏற்பட்டது.  தீப்புண் உடனடியாக ஆற வேண்டுமெனில், யாராவது ஒருவர் தங்களது உடலில் உள்ள தோலை தானம் செய்ய வேண்டும்.  தோல் தானம் தீக்காயங்களுடன் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாய் மணிஷா, இதை கேள்விப்பட்டதும், தன் உடல்வலியையும் பொருட்படுத்தாமல் குழந்தையை காப்பாற்ற தோல் தானம் அளிக்க முன்வந்தார். இதைத் தொடர்ந்து குழந்தைக்கான சிகிச்சை வேகமெடுத்தது.  ''குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்ற தாயின் துணிச்சல் எங்கள் உள்ளங்களை உருக வைத்துவிட்டது.  ''மருத்துவ ரீதியாக ஒவ்வொரு துறையை சேர்ந்த டாக்டர்களும் குழந்தையை காப்பாற்ற இணைந்து பணியாற்றினோம்,'' என்கிறார் கே.டி. மருத் துவமனையின் நிர்வா க இயக்குநரான டாக்டர் அதித் தேசாய்.  விமான விபத்துக்குப் பின் சரியாக ஐந்து வாரங்கள் வரை தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த தாய் மணிஷாவும், சேய் தியான்ஷும் தற்போது பரிபூரண நலத்துடன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.  ஒரு தாயின் பாசப்போராட்டம், பற்றி எரிந்த நெருப்பில் இருந்தும், துரத்தி வந்த விதியில் இருந்தும் மகனின் உயிரை காப்பாற்றி இருக்கிறது.
===========================================================================================

 

நான் படிச்ச கதை (JKC)


வெள்ளந்தி

கதையாசிரியர்: .வேளாங்கண்ணி

 

தம்பி தம்பி

சொல்லுங்க பாட்டி

ஆயிரம் ரூபா ஏரி வேல காசு வந்திருக்கு.. எடுக்கணும்.. இந்த பார்ம கொஞ்சம் எழுதிக் கொடுப்பா.. நான் கை நாட்டு வச்சு வாங்கிக்கறேன்..”

அச்சச்சோ.. பாட்டி.. நான் எழுதக் கூடாதே.. பேங்க்ல வேல செஞ்சிட்டு, என்னோட கையெழுத்து இந்த பார்ம்ல இருந்தா, பின்னாடி எதாவது பிரச்சனைனா.. என்னைத் தான் கேப்பாங்க.. வேற யார்க்கிட்டயாவது எழுதி வாங்கிட்டு வாங்க.. நான் பணம் கொடுத்தர்றேன்..”

என்னப்பா இப்படி சொல்லிட்ட..!? நானே காலச்சாப்பாடு கூட சாப்பிடாம, ஆஸ்பத்திரிக்கு போயிட்டு, பேங்குக்கு வந்திருக்கேன்.. பேங்குக்குள்ள வேற யாருமே இல்ல.. நான் யார்க்கிட்டையா எழுதி வாங்க.. கொஞ்சம் நீயே எழுதிக் கொடுப்பா..”

ம்.. சரி.. உங்க பேங்க் புக்க கொடுங்கஅக்கவுண்ட் நம்பர் பார்க்கணும்

இந்தாப்பா

அக்கவுண்ட்ல ஆயிருத்து முன்னூறு ரூபா இருக்கு.. ஆயிரம் ரூபா வேணுமா?”

ஆமாப்பா..”

இந்தாங்க.. கட்ட விரல்ல மையத்தொட்டு இங்கயும் இங்கயும் வைங்க…”

இப்படியாப்பா.. இந்தாப்பா வச்சாச்சு…”

சரிஇதப்புடிங்க.. ரெண்டு ஐநூறு ரூபா நோட்டு…”

ம்.. கொடுப்பா.. ஒன்னு ரெண்டு.. சரிப்பாரொம்ப சந்தோஷம்.. வரேன்பா…”

வாங்க பாட்டி..”  அப்பாடிபாட்டிய ஒரு வழியா அனுப்பி வச்சாச்சு.. இப்ப அடுத்த வேலையைப் பார்க்கலாம்.. என்று பரபரப்பாக வேலையில் மூழ்கினான் ரமேஷ்..

===

சிறிது நேரத்தில்..

தம்பி தம்பி…”

என்ன பாட்டி.. திரும்பி வந்திருக்கீங்க..? அதான் பணம் எடுத்துட்டுப் போயிட்டீங்களே.. அப்பறம் எதுக்கு இப்ப வந்தீங்க…?

என்னோட நூறு ரூபாயக் காணோம் தம்பி..”

என்னது நூறு ரூபாயா?”

ஆமாம் தம்பி..”

ஆனா நான் உங்களுக்கு ரெண்டு ஐநூறு ரூபா தானே கொடுத்தேன்..”

அது இருக்கு தம்பி.. இந்தா பாரு.. ண்ணு ரெண்டு..

அப்பறம் எந்த ரூபா பாட்டி?”

நான் உங்கிட்ட என்னோட புக் கொடுத்தேன்ல.. அதுல ஒரு நூறு ரூபா வச்சிருந்தேன்.. வீட்டுக்குப் போய் பார்க்கறேன்அந்த நூறு ரூபாயக் காணோம்.. அப்படியே பக்குனு ஆயிடுச்சு.. அதான் ஓடியாந்தேன்…”

எது? நூறு ரூபா அந்த புக்குல இருந்துச்சா, நான் எதும் பார்க்கலையே

ஆமா தம்பி, இருந்துச்சு, இப்பக் காணோம்

என் கண்லயே படல பாட்டி நூறு ரூபா, நீங்க எதோ ஒரு பைல இருந்து தானே பேங்க்புக்க எடுத்தீங்க, அதுல விழுந்திருக்கும் பாருங்க

எல்லாப்பக்கமும் தேடிப்பார்த்திட்டேன்.. எங்கேயும் இல்ல. அந்தப் புக்குக்குள்ள தான் இருந்துச்சு.. எனக்கு அது வேணும்?”

அதான் நான் பார்க்கவே இல்லேனு சொல்றேனே பாட்டி.. இல்லாத பணம் எப்படி வரும்?”

ஆனா இருந்துச்சே..”

அத நீங்க சொல்றீங்க.. நான் சொல்லலையே…”

இல்லப்பா.. எனக்கு அந்த நூறு ரூபாய் வந்தாத்தான் நான் இந்த இடத்த விட்டு வெளிய போவேன்..”

ஏன் பாட்டி.. எழுதத் தெரியாது எழுதிக் கொடுனு சொன்னீங்க.. பார்க்கவே பாவமா இருந்துச்சு.. சரினு ஒரு உதவி செய்யப் போனா.. இப்ப உபத்திரவத்துல வந்து தள்ளி விடறீங்களே!”

அதெல்லாம் எனக்குத் தெரியாது.. எனக்கு என்னோட பணம் வேணும்..”, என கொஞ்சம் சத்தமாகவே பாட்டி கத்த.. எல்லாருமே கேஷியர் ரமேஷையே வேடிக்கை பார்க்க.. அவனுக்கு ரொம்ப சங்கடமாக ஆகிவிட்டது. இரண்டு கஸ்டமர்கள் அவனிடமே வந்தனர். “சார்.. அதான் பாட்டி இருந்துச்சுனு சொல்றாங்களே!?”

அதான் நான் பார்க்கவே இல்லேனு சொல்றேனே!” “சரி சார்.. நீங்க பார்க்கவே இல்லேனு வச்சுக்கலாம்.. ஆனா இப்ப இந்தப் பாட்டி இப்படி கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணினா நல்லாவா இருக்கு.. இதனால உங்க பேரு கெடும்.. உங்க பேங்க் பேரு கெடும்..”

அதனால..”

அதனால.. நீங்களே ஒரு நூறு ரூபாயக் கொடுத்து பாட்டிய அனுப்பிவிட்டுடுங்க.. பிரச்சனை தீர்ந்திடும்..”

நான் பார்க்காத பணத்த, நான் எதுக்காக கொடுக்கணும்? அத நீங்களே கொடுத்திடுங்களே!”

என்னது நாங்களா?’, என்றபடி அவர்கள் பின் வாங்கினர்.. இதற்குள் பாட்டியின் சத்தம் இன்னும் அதிகமானது.. கூடவே வேலை செய்யும் பாலா, ரமேஷிடம் வந்தான்.

ரமேஷ்.. பேசாம நூறு ரூபாயக் கொடுத்து பாட்டிய அனுப்பிவைங்க.. இந்தப்பாட்டி இப்ப இங்க இருந்து போகாது போல இருக்கே.. இதனால இங்க இருக்கற மத்த கஸ்டமருங்களுக்கும் ப்ராப்ளம்.. வேல செய்யற மத்த ஸ்டாப்கும் ப்ராப்ளம்..”

அப்ப நான் நூறு ரூபாய பாட்டிக்கிட்ட கொடுத்தா, இந்த பிரச்சனை தீர்ந்திடும்னு சொல்றீங்களா? நான் தீரவே தீராதுனு சொல்றேன்..”

எப்படி இவ்ளோ தீர்க்கமா சொல்றீங்க?”

இன்னைக்கு நூறு ரூபாய் இப்படி காணாம போச்சுனு கேட்டு வந்தவங்க, நாளைக்கே ஆயிரம் ரூபாய் வச்சிருந்தேன், காணாம்னு சொல்லிட்டு வரலாம்.. அப்ப நீங்க அந்த ஆயிரம் ரூபாயக் கொடுக்க ரெடினா சொல்லுங்க, நான் இப்ப நூறு ரூபாய கொடுத்து இந்தப் பிரச்சனைய தீர்த்து வைக்கறேன்..”

வாயை மூடிக்கொண்டு கப்சிப்பென தனது இடத்தில் உட்கார்ந்து வேலையைப் பார்க்க ஆரம்பித்தான் பாலா.

பாட்டி கெளம்புங்க.. நான் என் வேலைய பார்க்கணும்..”

அப்ப என் நூறு ரூபா..”

அதான் நான் பார்க்கவே இல்லையே!”

நான் போக மாட்டேன்.. எனக்கு நூறு ரூபா வேணும்..”

சரி.. அப்ப ஒன்னு செய்யலாம்.. இங்க கேமரா இருக்குல்ல.. அதுல எல்லாமே பதிவாகி இருக்கும்.. நீங்க பேங்குக்கு வந்தது, எங்கிட்ட பேசினது.. அந்த புக்க கொடுத்தது.. எங்கிட்ட பணம் வாங்கிட்டுப் போனது.. எல்லாம்.. வாங்க.. அதப்போய் பார்க்கலாம்.. அதுல எல்லாம் தெளிவா பதிவாகி இருக்கும். அப்படி பார்க்கும் போது உங்க புக்ல நூறு ரூபாய் இருந்தது தெரிஞ்சா.. நான் உங்களுக்கு கொடுத்தர்றேன்.. அப்படி இல்லேனா.. இருநூறு ரூபாய் நீங்க எனக்கு கொடுக்கணும்.. சரியா…?”

இது என்ன புதுக்கதையால்ல இருக்கு.. நான் எதுக்கு இருநூறு ரூபா தரணும்?”

அதையேத்தான் நானும் அப்ப இருந்து கேட்டுட்டு இருக்கேன்.. நான் எதுக்கு நூறு ரூபாய் தரணும்னுயாருமே காதுல வாங்கிக்கல…’

அப்போது வேகவேகமாக ஒரு சிறுவன் பேங்குக்குள் நுழைந்தான்.. பாட்டியின் முகம் அவனைக் கண்டதும் சட்டென மாறியது.

பாட்டி பாட்டி

டே.. முருகா.. இங்க எதுக்குடா வந்த?” “சொல்றேன்.. சொல்றேன்.. நீ எங்கிட்ட காலைல ஆஸ்பத்திரிக்கு வர்றதுக்கு முன்னாடி நூறு ரூபாயக் கொடுத்து.. இத பத்திரமா வச்சுக்க.. நான் இன்னைக்கு இதே மாதிரி ஒன்னு சம்பாதிச்சிட்டு வரேனு சொல்லி கெளம்பினீல.. அந்த நூறு ரூபாய அப்பா பார்த்துட்டார்.. எதுடா இந்த காசுனு சொல்லி அடிக்க ஆரம்பிச்சுட்டார்.. இத பாட்டி கொடுத்து, வச்சுக்க சொன்னுச்சு.. இப்பவே நான் போய் கொடுத்தர்றேனு சொல்லிட்டுத்தான் இங்க ஓடிவந்தேன்.. இந்தா புடி நூறு ரூபா.. நான் கெளம்பறேன்..”, என்று பாட்டி கையில் நூறு ரூபாயைத் திணித்துவிட்டு ஓடியே விட்டான். பாட்டியின் முகத்தில் ஈயாடவில்லை. அப்படியே தலை குனிந்தபடி வெளியே நடக்க ஆரம்பித்தார் பாட்டி

பாட்டிக்கு ரூபாய் கொடுக்கச் சொன்ன இருவரையும் பார்த்தான் ரமேஷ்.. சகபணியாளர் பாலாவையும் பார்த்தான். அனைவரும் பாட்டியை மிகுந்த கோபத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

பாட்டி பாட்டி’, என சத்தமிட்டுக் கூப்பிட்டான் ரமேஷ்.. அவர் திரும்பிப் பார்க்கவே இல்லை அவனோ கவுண்டரை விட்டுவிட்டு வெளியே வந்து, பாட்டிக்கு முன்னால் நின்றான்..

பாட்டி, இந்தாங்க நூறு ரூபா

ம்.. வேணா வேணா.. நான் கெளம்பறேன்..”

பரவால்ல பிடிங்க.. இது உங்களுக்கு இல்ல.. உங்க பேரனுக்கு.. சரியான நேரத்துல வந்து என்னை காப்பாத்தினதுக்கு.. இது ரொம்ப தப்பு பாட்டி.. எங்க எங்க இருந்தோ வந்து உங்க கிராமத்துல உங்களுக்கு சேவை செஞ்சிட்டு இருக்கோம்.. இப்படி ஒத்த நூறு ரூபாய வச்சு எங்க நேர்மைய வெல பேசாதிங்க..”

பாட்டி அமைதியாகவே நின்று கொண்டிருந்தார்.

பாட்டி.. எனக்கு போன வாரம் நடந்த இன்னொரு விஷயமும் தெரியும்.. பேங்குக்கு வெளிய இதே மாதிரி யாரையோ எழுதிக் கொடுக்கச் சொல்லி.. ஒரு காலேஜ் பையன்கிட்ட நூறு ரூபாய் வாங்கியிருக்கீங்க..’

அவன் அன்னேலயிருந்து யாருக்காவது உதவி செய்யப் போவான்னு நெனைக்கறீங்க? இதெல்லாம் வேணாம் பாட்டி.. விட்டுடுங்க.. கிராமங்கள்ல தான் வெள்ளந்தி மனுஷங்க இன்னும் வாழ்றாங்கன்னு நாட்டுக்குள்ள பலபேர் இன்னும் நம்பிக்கிட்டு இருக்காங்க.. அவங்க நம்பிக்கைல மண்ணப் போட்றாதிங்க.. ப்ளீஸ்..”, எனச் சொன்னபடி தனது இருக்கையை நோக்கிச் சென்றான் ரமேஷ்..

அவன் கையில் திணித்த நூறு ரூபாயை அருகில் இருந்த கோவில் உண்டியலில் போட்டுவிட்டு கண்ணீரைத் துடைத்தபடி வீடு நோக்கி நடந்தார் பாட்டி..

இனி ஒரு வெள்ளந்தி பாட்டியைப் பார்க்கலாம்..

ஆசிரியர்

https://www.facebook.com/TamilWritersA/photos/a.921456017950676/1414885361941070/?_rdr

தமிழக ஜோக்ஸ் எழுத்தாளர்கள்

பெயர்: .வேளாங்கண்ணி

படிப்பு: எம்.பி.., எம்.சி..,

பணி: இருபது ஆண்டுகள் இந்திய விமானப்படையில் தொழில் நுட்பப்பிரிவில் பணியாற்றி 2015 ஜீலையில் ஓய்வு பெற்று.. 28 ஆகஸ்டு 2015 முதல் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காசளராகப் பணியாற்றிக் கொண்டுள்ளேன்..

பிறந்த ஊர்: புதுக்கோட்டை

படித்த ஊர் / வளர்ந்த ஊர்: கரூர்

இருக்கும் ஊர்: சோளிங்கர், வேலூர்.


2013 முதல் மீண்டும் தொடர்ந்து எழுதத் துவங்கினேன். எழுத்து.காம் எனும் இணையத் தளத்தில் 1500 கவிதைகளும், 150 கதைகளும், 900 நகைச்சுவைகளும் இன்று வரை பதிவேற்றி உள்ளேன்.

ன்னுரை :

பாட்டி நூறு ரூபாயை பேரனிடம் கொடுத்ததை மறந்து போய் பாங்கில் ரமேஷிடம் வாதம் செய்து கொண்டிருக்கிறார் என்று நினைத்தால் ஆசிரியர் பாட்டியின் தந்திரத்தை உறுதிப்படுத்த கதையின் போக்கை மாற்றுகிறார். இது ஒரு எதிர்பாராத திருப்பம். பாட்டியின் மேல் இருந்த பரிதாபம் வெறுப்பாய் கோபமாய் மாறுகிறது. அப்படியும் ரமேஷ் கொடுத்த 100 ரூபாயை வாங்குவது பேராசை. வாங்கி கோயில் உண்டியலில் போடுவதால் யாருக்கு லாபம். 

நான் ரசித்த கவிதை

எனக்கான உன்னை

உன்னில் தேடி

ஏமாறுகிறேன் 

உனக்கான என்னை

உனக்கு உணர்த்த

முடியவில்லை 

எனக்கானதாகவும்

உனக்கானதாகவும்

யாருக்கானதாகவும்

இல்லாமல்

இயங்கிக் கொண்டிருக்கிறது

அவரவர்களின்

 ‘நான்’ 

கவிஞர் ஆ வெண்ணிலா 

எனக்கு   

            யாருமில்லை

                  நான்

                  கூட.

நகுலன்

 

 

 

10 கருத்துகள்:

  1. இன்றைய பதிவின் முதல் பகுதியே சித்திரக்குள்ளன் பற்றியதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குணம் நாடி குற்றமும் நாடி...   குணம் என்று ஒன்று இருந்தால் அதையும் சொல்லணுமில்லையா?

      நீக்கு
  2. வெண்ணிலா, நகுலன் கவிதையை ரசித்தேன். கவிதை சொல்லும் கருத்து உண்மைதானே. யாரை யார் புரிந்துகொள்ள முடியும் அவரவர் உட்பட. நல்ல பகிர்வு

    பதிலளிநீக்கு
  3. பின்னுரை என்பதை என்னுரை என்று மாற்றலாம் JKC Sir..

    இதே போல பேங்க் காசாளர் பற்றி நானும் கூட ஆரம்ப காலங்களில் ஒரு கதை எழுதி இருந்தேன்!  உதவி செய்பவர்கள் கூட இது போன்ற எதிர்வினைகளால் உதவி செய்ய மாட்டார்கள் என்கிற கருத்து அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​பின்னுரை என்னுரை ஆக்கலாம். நன்றி

      Jayakumar

      நீக்கு
  4. கவிதைகள் இரண்டுமே நன்றாக இருந்தன.

    பதிலளிநீக்கு
  5. அட! சூர்யா இப்படியும் செய்கிறாரா. மிக நல்ல விஷயம். இதைப் பற்றி இப்பதான் தெரிகிறது. அவர்தான் இதுவரை வெளியில் சொல்லலை என்று சொல்லியிருக்கிறாரே. ஸ்டன்ட் பணியாளர்களும் சொல்லலை போல.

    ஸ்டன்ட் பணியாளர்கள் நிஜமாகவே பாவமான பிழைப்புதான்.

    கீதா

    பதிலளிநீக்கு
  6. சதீஷ்குமார் பற்றி முன்னரே இங்கு வந்த நினைவு. அசாத்திய முயற்சிகள் சாதனைகள்.

    தாய்மைக்கான சிறந்த உதாரணம் மனிஷா!

    கீதா

    பதிலளிநீக்கு
  7. கதை நல்லாருக்கு. கருவும், கருத்தும் தான் மெயின்.

    இப்படி ஏமாத்தினா யாருக்குமே உதவும் எண்ணம் வராது.

    கீதா

    பதிலளிநீக்கு
  8. அகரம் மாணவர் உதவி அறிந்திருக்கும்.
    ஸ்டன்ட் நடிகர்களுக்கும் உதவுவது பாராட்டுகள்.

    மனிஷாவின் தாய்மை துணிச்சல் சொல்ல வார்த்தைகள் இல்லை.

    கவிதை பிடித்திருந்தது.
    சதீஷ் குமார் முயற்சிகளுக்கும் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!