2007 ல் வெளிவந்த 'ஜப் வீ மெட்' என்கிற ஹிந்திப் படதைத் தழுவி, தழுவி அல்ல, அப்படியே தமிழில் பரத்தையும் தமன்னாவையும் போட்டு எடுத்தார்கள். R கண்ணன் இயக்கத்தில் வித்யாசாகர் இசை.
இன்று பகிரப்படும் பாடலான "சுத்துது சுத்துது " பாடலை எழுதியவர் நா முத்துக்குமார். பாடி இருப்பவர் ஹரிஹரன்.
படத்தில் உம்மணாமூஞ்சி கேரக்டரான பரத் குழந்தைக்கு - அவர் குழந்தை அல்ல - மொட்டை போட்டு காது குத்தும் வைபவத்தில் அழும் குழந்தையை சமாதானப்படுத்த திடீரென எல்லோரும் புருவம் உயர்த்தும் வண்ணம் பாடி ஆடுகிறார். முதல் முறையாக பரத் ரசிக்கும்படியான ஒரு பெர்ஃபாமென்ஸ் கொடுத்திருக்கிறார் என்பது என் நினைப்பு!
சுவாரஸ்யமான படம்; சுவாரஸ்யமான காட்சி.
எந்த விதமான ஆரம்ப இசையும் இல்லாமல் சட்டென தொடங்கும் ஹரிஹரன் குரல் டக்கென கவர்ந்து விடும்.அதோடு அவர் ஒரு வார்த்தையின் முடிவில் ஹம்மிங் செய்து அதை வளைத்து வளைத்து நீளமாக இழுப்பபது கவர்ச்சி.
நெல்லையில் அபிமான தமன்னா பாடலில் வருகிறார். தமன்னாவின் தாத்தாவாக வருவது காதலிக்க நேரமில்லை ரவிச்சந்திரன்.
கொக்கே கொக்கே பூவ போடு…
மக்கா மக்கா கொலவ போடு…
கெழக்கா மேற்கா வேட்ட போடு…
இதமா பதமா கம்மல் போடு…
விளையாட்டு பயலுங்க யாரு…
வெண்டைக்கா கம்மல போடு…
பணக்காரன் மாமன் யாரு…
வைரத்தில் லோலாக்கு போடு…
வலி ஏதும் இல்லாம…
துளி ரத்தம் சிந்தாமல் தோடு போடு…
சித்தப்பு பெரியப்பு சீரோடு…
விருந்தொண்ணு போடு போடு…
சுத்துது சுத்துது இந்தாறு…
சொக்குது சொக்குது இந்தாறு…
சிக்குது சிக்குது இந்தாறு…
அத சொன்னா கூட தீராது…
சுத்துது சுத்துது இந்தாறு…
சொக்குது சொக்குது இந்தாறு…
சிக்குது சிக்குது இந்தாறு…
அத சொன்னா கூட தீராது…
கத்தி எரிஞ்சது போல…
நீ சுத்தி இழுப்பதினால…
பஞ்சு வெடிப்பது போல…
என் நெஞ்சு துடிப்பதுனால…
அடி மயிலே உன்னால் மனசுக்குள்ள தகராறு…
சுத்துது சுத்துது இந்தாறு…
உனக்கோர் பேர்தான் கிடையாது…
அத நான் சொல்ல முடியாது…
கடல பிடிச்சு கையில் அடக்கிட தெரியாது…
உனக்கோர் பேர்தான் கிடையாது…
அத நான் சொல்ல முடியாது…
கடல பிடிச்சு கையில் அடக்கிட தெரியாது…
விண்ணில் போனா நிலவாகும்…
மண்ணில் வந்தா மழையாகும்…
கோவில் போனா சிலையாகும்…
கொடியில் பூத்தா மலராகும்…
ஒத்த வார்த்தையில் சொல்லச் சொன்னா…
உனது பேரே அழகாகும்…
சுத்துது சுத்துது இந்தாறு…
ஓ… அழகே உனை பார்க்கதானே…
அத்தனை ஊரும் வருகிறதே…
தென்னங்காயில் கூடதான்…
மூணாம் கண்ணும் முளைக்கிறதே…
ஓ… அழகே உனை பார்க்கதானே…
அத்தனை ஊரும் வருகிறதே…
தென்னங்காயில் கூடதான்…
மூணாம் கண்ணும் முளைக்கிறதே…
சந்தர்பம் நம்பி போனா…
சந்திரன் வந்து கடை போடும்…
அந்த பக்கம் நீ போனா…
மின்னல் உன்னை எடை போடும்…
ஒத்த வார்த்தையில் சொல்லச் சொன்னா…
எல்லோர் மனசும் தடுமாறும்…
=======================================================================================
கடைசி பாராவில் இரண்டே வரிகள்! ஆனால் அதுதான் நீளமான பாரா!
மலேசியாவின் கோலாலம்பூரில் தனது பள்ளிப் பருவத்தை முடித்து, கல்லூரி படிப்பினை திருச்சியிலுள்ள 'செயின்ட் ஜோசப் கல்லூரியில் பயின்று, பின் மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்காக சென்னைக்கு பிரவேசம் செய்தவர்தான் நடிகர் ரவிச்சந்திரன்.
அப்போது புதுமை இயக்குநர் ஸ்ரீதர், தான் எடுக்கப் போகும் புதுப்படம் ஒன்றிற்கு புதுமுகங்களைத் தேடிக் கொண்டிருந்த நேரம். நண்பர்கள் தூண்டுதலின் பேரில், எந்தவித பெரிய எதிர்பார்ப்பும் இன்றி, நடிகர் ரவிச்சந்திரனும் அந்த புதுமுகத் தேர்வில் கலந்து கொள்ள, இவரைப் பார்த்த இயக்குநர் ஸ்ரீதர், தனது புதுப் படத்திற்கு தான் எதிர்பார்த்த வசீகரமான ஒரு துடிப்புமிக்க இளைஞன் கிடைத்துவிட்டான் என்ற முடிவுக்கு வந்து, அவரையே நாயகனாகவும் தேர்வு செய்துவிட்டார்.
அதுவரை பி எஸ் ராமன் என்ற இயற்பெயருடன் இருந்த அந்த இளைஞன், அன்றிலிருந்து ரவிச்சந்திரன் என்ற நட்சத்திரப் பெயர் கொண்டு அழைக்கப்படலானார்.
சினிமா என்ற கனவுலகில் நடித்துவிட மாட்டோமா? என ஏங்கித் தவிக்கும் லட்சக்கணக்கானோர் மத்தியில், எதிர்பார்ப்பு ஏதுமின்றி எடுத்த முதல் முயற்சியிலேயே முழு வெற்றி பெற்ற ஓர் அதிர்ஷ்ட நாயகனாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான நடிகர் ரவிச்சந்திரனின் முதல் திரைப்படமே அவர் முழுநீள நாயகனாக நடித்த திரைப்படம். முதல் திரைப்படமே முழுநீள வண்ணத் திரைப்படம், முதல் திரைப்படமே 25 வாரங்கள் ஓடிய வெள்ளிவிழா திரைப்படம் என முழுமையான அதிர்ஷ்டத்தோடு கலையுலகில் கால் பதித்து, 'இதயக்கமலம்", 'குமரிப்பெண்', 'நாம் மூவர்", "அதே கண்கள்", "நான்", "மூன்றெழுத்து" என எண்ணற்ற வெற்றித் திரைப்படங்களைத் தந்து, எம் ஜி ஆர் மற்றும் சிவாஜிக்கு இணையான ஓர் வெற்றியைப் பதிவு செய்த இவர், படிப்பிற்காக சென்னை வந்து, நடிக்கும் வாய்ப்பு கிட்டி நாயகனாக உயர காரணமான 'காதலிக்க நேரமில்லை" திரைப்படம் இவருக்கு கிடைத்த ஓர் மிகப் பெரிய அதிர்ஷ்டம் என்பதில் யாருக்கும் எந்த ஐயமும் இருக்காது என்பதே உண்மை.
தினமலர் - ஃபிளாஷ்பேக்
==========================================================================================
செம்பருத்தி என்று ஒரு படம் 1972 ல் வெளியானது- மலையாளத்தில்! மது, ரோஜா ரமணி நடித்த இந்தப் படத்தை கமல், ஸ்ரீகாந்த், நாகேஷ், ரோஜா ரமணியை வைத்து தமிழில் பருவகாலம் என்று தயாரித்தனர்.
G. தேவராஜன் இசை. தமிழில் புலமைப்பித்தன் பாடல்களை எழுதி இருந்தார். மலையாளத்தில் 8 பாடல்கள். தமிழில் நான்கே பாடல்கள். அதிலும் ஒன்று இன்று பகிரும் பாடலின் சோக வெர்ஷன். மலையாளத்தில் ஏகப்பட்ட விருதுகளை அள்ளியது. தமிழில் சீந்துவாரில்லை! ஜோஸ் பெர்னாண்டோ இயக்கம்.
லாட்ஜில் நடந்த ஒரு கற்பழிப்பு மற்றும் கொலையின் குற்றவாளியை கண்டுபிடிக்கும் கதை. கமல்தான் குற்றவாளி என்று ஞாபகம்.
பாடலைப் பாடி இருப்பவர் மாதுரி. இனிமையான குரல். இனிமையான பாடல். சிலோன் ரேடியோவில் சொல்வது போல "கேட்டு மகிழுங்கள்..."
வெள்ளி ரதங்கள் அழகு மேகம்
செல்லும் வீதி சிவந்த வானம்
பாவை நெஞ்சில் இளமை ராகம்
பாட வந்தது பருவ காலம்
வெள்ளி ரதங்கள் அழகு மேகம்
செல்லும் வீதி சிவந்த வானம்
பாவை நெஞ்சில் இளமை ராகம்
பாட வந்தது பருவ காலம்
பாடும் பறவை ஆயிரம் நடுவே
நானும் ஒரு பறவை
பாசம் பொழியும் உயிர்களுக்கெல்லாம்
தந்தேன் எனதுறவை
எங்கோ இருக்கும் மனிதர் யாரும்
இங்கே வரவேண்டும்
இனி எல்லா நலமும் எல்லா வளமும்
எவரும் பெறவேண்டும்…
எவரும் பெறவேண்டும்…ஆ…ஹா…ஹா..ஹா
ஆ…ஹா…ஹா..ஹா ஆ….ஆ……ஆஅ…..ஆ…..
வெள்ளி ரதங்கள் அழகு மேகம்
செல்லும் வீதி சிவந்த வானம்
பாவை நெஞ்சில் இளமை ராகம்
பாட வந்தது பருவ காலம்…
பருவ காலம்…பருவ காலம்…
முல்லைக் கொடியும் என்னைப் பார்த்து
சிந்தும் புன்னகையோ
அலை மோதும் அருவி என்னைப் போலே
இளமைக் கன்னிகையோ
அன்னை மடியில் பிள்ளை இருந்தால்
அன்பு பெருகாதோ
கொடி ஆசை கொண்டு தழுவும் பூவின்
உள்ளம் உருகாதோ..உள்ளம் உருகாதோ……
ஆ…ஹா…ஹா..ஹா
ஆ…ஹா…ஹா..ஹா ஆ….ஆ……ஆஅ…..ஆ…
வெள்ளி ரதங்கள் அழகு மேகம்
செல்லும் வீதி சிவந்த வானம்
பாவை நெஞ்சில் இளமை ராகம்
பாட வந்தது பருவ காலம்…
பருவ காலம்…


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!