இந்தத் தொடர் எழுதும்போதே, தாராசுரத்தில் ஐராவதீஸ்வரர் கோயில் வளாகத்தில் இருந்த கலைக்கூடத்தில் இருந்த சிற்பங்களைப் படமாகப் பகிர்ந்திருந்தேன். அவற்றை பாதுகாப்பாக இரும்பு கிராதிகள் போட்ட பெரிய அறையாகச் செய்து அதில் வைத்திருந்தார்கள்.
இவற்றை மக்கள் எல்லோரும் காணும்படியாக வரிசைப்படுத்தி ஒவ்வொன்றிலும் விவரங்கள் எழுதி வைத்திருந்திருக்கலாமே என்று நினைத்தேன். தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் இருந்த கலைக்கூட த்தைப் பார்த்தபோது, ஆஹா நன்றாக வைத்திருக்கிறார்களே என்ற எண்ணம் ஏற்பட்டது.
இவற்றை எல்லாமே (அதாவது இன்னும் கவனிப்பாரற்றுக் கிடக்கும் சிலைகளை எல்லாம் திரட்டி) மிகப் பெரிய கலைக்கூட த்தை தஞ்சையிலே வைத்து, சோழ தேசத்தின் கலைச் செல்வங்களைக் காட்சிப்படுத்தலாம். பலரும் வருகை புரிந்து காண்பதற்கு வசதியாக இருக்கும். இல்லாவிடில், ஆங்காங்கு இருக்கும் கவனிப்பாரற்ற சிற்பங்கள் நாளடைவில் காணாமல் போய்விடும் அல்லது சிதைந்துவிடும்.
சரஸ்வதி மஹால் நூலகம், தர்பார் போன்றவற்றைப்பற்றி எழுதியபோதே நான் மராட்டிய மன்னர்களில் ஒருவரான சரபோஜி II அவர்களைப் பற்றி எழுதியிருக்கணும். தஞ்சையை சுமார் 180 ஆண்டுகள் மராத்திய மன்னர்கள் ஆண்டனர் (1675-1850) அதில், 1798லிருந்து சுமார் 34 வருடங்கள் ஆண்ட இரண்டாம் சரபோஜி மிக முக்கியமான மன்னர். கலைகளில் வல்லுனர் அவர். பல புலவர்களையும் கலைஞர்களையும் ஆதரித்தவர் அவர். இவர் காலத்தில் தன்வந்த்திரி மஹால் என்ற ஆராய்ச்சிக்கூடம் ஆரம்பிக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. இந்த மருத்துவ மனையில் ஆயுர்வேத, சித்த, ஆங்கில, யுனானி மருத்துவர்களும் இணைந்து பணியாற்றினர். மக்களுக்கு மட்டுமன்றி விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் இங்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த து. வைத்திய முறைகள் ஓலைச்சுவடிகளில் எழுதி வைக்கப்பட்டு நூலகத்தில் பாதுகாக்கப்பட்ட து. தஞ்சை பெரியகோயிலில் விநாயகர் மற்றும் சண்டிகேசுவர ருக்கு சிறிய ஆலயங்கள் அமைத்தவரும் இவரே. 1820ல் காசி யாத்திரை சென்றுவந்த பிறகு, நூற்றி எட்டு சிவலிங்கங்களை அமைத்து வழிபட்டார். விநாயகர் கோவில் சுவர்கள் மண்டபங்களில் மராத்திய, போன்ஸ்லே வம்ச வரலாற்றை கல்வெட்டாகச் செதுக்கிவைத்துள்ளார். சரஸ்வதி மஹால் நூலகத்துக்கு இவர் ஏராளமாகச் செய்துள்ளார். தியாகையர், ச்யாமா சாஸ்திரிகள், முத்துசாமி தீக்ஷிதர் போன்றோர் சரபோஜி காலத்தில்தான் வாழ்ந்தார்கள். சரஸ்வதி மஹால் நூலகத்தில் பழைய ஓலைச் சுவடிகளைப் புதுப்பித்தலும் (திரும்ப படியெடுத்து) புதிய ஓலைச்சுவடிகளை எழுதலும் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தன. 1827ல் 501 எழுத்தாணிகள் வாங்கப்பட்டதற்கான கணக்கைக் கொண்டு எத்தனை பேர்கள் இந்த வேலையில் ஈடுபட்டிருந்தனர் என்பதை அறிய இயலும்.
இப்போது தஞ்சை அரண்மனையில் உள்ள கலைக்கூடத்திற்கு வருவோம். ஆமாம் எப்போது தமிழகத்தில் சிற்பங்கள் செதுக்கப்பட்டன? மணிமேகலையில்,
மண்ணிலும் கல்லினும் மரத்திலும் சுவரினும்
கண்ணிய தெய்வதம் காட்டுநர் வகுக்க
என்று வந்துள்ளது. அதனால் சங்காலக் கோயில்களில் உள்ள வழிபடு தெய்வங்களின் உருவங்கள் சுதையாலும், மரத்தாலும், கல்லாலும் செய்யப்பட்டிருந்திருத்தல் வேண்டும். சிலப்பதிகாரம் மேலும், மாங்காட்டு மறையவன், திருவேங்கடமலையில் திருமாலின் நின்ற கோலத்தையும், திருவரங்கத்தில் கிடந்த கோலத்தையும் கண்ட தாகச் சொல்லுகிறது. இதிலிருந்து சிலப்பதிகாரக் காலத்து சிற்ப வளர்ச்சி நமக்குப் புரியும். (2000 வருடங்களுக்கு முற்பட்டவை இந்த இலக்கியங்கள்). சங்க காலத்தில் மரத்தால் செதுக்கப்பட்ட மெல்லிய பதுமைகள், தேர்களில் மரச்சிற்பங்கள் அழகிய வடிவத்தில் காட்சியளித்தனர், ஒரே பகலில் எட்டுத் தேர்களைச் செய்துமுடித்துவிடும் திறமை வாய்ந்த தச்சர்கள் இருந்தனர் என்றெல்லாம் இலக்கியங்கள் சொல்லும்போது, இந்தச் சிற்பக்கலை பல்லாயிரம் ஆண்டுகளாகவே தமிழகத்தில் இருந்துவந்தது, அதற்கான சிற்பிகளும் இருந்தனர் என்று அறியலாம். (ஏதோ நாம் செய்த புண்ணியம் சங்க இலக்கியங்களில் இவைகள் காணக்கிடக்கின்றன. இல்லையென்றால் இங்கிலீஷ்கார வந்த பிறகுதான் எல்லாமே நமக்குத் தெரியும் என்று பரப்பியிருப்பார்கள்).
நெடுநல்வாடையில் (ஸ்ரீராம் இதற்கு நெடுநாள்வடை னு கருத்து எழுதாம இருந்தால் சரிதான்) அரசியின் கட்டில் நன்கு முதிர்ந்த யானைத் தந்தத்தால் செய்யப்பட்டது எனவும் அதில் நிறைய சிற்பவேலைப்பாடுகள் இருந்தன எனவும் குறிப்பிட்டிருக்கிறது. தமிழகத்திலிருந்து சிற்பிகள் வடபுலத்துக்குச் சென்றதை திபத்திய நூல்கள் குறிப்பிடுகின்றன. அதுபோல மகத நாடு, மராட்டியம் போன்ற பல இடங்களிலிருந்து சிற்பிகள் தமிழகம் வந்திருந்திருக்கின்றனர். யவனர்களின் (கிரேக்கர்கள்) சிற்பத் திறனை தமிழகம் போற்றியது (ஸ்ரீராமைப் பார்த்தால் யவனர் சாயல் தெரிகிறதோ?) இது எல்லாம் போகிற போக்கில் சொல்லப்படுபவை அல்ல. இலக்கியங்களில் காணக்கிடைப்பவை. (யவனர் இயற்றிய வினை மாண்பானவை, யவனத் தச்சரும் அவந்திக் கொல்லரும்). பாவை விளக்கு என்பதுகூட யவனர் நமக்கு அறிமுகப்படுத்தியதாம். இசைக்கருவிகளும் ஆதிகாலம் தொட்டு நம்மிடம் இருந்தன (பலா மரத்தில் செய்யப்பட்ட வீணை முதற்கொண்டு).
கோயில்களிலும் பலவகைகள் இருந்தன. குடிசையைப்போன்ற சிறிய கோயில்கள் குடிசைக்கோயில் எனப்பட்டன. கருவறை தரைத் தளத்தில் இல்லாமல் மேலே இருந்தால் மாடக்கோயில்கள் என்று அழைக்கப்பட்டன (கோச்செங்கட்சோழன் 70 மாடக்கோயில்களைக் கட்டினான், ஆனை புகா வண்ணம்), தூங்குகின்ற யானையைப் போன்ற உருவத்துடன் இருக்கும் கோயில்களுக்கு தூங்கானைமாடக் கோயில் என்று பெயர்.
தஞ்சை அரண்மனை நுழைவாயிலில் இருக்கும் இரண்டு சன்னிதிகள். இவை மிகப் பழமையானவையாக இருந்திருக்கவேண்டும். செய்நேர்த்தியுடன் கூடிய தெய்வச் சிலைகள் இவை.
கலைக்கூடத்திற்குள் செல்வதற்கு முன்பாக தற்போது சீர் செய்வதற்காக மூடப்பட்டுள்ள தர்பார் ஹாலுக்கு அருகில் இருக்கும் இடங்களில் வைக்கப்பட்டுள்ள பொருட்களைக் காணலாம். இவைகள் தனியார் வசம் உள்ளவை போலத் தெரிகின்றன. காரணம், அவற்றைப் பார்வையிடுவதற்காக மிகச் சிறிய தொகையை பார்வையாளர்களிடமிருந்து வாங்குகிறார்கள்.
அந்தப் பகுதிக்குச் செல்லும்போது மேலே இருந்த கூரை. ஒரு காலத்தில் ஓஹோ என்று இருந்திருக்கவேண்டும்.
அந்தக் காலத்தில் உபயோகிக்கப்பட்ட எடைக்கற்கள். உங்களுக்குத் தெரியுமா, என் அப்பா இதுபோன்று எடைக் கற்களையும் அதற்கேற்ற சிறிய தராசு ஒன்றையும் வைத்திருந்தார். அது பிறகு என்னவாயிற்று என்று தெரியவில்லை.
இப்போது இவற்றைப் பார்க்கும்போது பிரமிப்பு ஏற்படவில்லை. யாரேனும் இவற்றை அணிந்துகொண்டு (ராஜாவாகவே இருந்தாலும்) வந்தால், எந்த நாடகத்தில் நடித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டுவிடுவோம் எனத் தோன்றுகிறது. இன்றைக்கு மிக உயர்ந்ததாக நாம் நினைக்கும் ஒன்று, பிற்காலத்தில் மதிப்பிழந்து போகும் என்பதற்கான அடையாளம் இது.
கிருத்துவ பாதிரியார் கவாட்ஸ் மரணப் படுக்கையில் இருந்தபோது மன்னர் சந்தித்தது வரலாறு. (அதற்கான காரணங்கள் வேறு) ஆனால் இங்கு எழுதியிருப்பது, சரபோஜி மன்னர், கிறித்துவத்தையும் காப்பாற்றுவேன் என்று நெஞ்சில் கையை வைத்து உறுதி அளித்ததாக புருடா விட்டிருக்கிறார்கள்.
பல்வேறு வகையான அங்குசங்கள். இவற்றை உபயோகித்துத்தான் யானைகளைக் கட்டுப்படுத்தினார்கள்.
காபி திரிக்கும் மிஷின் (இதனை எங்கள் பெரியம்மா வீட்டிலும் பார்த்திருக்கிறேன்), பாக்கு வெட்டி போன்று பல்வேறு பொருட்களையும் காட்சியப்படுத்தியிருக்கிறார்கள்.
பழங்கால மரப் பெட்டகங்கள். இதுபோன்று ஒரு பெட்டகம் என்னுடைய அப்பாவின் பூர்வீக வீட்டில் இருந்த து. அதில் பழங்கால நாணயங்களும், நிறைய ஓலைச்சுவடிகளும் இருந்தன. நான் வெளிநாட்டில் இருந்து வெகேஷனில் ஊர் திரும்பியபோது என் அப்பா, அந்த வீட்டை விற்றுவிட்டேன் என்றார். ஓலைச்சுவடிகள் போன்றவை என்ன ஆகின என்று கேட்டதற்கு அவற்றை எடுத்துவரவில்லை என்றார். எனக்கு ரொம்பவே வருத்தம். அவற்றின் முக்கியத்துவத்தை நான் அவரிடம் முன்பே சொல்லியிருந்தால், அதாவது அவற்றின்மீது எனக்கு ஆர்வம் உண்டு என்று சொல்லியிருந்தால் எனக்கு அவற்றை எடுத்து வந்திருப்பார்.
இதனை எழுதும்போது முன்பு நிகழ்ந்த ஒன்று நினைவுக்கு வருகிறது. என் அப்பா ஆசிரியப் பணியில் இருந்தார். அவருக்கு நிறைய செய்திகளைப் படிக்கும், கேட்கும் ஆர்வம் உண்டு. முன்பு சோவியத் யூனியனிலிருந்து நிறைய புத்தகங்கள், செய்திப் பத்திரிகைகள் அவருக்கு வரும் (நான் 3வது படிக்கும்போதிருந்தே). அவர் அதில் முக்கியமான படங்களையும் செய்திகளையும் ஒரு பெரிய ஆல்பத்தில் ஒட்டிவருவார். இது இரண்டடிக்கு இரண்ட டி உள்ள, 100 பக்கங்களாவது கொண்ட ஆல்பம். இதுபோல அவர் இரண்டு ஆல்பங்களை வைத்திருந்தார். நான் திருவண்ணாமலைக்கு அவர் வீட்டிற்கு வெக்கேஷனில் சென்றிருந்தபோது பார்த்திருக்கிறேன் (அப்போது நான் 12ம் வகுப்பு முடித்திருந்தேன்). பிறகு அவரிடம் அந்த ஆல்பத்தைப் பற்றிக் கேட்டபோது, அதனை அதில் ஆர்வமுடைய ஒரு ஆசிரியருக்குக் கொடுத்துவிட்டேன் என்றார். எனக்கு ரொம்பவே வருத்தம். என்னுடைய ஆர்வத்தை அவரிடம் சொல்லாமல் இருந்துவிட்டேனே என்று.
பெரிய அரண்மனை சமையல் பாத்திரங்கள். ராஜா மற்றும் அரசிகளுக்கு எதில் சமைத்திருப்பார்கள்? அதே உணவுதானா? தினமும் விருந்து என்றால் அவங்க உடல்நிலை என்னவாகும்? ஒருவேளை அரசர், இளவரசர்களுக்குத் தனி உணவா? எப்படி அவங்க உடம்பைப் பராமரிப்பாங்க? தினமும் பயிற்சியில் ஈடுபடுவாங்களே.. என்றெல்லாம் யோசனை தோன்றுகிறது.
மன்னர் சரபோஜி, பாதிரியாரைச் சந்தித்த நிகழ்வு மரத்தில் செய்யப்பட்டு பெட்டகத்தின் மீது வைக்கப்பட்டுள்ளது. இந்தக் காலம்னா, புகைப்படம் எடுத்து வைத்துக்கொள்ளலாம். அந்தக் காலம் என்பதால் மரத்தில் செதுக்கியிருக்கிறார்கள்.
தானியப் பானைகளாக இருக்கும்.
அரண்மனை முரசு
கலைக்கூடத்தின் நுழைவாயிலே கலை நயத்துடன் திகழ்கிறது
15ம் நூற்றாண்டு விஷ்ணு, சிலை கிடைத்த இடம் கொக்கலாடி, விஜயநகரம். 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த பூர்ண புஷ்கலாவுடன் கூடிய ஐயனார், திருக்காவூர்.
16ம் நூற்றாண்டைச் சேர்ந்த தக்ஷிணாமூர்த்தி, கிடைத்த இடம் இராஜகோபாலஸ்வாமி கோயில், தஞ்சை. இரண்டாவது படம், நாக கன்னிகை. 17ம் நூற்றாண்டு, கிடைத்த இடம் குத்தாலம்.
16ம் நூற்றாண்டு, க்ஷேத்திரபாலர், கிடைத்த இடம் திருவலஞ்சுழி. 12ம் நூற்றாண்டு திருமூர்த்தி சிலை, கிடைத்த இடம் தாராசுரம்.
8-10ம் நூற்றாண்டைச் சேர்ந்த, கோட்டூரில் கிடைத்த மஹாவிஷ்ணு சிலை.
10ம் நூற்றாண்டைச் சேர்ந்த துவாரபாலகர், தாராசுரம். அதே பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த துவாரபாலக்ர, திருத்துறைப்பூண்டி (அதற்கும் முந்தையதாக இருந்திருக்கவேண்டும்)
இரண்டாம் இராஜராஜனும் அவன் மனைவியும், 12ம் நூற்றாண்டு, தாராசுரம். இரண்டாவது சிற்பம், திரிபுராந்தகர், 12ம் நூற்றாண்டு, தாராசுரம்.
அந்தக் கலைக்கூத்தில் நிறைய சிற்பங்கள் தாராசுரத்தில் கிடைத்தனவாக இருந்தன. ஏற்கனவே தாராசுரம் வளாகத்தில் இருந்த சிற்பங்களை (தனியாக வைக்கப்பட்டிருந்தவை) நாம் பார்த்திருக்கிறோம். இதன் மூலம் அந்தப் பகுதியே சிற்பங்களால் நிறைந்து இருந்தது என்று புரிந்துகொள்ள முடியும். எத்தனை கலைவடிவங்களை நாம் இழந்தோமோ… யாருக்குத் தெரியும்?
இனி அடுத்த வாரம் தொடர்வோமா?
(தொடரும்)
காலை வணக்கம், வாத்யாரே!
பதிலளிநீக்குவழக்கம்போல் இந்த வாரமும் அமர்க்களம்!
என்னடா, திருவாழிமார்பரைக் காணலையே! ன்னு நினைச்சேன் நேத்து பார்த்தேன். இன்றும்.
நீக்குபனி பொழியும் இடமோ? வந்துட்டு ஓடிப் போய் வீட்டுக்குள்ள புகுந்துடறீங்களோ! ஹாஹாஹா
கீதா
உண்மை. தவிரவும், தப்பித்தவறி சூர்யன் பகலில் தென்பட்டாலும், ஐந்து மணிக்கே சூர்யாஸ்தமனம்; இழுத்துப்போர்த்தி தாச்சுக்க வேண்டியதுதான். Lol
நீக்குஹாஹாஹா நினைச்சேன்!!! சிரித்துவிட்டேன்!
நீக்குபுரிகிறது. 4 மணிக்கே கொஞ்சம் கொஞ்சமா இருட்டத் தொடங்கிடுமே!
கீதா
வாங்க திருவாழ்மார்பன். (எனக்கு திருவண்பரிசாரமும், அலர்பேல் மங்கை உறைமார்பா பாசுரமும்தான் நினைவுக்கு வரும்). இன்று நீச்சல் டிரெயினிங் வகுப்புக்குச் சென்றிருந்தேன். வீட்டுக்கு வந்தும் குளிர் நடுக்கம் போகலை. பிறகுதான் கருத்துகளுக்கு பதிலெழுதணும். முதல் கருத்துக்கு நன்றி.
நீக்குஇங்கும் குளிர் உண்டு. காலையில் ஐந்து மணிக்குள் எழுவதற்குக் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும்.
நீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கம்....
பதிலளிநீக்குஎத்தனை கலைவடிவான சிலைகள். பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷங்கள்.
அனைத்தும் கண்டு ரசித்தேன். வடக்கில் நான் பார்த்த அருங்காட்சியகங்கள் நினைவுக்கு வருகின்றன.
வாங்க வெங்கட் நாகராஜ். இல சமயம் தோன்றும், மூலவர் சிலையைச் செய்த சிற்பிக்கு எவ்வளவு பாக்கியம். காலமெல்லாம் மக்களை ஈர்க்கும் சக்தி அந்தத் தெய்வத்திற்கு ஏற்பட்டுவிடுகிறதல்லவா. சில சிற்பிகள் செய்த சிலைகள் காலவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிடுகின்றன.
நீக்கு//நெடுநல்வாடையில் (ஸ்ரீராம் இதற்கு நெடுநாள்வடை னு கருத்து எழுதாம இருந்தால் சரிதான்) //
பதிலளிநீக்குஹாஹா...... நல்ல பஞ்ச்...... :) உணவில் உள்ள ரசனை காரணம் அப்படி சொல்லலாம்.
நான் கல்லூரியில் படித்தனோது ஆங்கிலத்தில் எழுதி தமிழாசிரியர் கிண்டல் செய்தது நினைவுக்கு வந்தது.
நீக்குதியாகையர், ச்யாமா சாஸ்திரிகள், முத்துசாமி தீக்ஷிதர் போன்றோர் சரபோஜி காலத்தில்தான் வாழ்ந்தார்கள். //
பதிலளிநீக்குஇது அறிந்த நினைவு இருக்கு.
1827ல் 501 எழுத்தாணிகள் வாங்கப்பட்டதற்கான கணக்கைக் கொண்டு எத்தனை பேர்கள் இந்த வேலையில் ஈடுபட்டிருந்தனர் என்பதை அறிய இயலும்.//
அட! எழுத்தாணிகள் தேஞ்சுடுமோ? பென்சில் போல கூர்செய்து கொண்டே இருக்கணும் போல.
கீதா
வாங்க கீதா ரங்கன் க்கா.. சீழ்தலைச் சாத்தனார் நினைவுக்கு வரலையா? எழுத்தாணிகள் உடைந்திருக்கலாம். கீர்லாம் செய்யவேண்டியதில்லை. ஆணியாச்சே
நீக்குநெடுநல்வாடையில் (ஸ்ரீராம் இதற்கு நெடுநாள்வடை னு கருத்து எழுதாம இருந்தால் சரிதான்) //
பதிலளிநீக்குஹாஹாஹா ஸ்ரீராம் சீக்கிரம் எழுந்து ஓடிவாங்க....பாருங்க...இன்னிக்கு ஒரு பஞ்சாயத்து கூட்டியே ஆகணும். பட்டிமன்றமே! என்னை நடுவாரகவோ பேசவோ கூப்பிடாதீங்க. நான் அப்பீட்டு. ஹிஹிஹி
கீதா
Actually , அது நெடுநாள் வாடை; ஓலையெல்லாம் பூசணம் பூத்து மக்கிப்போச்சுல்லா! ! ;-)
நீக்குஹாஹாஹாஹா.....சிரித்துவிட்டேன் திவாமா!!! அதுவும் எங்க ஊர் பாஷைல!!
நீக்குகீதா
நெல்லை, ஸ்ரீராமை கலாய்ச்சிருக்கீங்க..சிரித்துவிட்டேன். பஞ்சாயத்து...பஞ்சாயத்து.
பதிலளிநீக்குயவனர் போலவா இருக்கார் ஸ்ரீராம்?!!!!!! கூடவே ப்ராக்கெட்டுக்கு வெளில சொல்லியிருப்பதைப் பார்த்தால் ஸ்ரீராம் இலக்கியத்திலும் இடம் பெற்றிருக்கிறாரோ ஆஹா!!!!!!
கீதா
அந்தப் பத்தி விவரணம் சூப்பர். எவ்வளவு இருக்கு இல்லையா தெரிந்து கொள்ள!
பதிலளிநீக்குகிரேக்கர்களுக்கும் நமக்கும் தொடர்பு உண்டுன்னு சொல்வதுண்டே..
//(கோச்செங்கட்சோழன் 70 மாடக்கோயில்களைக் கட்டினான், ஆனை புகா வண்ணம்), தூங்குகின்ற யானையைப் போன்ற உருவத்துடன் இருக்கும் கோயில்களுக்கு தூங்கானைமாடக் கோயில் என்று பெயர்.//
பிரமிக்க வைக்கும் தகவல்.
கீதா
தஞ்சை அரண்மனை நுழைவாயிலில் இருக்கும் இரண்டு சன்னிதிகள். //
பதிலளிநீக்குஅழகா இருக்கு பாருங்க, நெல்லை ஆனா டைல்ஸ் போட்டுக் கெடுத்துட்டாங்கன்னு தோணுது.
கீதா
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குபரவால்ல தொகை வாங்கினாலும் ஒழுங்கா சீர் செய்தா போதும் பாதுகாத்தால் போதும்.
பதிலளிநீக்குஇன்றைக்கு மிக உயர்ந்ததாக நாம் நினைக்கும் ஒன்று, பிற்காலத்தில் மதிப்பிழந்து போகும் என்பதற்கான அடையாளம் இது. //
எல்லாமே அப்படித்தான் வாழ்க்கையே அப்படித்தான்.
மம்மூட்டி ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார் பேட்டி எடுப்பவர் கேட்ட கேள்விக்கு. "என்னைக் கொண்டாடுவதெல்லாம் அடுத்த 10 வருஷம்? இல்லை 15? அதுக்கப்புறம் கண்டிப்பா மறந்துடுவாங்க வருடங்கள் போகும் போது."
கீதா
காபி திரிக்கும் மெஷின் பாட்டி வீட்டில் இருந்தது. அதில்தான் திரிப்போம். அப்புறம் அது என்னாச்சுன்னு நினைவில்லை. நான் 6 ஆம் வகுப்பு படித்த வரை.
பதிலளிநீக்குசந்தனம் அரைக்கும் கல் போல இருக்கு. இப்ப நான் சொன்னா சப்பாத்தி/போளி இடும் கல்!!!!
அதுக்குப் பக்கத்துல இரும்பு தோசைக்கல்லா? கவிழ்த்திப் போட்டிருக்காங்களோ!!!
கீதா
மரப்பெட்டி எங்க வீட்டிலும் முன்னர் இருந்தது. ரெண்டு மூணு. அப்புறம் நாங்க கூடக் கள்ளிப் பெட்டி வைத்திருந்தோம்.
பதிலளிநீக்குஓலைச்சுவடிகள் எல்லாம் இருந்ததா? அட!
//அவற்றின் முக்கியத்துவத்தை நான் அவரிடம் முன்பே சொல்லியிருந்தால், அதாவது அவற்றின்மீது எனக்கு ஆர்வம் உண்டு என்று சொல்லியிருந்தால் எனக்கு அவற்றை எடுத்து வந்திருப்பார். //
இதுதான் நெல்லை...நாம பல விஷயங்களைச் சரியாகக் கம்யூனிக்கேட் பண்ணாம விட்டிடறோம். அதனால் வரும் இழப்புகளும் உண்டு. இது எனக்கு அடிக்கடித் தோன்றும்.
கீதா
அரசர் அரசிகளில் அரசர்கள் பயிற்சியில் கண்டிப்பா ஈடுபட்டிருப்பாங்க ஸோ அதுக்கான சாப்பாடாகத்தான் இருக்கும் அரண்மனை வைத்தியரும் இருப்பாரே. பயிற்சிகளுக்கும் ஆட்கள் இருந்திருப்பாங்க.
பதிலளிநீக்குநான் அரசிகளைப் பத்திதான் யோசித்ததுண்டு. உடம்பு ஊதிப் போய்டாதோ என்று.
ஆனா பாருங்க, நெல்லை, இப்ப சொல்லப்படற வியாதிகளை நாம என்னவோ புதுசு புதுசா சொல்றாங்களேன்னு பேசிக்கறோம்...அந்தக்காலத்துல பாரு இல்லவே இல்லைன்னு. அப்படி இல்லை. பூமி மனிதர்கள் வாழ்வு என்று வந்தாச்சுனா அப்பவும் வியாதிகள் இருந்தனதான் ஆனால் அவற்றின் பெயர்கள் வேறு...நிறைய பேசப்படவில்லை. ஏதோ மர்மமான வியாதியில் போய்ட்டார் என்று சொல்லி முடிச்சுடுவாங்க. விஷக்காய்ச்சல் அப்படி இப்படினு.
இப்பவும் கூடப் பாருங்க, இத்தனை டெக்னாலஜி வளர்ச்சி இருக்கும் போதே......கேரளத்து நதிகளில் ஒரு Naegleria fowleri எனும் ஒற்றை செல் மூளையைத் தின்னும் அமீபா ....ஒரு பாரசைட். நதிகளில் நீராடறவங்க குளங்களில் நீராடறவங்க திடீர்னு மருத்துவமனைகளில் அட்மிட் ஆறாங்க. இயற்கையாக இந்த அமீபா இருக்கும் ஆனால் நீர் நிலைகள் பாழாகும் போது இந்தப் பிரச்சனைகள் வருது.
முதலில் காய்ச்சல் எதனாலான்னு தெரியாம அப்புறம் கண்டறிஞ்சுருககங்க. அதனால இப்ப எச்சரிக்கை கொடுத்திருக்காங்க் ஐயப்ப பக்தர்கள் பம்பையில் குளிக்காம இருக்கறது நல்லது. இல்லைனா மூக்கை நன்றாகப் பாதுகாத்துக் கொண்டு முங்கணுமாம். இது ஒரு அரிதான வியாதியாம்....
ரிஸ்க்!
கீதா
தானியப் பானைகள் பார்க்க தாழி போன்று ஹிஹிஹி
பதிலளிநீக்குகலைக்கூடம் நுழைவு வாயில் முதல் உள்ளே இருப்பவை வரை அழகோ அழகு. ஒவ்வொன்றும் பார்த்து ரசித்தேன். நேரில் போகும் வாய்ப்பு கிடைக்குமா தெரியலை.
கீதா
இதே போன்று ஈரோடில் இருந்ததை எடுத்து வைச்சிருக்கேன். ஆனால் அது பெரிய கலைக்கூடம் போல எல்லாம் இல்லை சும்மா ஒரு பெரிய அறையில் வைச்சிருக்காங்க. ஒரு வேளை இப்ப நல்லா ஆக்கிருப்பாங்களோ தெரியலை.
பதிலளிநீக்குபகிர வேண்டும் என்று நினைத்தேன். ஆனா எனக்கு உங்கள் அளவு அறிவு எதுவும் கிடையாது. புத்தகங்களும் கிடையாது. அனுபவங்களும் கிடையாது . அதைப் பற்றி வாசிக்கவோ தெரிந்து கொள்ளவோ. எனவே நான் பகிர்ந்தால் சும்மா படங்கள் ....நெல்லை கொடுப்பது போல இல்லைன்னு கருத்துகள் வந்துவிடும்.
எனவே எனக்கு ரொம்பத் தயக்கம் வருகிறது பதிவுகள் எழுத.
கீதா
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா ஹரிஹரன் மேடம். ப்ரார்த்தனைக்கு நன்றி
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குசரணம் சண்முகா
நீக்கு1675-1850 இதில், 1798லிருந்து சுமார் 34 வருடங்கள் ஆண்ட
பதிலளிநீக்குஇரண்டாம் சரபோஜி மிக முக்கியமான மன்னர்...
இவரது காலத்தில் தான் அபிராமி அந்தாதி தோன்றியது...
வாங்க துரை செல்வராஜு சார். ஆதிபராசக்தி படத்தில் இந்தக் காட்சி உண்டு. உணர்வுபூர்வமான பகுதி அது.
நீக்குதஞ்சை மேல ராஜ வீதியில் காமாக்ஷி அம்மன் கோயிலுக்குப் பின்புறத்தில் ஸ்யாமா சாஸ்திரி அவர்களது இல்லம்...
பதிலளிநீக்குவெகு சிறப்பு... படங்கள் எல்லாம் அருமை
பதிலளிநீக்குமூன்றாண்டுகளில் இரண்டு முறை அரண்மனைக்கு
பதிலளிநீக்குசென்றுள்ளேன்...
நெடுநல் வாடை
பதிலளிநீக்குஇன்றைய வழக்கில்,
நெடுநாள் வாடை
நெடுநாள் வடை
நடுநாள் அடை
(நடுராத்திரி பிரியாணி மாதிரி)
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇந்த வார ஞாயிறு பதிவும் மிக அருமையாக உள்ளது. எத்தனை செய்திகள்.. எத்தனை விபரங்கள் என பிரமிப்பு கொள்ள வைக்கிறது. சரபோஜி மன்னர் வாழ்ந்த காலத்தில் அவர் செய்த பணிகள் வியப்பில் ஆழ்த்துகின்றன.
பொக்கிஷமாக வைக்கப்பட்டிருந்த கலைப்பொருட்களும் சிற்பங்களும் மனதை கவர்கின்றன.
/பெரிய அரண்மனை சமையல் பாத்திரங்கள். ராஜா மற்றும் அரசிகளுக்கு எதில் சமைத்திருப்பார்கள்? அதே உணவுதானா? தினமும் விருந்து என்றால் அவங்க உடல்நிலை என்னவாகும்? ஒருவேளை அரசர், இளவரசர்களுக்குத் தனி உணவா? எப்படி அவங்க உடம்பைப் பராமரிப்பாங்க? தினமும் பயிற்சியில் ஈடுபடுவாங்களே.. என்றெல்லாம் யோசனை தோன்றுகிறது. /
உண்மை அந்த காலத்தில் பித்தளை பாத்திரங்களில் சமைப்பதுதான் பழக்கமென்றாலும், இந்த பெரிய கொப்பரைகளில் சமைத்தால் எவ்வளவு பேர் உணவருந்தலாம். என்ற எண்ணம் வருகிறது. அரசன், அரசி அவர்கள் குடும்பத்திற்கும் போக மீதமுள்ளவற்றை அவர்களின் நெருங்கிய பணிப்பெண்கள், உதவியாளர்கள் என உபயோகப்படுத்தியிருப்பார்களோ?
இந்த மாதிரி கொப்பரையில் எனக்கு பிறந்த வீட்டில் கல்யாணத்திற்கு சீர் பட்சணங்கள் வைத்து தந்தார்கள். இப்போது என்னிடம் இந்த கொப்பரையில்லை. ஆங்காங்கே வீடுகள் மாறும் போது தூக்கிச் செல்வது கடினமென்பதால் அது நாத்தனார் வீட்டிலேயே உள்ளது. இன்று இதைப்பார்த்ததும் பிடி வைத்த அந்த கொப்பரையும் அதன் மூடியான பெரிய தாம்பாளமும் நினைவுக்கு வந்தது.
உங்கள் ஆர்வத்தை உங்கள் அப்பாவிடம் வெளிப்படுத்திருந்தால், ஓலைசச்சுவடிகளின் விபரங்களை அறிந்து கொண்டிருக்கலாம். எங்கள் அப்பாவும், எழுத்தாணி கொண்டு ஓலைகளில் பல ஜாதகங்களை எழுதுவார். அந்தச்சுவடிகளும் எழுத்தாணியும் எங்குப் போயிற்றோ..? உங்கள் பதிவை படித்ததும் எல்லாம் நினைவுக்கு வருகிறது. அருமையான தஞ்சை கலைக்கூடம் பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
// இவற்றை எல்லாமே (அதாவது இன்னும் கவனிப்பாரற்றுக் கிடக்கும் சிலைகளை எல்லாம் திரட்டி) மிகப் பெரிய கலைக்கூட த்தை தஞ்சையிலே வைத்து, சோழ தேசத்தின் கலைச் செல்வங்களைக் காட்சிப்படுத்தலாம். பலரும் வருகை புரிந்து காண்பதற்கு வசதியாக இருக்கும். இல்லாவிடில், ஆங்காங்கு இருக்கும் கவனிப்பாரற்ற சிற்பங்கள் நாளடைவில் காணாமல் போய்விடும் அல்லது சிதைந்துவிடும். //
பதிலளிநீக்குநம்மை அறநிலையத்துறை அமைச்சராக போடாமல் போனார்கள்! அதுதான் கஷ்டம்!!
//(திரும்ப படியெடுத்து) புதிய ஓலைச்சுவடிகளை எழுதலும் //
பதிலளிநீக்குபடியெடுத்த புண்ணியவான்கள் என்னென்ன இடைச்செருகல்களை சேர்த்தனரோ... எதெதை தப்பாக எழுதினரோ... எதைஎதை நைஸாக விட்டு விட்டார்களோ... யாரைத்தான் நம்புவதோ பேதையின் நெஞ்சம்...!
// செய்யப்பட்டிருந்திருத்தல் //
பதிலளிநீக்குஅம்...மாடி.. என்ன வார்தையமைப்பு!
// இல்லையென்றால் இங்கிலீஷ்கார வந்த பிறகுதான் எல்லாமே நமக்குத் தெரியும் என்று பரப்பியிருப்பார்கள்). //
பதிலளிநீக்குஇருந்தால் மட்டும் ஒப்புக் கொள்கிறார்களா என்ன!
// நெடுநல்வாடையில் (ஸ்ரீராம் இதற்கு நெடுநாள்வடை னு கருத்து எழுதாம இருந்தால் சரிதான்) //
பதிலளிநீக்குஐயோ... நக்கீரரிடம் விளையாட முடியுமா? சிவனையே படுத்தியவர்! ஆனால் அதைப் படித்து அறியாததால் 'வடை போச்சே' என்று வேண்டுமானால் சொல்லலாம்! அதுவும் நக்கீரர் காதில் விழாமல்! பத்துப் பாட்டில் ஏழாம் பாட்டு என்பதால் நமக்கு இல்லை, எனக்கு ஏழாம் பொருத்தம்!
/? அரசியின் கட்டில் நன்கு முதிர்ந்த யானைத் தந்தத்தால் செய்யப்பட்டது எனவும் அதில் நிறைய சிற்பவேலைப்பாடுகள் இருந்தன எனவும் குறிப்பிட்டிருக்கிறது. //
பதிலளிநீக்குதமிழ்ப் புலவர்(கள்) தம் அகப் பாடல்களில் தலைவன் தலைவி ஆகியோரின் அடையாளத்தை வெளிப்படுத்தாத கண்ணியத்தைக் காத்து வந்தனர். புறவாழ்வை அனைவருக்கும் கூறலாம். அகவாழ்வை அகிலமே அறியச்செய்வது அறிவுடைமை அன்று என்பது அவர்தம் அறிவுமுடிவாய் இருந்திருக்கிறது. ஆனால் நெடுநல்வாடையில் பாண்டியனின் அடையாளச் சின்னமாகிய வேம்பு நக்கீரரால் சுட்டப்பட்டுள்ளது. ஆகவே தான் தலைவன் பாண்டிய மன்னனாய்க் கொள்ளப்பட்டான். இந்நூலும் புறப் பொருள் நூலாயிற்று.
// (ஸ்ரீராமைப் பார்த்தால் யவனர் சாயல் தெரிகிறதோ?) இது எல்லாம் போகிற போக்கில் சொல்லப்படுபவை அல்ல. இலக்கியங்களில் காணக்கிடைப்பவை. //
பதிலளிநீக்குஆ..... இலக்கியங்களிலேயா?!!
// பாவை விளக்கு என்பதுகூட யவனர் நமக்கு அறிமுகப்படுத்தியதாம். //
பதிலளிநீக்குஅப்போ அது அகிலன் இல்லையா? முன்னாலேயேவா? ஹிஹிஹி...
// காபி திரிக்கும் மிஷின் //
பதிலளிநீக்குஇதற்கு மெஷின் எதற்கு? அரைமூடி எலுமிச்சை சாறு, துளி தயிர் போதாதோ!!!
ஹா ஹா ஹா. வார்த்தை திரிக்கும் போட்டியில் உங்களை வெல்வார் யாருமில்லை என விளம்பலாம்.
நீக்குஅந்த சமையல் பாத்திரத்தை கங்காளம் என்றுதானே சொல்வார்கள்?
பதிலளிநீக்குவாங்க ஶ்ரீராம். கங்காளம்னுதான் சொல்வாங்க. திருப்பதியில் கங்காளம் கங்காளமாக பிரசாதங்கள் வெள்ளிவாசலைத் தாண்டி வருவதைப் பார்த்திருக்கிறேன்.
நீக்குஅந்த பெரிய மரப்பெட்டிகளைப் போல என் அப்பா வீட்டில், பாட்டி வீட்டில் எல்லாம் பெரிய சைஸ் மரப்பெட்டிகள் இருந்தன. கள்ளிப்பெட்டி என்பார்கள்.
பதிலளிநீக்கு/// படியெடுத்த புண்ணியவான்கள் என்னென்ன இடைச்செருகல்களை சேர்த்தனரோ... எதெதை தப்பாக எழுதினரோ... எதைஎதை நைஸாக விட்டு விட்டார்களோ...///
பதிலளிநீக்குஅப்படி இருந்திருக்க வாய்ப்புகள் குறைவு...
அன்றைக்கு மனசாட்சி என்னும் மகோன்னதம் இருந்தது...