25.1.26

நாங்கள் தரிசனம் செய்த கோயில்கள் :: தஞ்சை அரண்மனை வளாகம் – உலோகச் சிலைக் கூடம் :நெல்லைத்தமிழன்

 

நான் இங்கு பகிரும் சிலைகளைப் பற்றிய விவரங்களை எல்லாப் படங்களுக்கும் எழுதுவதில்லை. அவ்வளவு விவரமாக எழுதுவது தேவையில்லை என்று தோன்றியது. இவற்றில் என்னை ஆச்சர்யமூட்டியது, இது திருஞானசம்பந்தர், இது நர்த்தன கிருஷ்ணர் என்று எப்படி வகைப்படுத்தியிருக்கிறார்கள் என்பதுதான். சில முக்கியமான சிலைகளை நாமே சொல்லிவிடமுடியும், இது விஷ்ணு, இது மஹாலக்ஷ்மி, இது பிறையேறு செஞ்சடையன், நடராஜர் என்று. ஆனால் பல சிலைகளை எப்படி அனுமானிக்கிறார்கள் என்பது எனக்குச் சரியாகப் புரியவில்லை. ஒருவேளை அவை கிடைத்த இடம்/கோயில்களை வைத்தும் சில்ப சாஸ்திரத்தின் கூறுகளைக் கொண்டும் வகைப்படுத்தியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

மராட்டியர் வரலாறு படித்துக்கொண்டிருந்தபோது, வர்த்தகர்கள் பொதுவாக செட்டியள் வர்த்தகர் என்று அழைக்கப்பட்டனர் என்றும், பொருட்களை மொத்தமாகக் கொண்டு சேர்த்து விற்கும் இடங்கள் பேட்டை என்று அழைக்கப்பட்டன என்றும் படித்தேன். (அரிசிப்பேட்டை, ஆட்டுப்பேட்டை என்பது போன்று). தனித் தனியாக ஒரு பொருளை விற்கும் நிலையங்களை கடை என்று அழைத்தனர். இப்போதும் அதே பெயரில் நாம் தேங்காய்கடை, ஜவுளிக்கடை, கசாப்புக்கடை, கறிகாய்கடை என்றெல்லாம் அழைக்கிறோம்ஒரே கடையில் பலவிதப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் அவை, சரக்குக்கடை, மளியக்கடை என்று அறியப்பட்டன. பலசரக்குக்கடை, மளிகைக் கடை என்பது அவற்றிலிருந்து ஏற்பட்டதுதான். அதுபோலவே நில அளவைகளும் பொருள் அளவைகளும்.  (நெய் என்றால் தோண்டி என்ற அளவையிலும், எண்ணெய், குடம் என்றும், மற்றவை சேர், மரக்கால் என்பது போன்ற அளவைகளிலும் அளக்கப்பட்டன. நான் சிறிய வயதில் சேர் என்ற அளவை உபயோகிக்கப்பட்டதைக் கண்டிருக்கிறேன். என் அப்பா எப்போதும் முழம், மைல், கஜம் போன்ற பல அளவுகளில் சொல்லுவார்தூரத்திற்கும் அவர் உபயோகப்படுத்திய வார்த்தை சட் என்று நினைவில் இருந்து வரமாட்டேன் என்கிறதுஅப்போது நினைவுக்கு வரவில்லை. பதிவுகளை அனுப்புவதற்கு முன்பு இந்தப் பகுதிக்கு வந்தபோது நினைவுக்கு வந்துவிட்டது. ஃபர்லாங்க். என் அப்பா எப்போதுமே தூரத்தை ஃபர்லாங் அளவீடுகளில்தான் சொல்லுவார். (அவர் வீடு சுமார் 3 ஃபர்லாங் இருக்கும் என்று)

நாணயத்தை கம்பட்டம் என்ற இடத்தில் உருவாக்கினார்கள் (தற்காலத்தில் தங்கசாலை என்று சொல்வதுபோல). முதன் முதலில் மராட்டிய அரசு, டச்சு நிர்வாகத்துடன் சேர்ந்து நாணயங்களை அச்சிட்டனர். தஞ்சாவூர் சீமைக்காக காசு அச்சடித்துக்கொடுத்ததில் வரும் லாபம், டச்சு கம்பெனிக்கும் மராட்டிய மன்னரான ஏகோஜிக்கும் சரி சமமாகப் பிரித்துக்கொண்டார்கள்.

இதனை எழுதும்போது எனக்கு எழுந்த சந்தேகத்தைப் பகிரவேண்டும் என்று தோன்றியது. அரசர், அவருடைய குடும்பத்தினர் போன்றவர்கள் நாட்டின் தலைவர்கள். அவர்களுக்கென்று அரண்மனை, நகைகள், படாடோபமான உடைகள், பாதுகாப்புக் கருவிகள் போன்றவை இருக்கும். அவருக்கான பாதுகாப்பு மற்றும் அரண்மனையின் செலவுகள் எல்லாமே அரசாங்கத்தைச் சார்ந்தது. ஆனால் அவர்களுடைய சொந்த சொத்து எங்கிருந்து வரும்போரின் வெற்றிகளால் வரும் செல்வத்தில் அரசருக்கு ஒரு பங்கு போகும். அதுபோல வருவாயிலும் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் அரசருக்கு, அவருடைய நெருங்கிய சொந்தங்களுக்குச் செல்லும் என்று நினைக்கிறேன். அது தவிர, இளவரசர்கள், இளவரசிகள் அவரவர் வகிக்கும் பதவி, பொறுப்பு ஆகியவைகளைப் பொறுத்து மாதாமாதம் சம்பளம் கொடுப்பார்கள் என்று நினைக்கிறேன்கல்ஃபைப் பொறுத்தவரையில், நாட்டின் வளங்கள் அரசருக்குச் சொந்தம். அதிலிருந்து கணிசமான பகுதி அரசரைச் சேரும். அதனால்தான் மன்னர்கள் மிக மிகப் பணக்காரர்களாக இருப்பார்கள். (பில்லியன் கணக்கில் சொத்து இருக்கும்) பிரிட்டனைப் பொறுத்தவரையில் அரசியிடம் இருக்கும் நகைகள், சொந்தச் சொத்துகளை தன்னுடைய வாரிசுகளுக்கு தங்கள் விருப்பம் போலக் கொடுத்துவிடுவார்கள். உங்களுக்கு இதுபற்றி ஏதேனும் தோன்றினால் எழுதுங்கள்.

மராட்டிய மன்னர்கள் பொதுவாக எல்லாச் சமயங்களுக்கும் இடம் கொடுத்திருந்தாலும், சைவ சமயத்தையே பெரும்பாலும் ஒழுகினார்கள். அவர்கள் காலத்தைய 50க்கும் அதிகமான செப்புப் பட்டயங்களில் 40க்கும் மேற்பட்டவை சிவாலயம் தொடர்பானவை.

சரி..இந்த வார செப்புத் திருமேனிகளைக் காணலாம். இவை எல்லாமே ஒரு காலத்தில் ஆலயத்தில் வழிபாடு செய்யப்பட்டவை என்பதை மறந்துவிடக் கூடாது. இப்போதுமே பல்வேறு கோயில்களில், அந்த ஊர் மக்கள் வெளியேறிவிட்டதால், செப்பு/பஞ்சலோகத் திருமேனிகளைப் பராமரிக்க முடியாமல், ஏதேனும் பெரிய கோயிலில் பத்திரமாக வைத்திருக்கிறார்கள். நான் சில கோயில்களில் இத்தகைய திருமேனிகள் பலவற்றை ஓரிட த்தில் பாதுகாப்பாக வைத்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். உதாரணங்களை நான் எடுத்த படங்களுடன் பகிர தயக்கமாக இருக்கிறது. ஏற்கனவே ஒரு பெரிய கோயிலில் 106 விஷ்ணு கோயில்களின் (திவ்யதேசங்கள்) தெய்வங்களின் சிறிய சிற்பங்களை வைத்திருந்ததைப் பார்த்திருக்கிறேன். சமீப வருடங்களில் அவை எங்கிருக்கின்றன என்று தெரியவில்லை. 

 

 

 

 

A statue of a couple of people

AI-generated content may be incorrect.

 

 

மஹாவிஷ்ணு மற்றும் மஹாலக்ஷ்மி

A statue of two people

AI-generated content may be incorrect.

நரசிம்ஹர், லக்ஷ்மியுடன்

 

 

வள்ளி, முருகன், தெய்வானை…. 11ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை

சுகாசன மூர்த்தி


சிவன் சுஹாசனத்தில் பிட்சை உகந்தபெருமான்

பிக்ஷை உகந்த பெருமான் சிவன்

கல்யாணசுந்தரர் சிலை

கல்யாணசுந்தரர்மூன்று நாலு சிலைகளை ஒரே வார்ப்பில் உருவாக்கியிருக்கிறார்கள். கற்பனை செய்து பார்க்க முடியாத திறமை அது. அவர்களின் நோக்கம் (உருவாக்கியவர்கள், உருவாக்கச் செய்தவர்கள்) மக்களிடையே நம் கலாச்சாரத்தையும் பக்தியையும் வளர்ப்பது. அதனால்தான் பாரத தேசச் சமயங்கள் தொய்வில்லாமல் வளர்ந்திருக்கின்றன.

சுதர்சனம், நந்தி மற்றும் கோயில் மணி

A model of a building

AI-generated content may be incorrect.

தஞ்சை அரண்மனையில் இருக்கும் தஞ்சை பெரியகோயிலின் மாதிரி உருவம்

A group of statues in a glass case

AI-generated content may be incorrect.

 

சுந்தரமூர்த்தி நாயனார், பரவை நாச்சியார்அடுத்த படம் ரிஷபவாஹன தேவர், பார்வதி. அனைத்தும் 11ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. 

கல்யாணசுந்தரர்அடுத்த படம் கோதண்டராமர், சீதை

 

 

 

A group of statues on a table

AI-generated content may be incorrect.

 

A statue of a person sitting on a pedestal

AI-generated content may be incorrect.

மஹாலக்ஷ்மி

A group of statues on a shelf

AI-generated content may be incorrect.

ஸ்ரீதேவி பூதேவியுடன் மஹாவிஷ்ணு. 

 

நம்மால் தற்போது காணக் கிடைப்பவையே இத்தனை திருமேனிகள் என்னும்போது நம்மிடம் (தமிழகக் கோயில்களில்) எத்தனை சிலைகள் இருந்திருக்கவேண்டும்அந்நியர் படையெடுப்பில் எவ்வளவோ கொள்ளையடிக்கப்பட்டு உருக்கப்பட்டது. முக்கியமான கோயில்களின் உற்சவ விக்கிரகங்கள் மண்ணுக்கடியில், அருகில் இருந்த கிணறுகளில் என்று பத்திரப்படுத்தப்பட்டன. இதனைப் பற்றிய தகவல்கள், வரலாற்றைப் படிக்கும்போது நமக்குக் கோபமும் வெறுமையும் எழும்.

அடுத்த வாரம் தொடரலாம்.

(தொடரும்) 

30 கருத்துகள்:

  1. செப்புத் திருமேனிகள் பார்க்கும் போது அவை உருவாக்கியவர்கள், அதனை பூஜித்தவர்கள் என பலரையும் நினைவு கூர வைக்கும்...... பல செப்புத் திருமேனிகள் அழிக்கப்பட்டன என படிக்கும்போதே நெஞ்சில் ஒரு வித கலக்கமும் வலியும்...... பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷங்கள்...... மீதம் இருக்கும் சிலைகள், செப்புத் திருமேனிகள் பாதுகாக்கப்பட வேண்டிய அவசியம் அனைவரும் உணர்ந்தால் நல்லது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க தில்லி வெங்கட் நாகராஜ். இன்று லக்ஷ்மிபுரம் (குப்பம் அருகில்) ரத உத்ஸவத்திற்காக பிபந்தம் வீதிப் புறப்பாடுகளில் சேவிக்க வந்துள்ளதால் பதிலெழுத இயலவில்லை. மதியம் எழுதப் பார்க்கிறேன். இன்று புறப்பாடுகள் முடியவே இரவு பத்து மணி ஆகிவிடும்

      நீக்கு
  2. ஆனால் பல சிலைகளை எப்படி அனுமானிக்கிறார்கள் என்பது எனக்குச் சரியாகப் புரியவில்லை. //

    நெல்லை, எனக்கும் சில சிற்பங்களைப் பார்க்கறப்ப தோன்றியிருக்கிறது. நீங்க சொல்லியிருப்பது போல் துர்கை, விஷ்ணு லக்ஷ்மி பிரம்மா, சிவன் இதெல்லாம் எளிதாக அடையாளப்படுத்தும் வகையில் சில உண்டு இல்லையா அவை இடம் பெற்றிருக்கும் என்பதால்

    ஆனால் முனிவர்கள் ரிஷிகள் போன்றவற்றில் ஒரு சில அடையாளங்களை வைத்துக் சொல்லிவிடலாம். ராமானுஜர் தேசிகர் இரண்டையும் வித்தியாசப்படுத்தி அடையாளங்களோடு இருப்பது போல.

    இல்லைனா எனக்கு ரொம்பவே புரிவதில்லை

    கீதா

    பதிலளிநீக்கு
  3. தூரம் பற்றி இன்னொரு வார்த்தை - ஃபர்லாங்.

    எங்கள் வீட்டிலும் பாட்டி தாத்தா அப்பா எல்லாம் சொல்லிய வார்த்தைகள். அதுவும் பாட்டி சேர், படி, மாகாணி, குன்னுமணி அளவு எடுத்துக்கோ என்பார் அப்படினா குன்னுமணி என்ன சைஸ் என்று சின்ன வயதில் கேட்டப்ப பாட்டி அதைக் காட்டிச் சொல்லிக் கொடுத்தார் அது போல விரக்கடை அளவு. கைவிரல்கள் நான்கும் சேர்த்து வைத்து எடுப்பது.

    கீதா

    பதிலளிநீக்கு
  4. அடுத்தாப்ல நீங்களே சொல்லிட்டீங்க ஃபர்லாங்! நான் வாசிக்க வாசிக்கக் கருத்து போடுவதால் சிவப்பு எழுத்துகளுக்குப் பின்னர்தான் வந்தேன்.

    கடைகள் சந்தைகள் பற்றியதும் ஓரளவு தெரியும் ஆனால் நாணயம் உருவாக்கிய இடம் கம்பட்டம் இது இப்போதுதான் தெரிகிறது.

    //ஆனால் அவர்களுடைய சொந்த சொத்து எங்கிருந்து வரும்?//

    நெல்லை ஹைஃபைவ்! இதை நானும் போன சில பதிவுகளிலேயே கேட்க நினைத்து அப்படித்தான் இப்பவும் பெரிய புள்ளிகள் சொத்து சேர்க்கின்றனரோ என்று சொல்ல நினைத்தேன்!! அந்தக்காலம் முதல்னு!!!

    மற்றொன்றும் தோன்றியது ஒரு வேளை அவங்களுக்குச் சம்பளமாக இத்தனை காசுகள் என்று இருந்திருக்குமோ? அரண்மனை எல்லாம் ராஜாக்கள் தானே அரசாங்க பணத்திலிருந்து கட்டுவாங்க இல்லையா?

    வெற்றி பெரும் போதும் அவர்களுக்கும் பங்கு இருக்குமாக இருக்கும். சில அரசர்கள் நிறைய தான தர்மம் பண்ணினாங்கன்னு வருமே அது அரசுப் பணமா இல்லை அவங்க சொந்தப்பணமா என்ற கேள்வியும் எனக்குள் வந்ததுண்டு.!

    கீதா

    பதிலளிநீக்கு
  5. அது தவிர, இளவரசர்கள், இளவரசிகள் அவரவர் வகிக்கும் பதவி, பொறுப்பு ஆகியவைகளைப் பொறுத்து மாதாமாதம் சம்பளம் கொடுப்பார்கள் என்று நினைக்கிறேன். //

    சேம் இதேதான் எனக்கும் தோன்றியது. இதற்கும் ஏதேனும் ஆதாரங்கள் இருக்கலாம். நான் நெட்டில் பார்த்தபடி, கிட்டத்தட்ட நீங்க கல்ஃப் மன்னர்களுக்குச் சொன்னதுதான் முந்தையகாலத்திலும் நடந்திருப்பதாகத் தெரிகிறது. அவர்களுக்குச் சம்பளம் என்று இல்லையாம். அவர்கள் ஆளும் நிலத்திலிருந்து வரும் வரி, மதிப்பு இவற்றின் அடிப்படையில் வரும் பணத்தில்தான் வாழ்ந்திருக்கிறார்கள்.

    இப்ப இது இப்போதைய காலத்துக்கும் அப்ளை பண்ணிக்கறாங்க!!!!!???????????? நம்ம ஊரைச் சொல்கிறேன் ஹிஹிஹி....பண்டைய நீதி நெறி சட்டம் எல்லாம் இவால்வ் ஆகி இப்போதைய சட்டங்கள் மாற்றப்பட்டு வந்தாலும்.....கூட பண்டைய முறையைத்தான் பின் பற்றுகிறார்கள் போலும்...இதொன்னும் புதிசில்லை நம்ம மூதாதைய அரசர்கள் செஞ்சதுதானே ....இதுல என்ன நீங்க ED ரெய்டு அது இதுன்னுட்டு......நெல்லை இதற்குள் இருக்கும் உட்பொருளைத் தனியாகச் சொல்லவில்லை!! பாத்துக்கோங்க...!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  6. மராட்டிய மன்னர்கள் பொதுவாக எல்லாச் சமயங்களுக்கும் இடம் கொடுத்திருந்தாலும், சைவ சமயத்தையே பெரும்பாலும் ஒழுகினார்கள்.//

    மராத்திய மன்னர்கள் பற்றி ஏதோ படம் இப்ப வந்துருக்காமே சலசலப்பை ஏற்படுத்திக் கொண்டு. வரலாற்றில் இல்லாததையும் எடுத்திருப்பதாகவும் சொல்றாங்க.

    கீதா

    பதிலளிநீக்கு
  7. நெல்லை அப்பர், சுந்தரர் எல்லாருக்கும் ஒரு அடையாளம் இருக்கும் என்றே தோன்றுகிறது. அப்பர் அடையாளம் தெரிகிறது. ஆனா அப்பர் னு எப்படிக் கண்டுபிடிச்சாங்கன்ற உங்கள் கேள்வியும் எனக்கும் தோன்றுவதுண்டு. ஒருவேளை பல குறிப்புகளில் இருப்பவற்றின் படிதான்..இருக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  8. சண்டிகேஸ்வரர் என்பது தெரியவில்லை. சாதாரணமாக சண்டிகேஸ்வரர் இப்படியா இருப்பார் கோவில்களில்? வித்தியாசமாக இருக்கும் இல்லையா?

    கீதா

    பதிலளிநீக்கு
  9. பாருங்க இரண்டாவது படத்தில் இருக்கும் அப்பர் வித்தியாசமாக.....ஆனால் நான் தலை அமைப்பை வைத்து யூகித்தேன்....சில எழுத்துகள் புரியவில்லை. படத்தைப் பெரிதுபடுத்தியு பார்க்க முடியலையே நெல்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
  10. அதன் கீழ் வரும் சிலைகள் சில எளிதாக இருக்கு சில யூகிக்க முடியவில்லை

    முருகன் எல்லாம் அப்ப வித்தியாசமாக இருக்காங்கள்!!!! 11 ஆம் நூற்றாண்டில் இப்ப நாம பார்க்கும் முருகன் தான் மனதில் பதிந்து.....வேல் இல்லாமல் முருகனா? பாருங்க முருகனையும் எவ்வளவு இவால்வ் ஆக்கிட்டாங்க நம்மவங்க!!!!!!!!!!!!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  11. பிக்ஷை உகந்த பெருமான் – சிவன்//

    ஆ!!!! சிவனின் உடலில் காயங்கள்??!!!!! இது பராமரிப்பில் வந்த தடமா இல்லை ஒரிஜினலா ஒரிஜினல் என்றால் இதற்கும் காரணம் ஏதேனும் இருக்குமோ ?

    கீதா

    பதிலளிநீக்கு
  12. கல்யாண சுந்தரர் எல்லாம் சூப்பர். கல்யாணத்துக்கு மைத்துனர் வந்திருக்கார் போல!

    தஞ்சை பெரிய கோவிலின் மாதிரி அழகு!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மைத்துனர் சங்கில்லாமல் வந்திருக்கிறாரே!

      கீதா

      நீக்கு
  13. கவலைகள் நியாயமானது. தேற்றுவார் இல்லை!

    பதிலளிநீக்கு
  14. ஒவ்வொரு சிலையின் திருமேனிகளும் எப்படி அழகியலோடு வடிவமைத்திருக்காங்க என்பது மிக மிக ஆச்சரியம். அசாத்திய திறமையை வியக்காமல் இருக்க முடியவில்லை.

    எல்லாமே ரசித்துப் பார்த்தேன், நெல்லை. இனி அப்பீட்டு...

    கீதா

    பதிலளிநீக்கு
  15. ​கேமரா அனுமதி உள்ள இடங்களில் பிளாஷ் உபயோகித்து படம் எடுத்திருக்கலாம்.
    எனக்கு ஒரு சந்தேகம். தமிழ் நாட்டில் மட்டும் தான் நிறைய கடவுளர் கற்சிலைகள், மற்றும் உலோக திருமேனிகள் கிடைத்திருக்கின்றன. மற்ற இடங்களில் புத்த சமண கற்சிலைகள் அல்லாது வேறு குறிப்பிடத்தக்க அளவு கற்சிலைகளோ, உலோக சிலைகளோ கிடைக்கவில்லை. ஏன்??
    இந்தியாவில் தோன்றிய தொன்மையான மதம் பௌத்தமும் சமணமும் என்பது எனது புரிதல். இந்து மதம் என்பது, மதம் அல்லாது பல பழக்க வழக்கங்களை ஒன்று சேர்த்து மதம் என்பதற்காக சில கடவுள்களை தத்தெடுத்து உண்டாக்கிய ஒன்று என்று நான் கருதுகிறேன்.
    ​என் கருத்து என்னோடு தீரட்டும். தர்க்கத்துக்கு வரவில்லை.


    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இந்து மதம் என்பது, மதம் அல்லாது பல பழக்க வழக்கங்களை ஒன்று சேர்த்து மதம் என்பதற்காக சில கடவுள்களை தத்தெடுத்து உண்டாக்கிய ஒன்று என்று நான் கருதுகிறேன். //

      அட! 'அர்த்தமுள்ள இந்து மதம்' நூல் எழுதிய ------
      கண்ணதாசனின் பாடல் வரிகள் வேறே சட்டென்று நினைவுக்கு வருகிறதே!

      'கொடி அசைந்ததும் காற்று வந்ததா?
      காற்று வந்ததும் கொடி அசைந்ததா?'....

      நீக்கு
    2. வாங்க ஜெயகுமார் சார். புத்தம் சமணத்திற்கு முன்பே சைவ வைணவ சமயங்கள் இந்தியாவில் இருந்தன. புராணங்கள் இதிகாசங்கள் அதற்கும் முன்பாக வேதங்கள் மிக மிகத் தொன்மையானவை.

      பௌத்தம் சமணம் சைவ வைணவ வழ்கங்கள் வழிபாடுகளைப் பிற்காலத்தில் தன்னுள் வாங்கிக்கொண்டது. இலக்குமி மற்ற தெய்வ வழிபாடுகள் இவற்றில் உண்டு.

      அரசர்கள் பௌத்த மதத்தைச் சார்ந்திருந்த காலங்களில் சைவக் கோயில்கள் ஆக்கிரமிக்கப்பட்டதற்கு வரலாற்று ஆதாரங்கள் உண்டு

      நீக்கு
    3. இந்து மதம் என்பது பாரதத்தில் இருந்த வேதத்தின் கருத்துகளைச் சார்ந்த அறுமதங்களையும் ஆங்கிலேயன் சுலபத்திற்காக ஒரு தலைப்பில் கொண்டுவந்தது. வேதத்தை அடிப்படையாகக் கொள்ளாததால் பௌத்தம் சமணம் சீக்கியம் தனி

      நீக்கு
    4. எந்தக் கடவுளையும் யாரும் தத்து எடுக்கவில்லை. இந்து மதம் என்ற ஒன்றே இல்லை. ஆங்கிலேயர் காலத்திற்குப்பின்னர் வந்தது தான் இந்தப் பெயர். சநாதன தர்மம் என்றே சொல்லுவார்கள். இது ஒரு வாழ்க்கை முறை தானே அன்றிக் கடவுளர் வழிபாடு என்பது பிற்காலங்களில் தான் வந்திருக்க முடியும். ஆதி காலத்தில் இந்திரன் வருணன், அக்னி வழிபாடே இருந்திருக்கிறது என்பது என் தனிப்பட்ட கருத்து. ரிஷிகளும் முனிவர்களும் மோக்ஷம் அடையக் கடுந்தவம் இருந்திருக்கிறார்கள். ராமாயண காலத்தில் கோயில்கள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. உதாரணம் உத்தரகோசமங்கை சிவன் கோயில். ராமேஸ்வரம் கோயிலும் ராமாயண காலத்தில் தோன்றியதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் பெரும்பாலும் கௌரி அம்மன் வழிபாடு, பாவை நோன்பு ஆகியவை முற்காலத்தைச் சேர்ந்ததாகத் தான் சொல்லுகிறார்கள். புத்தமதமெல்லாம் அதன் பின்னரே காலத்தால் பிற்பட்டது. பௌத்தம், சமணமெல்லாம் அதன் பின்னரே தோன்றியவை. சுமார் 3000 ஆண்டுக்குள் இருக்கலாம். சீக்கிய மதம் அதற்கும் வெகு காலங்கள் கழித்துச் சுமார் 700 ஆண்டுகளுக்குள் தோன்றியது. இது உண்மையில் இந்துக்கலை அந்நிய மதத்தவரிடமிருந்து பாதுகாத்துக் காக்க வேண்டியே ஏற்படுத்தப்பட்ட ஒரு மதம். பின்னாட்களில் அதன் குறிக்கோளே மாறி விட்டது. ஆனால் இன்றும் பஞ்சாபில் ஒரே குடும்பத்தில் பிறந்த உடன் பிறந்த சகோதரர்களில் ஒருத்தர் இந்துவாகவும், இன்னொருத்தர் சீக்கியராகவும் இருப்பார். இன்றும் காணலாம்.

      நீக்கு
  16. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  17. மராட்டியர் வரலாறு மற்றும் தஞ்சை அரண்மனை வளாகம் – உலோகச் சிலைக் கூடம் பகிர்வு அருமை.
    அனைத்து சிலைகளும் மிக அழகு.
    சின்ன கோயில்களிலுள்ள உலோகச் சிலைகளை பெரிய கோயில்களில் பத்திரப் படுத்தி அது எந்த ஊர் கோயில் சிலைகள் என்று எழுதி வைத்து இருப்பார்கள் நான் பார்த்து இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  18. //சில முக்கியமான சிலைகளை நாமே சொல்லிவிடமுடியும், இது விஷ்ணு, இது மஹாலக்ஷ்மி, இது பிறையேறு செஞ்சடையன், நடராஜர் என்று. ஆனால் பல சிலைகளை எப்படி அனுமானிக்கிறார்கள் என்பது எனக்குச் சரியாகப் புரியவில்லை. //

    முக்கியமான சிலைகள் என்பது எந்த அர்த்தத்தில்?.. சொல்லப் போனால் சிலைகள் என்ற வார்த்தையே உறுத்துகிறது. அவைகள் சிலைகள் மட்டுமே என்ற உணர்வில் தேங்கிப் போய் விட்டோமா என்ன?.. இவை சிலைகள் மட்டுமே இல்லையெனில் சிலை என்ற உணர்வை கடந்து போவது எப்படி? ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜீவி சார். இவையெல்லாமே கோயில் வழிபாட்டில் இருந்த தெய்வ உருவங்கள். உலோகச் சிலைகள் என்ற அர்த்தம். ஆனால் அவை தெய்வச் சிலைகள்

      நீக்கு
    2. எனக்குத் தெரிந்த சில சிலைகள் பற்றிய குறிப்பு. அப்பர் எனில் தோளில் உழவாரப் படை. ஞானசம்பந்தப் பெருமான் எனில் கைகளில் தாளங்கள். சுந்தரமூர்த்தி நாயனார் எனில் இரு தேவியருடன் சர்வ அலங்காரங்களுடனும் இருப்பார். மணிவாசகர் எனில் அமாத்திய பிராமணர் என்பதால் பூணூல் தரித்து திருநீறு பூசிய மேனியுடன் தலை முதல் உடல் முழுவதும் ருத்திராக்ஷ மணிகளால் அலங்கரித்திருப்பர்.

      நீக்கு
    3. சைவ சமய குரவர்கள் நால்வரில் அப்பரைத் தவிர மற்ற மூவர் பிரமணர்கள்தானே? சுந்தரர் பிராமணராகத்தான் பிறந்தார், மிகவும் அழகாக இருந்ததால் அந்த ஊர் அரசரால் வளர்க்கப்பட்டார்.
      அதைப் போல ஆழ்வார்களில் திருமங்கை ஆழ்வாரின் கையில் வேல் இருக்கும், திருஞான சம்பந்தரை வாதில் வென்று அவரிடமிருந்து வேலை பெற்றுக் கொண்டதாக வரலாறு. பெரியாழ்வாருக்கு முன் குடுமி இருக்கும்.

      நீக்கு
  19. உலோகச் சிலைக்கூடம் சிலைகள் , விளக்கம் நன்றாக உள்ளன. பிச்சை உகந்த பெருமாள் வித்தியாசமான சிலை.

    பதிலளிநீக்கு
  20. காலம்பரவே படிச்சுட்டேன். அதவது எனக்கு எட்டு மணியில் . அங்கே பத்தரை இருக்கும். கருத்துச் சொல்லலை.

    பதிலளிநீக்கு
  21. நான் நாளை மதியத்துக்குமேல் பதில் எழுதுவேன். அதுவரை கோயில் வேலை

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!