8.3.26

நாங்கள் தரிசனம் செய்த கோயில்கள் :: புள்ளமங்கை-ஆடுதுறையார் கோயில்: நெல்லைத்தமிழன்

 

திருஞானசம்பந்தர்  அல்லியங்கோதை அம்பாள் சமேத ஸ்ரீ ஆலந்துறை நாதரை, ‘பாலுந்துறுதிரளாயினபதிகத்தால் பாடியிருப்பதைப் பார்த்தோம். மகேந்திரபல்லவன் காலத்தில்தான் அப்பர் (திருநாவுக்கரசர்) சுவாமிகள் வாழ்ந்தார். அவர் காலத்தில்தான் திருஞானசம்பந்தர் சிறு பிள்ளை. 9ம் நூற்றாண்டில் முதல் பராந்தக சோழன் காலத்தில் புள்ளமங்கை கோயில் கற்றளி ஆனது. அதற்கு முன்னால் இருந்த கோயிலுக்கு திருஞானசம்பந்தர் வந்து தரிசித்து இந்தப் பதிகம் இயற்றியிருக்கவேண்டும்.

A black plaque with writing on it

AI-generated content may be incorrect.

 

A grass and a stone wall

AI-generated content may be incorrect.

 

A stone building with statues

AI-generated content may be incorrect.

A stone structure with a cross on top

AI-generated content may be incorrect.

 

A building with a tower

AI-generated content may be incorrect.

 

A person standing in front of a building

AI-generated content may be incorrect.

 

A person standing in front of a stone building

AI-generated content may be incorrect.

விமானத்தின் கீழ், கருவறையின் வெளிப்புறச் சுவற்றில் லிங்கோத்பவர். 

 

லிங்கோத்பவருக்கு இரு புறமும் விஷ்ணு மற்றும் பிரமன்(?). இன்று செதுக்கியது போன்ற அழகு. இந்த மாதிரி சிற்பத்தின் முகங்களை மாதிரியாக வைத்துத்தான் கல்கியின் நாவல்களுக்கு மணியம் அவர்கள் ஓவியம் வரைந்திருப்பார்.

A stone carving of a person and person

AI-generated content may be incorrect.

அரை அடிக்கும் குறைவான இடத்தில் அமைக்கப்பட்டுள்ள சிற்பத்தைப் பெரிதுபடுத்திக் காண்பித்துள்ளேன். அழகு குறையவில்லை.

A stone sculpture of a group of people

AI-generated content may be incorrect.

கோவிலின் அடிப்பகுதியைத் தாங்குகின்ற பூதகணங்கள். 

A dog sitting in a doorway of a building

AI-generated content may be incorrect.

 

A stone building with a green lawn

AI-generated content may be incorrect.

 

சௌந்திர நாயகி அம்மன். 

A statue of a bull wrapped in a white cloth

AI-generated content may be incorrect.

 

A group of statues in a row

AI-generated content may be incorrect.

நால்வர் அணி. சைவ சமயக் குரவர்கள்

 

துவாரபாலகர்கள். 

A chess board in a room

AI-generated content may be incorrect.

துவாரபாலகர்களுடன் கூடிய முன் மண்டபம். எல்லா ஆலயங்களிலும் இந்த மாதிரி ஒரு இடத்தை 2 ரூபாய் விளக்கு வைப்பவர்களுக்காக ஒதுக்கிவிடுகிறார்கள். 2 ரூபாய் விளக்கு என்று அலட்சியமாகச் சொல்லவில்லை, ஆனால் ஆலயத்துக்கு விளக்குக்காக எண்ணெய், திரி முதலியன தந்தால் உபயோகம். சும்மா இந்த மாதிரி விளக்கை ஏற்றிவைப்பதில் என்ன பிரயோசனம் இருக்க முடியும்? இதனால் மற்றவர்களுக்கும் ஆலயத்திற்கும் இடைஞ்சல்தான். அதனால்தான் வேறு வழியில்லாமல் எல்லா ஆலயங்களிலும் ஒதுக்குப்புறமான இட த்தில் ஒரு டேபிளைப் போட்டு, இங்கே விளக்கேற்றுங்கள் என்று சொல்லிடறாங்க. பக்தர்களும் புண்ணியத்தை பக்கெட்டில் எடுத்துக்கொண்டு போகும் சந்தோஷத்துடன் 2 ரூபாய் விளக்கை ஏற்றுகிறார்கள்இதனால் யார் பயன் பெறுவார்கள்?

 

உன் தரிசனமன்றி வேறு என்ன வேண்டும்?

 

 

A stone statue of a person sitting on a ledge

AI-generated content may be incorrect.

அர்த்த மண்டபத்தின் விதானத்தில் வெளியே பார்த்தது போலே உள்ள சிற்பங்கள்.

A long hallway with pillars and a mural on the ceiling

AI-generated content may be incorrect.

கருவறை, அதற்கு முன் இருக்கும் மண்டபத்தின் தற்போதைய தோற்றம். விதானத்தில் இருக்கும் ஓவியம் பிற்காலத்தையது.

கோயிலின் மண்டபத்துக்கு வெளியே ஒரு சிறிய அறை போன்று உள்ளதுஇதைத்தான் அந்தக்காலத்தில் மடப்பள்ளியாக அமைந்திருந்தனர். அது மிகவும் பழுதுபட்டிருந்தது. வௌவால்களின் குடில் போல எனக்குத் தோற்றம் தந்தது. அதிலும் சில சிற்பங்கள் கிடத்திவைக்கப்பட்டிருந்தன. அவைகளின் படங்கள் கீழே.

A room with a few objects

AI-generated content may be incorrect.

 

A group of stone statues

AI-generated content may be incorrect.

தேவியரின் சிற்பங்கள் மிக அழகு. ஆனால் அவை எங்கு வைக்கப்பட்டிருந்தனவோ.

அந்தக் கோயிலில் சிறிய போஸ்டரில் எழுதியிருந்ததுஇரவு படுக்கும் முன் கீழுள்ள பாசுரத்தைச் சொல்லிவிட்டுப் படுக்கவேண்டும் என்று.

கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி

நில்லாப் பிழையும் நினையாப் பிழையும் நின்னஞ்சழுத்தைக்

சொல்லாப் பிழையும் துதியாப் பிழையும் தொழாப்பிழையும்

எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சி ஏகம்பனே

இது பட்டினத்தார் இயற்றிய திரு ஏகம்பமாலையில் வரும் பாசுரம். ஈசனுடைய நமசிவாயஎன்ற திருநாமத்தைக் கல்லாத, கருதாத, கசிந்துருகி உருகாத, நினையாத, சொல்லாத, துதியாத, தொழாத மற்றும் எல்லாப் பிழையையும் பொருத்தருள்வாய் கச்சி ஏகாம்பரநாதனே என்பது பாசுரத்தின் பொருள்.

ஆயிரத்து நூறு ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட (கற்றளியாக) புள்ளமங்கைக் கோயிலையும் அதன் சிற்பங்களையும் முழுமையாகப் பார்த்துவிட்டோம் என்ற மகிழ்வுடன் அங்கிருந்து கிளம்பினோம். மீண்டும் இங்கு வருவோமா என்ற சந்தேகம் மனதில் எழுந்ததுஇந்தக் கோயிலின் பெருமையையை பெரிய பதாகையில் அனைவரும் சுலபமாகப் புரிந்துகொள்ளுமாறு எழுதிவைத்தால், அல்லது சிறு கையேடு விற்பனை செய்தால் பார்ப்பவர்களும் புரிந்துகொண்டு சிற்பங்களின் சிறப்பை அனுபவிக்குமாறு இருக்குமே என்று தோன்றியது.

ஆனாலும் இது ஒரு பாடல் பெற்ற திருத்தலம் என்பதையும் நம் நினைவில் வைக்கவேண்டும்

இங்கு இறைவன் பிரம்மபுரீஸ்வரர். அவரைத் தொழுதுவிட்டு அந்த இடத்தைவிட்டுச் சென்றோம்சோழர் காலத்தைய கோயில்கள் அனைத்தையும் தொகுத்து வழங்குவது என்பது இயலாத காரியம். ஆனால் சோழர் வரலாற்றிலேயே மிக முக்கிய மூன்று கோயில்களில்இராஜராஜ சோழனின் தஞ்சை பெருவுடையார் கோயிலைப் பார்த்தோம். அதற்கு முன்பு சாளுக்கிய சோழ வம்ச அரசனின் தாராசுரம் ஐராவதீஸ்வரர்  தெய்வநாயகி அம்மை கோயில்களைக் கண்டுகளித்தோம். இடையில் சோழ சாம்ராஜ்யத்தை உச்சத்துக்குக் கொண்டு சென்ற கங்கைகொண்ட சோழன் இராஜேந்திரனின் கங்கைகொண்ட சோழீச்வரத்தை மாத்திரம் காணாமல் போகமுடியுமா? அதை பிறகு பார்ப்போம். 

- - - - - - - - - - - - - - - -

40 கருத்துகள்:

  1. லிங்கோத்பவருக்கு இரு புறமும் இருக்கும் ப்ரம்மா விஷ்ணு சிற்பங்கள் கொள்ளை அழகு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சூர்யா சார்... ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் பொலிவோடு இருக்கின்றன. லிங்கோத்பவரைப் பெரிதுபடுத்திப் பார்த்தால் முடியைத் தேடும் பிரம்மா, அடியைத் தேடும் வராகமூர்த்தியைக் காணலாம்.

      நீக்கு
  2. /நால்வர் அணி. சைவ சமயக் குரவர்கள்/
    உங்களுக்கு ரொம்பவே குறும்புதான் நெல்லை.....சைவ சமயக் குரவர்களை "நால்வர் அணி" என்றா அழைக்க வேண்டும்? "நால்வர் அணி" என்றால் எனக்கு ஞாபகம் வருவதெல்லாம் நாவலர், பண்ருட்டியார், திருநாவுக்கரசு, காளிமுத்து சேர்ந்து ஜெயலலிதாவுக்கு எதிராக அணி திரண்டதுதான் 😃

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா.. அவர்கள் அணி சேர்ந்தது ஈசனோடு ஐக்கியமாக. இவர்கள் அணி சேர்ந்தது அதிகாரம் பணம் சுருட்ட.

      நீக்கு
  3. /பக்தர்களும் புண்ணியத்தை பக்கெட்டில் எடுத்துக்கொண்டு போகும் சந்தோஷத்துடன் 2 ரூபாய் விளக்கை ஏற்றுகிறார்கள். இதனால் யார் பயன் பெறுவார்கள்?/
    என் சிறு வயதில் ஏதோ ஒரு சில கோவில்களில் நவக்ரக சன்னிதிகளில் குறிப்பிட்ட நாள்களில் மட்டும் இம்மாதிரி விளக்கேற்றுவார்கள். இப்போது எங்கு பார்த்தாலும் எல்லா நாட்களிலும் இப்படி விளக்கேற்றுகிறார்கள். நீங்கள் கூறுவது போல் அந்த நாட்களில் என் பாட்டி எண்ணை வாங்கி விளக்கேற்றுவதற்கு குருக்களுக்குக் கொடுத்து விடுவார். இந்த நவீன கால விளக்கேற்றும் பழக்கம் உருவாவதற்கு முதல் காரணம் டீவி சானலில் ஜோஸ்யம் சொல்லும் நபர்கள் (காழியூர் நாரயணன், ஷெல்லி போன்றோர்)...சிம்ம/கடக ராசி அன்பர்கள் பரிகாரம் செய்தால் நல்லது என்று ஒரு ஸ்டேட்மெண்ட்...எங்கே என்றால், அருகிலுள்ள கோவிலில் என்பார்கள். கோவில் மேனேஜ்மெண்ட்டுக்கும் இது ஒரு பிஸினஸ் ஐடியாவாகப் போய் விட்டது...உடனே விளக்கு விற்பதற்கு ஏலம் விட்டு விடுவார்கள். இதில் கொடுமை என்னவென்றால், அந்த ஏலக்காரர் அதே விளக்குகளையே cost control என்று ரீசைக்கிள் செய்து விடுவார். சில சமயங்களில் எரிந்து கொண்டிருக்கும் விளக்கையே அணைத்துவிட்டு அடுத்த கஸ்டமருக்கு தயார் செய்து விடுவார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சூர்யா சார்... நாம மூளை இருந்தும் உபயோகப்படுத்தாமல் மனதை ஏமாற்றிக்கொள்கிறோம். ஒரு ரூபாய் ரெண்டு ரூபாய்க்கு நெய் விளக்கா? இதை ஏற்றுவதால் என்ன பயன்? என்றெல்லாம் யோசிப்பதில்லை.

      ஜோசியர்கள் காட்டில் மழை. நீங்க எந்த ஜோசியரையும் உடனே பார்க்க முடியாது. ஆயிரம் இரண்டாயிரம் என ஃபீஸ். அதுவும் அரசியல் தொடர்புன்னா, பிரம்மஶ்ரீ ஆயிடுவாங்க, சாதாரண மக்களை அலட்சியம் செய்வாங்க. இதை எழுதினால் பதிவு போலாயிடும். இதிலும் அறமுள்ளவர்கள் இருக்கிறார்கள்.

      கோயில் வாசல்களில் விற்பவை எவைகளையும் நான் வாங்குவதில்லை.

      நீக்கு
  4. அல்லியங்கோதை அம்பாள்//

    பெயர் என்ன அழகு இல்ல? கோதை எனும் பெயர் பொதுவாக ஆண்டாளைக் குறிக்கும் பெயர் இங்கும் இருக்கிறதே. கோதை என்றால் கூந்தல், பூமாலை என்ற பொருளும் சொல்லப்படும் அதனால்தான் சூடிக் கொடுத்த நாச்சியார் - கோதை....

    அல்லியங்ககோதை என்றால் அல்லி/ஆம்பல் மலர்களால் கோர்க்கப்பட்ட மாலை அணிந்தவள், அலல்து அதைப் போன்ற கூந்தலுடையவள் அம்பிகை என்ற பொருளில் வரும் என்று நினைக்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா ரங்கன். இன்று காலையில்தான் நேற்றைய பதிவில் உங்கள் திறமைகளைப் பற்றி எழுதியிருந்தேன்.

      நீக்கு
  5. லிங்கோத்பவர் இருபுறமும் உள்ள சிற்பங்கள் செம அழகு. ஒன்று விஷ்ணு என்று தெரிகிறது. மற்றொன்று பிரமன் மாதிரிதான் தெரிகிறது உற்றுப் பார்த்தால் சைடில் இரு முகங்கள்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாலாவது முகத்துக்கு கர்ப்பக்கிரஹத்துக்குள் சென்றுதான் பார்க்கணும். மிக அழகு இல்லையா?

      நீக்கு
  6. அதற்கு அடுத்த சிற்பம் ஒரு வேளை பெரிது படுத்தியதால் பிக்ஸல் கூடி சரியா தெரியலையோ? சிற்பம் அழகாகதான் இருக்கு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆறு சென்டிமீட்டரில் உள்ள சிற்பம். தூரத்திலிருந்து மிக மிக அழகு. பெரிதாகப் போட்டால் அதன் சிறப்பு மங்கிவிடுகிறது.

      நீக்கு
  7. பல சிவன் கோவில்களிலும் சுவற்றின் அடியில் இப்படிப் பூதகணங்களைக் காண முடிகிறது மேலிலும் கீழிலும் ஆங்காங்கே.

    கீதா

    பதிலளிநீக்கு
  8. சௌந்திர நாயகி பெயர் ஆஹா

    கடவுளே இப்படி நந்தியெம்பெருமானைச் சுற்றி டைல்ஸ் பதித்து அந்த aesthetic sense யே போக்கிவிடுகிறார்கள். ஏம்பா கல்லா கிடைக்கலை பதிக்க?

    கீதா

    பதிலளிநீக்கு
  9. நெல்லை, ஆலயங்களில் விளக்கு ஏற்றுவதைப் பற்றிய உங்கள் கருத்தை அப்படியே டிட்டோ செய்கிறேன்.

    இங்கு அருகில் இருக்கும் கோவிலில் கோவிலுக்குள் ஏற்றக் கூடாது என்று ஆங்காங்கே போர்ட் வைத்துஇருக்கிறார்கள். கோவில் வெளியில் ஒரு உலோகத்தால் ஆன மேசை போட்டு வைச்சிருக்காங்க....உள்ளே ஏற்றக் கூடாதென்று. அக ஒளியை ஏற்றுவதற்கு நாம் முக்கியத்துவம் கொடுத்தால் நாட்டில் எத்தனையோ கெடுதல்கள் இல்லாமல் போகும்....சண்டை சச்சரவுகள் இல்லாமல் போகும்...இதோ இப்போதைய போர் உட்பட.

    கீதா

    பதிலளிநீக்கு
  10. விளக்கேற்றுவது அவரவர் நம்பிக்கை ஆனால் அந்த 2 ரூபாய் விளக்கிற்குக் கொடுக்கப்படும் எண்ணை, நெய் எதுவும் சுத்தமானவை கிடையாது. கலப்படம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  11. லிங்கோத்பவர் அழகு. ரசித்துப் பார்த்தேன்.

    கருவறை முன் விதான ஓவியம் பிற்காலம் என்பது தெரிகிறது, நெல்லை.

    பாவம் வௌவால்கள் குடியிருந்துவிட்டுப் போகட்டும். மண்டபத்துக்கு வெளியில்தானே....மனிதர்கள் செய்யும் அட்டூஷியத்தை விடவா? பாவம் அந்த உயிர்கள் இறைவனின் அருளைப் பெறட்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  12. கல்லாப் பிழையும் - எனக்கு மனப்பாடம். தினமும் மனதில் வந்துவிடும்.

    படங்களும் விவரங்களும் அருமை, நெல்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
  13. கலைப் பொக்கிஷம்
    புள்ளமங்கை கற்றளி...

    தங்களால் ஆலந்துறையார் தரிசனம்...
    மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துரை செல்வராஜ் சார். எனக்குமே அதிகாலையில் அவர் தரிசனம் பதிவின் வாயிலாக கிடைத்ததில் மகிழ்ச்சி

      நீக்கு
    2. ஆமாம். இறை தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது.

      நீக்கு
  14. கோயில் வாசலில்
    விற்பவைகளை நானும்
    வாங்குவதில்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக நல்ல வழக்கம். ஆனால் துளசி மாலை ஓக்கே

      நீக்கு
  15. பதில்கள்
    1. அவர்களது சேவைக்கு நம்மால் இயன்றது. அரசு ஒன்றும் செய்வதில்லை

      நீக்கு
    2. இதைப்பற்றி நவ கைலாயக் கோயிலான கோடகநல்லூரில் குருக்கள், சீர்காழி குருக்கள், மற்றும் மயிலையில் குருமூர்த்தி வீடருகே இருக்கும் பெருமாள் கோயில் பட்டாசாரியார்,, திருவாலி, திருநகரி பட்டாசாரியார்கள் எனப் பலரைப் பேட்டி கண்டிருக்கோம். மனதே நொந்து போயிடும். முன்னரே இதெல்லாம் இப்படித் தான்.

      நீக்கு
  16. உதிரிப்பூக்கள் சமர்ப்பிப்பேன்...

    பதிலளிநீக்கு
  17. கோவில் கோபுரங்களை படமெடுத்திருக்கும் கோணங்கள் ரசிக்க வைக்கின்றன. பிரும்மா, விஷ்ணு சிற்பம் அழகு.

    பதிலளிநீக்கு
  18. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  19. திருஞான சம்பந்தன் அருளிய பதிகங்களை பாடி இறைவனை தரிசனம் செய்து கொண்டேன்.
    படங்கள் எல்லாம் மிக அருமை,
    கோயிலின் வெளிப்பிரகாரம் படங்கள் ,மற்றும் கோயில் படங்கள் எல்லாம் மிக அருமை.

    //லிங்கோத்பவருக்கு இரு புறமும் விஷ்ணு மற்றும் பிரமன்(?). இன்று செதுக்கியது போன்ற அழகு. இந்த மாதிரி சிற்பத்தின் முகங்களை மாதிரியாக வைத்துத்தான் கல்கியின் நாவல்களுக்கு மணியம் அவர்கள் ஓவியம் வரைந்திருப்பார்.//

    மணியம் செல்வன் அவர்கள் வரைந்த ஓவியம் போலவே பார்த்திபன் கனவு, மற்றும் சிவாகாமி சபதம் படங்களில் தலை அலங்காரம் செய்யப்பட்டது என்று சொல்வார்கள். அவ்வளவு அழகாய் வரைந்து இருப்பார்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க சொல்வது மணியம் அவர்கள் தானே? அவர் மகன் மணியம் செல்வன் "பார்த்திபன் கனவு" படத்துக்கு கலைப் பங்களிப்புச் செய்தது இல்லை. ஏனெனில் பார்த்திபன் கனவு படம் ஜெமினி, வைஜயந்தி மாலா நடிச்சு ஐம்பதுகளிலேயே வந்து விட்டதுனு நினைக்கிறேன். நான் கல்யாணம் ஆகும் முன்னர் இந்தப் படத்தை மதுரை மேலமாசி வீதி சந்திரா என்ற பழனி தியேட்டரில் காலைக்காட்சியாகப் போட்டப்போப் பார்த்திருக்கேன். ஆர்ட் டைரக்டராகத் தான் ஓவியர் மணியம் பொறுப்பேற்றிருந்தார். ஆடை வடிவமைப்பும் நன்றாக இருக்கும். சிவகாமியின் சபதம் படமாக வந்ததா எனத் தெரியாது. டிகேஎஸ் சகோதரர்களால் மேடை நாடகமா(அல்லது சந்திரகாந்தா குழுவால் நாட்டிய நாடகம்) போடப்பட்டது என்பது வரை தெரியும். பார்த்திபன் கனவு படத்தில் சிவனடியாராக வரும் எஸ்.வி.ரங்காராவ், விக்ரம சோழனாக வரும் ஜெமினிக்குத் தன் பூர்வ கதையைச் சொல்லும்போது (மாமல்லராகவும் எஸ்.வி.ரங்காராவ் தான் வருவார். ) கொஞ்சம் தான் சிவகாமியுடன் கொண்டிருந்த காதலையும் அதன் விளைவாக வந்த போர், சிவகாமியின் சபதம், புலிகேசியை வென்று சிவகாமியின் சபதத்தை நிறைவேற்றியது, பின்னர் சிவகாமி ஈசன் திருவடிகளில் சரணம் அடைந்து தன்னை இறைத் தொண்டில் ஈடுபடுத்திக் கொண்டது எனச் சொல்லுவார் என்பதாக ஓரிரு காட்சிகள் வரும். எஸ்.வி.ரங்காராவ் தான் சிவனடியாராகவும், மாமல்ல பல்லவனாகவும் வருவார். குமாரி கமலா என நிரந்தரப் பட்டம் பெற்ற கமலா லக்ஷ்மணன் (அப்போ ) சிவகாமியாக வந்திருப்பார். பின்னர் கமலா லக்ஷ்மி நரசிம்மனோ/நாராயணனோ! கலிஃபோர்னியாவில் இருந்தார்னு நினைவு.

      நீக்கு
  20. லிங்கோத்பவருக்கு இரு புறமும் விஷ்ணு இருவரும் அழகு.
    ஆலந்துறை நாதர், செளந்தரநாயகி இருவரையும் நன்றாக தரிசனம் செய்து கொண்டேன். நித்தியபடி விளக்கு எரிக்க எண்ணெய் வாங்கி கொடுங்கள் என்று ஜோதிடர் சொன்னால் கொடுத்து இருப்பார்கள். அவர்கள் இத்தனை விளக்கு போடுங்கள் அத்தனை விளக்கு போடுங்கள் நீங்கள் நினைத்தது நடக்கும் எனும் போது அவர்கள் என்ன செய்வார்கள்.?

    பதிலளிநீக்கு
  21. துவாரபாலகர்களுடன் கூடிய முன் மண்டபம். பார்க்க அழகு.

    //அர்த்த மண்டபத்தின் விதானத்தில் வெளியே பார்த்தது போலே உள்ள சிற்பங்கள்.//

    நடன மங்கை அந்த இருட்டு இவை எல்லாம் மெளனமாய் கதை சொல்வது போல் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  22. கச்சி ஏகாம்பரநாதன் பாடலை (பட்டினத்தார் பாட்டு.)

    மாலை வழிபாட்டில் அடிக்கடி பாடும் பாடல் .
    பாடல் பகிர்வு விளக்கத்திற்கு நன்றி.


    //தேவியரின் சிற்பங்கள் மிக அழகு. ஆனால் அவை எங்கு வைக்கப்பட்டிருந்தனவோ.//

    அதில் சாஸ்தாவும் இருக்கிறார்.(நான்காவது சிலை)

    பதிலளிநீக்கு
  23. கோவில் கோபுரம் விமானம் கட்டிடம் அழகாக உள்ளது.


    லிங்கோத்பவருக்கு இரு புறமும் இருக்கும் விஷ்ணு சிலைகளின் வடிவமைப்பு கவர்கிறது.

    ஆலந்துறை நாதரை வணங்கிக் கொண்டோம் அழகாக இருக்கிறார் .

    சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அழகிய கோவிலை விரிவாக காணத்தந்த உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சமீபத்தில் முகநூலிலோ வேறே எங்கேயோ நினைவில்லை. ஒருத்தர் எழுதி இருந்தது, சிவன் கோயிலில் விஷ்ணு சந்நிதிகள் இருக்கக் கூடாது எனவும், விஷ்ணு கோயிலில் சிவன் சந்நிதிகள் வைக்க மாட்டார்கள் எனவும் சொல்லி இருந்தார். எனக்குத் தெரிந்து பல சிவன்கோயில்களில் கோஷ்டத்தில் விஷ்ணு கட்டாயமாய் இருப்பார். சிதம்பரம் கோவிந்தராஜப் பெருமாள் அப்படி இருந்தவர் தான் பின்னர் வந்த தெலுங்கு அரசன் வைணவனாக இருந்தவன் கோவிந்தராஜப் பெருமாளுக்குத் தனி சந்நிதி கட்டிப் பிரதிஷ்டை செய்தான் என்பார்கள். இது பற்றித் திருமங்கை ஆழ்வாரின் பாசுரம் ஒண்ணு உண்டு. நினைவில் வரலை. :( நெல்லைக்கு மனப்பாடமாகத் தெரிந்திருக்கும். எனக்குத் தெரிந்து பல சிவன் கோயில்களில் விஷ்ணுவுக்குச் சந்நிதியோ அல்லது கோஷ்டத்திலோ காண முடியும். திருக்கோஷ்டியூர் கோயிலில் தனியாகச் சந்நிதியே இருக்கு. ஒரு வைணவச் சிறுவன் தான் வழிபாடுகளை நியம நிஷ்டையாக நடத்திக் கொண்டிருந்தான். காஞ்சி காமாட்சி கோயிலிலோ அல்லது ஏகாம்பர நாதர் கோயிலிலோ ஒரு திவ்யதேசப் பெருமாளே இருக்கார்.

      நீக்கு
  24. //உன் தரிசனமன்றி வேறு என்ன வேண்டும்?//

    ஆமாம், அது போதும்.

    பதிலளிநீக்கு
  25. அருமையான பாசுரத்துடன் ஆரம்பிச்சிருக்கீங்க பதிவை. லிங்கோத்பவர் மிக அருமை. இரு புறமும் இருக்கு பிரம்மா, விஷ்ணு சிற்பங்களும் அழகு. வலக்கையில் சக்கரம் இருந்தால் பிரயோகச் சக்கரம் என்பார்களோ? பிரம்மாவின் தலையைக் கணக்குப் பண்ணப் பெரிது பண்ணினால் வரலை. :( பூத கணங்களை இம்மாதிரி விமானத்தைத் தாங்கும்படியாக அமைத்திருக்கும் கோயில்கள் சிலவற்றை நானும் பார்த்திருக்கேன். சௌந்திரநாயகிக்குப் பக்கம் துர்கை சந்நிதியா? அம்மனைப் பார்த்தால் துர்கை போல் தெரிகிறதே. இந்த டைல்ஸ் கலாசாரம் வந்து கோயில்களின் தரையின் கல் தரையின் அழகையே கெடுத்து விடுகிறது. அதோடு வழுக்கவும் செய்யும். ஆனால் இது யாருக்கும் புரிவதில்லை. அதோடு கூடக் கற்களை வெட்டி எடுத்துத் தரையில் பதிச்சதுமோ அல்லது அப்புறமோ கல்வெட்டுக்களால் எழுதி இருப்பார்கள். இம்மாதிரி டைல்ஸ் போடும்போது அந்தக் கற்களை உடைச்சுடறாங்க, அல்லது தூக்கிப் போட்டுடறாங்க. இதன் சரித்திரம் அதோடு அவ்வளவு தான். 40 வயசுக்குக் கீழுள்ள இளம் வயதுக்காரங்களுக்கு இது எல்லாம் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. ஏனெனில் பாடங்களிலும் இதை எல்லாம் சொல்லிக் கொடுப்பதில்லை.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!