கேள்வி பதில்கள் :
பானுமதி வெங்கடேஸ்வரன்:
விஜய்,சங்கீதா மண முறிவு த.வெ.க. வின் ஓட்டு வங்கியை பாதிக்குமா?
# வோட்டு வங்கி இருக்குமானால் பாதிக்காது. ( ம.மு தெரிந்த விஷயம்தானே)
Dejavu அனுபவங்கள் உண்டா?
# உண்டு. ஆனால் அற்பமான முக்கியத்துவம் இல்லாதவை.
பொதுவாக பெண்களுக்கு குயிலைப் பழிக்கும் குரல்தான் அழகு என்பார்கள். அதற்கு மாற்றாக கரகர வென்றிருக்கும் ராணி முகர்ஜியின் குரலை ரசிப்பதுண்டா? 'சர்வம் மாயா' பட ஹீரோயின் குரல் கூட சற்று கனம்தான் ஆனாலும் இனிமை என்றுதான் எனக்குத் தோன்றியது.
பி.கு.: சமீப காலங்களில் நடிகைகளின் படங்களை வெளியிடுவதில்லை என்னும் குறையைத் தீர்க்கலாம்.


நெல்லைத்தமிழன் :
1. பார்வைக் குறைவு, கேட்கும் தன்மைக் குறைவு, ருசி அறியாத தன்மை, பல் பிரச்சனை போன்று பலவும் மனிதனுக்கு வயது ஆக ஆக வரும் பிரச்சனைகள். இவற்றில் எது பெரிய பிரச்சனை என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
# பெரியது, சிறியது என்று பாகுபாடு செய்து பார்க்க முடியாத அளவுக்கு, வயது அதிகமாவதால் ஏற்படும் எல்லாப் பிரச்சனைகளுமே மிகுந்த சிரமங்களை அளிக்கத்தான் செய்கின்றன.எனினும் கண்-காது மந்தம் , மறதி இவற்றின் விளைவாக மிக அதிக சங்கடங்கள் வரும் என்று நான் நினைக்கிறேன்.
2. கத்தரிக்காயை பலரும் விரும்பாததன் காரணம் என்ன? ஏன் அலர்ஜிக்கு கத்திரிக்காய் காரணமாக அமைந்துவிடுகிறது?
# கத்தரிக்காயில் பலவகை உண்டு என்பது ஒரு காரணமாக இருக்கலாம். பொய்யூர் கத்தரி, வேலூர் முள் கத்தரி இவை மிகவும் சுவை மிக்கவை.
கத்தரி சிலருக்கு உடலில் அரிப்பு ஏற்படுத்தும் என்பதால் இதைத் தவிர்ப்பதுண்டு.
3. குழந்தைகளைக் கடத்துவது அல்லது அவர்களை இச்சைக்கு உபயோகிப்பது போன்ற குற்றங்களைச் செய்பவர்களை சக கைதிகளே விரும்பாததன் காரணம் என்னவாயிருக்கும்?
# குழந்தை என்பது தெய்வாம்சம் என்பது நமது பாரம்பரிய நம்பிக்கை. இதனால் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மிகவும் கொடூரமானவர்களால் கூட மன்னிக்க முடியாதவை ஆகிவிடுகின்றன.
4. வாக்களிக்காதவர்களுக்கு ரேஷன் போன்ற அரசு உதவிகள் கிடையாது, தேசத் துரோகக் குற்றம் செய்தால் குடும்பத்தின் சொத்து பறிக்கப்படும் என்றெல்லாம் அவசியமான சட்டங்களை ஏன் ஜனநாயக நாடு கொண்டுவருவதில்லை? யோகியின் புல்டோசர், சில நேரங்களில் நம்மூர் போலிஸின் மாவுக்கட்டு போன்றவை என்னைக் கவருவதால் இந்தக் கேள்வி
# நீங்கள் குறிப்பிடும் தண்டனைகள் வாக்களிக்காத குற்றத்திற்கு அளிக்கப்படுவதற்குத் தகுதியானவை அல்ல என்பது மட்டுமல்ல அதை சரி பார்த்து தண்டனை வழங்குவதிலும் பல சிரமங்கள் ஏற்பட வழி இருக்கிறது. ஒரு தவறை இன்னொரு தவறு கொண்டு திருத்த இயலாது.
5. செரிமானக் கோளாறுகளுக்கு என்ன காரணம்? சுலபமாக அதனை எப்படிச் சரி செய்வது? பாட்டி வைத்தியம் அல்லது தாத்தா வைத்தியம்.
# சரியான நேரத்தில் சரியான அளவில் சரியான உணவு உட்கொண்டால் பிரச்சனைகள் வருவது அபூர்வம். அதையும் மீறி ஏதாவது ஜீரணக் கோளாறு ஏற்படுமானால் சுக்குப்பொடி வெல்லம் கலந்து எடுத்துக் கொள்ளலாம். அஷ்ட சூரணம் என்பது ஆயுர்வேத மருந்து கடைகளில் எளிதாக கிடைக்கும் ஜீரணத்திற்கான மருந்து. ஒன்று அல்லது இரண்டு வேளை பட்டினி கிடத்தலும், இரண்டொரு நாட்கள் தொடர்ந்து சாத்வீகமான உணவு ( மோர் சாதம்-சின்ன வெங்காயம் ) உட்கொள்ளுதலும் பெரும்பாலான ஜீரணக் கோளாறுகளை சரி செய்துவிடும்.
= = = = = = = = =
படமும், பதமும்:
நெல்லைத்தமிழன் :
அட... கல்லாலான குளியல் தொட்டியா? பார்க்க அழகா இருக்கேன்னு நினைப்பவர்களுக்கு. இது மம்மியை வைக்கும் பெட்டி. இறந்தவரை செழுமைப்படுத்தி பதனப்படுத்தி வைத்தால் அது 'மம்மி'.
இதோ...மூடி வைத்தாகிவிட்டது. அட என்னப்பா... அவனவன் தங்கத்துல பெட்டி செஞ்சு வைப்பாங்க, தங்க கிரீடம் முகமூடிலாம் இருக்கும்னு சொல்றாங்க. நீ என்னடான்னா கல்லுல உள்ளதைக் காண்பித்து மம்மியை வைக்கும் பெட்டின்றயே என நினைக்கிறீர்களா? எல்லோரும் பணக்காரங்க இல்லையே. ஆளுக்கேத்த ஜாடி. அவ்ளோதான். அது சரி மம்மியைப் பார்க்கணுமா?
அது பக்கத்துல நின்னுக்கிட்டு ஒரு போட்டோ எடுத்துக்கணும்னு நினைச்சேன்.. என்னவோ வேண்டாம்னு தோன்றிவிட்டது. உடலை லினன் துணிகொண்டு மூடியிருப்பதைப் பார்த்தீர்களா? அது சரி... "மம்மிகளை பக்கத்திலிருந்து பார்த்திருக்க. வீட்டுக்கு வந்து குளிச்சயா" என்று கேட்டீர்களானால் நீங்க பூமர் அங்கிள்/பூமர் ஆண்டி. இந்தக் கேள்வி உங்க மனசுல எழவில்லை என்றால் நீங்களும் GenZதான்!
பாரதச் சிந்தனையில் நாம் எப்போதும் ஆன்மாவிற்கு மாத்திரமே முக்கியத்துவம் கொடுத்திருக்கிறோம். உடலுக்கு (உருவத்துக்கு) அல்ல என்று நினைக்கிறேன். அதனால்தான் கோயிலில் உள்ள சிற்பங்களிலோ இல்லை சிலைகளிலோ, இதுதான் இந்த அரசர் என்று சொல்ல இயலாது. அதாவது அந்த அரசர் போல நாம் உருவத்தைச் செதுக்குவதில்லை. எந்த அரசரை எடுத்துக்கொண்டாலும், தெய்வச் சிலைகளைச் செதுக்கும் பாணியில் சிற்பிகள் செய்துவிடுவார்கள். நீங்க இராஜராஜன், உலோகமாதேவி (உலோகம் னா மெட்டல் இல்லை. உலக மகா தேவி) சிலைகள்ல கூட இதனைப் பார்க்கலாம். ஆனால் கிரேக்க எகிப்திய ரோமப் பேரரசுகளின் சிற்பிகள் ஆள் எப்படி இருக்கானோ அதேபோலத்தான் சிலையையும் செதுக்குவார்கள். நீங்கள் மேலே பார்ப்பது, உடலை உள்ளே வைத்துப் புதைக்கும் பெட்டிதான். ஆனால் அதன் மேலே அவர் எப்படி இருந்திருப்பாரோ அதேபோலச் செதுக்கியுள்ளார்கள். உங்களுக்கு பாரதீயச் சிந்தனை பிடித்திருக்கிறதா இல்லை மேற்கத்தைய சிந்தனை பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்களேன்.
பொட்டிக்குள்ள ஒண்ணும் இருக்காதுன்னு நம்பி பக்கத்துல நின்னு போட்டோ பிடித்துக்கொண்டேன்!
= = = = = = = = = =
சென்னை திநகர் பரபரப்பான வியாபார தெரு ஒன்றில் காலை முதல் மதியம் வரையும், மறுபடியும் அதே நாள் இரவு பத்து மணி போலவும் இருக்க நேரிட்டது. அப்போது எடுத்த படங்கள்.. காலை பரபரப்பாகவும், இரவு அமைதியாக, காலியாகவும்!
KGG பக்கம் : அடுத்த வாரம் பார்ப்போம். இந்த வாரம் கே ஜி ஜி ரொம்ப பிசி !!
= = = = = = = = = = == = = = = == = = = = = = = = = = = = = = = = = = =
மாம்லா லீகல் ஹை - தமிழ் வசனங்களில் பார்த்தேன்!
NetFlix ல் நான் பார்த்த தொடர். ஒரு மாதிரி சுவாரஸ்யமாகவே இருந்தது. ரவி கிஷன் முக்கிய பாத்திரத்தில். நிதி பிஷ்ட், யஷ்பால் ஷர்மா என்று நடிகர்கள். ஒரு கோர்ட்டில் நடக்கும் நிகழ்வுகளை நகிகைச்வையாக சொல்லி இருக்கிறார்கள். உண்மை சம்பவங்கள். சின்னச் சின்ன செய்ட்றஹித் துணுக்குகளை சம்பவங்களாக்கி கதை புனைந்திருக்கிறார்கள். உதாரணமாக சிறைக் கைதிகளுக்கு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ஸெக்ஸ் அனுமதிக்கபபடவேண்டும் என்று ஒரு தீர்ப்பு. அதை வைத்து ஒரு கதை. 2024ல் வந்த பழைய கதைதான்.
ரவி கிஷன் தியாகி என்கிற கதாபாத்திரத்தில் முக்கிய வக்கீல். அவ்சர் தன் தந்தை ஒரு நீதிபதி என்பதை ஏன் மறைக்கிறார் என்பது ஒரு செண்டிமெண்ட் கதை. கடைசியில் அது விடுபடும். நெகிழ்வாகவும் ரசிக்கும்படியும் இருக்கும்.
மேல்நாட்டில் பி எல் படித்து வரும் ஒரு பெண் கோர்ட்டில் தன்னைப் பொருத்திக் கொள்ளும் கதை. நிறைய வக்கீல்கள் இருப்பதால் சீனியர் வக்கீல்களுக்கு ஆள் பிடித்துக் கொடுத்து கமிஷனிலேயே சம்பாதிக்க நினைக்கிறார்கள்.
தியாகியின் அடிப்பொடிகளில் இவருக்கும் ஒரு சீனியர் வக்கீல் ஒரு கதை சொல்கிறார். உள்ளிருந்து தானும் அதைக் கேட்கும் தியாகி அடுத்து என்ன செய்ய வேண்டும் என்றும் தீர்மானிக்கிறார். அந்தக் கதை...













அக்கா நீங்க எந்த Dejavu பத்தி கேக்கறீங்கன்னு தெரியலையே!!!! ஹாஹா ஏனென்றால் மார்க்கெட் analysis chart ஒன்றும் உண்டு!!!!
பதிலளிநீக்குஇருந்தாலும் நீங்க கேட்பது என்னன்னு புரியுது!! சிறிய வயதில் நாங்கள் தம்பி தங்கைகள் சேர்ந்து இரவு படிக்கிறோம் என்று இருக்கும் நேரத்தில் பரீட்சித்துப் பார்த்து, அதில் நான் தான் கண்ணை மூடிக் கொண்டு வரவழைக்கும் கதாபாத்திரம்! ஒரு டம்ளரை கவிழ்த்து வைத்துக் கொண்டு கையை அதன் மேல் வைத்துக் கொண்டு நாம் கேட்கும் கேள்விக்கு ஆம் இல்லை பதிலை அது நகர்ந்து சொல்லும் என்று. அதன் பின் காயினை வைத்தும் பரீட்சித்தோம். நகர்ந்தது என்று மத்தவங்க சொன்னாங்க. முகம் எல்லாம் அவர்களுக்கு வியர்த்து ....நான் கண்ணைத் திறந்து பார்த்தப்ப எனக்கு ஒன்றும் தெரியலை. மத்தவங்க ரொம்பவே பயந்து போய் போது போதும் என்று சொன்னார்கள். ஆனால் கொஞ்ச நேரம் ஒருவித அமைதி நிலைக்குப் போயிருந்தேன் என்று மட்டும் தெரிந்தது எனக்கு....எனக்கு மிகவும் பிடித்தமான என் மனதிற்கு நெருங்கிய என்னிடம் அத்தனை பாசமாக இருந்த என் அத்தையின் மரணம் என்னை பாதித்திருந்ததால் அவர்களை மனதுக்குள் நினைத்துக் கொண்டிருந்தேன்...
கீதா
பெண்களுக்குக் கர கர குரல் கூட அழகுதான். சிலரின் குரலில் கம்பீரமும் தெரியும்.
பதிலளிநீக்குகீதா
என்னென்னவோ படங்கள் போட்டிருக்கீங்க கௌ அண்ணா. இவங்கலாம் யாருங்க?
பதிலளிநீக்குகீதா
எனக்கும் தெரியாது. ஸ்ரீ யைக் கேட்போம்!
நீக்குவாங்க கீதா... தேஜாவு என்றால் அப்போது நீங்கள் பார்க்கும் பொருள் ஏற்கனவே பார்த்தது போலவோ, அப்போது நடக்கும் ஒரு சம்பவம் ஏற்கனவே எப்போதோ நடந்தது போலவோ உணரும் நேரம் . அதற்கு தேஜாவு என்று பெயர்.
நீக்குஅந்தப் பெண்.... கீழே உள்ள பெரிய படத்தில் கீழ் அவர் பெயர் இருக்கிறது பாருங்கள். சர்வம் மாயா கதாநாயகி
நெல்லை நீங்க கேட்டிருப்பதில் எல்லாமே வயதானால்தான் வரும் என்றில்லை பிறவியிலிருந்து அல்லது சின்ன வயசிலேயே கூட வருமே.
பதிலளிநீக்குருசி அறியாத தன்மை//
இது வருவதற்குக் காரணம் மணம் அறியும் தன்மை போவதால். இது சில சமயம் தலையில் அடிபட்டால் கூடப் போகும் வாய்ப்பு உண்டு
கீதா
இந்தப் பிரச்சனைகளில் ருசி அறியும் தன்மையை விட மற்றவை எல்லாம்...சங்கடங்கள்....ஆனா நீங்க முக்கியமான ஒன்றை விட்டுட்டீங்க நெல்லை. மறதி. அது இன்னும் மோசம்.
பதிலளிநீக்குகீதா
நெல்லை, செரிமானக் கோளாறுக்குக் காரணம் நம் உணவுப் பழக்கம்தான். வயதாகும் போது ஒரு சில உணவுகளைத் தவிர்த்தல் நலம் நம்மை நாமே அறிந்து கொண்டால் இதைத் தவிர்க்கலாமே.
பதிலளிநீக்குவேறு காரணங்கள் என்றால் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனை தேவைப்படும்.
கீதா
ஆசிரியரின் பதில்கள் நன்று!
பதிலளிநீக்குகீதா
நன்றி.
நீக்குநெல்லை, அந்தக் கல்லாலான தொட்டி போன்ற வடிவத்தைப் பார்த்ததும் தோன்றியது நீங்க சொல்லியிருபப்துதான் கல்லறை போன்றுதான் தோன்றியது. அதான் மம்மி!!!! குளியல் தொட்டி போல படலை!!!! காரணம் நெட்டில் பார்த்திருக்கிறேன். கிட்டத்தட்ட நம்மூர் தாழி போன்ற ஒன்று என்று சொல்லலாமோ?
பதிலளிநீக்கு//இந்தக் கேள்வி உங்க மனசுல எழவில்லை என்றால் நீங்களும் GenZதான்!//
ம்ஹூம் இந்தக் கேள்வியே இங்க வாசிச்சப்புறம்தான் ஓ இப்படி ஒன்னு கேப்பாங்கல்ல? என்று தோன்றியது. ஸோ நான் இப்போதைய குழந்தை!
கீதா
பாரதச் சிந்தனையில் நாம் எப்போதும் ஆன்மாவிற்கு மாத்திரமே முக்கியத்துவம் கொடுத்திருக்கிறோம். //
பதிலளிநீக்குநெல்லை பிற தத்துவங்களிலும் கூட soul, spirit என்று சொல்லப்படுவதுண்டே. மேலை நாட்டு உளவியலில் soul என்று நிறைய சொல்லப்படுவதுண்டு.
//அது பக்கத்துல நின்னுக்கிட்டு ஒரு போட்டோ எடுத்துக்கணும்னு நினைச்சேன்.. என்னவோ வேண்டாம்னு தோன்றிவிட்டது. //
என்னாது? அப்ப அடுத்தாப்ல உள்ள ஃபோட்டோ என்னவாம்!!??? அதான் ஒரு ஃபோட்டோ புடிச்சிட்டீங்களே!!!!! ஹாஹாஹாஹா
கீதா
ஸ்ரீராம் கவிதைகளை மீண்டும் ரசித்தேன். வாசித்த நினைவு இருக்கே! பொ எ வை - ஆல்!
பதிலளிநீக்குகீதா
ஸ்ரீராம், படங்கள் நல்லாருக்கு. இரண்டிற்கும் கவிதை பிறந்திருக்குமே!
பதிலளிநீக்குகாலையில் களையுடன்
ஆரவாரத்தில் நான்!
இரவில் அமைதியால்
பொலிவுடன்.
இது கவிதை இல்லை.
கீதா
நல்லா இருக்கு.
பதிலளிநீக்கு