2.3.26

"திங்க"க்கிழமை  ::   ஒரு எளிய மதிய உணவு -- J K C  ரெஸிப்பி

 

 ஒரு எளிய மதிய உணவு

வெங்காய தாள், கேரட் பருப்பு சாதம்.

(JKC)

என்ன விளையாட்டா? நம்முடைய முதல் திட உணவே பப்பு  புவா தானே! காக்காயை காட்டி  அம்மா ஊட்டி விட்டது வழக்கமான ஒன்று தானே? அதை பற்றி வேறு என்ன புதிதாக சொல்லப்போகிறீர்கள்?

பதிவு முழுதும் படித்து விட்டு சொல்லுங்கள். 

வடையை சாம்பாரில் முக்கி தோய்த்து சாப்பிடுவது ஒரு சுவை என்றால் சாம்பாரில் நன்றாக ஊற வைத்த சாம்பார் வடை மற்றொரு சுவை. அதே போன்று தான் பருப்பை சோற்றில் கலந்து சாப்பிடுவதற்கும் பருப்பும் அரிசியும் கலந்து ஒன்றாக வேக வைத்து சாப்பிடுவதும். பருப்பும் அரிசி சோறும் இரண்டரக் கலந்து தனி சுவையுடன் இருப்பது பருப்பு சாதம்.

எடுத்துக் கொண்ட பொருட்கள்.

கர்நாடக டீலக்ஸ் பொன்னி புழுங்கல் 1 டம்ளர்.

துவரம் பருப்பு டம்ளர்

பட்டை ஒரு இன்ச், கிராம்பு 1.

கருவேப்பிலை கொஞ்சம்

தக்காளி ½  

வெங்காயத்தாள் 4 எண்ணம்

கேரட் சிறிய துண்டு.

அரிசி பருப்பு இரண்டையும் கழுவி  ½ மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் குக்கரில் அரிசி, பருப்பு, காய்கள், கிராம்பு 1, பட்டை சின்ன துண்டு, கருவேப்பிலை, தக்காளி  எல்லாவற்றையும் போட்டு இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டுக்கொள்ளவும்.  விருப்பமிருந்தால் ½ டீஸ்பூன் மஞ்சள் பொடியும் சேர்க்கவும். தேவைக்கேற்ப உப்பு சேர்க்க மறக்க வேண்டாம். நாங்கள் இங்கு ½ டீஸ்பூன் விளக்கெண்ணையும்  சேர்த்தோம். 

அடுப்பை பற்றவைத்து 3 விசில் வரும் வரை வேகவைத்து இறக்கவும். ஆறியபின் பரிமாறலாம். தாளிப்பு இல்லை, தேங்காய் துருவல் சேர்க்கவில்லை. நெய் உபயோகிக்கவில்லை. 

இதற்கு தொட்டுக்கொள்ள சின்ன சேம்பு ரோஸ்ட், தயிர் வெங்காயம், பப்படம், கோங்குரா ஊறுகாய் வைத்துக்கொண்டோம். பருப்பு சாதத்திற்கு தக்காளி தொக்கு, அல்லது தக்காளி சட்னி நல்ல காம்பினேஷன்.

பருப்பு…. சாதம் வேறு, பருப்புசாதம் வேறு, சரிதானே?

4 கருத்துகள்:

  1. கோயமுத்தூரில் பருப்பு சாதம் ஃபேமஸ் என்பார்கள். பண்ணணும் என நினைத்துக்கொண்டிருக்கிறேன். அவங்களும் பட்டைலாம் போடுவாங்களான்னு தெரியலை.

    விளக்கெண்ணெய் எதற்கு?

    பதிலளிநீக்கு
  2. சூப்பர் செய்முறை ஜெ கே அண்ணா.

    ஜெ கே அண்ணா கொங்கு சைடில் பருப்பும்சாதம் என்று செய்வாங்க. ரொம்ப நல்லாருக்கும். எனக்குப் பிடிக்கும். கிட்டத்தட்ட அதே போன்று...

    நான் கோயம்புத்தூரில் இருந்தப்ப தெரிந்து கொண்டது.

    கீதா

    பதிலளிநீக்கு
  3. பொதுவாகப் பருப்பு சாதம் என்றால் நம் வீடுகளில் துவரம் பருப்பை நன்றாக வேக வைத்துச் சிறிது உப்பு சேர்த்துச் சாதத்தில் கொஞ்சம் நெய் விட்டுக் கலந்து சாப்பிடுவது. அது ஒரு தனிச் சுவை.

    கேரளத்தில் செய்யும் பருப்பு - பரிப்புக்கறி தாளிதத்தோடு செய்யப்படுவது பாசிப்பருப்பில் பெரும்பாலும். தேங்காய் ஜீரகம் என்று..... அதுவும் நன்றாக இருக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  4. அந்தச் சேம்பு ரோஸ்ட் ஈர்க்குது, அண்ணா. ரொம்ப அழகா even ஆகக் கட் செய்து....நல்லாருக்கு

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!