சனி, 7 ஜூன், 2014

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.



1) இன்னமும் 30 ரூபாய்தான் கன்சல்டிங் ஃபீஸ் வாங்குகிறார் என்பதுதான் இதில் செய்தி. டாக்டர் நாராயணன் 
 
2) ஆர் ஏ புரம் ரோட்டரி க்ளப் 
 
3) சபாஷ் சஞ்சய்குமார்.  பாராட்ட வார்த்தைகள் இல்லை. டியூஷன் டீச்சர் மஞ்சுளாவுக்கும் பாராட்டுகள்.

4) இந்த சேவையை நான் செய்யுறதா நினைக்கல. இறைவன்தான் எல்லோருக்கும் படியளக்கிறார். அந்த சேவையில நானும் ஒரு ஊழியரா வேலை பார்க்கிறேன். காலா காலத்துக்கும் இந்த சேவை நிக்காம நடக்கணும்னு நீங்களும் பெருமாளை வேண்டிக்குங்க. வேண்டுதல் கோரிக்கையோடு விடை கொடுத்தார் காந்திமதி. மதுரை காந்திமதி.
 
5) தேச நலனுக்குக் குரல் கொடுக்கும் தாய். 66 வயதான அமிர்தவள்ளியம்மாள். 
 
6) தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு இலவச டியூஷன். பேட்ரிக்.
 
8) 20 உயிர்களைக் காப்பாற்றிய சமயோசிதம்.
 
9) சுற்றுச் சூழல், இயற்கை ஆர்வலர் தன்னார்வ முனைவர் சு. விஸ்வநாதன்.
 
10) 100 ஆண்டுகளாய்த் தொடரும் அன்னதானப்பணி.


17 கருத்துகள்:

  1. டாக்டர் நாராயணனும், மதுரை காந்திமதியம்மாளும் வியக்கவும் பிரமிக்கவும் வைத்தனர். நியுட்ரல்+ரிவர்ஸ் கியர் போட்டு பயணிகளை காப்பாற்றிய நல்ல டிரைவர் ரவியும் அப்படியே... மனசுக்கு உற்சாகம் தருகிறது பாசிட்டிவ்வான செய்திகள் ஒவ்வொண்ணைப் படிக்கிற போதும்.

    பதிலளிநீக்கு
  2. மூளைக்கார டிரைவர்..சஞ்சய்க்குமார் என்ன பண்ணினார்னு சொல்லவே இல்லையே..

    பதிலளிநீக்கு
  3. "சமயோசிதம்" வார்த்தையைக் க்ளிக் செய்து செய்தியைப் படியுங்கள் ஆவி!

    பதிலளிநீக்கு
  4. சஞ்சய்குமாரும் ட்யூஷன் டீச்சர் மஞ்சுளாவும் என்னதான் செய்தாங்க??? அதைச் சொல்லுங்க முதல்லே. ஆவி கூட வந்து பார்த்துட்டுக் கேட்டுட்டுப் போயாச்சு! :P :P

    பதிலளிநீக்கு
  5. இலவச கல்வி வழங்கி தேர்ச்சி பெற உதவுவதும், முனைவர் சு.விஸ்வநாதன் அவர்களின் செயலும் சிறப்பு... மற்ற + தகவல்களுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  6. தவறாகப் புரிந்து கொண்டு 'லிங்க் க்ளிக் செய்யுங்கள்' என்று சொன்ன என்னை ஆவி மன்னிக்கட்டும்! அ.வ.சி! முன்னாடி கொடுத்த லிங்க் என்ன ஆச்சுன்னு தெரியலை! இப்போ.... இப்போ புதுசாக் கொடுத்துட்டேன்!:)))))))

    பதிலளிநீக்கு
  7. சிறந்த முன்மாதிரிகள்
    பயனுள்ள தகவல்

    பதிலளிநீக்கு
  8. அருமையான செய்திகள்! அனைத்தும் சிறப்பு!

    பதிலளிநீக்கு
  9. னைத்தும் நற்செய்திகள் . அன்னதானம் செய்பவர்கள் மருத்துவ உதவி செய்யும் சிறு தளிர்,மதிரையில் அன்னதானம் எல்லாமே பிரமிக்க வைக்கும் செய்திகள். ஒருவர் முயற்சியோ கூட்டு முயற்சியோ தானம் செய்து பசி ஆற்றுபவர்களின் பணி மிகவும் நினைக்கத் தக்கது. நல்வழியில் நாடுநடக்க நமக்கு இவர்கள் போதும். நன்றி எங்கள் ப்ளாக்.

    பதிலளிநீக்கு
  10. சஞ்சய்குமாருக்குச் சிறப்பு வாழ்த்துகள். ட்யூஷன் டீச்சருக்கும் சேர்த்துத் தான். :)))

    பதிலளிநீக்கு
  11. பாஸிட்டிவ் செய்திகளுக்குப் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  12. கோடை மழை போல் பாசிடிவ் செய்திகள் பகிர்ந்து மனதை குளிர வைக்கும் உங்களுக்கு ஒரு ஜே!
    டாக்டரின் சேவை, காந்திமதியின் சேவை, சஞ்சய்குமார் செய்யும் உதவியும், உதவிக்கு உதவியாய் மஞ்சுளா டீச்சரின் சேவையும் மலைக்க வைக்கின்றன. மற்ற பாசிடிவ் செய்திகளுக்கும் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  13. சந்தேகமின்றி பாசிடிவ் செய்திகள்தான்.நன்றி

    பதிலளிநீக்கு
  14. ஒவ்வொரோரின் தன்னலம் கருதாத சேவைகளை பார்க்கும்போது நாம் ஒன்றும் செய்யாமல் இருக்கிறோமே என்ற முற்ற உணர்வு ஏற்படுகிறது. துரும்பையாவது கிள்ளிப் போட வேண்டும்

    பதிலளிநீக்கு
  15. இருபது வருடங்களாக இங்கே நான் செல்கிற குடும்ப மருத்துவர் ஏழைகளிடம் மட்டும் 30, 50 என்றே இன்றளவும் ஃபீஸ் வாங்குகிறார். முடியாதவர்களுக்கு இலவசமாகவும் பார்க்கிறார். நல்ல மனிதர்களின் சேவைகளை அறியத் தந்திருப்பதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  16. படித்து மகிழ்ந்த, நெகிழ்ந்த, பாராட்டி ஊக்குவித்த அனைவருக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  17. அனைத்துமே அற்புதமான செய்திகள். இந்த நல்ல மனிதர்கள் நலம் வாழ எனது பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!