ஞாயிறு, 30 ஜூன், 2019

ஞாயிறு : Aztek மத சம்பிரதாயங்களும் சமூக வாழ்க்கையும் தான் உலக நாகரிகத்தின் முன்னோடி





இசைக்கருவிகள் காற்றுக் கருவிகளுக்குப் பின்


நரம்பு வாத்தியங்கள்

இவை சிதார் சாரங்கியின் முன்னோடி என்பதை விட பின்னோடிகள் என்பதே சரியாக இருக்கலாம்

உலோகத்தால் செய்யப்பட தாளக்கருவிகள்

வடகிழக்கிந்திய நாயனம்?


Aztek  மத சம்பிரதாயங்களும் சமூக வாழ்க்கையும் தான் உலக நாகரிகத்தின் முன்னோடி என்கிறார்கள்


இந்த பதாகையில் என்னவோ மிஸ்ஸிங். கல்யாண ஆல்பம் பார்ப்போர் வேகவேகமாக பார்க்கும் மனநிலையில்.....

இதிலும் இல்லை நாம் தேடிய இந்து மதம்.  எங்களுக்கு கொஞ்சம் அரசியல் வாடை தெரிந்தது

எங்கெங்கு நோக்கினும் மூங்கில்


விவசாயத்துக்கு முன் வேட்டை தான் உணவுக்கு வழி

இசைக்கருவியா தலையணியா?

வடகிழக்கில் கிறிஸ்தவ கேந்திரங்கள்


டான் போஸ்கோவின் குடும்ப விவரங்கள்


டான் போஸ்கோ உயிரோட்டமான பதுமை


திரும்ப மாட்டேன் என்று அ டம் பிடிக்கும் படம்


ஊரை சொல்லவேண்டாம் என்றாலும் வீடுகளின் மாதிரி வடிவங்கள் வியக்க வைக்கின்றன


படத்தில் தெரியும் முப்பரிமாணம் !!!


59 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம் மற்றும் தொடரும் அனைவருக்கும்

    கீதா

    பதிலளிநீக்கு
  2. அன்பின் வண்க்கம் அனைவருக்கும்..,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தினம் நான் வரலைனாக்கூட வரவேற்புக் கொடுப்பார் துரை. இன்னிக்கு ஒருநாளாவது நாம கொடுக்கலாமே! :)))

      நீக்கு
    2. வணக்கம். வாங்க... வாங்க...

      நீக்கு
  3. எல்லாப் படங்களும் அருமை. வந்திருக்கும் கீதா/ஶ்ரீராமுக்கும் மற்றும் வரப்போகும் அனைவருக்கும் வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு கீதா, துரை செல்வராஜு,ஸ்ரீராம் அனைவருக்கும் இனிய ஞாயிறு வணக்கம்.
      மீண்டும் வருகிறேன்.

      நீக்கு
    2. வாங்க வல்லி! இரண்டு கீதாவும் இருக்கோம். :)

      நீக்கு
    3. வல்லிம்மா வாங்க வாங்க!!

      அதானே கீதாக்கா சொன்னது போல ரெண்டு கீதாவும் இருக்கோம்...

      கீதாக்கா சொல்லியிருக்கும் கருத்து எனக்கும் தோன்றி சொல்ல வந்தேன். அவங்க சொல்லிட்டாங்க. அதாவது சிந்துசமவெளி, ஆப்பிரிக்க, என்று ஒவ்வொன்றும் சொல்லப்படுகிறது. ஆதிச்சநல்லூர் அந்த அகழ்வாராய்ச்சினால் சொல்லப்படுகிறதோ?

      கீதா

      நீக்கு
    4. வாங்க கீதாக்கா... நல்வரவும் வணக்கமும்.

      நீக்கு
    5. வாங்க வல்லிம்மா... இனிய காலை வணக்கம்.

      நீக்கு
  4. உலக நாகரிகத்தின் முன்னோடி என இன்னும் எத்தனை கண்டுபிடிப்புகள் வருமோ! மேற்கே சிந்து சமவெளி நாகரிகம் தான் முன்னோடி என்போர் சிலர், மதுரைக்கு அருகே ஆதிச்சநல்லூர் தான் முதல் நாகரிகம் என்போர் சிலர்! இன்னும் ஆப்பிரிக்கக் கண்டம் தான் முன்னோடிஎன்று!

    பதிலளிநீக்கு
  5. வாத்தியக்கருவிகளின் படங்கள் எல்லாம் ஆச்சரியமாக இருக்கின்றன. எங்கும் அடிப்படை ஒன்று தான்! மற்றவை பற்றிக் கருத்துக் கூற ஒன்றுமில்லை. :(

    பதிலளிநீக்கு
  6. மிகப் பெரிய ம்யூசியம் போல் தெரிகிறத்யு.

    பல விஷயங்களை இன்றைய படங்கள் சொல்லுகின்றன.

    //Aztek மத சம்பிரதாயங்களும் சமூக வாழ்க்கையும் தான் உலக நாகரிகத்தின் முன்னோடி என்கிறார்கள்//

    ஓ புதிய தகவல். முதலில் aztek மதம் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும்.. கூகுள் தேவதையிடம் கேட்டுப் பார்க்கிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  7. ஶ்ரீராம் பிசியா? இல்லைனா இன்னமும் எழுந்துக்கலையா? காணோமே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலையிலேயே எழுந்து விட்டேன். நேற்று இரவு முதல் மிக அடிக்கடி கரண்ட் போகிறது. போயிட்டு போயிட்டு வரும்! இப்போதும்! மேலும் இரண்டு நாட்களாய் உடல் நலமில்லை. சீஸனல் ​கோளாறு...

      நீக்கு
    2. ஸ்ரீராமுக்கு ஏதோ பிரச்சனை என்று தெரிந்தது. கொஞ்சம் டல்லாகிப் போனது போலத் தோன்றியது.

      உடம்பு சரியில்லையா...பார்த்துக்கோங்க ஸ்ரீராம் ப்ளீஸ் டேக் கேர்....

      சீஸனல் கோளாறு?? ஜல்பு, தொண்டை கீச்கீச், இத்யாதிகள்???

      கீதா

      நீக்கு
    3. ஆமாம், மாங்கொட்டைக்குழம்பு சாப்பிடக்கூட வரலை ஸ்ரீராம்! :(

      நீக்கு
    4. //சீஸனல் கோளாறு?? ஜல்பு, தொண்டை கீச்கீச், இத்யாதிகள்???//

      அதே... அதே...

      நீக்கு
  8. ஆஸ்டெக், மாயன் ,எகிப்திய நாகரீகம் எல்லாமே சிந்து சமவெளியை ஒட்டி
    இருப்பதாகவும் சொல்வார்கள்.
    எப்படியும் கீதா சொல்வது போல நம் மதுரைதான் முதலில் வந்திருக்கும் என்று தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வல்லிம்மா...தமிழகத்தில் மதுரை, காஞ்சீபுரம் இரண்டும் பழம்பெருமை வாய்ந்தவை. மதுரையில் சுத்தத் தமிழ் சம்பந்தமான இலக்கியங்கள், காஞ்சீபுரத்தில் சமஸ்கிருதம், தமிழ் கலப்புள்ள நாகரீகம். இவை இரண்டும் 2000+ வருடங்கள் பழமையானவை. 'நகரேஷு காஞ்சி'- இங்குதான் பெளத்த, சமண, சைவ, வைணவ பல்கலைக்கழகங்கள், கலைக்கூடங்கள் இருந்தன. இப்போதும் விஷ்ணு காஞ்சி, சைவ காஞ்சி என்பதுபோன்று இடங்கள் அழைக்கப்படுகின்றன.

      முக்தி தரும் நகர் ஏழில், முக்கியமாம் கச்சி தன்னில் அத்திகிரி அருளாளர்க்கு அடைக்கலம் நான் புகுந்தேனே

      என்று அடைக்கலப்பத்து குறிப்பிடுகிறது. வாரணாசி, அயோத்தி, காஞ்சி, மதுரா-இது வட மதுரா, துவாரகை, உஜ்ஜெயின், ஹரித்துவார்னு ஞாபகம். ஆனால், தமிழ் கலாச்சாரத்தில், மொழியில், பண்பாட்டில் மதுரை முன்னோடி.

      நீக்கு
    2. ஆஹா.. மாயனை நினைவூட்டி விட்டீர்களே, வல்லிம்மா..
      நாள் பூரா பேசிக் கொண்டிருக்கலாம்..

      நீக்கு
    3. ஜீவி சார்...மெக்சிகோ போயிருக்கீங்களா? நான் செஷன் இட்ஸா போயிருக்கிறேன். அவங்க கலாச்சாரம் கொஞ்சம் வேறுபட்டது. ஏழாவது படத்தைப் பார்த்தபோது எனக்கு சென்ஷன் இட்ஸாதான் ஞாபகத்துக்கு வந்தது.

      நீக்கு
    4. எனக்கு டின் டின் நினைவு வந்தது.
      @ ஜீவி சார்,@ முரளி மா

      பொன்னியின் செல்வன் படித்துக் கொண்டிருக்கிறேன்.
      1100 ஆண்டுகளுக்கு முன் அவர்கள் இவ்வளவு
      முன்னேறி இருக்கிறார்கள் என்றால் அவர்களது
      முன்னோர்கள் அதுக்கும் முந்தியவர்கள்
      எல்லோரும் எவ்வளவு நாகரிகம் படைத்தவர்களாக இருக்க வேண்டூம்

      இன்னும் கண்ணனின் த்வாரகைக் கடலில் கண்டு பிடிக்க வேண்டியவை எத்தனையோ இருக்கிறதே..

      நீக்கு
  9. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
  10. படங்கள் எல்லாம் அழகு.
    //வடகிழக்கிந்திய நாயனம்?//

    நம்மூரில் சாமி வரும் முன் கட்டியம் கூறி கொண்டு முன்னே வாசிக்க படும் வாங்கா வாத்திய இசைக்கருவி போல் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  11. இந்தத்தடவை படங்கள் வித்தியாசமாகவும் அழகாவும் இருக்கு.

    வரலாறு எழுதுபவரைப் பொறுத்து மாறும்.உலக வரலாறுக்கு முன்னோடி பாரதம்தான்.

    பதிலளிநீக்கு
  12. மியூசியத்து புகைப்படங்கள் அருமை ஜி

    நாயனம் என்பதை நாணயம் படித்து விட்டேன் ஹி.. ஹி..

    பதிலளிநீக்கு
  13. அனைவருக்கும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  14. காலை வணக்கம். ஹெவி சப்ஜெக்ட். மாட்டிக் கொள்ளக்கூடாது என்று ஊள்ளுணர்வு சொல்கிறது. எதையும் ஆழ பார்ப்பதைத் தவிர்க்க முடியாததும் இன்னொரு முடியாமை. படக் கல்வியாய்
    உருப்படியான விஷயத்தைத் சிரமப்பட்டு தொட்டுச் சென்றமைக்கு பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  15. சுவாரஸ்யம் அளிக்கும் பொருட்கள். நல்லதொரு படத் தொகுப்பு.

    பதிலளிநீக்கு
  16. அப்பாடா...! காருக்குள்ளே இருந்து எடுக்கும் அற்புத படங்கள் இந்த வாரமும் இல்லை...

    நன்றி...

    பதிலளிநீக்கு
  17. வித்தியாசமான படங்கள்,. இப்படி ஒவ்வொரு மாநிலத்திற்கும், ஏன் பகுதிக்குமே கூட, பண்டைய நாகரீகத்தின் சுவடுகளாய் இசை, நடனம், வாழ்வியல் என்று பல உண்டு.

    அதுவும் மலைவாழ் மக்களின் அதுவும் பழங்குடியினரின் வாழ்வியல் இப்போதைய நாகரீகத்திற்கு ஏற்றாற் போல் மாறினாலும் இன்னும் அவர்களது பாரம்பரியம் கடைப்பிடிக்கப்படுகிறது என்றே தோன்றுகிறது.

    இப்போது நான் பணிக்குச் செல்லும் இடத்தில் என் எதிரே அமர்ந்து வேலை செய்யும் பெண், ஊட்டி படுகா. நிறைய தெரிந்து கொள்கிறேன். அதை வைத்து எழுதலாம் ஒரு கதை...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த கதை ரெடின்னு சொல்லுங்க,,!

      நன்றி கீதா.

      நீக்கு
    2. படகர்கள் வாழ்க்கையில் இப்போதெல்லாம் நிறைய நவீன சமாச்சாரங்கள் புகுந்து விட்டன! முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்னால் மிகவும் வெள்ளந்திகளாக இருந்த மாதிரி இப்போதில்லை! பொய் பித்தலாட்டம் செய்வதைக் கூட சமவெளி மக்களிடமிருந்து கற்றுத் தேர்ந்து விட்டார்கள்.

      ஒப்பீட்டளவில் தோதுவர்களும் குறும்பர்களும் தான் பழைய மலைப்பிரதேச கலாசாரத்தில் இன்னமும்! நாகரீக வாழ்க்கை இன்னமும் அவர்களுக்கு ஒட்டவில்லை.

      நீக்கு
  18. படங்கள் வித்தியாசமாய் இருக்கின்றன தலைப்பில் இருக்கும் விஷயங்கள் குறித்துப்பதிவில் இருக்கும் என்று நம்பினேன்

    பதிலளிநீக்கு
  19. சிங்கங்கள் வரலாறுகளை எழுதாதவரை, வேட்டைக்கதைகள் யாவும் வேட்டைக்காரர்களின் பெருமையையே பேசும் என்னும் ஆப்பிரிக்கப் பழமொழி நினைவுக்கு வருகிறது. அருங்காட்சியகத்தின் முந்தைய பதிவுகளையும் பார்த்தேன். நல்ல முறையில் பேணப்படுவது மகிழ்வளிக்கிறது. நிறைய விஷயங்கள் அறிந்துகொள்ள முடிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாகச் சொன்னீர்கள். நன்றி கீதமஞ்சரி.

      நீக்கு
    2. இன்று காலையில் இருந்தே மன உளைச்சல்.. ஏனென்று தெரிந்தாலும் சொல்வதற்கில்லை...
      கீதமஞ்சரி அவர்களின் கருத்தை வழி மொழிகின்றேன்...

      நீக்கு
  20. இனிய மாலை வணக்கம். தந்திருக்கும் படங்கள் அனைத்தும் அழகு.

    பெரும்பாலான வட கிழக்கு மாநிலங்கள் அனைத்துமே நன்றாக இருக்கும். மிஜோரம் தவிர மற்ற மாநிலங்களுக்கு சென்று வந்த நினைவு இப்போதும் மனதில்!

    பதிலளிநீக்கு
  21. படங்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன . நிறைய செய்திகள். புதியதொரு மதம் பற்றிய பெயர் இதுவரை கேள்விப்பட்டதில்லை.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!