ஞாயிறு, 25 ஏப்ரல், 2021

திப்பு கண்காட்சியகம்

 

அக்காலத்தில் போர்த்தொழில் மட்டுமே சிறந்தோங்கியிருந்தது என்கிற மாதிரி காட்சியகத்தில் வேறு எதுவுமே இல்லை. 

திப்பு காலத்தில்தான் வார்ப்பிரும்பை விட்டு வெண்கலத்தில்   ஆரம்பித்தனர் என்கிறார்கள். 


கருப்பு வெள்ளை படங்களில் போர் திட்டங்களை பட்டுத்துணியில் வரைவது போல் காட்டுவார்கள் .  இங்கு போர் முடிந்து வெகு நாட்கள் சென்றபின் வரைந்தது என்று நினைக்க வைக்கிறது  இந்த ஓவியம் 




சரித்திர புத்தகத்துக்குப் பின் திப்புவின் portrait 


250 வருடங்கள் முன்னர் கட்டப்பட்டது!



கொஞ்சம் இருங்க.. நானும் வந்திட்டேன் என்று வந்து சேர்ந்து கொண்டவரை, யாருக்குக் குறி? என்று கேட்டால் ,



நான்  இல்லை என்று   நி ச்சயப் படுத்திக் கொண்டேன் என்கிறார்! 












எக்ஸிட் poll  மாதிரி exit ஸ்னாப்ஸ் 






இவர் எடுத்த போட்டோ எதுவாக இருக்கும்? 










புறாக்கூண்டு போலிருக்கிறதா உங்கள் குடியிருப்பு?



முன்னரே பகலில் பார்த்த இடங்கள் 



கண்டு பிடித்து விட்டார் ஒருவர் 


= = =  =

83 கருத்துகள்:

  1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். நோய்த் தொற்றில்லாமல் இறைவன் காக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லிம்மா...    தொடர்ந்து அதிகரித்து வரும் பாதிப்பு அகல இறைவனைப் பிரார்த்திப்போம்.

      நீக்கு
  2. எல்லாப் படங்களும் வாசகங்களும் மிக சுவை.
    திப்பு சுல்தான் ,
    சூறையாடிய தமிழ்க் கோயில்கள் பற்றிப் படித்தேன். சரித்திரம் சில சமயம் கசப்பு தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  நரசிம்மா சொல்வார்...   வரலாற்றின் கசப்பான பக்கங்களை சரித்திர ஆசிரியர்கள் சொல்லவே மாட்டார்கள் என்பார்.

      நீக்கு
    2. இவர் மட்டும் சொல்லிட்டாரா என்ன?
      மெளரிய ஆட்சிகாலத்தில் தெற்குக் கடைக்கோடி தமிழகப் பகுதி மட்டும் மெளரியர் பிடியில் சிக்கவில்லை. இது பற்றி அவரது சமீபத்திய வரலாற்று நாவலில் ஏதாவது குறிப்பிட்டிருக்கிறாரா என்று கேட்டிருந்தேன்.தாங்கள் தான் அது பற்றிச் சொல்லவில்லை.

      நீக்கு
    3. சமுத்திர குப்தன் காஞ்சி வரை வந்ததும், அப்போது அவனால் கட்டப்பட்ட சித்ரகுப்தன் கோயில் பற்றியும் நரசிம்மா "அத்திமலைத் தேவன் 2 ஆம் பாகத்"தில் சொல்லி இருக்கார். பொதுவாக சரித்திர ஆசிரியர்கள் உண்மையான சரித்திரத்தைச் சொல்லுவதே இல்லை என்பதை நான் பத்து, பதினொன்றாம் வகுப்பில் படித்த சமயங்களில் அறிந்து கொண்டேன்.

      நீக்கு
    4. இது குப்தர் சாம்ராஜ்யத்து சமுத்திர குப்தன். கி.பி. காலம். நான் கேட்பது கி.மு. கால மெளரியர் பற்றி.

      நீக்கு
    5. மௌரியர்களில் அசோகரின் பெண், பிள்ளை, குரு ஆகியோர் காஞ்சிக்கு வந்ததற்கான ஆதாரங்கள் உண்டே!

      நீக்கு
    6. புத்த மதத்தைப் பரப்ப என்று நமக்குச் சொல்லப்பட்டாலும் அடுத்த புத்தர் அவதாரத்துக்குத் தேவையான தேவ உடும்பர மரத்திற்காகவே வந்தார்கள் என்பது நரசிம்மா ஆதாரத்துடன் சொல்லும் குற்றச் சாட்டு. பின்னர் அவர்கள் பல்லவர்களிடமிருந்து தப்பித்து இலங்கை செல்ல அவர்களுடன் வந்த ஆம்ரபாலி மட்டும் இங்கேயே தங்குகிறாள்.

      நீக்கு
    7. என் கேள்வி தெளிவானது. அசோகர் காலம் தான் தமிழரின் தொல்காப்பிய காலம். நிலம்தருவிற் பாண்டியன் அரசவைசியில் தான் தொல்காப்பியம் அரங்கேறியிருக்கிறது. பாண்டிய மன்னர்கள் கடல் வாணிபத்தில் சிறந்து பொற்காலமாய் தென் தமிழகத்தை ஆண்ட காலம்.

      நீக்கு
    8. நான் குறிப்பிடுவது தென் மதுரையும் கபாடபுரமும் கடலுள் மூழ்குவதற்கு முற்பட்ட காலம். புத்த மதத்தைப் பரப்ப அசோகனால் அனுப்பி வைக்கப்பட்ட அவன் மக்கள் மகேந்திரனும், சங்கமித்திரையும் கபாடபுரக் கடற்கரை மணலில் கால் வைக்கவில்லை. இலங்கைத் தீவோடு தொடர்பு வைத்திருந்த மெளரிய அசோகன், அதனோடு ஒட்டியிருந்த நிலப்பகுதியான தென் தமிழகத்தை மாபெரும் செல்வாக்கோடு ஆண்டு வந்த பாண்டிய மன்னர்களோடு தொடர்பில் இல்லையா என்பதே என் கேள்வி.
      பல்லவர்கள் எல்லாம் மிகவும் பிற்காலத்தவர். அவர்களையெல்லாம் இழுக்காதீர்கள். தொல்காப்பியம் அரங்கேறிய கி.மு. காலத்து அசோகனை பல்லவர் காலத்தோடெல்லாம் சம்பந்தப்படுத்தாதீர்கள்.
      என் பதிவு பக்கம் வாருங்கள். கி.மு. காலத்தில் தமிழகத்தை ஆண்ட 30-க்கும் மேற்பட்ட தமிழ் மாமன்னர்களைப் பற்றி ஆராய்ந்து வைத்திருக்கிறேன்.

      வரலாற்று ஆசிரியர்கள் வேறு; வரலாற்று நாவலாசிரியர்கள் வேறு.

      வரலாற்றை பல்வேறு சான்றுகளுடன் ஆராய்ந்து வரலாற்றை ஆவணமாக்குவோர் வரலாற்று ஆசிரியர்கள்.

      தாமறிந்த வரலாற்று நிகழ்வுகளோடு பொருந்துகிற விதத்தில் கற்பனையாய் கதைகளைப் பின்னுவோர் வரலாற்று நாவலாசிரியர்கள்.

      திரு. நரசிம்மா அவர்கள் வரலாற்று நாவலாசிரியர். தயவுசெய்து அவருக்கு
      வரலாற்று ஆசிரியர் போன்ற பிம்பம் கொடுக்க சிரமப்பட வேண்டாம் என்பதே என் புரிதல்.

      சாண்டில்யன் அவர்களோடு தமிழக வரலாற்று நாவலாசிரியர்கள் சகாப்தம் முடிந்து விட்டதாகவே என் தற்போதைய அறிதல்.

      நீக்கு
    9. //வரலாற்று ஆசிரியர்கள் வேறு; வரலாற்று நாவலாசிரியர்கள் வேறு. //

      சரி.

      // திரு. நரசிம்மா அவர்கள் வரலாற்று நாவலாசிரியர். தயவுசெய்து அவருக்கு
      வரலாற்று ஆசிரியர் போன்ற பிம்பம் கொடுக்க சிரமப்பட வேண்டாம் என்பதே என் புரிதல்.//

      ஒருவரை நாம் தூக்கிப்பிடித்து பேசவேண்டும் என்பதில்லை, அவரைப்பற்றி பேசினாலே கேட்பவர்கள் சிலருக்கு அவரிடம் ஒரு அவெர்ஷன் உண்டாகிவிடும்.  மறுக்க என்ன கிடைக்கும் என்றே மனதில் தோன்றும்.  இது ஒருவகை மனோபாவம்.  அந்த வகையில் நரசிம்மா பற்றி உங்களிடம் பேசப்போவதில்லை.

      ஆனால் ஆராய்ச்சி என்று வந்தால் கடுகளவு ஒரு டியதில் விஷயம் கிடைக்கும் என்றால் நாம் அங்கு தேடிப்போய்த்தான் பார்க்கவேண்டும்.  விரோதம் பாராட்டுதல் சரியல்ல.

      //சாண்டில்யன் அவர்களோடு தமிழக வரலாற்று நாவலாசிரியர்கள் சகாப்தம் முடிந்து விட்டதாகவே என் தற்போதைய அறிதல்.//


      வருந்துகிறேன்.

      நீக்கு
    10. // ஒரு டியதில் //

      *ஒரு இடத்தில்

      நீக்கு
    11. நான் கீதா சாம்பசிவம் அவர்களுக்கும் எனக்குமான தொடர் பின்னூட்டத்திற்கு பதில் அளித்திருக்கிறேன்.. அவ்வளவே, ஸ்ரீராம்.

      நீக்கு
    12. //// திரு. நரசிம்மா அவர்கள் வரலாற்று நாவலாசிரியர். தயவுசெய்து அவருக்கு
      வரலாற்று ஆசிரியர் போன்ற பிம்பம் கொடுக்க சிரமப்பட வேண்டாம் என்பதே என் புரிதல்.////




      //சமுத்திர குப்தன் காஞ்சி வரை வந்ததும், அப்போது அவனால் கட்டப்பட்ட சித்ரகுப்தன் கோயில் பற்றியும் நரசிம்மா "அத்திமலைத் தேவன் 2 ஆம் பாகத்"தில் சொல்லி இருக்கார். பொதுவாக சரித்திர ஆசிரியர்கள் உண்மையான சரித்திரத்தைச் சொல்லுவதே இல்லை என்பதை நான் பத்து, பதினொன்றாம் வகுப்பில் படித்த சமயங்களில் அறிந்து கொண்டேன்.//

      மன்னிக்கவும் ஜீவி ஸார்..   அடுத்த பதில் டைப்பும் முன்பு ஒரு டெலிபோன்!  அதனால் தாமதம்!

      மேலே உள்ள கீதா அக்கா பதிலில் அவர் சொல்லி இருப்பது வரலாற்று ஆசிரியர்கள் பாடப்புத்தகத்தில் கொடுத்திருப்பது தவறான தகவல் என்றுதான் சொல்லி இருக்கிறார்.  நாவலாசிரியர் கதை எழுதினாலும் கூட ஆதாரமில்லாமல் எழுத மாட்டார், இவரும் ஆதாரம் சொல்லியே எழுதி இருக்கிறார். அவ்வளவுதான்.

      நீக்கு
    13. ஶ்ரீராம் சொல்வதை கன்னாபின்னாவென்று ஆதரிக்கிறேன். ஜிங் சக்க, ஜிங் சக்க, ஜிங் சக்க ஜிங்! :))))))

      நீக்கு
    14. Playing one side game --
      Your play ground -- that's all.

      நீக்கு
    15. வரலாற்று நூலாசிரியர்கள்,
      பள்ளி பாடப்புத்தக ஆசிரியர்கள் -
      இவர்களுக்கான வித்தியாசம்?
      இதை வேறு இப்பொழுது விளக்க வேண்டுமா? ஹி..ஹி...

      நீக்கு
    16. நான் ஒரு பக்கமாகவெல்லாம் ஆதரவு தெரிவிக்கவில்லை. விளையாட்டுக்கு ஜிங் சக்க என்று போட்டேனே தவிர்த்து என்னோட கருத்தும் அது தான். அதைத் தான் வலியுறுத்தி இருக்கேன்.பள்ளிப் பாடப்புத்தகங்களைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் புத்தகங்களில் உள்ளதுக்கு மேல் சொல்லிக் கொடுத்தால்/கொடுத்திருந்தால் ஆச்சரியம்! அதிசயம்! வரலாற்று நூலாசிரியர்கள் தனி! அவர்களில் வரலாற்றை மாற்றி எழுதியவர்கள் அநேகம்.

      நீக்கு
  3. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். தொற்றுக் குறைந்து அனைவர் வாழ்விலும் ஆரோக்கியம் மேலோங்கப் பிரார்த்திக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தியா முழுவதும் ஆக்சிஜன் குறைவின்றி கிடைக்கவும், மக்கள் பொறுப்புணர்ந்து செயல்படவும், தோற்று குறையவும் இறைவனை இணைந்து பிரார்த்திப்போம்.  வாங்க கீதா அக்கா..  வணக்கம்.

      நீக்கு
    2. ஹிஹிஹி, ஆக்சிஜன் பற்றாக்குறைக்கு மோதி இல்லையோ காரணம்! அவர் தானே எல்லாவற்றையும் பதுக்கிக் கொண்டு தில்லி முதல்மந்திரி அர்விந்த் கெஜ்ரிவால் கெஞ்சிக் கேட்டும் கூடக் கொடுக்க மாட்டேன் என்று சொல்லிண்டு இருக்கார்! அதனால் தானே இத்தனை சாவுகளும்! மற்றபடி மக்கள் பொறுப்பாவது ஒன்றாவது! நேத்திக்கு மீன் மார்க்கெட்டைப் பார்த்தீங்க இல்ல? என்னனு நினைச்சீங்க தமிழ்நாட்டு மக்களை! கொரோனாவாவது ஒன்றாவது! அதெல்லாம் மோதி கொண்டு வந்தது!

      நீக்கு
    3. //தோற்று // தொற்றுக் குறையவும்! ஹிஹிஹிஹிஹி! நமக்கு இதானே வேலை! க.வி.வி.பா.

      நீக்கு
    4. இந்தியா முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கும் நேரத்தில் மோடியின் புண்ணியக் கரத்தால் அடிக்கல் நடப்பட்டுச் சிறப்பாகச் செயல்பட்டு வரும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் மட்டும் ஆக்சிஜன் பிரச்சனையே இல்லை அதுமட்டுமல்ல இந்த மருத்துவமனையிலிருந்து கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை ஜிரோதான் இது தெரியாமல் திராவிடத்திற்கு முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் தமிழர்கள்

      நீக்கு
  4. திப்பு பற்றிய படங்கள்/தகவல்கள் நன்று. திப்புவின் இன்னொரு பக்கத்தை நினைவு கூர்ந்தால் மனது வருந்தும்.

    பதிலளிநீக்கு
  5. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், மறுபடியும் எங்கே போனாலும் ரோபோ! :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு ரோபோ வருவதே இல்லையே!

      நீக்கு
    2. ஹிஹிஹிஹி, அது வந்து, அதாவது (பீத்திக்கிறாப்போல் ஆயிடுமோ?) நான் வேகமாய்த் தட்டச்சுவதாய் ப்ளாகர் நினைக்குது போல! அதான் ஆங்காங்கே ரோபோவை வைச்சு என்னை மிரட்டிப் பார்க்குதுனு நினைக்கிறேன். இன்னிக்குப் போன இடமெல்லாம் ரோபோ!

      நீக்கு
    3. அவரவர்கள் தளத்தில் அவரவர்களுக்கு ரோபோ வராது.  மற்றவர்கள் தளத்தில் வரும்.  இரண்டு நாட்களாக காரைக்காட்டு, தீயணைப்பானைக் காட்டு, டிராபிக் லைட்டைக் கட்டு, வாகனங்களைக் காட்டு, சாலைக்கடைப்பான்களைக் காட்டு என்று ஒரே படுத்தல்...   சிறு அப்படத்தில் தூரத்தில் தேய்வது பஸ்ஸா, காரா என்று தெரியாமல் விட்டால் மறுபடி முதலிலிருந்து...

      படுத்தல்தான்.  

      இந்த முறையைக் கண்டுபிடித்தவன் மட்டும் என் கையில் சிக்கினான்... 

      நீக்கு
    4. திருத்தம் :

      அவரவர்கள் தளத்தில் அவரவர்களுக்கு ரோபோ வராது.  மற்றவர்கள் தளத்தில் கருத்திட்ட முயலும்போது வரும்.  இரண்டு நாட்களாக காரைக் காட்டு, தீயணைப்பானைக் காட்டு, டிராஃபிக் லைட்டைக் கட்டு, வாகனங்களைக் காட்டு, சாலைக் கடப்பான்களைக் காட்டு என்று ஒரே படுத்தல்...   சிறு படத்தில் தூரத்தில் தெரிவது  பஸ்ஸா, காரா என்று தெரியாமல் விட்டால் மறுபடி முதலிலிருந்து...

      படுத்தல்தான்.  

      இந்த முறையைக் கண்டுபிடித்தவன் மட்டும் என் கையில் சிக்கினான்

      நீக்கு
    5. ரோபோ என் தளத்தில் கூட எனக்கு வருமோ என்னமோ!

      நீக்கு
  6. //கறுப்பு வெள்ளை படங்களில்.. காட்டுவார்கள்... //

    புரியலே. யார் காட்டுவார்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருப்பு வெள்ளை படங்கள் எடுத்தவர்கள்தான்!

      நீக்கு
    2. அதானே, அந்தக் காலத்து ராஜா, ராணிக் கதைகளில்

      நீக்கு
    3. படங்கள் என்றால் அவை திரைப்படங்களைத் தான் குறிக்கும் என்று தெரியாது போயிற்று.

      நீக்கு
  7. திப்புசுல்தான் கண்காட்சியகம் பல பல வருடங்களுக்கு முன் உள்ளே சென்று வெளியே வந்துவிட்டோம்!!!! அத்தனை ஈர்க்கவில்லை. மனம் லயிக்கவில்லை.

    புறாக்கூண்டு போலிருக்கிறதா உங்கள் குடியிருப்பு? // ஹா ஹா

    இந்த படம் நன்றாக இருக்கிறது

    கீதா

    பதிலளிநீக்கு
  8. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    இன்றைய படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளன. படங்களுக்கேற்ற வாசகங்களும் அருமை. வெண்கலத்தால் வார்த்தெடுத்த போர் எந்திரமும், இயற்கை வனப்பு மிகுந்த படங்களும், அந்தப் புறா கூண்டு படமும் மனதை கவர்ந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  10. படங்கள் அனைத்தும் நன்று. தொடரட்டும் பதிவுகள்.

    பதிலளிநீக்கு
  11. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...
    நலமே வாழ்க எங்கெங்கும்..

    பதிலளிநீக்கு
  12. சில படங்கள் நன்று. சரித்திரம் ஆளுக்கு ஏற்றதுபோல எழுதப்படுவது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான். வரலாறு முக்கியம் அமைச்சரே!

      நீக்கு
    2. தோமஸ் வந்து சொல்லிக் கொடுத்ததற்குப் பிறகு தான் திருவள்ளுவர் திருக்குறளை எழுதினார் .. என்றும் சொல்கிறார்களே!..

      நீக்கு
    3. தோமஸ்தான் திருவள்ளுவர் என்று சொல்லவில்லையே... அதுவரைக்கும் சந்தோஷப்படுங்கள். 3ம் நூற்றாண்டில் தமிழகத்தில் இருந்த திருவள்ளுவர், தமிழகத்தில்/உலகத்தில் அப்போது இல்லாத மதத்தையெல்லாம் நினைத்து மதச்சார்பற்றுப் பாடினார் என்று சொல்ல பெரிய கூட்டமே இங்கு இருக்கிறது.

      நீக்கு
  13. அக்பர் தன் ராஜபுதன இளவரசிக்காக கட்டிக்கொள்ளச் சொன்ன (அரண்மனை கோட்டைக்குள்) கிருஷ்ணர் கோவிலை ஔரங்கசீப் இடித்ததை வரலாற்றுப் புத்தகங்களில் எழுதபாட்டார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கர்நாடகத்தில் திருநாராயண புரத்து வைணவ மக்களை சமயத்தின் பேரால் கொன்றொழித்த திப்பு...

      கொற்றக் குடை பிடித்து
      குளிர் சாமரம் வீசுவோமா?...

      நீக்கு
    2. ஆமாம்,அதுவும் தீபாவளி அன்று. அந்த ஊர் மற்றும் அக்கம்பக்கத்து மக்கள் அதன் பின்னர் தீபாவளியே கொண்டாடுவது இல்லை.

      நீக்கு
    3. இந்தக் கொடுமைகளை நினைத்தாலே குலை நடுங்குகின்றது...

      நீக்கு
  14. இந்தப் பக்கம் சிவகங்கைச் சீமையில் குயிலி எனும் வீரமங்கை செய்த தியாகத்துக்கு என்ன கைம்மாறு செய்தோம்?...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சங்கரன் கோயில் போயிருக்கீங்களா? அங்கே கர்பகிரஹம் அருகே உள்ள சுரங்கப்பாதையில் பூலித்தேவன் மறைந்த இடம் என்னும் அறிவிப்புக் காணப்படும். இந்தப் பூலித்தேவனைக் காட்டிக் கொடுத்ததற்காகவே ஜகவீர பாண்டியனின் ஆசை நாயகியின் பிள்ளையான கெட்டி பொம்மு என்னும் கட்டபொம்மன் பழிவாங்கப்பட்டான். பூலித்தேவனைக் காட்டிக் கொடுத்தது ஜகவீர பாண்டியன். பூலித்தேவனின் வழி வந்த எட்டப்பன் கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்தான். அது ஏதோ சிநேக துரோகம் போலப் பேசப்பட்டாலும் அதில் பல உண்மைகள் பொதிந்து உள்ளன. இவற்றை எல்லாம் நாங்க மின் தமிழ்க் குழுமத்தில் விவாதித்தோம். எங்கள் குழுமத்தில் உள்ள ஆய்வாளரான சீதாலக்ஷ்மி சுப்ரமணியம் என்னும் வயது முதிர்ந்த பெண்மணி நேரிலேயே எட்டப்பன் குலத்தாரின் வாரிசுகளைச் சந்தித்து ஆவணங்களை எல்லாம் ஆய்வு செய்து எட்டப்பன் காட்டிக் கொடுக்கவில்லை என்பதை நிரூபித்திருக்கிறார். இது எல்லாம் 2009--2010 ஆம் ஆண்டுகளில் மின் தமிழ்க் குழுமத்தில் விவாதிக்கப்பட்டவை! இவற்றைச் சேமித்து வைத்திருந்தது கணினியின் கோப்புக்களில் உள்ளது. கணினி இப்போது இல்லை என்பதால் அதிலிருந்து சேமிக்கப்ப்ட்ட பென் டிரைவில் தேடணும். நினைவில் இருப்பதை மட்டும் பகிர்ந்துள்ளேன்.

      நீக்கு
    2. ஆம்... நானும் இதைப் பற்றிக் கேள்விப்பட்டுள்ளேன்... இன்னும் முழுமையாகத் தெரிந்து கொள்ள ஆவல்..

      நீக்கு
    3. பழைய சேமிப்புக்களைத் தேடணும். சீதாலக்ஷ்மி அம்மா அவங்க அரண்மனைக்குச் சென்று அவங்களோடு தங்கி இருந்து அந்தக் கால ஆவணங்களைப் பார்த்துப் படம் பிடித்துக் கொண்டு வந்து போட்டதோடு அல்லாமல் பேட்டிகளையும் அப்போது நடந்த பேச்சு வார்த்தைகளின் சாராம்சத்தையும் சொல்லி இருந்தார்.

      நீக்கு
  15. வலைத் தளங்களின் பக்கம் வந்த பிறகு தான் வீரமங்கை குயிலியைப் பற்றித் தெரிந்து கொண்டேன்.. வீரம் செறிந்த அந்த மண்ணைத் தொட்டு வணங்குவதற்கு இன்னும் நேரம் வாய்க்கவில்லையே என்று மனம் வருந்துகின்றேன்..

    பதிலளிநீக்கு
  16. செங்கல்லின் மீது பட்டுத் துணியைப் போர்த்தி - புனித நூல் என்று பொய் சொல்லிச் சத்தியம் செய்து வஞ்சித்து ராணி மங்கம்மாளை வீழ்த்தியதாமே ஒரு கூட்டம்...

    ....... க்கு இருக்கும் ரோஷம் கூட மனிதருக்கு இல்லாமல் போனால் எப்படி?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதையெல்லாம் ஆரம்பித்தால், எழுதுவதற்கு இடம் இருக்காது. சமச்சீர் கல்வியில் உண்மைக்கெல்லாம் இடம் கிடையாது. மற்றவர்களை மகிழ்விக்க, திருவள்ளுவரே வெளிநாட்டிலிருந்து இங்கு வந்ததற்கு டாக்டர் ராபர்ட் என்ற புத்தகத்தில் ஆதாரம் இருக்கிறது என்று எழுதியிருந்தாலே ஆச்சர்யம் இல்லை.

      நீக்கு
    2. 1975 களில் அப்படிப்பட்ட பொய்களுடன் சில புத்தகங்கள் அரங்கேற்றப்பட்டன -
      சென்னை மயிலையில்!...

      நீக்கு
    3. அதன் பின்னரும் தோமஸ் தான் வேதத்தையே எழுதியதாகவும், அதைப் பார்த்து பிராமணர்கள் எழுதிக்கொண்டதாகவும் ஒரு வெளியீடு வந்து எல்லோரையும் புல்லரிக்கச் செய்ததே!

      நீக்கு
    4. சமச்சீர்க் கல்வித்திட்டத்தைப் போன்ற மோசடி வேறே எதுவும் இல்லை. அதனால் தான் தமிழக மாணவர்களால் "நீட்" "ஜேஈஈ" போன்ற பொதுத்தேர்வுகளை எதிர்கொள்ள முடியவில்லை.

      நீக்கு
    5. சாந்தோம் சர்ச்சுக்குப் போயிருக்கீங்களா? அறுபதுகளில் பெரியப்பாவைத் தொந்திரவு பண்ணி அழைத்துப் போகச் சொன்னேன். அவரும் அரை மனதாக அழைத்துச் சென்றார். அங்குள்ள ஓவியங்களைப் பார்த்தால்! :(((((

      நீக்கு
    6. இந்த விவரங்கள் பற்றி இன்னும் அறிய விருப்பம்.  சாந்தோம் சர்ச்சும் போனதில்லை.

      நீக்கு
  17. நல்ல வேளை நான் சென்று பார்க்கவில்லை.
    பிராமணர்கள் மதம் மாறினார்கள்
    பட்டியலில் எங்கள் குடும்பத்தையும் சேர்த்திருப்பார்கள்.

    பதிலளிநீக்கு

  18. ஐந்தாவது படத்தில் பிங்க் கலர் சட்டை போட்டு இருப்பவர் யார்?

    பதிலளிநீக்கு
  19. மீண்டும் ஒரு முறை சென்று வந்த உணர்வு

    பதிலளிநீக்கு
  20. படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.

    திப்பு கண்காட்சியகம் பார்த்து விட்டேன் மீண்டும்.

    பதிலளிநீக்கு
  21. படங்கள் எல்லாம் நன்றாக இருக்கின்றன.

    இந்தக் கண்காட்சியகம் பார்த்தது இல்லை. இங்கு பார்த்துக் கொண்டேன்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!