ஞாயிறு, 10 ஏப்ரல், 2022

மேலும் மலர்கள்

 மலர் காட்சிகள் -- KGY Raman

மத்தாப்பூ போல ஒரு ஜொலிப்பூ !  


வெண்மைப் புன்னகைகள் 


திசைக்கு ஒன்று 


தீபாராதனை காட்டும் பூக்கள் 



வெள்ளை மலரில் மஞ்சள் நாட்டியம் 


ஆடியன்ஸ் ! 


மொட்டும் .. 
 

மலரும் .. 

வேறு நிறம் 

இலைகளும் 


மலர்களும் 


இவர்தான் சூப்பர்வைசர் !


(தொடரும் )

40 கருத்துகள்:

  1. குடியிருப்பு வளாகத்திற்கு மயிலும் வருமா? மயில் படமும், வெள்ளை பூவும் கொள்ளை அழகு. 

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //குடியிருப்பு வளாகத்திற்கு மயிலும் வருமா?//

      இங்கு இவர்கள் கேமிராவில் மட்டும்தான் சுடுவார்கள் என்று தெரிந்து வந்திருக்குமோ?!

      நீக்கு
  2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..

    வாழ்க நலம்..
    வாழ்க தமிழ்..

    பதிலளிநீக்கு
  3. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    அழகான ஒவ்வொரு மலர்களின் படங்களும் கண்களுக்கு நிறைவை தருகின்றன. மயிலின் அழகு மனதிற்குள் சென்று அசையாமல் அமர்ந்து கொள்கிறது. இறுதிப்படம் பார்க்கப் பார்க்கத் திகட்டாத படம். மலர்களும். மயிலும் இன்று ஸ்ரீ ராமர் அவதரித்த இந்நாளில்,ஸ்ரீ ராம பிரானின் அழகுக்கு ஜோடியாக பொருத்தமாக இணைந்துள்ளன. ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் கருணை நிரம்பிய அருளாசிகள் அனைவருக்கும் கிடைத்திட மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரசித்ததற்கும், பிரார்த்தனைக்கு நன்றி கமலா அக்கா.

      நீக்கு
  5. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.எல்லோரும் ஶ்ரீராமன் அருளில் ஆரோக்யம் நிறை வாழ்வு வாழ வேண்டும்.

    பதிலளிநீக்கு
  6. சூரிய ஒளியில் நனையும் பூக்கள் அத்தனையும் அருமை.மேற்பார்வை பார்க்கும் மயிலார் இன்னும் அழகு. இத்தனை அருமையான இயற்கையோடு நடப்பது என்றும் இனிமை.வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  7. அனைவருக்கும் ஶ்ரீராமநவமி வாழ்த்துகள். ஶ்ரீராமனைப் போன்ற மன உறுதியுடன் அனைவரும் எல்லாவிதப் பிரச்னைகளையும் எதிர்கொண்டு வாழ்வில் சந்தோஷத்துடனும் நிம்மதியுடனும் வாழப் பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  8. பூக்கள் எல்லாம் அழகோ அழகு. அதிலும் வெள்ளை நிற மலரில் மஞ்சள் நிற மகரந்தத்தின் ஆட்டமும் பிங்க் நிற விருட்சியின் அழகும், கம்பீரமாக உட்கார்ந்திருக்கும் மயிலாரும் ஆஹா! இங்கேயும் மயிலார் வருவார். குரல் கொடுத்துக்கொண்டே இருப்பார். எங்கே இருக்கார்னு தான் கண்டு பிடிக்க முடியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிமையான குரல் மயிலாருக்கு இல்லை?! நன்றி கீதா அக்கா.

      நீக்கு
  9. அனைத்து வண்ணங்களிலும் மலர்கள் அழகு.

    பதிலளிநீக்கு
  10. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  11. மலர்கள் எல்லாம் அழகு, அதற்கு கொடுத்த வாசகங்களும் அருமை.
    மயில் மிக அழகு.

    பதிலளிநீக்கு
  12. வெள்ளை மலரில் மஞ்சள் நாட்டியம் //

    அருமை.

    பதிலளிநீக்கு
  13. மனங்களே.. மனங்களே..
    மணங்களாய் பரவுங்கள்..
    மனங் கல்லாய் ஆகுமுன்
    மலர்களாய் மலருங்கள்!..

    - ஏதோ நம்மால் ஆனது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மலர்ந்த மனங்களை வேண்டுவோம்.  நன்றி துரை செல்வராஜூ ஸார்.

      நீக்கு
  14. வாவ்!! என்ன அழகான படங்கள்! சூப்பர்.

    மயில் ஆஹா!! சென்னையில் மயில்!!! ???? அலல்து வேறு எங்காவது சென்றிருக்கும் போது எடுத்த படமோ!

    கீதா

    பதிலளிநீக்கு
  15. வெள்ளைப் பூவில் மஞ்சள் நடனம்...!! எனக்கு உடன் நினைவுக்கு வந்தது நம்ம பாரதிராஜாதான். இப்படி வெள்ளை தேவதைகள் சுற்றிலும்னிற்க வைத்து நடுவில் மஞ்சள் உடையில் கதாநயகனும் நாயகியும் அல்லது நாயகி மட்டும் மஞ்சள் மகரந்தத்திலிருந்து அதை மேடையாகக் கொண்டு டான்ஸ் பண்ணுவது போல!!! ஹிஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், இரண்டு பாட்டுகள் அரைகுறையாய் நினைவுக்கு வருகின்றன.

      நீக்கு
  16. தித்திப்பூக்கள்/இட்லிப்பூ/இக்சோரா நிறைய வண்ணங்களில் இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு அழகு.

    கீதா

    பதிலளிநீக்கு
  17. படங்கள் அனைத்தும் சிறப்பு. குறிப்பாக மயில் படம் அம்சமாக இருக்கிறது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  18. கண்களுக்குக் குளிர்ச்சியாக மலர்களின் படங்கள்....... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!