சென்றவாரம் புளமங்கை என்று திருமுறைகளில் கூறப்படும் புள்ளமங்கை ஆடுதுறை நாதர் கோயில் வெளிப்பிரகார சிற்பங்களைப் பார்த்துக் கொண்டிருந்தோம். அதன் தொடர்ச்சி இந்த வாரம்.
இன்றைக்கு தஞ்சாவூர் என்று அழைக்கும் நிலப்பகுதிக்கு எவ்வாறு தஞ்சை என்று பெயர் வந்தது? எப்போதிலிருந்து அந்தப் பெயர் இருக்கிறது? பல்லவர் காலத்துக் கல்வெட்டு (சிராப்பள்ளி மலைக்கோட்டையில் இருக்கும் குடவரைக்கோயில்) ‘தஞ்சஹரக’ தஞ்சையை வென்றவன் என்று இருக்கிறது. அதனால் ஆறாம் நூற்றாண்டுக்கு முன்பே தஞ்சை என்ற பெயர் இருந்திருக்கவேண்டும்.
திவ்யப்பிரபந்தத்தில், பூதத்தாழ்வார் (முதலாழ்வார்களில் ஒருவர்) இரண்டாம் திருவந்தாதியில்,
“தமருள்ளம் தஞ்சை தலையரங்கம் தண்கால்” என்று குறிப்பிட்டிருக்கிறார். பூதத்தாழ்வார் 5-6 ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். 8ம் நூற்றாண்டைச் சேர்ந்த திருமங்கையாழ்வார்,
“வம்புலாம் சோலை மாமதிள் தஞ்சை மாமணிக் கோயிலே வணங்கி” என்று தன் பெரிய திருமொழியில் முதல் பத்திலேயே குறிப்பிட்டிருக்கிறார் (இதுதான் அவர் முதல் முதலாகச் சொல்லும் திவ்யதேசம்… குடந்தை என்ற வார்த்தை வரும் பாசுரத்தை விட்டுவிட்டால்)
அவரே, இரண்டாம் திருமொழி, ஐந்தாம் பத்தில், கடல் மல்லைத் தலசயனத்தைப் பற்றிப் பாடும்போது,
உடம்புருவில் மூன்றொன்றாய் மூர்த்தி வேறாய்
உலகுய்ய நின்றானை அன்று பேய்ச்சி
விடம்பருகு வித்தகனைக் கன்று மேய்த்து
விளையாட வல்லானை, வரைமீகானில்
தடம்பருகு கருமுகிலைத் தஞ்சைக் கோயில்
தவ நெறிக்கு ஓர் பெருநெறியை, வையம் காக்கும்
கடும்பரிமேல் கற்கியை நான் கண்டுகொண்டேன்;
கடிபொழில் சூழ் கடல் மல்லைத் தலசயனத்தே..
‘தஞ்சைக் கோயில்’ என்று தஞ்சாவூரைக் குறிப்பிடுகிறார்.
தஞ்சைப் பகுதியை ஆண்டவர்கள் முத்தரையர்கள். சோழர்களின் (சிற்றரசர்களாக இருந்தபோது) ஆரம்பகாலத் தலைநகரம் உறையூர் (முற்காலச் சோழர்கள் காலத்தில் பூம்புகார் தவிர, நிலப்பகுதியில் அமைந்திருந்த தலைநகரம் உறையூர். பிறகு பழையாறை அவர்களது தலைநகரமாயிற்று. அவர்கள் பல்லவ அரசனான கம்பவர்மனை வென்று (விஜயாலயச் சோழன்) சோழ அரசை ஸ்தாபித்து பிறகு தஞ்சைப் பகுதியை ஆண்டுகொண்டிருந்த முத்தரையர்களையும் வென்று தஞ்சையையும் சேர்த்து பெரிய சோழப் பிரதேசமாக ஆக்கியிருக்கவேண்டும் அப்படித்தான் பிற்காலச் சோழர்களின் உதயம் ஆரம்பமானது.
சிற்பங்களின் அழகை வியக்கும்போது, நாம் அந்த இடங்கள் தற்போது எப்படி இருக்கின்றன, அதைச் சீர் செய்யாவிட்டால் என்ன ஆகும் என்பதையும் எண்ணிப்பார்க்கவேண்டும் அல்லவா? படத்தில் உள்ளது அகழி அமைப்பில் உள்ள கோயில்.
இந்தக் கோயில் அகழி அமைப்புடைய கர்ப்பக்ரஹம். கீழ்ப்பகுதியில் கருங்கல் கட்டமைப்பையும் மேற்பகுதியில் சுதை அமைப்பையும் கொண்டுள்ளது. இதுபோன்ற அமைப்பைப் பல கோயில்களில் கண்டிருக்கிறேன். அதிலிருந்து, முதலில் கோயில் கட்டப்பட்டபோது இத்தகைய அகழி அமைப்புடைய கர்ப்பக்ரஹம் மற்றும் பிற்காலங்களில் அதனைச் சுற்றி உட்பிரகாரங்களும் அமைக்கப்பட்டிருத்தல் வேண்டும் (பிற கோயில்களில்).
இங்குள்ள மஹிஷாசுரமர்த்தினி (துர்கை) தனிச் சிறப்புடைய சிற்பம். திருநாகேஸ்வரம், பட்டீஸ்வரம் மற்றும் புள்ளமங்கை ஆகிய மூன்று கோயில்களிலும் உள்ள துர்க்கை ஒரே சிற்பியால் வடிவமைக்கப்பட்டது என்றும் இவை மூன்றுமே மிகவும் சக்தி வாய்ந்தவை என்றும் சொல்லப்படுகிறது. இந்த துர்க்கை சிலை, கருங்கல் குடை நிழலில், எருமையின் தலைமீது நின்ற வடிவத்தில் உள்ளது. கரங்களில் சங்கு, சக்கரம், வாள், வில், கதை, சூலாயுதம், கேடயம், அங்குசம் முதலிய எட்டு ஆயுதங்கள் ஏந்தி, இருபுறமும் கலைமானும் சிங்கமும் கூடியதாக இருக்கிறது. இந்த துர்க்கையின் இருபுறமும் இரு வீரர்கள் கத்தியால் தலையை அரிந்து தருவது போன்றும், தொடையைக் கிழித்து இரத்த பலி தருவது போன்றும் காட்சி விரிகிறது.
ஒவ்வொரு
பகுதியிலும் மிக அழகிய பெண் சிற்பங்கள். அங்க
அசைவுகள் மிக ஒயிலாக அமைந்துள்ளன. வசீகரமாகவும் விளங்கின. இதைப்போல
நான் லயித்துப் பார்த்த பெண் சிற்பங்கள் இராமசாமி கோயிலில் (கும்பகோணம்). ஆனால் அவை
சுமார் 550 ஆண்டுகளுக்கு முற்பட்டவையே. அவைகளை
நான் கண்டபோதும் ஒவ்வொரு சிலையின் முகபாவம் அதேபோன்று இருக்கிறதா அல்லது
வேறுபட்டிருக்கிறதா என்று உற்று நோக்கினேன். புகைப்படங்களும்
எடுத்தேன். அவையும் இந்தத் தொடரிலேயே வரும்.
எங்கும்
பூதகணங்கள். நம்மைப் பார்க்கிறார்கள்.
மகிஷாசுரமர்த்தினி. இவள் வரம்
வேண்டுபவர்களுக்கு வரத்தை அள்ளிக்கொடுப்பவள். இவளைப்போன்றே
இன்னும் இரண்டு தேவிகள் இருக்கின்றனர். ஒன்று
திருநாகேசுவரத்திலும், இன்னொன்று பட்டீஸ்வரத்திலும். இந்த
மூன்று துர்க்கை வடிவங்களையும் ஒரே சிற்பிதான் செதுக்கினான் எனச் சொல்கின்றனர்.
இராஜராஜ
சோழன் காலத்திற்கும் முற்பட்ட கல்வெட்டு எழுத்துகள்.
புள்ளமங்கை
கோயிலைச் சுற்றிப்பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஈசனை வழிபட மறக்கலாமா? இனி நாம் உள்ளே செல்லவேண்டியதுதான். அத்தனையும் அம்மையையும்
தரிசனம் செய்யாமல் இவ்வளவு நேரம் காலம் தாழ்த்திவிட்டோமே. குற்ற உணர்வுடன்
கோயிலுக்குள் செல்கிறோம்.
அடுத்த
பகுதியில் தொடர்வோம்.
(தொடரும்)
சிராப்பள்ளி மலைக்கோடை குடைவரைக்கோயில் - இது திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டைதானே?
பதிலளிநீக்குஅப்படினாக்க இது கூட ஒருகாலத்தில் சமணர்கள் இருந்தற்கான சான்றுகள் உள்ளனவோ? பக்கத்துலதானே சித்தன்னவாசல் எல்லாம் சமணர்கள் பயன்படுத்தியவை என்று சொல்லப்படுவதுண்டு.
மலைக்கோட்டை எப்பவோ பார்த்தது....
இது ரெண்டு பேரும் அதாவது பல்லவர் மற்றும் பாண்டியர் குடைவரை உள்ளது இல்லையா?
கீதா
வாங்க கீதா ரங்கன். நலமா? பயணமா?
நீக்குதிருச்சி மலைக்கோட்டை. அங்கு நான் இரண்டு குடைவரைப் பகுதியை இன்னும் நன்றாக்க் காணவேண்டியிருக்கிறது. பல்லவர் காலக் குடைவரைதான் முக்கியம்.
பூம்புஹார், உறையூர், பழையாறை எல்லாம் வாசிக்கும் போது சோழப் பேரரசு பற்றி எப்பவோ வாசித்த நினைவு வருகிறது.
பதிலளிநீக்குபாசுரத்தோடு விளக்கம் சூப்பர், நெல்லை
கீதா
உறையூரில் அந்த feel எனக்கு வரலை, மிகப் பழைய தலைநகராக இருந்தபோதும். ஆனால் பூம்புகார் மற்றும் பழையாறை அந்த உணர்வைக் கொடுத்தது.
நீக்குசிற்பங்கள் பார்க்க அழகு ஆனால் சுற்றிலும் இப்படி இருப்பது மனதிற்கு வேதனையாக இருக்கிறது.
பதிலளிநீக்குஇந்த அகழிகள் எல்லாம் ஒன்று பாதுகாப்பிற்கு மற்றொன்று மிகப் பெரிய பொறியியல் concept.
சுற்றிலும் நீர் இருப்பது இப்படியான மிகவும் கனமான கற்கள் கொண்டு எழுப்பியிருப்பவற்றிற்கு வறண்ட காலத்திலும் ஈரத்தன்மை பாதுகாப்பாக இருக்கும் என்ற நோக்கில்.
அவை எல்லாம் பாதுகாக்கப்படலை என்பதால்தான் இப்படியான கோயில்களில் விரிசல்கள் சிதைவுகள் எல்லாம்.
கீதா
கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிக்கணும். அப்போதுதான் கோயில் பாதுகாப்பாகவும் சுத்தமானதாகவும் இருக்கும்.
நீக்குஅதன் பிறகு அறநிலையத்துறை வந்து பெயின்ட் அடித்து பிரசாத ஸ்டால் போடுவாங்க.
இப்படி நீர் நிலைகள் சுற்றி உருவாக்கப்பட்டதன் மற்றொரு காரணம் நிலத்தடி நீர் எப்போதும் வறண்டு போகாமல் இருக்கத்தான். அதுவும் தமிழ்நாட்டுப் பகுதியில் பெரும்பான்மை நிலத்தடியில் பாறைகள் அதிகமான அதாவது தக்காண பீட பூமி....
பதிலளிநீக்குநிலத்தடி நீர் உறிஞ்சப்பட உறிஞ்சப்பட, நிலநடுக்கம் ஏற்படும் பகுதிகள் எனும் லிஸ்டில் சேர்ந்துவிடும்.
கீதா
நீரின்றி அமையாது உலகம்.
நீக்குதிருமலை கோயிலிலும் மூலஸ்தானத்தைச் சுற்றி இதே அமைப்பு உள்ளது. திருமஞ்ச தீர்த்தத்தை உடனேயே உறிஞ்சி வெளியேற்ற அங்கு மோட்டார் பம்ப் வைத்திருப்பதையும் பார்த்தேன்.
ஒரு படத்தில் நடுவில் தென்னை மரம் தெரிவது அந்தக் கோணம் ரொம்ப அழகா இருக்கு...என்னவோ சிற்பங்களின் நடுவில் இருப்பது போன்று
பதிலளிநீக்கு6 வது படத்தில் ஒரு சிற்பம் பறப்பது போல் கால்கள் மடிந்து இருப்பது....அது என்ன சிற்பம் வித்தியாசமாக இருக்கு
7 வது படத்தில் இடப்புறம் (நாம் பார்க்கும் போது) தாங்கி நிற்பவர் என்னவோ அப்பகுதி உடைந்து கீழ விழுந்திடாம இருக்கணும்னு தாங்கி நிற்பது போல இருக்கிறது. அந்த நுனிப்பகுதி கொஞ்சம் உடைந்து அல்லது விரிந்து உசந்து இருப்பது போன்று இருக்கு
கீதா
தென்னைமரம் பின்னணி இத்தகைய கோயில் படங்களை அழகுற அமையச்செய்துவிடுகிறது.
நீக்குபிரமன் ஈசனின் முடியைக் காண முயல்கிறான்.
தாங்கி இருக்கும் சிற்பம் பல இடங்களில் கோபுரத்தில் இந்தக் கோயிலில் உள்ளது.
பத்தாவது படத்தில் இருக்கும் பெண் சிற்பம் கையை வைத்திருப்பது - "இங்க பாருங்க.....நான் என்ன சொல்ல வரேன்னா....புரிஞ்சுக்கோங்க. ரொம்பக் கஷ்டப்பட்டு கட்டியிருககங்க. கொஞ்சம் பராமரிப்பங்கப்பா" ஹாஹாஹா
பதிலளிநீக்குகீதா
அழகான நர்த்தன நிலையை, இப்படிச் சொல்லுவதாக்க் கற்பனை செய்துட்டீங்களே. நீங்க அங்க போகும்போது அவள் இறங்கி வந்து உங்கள்ட சண்டை போடாமல் இருந்தால் சரிதான்.
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்கு///அதன் பிறகு
பதிலளிநீக்குஅறநிலையத்துறை வந்து
பெயின்ட் அடித்து பிரசாத ஸ்டால்
போடுவாங்க..///
பெரிய உண்டியலும்
வைப்பார்கள்!..
தஞ்சை என்ற பெயர்
பதிலளிநீக்குதேடல் அற்புதம்...
அழகான படங்கள்
பதிலளிநீக்குசிறப்பான தகவல்கள்...
நெல்லை அவர்களுக்கு நன்றி
தஞ்சை என்ற பெயர்
பதிலளிநீக்குதேடல் விவரங்கள் அற்புதம்...
புள்ளமங்கை
பதிலளிநீக்குஆலந்துறையார் கோயில்:..