கேள்வி பதில்கள் :
பானுமதி வெங்கடேஸ்வரன்:
பெரும்பான்மையோர் உடல் எடையைக் குறைக்க படாத பாடு படும்பொழுது தனுஷ், எஸ்.ஜே.சூர்யா, பிரதீப் ரங்கநாதன் போன்றவர்கள் மட்டும் எப்படி ஒல்லி குச்சிகளாக இருக்கிறார்கள்?
# விடாமுயற்சி தரும் வெற்றி. டி என் ஏ பிரமாதம்.
& அவர்கள் சாப்பிடுவது எதுவும் உடம்பில் ஒட்டுவது இல்லை போலிருக்கு!
மனதளவில் இளமையாக இருக்கிறேன் என்பது சாத்தியமா? ஏனென்றால் இப்போது 50+ல் இருப்பவர்கள் இளமையாக இருந்தபொழுது அவர்களின் ஆசைகள், கனவுகள், ஏக்கங்கள், ரசனைகள் எல்லாம் இன்றைய காலத்திற்கு கொஞ்சம் கூட பொருந்தாதவை. அப்படியிருக்க மனதால் கூட இளமை சாத்தியமாகுமா?
# மனதளவில் இளமை = உடலளவில் இயலாமை. மூப்பை மீறி மனநிறைவோடு இருக்கும் நல்வாய்ப்பு.
& நானும் கூட வேலை பார்த்த எல்லா வருடங்களிலும், மற்ற எல்லா வேலைகளையும் மனைவி பார்த்துக்கொண்டதால், (வாலண்டரி) ரிடயர் ஆகும் வரை மனதளவில் 18 ஆகவே நினைத்து வாழ்ந்தேன். முதல் பேரன் பிறந்த 55 வயதில் எனக்கும் வயதாகி விட்டது - நான் இனி இளமையான தாத்தா என்று உணர்ந்தேன்!
எம்.ஜி.ஆரை வாத்தியார் என்றார்கள், எஸ்.பி.பியை வாத்தியார் என்கிறார்கள், சுஜாதாவை வாத்தியார் என்கிறார்கள் இவர்கள் ஈடுபட்ட துறையில் இருக்கும் மற்றவர்களுக்கு கிடைக்காத வாத்தியார் பட்டம் இவர்களுக்கு மட்டும் எப்படி கிடைத்தது?
# இது யாரோ கொடுக்கிற பட்டம் இல்லையே. வாத்தியாரே என்றால் மெட்ராஸ் பாஷையில் கெட்டிக்காரர் என்று பொருள். திறமையை மதித்து ஒப்புக் கொண்டவர் வெளிப்படுத்தும் கௌரவம்.
நெல்லைத்தமிழன் :
1. ஓய்வு பெற்று வீட்டில் இருக்கும் ஆண்களும் கிச்சன் வேலைகளில் பங்கெடுத்துக்கொள்ள வேண்டுமா? (இருவரும் வேலைகளைப் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்றால், பெண்கள் ஓயாம பேசிக்கிட்டே இருப்பாங்களே, அதுபோல ஆண்களும் பேச ஆரம்பிக்கணுமா என்ற சந்தேகமும் வருது)
# வீட்டு வேலை செய்வது அகௌரவம் என்ற மனப்பாங்கு இல்லாத வரை, வீட்டு வேலைகள் யாவற்றையும் செய்ய இல்லத்தரசியோ வேறு எவரோ இருந்தால் இந்தக் கேள்விக்கு இடமில்லை. அப்படியில்லாதபோது கணவர் பேப்பர் படித்துப் பொழுதுபோக்கக் கூடாது.
2. முன்பு பால் உடலுக்கு நல்லது என்று சொன்னாங்க. பிறகு ஊசி போட்டு பாலைக் கறக்கறாங்க, அதனால நமக்குத் தெரிந்த வீடுகளில் பால் கறக்கும்போது பெற்றுக்கொள்ளவேண்டும் என்றார்கள். பிறகு ஏ2 பால்தான் நல்லது என்று சொல்றாங்க. இப்படி நினைச்ச போதெல்லாம் முன்னால நாம செய்துகொண்டிருந்தது தவறுனு சொல்றாங்களே.. இவங்கள்லாம் ஒரு முடிவுக்கு வந்த பிறகு பால் பொருட்கள் பக்கம் போலாம் என்று நினைப்பது சரிதானே
# ஒவ்வொருவர் சொல்வதையும் கேட்டு அவதிப்படாமல் முடிவு செய்வதில்தான் சூட்சுமம் இருக்கிறது.
3. சிறு தானியங்கள் உடலுக்கு மிக நல்லது என்று சொல்றாங்களே... உங்கள் அபிப்ராயம் என்ன?
# எதானாலும் உடம்புக்கு ஒத்துப் போனால் நல்லதுதான். அரிசியைக் காட்டிலும் வேறு எதுவானாலும் சரிதான் என்று சொல்வது போலாகி விட்டது நிலைமை.
& நல்லதுதான். ஆனால் ஏனோ எனக்கு அவற்றை சாப்பிட்டால் பசி அடங்குவது இல்லை!
4. பொழுது போவதற்கு இது இதற்கு ஒரு நாளில் இவ்வளவு நேரம் ஒதுக்கவேண்டும் என்று நீங்கள் நினைப்பது என்ன என்ன?
# என் வயதில் இதற்கு பதில் அளிப்பது கடினம். எனினும் உடல் சார்ந்த பயிற்சி, மனதை வழிப்படுத்தும் தியானம் முதலானவை, பொருள் பொதிந்த பேச்சு பிரசங்கம், அமைதி தரும் இசை இவற்றுக்கு கொஞ்சமேனும் நேரம் ஒதுக்க வேண்டும். அந்த நேரம் வெட்டி அரட்டை வீண்வம்பிலிருந்து மீட்டெடுக்க வேண்டும்.
& இப்போதெல்லாம் நடைப்பயிற்சி செய்யும் அரை / முக்கால் மணி நேரம், மடிக்கணினியில் தட்டச்சு செய்யும் நேரம் தவிர ஊரில் இருக்கும் நாட்களில் மற்ற நேரங்கள் யாவும் வெட்டிப்பொழுதுதான் எனக்கு!
5. எங்கள் வளாகத்தில் வாரத்தில் சனி (என்று நினைக்கிறேன்) காலைல, சாலை பக்கம் சில அண்டா நிறைய உணவை வைத்துக்கொண்டு வருகின்ற ஆட்டோ மற்றும் மக்களுக்கு உணவு தானம் செய்யறாங்க. இப்படிப்பட்ட தானங்கள் தேவையானவர்களைத்தான் சென்று அடைகின்றனவா?
# இவை கொடுப்பவருக்கு நிறைவையும் மகிழ்ச்சியையும் அளிப்பது பெறுபவரது யோக்கியதாம்சங்களைச் சார்ந்ததல்ல.
& குரோம்பேட்டையில் எனக்குத் தெரிந்த டாக்டர் ஒருவர் (இப்போது அவர் உயிருடன் இல்லை) ஞாயிறுதோறும் வீட்டுக்கு வரும் பிச்சைக்காரர்களுக்கு ஒரு பிரட் பாக்கெட் கொடுப்பார். அவர் வீடு ரயில்வே ஸ்டேஷன் அருகிலேயே இருந்ததால், போகப்போக அவர் வீட்டிற்கு ஞாயிற்றுக் கிழமைகளில், பல்லாவரம் , தாம்பரம் பக்கங்களிலிலிருந்துகூட ரயிலில் பிச்சைக்காரர்கள் வந்து வரிசையில் நின்று அவர் வீட்டிலிருந்து பிரட் வாங்கி செல்வது வழக்கமாக இருந்தது! பிச்சைக்காரர்கள் மட்டும் அல்ல - நம் சாதாரண மக்கள் கூட ஏதாவது ஒன்று ஓசியில் கிடைக்கிறது என்றால் அங்கே கூட்டம் கூடிவிடுகிறார்கள். இதனால் யாருக்கும் எந்த புண்ணியமும் இல்லை என்பது என் கருத்து.
= = = = = = = = = = = =
படமும் பதமும் :
பானுமதி வெங்கடேஸ்வரன்:
பத்து நாட்களுக்கு முன்புவரை இப்படியிருந்த மரங்கள் ..
கிளைகளின் நுனியில் மொட்டு போல காணப்படுவது... இலைகள் ..
இப்போது 'இலை'த்து விட்டது சாரி துளிர்த்து விட்டது!
நெல்லைத்தமிழன் :
என் பெண், திருமணத்துக்கு முன்பு வேலையை ரிசைன் செய்துவிட்டு, கடைசி வாரத்தில் எங்களை அவள் வேலை பார்த்த வளாகத்துக்கு வரச்சொன்னாள். அங்கு இருந்த பிட்சா பேக்கரி என்ற கடையில், ஐயோ பாவம், மோனாலிசா அந்தக் கடையில் பிட்சா சாப்பிடுவதுபோல ஓவியங்கள் இருந்தன. லூவரில் நான் பார்த்த ஒரிஜினல் மோனா லிசா ஓவியம் எங்கே... இங்கே பரிதாபமாக பிட்சா கடையில் இருக்கும் இந்த ஓவியம் எங்கே!
KGG பக்கம்:
பரோபகார சிந்தனை பரிதாபமான சிந்தனையாகிவிட்டதா எனத் தெரிந்துகொள்ளும் ஆவல் வருகிறது.
பதிலளிநீக்கு