நலமா நிலவே...
வில(க்)கிச் சென்ற நீ
ஏன் உன் நினைவுகளை மட்டும்
என்னிடம் விட்டுச் சென்றாய்?
வில(க்)கிச் சென்ற நீ
ஏன் உன் நினைவுகளை மட்டும்
என்னிடம் விட்டுச் சென்றாய்?
தளும்புகிறது இன்னும்
என் மனசு
வில(க்)கிய
காரணமறியாது..
தொலைக்காமல்
வைத்திருக்கிறேன் உன்
நினைவுகளைப் பத்திரமாக.
கலையவில்லை இன்னும்
உன் கனவுகள் என்னிடம்...
நலமா நிலவே..
நான் துளியாவது
மிச்சமிருக்கிறேனா
உன்
நினைவில்?
====================================
மயில் பெண்ணே....
வண்ணத் தோகை
அமையாத
சோகமா மயில் பெண்ணே...
நிறம் என்னும்
வரம்
உடலிலும்
அமையாத வருத்தமா கண்ணே..
கைம்மையின்
நிறமல்ல,
களங்கமில்லா நிறம் அது!
நிறத்தில் என்ன இருக்கிறது?
வெண்மை
தூய்மையின் நிறம்
என்று
யார் சொல்வார்
உன்னிடம்?