ஞாயிறு, 13 டிசம்பர், 2015

ஞாயிறு 336 :: அப்பாடி ... வெள்ளம் வடிஞ்சிடுச்சு!

                   
  
இப்போ நிம்மதியாத் தூங்கலாம்.
       

19 கருத்துகள்:

  1. இனிதான் இருக்கிறது புனரமைப்புப் பணிகள்.

    பதிலளிநீக்கு
  2. துவார பாலகர் மாதிரி படுத்திருக்கும் இவற்றைப் பார்த்தால், பல கற்பனைகள்.... ஒரு வேளை வெள்ளத்தில் அடைக்கலம் கொடுத்த வீட்டைக் காக்க வாயிலிலே படுத்திருக்கின்றனவோ?!!

    பதிலளிநீக்கு
  3. நிம்மதிதான் இந்த நாய்களுக்கு.. மனிதர்களுக்கு எப்போது என்று தெரியவில்லை.
    த ம4

    பதிலளிநீக்கு
  4. சந்தோஷமான செய்தி நண்பரே... தொடரட்டும் இந்நிலை.

    பதிலளிநீக்கு
  5. அப்பாடா.... நாய், பூனை, என அத்தனை விலங்கினங்களும் எத்தனை கஷ்டப்பட்டன...... எதையும் சொல்லவும் முடியாத கஷ்டம். இனிமேல் கொஞ்சம் நிம்மதி.

    பதிலளிநீக்கு
  6. ஆஹா என்ன நிம்மதியான உறக்கத்துடன் வீட்டுக்குக் காவலும். தப்பிப் பிழைத்தவர்களா நீங்கள்

    பதிலளிநீக்கு
  7. குப்பையும் சகதியும் அகற்றப்படாததால்..கோபத்தால் விரட்டடிக்கடலாம்...

    பதிலளிநீக்கு
  8. வணக்கம்
    ஐயா

    நிம்மதியான உறக்கம்... மனிதனுக்கும் விலங்குகளுக்கும்.த.ம 8
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  9. ஹப்பா பாவம் இதுங்கதான். எதையுமே சொல்ல முடியாம நிறைய செல்லங்கள் வாலை இரண்டு கால்களுக்கு இடையில் விட்டுக் கொண்டு பயந்து போய் இருந்தன...நிறைய வீட்டுச் செல்லங்கள் காப்பாற்றப்பட்டன. அவர்களெல்லோருக்கும் வாழ்த்துகள். ஆனால் தெருவில் இருக்கும் செல்லங்கள் தான் பாவம். நிம்மதியா தூங்கட்டும். எங்கள் மாமியார்வீட்டில் வெள்ளம் வந்த போது அவர்கள் வீட்டு மதிலில் ஒரு பெருச்சாளி ஏறி உட்கார்ந்திருந்தது. எந்தப்பக்கம் குதித்தாலும் தண்ணீர். அதன் பக்கத்தில் ஒரு பூனை, அதன்பக்கத்தில் ஒரு நாய். பார்க்க அழகு என்னனா சாதாரண நாள் என்றால் ஒன்றுக்கு ஒன்று ஆகாது விரட்டித் தீர்க்கும். இப்போ எல்லாம் பயத்தில் பின்னே சண்டை போட்டால் தண்ணில இல்ல விழணும்...

    ரொம்ப அழகா இருக்கு குட்டிகள். எடுத்துக் கொண்டுவிடலாமா என்பது போல்..

    கீதா

    பதிலளிநீக்கு
  10. அழகு. நிம்மதி என்றும் நிலைத்திருக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  11. அழகு. நிம்மதி என்றும் நிலைத்திருக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  12. இந்தக் கட்டாந்தரை கிடைக்காமல் எவ்வளவு அவதிப்பட்டிருக்கும்? பாவம் நிம்மதியாகத் தூங்கட்டும்.

    பதிலளிநீக்கு
  13. அது எப்படி வெள்ளம் வடிஞ்சுடுச்சு அப்படின்னு பொத்தாம் போக்கா சொல்லிப்போக ?

    வளசரவாக்கம் ராதக்ரிஷ்ணன் சாலை காஞ்சு இருக்கு அப்படின்னு சந்தோசப்பட்டு இருக்கிற நேரத்துலே
    பக்கத்துலே இருக்கிற லாமேக் ஸ்கூல் லே இன்னிக்கு திறக்கிறாங்க.
    அப்படின்னு தெரிஞ்சு அங்கன படிக்கிற புள்ளைங்க தாய்மாருங்க எல்லாம் ஸ்கூல் லே கழுத்தளவு இருக்கிற தண்ணியை எடுக்காம எப்படி ஸ்கூலுக்கு அனுப்பறது அப்படின்னு சத்தம் போட,

    ராட்சச யந்திரம் எல்லாம் இன்னிக்கு காலைலேந்து அந்த தண்ணீர் எல்லாத்தையும் எடுத்து ரொடுகளிலே வீச,

    இன்னிக்கு எங்க வீதியெல்லாம் ஒரே பிரளயமா காட்சி அளிக்குது.

    அம்மா !!
    நீங்களே ஓடி வந்து பாருங்க...

    subbu thatha
    www.subbuthatha72.blogspot.com
    please substitute if not add the above blog instead of
    www.subbuthatha.blogspot.com

    பதிலளிநீக்கு
  14. அப்பாடா !பார்க்க நிம்மதியா இருக்கு .எத்தனை கஷ்டம் ஒரு மாத காலமிருக்கும் இல்லையா ..
    பாவன் வாயில்லா ஜீவன்களும் மனிதர்களும் .

    பதிலளிநீக்கு

  15. அப்பாடி...
    வெள்ளம் வடிஞ்சிடுச்சு! - அது
    நாய்களுக்கு மட்டுமே...
    மனிதருக்குத் தொற்று நோய்கள்
    எட்டிப் பார்க்கிறதே!
    http://www.ypvnpubs.com/

    பதிலளிநீக்கு
  16. அழகான குட்டிகள். பாவம் மழையில் வாய் பேச முடியாமல் அவதிப்பட்டவை இந்த ஜீவன்களே! பல பசுமாடுகளும் கூட! :(

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!