வெள்ளி, 22 பிப்ரவரி, 2019

வெள்ளி வீடியோ : சேலைதொடு.. மாலையிடு.. இளமையின் தூது விடு....


நாடோடி ராஜா -  1982 இல் வெளியான படம் என்று தெரிகிறது.  பெரிய விவரம் எதுவும் கிடைக்கவில்லை.


அதில் பாருங்கள்.....  எப்போதும் சொல்வதுபோல நான் படம் பார்ப்பவன் அல்ல.  பாடல்கள் கேட்பவன்.  எனவே இந்தப் பாடல் தெரியும்.  படம் அப்ற்றி எதுவும் தெரியாது.



வைரமுத்துவின் வரிகளுக்கு சங்கர் கணேஷ் இசை. எஸ் பி பாலசுப்ரமணியம் - எஸ் ஜானகி பாடிய பாடல்.



அப்போதெல்லாம் SPB  தான் பாடிய பாடல்களில் எங்காவது ஒரு இடத்தில் சிரிப்பார்.  நாங்கள் அவர் எந்த இடத்தில் சிரிக்கிறார் என்று கவனித்து ரசிப்பவர்கள் உண்டு.  இந்தப் பாடலில் முதல் சரணம் முடிந்து பல்லவி தொடங்கும் இடத்தில சிரிக்கிறார்!



ரொம்ப ரசித்த பாடல்.  காட்சியில் ராஜீவும் அருணாவும்.  காட்சியில் பெரிய கவர்ச்சி இல்லை - வழக்கம்போல.  பாடல் பெரிதும் ரசிக்கப்பட்ட பாடல்.  இப்போதும் ரசிக்க முடியும். 



சந்தனப்புன்னகை சிந்திய கன்னிகை மந்திர மல்லிகைதானே
தேன்மழை பொழியும் இதழ்களில் வழியும் விடிந்ததும் காய்ந்துவிடும் 

நெஞ்சோரம் இந்நேரம் கள்ளூறும் இவள் ஒரு தாவணி மேகம் 
இதயம் அமுதில் நனையும் தொடுகையில் 

பார்வை வேறானது இங்கு வேர்வை ஆறானது 
சேலைதொடு மாலையிடு இளமையின் தூது விடு 
பாடு..... 


என்னோடு கொண்டாடு பண்பாடு தினம் தினம் ராத்திரி ராகம் 
கரும்பும் இவளை விரும்பும் கனிரசம் 

நெஞ்சில் ஓர் வேதனை இனி  தேனில் ஆராதனை 
நெஞ்சில் ஓர் வேதனை இனி  தேனில் ஆராதனை 
கூந்தலிலே போர்வையிடு மன்மதச்சேதி கொடு 
பாடு......

62 கருத்துகள்:

  1. அன்பின் ஸ்ரீராம், கீதாக்கா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்வரவு துரை செல்வராஜூ ஸார். இனிய காலை வணக்கம்.

      நீக்கு
    2. அனைவருக்கு நல்வரவும் வணக்கமும் வைச்சுக்கிறேன். வரவேற்ற துரைக்கு நன்றி. கீதா சென்னையில் இருப்பாங்க! அதான் தாமதமோ?

      நீக்கு
    3. நல்வரவும் வணக்கமும் கீதா அக்கா... கீதா ரெங்கன் இன்று பெங்களூரு திரும்புகிறார் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
  2. நாடோடி ராஜா படம் மற்றும் இந்தப் பாடல் கேட்ட மாதிரி இல்லை. இப்போது தான் கேட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படத்தை விடுங்கள் வெங்கட்... இந்தப் பாடல் காதில் விழுந்த நினைவு இல்லையா? ஃபேமஸ் பாட்டாச்சே....

      நீக்கு
  3. வெள்ளிக் கிழமை விடியும் நேரம்
    வாசலில் கோலமிட்டேன்...
    வள்ளிக் கணவன் பேரைச் சொல்லி
    கூந்தலில் பூ முடித்தேன்....

    இப்படியும் ஒரு திரைப்பாடல்...

    பாய்ந்தது ஓய்ந்தது காய்ந்தது
    கடைசியில் பேரும் புகழும் தீய்ந்தது...
    ஒன்றும் சொல்வதற்கில்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.....ஹா. ஹா... துரை ஸார்... சட்டுனு இப்படிச் சொல்லிட்டீங்களே....!!

      நீக்கு
    2. அன்பு துரை ராஜு இனிய காலை வணக்கம்.சுசீலாவின் இனிய குரலில் அந்தப் பாடலை இன்று கேட்டேன்.
      மிக அருமை.
      அன்பு ஸ்ரீராம், வெங்கட் மற்றும் அனைவருக்கும் இனிய நாளுக்கான வாழ்த்துகள். காணொளி இல்லாமல் பாட்டைக் கேட்டால் இனிமையாக இருக்கிறது. Happy Morning Bhanuma.

      நீக்கு
    3. வல்லிம்மா....

      இனிய காலை வணக்கம்.

      சுசீலாவின் இனிய குரலில் ?

      காணொளி இல்லாமல் பாட்டைக் கேட்டால் இனிமையாக இருக்கிறது...???

      புரியவில்லை. நீங்கள் எந்தப் பாட்டைச் சொல்கிறீர்கள்? துரை செல்வராஜூ ஸார் இருக்கும் பி சுசீலா பாடலையா?

      நீக்கு
    4. துரை சொல்வது என்னனு புரியலையே?????????????

      நீக்கு
    5. கீதாமா துரை சொல்வது ஜெஜே பற்றி. அந்தப் பாடல் நீ என்ற படத்தில் சுசீலாம்மா பாட ஜெயலலிதா நடித்திருப்பார்.
      @ஸ்ரீராம் ராஜீவ்,அருணா பாடல் கேட்டாலே போதும் .பார்க்க வேண்டாம்னு சொன்னேன்.

      நீக்கு
  4. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  5. கனவு பாடல் இனிமை.
    கேட்ட நினைவு இல்லை.
    இப்போது கேட்டேன் .
    படமும் பார்த்தது இல்லை.

    பதிலளிநீக்கு
  6. நாடோடி ராஜா கேள்விப் பட்ட படமா இருக்கு. ஆனால் பார்த்ததும் இல்லை; பாடலைக் கேட்டதும் இல்லை. புதுசு, முழுக்க முழுக்கப் புதுசு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்களே கேள்விப்பட்டிருக்கிறீர்களா என்றால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

      நீக்கு
  7. படம் கேள்விப்பட்டிருக்கிறேன். பாடல் கேட்ட ஞாபகம் இல்லை. சிவாஜிக்கு பிறகு வந்த நடிகர்கள் அவரை காபி அடிக்க முயன்றது போல, கமலுக்கு பிறகு வந்த நடிகர்கள் அவர் போல நடிக்க, நடனமாட முயன்றார்கள். அவர்களுல் ராஜீவும் ஒருவர். ஹீரோவாக சோபிக்க முடியாமல் வில்லனாக மாறினார். பாரதி படத்தில் ஷாயாஜி ஷிண்டேக்கு குரல் கொடுத்திருந்தார்,சிறப்பாக இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். இவரெல்லாம் பாலைவனச்சோலை உட்பட சில படங்களில் நடித்து கொஞ்ச காலம் தாங்கியவர்கள்! ராஜீவ் காக்கிச்சட்டை படத்தில் கூட வில்லனாக நடித்திருப்பார்.

      நீக்கு
  8. 80களில் வந்த பாடல்களில் எஸ்.பி.பி மட்டுமல்ல, ஜானகியும் பாடல்களுக்கு நடுவே சிரிப்பார், எரிச்சலாக வரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த சிரிப்புக்காகத் தான் இன்றைய பதிவுக்குள் இந்தப் பாடல் வந்திருக்கிறது என நினைக்கிறேன்.... பாடலின் வரிகள் வக்ரமானவை...

      நீங்க ஏன் விருந்து சாப்பிடறப்போ குரங்கை நெனைக்கிறீங்க?..

      முதல்லே இந்தப் பாட்டு விருந்தும் இல்லை.. மருந்தும் இல்லை...
      அப்புறம் எங்கே குரங்கு பக்கத்தில இருந்தும் அதை நெனைக்கிறது?...

      இருந்தாலும் என் தமிழுக்குப் பஞ்சம் என்று ஒரு வரி எழுதியவராயிற்றே - கவிஞர்....

      நீக்கு
    2. ஜானகி சிரிப்பது எனக்கும் எரிச்சல் வரும்! ஆனால் எஸ் பி பி சிரிப்பது ரசிப்பேன்.

      நீக்கு
    3. துரை ஸார்... வரிகள் வசீகரமாக இருந்தாலும் அர்த்தமில்லாத வரிகள். வாடா மலராயினும் சூடா மலர்கள் போல!

      நீக்கு
    4. ஜானகியின் சிரிப்பு எரிச்சல் வரும் என்று சொன்ன ஒரே ஆள் நீங்க தான். ஆண் குரலில் பிளிரும் எல்.ஆர்.ஈஸ்வரி குரலை ரசிப்பவர், இப்படி சொல்வதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை

      நீக்கு
    5. வாங்க ஸ்ரீ சரவணக்குமார்.... நான் ஜானகியம்மாவுக்கு ரசிகன்தான். கோபித்துக்கொள்ளாதீர்கள்.

      நீக்கு
    6. ///ஜானகி சிரிப்பது எனக்கும் எரிச்சல் வரும்!//

      ஹா ஹா ஹா ஸ்ரீராம் உண்மையைச் சொன்னால் எனக்க்கும் பெரிசா பிடிக்காது... அது ஏதோ அவவின் சில செய்கைகள் செயற்கை போல ஒரு உணர்வு எனக்கு..

      நீக்கு
  9. அருமையான பாடல்
    முதன்முறையாக கேட்கிறேன்.

    பதிலளிநீக்கு
  10. நல்ல பாடல். நிறையதடவை முன்னொருகாலத்தில் கேட்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  11. இதழ்களில் வழியும் ..விடிந்ததும் காய்ந்துவிடும்..
    - விடிகாலைலயே வெயில் ஜாஸ்தி போலருக்கு. வெட்ட வெளியில படுக்காதீங்கப்பா..

    பார்வை வேறானது, இங்கு வேர்வை ஆறானது
    - அருகில் வந்து அமர்ந்திருப்பது தீவிரவாதிதான்..சந்தேகமில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா... ஹா... ஹா... ஏகாந்தன் ஸார்.... பொருத்தமாய் இருக்கிறது!

      நீக்கு
  12. படமும், பாடலும் கேட்ட மாதிரியே இல்லியே!

    பதிலளிநீக்கு
  13. இதுவரை கேட்டதில்லை இப்போது கெட்டு ரசித்தேன்

    பதிலளிநீக்கு
  14. ஸ்ரீராம்! ஜானகியம்மா சிரிப்பது எரிச்சலாக இருக்கிறதா? LR ஈஸ்வரி கிர்ர்ர்ர்ர்ர் என்று உறுமிக்கொண்டே பாடுகிற பாட்டை எல்லாம் என்னவென்று சொல்வீர்கள்? :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிருஷ் ஸார்... நான் எல் ஆர் ஈஸ்வரி ரசிகன். சிவந்த மண் பாடல் தவிர மற்ற பாடல்கள் எனக்கு ரொம்பவே பிடிக்கும்.

      நீக்கு
    2. எனக்கும் பிடிக்கும் ஈஸ்வரி..

      ஆஷா போன்ஸ்லேயையே அசத்திய தமிழரசி!

      நீக்கு
    3. என்னது.... சிவந்த மண் எல் ஆர் ஈஸ்வரி பாடல் பிடிக்காதா? இது என்ன கொடுமை. (பட்டத்து ராணி) அவங்க பாடினதுல அருமையான பாடல்னா அது... (நான் 6ம் வகுப்பு படிக்கும்போது என் அப்பா கூட்டிக்கொண்டு சென்ற படம் அது)

      நீக்கு
    4. சாட்டையடியைத் தொடர்ந்து வரும் குரல்தான் காரணம்!

      நீக்கு
  15. வணக்கம் சகோதரரே

    அருமையான பாடலாகத்தான் இருக்கிறது. இதுவரை கேட்டதில்லை. படமும் இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை. எஸ். பி. பியின் பாடல் என்பதினால் இப்போதுதான் ரசித்துக் கேட்டேன். நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கமலா அக்கா... நலம்தானே? பதிவொன்றையும் உங்கள் பக்கம் காணோமே...

      நீக்கு
  16. ராஜீவ் காந்தி பாட, அருணா ஆடிய பாடலை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  17. பாட்டுக் கேட்டமாதிரியே ஒரு ஃபீலிங்காக இருக்கு.. அழகிய பாடல், இப்படியே இன்னும் வேறு பாடல் கேட்டமாதிரி வருது... எனக்கு மட்டும்தான் இந்த வியாதியோ என்னவோ..:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருக்கலாம் அதிரா.

      சுபமுகூர்த்தம் எனும் படத்தில் வரும் "நான் இரவில் எழுதும் கவிதை முழுதும்" எனும் பாடல் நினைவுக்கு வரலாம்!

      நீக்கு
  18. ஸ்ரீராம் அருமையான பாடல் செம பாடல்....நான் நிறைய கேட்டிருக்கேன் ஆனால் விவரங்கள் எதுவும் அப்ப தெரியாது இப்ப உங்களின் பதிவு மூலம் தான் இசையமைப்பாளர் தெரியும்...

    எஸ்பிபி செம...சங்கர் கணேஷ் இப்படி ஒரு அழகான ராகத்தில் மெட்டு போட்டிருப்பது வாவ்!! அதுவும் எங்கும் டிவியேட் ஆகாமல்...கம்பீர நாட்டையா திலங் ராகமான்னு ஒரு சந்தேகம் வருது...இரண்டிற்கும் ஆரோகணம் சேம்...அவரோகணத்தில் ஒரே ஒரு ஸ்வரம் மட்டும் தான் வித்தியாசம் இரட்டை சகோதரிகள் போல!!! இந்தப் பாட்டைக் கேட்டதும் உடனே ராஜாவின் இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய் திலங் ராகம் தான் நினைவுக்கு வருது...ஆனால் சந்தனப் புன்னகை கம்பீர நாட்டை போலத்தான் இருக்கு....

    சலநாட்டை(பனிவிழும் மலர்வனம்), கம்பீர நாட்டை, திலங்க் எல்லாத்துலயும் இப்படியான பாடல்கள் அதாவது காதல் பாடல்களும் போடலாம்னு...காட்டும் பாடல்கள்...அருமை..

    பாட்டு செம பாட்டு ஸ்ரீராம்.... மிகவும் ரசித்த பாடல்...இப்ப மீண்டும் ரசித்தேன்....

    கீதா

    பதிலளிநீக்கு
  19. படமும் பார்த்த நினைவு இருக்கிறது. படம் அப்படி ஒன்றும் சொல்வதிற்கில்லை.

    பாடல் நல்ல பாடல். ரசித்தேன் ஸ்ரீராம்ஜி.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!