ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2021

மாடித் தோட்டப் பூக்களும், பூ அலங்காரமும் - - -

 

இந்திய மக்கள் எல்லோருக்கும் இனிய எழுபத்தைந்தாவது  சுதந்திர தின வாழ்த்துகள். 


(இந்தப் படம் மட்டும் இணையத்தில் சுட்டு, 75 சேர்க்கப்பட்டது. )

= = = = = = =

இனி எங்கள் படங்கள் : 

Sphagneticola Trilobata ? தமிழ்ல என்ன? 


பறங்கியா / பூசணியா அல்லது வேறு ஏதாவதா? 
 

சங்குப் பூ ( வேறு பெயர்கள் என்ன?) 


Jungle geranium ? 


பூ முகம் ! 


அந்தி மந்தாரைப் பூ? 


பெயர் தெரியவில்லை ! 




பவளமல்லி பூத்திருக்கு.. 


அசோகா பழங்கள் 


சொட்டு நீர்ப் பாசனம் ? 




புயலுக்கு மறு  வாரம் 


புது விதைகளைப்  போடத்  தயார் 


= = = = =


57 கருத்துகள்:

  1. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  2. தோட்டம் அழகு. பூக்கள் எல்லாம் அழகு. பூ முகம் அருமை.
    பவள மல்லியில் வித விதமாக அலங்காரம் செய்யலாம்.இப்போது மகன் வீட்டில் பூக்களை வைத்து மலர்கோலம் போடுகிறேன்.

    மாயவரத்தில் எங்கள் வீட்டில் அடுக்கு சங்குப்பூ இருந்தது. வெள்ளையும், நீலமும் அடுக்கு இல்லா சங்குபூக்கள் இருந்தன. நீல நீர சங்குப்பூ சனிபகவனுக்கு பிடித்தது மாலையாக கட்டி கோயிலுக்கு கொடுப்பேன்.

    நீலநிறப்பூ கரிவிளை என்றும், வெள்ளை நிறப்பூவை செருவிளை என்றும் சொல்வார்கள்.
    வேறு பெயர்கள்:- //காக்கணம் செடி, மாமூலி, காக்கட்டான், நீல காக்கட்டான், சங்கங்குப்பி, சங்க புஷ்பி எனவும் அழைக்கப்படுகின்றது.//
    நன்றி- விக்கிப்பீடியா

    பதிலளிநீக்கு
  3. புது விதைகளைப் போடத் தயாராகும் தொட்டியும் மலர் வடிவம் காட்டுகிறது, அருமை.

    பதிலளிநீக்கு
  4. சொட்டு நீர் பாசனம் செய்முறையும் அருமை.

    பதிலளிநீக்கு
  5. எல்லோருக்கும் இனிய எழுபத்தைந்தாவது சுதந்திர தின வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  6. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...
    இறையருள் சூழ்க எங்கெங்கும்...

    நாடு வாழ்க..நாடெங்கும் நலம் வாழ்க...


    சுதந்திர தின நல்வாழ்த்துகளுடன்..
    துரை செல்வராஜூ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வணக்கம். இனிய சுதந்திர தின நாள் நல்வாழ்த்துகள்.

      நீக்கு
  7. பாரத நாடு பழம்பெரும் நாடு..

    வாழிய வாழிய தாய்த் திருநாடு!..

    பதிலளிநீக்கு
  8. சுதந்திர தின நல் வாழ்த்துகள்.
    எல்லோரும் எப்பொழுதும் உரிமைகளும்,கடமைகளும் செழிக்க வாழ
    இறைவன் அருள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  9. பவழ மல்லி,சங்கு புஷ்பம் எல்லாமே அருமை.
    மலர்களில் ஸ்ரீ ஆண்டாள் முகம் தெரிகிறது. நல்ல அலங்காரம்.

    நல்ல உழைப்பில் உருவான தோட்டம்.

    பதிலளிநீக்கு
  10. புது விதைகளைப் போடத் தயார் செய்திருக்கும்
    தொட்டியும் மலர் முகம் காட்டுகிறது.
    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  11. இனிய சுதந்திர தின வாழ்த்துகள் ஜி

    பூக்களின் படங்கள் அழகு

    பதிலளிநீக்கு
  12. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் சகோதரரே

    உங்களுக்கும், மற்றும் வந்த/வரும் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

    மாடி தோட்டத்தின் அத்தனை மலர்களின் படங்கள் அனைத்தும் அருமை.

    அடர்த்தியான கலரில் அது பறங்கி மலர் மாதிரிதான் உள்ளது. பார்க்கவே அழகாக உள்ளது. மார்கழி விடியலில் வாசலில் கோலம் நடுவே பறங்கி மலர் வைத்த நினைவுகள் வருகின்றன.

    அந்தி மந்தாரை தன் அழகில் என்றுமே குறைந்ததில்லை. பூ முகமும், விதைகளுக்கு பூ முகம் காட்டி மலர்ந்திருக்கும் மண் முகமும் அருமை. அத்தனை மலர்களையும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  14. அனைவருக்கும் காலை வணக்கம். இனிய சுதந்திர தின வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம். இனிய சுதந்திர தின வாழ்த்துகள்!

      நீக்கு
  15. இனிய சுதந்திர தின வாழ்த்துகள்...

    மலர்கள் அழகு...

    பதிலளிநீக்கு
  16. பூக்களும், பூ அலங்காரமும் சிறப்பு!

    பதிலளிநீக்கு
  17. இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள். நேற்று/இன்று/நாளை திருமண நாள் கொண்டாடவிருக்கும் ஶ்ரீராமுக்கும் அவர் இனிய பாதிக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம், அவர் பாஸ் இருவருக்கும் எங்களின் வாழ்த்துகள்.

      அது சரி.. கீசா மேடம்.. தேதியில் குழப்பமா... இல்லை இன்று போல் என்றும் வாழணும் என்று புதிதாக வாழ்த்தியிருக்கீங்களா?

      நீக்கு
    2. என்னிக்குனு சரியாத் தெரியலை. க்ரீடிங்க்ஸ் காம் நினைவூட்டல் செய்திருக்கு! தேதி சொல்லலை. ஆனால் ஆவணி நாளை தானே! அதனால் நாளையாகவும் இருக்கலாம்னு எல்லாத்தையும் சொல்லிட்டேன்.

      நீக்கு
  18. ஆண்டாள் திருமுக அலங்காரம் ஆடிப்பூரச் சிறப்பா? மலர்கள் மிக அழகு. கண்ணுக்கும் மனதுக்கும் இதம்! சிறப்பான அலங்காரம். தொட்டியிலும் இப்படித்தான் அழகான முறையில் விதைகள் போடப்பட்டிருக்கின்றன. பள்ளி நாட்களில் புத்தாண்டு (ஆங்கிலம் தான்) கிறிஸ்துமஸ் செய்யும் மலர் அலங்காரங்களும் பாத்திகளில் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் விதமாக விதைக்கப்படுவதும் நினைவில் வந்தன. பூக்க ஆரம்பித்ததும் அழகு கண்களைப் பறிக்கும்.

    பதிலளிநீக்கு
  19. பறங்கியா, பூஷணியா எனக் கேட்டிருக்கீங்க. பூக்கள் இரண்டுமே ஆண் பூக்கள் போல! பெண் பூவாக இருந்தால் கண்டு பிடிக்கலாம். கிட்டத்தட்டப் பீர்க்கையும் இப்படித்தான் வரும். சங்குப்பூவின் வேறே பெயர்கள் கோமதி சொல்லிட்டாங்க. எங்க வீட்டிலேயும் வெண்சங்குப் புஷ்பம், நீலச் சங்குப் புஷ்பம், தும்பை, தங்க அரளி, அரளினு எல்லாமும் இருந்தன. ஆனால் மாடியில் இல்லை. மாடித்தோட்டம் போட எனக்கு ஆசை. ஆனால் அவருக்கு இஷ்டம் இல்லை. கூரையில் தண்ணீர் இறங்கிடும்னு பயந்தார். கடைசியில் வீட்டுக்குள்ளேயே தண்ணீர் வந்து வீட்டையே விட்டுக் கிளம்பியாச்சு! :)))))

    பதிலளிநீக்கு
  20. நாளைக்கு யார் சமையல்? நெல்லையா மறுபடி? அதிரசம், முறுக்கு, வெல்லச் சீடைனு பண்ணப் போறாரா? இன்னிக்கு எங்கே காணோம் அவரை?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மணியோசையா நீங்க வந்துட்டீங்கன்னா..பின்னாலயே நானும் ஆஜர்.

      நீக்கு
    2. ஹாஹாஹா, இன்னிக்குக் கொஞ்சம் உட்காரலாம்னு வந்திருக்கேன். நேத்திக்கு உட்கார்ந்ததிலே மறுபடி கால் கொஞ்சம் வீக்கம்! :( அதனால் பயமாவும் இருக்கு! :) இருந்தாலும் படுத்தே கிடக்கவும் முடியலை. :(

      நீக்கு
  21. மலர் அலங்காரங்கள் பேசுகின்றன.

    சங்குப்புஸ்பம் இரு இனங்களும். நீல நிறம் நாள் ஒன்றுக்கு இருபது -முப்பது பூக்கள் பூக்கும். பவள மல்லியும் எங்களிடம் இருக்கின்றது.

    இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  22. அருமையான பதிவு
    இனிய சுதந்திர நாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  23. மலர்கின்ற பூக்களால்
    மண்ணிற்கு அழகு.. மனதிற்கு அழகு...
    கண்ணிற்கு அழகு.. கருத்திற்கும் அழகு..

    பதிலளிநீக்கு
  24. எப்படியாவது பவளமல்லி செடியை வைத்து வளர்த்தே தீருவது என்று முயன்று கொண்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  25. படங்கள் நன்று.

    பூ முகம் படத்தினை திருப்பிப் போட்டிருக்கலாம்! :) கழுத்தை வளைத்துப் பார்க்க வேண்டியிருந்தது! :))))

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!