பள்ளிகொண்டா திரும்பி குடியாத்தம் தாண்டினோம். அதற்கப்புறம் 20 முதல் 25 நிமிட மலைப் பயணம். ஒரு சிறிய மலையில் ஏறி இறங்கினோம். உடனே வந்த ஊர் V. கொட்டாரா என்று நினைவு. அதிகாலை செல்லும்போது அந்த மலைப்பயணம் மிக ரம்யமாக இருந்தது. 22 கொண்டை ஊசி வளைவுகள்.அதைத் தாண்டி இடதுபுறம் திரும்பியதும் அகலமான தேசீய நெடுஞசாலை. அந்தப் பள்ளி, இந்த ஹள்ளி என சிறு சிறு ஊர்ப்பெயர்களாக வர, நான் ஏற்கனவே டிரைவரிடம் எட்டு மணி சுமாருக்கு எங்காவது நிறுத்தி டிஃபன் சாப்;பிட்டு விடலாம் என்று சொல்லி இருந்தேன். பாஸ் இயற்கை அழைப்பு இடம் பார்த்து நிறுத்தத் சொன்னார். சோதனை என்ன என்றால் அந்த பாதையில் ஒரு ஹோட்டலும் வரவில்லை. டோல் கேட்டும் இல்லை. சுமார் முப்பத்தைந்து நிமிடங்கள் பயணம். ஒரு சில இடங்களில் ஹோட்டல் பெயர் போல வந்தாலும், அது முன்னரே இடதுபுறம் சர்விஸ் சாலையில் திரும்பி இருக்க வேண்டும் என்ற நிலை.
மொராட்டப்பள்ளி என்கிற ஊரில் திருப்பதி ஒரு விரலைக் காட்டிவிட்டு எதிரில் இருந்த பெட்ரோல் பங்கிற்குள் மறைந்து விட்டு சுத்தமாக 15 நிமிடங்கள் அகழித்து வந்த இடைவேளையில் எனக்கு கிடைத்த சில புகைப்படங்கள்..
சோகம் கொண்டாடும் நாய். என்ன சோகமோ.. யாரைத் தேடுகிறதோ... எதை அறிந்ததோ..
அவஸ்தையான ஐம்பது நிமிடங்களுக்குப் பிறகு இடதுபுறம் சர்விஸ் ரோடில் நுழைந்து பெங்களூருவிற்குள்ளேயே நுழைந்து லேசாக இடதுபுறம் திரும்பியதும் A2B கண்ணில்பட அங்கே இறங்கி சிற்றுண்டி முடித்தோம். இயற்கை உபாதையையும் தீர்த்துக் கொண்டோம்.
மலையில் ஏறத்தொடங்கியதும் வந்த முதல் கொண்டை ஊசி வளைவு.
தொடர்ந்து வரும் சாலையோர தனித்தனி மலைகள்.
ஜிலேபி எழுத்துகளின் தொடக்கம்!
புகையும் எரிமலை பார்த்திருப்பீர்கள். இது வழியும் மேகமலை.
மழை என்ன தூறினாலும் இவருக்கு கவலை இல்லை!
உள்ளே நுழைந்த போட்டோ எடுத்ததும் இரண்டு சிறுவர்கள் ஓடி வந்து "கணேஷ் பைசா... கணேஷ் பைசா" என்றார்கள்.
பாபாவை போட்டோ எடுத்தால் கணேஷ் பைசா என்கிறார்களே என்று இதன் பெயர் என்ன என்று கேட்டேன். டோல்பாபா என்றார்கள்.
வழியில் எதிர் திசையில் கண்ட ஏதோ ஒரு கோவிலின் மேற்புறம்.
இந்தப் பயணத்தில் என்ன அருமை என்றால் ரம்யமான காலநிலை. வெய்யிலே கிடையாது. பதிலாக மூடிய மேகங்கள், மெலிதான தூறல்.. இளையராஜா பாடல்கள்.மிகவும் ரசித்த பயணமாக அமைந்தது. போகும்போதும், வரும்போதும் அதேபோல பயணம் அமைந்ததால் மிகவும் ரசித்த பயணமாக இருந்தது. களைப்பு தெரியவில்லை.
மதிய உணவு எங்காவது சாப்பிடுவதா, இல்லை திருமணம் நடக்குமிடத்துக்கே சென்று விடுவதா என்று குழம்பி, அங்கேயே சென்றடைந்து விடுவது என்று முடிவெடுத்தோம்.
பெங்களூரு தாண்டியதும் தேசீய நெடுஞ்சாலையில் நிறைய ஹோட்டல்கள் தென்பட்டன. சுற்றிலும் சிறிதும் பெரிதுமாக மலைகள், குன்றுகள். அதன்மேல் காற்று வீணாகாமல் மின்சாரம் தயாரிக்க நிறைய பெரிய பெரிய ராட்சத காற்றாடிகள். இரண்டு பக்கமும் தேக்கு மரங்கள் கண்ணில் பட்டன.ஜிலேபி ஜிலேபியாய் எழுதப்பட்ட போர்டுகள்.
சாலையின் இருபுறமும் தென்னைமரங்கள், பாக்குமரங்கள்...
சில இடங்களில் இப்படி துணி போட்டு மூடி ஏதோ பயிரிட்டிருந்தார்கள்.
நெடுஞ்சாலையிலிருந்து விலகி சிறிய பாதை ஒன்றில் திரும்பியதும் மேலும் கண்கொள்ளாக் காட்சி. குறுகிய பாதை. இருபுறமும் பாக்கு மரங்கள். செவ்வந்தித் தோட்டங்கள். ரசித்தபடியே சென்றோம்.
அந்த இடத்துக்கு நாங்கள்தான் மாப்பிள்ளை வீட்டு சார்பில் முதலில் செல்வோம் என்று தெரிந்தது. சென்னையிலிருந்து என் ஒன்றுவிட்ட மாமா அத்தை மட்டும் ஒன்றரை மணிக்கே வந்திருந்தனர்.
சமதா ரிசார்ட் என்னும் அந்த இடத்துக்கு சமர்த்தாக நாங்கள் சென்று சேர்ந்தபோது மணி மூன்றரை என்று ஞாபகம். சாப்பாட்டு வேளை தாண்டி இருந்தது.
எங்கள் வண்டியைப் பார்த்து தயாராக வெளியில் வந்த ஒரு குழு, வாசலுக்கு வந்து வரவேற்கத் தயாராக நின்றது.
நாதஸ்வரக்காரர் சட்டென எழுந்து தோளில் இருந்த துண்டை எடுத்து உதறி, முகம், வாயைத் துடைத்து சீவாளியை எடுத்து வாயில் வைத்து "பீப் ப்பீ" என்று சோதித்துத் தயாரானார். மேளக்காரர் 'டும் டும்' என்று ஸ்ருதி பார்த்துக் கொண்டார். ஆங்காங்கே எங்கோ கவனமாய் இருந்த சிலரும், பேசிக்கொண்டிருந்த சிலரும் எங்கள் பக்கம் பார்த்து, அருகே வரத் தொடங்கினர். வாசலில் நின்ற பெண்மணி நாங்கள் மூவர் மட்டும் இறங்குவதைப் பார்த்து பீப்பீ டும்டும்மை கையமர்த்தியவர், என்னிடம் வந்தார்
"பன்றி.. பன்றி..." என்றார்.
என் முகமாறுதலை கவனித்து, 'கன்னடம் கொத்தா?" என்றார். நான் "தமிழும் இங்கிலீஷும் கொத்து.. தெலுங்கு கொஞ்சம் கொஞ்சம் கொத்து... கன்னடம் கொத்தில்லா" என்றேன்.
'மாப்பிள்ளை வண்டி எப்போது வரும்?' என்றார். 'அரைமணியில் வந்துவிடும்' என்றேன். 'சாப்பிடப் போகலாம்' என்று அழைத்துப் போனார்.
டிரைவரிடம் லக்கேஜை காரிலேயே வைத்து காரையும் ஓரமாக விட்டுவிட்டு எங்களுடன் வரும்படி அழைத்து விட்டு உள்ளே நடந்தோம். கர்நாடகா சாப்பாடு பற்றி ஒரு சிறு லெக்சர் தந்திருந்தார் திருப்பதி. எங்களுக்கும் தெரியும்தானே!
அப்போதும் மழை பெய்து கொண்டிருந்தது.
எனக்கு பசி இல்லை என்றாலும் பாஸ் நல்ல பசியில் இருந்தார்.
"சிலுசிலுவென குளிர் அடிக்குது அடிக்குது" என்று மனதுக்குள் பாடியபடி அந்தப் பெண்மணிகளின் பின்னே சாப்பிடும் இடம் நோக்கி நடந்தோம்.
=========================================================================================
சுஜாதா சுஜாதா.....
அவள் விகடன் பேட்டி. இப்போது இந்த வீடீயோவை நீக்கி விட்டார்கள். பல எழுத்தாளர்கள் உட்பட மிஸ்டர் பொதுஜனம் இதை கடுமையாக விமர்சனம் செய்திருந்ததுதான் காரணம். அவர்கள் கருத்திலிருந்து நான் மாறுபட்டிருந்தேன்! நம் கருத்தை யார் மதிக்கிறார்கள்!
பேசும்போது திருமதி சுஜாதா நெர்வஸாகத்தான் இருந்தார். விரல்கள் வளையலை வருட, நாற்காலியின் குமிழை அழுத்தித் தடவ என்று சிறு பதட்டத்துடனேயே காணப்பட்டார். அவர் சொல்லியதிலிருந்து சில பகுதிகள்.
"அதே மாதிரி அவர் ஜாதி வித்யாசம்லாம் பார்க்க மாட்டார். பொதுவா எஞ்சினியரிங் காலேஜ்லேருந்து டீப் ஸௌத்லேருந்து இன்ஜினியரிங் காலேஜ் பையன் ஒருத்தன் இன்டர்வியூவுக்கு வந்துருக்கான். அந்தப் பையனுக்கு இங்கிலிஷ் ஜாஸ்தி பேசத்தெரியாது . அந்தப் பையன் நல்லா படிச்சு நல்ல மார்க் வாங்கியிருக்கான். பர்ஸ்ட் க்ளாஸ்ல வாங்கியிருக்கா ன். பட் ஃப்ளுயன்ட்டா அவனுக்கு சப்ஜெக்ட்ல பேச வரலை. பட் சப்ஜெக்ட்ல ரொம்ப கெட்டிக்காரன். ரொம்ப வறுமையான சூழல்ல படிச்சு வந்த பையன் அவன். அப்ப வந்து உன் பேர் என்னன்னு கேட்கவும் பையன் சொல்லி இருக்கான். "Go on" அப்படீன்னு இவர் சொல்லவும் பையன் எழுந்துட்டான். Go onனா போயிட்டு வான்னு சொல்லிட்டார்னு நினச்சு எழுந்து போக ஆரம்பிச்சுட்டான். இவர் கூப்பிட்டார்..."ஏம்ப்பா எங்க எழுந்து போறே?" " நீங்கதான் Go onனு சொல்லிட்டீங்களே" ன்னு... "அப்படி இல்ல.. Go onனு சொன்னா மேற்கொண்டு சொல்லுன்னு அர்த்தம்" னு இவர் சொல்லி இருக்கார். பாவம் அவனுக்கு தெரியல.. உடனே அவர் கேள்வியெல்லாம் கேட்டா பதில் எல்லாம் கரெக்ட்டா சொன்னான். அப்ப பக்கத்துல இருந்தவர் சொன்னாரு, "இவருக்கு இங்கிலீஷே தெரியலியே. . இவரை எப்படி வேலைக்கு எடுக்கறது?" இவர் சொல்லிட்டார் "சப்ஜெக்ட் தெரிஞ்சா போறும்.. இங்கிலிஷ் அவசியமில்லே.. நாலு நாள் பேசினா அவனுக்கு எல்லாம் வந்துடும்" அந்த வோட்டிங் மெஷின் விஷயத்துல அந்தப் பையன் ஒரு இம்பார்ட்டண்ட் ஹெல்ப் பண்ணியிருக்கார்.இதுமாதிரி இவங்களை எல்லாம் என்கரேஜ் பண்ணனும்னு விருப்பப்படுவார்"
திருமதி சுஜாதா பேட்டி காண்பவர் பேசும்போதும் பதில் அளிக்கும்போதும் அவர் கை விரல்கள் அவர் கையில் உள்ள வளையலைத் திருகியபடியும், நாற்காலியின் குமிழ் போன்ற அமைப்பை வட்டமிட்டபடியும் இருந்தன. ஆறு ஆண்டுகளுக்குமுன் பிஹைண்ட்வுட் செயலிலும் பேட்டி கொடுத்திருக்கிறார்.
பெங்களுருவில் இருந்தபோது ஒரு நாள் இரவு ஏழு மணி சுமாருக்கு யாரோ கதவைத் தட்டுகிறார்கள் என்று கதவைத் திறந்தால் ஒரு காலேஜ் படிக்கும் இளைஞன் வந்தானாம். சுஜாதாவுடைய Fan என்று சொல்லிப் பேசிக்கொண்டிருந்தாநாம். இரவு நேரமாகி விட்டதாம். ஏற்கனவே வீடு அத்துவானக்காட்டில் இருப்பது போல தனியாக தள்ளி இருக்குமாம். அந் நேரத்துக்கு மேல் திரும்பிப் போக பஸ்ஸும் இல்லை என்றதும் இரவு தங்கி விட்டு காலை கிளம்பிப் போகச் சொன்னார்களாம். அவனுக்கு சாப்பாடு போட்டு, மகன்கள் இருந்த அறையில் படுக்க வைத்தார்களாம். காலை எழுந்ததும் காபி கொடுத்து 'என்ன பண்ணப்போறே' என்றதும், "ஸார்.. நான் என் ப்ரெண்ட்ஸ் கிட்ட ஒரு சேலஞ்ஜ் பண்ணிட்டு வந்தேன். இது மாதிரி சுஜாதா ஸார் வீட்டுல தங்கிட்டு அவர் கையெழுத்து போட்டு ஒரு புத்தகம் வாங்கி வருகிறேன் என்று சொல்லி விட்டு வந்திருக்கிறேன். ஸோ எனக்கு ஒரு புத்தகம் கையெழுத்து போட்டு கொடுங்க" ன்னு கேட்டானாம். சுஜாதா மறுத்து விட்டாராம்.அவன் உண்மையில் இவர் கதைகளை படித்ததுமில்லையாம். "நீ விருந்தாளியா வந்துட்டே.. உனக்கு சாப்பாடு போட்டு மரியாதை பண்ணினோம்... போயிட்டு வா" என்றாராம். அவன் போன பிறகு 'ஏன் அவனுக்கு ஒரு புத்தகம் கையெழுத்து போட்டு கொடுத்து அனுப்பி இருக்கலாமே என்று மனைவி கேட்டதற்கு, "இல்ல.. அவன் Faனா இல்லன்னா கூட பரவாயில்ல.. உண்மையைச் சொல்லி இருந்தா தந்திருப்பேன். அவன் பொய் சொன்னான், எனக்கு அது பிடிக்கல" என்றாராம். ராத்திரி யாரோ ஒரு தெரியாத பையன் நம் மகன்களோட தூங்கறானேன்னு பயமும் வரல்லையாம் திருமதி சுஜாதாவுக்கு. "வீட்டில எடுத்துண்டு போக ஒண்ணுமே கிடையாதே" என்று சிரிக்கிறார்.
சுஜாதா நேர்மையை எதிர்பார்ப்பதற்கு ஒரு உதாரணமும் சொல்கிறார். துப்பாக்கி வைத்த Gகார்டுடன் வரும் ஒரு மிகப்;பெரிய வி ஐ பி க்கு இவர் கன்சல்டன்ட்டாக இருந்தாராம். அவர் ஒரு முறை இவர் பிளாட்டுக்கிட்டு அருகில் இருந்த வீட்டைக் காட்டி "ரங்கராஜன்.. அந்த மூணு பெட்ரூம் பிளாட்யும் நான் வாங்கித் தந்து விடுகிறேன். வச்சுக்குங்க.. ஆறு பெட்ரூமாக இருக்கும்" என்றாராம். சுஜாதா ஒன்றும் சொல்லவில்லையாம். அவர் கிளம்பிப் போனதும் 'அவர்தான் வாங்கித் தர்றேங்கறாரே.. வாங்கலாமே' என்று கேட்டதற்கு, ' நம் உழைப்புக்கு காசு வாங்கினால் அது நேர்மை. நாம் உழைக்காததற்கு காசு வாங்கினால் நாம அவருக்கு அடிமை ஆகிவிடுவோம். உனக்கு எது வேண்டும்?' என்று கேட்டாராம்.
இந்தியன் பட ஷூட்டிங் பார்த்துக் கொண்டிருக்கும்போது ஒரு காட்சியில் மனிஷா கொய்ராலா நாய் ஒன்றை கையில் தூக்கிக் கொண்டு போகும் காட்சி வந்ததாம். அதில் எங்க நாயை யூஸ் பண்ணிக்கோங்க என்று திருமதி சுஜாதா இயக்குனர் சங்கரிடம் சொன்னாராம். அதுக்கென்ன என்று சொல்லி விட்டு இவர்கள் வீட்டு டாஷ்ஷெண்ட் நாயைதான் மனிஷா உள்ளே தூக்கிப் போனாராம்.
ஐஸ்வர்யா ராய் திரையில் அழகாய் தெரிகிறாரே தவிர, நேரில் அவ்வளவு அழகாயில்லை என்பது இவர் அபிப்ராயம். சொல்கிறார்.
சுஜாதா வாழ்க்கையை படமாக்கினால் யாரை சுஜாதாவாக போடலாம் என்கிற கேள்விக்கு, அது போர் அடிக்கும். நல்லாயிருக்காது என்கிறார். ஒண்ணுமே சுவாரஸ்யமே இருக்காது. காதல் அது இது எல்லாம் கிடையாது என்கிறார்.
எனக்கெல்லாம் போர் அடிச்சா ஏதாவது ஒரு சுஜாதா புத்தகம் எடுத்து படிச்சா அடுத்த ரெண்டு மணிநேரம் ப்ரெஷாயிடுவேன் என்கி றார் பேட்டியாளர்.
அவர் முடிக்கும் முன்னேயே "அது கற்பனை உலகம்: என்று இடை வெட்டுகிறார் திருமதி சுஜாதா. "அது கற்பனை உலகம் என்று மறுபடியும் வலியுறுத்துகிறார். உலகத்திலே வந்து ஒண்ணே ஒண்ணு... எழுத்து வேற, எழுத்தாளன் வேற... நடிப்பு வேற, நடிகன் வேற.. நடிப்புங்கறது அவனுக்கு தொழில். நடிகன்ங்கறவன் சாதாரண மனுஷன். வீட்டுக்கு போயிட்டா அவன் சாதாரண மனுஷன். அதே மாதிரிதான் அவரும். அவர் எழுத்துன்றது ஒரு மாதிரி எழுதிட்டு இருந்தாரு. அது அவருக்கு கைவந்த கலை. மனிதன்ங்கறது எல்லோர் வீட்டு லயும் அப்பா அம்மா இல்லையா... அந்த மாதிரிதான் அது.. அதனால சுவாரஸ்யம்னு சொல்றதுக்கு ஒண்ணுமே இல்ல..
சினிமா பற்றி பேசும்போது 'ஒரு படத்துக்கு 60 ஸீன் வரும். அவரோட இருந்ததால எனக்கு கூடத்தான் தெரியும். பாட்டு, டான்ஸ்னு எடுப்பாங்க. எந்திரன் படத்துக்கு 30 ஸீன்தான் இவர் எழுதினார். அப்புறம் ஆஸ்பத்திரி போயிட்டார். பாக்கி முப்பது ஸீன் அவங்கதான் எழுதிகிட்டாங்க."
கடைசியா ஆஸ்பத்திரிக்கு அவரை அனுப்பும்போதே எனக்கு ஏதோ பட்டது. அவரும் ஆஸ்பத்திரி போகமாட்டேன்னு சொன்னார். ஒருநாள் ஆஸ்பத்திரிலியிலிருந்து போன் பண்ணினாங்க.. 'சாப்பிடவே மாட்டேங்கறார்' னாங்க. நான் வர்றேன்னு சொல்லிட்டு அங்க போனேன். ஏன் சாப்பிடக் கூடாதான்னு கேட்டேன். எதுவுமே பிடிக்கலைன்னார். I lost interest in life ன்னார்.
=================================================================================================
தொலைந்த
உறவுகளை,
நட்புகளை,
மீட்டெடுக்குமா
தொலையாத,
நினைவுகள்?
கலைக்க மனமில்லாத
கனவுகள்! 2012
===========================================================================================
ராணிமுத்து நினைவிருக்கிறதா?
கதையாக வந்து..
அப்புறம் ராணிமுத்துவில் வெளிவந்தது. அப்போது இந்தக் கதை படித்திருக்கிறேன்.
=====================================================================================================
பொக்கிஷம் : பொக்கிஷம் : பொக்கிஷம் : பொக்கிஷம் :
சுலப வழி!
தயாரானதா, தெரியவில்லை.
அத்தையோ, பெரியம்மாவோ எங்கே போயிருப்பாங்க...
சுஜாதாவின் வித்தியாச எழுத்தும்,


அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.....
பதிலளிநீக்குபயணமும் படங்களும் நன்று. தொடரட்டும் பயணம்.
திருமதி சுஜாதா அவர்களின் காணொளி சில நிமிடங்கள் பார்த்தேன். முழுதும் பார்க்கத் தோன்றவில்லை.
துணுக்குகள் ரசித்தேன்.
வாங்க வெங்கட்..
நீக்குநான் திரு சுஜாதா மறைந்ததுமே அவர் திருமதி கொடுத்த பேட்டியும் பார்த்தேன். ஆறு வருடங்களுக்கு முன் கொடுத்த பெட்டியும் பார்த்தேன். இதுவும்!
நன்றி. தொடர்ந்து வாருங்கள்.
ஜிலேபி எழுத்து..சரஸ்வதி சபதம் யானை..பாயாசத்தில் முந்திரி..படங்களுடன் பகிர்ந்த விதம் அருமை..கான்ஸ்டபிள் கந்தசாமி அவர் எழுதியது தான் ஆபாச ஃபேமஸ் .. வாழ்த்துக்களுடன்
பதிலளிநீக்குவாங்க ரமணி ஸார்... ராசித்ததற்கு நன்றி.
நீக்குகான்ஸ்டபிள் கந்தசாமி "தலைவரி"ன் இலக்கியத்தொண்டு அல்ல. அது வேறு தலைப்பு. இது வேறு கதை.
// ராசித்ததற்கு நன்றி. //
நீக்கு* ரசித்ததற்கு நன்றி.
பயணக்கட்டுரையும் படங்களும் நன்று. too much close-up settings. போனைக் காட்டிலும் p & s கமெரா படங்கள் எடுக்க சிறந்தது என்பது எனது அனுபவம்.
பதிலளிநீக்குகலைந்த கனவுகள் தானே
தொலைந்த நினைவுகளை தூண்டி
தொலைந்தாலும் மறக்க முடியாத
நட்புக்களை உறவுகளை
மீட்டெடுக்க ஏங்க வைக்கிறது
பொக்கிஷம் துணுக்குகள் பரவாயில்லை. மீட்டர் போட்டால் தான் மீட்டருக்கு மேல் கேட்க முடியும் என்பது இங்கு திருவனந்தபுரத்தில் தற்போது உள்ளது தான். Demand rounded to next higher multiple of tens. suppose meter shows 44 rs payment will be 50 rs.
Jayakumar
வாங்க JKC ஸார்..
நீக்கு2006 ல் ஒரு கேமிரா வாங்கினேன். Cool Pix 13 MP. அப்புறம் மகனுக்காக 2016 என்று ஞாபகம். அப்போது ஒரு நிக்கான் கேமிரா வாங்கினேன். ஆனால் அதை எல்லாம் தூக்கிக் கொண்டு எங்கும் செல்வதில்லை. அவை சரியான வொர்கிங் கண்டிஷனிலும் இல்லை. தன் ஃபோனே கைக்குதவி என்று எடுத்துக் கொண்டிருக்கிறேன்.
சில மலர்களை க்ளோசப்பில் எடுத்தால் அதன் விசேஷம் புரியும் என்று அவற்றை க்ளோசப்பில் எடுத்தேன்.
கவிதையில் ஆறுதல்?
44 ரூபாயை 50 ரூபாயாக்குவது ரொம்ப ரொம்ப பரவாயில்லை. இங்கே ஐம்பதிலிருந்து நூறு ரூபாய் வரை அதிகம் கேட்கிறார்களே...
பயண அனுபவங்கள் அருமை! சமதா என்பதை சமந்தா என்று படித்ஹு விட்டேன்.. :))
பதிலளிநீக்குராணிமுத்துவில் "வழவழப்பாக இருக்கும் முட்டை/மொட்டை" என்று பொது அறிவு போட்டி வரும் இல்லையா?
ஜோக்குகள் 'ஸோ ஸோ..'
வாங்க பானு அக்கா.. நான் கூட சமந்தா என்று அழைப்பிதழில் படித்தேன் என்று முகநூலில் குறிப்பிட்டிருந்தேன். ராணிமுத்து உள்ளடக்கத்தில் வரும் தொடர் பற்றி நினைவில்லை. ஜோக்ஸ் குங்குமம் உபயம்.
நீக்குஅதற்கப்புறம் 20 முதல் 25 நிமிட மலைப் பயணம். //
பதிலளிநீக்குபிரமாதமாக இருக்கும் ஸ்ரீராம். நான் போயிருக்கிறேன். ஒரு இடத்தில் குடியாத்தத்தில் இருந்து அதாவது போறப்ப என்றால் இடப்புறம் கொஞ்சம் தூரத்தில் உயரத்தில் ரயில் பாதை மலையில் ரயில் சென்றால் பார்ப்பது அவ்வளவு அழகாக இருக்கும்.
ரயிலிலும் இப்பகுதி அழகாக இருக்கும். ரயிலில் ஏசி அல்லாத கோச் என்றால் அப்போது பறித்த காய்கள் பழங்களுடன் அந்த ஊர் மக்கள் ஏறுவார்கள் நல்ல சல்லிசான விலையில் தோட்டத்து வகையறாக்கள் கிடைக்கும்.
கீதா
என்ன.. அங்கே ரயில் பாதை கூட இருக்கிறதா? நான் பார்க்கவில்லையே... வாங்க கீதா. எனக்குத் தெரிந்து அங்கு ரயில் பாதை இல்லை. நீங்கள் சொல்லும் இடம் வேறு போல...
நீக்குஇயற்கை மிக ரம்மியமாக இருக்கும். இப்பவும் இருக்கு என்று உங்கள் பயணம் சொல்கிறது.
பதிலளிநீக்குபடங்கள் சூப்பரா இருக்கு ஸ்ரீராம். அந்த வயலட் நீட்ட பூ பார்க்கறப்ப மார்ட்டினியா போல இருக்கு.
அந்த வெள்ளைப் பூ ஏஞ்சல் ட்ரம்பட் என்று நினைக்கிறேன்
கீதா
an
ஆமாம் கீதா... மிகவும் ரசிக்க வைத்த காலநிலை.
நீக்குஅந்த வயலட் பூவை வளைத்து வளைத்து போட்டோ எடுத்திருந்தேன்! இரண்டு மூன்றுதான் இங்கே பகிர்ந்திருக்கிறேன்! பெயரெல்லாம் தெரியாது. முகநூலில் பொட்டானிகள் குடும்பம், பெயர் எல்லாம் யாரோ சொல்லி இருந்தார்கள்.
அந்த இன்னொரு செடியின் இலைகள் தூங்கி கொண்டிருந்தன. கிட்டத்தட்ட காலை 8 மணி. சூரியன் இன்னும் வராததால் விடியவில்லை என்று நினைத்து விட்டன போலும்!
நீக்குபனிப்புகை எரிமலை!
பதிலளிநீக்குஅழகா இருக்கு ஆனா நடுல அந்த சாமான் எல்லாம் இல்லைனா நல்லாருக்கும்
ஓ பாபா மலைன்னு வந்திருக்கா. புதுசு முன்ன இருந்தது மலை இப்ப கோவில் வந்திருக்கு போல
நீங்க சில மலை உச்சியில் ஏதாச்சும் சின்ன தா கோவில் இருப்பதையும் பார்த்திருப்பீங்க. ரயிலில் வரப்ப அப்படிப் பார்க்க முடியும். இடப்பக்கம். இது கொஞ்சம் மக்கள் புழங்கும் கோவில் என்று தெரிந்தது. வலப்பக்கமும் பார்க்கலாம்.
கீதா
நானும் அப்படி எல்லாம் பார்த்திருக்கேன். இது புதுசு. பாபா பக்தர்கள் பூரித்துப் போவார்கள்.
நீக்குஇப்படியான காலை நிலையில் சென்றால் நிச்சயமாக ரம்மியமான பயணம். வெயில் காலத்தில் சென்றாலும் கூட இந்த வழி நன்றாக இருக்கும்.
பதிலளிநீக்குகீதா
ஆமாம் கீதா. ரொம்பவே ரசிக்க வைத்தது.
நீக்குசமத்தா சமதாவுக்குப் போய் ரீச் ஆகிட்டீங்க!!
பதிலளிநீக்குமுதலில் நீங்க சொன்னப்ப எனக்கும் சமந்தான்னுதான் டக்குனு வந்துச்சு.
கீதா
:-))
நீக்குஅவங்க பன்னி பன்னி - வருக வருக ன்னு சொல்லியிருக்காங்க!!!!!!!!
பதிலளிநீக்குவெல்கம் வெல்கம்னு சொல்லியிருக்கலாம். இல்லைனா ஸ்வாகதம்னு சொல்லியிருக்கலாம்!!
இப்படித்தான் நம்ம ஒவ்வொரு மாநில மொழியிலும் வரும் சொற்களுக்கு மற்ற மொழியில் கன்னா பின்னான்னு அர்த்தம்!
கீதா
அர்த்தம் தெரியும்தானே. சும்மா தமாஷுக்குதான்..
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குவாங்க முருகா... வணக்கம்.
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாங்க கோமதி அக்கா... வணக்கம்.
நீக்குபயணவிவரமும், பாதையில் எடுத்த படங்களும் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குவழியில் கண்ட பாபா மலை, கண்ணன் கோயில் விமானம், சிவன் கோயில் ஆர்ச், ஏதோ சந்நியாசி இருக்கும் படங்கள், மற்றும்
பனிபுகை வருவது எரிமலை போல் காட்சி அளிக்கும் மலை படங்கல் நன்றாக இருக்கிறது.
நன்றி கோமதி அக்கா.
நீக்குதிருமதி சுஜாதா பேட்டி கேட்டு இருக்கிறேன், படித்து இருக்கிறேன்.
பதிலளிநீக்குகலைக்க மனமில்லாத கனவுகள் கவிதை நன்றாக இருக்கிறது.
ராணி முத்துவில் வந்த போது நானும் படித்து இருக்கிறேன், கான்ஸ்டபிள் கந்தசாமி ஆனால் நினைவில் இல்லை கதை.
பொக்கிஷ பகிர்வுகள் நன்றாக இருக்கிறது.
நன்றி கோமதி அக்கா.
நீக்குபாருங்க ஸ்ரீராம் மாப்பிள்ளை சம்பந்தி வந்திட்டாங்கன்னு நாதஸ்வரம் ரெடியாக, உங்களைப் பார்த்ததும் நாதஸ்வரத்தை கையமர்த்திட்டாங்க!!
பதிலளிநீக்குபொதுவா மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வர வர அப்பப்ப நாதஸ்வரம் ஒலிக்கும் இல்லையோ?
கீதா
அதானே... ஏன் அவர்களை அமைதியாக்கி விட்டார் அந்த சம்பந்தி?
நீக்குஅடுத்த வாரம் என்ன மெனு என்று வருமா? ஸ்ரீராம்?
பதிலளிநீக்குசுஜாதா சுஜாதா பேட்டியை நீங்க சொல்லிருக்காப்ல முன்னரும், நடுவிலும் சமீபத்திலுமாகப் பார்த்தேன்.
அவர்கள் கருத்திலிருந்து நான் மாறுபட்டிருந்தேன்! நம் கருத்தை யார் மதிக்கிறார்கள்!//
ஹைஃபைவ்! ஸ்ரீராம்.
கீதா
மெனு என்ன மெனு.. ஞாபகபபடுத்திப் பார்க்கிறேன்! அடுத்த வாரம் ம்ம்ம்ம்..முடிச்சுடலாமா?
நீக்குபாருங்க, எழுத்தாளர் சுஜாதாவின் அழகான மனசு!!! நானும் பேட்டியைக் கேட்டிருக்கிறேன்.
பதிலளிநீக்குஅவங்களை தனிப்பட்ட கேள்வி கேட்டா, அவங்க உண்மையைத்தானே சொல்லுவாங்க....ஏன் இங்கயே கூட நம்ம ஜெ கே அண்ணா, நெல்லை, ஸ்ரீராம் எல்லாருடைய பாஸ்களையும் பேட்டி எடுத்தா.....பல ரகசியங்கள் வெளியில் வரலாம் ஹாஹாஹாஹா!!!!!
இது எல்லார் வீட்டிலும் நடக்கும் ஒன்றுதான். சுஜாதா பிரபலம். எனவே அதைப் பற்றி எல்லாரும் போஸ்ட் மார்ட்டம் செய்யறாங்க அவ்வளவுதான். எழுத்தாளரை எழுத்தாளராகவும், குடும்பத்தலைவன் என்றும் பிரித்துப் பார்த்துவிட்டால் எந்த ஒரு வித்தியாசமுமோ இல்லை கமென்டோ வரப் போவதில்லை. வீட்டுக்கு வீடு வாசப்படி. இதை விமர்சிக்கும் ஆண்களுமே கூட, அவங்க மனைவிகளைப் பேட்டி எடுத்தால்?
எனவே இதை ஒரு மனைவி தன் உணர்வுகளை வெளிப்படையாகச் சொல்லியிருக்காங்க. பார்க்கப் போனால் அவங்களுக்கும் அவங்க கணவன் சுஜாதா மேல் நல்ல மரியாதை உண்டு. பல இடங்களில் அவருடைய நல்ல குணங்களையும் சொல்லியிருக்காங்க இதோ இப்போது சொன்னது போல். சுஜாதாவும் அதைப் பகிர்ந்து கொண்டதால்தானே இவங்களுக்கும் தெரிந்திருக்கு.
எனவே நாம் அவங்க பேட்டியை ஒரு detached (பாருங்க கீதை எங்கல்லாம் உதவுதுன்னு!!!!) கோணத்தில் பார்க்க வேண்டும்
கீதா
உண்மை. அவர் மறைந்தததால் இவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டு மனநல மறுத்தவுரைப் பார்த்ததையும் அவரே சொல்லி இருக்கிறார். அந்த மருத்துவரையும் உங்களுக்கும் தெரியும்.
நீக்குஉண்மை. அவர் மறைந்தததால் இவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டு மனநல மருத்துவரைப் பார்த்ததையும் அவரே சொல்லி இருக்கிறார். அந்த மருத்துவரையும் உங்களுக்கும் தெரியும்.
நீக்குஆமாம் ஸ்ரீராம் அவங்க சொல்லியிருக்காங்க து ரொம்ப வருஷம் முன்னரெ வந்துவிட்டது. பாசமும் அக்கறையும் இருந்ததால்தானே அவங்களுக்கு அப்படி நேர்ந்திருக்கு இல்லையா? அவங்க தலைமுறை நம் தலைமுறை வரை கூடவே அந்த அக்கறைக்கு நடுவிலும் கருத்துவேறுபாடுகளோடுதானே வாழ்க்கையை ஓட்டுகிறோம்.
நீக்குஆமாம் அந்த மருத்துவரை எனக்கும் தெரியும்!
கீதா
(Y)
நீக்குகீதா க்கா..மனைவியைக் கேட்டாலும் என்னைக் கேட்டாலும் உண்மைதான் பதிலாக வரும். ஆனால் அவங்க அவங்க பார்வை, எடுத்துக்கொள்ளும் விதம் வேறு என்பதால் வித்தியாசங்கள் இருக்கலாம்
நீக்குவாங்க நெல்லை... இப்போதைய எந்த எழுத்தாளருக்கும் அவர்கள் கருத்தைப் படித்தபோது, தன்னைப்பற்றி தன் மனைவியின் கருத்தை அறிய பயமாக இருக்கும் என்று தோன்றியது!
நீக்கு//"இல்ல.. அவன் Faனா இல்லன்னா கூட பரவாயில்ல.. உண்மையைச் சொல்லி இருந்தா தந்திருப்பேன். அவன் பொய் சொன்னான், எனக்கு அது பிடிக்கல" என்றாராம். //
பதிலளிநீக்குvery authentic!!!! எனக்கு எழுத்தாளர் சுஜாதாவிடம் பிடித்ததே இதுதான். அவர் அவராக இருப்பது. திருமதி சுஜாதா அவங்களும் இதைப் பல இடங்களில் சொல்லியிருக்காங்க.
என் தூரத்துக் கஸின் கால்நடை மருத்துவர் அவர்கள் வீட்டு செல்லத்துக்கும் அவன் தான் மருத்துவர். அவன் சொல்வான், ரொம்ப எளிமையான, பந்தா இல்லாத ஒரு குடும்பம், சுஜாதாவும் அப்படியே. யதார்த்தமாக அன்பாகவும் இருப்பாராம். நகைச்சுவையாகவும் பேசுவார் என்று சொல்லியிருக்கிறான். என்னைக் கூப்பிட்டான் ஆனால் எனக்கு என்னவோ போகக் கூச்சம் நமக்கென்ன தெரியும்? பேச என்று
ஆனால் பின்னர், நான் இயற்கை வலியது என்ற கதையை அப்பவே எழுதத் தொடங்கிய போது அவரிடம் கேட்டிருக்கலாமோ அதைச் சொல்லி என்று நினைத்தேன் அவர் மறைந்த பிறகு.
கீதா
அடடா.. ஒரு நல்ல வாய்ப்பை விட்டு விட்டீர்களே என்று சொல்லத்தோன்றினாலும், உங்கள் இடத்தில் நான் இருந்திருந்தால் நானும் இப்படிதான் செய்திருப்பேன்!
நீக்கு' நம் உழைப்புக்கு காசு வாங்கினால் அது நேர்மை. நாம் உழைக்காததற்கு காசு வாங்கினால் நாம அவருக்கு அடிமை ஆகிவிடுவோம். உனக்கு எது வேண்டும்?' என்று கேட்டாராம்.//
பதிலளிநீக்குயெஸ் யெஸ்!!!!!! நம்ம தலைவர் தலைவர்தாங்க! இன்னும் நிறைய சொல்லியிருக்கிறார் திருமதி சுஜாதா.
அவங்க வீட்டு செல்லம் டாஷ்ஷென்ட் ஆமாம்
ஒண்ணுமே சுவாரஸ்யமே இருக்காது. காதல் அது இது எல்லாம் கிடையாது என்கிறார்.//
நான் இதைக் கேட்டு சிரித்தே விட்டேன்...பேட்டி பார்த்துக் கேட்டிக் கொண்டிருந்தப்ப.
இதற்குத் திருமதி சுஜாதா அவர்களின் பதில் எனக்கு ரொம்பப் பிடித்தது. சமூகம் உயர்த்தி வைப்பது வேறு. வீட்டு மனிதர்களுக்கு வேறு.
ஒரு விளம்பரப் படம் நடிச்சிருக்காங்க. அது பட்டு? சரியாக நினைவில்லை.
எந்திரன் படத்துக்கு 30 ஸீன்தான் இவர் எழுதினார். அப்புறம் ஆஸ்பத்திரி போயிட்டார். பாக்கி முப்பது ஸீன் அவங்கதான் எழுதிகிட்டாங்க."//
அதான் படமே அப்புறம் வேற மாதிரி ஆகிடுச்சோ?
//'சாப்பிடவே மாட்டேங்கறார்' னாங்க. நான் வர்றேன்னு சொல்லிட்டு அங்க போனேன். ஏன் சாப்பிடக் கூடாதான்னு கேட்டேன். எதுவுமே பிடிக்கலைன்னார். I lost interest in life ன்னார்.//
இது பல இடங்களிலும் வாசித்து கேட்டிருப்போம்,
கீதா
ஆம். இதில் அவர் எங்கு தன் கணவரை இறக்கினார் என்பது புரிய மாட்டேன் என்கிறது. காலச்சக்கரம் நரசிம்மா ஸார், ராஜேஷ்குமார் உள்ளிட்ட பிரபலங்கள் கூட அப்படிதான் சொல்லி இருந்தார்கள். எனவே அந்த வீடியோவை நீக்கியே விட்டார்கள்.
நீக்குஇங்கு ஒரு கருத்து கொடுத்திருந்தேனே, வரலையோ? இல்லை நான் வெளியிடாமல் துளசியின் அடுத்த வாய்ஸை கேட்கும் அவசரத்தில் போய்விட்டேனா?
நீக்குகீதா
Spam ல் கூட ஒன்றும் இல்லையே...
நீக்குஅழகான கவிதை ஸ்ரீராம்....ரசித்தேன். சரியான சமயத்தில் கிட்டி கேட்டோ!!?
பதிலளிநீக்குகீதா
சமயம் என்னன்னு அப்புறம் தெரிஞ்சுக்கறேன்! நன்றி.
நீக்குபயணக் கட்டுரை மிக நன்றாக இருக்கிறது. தொடர்ச்சி என்பதும் தெரிந்தது.
பதிலளிநீக்குஜிலேபி எழுத்துகள் ஆம் தெலுங்கு கன்னடம் மொழி எழுத்துகள் அப்படித்தானே இல்லையா?
பன்றி பன்றி - இதை வாசித்ததும் சிரித்தே விட்டேன். வாருங்கள் என்றுதானே பொருள் இல்லையா? உங்கள் மாறியது என்பதைப் பார்த்ததும் என் சிரிப்பு கூடியது.
(ஸ்ரீராம் துளசி இதைச் சொல்லறப்ப சிரிப்பு அடக்க முடியாமல் சிரித்துக் கொண்டு சொன்னார்!!)
துளசிதரன்
பன்றி, பன்னி என்றால் நமக்கும் அர்த்தம் தெரியும்னாலும் சாதாரணமாகவே நல்ல உடை அணிந்த பெண்கள் நடுவே சட்டென இறங்கும்போது நமக்கு நம் உருவம் பற்றிய எண்ணம் வருவது இயற்கை. சட்டென அவர் அப்படி கூறியதும் முகம் மாறாமல் என்ன செய்யும்!!!!!
நீக்குஇப்பகுதியை சுவாரசியமாக எழுதியிருக்கிறீர்கள்.
நீக்குதுளசிதரன்
நன்றி துளஸிஜி. JKC போனவாரம் போர் அடிக்கிறது என்று சொல்லி இருந்தார்!
நீக்குதிருமதி சுஜாதா பேட்டி பலதும் பார்த்திருக்கிறேன். எழுத்து/எழுத்தாளர் வேறு ஒரு தந்தையாக, கணவனாக, மகனாக இருப்பது வேறு என்பதை திருமதி சுஜாதா அவர்கள் அழகாகச் சொல்லியிருக்கிறார் அவர் மனைவி அவருக்குக் கணவர் என்ற முறையில் அவரோடு வாழ்ந்த அவருக்குத்தானே தெரியும். அவருடைய கருத்துகளைச் சொல்லியிருக்கிறார். எந்தத் தயக்கமும் இல்லாமல் தைரியமாக வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார். அதனால்தான் சினிமா எடுத்தால் சரியாக வராது என்று சொல்லியிருக்கிறார். அப்படிச் சொல்லியதிலிருந்து தெரிவது இவருக்கும் சினிமா பற்றி நன்றாகத் தெரிந்திருக்கிறது என்பது.
பதிலளிநீக்குபல விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது பேட்டிகளில். உதாரணத்திற்கு, உலக அழகி என்று பட்டம் பெற்ற ஐஸ்வரியா ராயைப் பற்றிச் சொன்னது. தைரியமான கருத்து.
துளசிதரன்
ரொம்ப நேர்மையான அப்பாவியான பேட்டியாக இருந்தது அது. நன்றி துளஸிஜி.
நீக்குராணி முத்து நினைவிருக்கிறது, ஸ்ரீராம் ஆன்ஆல் இந்தக் கதை எல்லாம் வாசிச்சது இல்லையே. நெட்டில் கிடைத்தால் பார்க்கலாம்
பதிலளிநீக்குகீதா
இந்தப் பகிர்வு அந்தக் கதைக்காக இல்லை கீதா.. ராணிமுத்து என்கிற அந்த புத்தக வடிவுக்காக. மாத இதழ்களுக்கு எல்லாம் முன்னோடி.
நீக்குபம்பாய் விஷயம் செம சுவாரசியம். எப்படிக் கரெக்ட்டா தன் கூடையில் ஏறுவது எல்லாம் மோப்பம்தான்!!! அப்ப இப்படி மேய விட இடம் இருந்திருக்கும் போல இப்ப இருக்குமா?
பதிலளிநீக்குகீதா
பழக்கம்தான் காரணம் இல்லையா? வண்டியோட்டி தூங்கி விட்டாலும் மார்க்கெட்டிலிருந்து வீட்டுக்கு மாடுகள் சரியாக வண்டியை இழுத்து வந்து விடுவது போல!
நீக்குகரிசல் வார்த்தைகள் வந்திருக்கே ஸ்ரீராம் அப்படித்தானே செய்தி சொல்கிறது? வெளியிட்டிருப்பதாக அந்த சாதனா இதழில்.
பதிலளிநீக்குகீதா
சொல்லப்பட்டிருக்கிறது. வெளி வந்ததா என்றுதான் சந்தேகமாக இருக்கிறது!
நீக்குஅத்தை - அத்தை நீலகேசி அம்மன் கோவிலுக்கும் (நாரோயில்ல உண்டு இப்படி), பெரியம்மா - பெரிய பாளையத்தம்மன் கோவிலுக்கும்!!
பதிலளிநீக்குகீதா
:))
நீக்குராஜாஜி - நல்ல ஒப்புமை
பதிலளிநீக்குசுஜாதாவின் வித்தியாசமான எழுத்து? கொஞ்சம் வாசித்தேன் ஆர்வம் வருதே என்ன கதை இது? நெட்டில் கிடைக்குதான்னு பார்க்கத்தான்.
கீதா
நிர்வாண நகரம்.
நீக்குபடிக்கிறாங்க - நல்ல வார்த்தை விளையாடல் ஜோக்!
பதிலளிநீக்குமீட்டர்!!! அப்படிப் போடுங்க! நல்ல காமன்சென்ஸ்!
தலைவர் விவரமான ஆளுதான்! தன் நிலையைத் தானே அறிந்திருக்கிறாரே!
கீதா
:-))
நீக்குபன்றி, பன்றி ரசித்தேன். தெலுங்கும் கன்னடமும் ஒறுக்கொன்று உறவு தானே. அப்போக் கூட உங்களுக்குப் புரியலையா? பாயாசத்தில் முந்திரியைத் தேடினேன். கிடைக்கலையே?
பதிலளிநீக்குதெரியும். சும்மா தமாஷ்!
நீக்கு// பாயாசத்தில் முந்திரியைத் தேடினேன். கிடைக்கலையே? //
அங்கே மோர்சாதம் கூட இனிப்புதான்!
இந்தப் பயணம் ஆரம்பம் படிக்கலை என்பதால் முதல்லே ஒண்ணும் புரியலை. பின்னர் கல்யாணத்துக்குப் போறீங்க எனப் புரிந்து கொண்டேன்.
பதிலளிநீக்குமறைந்த என் அம்மாவின் (மறைந்த) தங்கையின் பேரன் கல்யாணம் அர்ப்பனஹள்ளியில். பெங்களூரு தாண்டி முன்னூற்றுப்பத்து கிலோமீட்டர்!
நீக்குநல்லவேளை ஸ்ரீராம், மறைந்த என் தாத்தாவின் முதல் பெண்ணின் தங்கையின் பேரனின் என்றெல்லாம் எழுதலை. அம்மா வழிச் சித்தி பேரன் என்று எழுதக்கூடாதோ
நீக்கு///ஸ்ரீராம்.4/9/25 12:42 PM
நீக்குமறைந்த என் அம்மாவின் (மறைந்த) தங்கையின் பேரன் கல்யாணம் அர்ப்பனஹள்ளியில். பெங்களூரு தாண்டி முன்னூற்றுப்பத்து கிலோமீட்டர்//
ஓ இப்போது பரிகிறது யாருடைய திருமணம் என.
நானும் பார்த்ததும் மேலே நெ த சொன்னதையேதான் நினைத்தேன்.. அம்மா, அப்பா பற்றிச் சொல்லும்போது மறைந்த எனச் சொல்ல மாட்டோமெல்லோ ஶ்ரீராம்..
நெல்லை, அதிரா...
நீக்குஹிஹிஹி... நான் இன்னும் கொஞ்சம் நீட்ட முடியுமா என்று பார்த்தேன்!
கவித்துவமான தலைப்பு
பதிலளிநீக்கு__/\__
நீக்குபதிவு சிறப்பு..
பதிலளிநீக்குநன்றி செல்வாண்ணா
நீக்குஇந்த மாதிரியான ஜெ... யின் ஓவியங்கள் மலிந்து கிடந்ததும் ஒரு காலம்..
பதிலளிநீக்குஆம். மருமகளிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். புத்தகங்கள் படிக்காமல் வளர்ந்தவர்கள் அவர்கள்! ஜெ என்றால் யாரென்று தெரியவில்லை.
நீக்குசில வீடுகளில் ஜெ... யின் ஓவிய அட்டைப் படத்தை ரசித்து விட்டு கிழித்து விடுவார்கள்..
பதிலளிநீக்குயோக்கிய சிகாமணிகள்
பெண்களின் T Shirt ல் அவர் அமைக்கும் வாசகங்கள் கவனிக்கப்படும்!!
நீக்குவரைமுறையை மீறியதாக அவர் வரைவுகளும் வளைவுகளும் இருக்கும்..
பதிலளிநீக்குவரைமுறையை யார் தீர்மானிப்பது? வரைமுறையை அவரவர் வயதுதான் தீர்மானிக்கும் என்பது என் அபிப்ராயம்
நீக்குஜவர்லாலின் கருத்து படி சொல்ல வேண்டும் என்றால், ஆனாலும் அனாட்டமி தெரிந்தவர்,
நீக்குஇப்போதும் இங்கு மழை பெய்துகொண்டிருக்கிறது...
பதிலளிநீக்குஹா ஹா ஹா உங்கட தலைப்பு நல்லா இருக்கு ஶ்ரீராம்... தொடராக எழுதுறீங்கள்போல தெரியுது. மகனின் கல்யாணத் தொடரோ புரியவில்லை..
படங்கள் மிக அழகாக இருக்கு... ரோட்டுத் திருத்தும் பாதையில் பஸ் போகிறது பார்க்கப் பயமாக இருக்குது.
நன்றி அதிரா.. அந்த முதல் கொண்டை ஊசி வளைவு மட்டுமே நான் அமர்ந்திருந்த பக்கம் வந்தது. மற்ற எல்லா வளைவுகளும் இடது பக்கம் வந்ததால் படம் எடுக்க முடியவில்லை.
நீக்குபன்ரி... இதை பன்றி னு எழுதலாமோ ஹா ஹா ஹா
பதிலளிநீக்குயூ மீன் பிக்??? நெ தமிழன்? ஹா ஹா ஹா அது பன்றி எனத்தான் வருமாக்கும்:)
நீக்குஅப்படி எழுதினால்தானே எஃபெக்ட் வரும்?! படிக்க ரசனை!
நீக்குஒரு படைப்பாளியை நாம் புரிந்துகொள்வது வேறு அவருடைய மனைவியின் பிம்பம் வேறு. இதை நாம் குழப்பிக்கொள்ளக் கூடாது. சுஜாதாவின் மனைவி எதையும் தவறாகச் சொல்லவில்லை
பதிலளிநீக்குஎனக்கு என்று வரும்போது என் நியாயங்கள் வேறு. பிறருக்கு அல்லது பொதுவெளி ஆலோசனை வேறு
//எனக்கு என்று வரும்போது என் நியாயங்கள் வேறு. பிறருக்கு அல்லது பொதுவெளி ஆலோசனை வேறு///
நீக்குஇந்தக் கருத்தை படு வன்மையாக ஆமோதிக்கிறேன் ஹா ஹா ஹா... உண்மையான கருத்து.
அடுத்தவருக்கு ஒரு பிரச்சனை வரும்போது, நிறைய ஆறுதல் சொல்கிறோம் ஆலோசனை சொல்கிறோம்... ஏன் சிலசமயம் திட்டுவதும் உண்டு.."இதெல்லாம் ஒரு விசயமே இல்லை, பேசாமல் உன் வேலையைப் பார்" என... ஆனா அதே பிரச்சனை நமக்கு வரும்போது, எந்தக் கருத்தையுமே மனம் ஏற்காது... அதிலயே நின்று சுழலும் ஹா ஹா ஹா என்னா டிசைனோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))
சுஜாதாவை பார்க்க வேண்டும் என்று எனக்கு ஆவல் இருந்தாலும் தயக்கமும் இருந்தது. ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். அவர் மறைந்தபோது ஒருகணம் சென்று பார்க்கலாமா என்று எனக்கும் என் நண்பனுக்கும் - அவனும் பயங்கர ரசிகன் - தோன்றியது. ஆனால் இருவருமே வேண்டாம் என்று முடிவெடுத்தோம். மனதில் இருக்கும் பிம்பமே போதும் என்று முடிவெடுத்தோம்.
நீக்கு//ஆனா அதே பிரச்சனை நமக்கு வரும்போது, எந்தக் கருத்தையுமே மனம் ஏற்காது... //
நீக்குநான் பதினோராம் வகுப்பு படிக்கும்போது 'தென்றல்' என்று ஒரு கையெழுத்து பத்திரிகை நடத்தினேன். நூலகத்தில் போட்டு விடுவேன். சொல்லி இருக்கிறேன்.
அதில் நீங்கள் சொல்லி இருக்கும் இந்தக் கருத்தில் ஒரு கதை அப்போது எழுதி இருந்தேன்.
ஊரெல்லாம்போய் நாத்திகப் பிரச்சாரம் செய்யும் சத்யமூர்த்தி. அவன் தாய் மறையும்போது அவனுக்கு ஆத்மா சட்டைதான் மாற்றுகிறது என்று, தான் பொதுக் கூட்டங்களில் சாதாரணமாய் பேசியது தன்னாலேயே ஏற்றுக் கொள்ள முடியவில்லை, அப்படி நினைக்க முடியவேயில்லை என்று எழுதி இருந்தேன்.
பயங்கர பாராட்டு...
என்னிடமிருந்துதான்! இரண்டு மூன்று பெயர்களில் வாசகர் கடிதம் எழுதிச் சேர்த்தேன்.
எனக்கும் ஶ்ரீராம் கண்ணதாசன் அங்கிளைப் பார்க்கோணும் பேசோணும் என ஆசை ஆனா இந்த ஆசை ஆரம்பிச்சு ஓரிரு வருடங்களிலேயே அவர் இறந்துவிட்டார், இப்பவும் நினைப்பேன், அவர் உயிருடன் இருந்தால் எப்பாடுபட்டாவது போய்ச் சந்தித்திருப்பேன் என...
நீக்குஉண்மைதான் இறந்தபின் பார்க்காமல் இருந்தால் நம் மனதில் , உயிருடன் இருக்கும்போதிருந்த நினைவே இருக்கும்...
எனக்கும் சொந்த பந்தத்தில்கூட இப்படி பார்க்காமல் இருந்தால் நல்லது என நினைப்பேன் ஆனா அது தவிர்க்க முடியாதே, வேறு விதத்தில் குறையாகிவிடும்.
ஓ... தென்றல் பற்றி நீங்கள் சொன்னது என் கண்களில் பட்டதில்லை, இப்போதுதான் தெரிகிறது..
நீக்குசுஜாதா அவர்களின் வரலாறுபோல கதை படிக்க சுவாரஸ்யமாக இருக்கு. அந்தக்காலத்தில் வீட்டுக்கு வருவோரை உபசரித்து சாப்பாடு கொடுத்து இரவு தங்கவிட்டு அனுப்புவது எங்கள் வீட்டிலும் இருந்தது, ஆனா இப்போ என்றால் நினைச்சுப் பார்க்கவே பயமாக இருக்குது, நான் தனியே இருக்கும்போது , போன் பண்ணாமல் ஆராவது வந்து கதவைத் தட்டினால் திறக்க மாட்டேன்... அதிலும் பொழுதாகிட்டால் 200 வீதமும் திறக்கவே மாட்டேன் ஹா ஹா ஹா.
பதிலளிநீக்குமுன்பு நாங்கள் சின்னப்பிள்ளைகளாக இருந்தபோது, ஒரு தூரத்து உறவு அண்ணா ஒருவர் வீட்டை விட்டு ஓடி வந்திட்டார் என, பெற்றோர் தேடி வந்து, கண்டுபிடிச்சு, 2 நாட்கள் எங்கட வீட்டில வைத்திருக்கும்படி மிகவும் மன்றாடிக் கேட்டதால ஒரு றூமில் இருக்க விட்டார்கள், ஆனா இரவு நித்திரையானதும், அப்பா அம்மா அவரின் றூமை வெளிப்பக்கமாக பட்லொக் போட்டு லொக் பண்ணி விடுவார்கள், எனக்கது இப்பவும் நினைவிருக்கு ஹா ஹா ஹா
நான் அவர் கொடுத்த பேட்டியிலிருந்து என்னைக் கவர்ந்த சில இடங்கள் மட்டும் எடுத்துப் போட்டிருக்கிறேன்.
நீக்கு// ஆனா இரவு நித்திரையானதும், அப்பா அம்மா அவரின் றூமை வெளிப்பக்கமாக பட்லொக் போட்டு லொக் பண்ணி விடுவார்கள் //
மறுநாள் காலை அவர் ஒன்றும் கேட்க மாட்டாரா?
தற்கொலை செய்யும் எண்ணத்துடன் இருந்த இளைஞன் ஒருவன் அதற்கு முன் என்ன தோன்றியதோ, என்னைப் பார்த்துவிட்டுச் செல்லலாம் என்று வந்தான். அவன் இறுக்கமான முகத்தைப் பார்த்து, பேசி அவன் மனதை வெளிக்கொணர்ந்து விட்டேன். அப்புறம் அவன் வீட்டுக்கே செல்லும்படி சொன்னேன். அவனே என்னிடம் அப்படிதான் சொல்லிக் கிளம்பினான். அவன் அப்பாவுக்கு போன் செய்து சொன்னபோது நான் தப்பு செய்து விட்டேன் என்று பதறினார். வீட்டிலேயே பேசிக்கொண்டே நைசாக வைத்திருந்தால் அவரே வந்து அழைத்துச் சென்றிருப்பார் என்று சொன்னார். எனக்கு அவன்மேல் நம்பிக்கை இருந்தாலும் கொஞ்சம் பயமாகவும் இருந்ததது. ஆனால் பத்திரமாக வீடு போய் தந்தையை சட்டென கண்ணில் நீர் வழிய அணைத்துக் கொண்டான் என்று அப்புறம் அவன் அப்பா சொன்னார்.
அது விடிய வெள்ளன எழும்பித் திறந்துவிட்டிடுவினம் என நினைக்கிறேன்...
நீக்குநீங்கள் முன்பு சொன்னீங்களெல்லோ ஶ்ரீராம், உங்கள் நண்பர் ஒருவர் தற்கொலை பண்ணப்போகிறேன் எனச் சொல்ல, போய்ப் பண்ணு என நீங்க முசுப்பாத்திக்குச் சொல்ல, அவர் உண்மையிலேயே பண்ணிட்டார் என்பதுபோல... அப்படியும் ஒரு கதை இருக்கெல்லோ...??
///தொலைந்த
பதிலளிநீக்குஉறவுகளை,
நட்புகளை,
மீட்டெடுக்குமா
தொலையாத,
தொலைக்க முடியாத
நினைவுகள்?
கலைக்க மனமில்லாத
கனவுகள்! 2012///
மிக அருமையாக இருக்குது...உண்மைதானே, பல விசயங்கள் நல்லதும் இருக்கும் கெட்டதும் இருக்கும்... சே சே இதையெல்லாம் சுமக்காதே மறந்துவிடு என ஈசியாகச் சொல்ல முடியும், ஆனா அது சாகும்வரை நம் மனதில் எங்கோ ஒரு மூலையில் ஒட்டியிருக்கும், நீறு பூத்த நெருப்பாக.
உணர்ந்து, ரசித்ததற்கு நன்றி அதிரா.
நீக்குபயணக் குறிப்புகளும் படங்களும் அருமை. தொகுப்பு நன்று.
பதிலளிநீக்குநன்றி ராமலக்ஷ்மி.
நீக்குதுணுக்குகள் நகைச்சுவை அனைத்தும் ரசிக்கக்கூடியதாக இருக்குது.
பதிலளிநீக்குநன்றி. துணுக்குகள் சிலருக்கு ரசிக்கிறது, சிலருக்கு சுமார் என்று தோன்றுகிறது! ரசித்ததற்கு நன்றி.
நீக்குஉண்மையில் இந்த பழைய ஜோக்ஸ் எல்லாம் சுமாரானவைதான். போன வாரம் நான் வெளியிட்டிருந்த தண்டவாளம் ஜோக் ரசிக்கத்தக்க ஒன்று.
போய்ப் பார்த்தேன் தண்டவாள ஜோக்கை:)
நீக்குஇதேபோல ஒரு ஜோக் அறிஞ்சிருப்பீங்கள்...
புதிதாக திருமணமான ஒரு தோழியிடம், தோழியின் நண்பி:
எப்படி இருந்தது உன் முதலிரவு? எனக் கேட்க,
அதுக்கு தோழி சொன்ன பதில்:
அதை ஏன் கேட்கிறாய், நான் பாலை வைத்துவிட்டு அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க, குனிந்து என்னை தூக்கினார், அப்போ அவர் பொக்கெட்டில் இருந்து ஒரு 2 ரூபாக் குற்றி கீழே விழுந்து உருண்டோடியது, அதைத் தேடித் தேடி கடசியில் விடிஞ்சபின்னர் தான் கண்டெடுத்தார்.. என ஹா ஹா ஹா...
பயணமும் படங்களும் நன்றாக இருக்கின்றன.
பதிலளிநீக்குராணிமுத்து படிக்கும் காலத்தில் படித்தது.
திருமதி. சுஜாத்தாவின் பேட்டி கண்டோம்.
ஜோக்ஸ் சுமார்.
நன்றி மாதேவி.
நீக்குபயணத்தில் எடுத்த படங்கள் மிக நன்றாக இருக்கின்றன. குறிப்பாக அந்தப் பூ படங்கள்.
பதிலளிநீக்குஓ கல்யாணம் நடந்த இடம் வனப்பகுதியா ரெசார்ட் என்று சொல்லியிருக்கிறீர்களே.
துணுக்குகளில் கோழி பற்றிய செய்தி ஆச்சரியம். ஆனால் பழகிவிடும் என்று நினைக்கிறேன். விலங்குகளுக்கு ஒரு நேரம் இடம் பழகிவிட்டால் அதை அப்படியே பின்பற்றுமாம். நாய்க்குச் சொல்வது போல மணியடித்தால் சோறு என்பது போல.
மீட்டர், காலேஜ், மந்திரியார் ஜோக்குகள் ரசிக்க வைத்தன.
ஓவியர் ஜெயராஜ் படங்கள் கவர்ச்சியாக இருக்கும் என்பதால் இளம் வயதில் தமிழ்நாட்டில் இருந்தவரை ஆர்வத்துடன் பார்த்ததுண்டு.
துளசிதரன்