27.1.26

ப பொ கதை : : மீட்பு - திருவாழிமார்பன்

மீட்பு

- திருவாழிமார்பன் - 

பத்துக்கை தெய்வத்தை நகல் செய்து துடைப்பக்கட்டை இஸ்திரிப்பெட்டி இத்யாதி ஏந்திய இல்லத்தரசி படம், பள்ளிப் புத்தகத்திலிருந்து (படம் பார்த்து கட்டுரை வரைக) எடுக்கப் பட்டிருக்கக்கூடும்.

ஆணோ பெண்ணோ, அவரவர் குடும்பத்துக்கான வேலையை அவரவர் செய்வதற்கு தங்கக்கோப்பையா கொடுப்பார்கள்? (கணினி) பொட்டி தட்டி செல் பேசும் இருபத்தொன்றாம் நூற்றாண்டு பெண்ணோ ஆணோ, துணையைவிட அநியாய ஒருதலைப்பட்ச அதிகக் குடும்பச் சுமை தன் மீது மட்டுமே கட்டிவிட பட்டதாகத் எண்ணினால், சாம தான பேத
தண்டம் வரிசையில், அவசியமானால் விவாகரத்து வாங்கிக்கொள்ள வேண்டியதுதான் சதி,

வாழாவெட்டி, ‘கல்லானாலும் கணவன்’ சகாப்தமெல்லாம் முடிந்து, பெண்களுக்கு படிப்பும், சம உரிமையும், (பொருளாதார) சுதந்திரமும், வரலாறு காணாத வகையில் சட்டத்திருத்தங்களும், அமலாக்கமும்கண்கூடாகப்பார்க்கிறோம்!

இவ்வாறெல்லாம் யோசித்தவர், கதை தேர்வாக வேண்டும் என்ற நிதர்சனத்துடன், மனசாட்சியை அடகு வைத்துவிட்டு, தலையச் சுற்றி ஒளி வட்டமிடும் தியாகச்சுடரை விவரித்து, புல்லரிக்கும் சென்டிமென்ட், தொண்டையடைக்கும் துக்கம், இருக்கை நுனி திருப்பங்கள்,
கொண்டை ஊசி வளைவுகள், அந்தர்பல்டி, நக்கல், நையாண்டி, வீர முழக்கம், பன்ச் டயலாக்- 

இவற்றை தேவையான அளவில் தூவி, மங்களம் பாடி முடித்தார்.
‘எடிட்டிங்’கின்போது, ‘கூந்தலே போச்சு’ என்று கதையை கடாசிவிட்டு, நேர இழப்பாகிய வட்டி செலுத்தி, அடகு வைத்த மனசாட்சியை மீட்டு, மற்ற குடும்பத்தலைவர்களைப்போலவே அவரும் அன்றைய பொழுதுக்கு வீட்டிலும், அலுவலகத்திலும், வெளியிலும் செய்யவேண்டியவற்றை மனதுக்குள் வரிசைப்படுத்திக் கொண்டு கிளம்பினார்.

==========================================================================================

விகடன் அதிபர் S.S.வாசனின் கடைசி நாள்...

சாதாரண நிலையில் இருந்து, கடும் உழைப்பாலும், மதிநுட்பத்தாலும், துணிச்சலாலும் வாழ்வின் சிகரத்தை அடைந்தவர், வாசன். எஸ்.எஸ்.வாசன் மனைவி பெயர் பட்டம்மாள். இந்தத் தம்பதிகளுக்கு ஒரே மகன் எஸ்.பாலசுப்பிரமணியன், ஒரே மகள் லட்சுமி ஜெமினியின் நிர்வாக இயக்குனராக இருந்த வாசன், இணை நிர்வாக இயக்குனர் பொறுப்பை பாலசுப்பிரமணியனுக்கு வழங்கினார்.

அலுவலகத்தில் அப்பா, மகன் என்ற பந்தமே இருந்ததில்லை. அலுவலகத்தில் எல்லோரும் வாசனை "பாஸ்" என்றே கூறுவார்கள். எனவே, பாலசுப்பிரமணியனும் அவரை "பாஸ்" என்றே அழைக்கலானார். வாசனின் இறுதி நாட்கள் பற்றி ஒரு கட்டுரையில் பாலசுப்பிரமணியன் கூறியிருப்பதாவது:-

"தன் பொருட்டு யாரும் துன்பப்படவோ, அனுதாபப்படவோ கூடாது என்பதில் மிக உறுதியாக இருந்தார் அவர் (வாசன்). அவருக்கு வயிற்றில் புற்று நோய் வந்ததே எங்கள் வீட்டில் யாருக்கும் தெரியாது. 1968 ஏப்ரலில்தான் எனக்குத் தெரியும். எங்கள் குடும்ப டாக்டர் எம்.எஸ்.வெங்கட்ராமன் என்னை அழைத்து, விஷயத்தைச் சொன்னார்.

"இது நோய் முற்றிய நிலை. ஆபரேஷனுக்காக வயிற்றைத் திறந்து பார்த்தபோது, நானே பயந்துவிட்டேன். `இந்த விஷயத்தை யாருக்கும் சொல்லவேண்டாம்' என்று அவர் என்னிடம் சொல்லி இருக்கிறார். ஆனால், சொல்லாமல் இருக்க முடியவில்லை" என்றார், டாக்டர். அதன் பிறகு, பாஸ் முகத்தைப் பார்த்தேன்.

எதுவுமே நடக்காதது போல் அவர் வீட்டில் நடமாடிக் கொண்டிருந்தார். அதையும் மீறி அவரிடம் ஒரே சோர்வு தென்படுவதை அப்போதுதான் ஊன்றி கவனித்து உணர்ந்தேன். ஒரு நாள் `பாஸ்' என்னைக் கூப்பிட்டார். தனக்கு என்ன என்பதை அவராகவே சொல்லிவிட்டார். முன்கூட்டித் தெரியும் என்று நானும் காட்டிக் கொள்ளாமல் அமைதியாகக் கேட்டுக் கொண்டேன்.
"பாலு! திறமையுள்ள, தகுதியுள்ள மனிதர்கள் பலரிடமும் கருத்துக் கேட்டு, அவர்கள் சொல்வதையெல்லாம் வைத்து ஓர் இறுதி முடிவை எடுத்து அதன்படி செய்வது என் வழக்கம். வாழ்க்கையில் அடுத்தடுத்து எனக்குக் கிடைத்த வெற்றிகளுக்கெல்லாம் அதுதான் காரணம். ஆனால், என் சொந்த உடல் நலம் பற்றிய விஷயத்தில் அதையே செய்தது தவறு என்று இப்போது புரிகிறது.

ஒன்றரை வருடத்துக்கு முந்தியே டாக்டர் வெங்கட்ராமன் என்னை ஆபரேஷன் செய்து கொள்ளச் சொன்னார். அவர் சொன்னதைக் கேட்டிருந்தால், இன்னும் சில காலத்துக்கு என் ஆயுள் நீண்டிருக்கும். பலரிடம் கருத்துக் கேட்டுக் காலத்தைக் கடத்தியதுதான், என் உயிரையே விலையாகக் கேட்கிறது" என்றார்.

இவ்வளவும் சொல்லிவிட்டு, "இந்த விஷயங்கள் எதையும் நீ அம்மாவிடம் சொல்லாதே" என்று என் வாயை கட்டிப் போட்டார். ஆனால், அம்மாவிடம் சொல்லாமல் இருக்க எனக்குத் தைரியமில்லை. தயங்கித் தயங்கி விஷயத்தைச் சொல்லிவிட்டு, "தெரிந்த மாதிரி காட்டிக் கொள்ளாதீர்கள்" என்றேன்.

எப்படித்தான் என் தாயார் அந்த அதிர்ச்சியைத் தாங்கிக் கொண்டாரோ, அவர் எதுவும் தெரிந்ததாகக் காட்டிக் கொள்ளாமல் வளைய வந்தார். வீட்டுக்குள்ளேயே ஒரு கொடுமையான, வேதனையான கண்ணாமூச்சி நடந்து கொண்டிருந்தது. மறைவதற்கு சில மாதங்களுக்கு முன், ரங்கா நர்சிங் ஹோமில் ஒரு நாள் அவருக்கு `டிரிப்ஸ்' ஏற்றிக் கொண்டிருந்தார்கள்.

மருந்தில் ஏதோ தவறு நடந்து, உடம்பு தூக்கிப்போட ஆரம்பித்தது. படுக்கையில் இருந்தபடி ரொம்ப அவஸ்தைப்பட்டிருக்கிறார். உடனடியாக டாக்டர் வரவழைக்கப்பட்டு, வேறு `டிரிப்ஸ்' பாட்டில் பொருத்தப்பட்டதில் உடல் நடுக்கம் சரியாகிவிட்டது. இது நடக்கும்போது, இரவு 8 மணி இருக்கும். இதுபற்றி தகவல் கிடைத்ததும், ரங்கா நர்சிங் ஹோம் பறந்தோடிப்போய் அவர் முன்னால் நின்றேன்.

என்னைப் பார்த்தவர், "நடந்ததைக் கேள்விப்பட்டிருப்பாயே... எனக்கு ராத்திரி ஏதாவது ஆகிப்போனால், உடனே போன் செய்து யாருக்கும் தகவல் சொல்ல வேண்டாம். இரவு வேளையில் யாரையும் தொந்தரவு செய்யாதே. எதுவானாலும், காலை ஆறு மணிக்கு மேல் சொல்லு" என்றார். இதற்கு அவர் என்னிடம் எதிர்பார்த்த ஒரே பதில், "யெஸ் சார்". அதையே நானும் சொன்னேன்.

அவ்வாறு இல்லாமல், நான் உணர்ச்சிவசப்பட்டு, "ஏன் இப்படியெல்லாம் பேசுகிறீர்கள்? உங்களுக்கு ஒன்றும் ஆகாது" என்று சொல்லியிருந்தால், அவருக்குப் பிடிக்காது. நான் அமைதியாக நிற்க, "மாதவன் (உதவியாளர்) இங்கே என்னுடன் இருப்பான். நீ இப்போது புறப்படு" என்றார். அதற்கும் "யெஸ் சார்" சொல்லிவிட்டு, கனத்த இதயத்துடன் வெளியே வந்தேன்.

1969 ஆகஸ்டு 26ந்தேதி காலையில் என்னைக் கூப்பிட்டு அனுப்பினார். அப்போது ஏழரை மணி இருக்கும். நான் எதிரில் போய் நின்றேன். அவரால் பேச முடியவில்லை. மிகவும் நலிந்து போயிருந்தார். அன்றைய காலைப் பத்திரிகையைக் கொடுத்து, "இதைப்படி" என்று வலது கையால் சுட்டிக் காட்டினார். "காங்கிரசில் பிளவு மறைகிறது" என்ற தலைப்பிட்டு வெளியாகி இருந்த செய்தி அது.

காமராஜருக்கும், இந்திராவுக்கும் இடையே ஏற்பட்டிருந்த மனக்கசப்பு மறைவதற்கான அறிகுறிகள் தெரிவதாக அந்தச் செய்தி சொன்னது. தன் உயிர் மூச்சாக அவர் கருதிய காங்கிரசில் பிளவு ஏற்பட்ட போது, அவரால் தாங்க முடியவில்லை. அந்தப் பிளவு மறைகிறது என்ற செய்தியைப் பார்த்ததும் அவருக்கு ஆனந்தம் தாங்கவில்லை. சிரிக்க முடியாத அளவுக்கு பலவீனம்.

ஆனாலும் உதடுகள் லேசாக நெளிந்து ஒரு புன்னகையை வெளிப்படுத்த முயன்றன. அன்று காலை 9.20 மணி. நான் பக்கத்திலேயே உட்கார்ந்திருந்தேன். கண் மூடிப்படுத்திருந்தவரின் இடது கை மட்டும் `முடியவில்லை, முடியவில்லை' என்பது போல் இரு முறை அசைகிறது.

அதன்பின் எந்தச் சலனமும் இல்லை. பதறிப்போய் நாடி பிடித்துப் பார்க்கிறேன். துடிப்பு இல்லை. டாக்டரை அழைக்க எழுந்து ஓடுகிறேன். டாக்டரே அப்போது உள்ளே நுழைந்து கொண்டிருக்கிறார். பரிசோதித்துப் பார்த்துவிட்டு, `உயிர் பிரிந்து விட்டது' என்று டாக்டர் அறிவித்தார்."

இவ்வாறு பாலசுப்பிரமணியன் குறிப்பிட்டுள்ளார்.

வாசன் மறைந்தபோது தமிழக முதல் அமைச்சராக கருணாநிதி இருந்தார். அவர், மற்ற அமைச்சர்களுடன் சென்று இறுதி மரியாதை செலுத்தினார். வாசன் மரணச்செய்தி பரவியதும், சென்னையில் உள்ள எல்லா ஸ்டூடியோக்களும் மூடப்பட்டன. நடிகர், நடிகைகள், பட அதிபர்கள், டைரக்டர்கள் அனைவரும் வாசன் வீட்டுக்குச் சென்று இறுதி மரியாதை செலுத்தினார்கள்.

முன்னாள் முதல் அமைச்சர் பக்தவச்சலம், மற்றும் அனைத்துக்கட்சி பிரமுகர்கள் வந்து அஞ்சலி செலுத்தினர். எம்.ஜி.ஆரும், மற்றும் பல நடிகர், நடிகைகளும், படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு மேக்கப்பைக்கூட கலைக்காமல், விரைந்து சென்று அஞ்சலி செலுத்தினர். வாசன் உடலைப்பார்த்து எம்.ஜி.ஆர். கண்கலங்கினார். வாசனுடன் நீண்ட காலம் பழகிய ஜெமினிகணேசன் கதறி அழுதார்.

நடிகைகள் தேவிகா, வைஜயந்திமாலாவின் தாயார் வசுந்தரா ஆகியோர் கண்ணீர் விட்டபடி நின்றனர். சிவாஜிகணேசன் சோகமே உருவாக இருந்தார். பானுமதி, பத்மினி, ஜெயலலிதா, சவுகார்ஜானகி, டி.ஆர்.ராஜகுமாரி, ஏவி. எம்.ராஜன், முத்துராமன், பி.எஸ்.வீரப்பா, சந்திரபாபு, ரவிச்சந்திரன், பாலாஜி, நாகேஷ், பட அதிபர்கள் ஏவி.மெய்யப்பசெட்டியார், நாகிரெட்டி, ஏ.எல். சீனிவாசன், டைரக்டர்கள் ஸ்ரீதர், ப.நீலகண்டன், திருலோகசந்தர், மாதவன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

எம்.எஸ்.சுப்புலட்சுமி, கணவர் "கல்கி" சதாசிவத்துடன் வந்து மரியாதை செலுத்தினார். மாலையில் இறுதி ஊர்வலம் நடந்தது. ஊர்வலம், மைலாப்பூர் எட்வர்டு எலியட்ஸ் சாலையில் (இன்றைய ராதாகிருஷ்ணன் சாலை) உள்ள வாசன் இல்லத்தில் இருந்து புறப்பட்டது. எம்.ஜி.ஆர், பட அதிபர்கள் ஏவி.மெய்யப்ப செட்டியார், சுந்தர்லால் நகாதா, முன்னாள் அமைச்சர்கள் கக்கன், பூவராகன், தமிழரசு கழக தலைவர் ம.பொ.சிவஞானம் மற்றும் திரை உலகப் பிரமுகர்கள் ஊர்வலத்தில் நடந்து சென்றனர்.

உடலை சுமந்து செல்ல, ஜெமினிகணேசன் தோள் கொடுத்தார். ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இறுதி ஊர்வலம், கிருஷ்ணாம்பேட்டை மயானத்தை அடைந்தது. அங்கு இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. "சிதை"க்கு வாசனின் ஒரே மகன் பாலசுப்பிரமணியன் தீ மூட்டினார்.

வாசன் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் விதத்தில், சென்னை நகரில் எல்லா சினிமா கொட்டகைகளிலும் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி ஆபீசில், கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டன.

ஆரூர் மூனா செந்தில்

நன்றி : விகடனின் வாசன் நூற்றாண்டு மலர், 
மாலைமலரின் காலச்சுவடுகள்
அன்றி R கந்தசாமி ஸார், FaceBook 

32 கருத்துகள்:

  1. திருவாழிமார்பன்.... காலம் மாறிவிட்டது. பெண்களுக்கு பல வாய்ப்புகள் இருக்கின்றன.. உண்மைதான். உடலெல்லாம் முடியுடன் வளைய வந்த மனிதப் பிறவி, லட்சக்கணக்கான ஆண்டுகள் கடந்தும் அந்த சகாப்தங்களின் எச்சமாக இன்னும் உடலின் பகுதிகளில் முடியுடன் இருப்பதைப் பார்க்கிறோம். ஆண்டுகள் ஆயிரக்கணக்கில் கழிந்தும் உடல் முடியைவிட்டு விலகவுல்லை.

    சில பத்து ஆண்டுகளில் பெண்களுக்கு தனித்து நிற்க வாய்ப்பு, ஆணுக்குப் பெண் சமானம் என்ற நிலையை எய்திவிட்டோம் என்று எப்படிக் கூற முடியும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை.. திருவாழிமார்பன் இதைப் படிப்பாரா என்று தெரியவில்லை!

      நீக்கு
  2. இப்போதும் பெண்களின் நிலையில் இந்தியாவைப் பொறுத்தமட்டில் பெரிய மாற்றம் இல்லை. மேற்கத்தைய நாடுகளின் இந்த சமானநிலையை இந்தியா எய்த இன்னும் ஓரிரு நூற்றாண்டுகள் ஆகலாம். ஆனால் அதற்கான விலையாக நாம், பாரத தேசத்தின் பண்பாடு கலாச்சாரம் கொடுக்கப்போகும் விலை என்ன என்று தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  3. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    இன்றைய நாளில் ப.பொ.கதை - நன்று.

    வாசன் குறித்த தகவல்கள் படித்தேன்.

    பதிலளிநீக்கு
  4. வாசன் அசாதாரண மனிதர். அவருடை குணங்களினால் பாலசுப்ரமணியன் அவர்களும் அவருடைய அடிச்சுவடை ஓரளவு பற்றி நடந்தார். அத்துடன் சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். விகடன் இப்போது யார் கைகளுக்கோ சென்று விட்டது

      நீக்கு
  5. அட! இன்று திவாமா எழுதிய கதையா....

    ஆனால் அவரைக் காணவில்லையே. இன்றும் பார்ப்பாரா என்று தெரியலை.

    நான் ஸாரி சொல்லிக்கறேன். ஏனென்றால் நெல்லையின் சனிக்கிழமை பதிவு என்று நினைக்கிறேன். அல்லது வேறு பதிவா? திவாமா, சூர்யா, நெல்லை எல்லாரும் பௌன்ஸர் அடிச்சிட்டிருந்தாங்க தத்துவங்கள் கருத்துகள் பேசி....

    அப்ப நான் சும்மா ஜாலியா வழக்கம் போலச் சொல்வது போல, எபியில் அறிவுஜீவிகள் உரையாடலில் கருத்துப்பரிமாற்றங்களில் என்னால் கலந்துக்க முடியவில்லைன்னு சொல்லியிருந்த நினைவு. அதற்கு அப்புறம் தான் திவாமா வைக் காணலை. ஒரு வேளை அது காரணமாகிவிட்டதோன்னு மனதிற்கு இப்ப தோன்றுகிறது. சூர்யா அவர்களையும் காணவில்லை. அப்படினாக்க ஸாரி ங்க.....நான் சும்மா இங்க ஸ்ரீராம், நெல்லை, ஜெகே அண்ணாக்கிட்ட எல்லாம் சொல்வது போலச் சொல்லிவிட்டேன்....அப்படிச் சொல்லிருக்கக் கூடாதுன்னு இப்ப தோன்றுகிறது. late thought.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா.. அப்படி எல்லாம் இருக்காது வேறு ஏதோ காரணங்கள்.

      நீக்கு
    2. இல்லைனா மகிழ்ச்சிதான் ஸ்ரீராம். திவாமா வந்து பார்த்து சொன்னால் நல்லாதான் இருக்கும்!

      கீதா

      நீக்கு
  6. ‘கூந்தலே போச்சு’ என்று கதையை கடாசிவிட்டு//

    ஹாஹாஹா எழுத்தாளர் படத்துக்கான கதையை யோசித்து முடியே கொட்டிப் போச்சுன்னு சொல்கிறதா?

    //பொட்டி தட்டி செல் பேசும் இருபத்தொன்றாம் நூற்றாண்டு பெண்ணோ ஆணோ, துணையைவிட அநியாய ஒருதலைப்பட்ச அதிகக் குடும்பச் சுமை தன் மீது மட்டுமே கட்டிவிட பட்டதாகத் எண்ணினால், சாம தான பேத
    தண்டம் வரிசையில், அவசியமானால் விவாகரத்து வாங்கிக்கொள்ள வேண்டியதுதான் சதி,//

    கதை எழுதும் கதாபாத்திரம் கொஞ்சம் வயசானவரோ...நம்ம காலத்துக்கும் முந்தைய ஜெனரேஷனா? இல்லை நம்ம தலைமுறையா...ஹிஹிஹி

    எதுக்குனா, இப்பலாம் நமக்கும் முந்தைய ஜெனரேஷன் ஆண்கள் கூட உதவுகிறார்கள்....

    ஆனால், இப்போதைய பெண்களும் வேலைக்குச் செல்வதால் அவர்கள், வீட்டில் தங்கள் துணை தனக்கு உதவியாக இருக்க வேண்டும் என்று நினைப்பதில் தவறே இல்லை. அதுவும் குட்டிக் குழந்தை....வளர்ப்பில் இருவரின் பங்கும் இருக்க வேண்டுமே.

    கடைசி பாராவின் கடைசி வரிகள் தான் புரியவில்லை. மனசாட்சியை அடகு வைத்து?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படத்துக்கு கதை என்பதெல்லாம் தேவையில்லாத ஆணி என்கிறாரோ....!! :))

      நீக்கு
    2. எனக்கும் அப்படியும் கொஞ்சம் தோன்றியது அல்லதுஇப்படத்துக்கான கதை.... ஆரம்பத்தில் வரும் வரிகளை வைத்து அப்படியும் தோன்றியது

      கீதா

      நீக்கு
  7. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா... வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.

      நீக்கு
  8. வாசன் அவர்களைப் பற்றி வாசிக்கும் போது வியப்பு. அவர் சொல்லியிருப்பது, இரவில் போனால் யாருக்கும் உடனே சொல்லவேண்டாம் கஷ்டப்படுத்த வேண்டாம் என்பது... ரொம்ப அருமையான விஷயம். அவரது கருத்துகள் பலவும் கவர்கின்றன.

    அதனால் தான் அவர் தன் தொழிலில் வெற்றிபெற்றார் என்பதற்கும் மேலாக, இன்று வரை நினைவுகூரப்படுகிறார் என்பதும்.

    இப்போதைய ஆவியின் நிலை....யோசிக்க வைக்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசன் பாலசுப்ரமணியம் இருவருமே அற்புதமான மனிதர்கள்

      நீக்கு
  9. பாலசுப்ரமணியம் அவர்கள் நடத்திக் கொண்டிருந்த வரை கூட கூட நல்லா இருந்தது போன்று தோன்றியது. அவரும் சுஜாதாவுமான நினைவுகள் எல்லாம் நம்ம சுஜாதா தேசிகன் அவர்களின் தளத்தில் வாசித்த நினைவு

    கீதா

    பதிலளிநீக்கு
  10. பதில்கள்
    1. அடடா... டேக் கேர் ப்ளீஸ்...

      நீக்கு
    2. துரை அண்ணா அதான் அதிகம் காணலையா...உடல்நலனைப் பார்த்துக்கோங்க அண்ணா.

      கீதா

      நீக்கு
  11. மனமும் சரியில்லை...
    இங்கே வந்தால் - !?

    பதிலளிநீக்கு
  12. எஸ்.எஸ்.வாசன் பற்றிய நினைவுகள் நெகிழ்ச்சியாக இருந்தன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பானுக்கா வணக்கம். பெரிய மனம் கொண்டவர்.

      நீக்கு
  13. ​இன்றைய படத்துக்கேற்ற கதை என்ன என்று புரியவில்லை. படத்தின் விமர்சனம் மட்டுமே உள்ளது. கதை ஆசிரியர் கதை எழுதி அதை குப்பையில் போட்டுவிட்டு
    //இவற்றை தேவையான அளவில் தூவி, மங்களம் பாடி முடித்தார்.
    ‘எடிட்டிங்’கின்போது, ‘கூந்தலே போச்சு’ என்று கதையை கடாசிவிட்டு, நேர இழப்பாகிய வட்டி செலுத்தி, அடகு வைத்த மனசாட்சியை மீட்டு, மற்ற குடும்பத்தலைவர்களைப்போலவே அவரும் அன்றைய பொழுதுக்கு வீட்டிலும், அலுவலகத்திலும், வெளியிலும் செய்யவேண்டியவற்றை மனதுக்குள் வரிசைப்படுத்திக் கொண்டு கிளம்பினார்.​//
    கதை நாயகன் யார் எவர் என்று குறிப்பில்லை. கதையின் நேரம் காலம் தெரியவில்லை. இப்படி பல குழப்பங்கள்.
    ஆக இக்கதை சிறப்பானது என்று சொல்ல முடியவில்லை.
    filler வாசன் கதை வாசனின் கடைசி நாட்களைப் பற்றி கூறி பக்கங்களை நிறைவு செய்ததால் செவ்வாய் பிழைத்தது.

    Jayakumar

    பதிலளிநீக்கு
  14. //ஆணோ பெண்ணோ, அவரவர் குடும்பத்துக்கான வேலையை அவரவர் செய்வதற்கு தங்கக்கோப்பையா கொடுப்பார்கள்?// உண்மையான வார்த்தை! கூட்டுக்குடும்பத்தில் இருந்தவரை நான் இதை மிகக் கண்டிப்பாகக் கடைப்பிடித்தேன். எந்த வேலைக்கும் யாரும் வந்து செய்து கொடுப்பார்கள் என எதிர்பார்க்கவே இல்லை. அதனால் நான் தியாகினு நினைச்சுக்கவும் இல்லை. கேலி செய்பவர்களைப் பார்த்துச் சிரிப்புடன் போயிடுவேன். அதுக்காக அடுத்த வேலை நிற்காது. தொடரும்.

    பதிலளிநீக்கு
  15. இப்போதைய பெண்கள் ஒரு குழந்தையை வளர்ப்பதற்கே முடியலைனு சொல்றாங்க. நேற்றோ/முந்தாநாளோ முகநூலில் கூட இதைப் பற்றிய ஒரு பதிவு. அங்கே கொடுத்த பதில் தான் இங்கும். 20 வயதில் முதல் குழந்தை. குழந்தை பிறந்து சில மாதங்கள் அலுவலகம் போகவேண்டி இருந்தது. பின்னர் தான் கணவரின் வேலை மாற்றத்தை எதிர்பார்த்து வேலையை விட்டேன். ஆனாலும் தனியாகத் தான் குழந்தை வளர்ப்பு. வீட்டில் யார் இருந்தாலும் குழந்தை அழுதால் நான் தான் போய்த் தூக்கிச் சமாதானம் செய்யணும். யாரும் துணைக்கு வரமாட்டாங்க. வந்ததும் இல்லை. இரண்டாவது குழந்தைப் பிறப்பின் போது 24 வயது. தனியாக ராஜஸ்தானில் வளர்த்தேன். பெரிய குழந்தை பள்ளிக்குப் போகும். கணவர் அலுவலகம் போயிடுவார். எப்போ வருவார்னு சொல்ல முடியாது. க்வார்டர்ஸில் இருந்தாலும் அக்கம்பக்கம் வீடுகள் என்பதே இருக்காது. அங்கொன்றும் இங்கொன்றுமாக வீடுகள். ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீடு போவதென்றால் சுமார் அரை மணி ஆகும். மெயின் கேட்டிலிருந்து உள்ளே வீட்டுக்குள் போகப் பத்து நிமிஷமாவது நடக்கணும். கூப்பிட்டால் எல்லாம் காதில் விழாது.

    பதிலளிநீக்கு
  16. இந்தக் குழந்தை வளர்ப்புக்குப் பயந்துண்டே பலரும் இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ளுவதில்லை. இதன் தாக்கம் இப்போவே தெரிய ஆரம்பிச்சாலும் இன்னும் பத்தாண்டுகளில் முழுமையாக உணருவார்கள். ஆனாலும் நாம் சொல்லியெல்லாம் யாரும் கேட்கப் போவதில்லை. எதிர்காலம் கேள்விக்குறிதான்! நான் இருந்து பார்க்கப் போவதில்லை என்பதே ஒரே ஆறுதல்!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!