16.3.26

"திங்க"க்கிழமை  :: மிளகாய்ப் பழ சட்னி --- துரை செல்வராஜூ  ரெஸிப்பி

 

மிளகாய்ப் பழ சட்னி

துரை செல்வராஜூ 

நமக்காக நாமே உணவு வகைகளைத் தயாரித்துக் கொள்ளும் போது வெளியாட்களின் சுகாதாரக் குறைவு செய்முறை பற்றிய சந்தேகங்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு..



இன்று -
மிளகாய்ப் பழ சட்னி

தேவையானவை:
சிவப்பு மிளகாய்ப் பழம்
(Capsicum Red, Bell Pepper)
பெரியதாக ஒன்று
நடுத்தரம் எனில் இரண்டு

தக்காளிப் பழங்கள் ஐந்து
பல்லாரி வெங்காயம் 2
பூண்டு 10
(பெரிய பற்களாக)

தாளிப்புக்கு :-
நல்லெண்ணெய் தேவையான அளவு
கடுகு அரை tbsp
உளுத்தம் பருப்பு ஒரு tbsp
கறிவேப்பிலை ஒரு இணுக்கு
கல் உப்பு தேவைக்கு


செய்முறை :

தக்காளிப் பழங்களைக் கழுவி விட்டு ஒன்றிரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.

மிளகாய்ப் பழத்தையும் இரண்டாக நறுக்கி உள்ளீடுகளை அகற்றி விட்டு மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.

வெங்காயம் பூண்டு இவற்றையும் நறுக்கிக் கொள்ளவும்.

இவை எல்லாவற்றையும் இருப்புச் சட்டியில்
நல்லெண்ணெய் விட்டு மிதமான சூட்டில் வதக்கவும்..

தக்காளி, மிளகாய்ப் பழம், வெங்காயம், பூண்டு இவை நன்றாக வதங்கியதும் சற்று ஆறவிட்டு சிற்றரவையில் எல்லாவற்றையும் சேர்த்து ஒரு குவளை வெதுவெதுப்பான நீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்..

வேறொரு வாணலியை மிதமான சூட்டில் வைத்து நல்லெண்ணெய் விட்டு கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து வதக்கி வைத்திருக்கும் தக்காளி விழுதைச் சேர்த்து மேலும் ஒரு குவளை வெதுவெதுப்பான நீர் விட்டு தேவையான அளவு உப்பு போட்டு மல்லித் தழையைத் தூவி -

ஒரு கொதி வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி விடவும். .

இந்தச் சட்னி ஓரளவுக்கு தளதள என்று இருத்தல் வேண்டும்..

மெல்லியதாக நறுக்கப்பட்ட தக்காளி, மிளகாய்ப் பழம் வெங்காயம் பூண்டு இவற்றை வதக்கி விட்டு விழுதாக அரைக்காமல் அப்படியே தாளித்துக் கொள்வதும் ஒரு வகை..

வயிற்றுக்குத் துன்பம் (வயற்றெரிச்சல் நெஞ்செரிச்சல்)
தராத தக்காளி மிளகாய்ப் பழ சட்னி தயார்...

எக்காரணம் கொண்டும் மிளகாய்த் தூள் சேர்க்க வேண்டாம்...

ஆபத்தான பொருட்களுள் ஒன்றாக மாறி வருகின்றது மிளகாய்..

நாவிற்கு அடிமை எனில் சிறிதளவு மிளகுத் தூள் தூவிக் கொள்ளலாம்...

சிவப்பு மிளகாய்ப் பழம் தவிர்த்து மஞ்சள் நிற மிளகாய்ப் பழத்திலும் இதே முறையில் செய்யலாம்!..

" .. குண்டு பச்ச மொளகாய் ல செய்ய முடியாதா?.. "

" ஏன் முடியாது?.. நிக் கூட்ணி (Colour Cambo) சரியாக இருக்காது.."


நமது நலம்
நமது கையில்..
ஃஃ

=======================================================================================

இந்தப் படங்கள் பார்த்திருக்கிறீர்களா...   எப்படி இருக்குமோ என்கிற சந்தேகம் உங்களுக்கு வரலாம்.  உங்களுக்காக இந்த விமர்சனம்..!




36 கருத்துகள்:

  1. இன்றைய செய்முறை புதிது.

    குடைமிளகாயை உபயோகித்துச் செய்யப்படுவது. வாசனை இருக்கும், காரம் இல்லாத்து. நல்ல செய்முறை.

    பதிலளிநீக்கு
  2. எனக்கு குடைமிளகாய் பருப்புசிலி ரொம்ப பிடிக்கும். நீங்க சாப்பிட்டிருக்கிறீர்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்குப் பிடித்த உசிலி வாழைப்பூதான்.   நாங்கள் வடகறி என்போம்!

      நீக்கு
    2. பீன்ஸ் உசிலியும் சுவையாக இருக்கும்.

      நீக்கு
    3. எனக்குப் பிடிக்காது!

      நீக்கு
    4. அடாடா..! அப்ப வாழையோடு சம்பந்தபட்ட வாழைத்தண்டு உசிலி செய்யலாம்.

      நீக்கு
  3. நல்ல வேளை இந்தப் படங்களைப் பார்த்திருந்திருக்கவில்லை.

    இனி ஓடிடிகளிலோ இல்லை யூடியூபுகளிலோ காணக் கிடைக்காத படம் என்று விளம்பரப்படுத்தி திரை விமர்சனங்களை ஶ்ரீராம் வெளியிட்டுவிடுவாரோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதில் ஒரு படமாவது நானும் பார்ததில்லையாக்கும்!

      நீக்கு
  4. 'அவன் பித்தனா' திரைப்படத்திற்கு விமர்சனம் படித்து---- எந்தப் பத்திரிகையோ தெரியவில்லை. குமுதமா இருக்காது என்பதற்கும் க்ளூ இருக்கிறது) --- நாம் பித்தனாக ஆகாமல் இருந்தால் சரி.

    அது சரி, ரெண்டு சரோஜா தேவி, ஒண்ணே ஒண்ணு விஜயகுமாரியா? ஏன் இந்த வஞ்சனை என்று தெரியவில்லை.

    அந்த ஹிந்திப் படம் பற்றி?.. தமிழ்ப் படங்களுக்கு மத்தியில் ஏன் இந்தத் திணிப்பு என்று மட்டும் தெரிலே. அதுக்குப் பதில் தெலுகு, கன்னடம், மலையாளம் என்று தென்னகப்படம் ஒன்றை உபயோகப்படுத்தியிருக்கலாம் இல்லையா?

    அடுத்த திங்களுக்காவது எதிர்பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் என்ன வேணுமின்னா செய்தேன்?!!  கையில் கிடைத்ததைதானே போடமுடியும்!

      நீக்கு
    2. பின்னூட்டம் என்பது நேரிடையான பதிலுக்கு இல்லை, ஸ்ரீராம். நான் சொல்வதில் எதையாவது பிடித்துக்கொண்டு நீங்களும் பதிவுக்கு சுவையூட்ட மாட்டீர்களா என்பதற்காகத்தான்

      குமுதம் இருக்காது என்பதற்கு க்ளூவா? அட! எனக்குத் தெரியுமே அது!
      யாராவது க்ளூவைக் கண்டுபிடிக்கிறார்களா என்று பார்ப்போம் என்கிற மாதிரி உங்கள் பதில் இருந்திருந்தால் பதிவுக்கு இன்னும் சுவை கூட்டுவதாக அது ஆகிப் போகும்.

      ஒரே ஸ்டோர் டைப்பான பின்னூட்டங்களை மாற்ற நானும் எவ்வளவோ முயற்சிகள் செய்கிறேன், ஸ்ரீராம்.

      நீக்கு
    3. ஒரே மாதிரியான பின்னூட்டங்களை மாற்ற --- என்று திர்த்திப் படித்துக் கொள்ளவும். ஸாரி.

      நீக்கு
  5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  6. மேலே இரண்டாய் பிரசுரம் ஆகிவிட்டதால் ஒன்றை கைகழுவி இருக்கிறேன். வேறே ஒன்றம் காரணமில்லை!

    பதிலளிநீக்கு
  7. நல்ல குறிப்பு! துரை அண்ணா.

    செய்வதுண்டு பச்சை, சிவப்பு, மஞ்சள் என்று. சென்ற வாரம் இடம் பெற்றது நம் வீட்டில், தோசைக்கு.

    கூடவே சாப்பாட்டிற்கு குடைமிளகாய் பருப்பு உசிலி.

    கு மி பருப்புசிலி ரொம்ப நன்றாக இருக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  8. துரை அண்ணா, மிளகாய்த்தூள் மட்டுமல்ல, மிளகாயே நீங்க சொல்லிருப்பது போல் - வரமிளகாய் கலர் சற்று மாறி யிருந்தால் பயன்படுத்தக் கூடாதாம். கடையிலிருந்து வாங்கிவந்ததும் உடனே அவற்றை நீக்கி விட வேண்டுமாம். முழு மிளகாயும் சிவப்பாக இருக்க வேண்டுமாம். நுனியில் சற்று சிவப்பு கம்மியா மஞ்சள் கலந்தாப்ல இருநா ....நீக்கிடணுமாம்? அப்படினாக்க 1/4 கிலோ மிளகாய் வற்றலில் என்ன தேறும் என்று யோசிக்க வைக்கிறது. பொறுக்கியா வாங்க முடியும்?

    என்னவோ போங்க!!

    மிளகாய் வற்றல் பமி காய்கள் உலர்நு வரும் போது சில மஞ்சள் வந்து பின்னர்தானே சிவப்பாகும் அப்ப கொஞ்சம் பழுப்புடன் தானெ வரும் இல்லையா?

    கீதா

    பதிலளிநீக்கு
  9. அவன் பித்தனா - விமர்சனத்தின் முதல் பாராவை டிட்டோ செய்கிறேன். கொஞ்சம் வித்தியாசமான சிந்தனைகளோடு வாழ்ந்தால் உலகம் இப்படித்தான் பட்டம் கட்டும்.

    கதைக்கரு அக்காலத்துக்கான கரு. இப்பவும் கூட இப்படியான மனிதர்கள் இருந்தாலும் சினிமா எடுபடாது. அதுவும் பிரசங்கம் இருந்தால்...ஏற்கனவே நம்ம சமுத்திரக்கனிக்கு அப்படி ஒரு பட்டப்பெயர் உண்டு இல்லையோ? அதாவது சினிமாவில் அட்வைஸ் கருத்துகளை வழங்கும் கதாபாத்திரம் என்பதால்...

    கீதா

    பதிலளிநீக்கு
  10. தாயின் மீது ஆணைக்கான விமர்சனத்தில் ஒரு வரி வருது பாருங்க....//தமிழ்ப்படங்களின் தரம் உயர்ந்து கொண்டு வருகிறது என்று திருப்திப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில்.....//

    அதை விமர்சித்தவர் இப்ப என்ன சொல்வார் என்று யோசிக்கிறேன். இப்போது சினிமாவின் தரம் அதாவது டெக்னாலஜிப்படியும் வித்தியாசமான சிந்தனைகளின் படியும் காட்சி அமைப்புகளிலும் வித்தியாசம் வந்திருக்கலாம் ஆனால் கதைகளில் இன்னும் வந்தால் நல்லா இருக்கும் ஒரு சில படங்களைத் தவிர. திரும்பத் திரும்ப சீசனல்ஆகத்தான் போகுது படங்கள்.

    ராதிகா சொல்றாங்க, தாய்க்கிழவிக்குப் பிறது நிறைய கதைகள் சொல்ல வந்தாங்களாம் எல்லாத்துலயும் கிழவி கேரக்டராம்!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  11. எனது குறிப்பை பதிவு செய்த
    ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  12. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்வோம். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  13. பதிவிற்கான அலங்காரங்கள்
    சிறப்பு..நன்றி ஸ்ரீராம்...

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் சகோதரரே

    இன்றைய திங்களில் காரம்/ காரமில்லாத சட்னி செய்முறை நன்றாக உள்ளது. படங்களுடன், கலர்கலராக அவைகள் மின்னும்படி தந்திருந்த சகோதரர் துரைசெல்வராஜ் அவர்களுக்கு மிக்க நன்றி. இந்த வெய்யிலில் காரம் தவிர்ப்பது நல்லது.

    அந்தக்கால படங்களை பொறுமையாகப் பார்க்க இப்போதுள்ளவர்களுக்கு பிடிப்பதில்லை. எங்கள் வீட்டில் நான் மட்டுந்தான் பார்ப்பேன். படங்களின் பகிர்வுக்கும் நன்றாக உள்ளது.

    சமையல் பொருட்கள் கலர், கலராக ஜொலிக்கிறது. அடுத்து கலரில்லாத ப்ளாக் அண்ட் ஒயிட் படங்களின் விமர்சனம். மாறுபட்ட இத்திங்களை (சந்திரனை) ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வண்ணப் படங்களையும், கருப்பு வெள்ளைப் 'படங்களை'யும் இணைத்தது சூப்பர்!

      நீக்கு
    2. மகிழ்ச்சி..
      நன்றியம்மா...

      நீக்கு
  15. ஸ்ரீராம் சினி விமர்சனம் பகிர்ந்தது நல்லருக்கு

    கீதா

    பதிலளிநீக்கு
  16. குடைமிளகாய் வைத்து விதம் விதமாக வடக்கில் சமையல் செய்வார்கள். எனக்குத் தெரிந்த கன்னடிகர் ஒருவர் குடைமிளகாயில் தயிர்பச்சடி செய்வார். குடைமிளகாயை பொடியாக நறுக்கி, வதக்கி, பின்னர் தயிர் கலந்து செய்வார் - அவரின் அம்மா சொல்லிக் கொடுத்தது என்றும் சொல்வார். நன்றாகவே இருக்கும்.

    சினிமா - மேற்கோள் காட்டப்பட்ட படங்கள் குறித்து கேள்விப்பட்டதே இல்லை! :) பார்க்கும் எண்ணமும் இல்லை.

    உசிலி - கொத்தவரங்காய், வாழைப்பூ ஆகிய இரண்டு மட்டுமே உசிலி வகையில் எனக்குப் பிடித்தது. பீன்ஸ் உசிலி அவ்வளவு ரசிப்பதில்லை.

    பதிலளிநீக்கு
  17. ஸ்ரீராம். தக்காளி ரோஸ் கலர்..ஹாஹாஹா. உங்க கூட பேசும்போது தான் நீங்க சொல்லி கவனிச்சன் ஸ்ரீராம். காலையில் பார்க்கும்போது வேக வேகமாக பார்த்ததால் கண்ணில் படவே இல்லை, பாருங்க...இன்று அந்த அளவுக்கு தான் என் கவனம் இருந்திருக்கிறது...

    கீதா

    பதிலளிநீக்கு
  18. இந்த சினிமா விமர்சனங்கள்
    மீது அவ்வளவாக ஈர்ப்பு
    இருந்ததில்லை...

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!