பாடல்கள். P B Srinivas லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாடல்கள். P B Srinivas லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

15.3.13

(எனக்கும் பிடித்த) P B ஸ்ரீனிவாஸ்

                                              
                               

சமீபத்தில் இசைவிழா நிகழ்ச்சிக்குச் சென்றபோது மயிலை ஸ்ரீ பார்த்தசாரதி சபாவில் டி. எம். கிருஷ்ணா கச்சேரியைக் கேட்டுக் கொண்டிருந்த போது பாடகர் பி. பி. ஸ்ரீநிவாஸ் வந்தார். மெல்ல நடந்து வந்தார். அவரை இரண்டு பேர் கைப் பிடித்து அழைத்து வந்தார்கள். கையில் ஏகப் பட்ட நோட்டு, நோட்டிஸ்கள், என்று வைத்திருந்தார். அவரை ஒரு நாற்காலியில் உட்கார்த்தி வைத்து விட்டுச் சென்றார்கள் அவர்கள். காதிலிருந்த காது கேட்கும் கருவியைச் சரி செய்து கொண்டு கச்சேரி கேட்டார் அவர். 

என்ன இனிமையான பாடல்களை நமக்குத் தந்தவர்...

மெகா டிவி என்று நினைவு.  சமீபத்தில் அங்கு நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் இவர், கே. ஜே. யேசுதாஸ், பி. சுசீலா வாணி ஜெயராம், ஏ. எல். ராகவன், டி. எம். எஸ். ஆகியோர் கலந்து கொண்டனர். ஏ. எல். ராகவன் குரல் தவிர, வேறு யார் குரலும் பழைய மாதிரி இல்லை. 

                                         

பி. பி. ஸ்ரீநிவாஸ் என்றதும் என் நினைவுக்கு உடனடியாக வந்த சில பாடல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். எல்லோர் நினைவிலும் இன்னும் பல பாடல்கள் இருக்கும். பாசமலர், சுமைதாங்கி, பொன் ஒன்று கண்டேன் என்று நிறைய இருக்கும்... எனக்கும் அதேபோல பெரிய லிஸ்ட் உண்டு. எனினும் சில பாடல்களை மட்டும் இங்கு உங்களுடன் சேர்ந்து கேட்கிறேன்..


1) பூவரையும் பூங்கொடியே... கைகளால் வரையும் ஓவியமும், கண்களால் வரையும் ஓவியமும்! 

"வடிவங்கள் மறைந்து விடும்... வண்ணங்கள் மறையாதே..: உருவங்கள் மாறி விடும்... உள்ளங்கள் மாறாதே..."



2) இளமை கொலுவிருக்கும்..... "பொன்னும் பொருளும் வந்து மொழி சொல்லுமா.. ஒரு பூவைக்கு மாலையிடும் நாள் வருமா.."

"அணைத்து வளர்ப்பவளும் தாயல்லவோ... ஒரு அணைப்பில் அடங்குவதும் அவள் அல்லவோ.."


"பெண் இயற்கையின் சீதனப் படைப்பல்லவா" // "எந்த செல்வமும் பெண்மையின் சுகம் தருமா?"




3) துள்ளித் திரிந்த பெண்ணொன்று... "வேலில் வடித்த விழியொன்று மூடிக் கொண்டதே(ன்) இன்று.."
 
"அன்னை தந்த சீதனமோ...என்னை வெல்லும் நாடகமோ.."



4) நிலவுக்கு என்மேல் என்னடி கோபம... "சித்திரை நிலவே... அத்தையின் மகளே சென்றதை மறந்து விடு..."



5) ஏதோ மனிதன் பிறந்து விட்டான...."பெண்ணே தெய்வம், அன்னை கடவுள், பெருமை என்று பேசுகிறான்.... பெண் பேதைகள் தீமைகள் என்றும் அவனே மறுநாள் ஏசுகிறான்..."

"...நாயாய் மனிதன் பிறந்திருந்தாலும்....ஆறறிவுடனே, பேச்சும் பாட்டும், அறிந்தே மனிதன் பிறந்து விட்டான்... அந்த ஆறாம் அறிவைத் தேறா அறிவாய் அவனே வெளியில் விட்டு விட்டான்..."


6) ஜாவ்ரே ஜாவ் இந்த கேட்டுக்கு நீ ராஜா... "அகப்பட்ட மனிதரைப் பிடிக்கிற வேலைக்கு ஆர்ப்பாட்டம் என்ன ராஜா...."
 
"பம்பம்பம்" என்பதும் அதைத் தொடரும் இசையும்...
"காக்கைக்கும் குருவிக்கும் கடல் சொந்தமோ? கழுதைக்குச் சுமக்கிற பொதி சொந்தமோ..."
 
 மிகத் தேடி எடுத்தேன்    வீடியோவை. கட் ஆகி கட் ஆகி வருவது சோகம்.



7) நேற்று வரை நீ யாரோ நான் யாரோ... "யான் நோக்குங்கால் நிலம் நோக்கும் நோக்காக்கால் தான் நோக்கி மெல்ல நகும்"
 "உன்னை நான் பார்க்கும் போது மண்ணை நீ பார்க்கின்றாயே" 


"நேரிலே பார்த்தால் என்ன. நிலவென்ன தேய்ந்தா போகும்? புன்னகை புரிந்தால் என்ன? பூமுகம் சிவந்தா போகும்?



8) எங்கேயோ பார்த்த முகம்..."இருவிழி மேடையில் எழுதிய ஓவியம்...புதுநிலவோ... பூச்சரமோ... மதுமலரோ... மாணிக்கமோ..."