செவ்வாய், 3 ஏப்ரல், 2018

கேட்டு வாங்கிப்போடும் கதை : என்னைக் கொஞ்சம் தனியாக அழவிடுங்கள்:) - அதிரா





மிக அமைதியான சூழல்.. வைகாசி மாதத்து வெண் பனிக் காற்று சில்லென விசிக்கொண்டிருக்கிறது... ஆள் நடமாட்டமே இல்லாத- வடக்குக் கரை ஓரத்திலே:), தேம்ஸ் ஆற்றங் கரையிலே, அந்த பென்னாம் பெரிய ஆல மர நிழலிலே.. ஒரு மான் தோலிலே... சுவாமி புலாலியூர்ப் பூஸானந்தா அவர்கள்... அமர்ந்து, தியானத்தில் இருக்கிறார்..

ஆண்டவனை வேண்டிக் கொண்டார், ஆண்டவா இன்றாவது என் தியானம் கலைந்திடாமல் நான் முழுவதுமாக ஈடுபடவேண்டும்.. எனக்கு மோட்சம் கிடைக்க வேண்டும் அதுக்கு நீ என்னோடிருந்து துணை புரிய வேண்டும் ஆனை முகனே!!!

வேண்டியபடி, கண்களை மூடி, ஆழ்ந்த தியானத்துள் மெதுவாகப் போய்க் கொண்டிருந்த வேளை.. காதிலே மணிச்சத்தம்.. கிலிங்.. கிலிங்.. ஆழ்ந்த தியானத்தை விட்டு, ஆரம்ப தியானத்துக்கு வந்து, காதைக் கூர்மையாக்குகிறார்:)... இவ்விடத்தில் ஆராக இருக்கும்.. சரி எதுவாயினும் இன்று நான் தியானத்தை முடித்தே தீருவேன் என.. மீண்டும் காதை மூடி தியானத்துள் நுழையும் வேளை...

ஆஆஆ கண்களை இறுக்கி மூடு... என் தியானம் இன்று கலைந்திடவே கூடாது!!!!:)

மீண்டும் காதை மூடி தியானத்துள் நுழையும் வேளை..... மெல்லிய விசும்பல்... ஆ... பெண் குரல்... ..சலங்கை, அப்போ ஒரு பெண் தான்:) .. இந்த மனித நடமாட்டமே இல்லாத பகுதியில் அதாரது....

கண்களைத் திறக்கிறார், அழகே உருவாக ஒரு பெண்.. ஆற்றிலே விழுந்து தற்கொலை செய்ய எத்தனிக்கிறார்... உடனே போனாப்போகுது என சுவாமி பூஸானந்தா எழுந்து ஓடுகிறார்... பெண்ணே நீ ஆர்? எதுக்காக இங்கு குதிக்க எத்தனிக்கிறாய்?..

சுவாமி பிளீஸ் என்னைத் தடுக்காதீர்கள்.. நான் வாழ விரும்பவில்லை, எனக்கு இவ்வுலக வாழ்க்கை வெறுத்து விட்டது, இந்தத் துன்பங்களிலிருந்து விடுதலை பெற ஒரே வழி நான் சாவதுதான்...

அட லூசுப் பெண்ணே.. அப்படி என்ன துன்பம் உனக்கு நேர்ந்து விட்டது? என்னோடு வா, அந்த ஆலமரத்தடியில் இருந்து பேசுவோம்.. உன் துன்பங்களுக்கெல்லாம் என்னால் முடிஞ்ச வரை விடுதலை பெற்றுத் தருகிறேன், அதன் பின்னர் நீ வாழ்வா சாவா என்பதை முடிவு செய்..

எனக்கூறி அழைத்து வந்தார் மரத்தடிக்கு. பூஸானந்தாவின் புன்னகை தவழும் தெய்வீக முகத்தைப் பார்த்து அப் பெண்ணுக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது..[ஹா ஹா ஹா அமைதி அமைதி:)]

சுவாமி.. நான் சொன்னால் நம்பவா போகிறீர்கள்?, எனக்கு வீட்டில் அழக்கூட சுகந்திரம் இல்லை சுவாமி...

என்னைக் கொஞ்ச நேரம் தனியாக இருக்கவிடுங்கள்.. நான் இப்பவாவது அழப்போகிறேன்..

என் துயரங்களை இங்கே இறக்கி வைக்கப் போகிறேன்.
விதியின் சுழற்சியை மீறமுடியாத நேரங்களிலெல்லாம் இப்படி அழ விரும்புவது என் பழக்கம், ஆனால் முடியவில்லையே...

பூமி தன் கடமையை ஒழுங்காகச் செய்கிறது.
மேகம் தன் கண்களை அடிக்கடி திறந்து மழையாகப் பொழிகிறது.
காலங்களின்படி புஷ்பங்கள் மலர்கின்றன.
அலுப்புச் சலிப்பில்லாத இயற்கையின் ஓட்டத்தில் எனக்கு மட்டும் ஏனோ, அடிக்கடி சலிப்பு வருகிறது. இனம் தெரியாத பயம் வருகிறது.
காரணம் இல்லாமல் துணிச்சலும் வருகிறது.
ஒன்றும் புரியாத நேரத்தில், ஓ வெனக் கதறவேண்டும்போல் இருக்கிறது.
ஒருதடவை கண்ணீர் விட்டு அழுது முடித்தால், கனம் உள்ளத்தில் குறையுமோ என்னவோ.. ஆனால் அழ முடியவில்லையே.

நான் ஒரு வலை பின்னினேன், அதில் நானே சிக்கிக் கொண்டேன்.
நான் ஒரு காடு வளர்த்தேன், அதிலிருந்து வெளியேற எனக்கே வழி தெரியவில்லை. நான் ஒரு கிணறு வெட்டினேன், அதில் நானே விழுந்து விட்டேன்.
ஆக்கியதும் நானே.. என்னை அழித்துக் கொண்டதும் நானே...

சிந்திக்கச் சிந்திக்க எனக்கே என்மீது கோபம் வருகிறது.
என்னை நானே கோபிக்காமல் இருக்க வேண்டுமென்றால், நன்றாக அழ வேண்டும்.
என்னைத் தனியாக அழ விடுங்கள் சுவாமி.

பாம்பின் அழகை நான் ரசிக்கிறேன். புலியின் மீது அழகான கோடுகள் இருக்கின்றனவே, அவற்றை நான் தடவிப் பார்க்கிறேன்.

ஆனால் சுவாமி.., பாம்பு என்னைக் விழுங்குகிறது, புலி என்னைக் கடிக்கிறது. நான் என்ன செய்வேன், என்னைத் தனியாக இருக்க விடுங்கள்.. மீ அழப்போகிறேன்...

கற்பூரம் எரிந்து போனபிறகு, அதன் கரித்தூள்கூட மிஞ்சுவதில்லை.
நான் கற்பூரமாக இருந்திருக்கக் கூடாதா?... என்னுடைய காலடிச் சுவடுகள் பூமியில் பதியாமல் இருந்திருக்குமே.

எனது சிந்தனைப் புஸ்பங்களுக்கு நானே உரம். என்னைத் தின்ற பிறகுதான், அவை பூத்துக் குலுங்குகின்றன.

தொளிலாளி கட்டிய வீட்டில், தொழிலாளி குடியிருக்க முடியாததுபோல, எனது சிந்தனைகள் எனக்கு ஆறுதல் அளிக்கவில்லை.

இறைவனிடம் முறையிட வேண்டும்போல் இருக்கிறது.
இறைவன், தான் வரமாட்டேன் என்கிறார். என்னை அங்கே வரச் சொல்லுகிறார். விரைவில் போய்விடலாமா என எண்ணுகிறேன்.
கால்கள் சங்கிலிகளால் பிணைக்கப் பட்டிருக்கின்றன.
சாலை சுத்தமாக இருக்கிறது, ஆனாலும் பயணத்தைப் பற்றிப் பயமாக இருக்கிறது.

பிறருக்காகவே நான் இங்கே இருக்க வேண்டியிருக்கிறது. என்னுடைய அபிலாஷைகளெல்லாம் ஆகாயத்தில் இருக்கின்றன.

எனக்காக வாழ வேண்டும் என்றால், நான் மேலே போய் விடவேண்டும்...

ஆனால் பிறகு ஆருக்காவது நான் திரும்பி வரவேண்டும் என்றால், இறைவன் அதுக்கொரு வழி வைக்கவில்லையே.. என்ன செய்வேன்?... அதையும் சிந்திக்க வேண்டி இருக்கே... சுவாமி..

என்னைக் கொஞ்ச நேரம் தனியாக இருக்கவிடுங்கள் நான் அழப்போகிறேன்.

நான் ஒரு புத்தி இல்லாப் பெண்ணாக இருந்திருந்தால், எதையும் சிந்தித்திருக்க மாட்டேன். தாயை அறியாத கன்றுபோல, வாயும் வயிறுமாக வாழ்ந்திருப்பேன்.

நினைக்கத் தெரிந்த மனதை எனக்கு வைத்தது, இறைவன் செய்த குற்றம். அந்தக் குற்றத்துக்கான தண்டனையை, நான் அனுபவிக்கின்றேன்.

இறைவனின் நியதிகளுக்கு நான் கட்டுப் பட்டாக வேண்டும். ஆனால் அவனோ என் தேவைகளை உணர மாட்டானாம், நான் என்ன செய்வேன்ன்?..

நான் அழத்தான் வேண்டும், என்னைத் தனியாக அழ விடுங்கள்...

எதை முழுதாகச் சொல்ல முடியவில்லையோ, அதை உளறிக் கொட்டுவது என் வழக்கம்...உடைந்து போன கண்ணாடித் துண்டுகளை, ஒவ்வொன்றாக எடுத்து ஒட்ட வைக்க முடியுமோ சுவாமி?? முடியுமெனில்.. சிதறிக் கிடக்கும் இந்த என் சிந்தனைகளை, ஒட்ட வைத்துப் பாருங்கள்... இப்போ சொல்லுங்கள் சுவாமி.. நான் சாகப் போனதில் தவறு இருக்கிறதா...?.

இதோ பார் குழந்தாய், என்னை அழ விடுங்கள் அழவிடுங்கள் எனச் சொல்லிச் சொல்லியே நீ நிறைய அழுது தீர்த்து விட்டாய்.. இப்போ நீ மிகவும் தெளிவடைந்து விட்டாய், துன்பம் வரும்போது சாய்ந்து அழ ஒரு தோள் தேவை, அப்படி தோள் இல்லாதோருக்கே இப்படியான மரண சிந்தனை வந்து விடுகிறது..

இனி நான், உன்னை இப்போ தேம்ஸ் இல் தள்ளினால்கூட நீ சாக மாட்டாய்:), நீந்தி வந்திடுவாய்:).. தைரியமாகப் போ பெண்ணே.. போய் உன் படிப்பைக் கவனி:), குடும்பத்தோடு நலமோடு வாழ்..!!! “இதுவும் கடந்து போகும்”:)..

என ஆசீர் வதித்துவிட்டு:).. இன்றைய தியானம் கலைந்து விட்டதே என்பதை விட, என்னால் ஒருவரைக் காப்பாற்ற முடிந்ததே.. இதை விடவா தியானம் பெரிது எனும் மகிழ்வோடு சுவாமி புலாலியூர்ப் பூஸானந்தாவும், தன் மான் தோலைச் சுருட்டி எடுத்துக் கொண்டு ஆச்சிரமத்தை நோக்கிச் செல்கிறார்:)..

இப்படிக்கு,
பல பல அரிய பெரிய விருதுகளை வாங்கிக் குவித்தவர்:), தமிழ்ப் பண்டிதர்:) + வித்தகர்:), கதாசிரியர்- அதிரா:).

ஊசிக் குறிப்பு:
கண்ணதாசன் அங்கிளின் வசனங்களைப் பெறுக்கி  எடுத்துப் புகுந்து விளையாடியிருக்கிறேன்:)..


ஊசி இணைப்பு:

-------------------------------------------__()__------------------------------------------



139 கருத்துகள்:

  1. இனிய காலைவணக்கம் ஸ்ரீராம், துரை செல்வராஜு அண்ணா பானுக்கா, தேம்ஸ்காரர்கள் எல்லோருக்கும்

    கீதா

    பதிலளிநீக்கு
  2. ஓ இன்று அதிரடியின் கதையா!! ஆஹா!! வரேன் வரேன்...பூஸார் ஏன் அழுகிறார்..பார்க்கணும்

    கீதா

    பதிலளிநீக்கு
  3. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.

    இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ சார்.,

    பதிலளிநீக்கு
  4. அதிரா கதையை ரொமப்வே ரசித்தேன் அப்பெண் சொல்லும் வரிகள் ஆஹா!

    அது ஊசி இணைப்புக்கு வரேன்...அந்த ஞானாசிரியர் வேறு யாருமல்ல நமது அனுபவம் தான்!! சரியா? எந்த ஆசிரியரும் கற்றுத் தராத பல பாடங்களை நம் அனுபவ ஆசிரியர் கற்றுத்தந்துவிடுகிறார். அதே சமயம் வகுப்பில் ஆசிரியர் சொல்லுவதைக் கேட்காமல் தூங்கலாம் ஆனால் இந்த அனுபவ ஆசிரியரிடம் அப்படித் தூங்க முடியாது...தூங்கினால்...அதைக் கவனிக்காமல் ஆராயாமல் நம் அறிவு தூங்கிவிட்டால் நாம் அறிவிலிகள் ஆகிவிடுவோம்...இல்லையா பெண்ணே (இது இங்கு அழும் அந்தப் பெண்!!) மற்றும் புலியூர் பூஸானந்தா?!! என்ன சொல்லுகின்றீர்கள்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  5. அன்பின் ஸ்ரீராம் மற்றும் கீதா அனைவருக்கும் வணக்கம்...

    பதிலளிநீக்கு
  6. அது சரி தேம்ஸ் கரையில் ஆலமரமா!!??

    ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா..

    சரி சரி அப்புறமா வரேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  7. பாருங்க புலியூர் பூஸானந்தாவைக் கூட இந்த அனுபவம் ஒரு படி மேலே கொண்டு போயிருக்கிறதில்லையா !!!! பூஸானந்தா வாழ்க!

    கீதா

    கீதா

    பதிலளிநீக்கு
  8. காலையிலேயே ரொம்பவும் ஜிந்திக்க வைத்து விட்டது கதை....

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
  9. பூனையார் ஸ்வாமிகள் - பாசி மணி பவள மணி ஏதும் போட்டுக்காம இருக்கிறப்பவே கவனிச்சேன்...

    இது நல்ல ஸ்வாமிகள் தான்...எண்டு...

    அதுசரி... காலை டிபனுக்கு என்ன செய்வார் பூனையார்?!....

    பதிலளிநீக்கு
  10. இறைவனின் நியதிகளுக்குக் கட்டுப்ப்ட்டு விட்டால் தான் -

    இறை வடிவம் ஆகி விடுமே - இதயம்...

    அப்புறம் இறைவன் வேறு வரவேண்டுமா!....

    பதிலளிநீக்கு
  11. நான் ஒரு வலை பின்னினேன், அதில் நானே சிக்கிக் கொண்டேன்.
    நான் ஒரு காடு வளர்த்தேன், அதிலிருந்து வெளியேற எனக்கே வழி தெரியவில்லை. நான் ஒரு கிணறு வெட்டினேன், அதில் நானே விழுந்து விட்டேன்.
    ஆக்கியதும் நானே.. என்னை அழித்துக் கொண்டதும் நானே...//

    இது கண்ணதாசன் மாமாவின் வரிகளோ?!!

    உண்மையான வரிகள்! மனிதர்கள் எளிய வாழ்க்கையைத் தாங்களே சிக்க வைத்துக் கொள்கிறார்கள்தான்! எதையோ நோக்கி ஓடிக் கொண்டு! அப்புறம் அதிலிருந்து மீள வேண்டும் என்று நினைக்கும் போது ஒரு சிலருக்கு மீள முடிகிறது ஒரு சிலருக்குக் காலம் கடந்துவிடுகிறது!!

    கீதா

    பதிலளிநீக்கு
  12. ஒரு மாதத்திற்கும் மேல் ஆகிறது வலைப்பக்கம் வந்து. இன்று முதல் வலை உலாவைத் தொடங்கலாம் என்று வந்தால் அதிராவின் கதை! தத்துவங்கள் பல அடங்கிய கதை. மிகவும் யோசிக்க வைக்கும் வரிகள். இறுதியில் தெரிந்து கொண்டேன் கவிஞர் கண்ணதாசன் அவர்களின் வரிகளை கோட் செய்திருக்கிறீர்கள் என்று. அவை எவை என்பதெல்லாம் தெரியவில்லை. ஆனால் அவர் நிறையவே வாழ்க்கையில் அடி வாங்கியவர் தானே தன்னைச் சுற்றிப் பின்னிக்கொண்ட வலையால் என்பது மட்டும் தெரியும். அதிலிருந்து மீளும் வகையில் நிறைய தத்துவாப்பாடல்களும் அவரிடமிருந்து வெளிவந்தன. அதுவும் குறிப்பாக பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா அப்பாடலின் வரிகள் முழுவதுமே அவரின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது என்றே தோன்றும்.

    நல்ல கதை. அதுவும் முடிவு புலியூர் பூசானந்தா இனி மோட்சத்தைப் பற்றி இப்போதைக்கு நினைக்கமாட்டார் என்று நினைக்கிறேன். இன்னும் இப்பெண்ணைப் போன்று நிறையப்பேரைக் காப்பாற்ற வேண்டி வருமோ! அவருக்கும் இது ஒரு நல்ல அனுபவம் தான்.

    விளையாட்டுப் பிள்ளைக்குள் இத்தனை தத்துவங்களும்.

    வாழ்த்துகள் அதிரா.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  13. பூஸானந்தாவின் புன்னகை தவழும் தெய்வீக முகத்தைப் பார்த்து அப் பெண்ணுக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது..[ஹா ஹா ஹா அமைதி அமைதி:)]//

    இந்த அடைப்புக் குறிக்குள் இருக்கும் டார்க் செய்யப்பட்ட வரிகள் பூஸாநந்தா யாரைச் சொல்லிக் கொள்கிறார் என்று தெரியாதாக்கும்....அதுவும் ஞானியானவர்!!! ஹும் காலம் கெட்டுப் போச்சு!! ஹா ஹா ஹா ஹா...ஏஞ்சல் கைன்ட்லி நோட் திஸ் பாயின்ட்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  14. //நினைக்கத் தெரிந்த மனதை எனக்கு வைத்தது, இறைவன் செய்த குற்றம். //

    நினைக்கத் தெரிந்த மனதிற்கு மறக்கவும் கற்றுக் கொடுத்திருக்கிறாரே இறைவன்!!!!!! புலியூர் பூஸானந்தா இந்தத் தத்துவத்தை அப்பெண்ணிடம் சொன்னது என் காதில் விழுந்ததே அதிரா!

    கீதா

    பதிலளிநீக்கு
  15. அதுசரி... காலை டிபனுக்கு என்ன செய்வார் பூனையார்?!....//

    ஹா ஹா ஹா ஹா ஹா ஹையோ துரை அண்ணா சிரித்துவிட்டேன்.....அதுக்குத்தான் ஒருகூழ் செய்து வைத்திருக்கிறாரே!! அது அவரது தவப்பயனால் கெடவே கெடாதாம். அதுதான் அவருக்கு உணவாம்! சில சமயம் அதுவும் இல்லாமல் டயட்டில்/விரதம்....உங்களுக்குத் தெரியுமா பூஸானந்தா ஜிம் எல்லாம் போவாராக்கும்...

    கீதா

    பதிலளிநீக்கு
  16. இறைவனின் நியதிகளுக்குக் கட்டுப்ப்ட்டு விட்டால் தான் -

    இறை வடிவம் ஆகி விடுமே - இதயம்...

    அப்புறம் இறைவன் வேறு வரவேண்டுமா!..//

    அட! அருமையான வரிகள்!! ரசித்தேன் துரை அண்ணா!!

    கீதா

    பதிலளிநீக்கு
  17. //பல பல அரிய பெரிய விருதுகளை வாங்கிக் குவித்தவர்:), தமிழ்ப் பண்டிதர்:) + வித்தகர்:), கதாசிரியர்- அதிரா:).//

    அத்தனை பட்டங்களும் பொருந்தும் அதிராவிற்கு.

    அன்று ஒரு நாள் தொலைக்காட்சியில் காட்டினார்கள் எல்லோரும் ஒரு இடத்தில் இருந்து அழுது கொண்டு இருப்பதை,
    மன அழுத்தம் குறையுமாம். சிரிக்கும் யோகா, கைதட்டும் யோகா என்பது போல் அழும் யோகாவாம்.
    காசை வாங்கி கொண்டு அழச் சொல்லி மன பாரத்தை குறைக்கிறார்கள். நம் அதிரா காசு எல்லாம் வாங்காமல்.
    இலவசமாய் மனபாரம், மன அழுத்தம் குறைக்க அழகாய் அழ சொல்லி விட்டார்.

    //பூமி தன் கடமையை ஒழுங்காகச் செய்கிறது.
    மேகம் தன் கண்களை அடிக்கடி திறந்து மழையாகப் பொழிகிறது.
    காலங்களின்படி புஷ்பங்கள் மலர்கின்றன.
    அலுப்புச் சலிப்பில்லாத இயற்கையின் ஓட்டத்தில் எனக்கு மட்டும் ஏனோ, அடிக்கடி சலிப்பு வருகிறது. இனம் தெரியாத பயம் வருகிறது.
    காரணம் இல்லாமல் துணிச்சலும் வருகிறது.
    ஒன்றும் புரியாத நேரத்தில், ஓ வெனக் கதறவேண்டும்போல் இருக்கிறது.
    ஒருதடவை கண்ணீர் விட்டு அழுது முடித்தால், கனம் உள்ளத்தில் குறையுமோ என்னவோ.. ஆனால் அழ முடியவில்லையே.//

    உண்மை. கண்ணீர் விட்டு அழுதால் உள்ளத்தின் பாரம் குறையும்.



    பதிலளிநீக்கு
  18. ஊசி இணைப்பு அருமை.
    அதிராவின் கையெழுத்து அழகு.

    பதிலளிநீக்கு
  19. மனதில் வைத்துக் கொண்டு இருக்காதே!மனம் விட்டு அழுது விடு!
    வாய் திறந்து அழு என்று பெரியவர்கள் சொல்வார்கள்.
    அழுதால் மனபாரம் மன இறுக்கம் அகன்று விடும்.

    இறைவனிடமும் அழுது முறையிடுவோர் உண்டு.

    காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
    ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது
    என்று ஞானசம்பந்தர் பாடுகிறார்.

    //மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்து உன்விரை
    யார்கழற்குஎன்
    கைதான் தலைவைத்துக் கண்ணீர் ததும்பி
    வெதும்பியுள்ளம்
    பொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி சயசய
    போற்றியென்னும்
    கைதான் நெகிழ விடேன்உடை யாய்என்னைக்
    கண்டுகொள்ளே. //

    மாணிக்கவாசகர்.
    சொல்கிறார்.

    மருத்துவர்களும் அழுதால் கண்ணில் உள்ள மாசுகள் அகலும் என்கிறார்கள்.

    அதிரா சொல்வது போல் அழுது அதிராவின் சிரிப்பு வெடிகளை படித்து ஆறுதல் அடையலாம்.


    பதிலளிநீக்கு
  20. மரத்தடிக்கு. பூஸானந்தாவின் புன்னகை தவழும் தெய்வீக முகத்தைப் பார்த்து அப் பெண்ணுக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது//
    ..[

    அழும் பெண்ணின் நம்பிக்கை சரியானது.
    நல்ல சாமியார் , நல்லதே சொல்லி நல்வழி காட்டினார்.
    நல்லதே பகிரும் தளம் அல்லவா?

    பதிலளிநீக்கு
  21. ஸ்ரீராம் நலமா? நண்பர்கள், சகோதரிகள் அனைவரும் நலமா? இனி வலையுலகம் முன்னர் போல் வருவேன் என்று நம்புகிறேன். பார்ப்போம்.

    துளசிதரன்

    (இதையும் துளசி அனுப்பியிருந்தார் முதலில் இது வந்திருந்தது இதைக் கவனிக்காமல் நான் விட்டதால் இப்போது.--கீதா)

    பதிலளிநீக்கு
  22. நல்ல கையெழுத்தில் அஅதிர்வினால் தத்துவம் அருமை.

    வாழும் விதத்தில் வாழ்ந்தால் இருக்கும் இடமே சுகம். என்னவோ மேலோகத்தில் பாலும் தேனும் பாய்ந்தோடும், நமக்குக் கவலையில்லை என நினைக்கிறோம். எங்கும் நம் செயல்கள்தான் நமக்கான வரவைத் தீர்மானிக்கின்றன. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  23. வணக்கம் சகோதரரே

    நல்ல சிறப்பான கதை. சகோதரி அதிரா அவர்கள் எழுதிய கதை மனதை நெகிழச் செய்து விட்டது.

    /இறைவனிடம் முறையிட வேண்டும்போல் இருக்கிறது.
    இறைவன், தான் வரமாட்டேன் என்கிறார். என்னை அங்கே வரச் சொல்லுகிறார். விரைவில் போய்விடலாமா என எண்ணுகிறேன்.
    கால்கள் சங்கிலிகளால் பிணைக்கப் பட்டிருக்கின்றன.
    சாலை சுத்தமாக இருக்கிறது, ஆனாலும் பயணத்தைப் பற்றிப் பயமாக இருக்கிறது.

    பிறருக்காகவே நான் இங்கே இருக்க வேண்டியிருக்கிறது. என்னுடைய அபிலாஷைகளெல்லாம் ஆகாயத்தில் இருக்கின்றன.
    /எனக்காக வாழ வேண்டும் என்றால், நான் மேலே போய் விடவேண்டும்...

    ஆனால் பிறகு ஆருக்காவது நான் திரும்பி வரவேண்டும் என்றால், இறைவன் அதுக்கொரு வழி வைக்கவில்லையே.. என்ன செய்வேன்?... அதையும் சிந்திக்க வேண்டி இருக்கே... சுவாமி/

    வரிகளின் தாக்கம் மனதில் அலைபாய்ந்து அழச்செய்கிறது. ஆம். உண்மை.
    அழுகை மனபாரத்துக்கு சிறந்த மருந்து.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  24. இப்படிக்கு,
    பல பல அரிய பெரிய விருதுகளை வாங்கிக் குவித்தவர்:), தமிழ்ப் பண்டிதர்:) + வித்தகர்:), கதாசிரியர்- அதிரா:).//

    ஹா ஹா ஹா ஹா இப்படி ஊசி கேப்பில் கூட நம்மைச் சொல்லிக்கோணூம் இல்லையா அதிரா...

    கதை வித்தியாசமா சிந்திச்சிருக்கீங்க..அதிரா! நல்லாருக்கு!! (அது சரி சமீபத்தில் நிறையப் புராணக் கதைகள் படிச்சீங்களோ!!! ஹிஹிஹிஹிஹி..)

    கீதா

    பதிலளிநீக்கு
  25. கதையை ரசித்தேன்...பெற்ற விருதுகளை சற்று அதிகமாகவே..

    பதிலளிநீக்கு
  26. எல்லாம் சரி அந்தப்பெண் யாரு ?

    வெகுகாலமாக ஜேம்ஸ் ஊரணியில் குதிக்கப்போவதாக பீடா விட்டவர் இல்லை என்று நம்பி விட்டேன்.

    பட்டங்கள் கிலோ கணக்கில் வாங்கி விட்டமைக்கு வாத்துகால்.

    பதிலளிநீக்கு
  27. ஆங்ங்ங்ங்ங் வாங்கோ வாங்கோ .. இனிய காலை வணக்கம் _()_.. கீதா.. ஸ்ரீராம்..

    பாருங்கோ உங்கட காலையில் வந்தால் மட்டும்தான் நீங்க எல்லோரும் குட்மோனிங் ஜொள்ளுவீங்க:).. எங்கட காலையில குட்மோனிங் எங்களுக்குச் சொல்ல மாட்டீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஆனாலும் பாருங்கோ அதிராவுக்கு “மட்டும்” பென்னாம் பெரிய மனசூஊஊஊஊஊ:) நான் உங்கட காலைக்கும் சொல்லுவேன்ன் எங்கட காலைக்கும் ஜொள்ளுவேன்:)).. இதை ஆரும் புரிஞ்சுக்கவே மாட்டேன் என்கிறீங்களே:))... என்ர கடவுளே குயின் அம்மம்மா ஜொன்னவ.. பிள்ள புதன் பின்னால சுத்துதாம் எதுக்கும் வாயை அடக்கு அடக்கு என:)).. தெரிஞ்சாலும் அடங்க மாட்டுதாமே:))..

    ஓஓஓஓஓ இண்டைக்கு அதிராட கதையோ ஹா ஹா ஹா நில்லுங்கோ படிச்சிட்டு வாறேன்:)..

    பதிலளிநீக்கு
  28. //ஓ இன்று அதிரடியின் கதையா!! ஆஹா!! வரேன் வரேன்...பூஸார் ஏன் அழுகிறார்..பார்க்கணும்

    கீதா//

    ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கீதா:).. பூசார் எங்கே அழுகிறார்:) உபதேசம் எல்லோ பண்ணுகிறார்:)) அவர்தான் ஞானி ஆகிட்டாரெல்லோ:)

    பதிலளிநீக்கு
  29. ///.கீதா
    அதைக் கவனிக்காமல் ஆராயாமல் நம் அறிவு தூங்கிவிட்டால் நாம் அறிவிலிகள் ஆகிவிடுவோம்...இல்லையா பெண்ணே (இது இங்கு அழும் அந்தப் பெண்!!) மற்றும் புலியூர் பூஸானந்தா?!! என்ன சொல்லுகின்றீர்கள்!!! ///

    கரீட்டு கீதா கரீட்டூஊஊ

    ///அது சரி தேம்ஸ் கரையில் ஆலமரமா!!??

    ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா..//

    முந்தின காலத்தில இல்லைத்தான் கீதா, இது நான் விதை போட்டு முளைக்கப் பண்ணினேன்:)).. நம்போணும்.. புலாலியூர்ப் பூஸானந்தா பொய் ஜொள்ளமாட்டாரெல்லோ:)..

    பதிலளிநீக்கு
  30. ///துரை செல்வராஜூ said...
    காலையிலேயே ரொம்பவும் ஜிந்திக்க வைத்து விட்டது கதை....

    வாழ்க நலம்...//

    வாங்கோ துரை அண்ணன் .. நீங்களும் பிறந்த ஊரும் சுற்றுலாவும் அருமையாக இருக்குமென நம்புகிறேன்..
    நன்றி.. உண்மைதானே இபடியும் இடைக்கிடை சிந்திக்கத்தானே வேணும்:)

    பதிலளிநீக்கு
  31. //துரை செல்வராஜூ said...
    பூனையார் ஸ்வாமிகள் - பாசி மணி பவள மணி ஏதும் போட்டுக்காம இருக்கிறப்பவே கவனிச்சேன்...

    இது நல்ல ஸ்வாமிகள் தான்...எண்டு...///

    அப்பாடா துரை அண்ணனாவது நம்பிட்டாரே இது போதும்:).. துரை அண்ணன்.. புலாலியூர்ப் பூஸானந்தாவின் உள்ளத் தத்துவம் என்ன தெரியுமோ?:)... “நான் நல்லவர் வல்லவர் என்னை நம்புங்கோ எனச் சொல்லக் கூடாது, நம் செயலைப் பார்த்து அடுத்தவர்கள் எண்ணோனும் அப்படி”.. ஹா ஹா ஹா தத்துவம் பிடிச்சிருக்கோ?:).

    பதிலளிநீக்கு
  32. ///துரை செல்வராஜூ said...
    இறைவனின் நியதிகளுக்குக் கட்டுப்ப்ட்டு விட்டால் தான் -

    இறை வடிவம் ஆகி விடுமே - இதயம்...

    அப்புறம் இறைவன் வேறு வரவேண்டுமா!....///

    நீங்க சொல்வது உண்மை துரை அண்ணன், ஆனா இது துறவியானவர்களுக்கு அல்லது அதிராவைப்போல:) ஞானி ஆனோருக்குப் புரியும்:)).. ஆனா அந்த தேம்ஸில் சூஊஊஉசைட்டுப் பண்ணப்போன பெண் இன்னும் ஞானி ஆகாத காரணத்தால்:) அவ கடவுள் வருகிறார் இல்லை என எண்ணுகிறா:) ஹையோ ஹையோ:)..

    மிக்க நன்றி துரை அண்ணன்.

    பதிலளிநீக்கு
  33. புபூ-வின் தத்துவங்கள் தனிப்புத்தகமாக வெளிவந்திருக்கிறதா என சிலர் விஜாரிக்க் ஆரம்பித்திருக்கிறார்கள் ! அவருக்கு ஆசிரமம் ஒன்று தேம்ஸ் கரையில் கட்டுவதற்கு ரகசிய முயற்சி மேற்கொள்ளப்படுவதாக ஒரு வதந்தி பரவிவருகிறதே.. உண்மையாகிவிடுமோ எனவும் மேலும் சிலர் அஞ்சுகிறார்களாம்.
    புபூ-வைப்பற்றி ஃப்ளாஷ் செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன..

    பதிலளிநீக்கு
  34. என்னவெல்லாம் ஜொல்லி
    ஜமாளிக்க வேண்டியிருக்கிறது!?...

    எல்லாம் காலக் கெரகம்!...

    பூஸாரே...பூஸார்!...

    பதிலளிநீக்கு
  35. //இது கண்ணதாசன் மாமாவின் வரிகளோ?!!

    உண்மையான வரிகள்! மனிதர்கள் எளிய வாழ்க்கையைத் தாங்களே சிக்க வைத்துக் கொள்கிறார்கள்தான்! எதையோ நோக்கி ஓடிக் கொண்டு! அப்புறம் அதிலிருந்து மீள வேண்டும் என்று நினைக்கும் போது ஒரு சிலருக்கு மீள முடிகிறது ஒரு சிலருக்குக் காலம் கடந்துவிடுகிறது!!

    கீதா//

    கண்ணதாசன் அங்கிளுடையதுதான் கீதா, ஆனா என் பாசையில் ரைப் பண்ணினேன் கஸ்டப்பட்டு.. ஆராவது இதனைக் களவெடுத்து வேறு எங்காவது போட்டதைப் பார்த்தால், எனக்கு உடனேயே இன்ஃபோம் பண்ணிடுங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:)).. எதுக்கோ?:) ஓடிப்போய்க் கட்டிலுக்குக் கீழ ஒளிக்கத்தான்:)) ஹா ஹா ஹா...

    ///அப்புறம் அதிலிருந்து மீள வேண்டும் என்று நினைக்கும் போது ஒரு சிலருக்கு மீள முடிகிறது ஒரு சிலருக்குக் காலம் கடந்துவிடுகிறது!! //
    உண்மைதான், சின்ன வயதிலேயே அதாவது சுவீட் 16 இலயே என்னைப்போல:)[[[பிளீஸ்ஸ் அமைதி.. அமைதி:)... உண்மைகள் சில சமயம் கசக்கத்தானே செய்யும்:))]]] எல்லோருக்கும் ஞானம் பிறந்திட்டால் வாழ்க்கை எவ்ளோ நல்லதாக நகரும்:)).. ஆனா இந்த ஞானம் அக்கா காலெடுத்து வைக்கும்போதே பாதி வாழ்க்கையை எல்லோரும் கடந்து விடுகிறார்களே.. அதுதான் ஏனெனப் புரியவில்லை..

    சின்ன வயதிலேயே இப்படியான தத்துவங்கள்.. புலாலியூர்ப்பூஸானந்தாவின் நட்பு:) என்பன கிடைச்சால், பல சூசைட்டுகள் தவிர்க்கப் படலாம்:)).. இதை ஒரு மனுவாக எழுதி, ஏன் மோடி அங்கிளுக்கு அனுப்பக்கூடாது கீதா?:)... சரி சரி முறைக்காதீங்கோ:)) என் செக்:) லாண்ட் ஆகுமுன்பு மீயும் ஆசைக்கு பேசுவதை எல்லாம் பேசிப்போட்டு:) பின்பு நல்ல பிள்ளையாக அடக்க ஒடுக்கமாக நிற்கோணுமெல்லோ:))

    பதிலளிநீக்கு
  36. ஆஆஆஆ நீண்ட இடைவெளியின் பின்பு துளசி அண்ணன்.. வாங்கோ.. ஸ்கூல் பிள்ளைகளின் அன்புத்தொல்லையில் இருந்து விடுதலையாகி விட்டீங்கள்:) ஆனா எங்கள் தொல்லையில் இருந்து நீங்க டப்பவேஏஏஏஏஏஏ முடியாது:)).. ஹா ஹா ஹா.

    //அவர் நிறையவே வாழ்க்கையில் அடி வாங்கியவர் தானே தன்னைச் சுற்றிப் பின்னிக்கொண்ட வலையால் என்பது மட்டும் தெரியும். அதிலிருந்து மீளும் வகையில் நிறைய தத்துவாப்பாடல்களும் அவரிடமிருந்து வெளிவந்தன. அதுவும் குறிப்பாக பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா அப்பாடலின் வரிகள் முழுவதுமே அவரின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது என்றே தோன்றும்.//

    உண்மைதான் துளசி அண்ணன்.. கண்ணதாசன் அங்கிள் சொல்லியிருக்கிறார்.. “நான் அனுபவப்பட்டபின்பே இவற்றை எல்லாம் உங்களுக்குச் சொல்கிறேன், அதனாலதான்.. எது நல்ல பாதை, எது கெட்ட பாதை.. என என்னால் தைரியமாக சொல்லித்தர முடியும், சொல்லித்தரும் தகுதியும் எனக்கிருக்கு” என.

    பரமசிவன் பாடல் அத்தனையும் தத்துவ வரிதானே.. எனக்கு மிகவும் பிடிக்கும்.. அதிலும் மிகப் பிடித்த வரி... “மதியாதார் தலைவாசல் மிதியாதே என்று.. மானமுள்ள மனிதனுக்கு ஒளவை சொன்னது.. அதில் அர்த்தம் உள்ளது”... உண்மைதானே.. நான் எப்பவும் வாழ்க்கையில், பெரிசு சிறிது, சாதி, சமயம், ஏழை பணக்காரர் எனப் பார்ப்பதே கிடையாது ஆனா மரியாதை கிடைக்காத இடத்துக்கு போக மனம் விரும்பாது..

    பதிலளிநீக்கு
  37. //நல்ல கதை. அதுவும் முடிவு புலியூர் பூசானந்தா இனி மோட்சத்தைப் பற்றி இப்போதைக்கு நினைக்கமாட்டார் என்று நினைக்கிறேன். இன்னும் இப்பெண்ணைப் போன்று நிறையப்பேரைக் காப்பாற்ற வேண்டி வருமோ! அவருக்கும் இது ஒரு நல்ல அனுபவம் தான்.

    விளையாட்டுப் பிள்ளைக்குள் இத்தனை தத்துவங்களும்.

    வாழ்த்துகள் அதிரா.

    துளசிதரன்//

    சுறு:)க்கி சுறு:)க்கிப் பின்னூட்டம் எழுத முயற்சிக்கிறேன்:) முடியல்லியே:) ஒரே ஷையா வருது என் பின்னூட்டம் பார்த்து எனக்கே:)) ஆனாலும் இது ஒன்றும் புதிசில்லையே எல்லோருக்கும்:)) ஹா ஹா ஹா..

    யேஸ் யேஸ்.. பு.பூஸானந்தாவுக்கு இன்னும் நிறைய வேலை இருக்கு:)) ஆச்சிரமம் கட்டோணும் தேம்ஸ் கரையில்:) அதுக்கு நிதி திரட்டோணும்:).. ஆட்கள் பலமும் தேவை:)) ஹ ஹா ஹா மிக்க நன்றி துளசி அண்ணன்:))..

    ஊசிக்குறிப்பு:
    ஆச்சிரமத்துக்கு அன்பளிப்புக்கள்.. கூச்சமின்றி:) ஏற்றுக்கொள்ளப்படும்:)).. நீங்களும்.. எல்லோரும்:) கூச்சப்பட்டிடாமல் வழங்குங்கோ:))

    பதிலளிநீக்கு
  38. ///இந்த அடைப்புக் குறிக்குள் இருக்கும் டார்க் செய்யப்பட்ட வரிகள் பூஸாநந்தா யாரைச் சொல்லிக் கொள்கிறார் என்று தெரியாதாக்கும்....அதுவும் ஞானியானவர்!!! ஹும் காலம் கெட்டுப் போச்சு!! ஹா ஹா ஹா ஹா...ஏஞ்சல் கைன்ட்லி நோட் திஸ் பாயின்ட்!!!

    கீதா///

    ஹா ஹா ஹா கீதா:)) என் செக்:) க்கு இப்போதான் 2ம் ஜாமம் நடக்குது:) டோண்ட் டிசுரேப்பு கேர்ர்:))... அவ கண் முழிச்சால்:) மீ கண்ணை மூட வேண்டிவந்திடும்:)) அதுக்குள் கொமெண்ட்ஸ் போட்டு முடிகோணுமெல்லோ மீ:))

    பதிலளிநீக்கு
  39. //கரந்தை ஜெயக்குமார் said...
    அருமை
    அருமை//

    வாங்கோ கரந்தை அண்ணன்.. எனக்கிண்டைக்கு ஒரு முடிவு தெரிஞ்சாகோணும்ம்ம்ம்ம்ம்:)).. இதில் அந்தப் பெண் தற்கொலை செய்யப்போனது அருமையா?:).. இல்ல பு.பூஸானந்தா உபதேசம் பண்ணி காப்பாற்றியது அருமையா?:).. இல்ல பு.பூஸானந்தாவின் தியானம் கலந்தது அருமையோ?:)....

    ஹா ஹா ஹா வருகைக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  40. ///நினைக்கத் தெரிந்த மனதிற்கு மறக்கவும் கற்றுக் கொடுத்திருக்கிறாரே இறைவன்!!!!!!

    கீதா////

    பாழாய்ப்போன மனம் நல்லதை எல்லோ மறந்து துலைக்குது கீதா:)).. கெட்டதை எல்லாம் நீறு பூத்த நெருப்புப்போல மறக்காமல் அடிப்பெட்டியில ஒளிச்சு வச்சிருக்குதாமே:)) ஹா ஹா ஹா...

    இறைவனை ரொம்பத்தான் உச்சியில வைக்கிறீங்க கீதா:).. அந்த மனிசன் ஒண்டும் ரொம்ப நல்லவர் இல்ல ஜொள்ளிட்டேன்ன்:)) ஹா ஹா ஹா.. ஹையோ வைரவா என்னைக் காப்பாத்துங்ங்ங்ங்ன்ங்:))

    பதிலளிநீக்கு
  41. //ஹா ஹா ஹா ஹா ஹா ஹையோ துரை அண்ணா சிரித்துவிட்டேன்.....அதுக்குத்தான் ஒருகூழ் செய்து வைத்திருக்கிறாரே!! அது அவரது தவப்பயனால் கெடவே கெடாதாம். அதுதான் அவருக்கு உணவாம்! சில சமயம் அதுவும் இல்லாமல் டயட்டில்/விரதம்....உங்களுக்குத் தெரியுமா பூஸானந்தா ஜிம் எல்லாம் போவாராக்கும்...

    கீதா//

    ஹா ஹா ஹா புலாலியூர்ப் பூஸானந்தாவை அக்கு வேறு ஆணிவேறாக அலசி வச்சிருக்கிறீங்க கீதா:)) ஆனா அந்த கூழ் விசயம் தான் கொஞ்சம் இடிக்குது:)) பு.பூஸானந்தாவுக்கு பறப்பன நடப்பன நீந்துவன அனைத்துமே அன்பாக கிடைக்கும் உணவுகள் தான்:)).. கடவுள் கொடுப்பதை பூஸானந்தா மறுக்காமல் உண்பார்:)).. ஹா ஹா ஹா ஹையோ புதன் ஓவராப் பின்னால சுத்துதே எனக்கு:))

    பதிலளிநீக்கு
  42. அதிரா காலை வணக்கம்..இந்தாங்க பிடிங்க!!! ஹா ஹா ஹா நாங்களும் ஜொள்ளுவோம்ல!!

    கீதா

    பதிலளிநீக்கு
  43. புதன் ஓவராப் பின்னால சுத்துதே எனக்கு:))//

    ஹா ஹா ஹா அதிரா புதன் புத்திக்குனு சொன்னாலும் விசாலக்கிழமைதானே குரு!! அதுதான் உங்க பின்னாடி சுத்தோணும்!!! ஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
  44. வாங்கோ கோமதி அக்கா..

    //அத்தனை பட்டங்களும் பொருந்தும் அதிராவிற்கு.///
    ஹா ஹா ஹா ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் கோமதி அக்காவே அக்செப்ட் பண்ணிட்டா இனி எனக்கென்ன கலவை:) சே..சே.. கவலை:).. மிக்க நன்றி.. மிக்க நன்றி..

    ///அன்று ஒரு நாள் தொலைக்காட்சியில் காட்டினார்கள் எல்லோரும் ஒரு இடத்தில் இருந்து அழுது கொண்டு இருப்பதை,
    மன அழுத்தம் குறையுமாம். சிரிக்கும் யோகா, கைதட்டும் யோகா என்பது போல் அழும் யோகாவாம்.
    காசை வாங்கி கொண்டு அழச் சொல்லி மன பாரத்தை குறைக்கிறார்கள். நம் அதிரா காசு எல்லாம் வாங்காமல்.
    இலவசமாய் மனபாரம், மன அழுத்தம் குறைக்க அழகாய் அழ சொல்லி விட்டார்///

    ஓ அழுகைக்க்கும் யோகா இருக்குதோ?.. அது உண்மைதான், சாய்ந்து அழ தோள் இல்லாதபோதுதானே மன அழுத்தம் அதிகமாகிறது. நம் நாடுகளில் எதுக்காக ஒப்பாரி எனும் முறை கொண்டு வந்தார்கள் முன்னோர்கள்.. இப்படி மன அழுத்தத்தைக் குறைக்கத்தானே.

    இங்கு கோமதி அக்கா வெள்ளைகள் அழுவதில்லை.. கட்டிப்பிடிப்பதோடு சரி, மனதில் நினைத்து நினைத்து மெதுவாக விசும்புவார்கள்.. அழுவது அழகல்ல என்பதைப்போல நினைக்கிறார்கள்... அதனாலதான் இங்குள்ளோருக்கு டிப்பிரசன் அதிகம்.. இது மட்டுமல்ல தும்ம மாட்டார்கள் இரும மாட்டார்கள்..

    தும்மல் வரும்போது வாயை பெரிதாக ஆஆஆஆஆஆஅ என்பார்கள் உடனே ஒரு ரிசூவை எடுத்து மூடிப் பிடிப்பினம்.. பின்பு ம்ம்ம்ம்ம்ம் என மெதுவா சத்தமின்றி காத்து வெளியே போகும்.. இது அசிங்க மில்லாத செயல்தான் ஆனா உடம்புக்கு கேடு.

    எனக்கொரு கதை நினைவுக்கு வருது...

    ஊரில் ஒரு நாள் நான் குட்டிப் பிள்ளை பஸ்ஸில் போய்க் கொண்டிருந்தபோது.. சனம் குறைய இருந்துது பஸ்ஸில்... ஒரு 4,5 போய்ஸ் 20,21 வயசுக்காரர் ஓவரா சத்தமாக பேசிச் சிரித்தபடி வந்தார்கள்.. பார்வைக்கு நல்ல பிள்ளைகளாகத் தெரியவில்லை.

    அப்போ பஸ்ஸில் ஒரு மிக வயதான தாத்தா இருந்தவர்... அவர் ஆஆஆஆஆஆஆஆஆச்சூஊஊஊஊஊஊஊம் என அண்ட ஆகாசம் அதிரும்படி தும்மிட்டார்ர்..

    உடனே இந்த குரூப்பில் இருந்து ஒரு boy சத்தமாக சொன்னார்ர்... “அட சீஈஈஈஈ எந்த நாய் இப்படிக் குலைக்குது” என... பின்பு சத்தமாக சிரித்தார்கள்..

    ஆனா அச்செயல் எனக்கு கண்ணில் நீர் முட்டி விட்டது.. பாவம் அந்த தாத்தா கூனிப்போய் அமைதியாக இருந்தார்.

    பதிலளிநீக்கு
  45. ////அதிரா காலை வணக்கம்..இந்தாங்க பிடிங்க!!! ஹா ஹா ஹா நாங்களும் ஜொள்ளுவோம்ல!!

    கீதா///

    ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்:)) கேட்டெல்லோ வாங்க வேண்டிக்கிடக்குதூஊஊஊஊ:)) இருப்பினும் சொல்லிட்டீங்க மீயும் குட்மோனிங் சொல்றேன் கீதா:))

    பதிலளிநீக்கு
  46. //ஹா ஹா ஹா அதிரா புதன் புத்திக்குனு சொன்னாலும் விசாலக்கிழமைதானே குரு!! அதுதான் உங்க பின்னாடி சுத்தோணும்!!! ஹிஹிஹி

    கீதா//

    அது கீதா இப்போ ரெண்டு கிழமையாமே.. புதன் அங்கிள் ஏதோ மாறி சுத்தத் தொடங்கிட்டாராம்.. இதனால மக்களுக்குள் சண்டை சச்சரவு வரும் வாய்ப்பு அதிகமாம் என வெள்ளைகள் பேசுகிறார்கள்:)).. இது ஏப்ரல் 14..15 வரை நீடிக்குதாம் எனவும் அறிஞ்சேன். ஏனெனில் புத்திக்குத்தானே புதன்.. அப்போ புத்தியை பேதலிக்கப் பண்ணிடுவார் போலும்:))

    பதிலளிநீக்கு
  47. பாழாய்ப்போன மனம் நல்லதை எல்லோ மறந்து துலைக்குது கீதா:)).. கெட்டதை எல்லாம் நீறு பூத்த நெருப்புப்போல மறக்காமல் அடிப்பெட்டியில ஒளிச்சு வச்சிருக்குதாமே:)) ஹா ஹா ஹா...//

    ஆஆஆ!! புலியூர் பூஸானந்தாவா இப்படிப் பேசுவது!!! ஹா ஹா ஹா ஹா...

    //இறைவனை ரொம்பத்தான் உச்சியில வைக்கிறீங்க கீதா:).. அந்த மனிசன் ஒண்டும் ரொம்ப நல்லவர் இல்ல ஜொள்ளிட்டேன்ன்:)) ஹா ஹா ஹா.. ஹையோ வைரவா என்னைக் காப்பாத்துங்ங்ங்ங்ன்ங்:))//

    வைரவா காப்பாத்துப்பா...இந்தப் புலியூர் பூசானந்தாவை..பாரு புலியூர் பூஸானந்தாவுக்கு இன்று தவம் கலைந்தது என்ற கோபம் எல்லாம் இல்லாமல் நலல்து செய்தேன்னுதானே எழுந்து மூட்டையைக் கட்டிக்கிட்டு ஆஸ்ரமம் போனார் அதுக்குள்ள மனம் மாறிடுச்சோ...இந்த சாமிய அப்ப நம்பவே கூடாது..

    ஏகாந்தன் அண்ணா சரியாத்தான் சொல்லிருக்கார்...தேம்ஸ்ல இருக்கற பூஸானந்தாவின் ஆஸ்ரமம் குறித்து மக்கள் பீதியடைகின்றனராமே!! ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  48. //கோமதி அரசு said...
    உண்மை. கண்ணீர் விட்டு அழுதால் உள்ளத்தின் பாரம் குறையும்.///

    ஓம் கோமதி அக்கா, இன்னர் எஞ்சினியரிங் என ஒரு கோர்ஸ் இருக்காம்.. அதில் அவர்கள் சொல்வது... உங்களுக்கு மனதில் ஏதும் கவலை மிக நீண்ட காலமாக தீராமல் ஒட்டிக்கொண்டிருந்தால்.. அதாவது சிலருக்கு பெரியவர்களானாலும் சின்ன வயதில் ஏற்பட்ட ஏதும் தாக்கம் மனதை பாதித்த வண்ணமே இருகும்.. அப்படி எனில்.. ஒரு கடிதம் போல முழுக்கவலையௌம் பல தடவைகள் முழுமையாக எழுதி எழுதி கிழிக்கட்டாம்... அதேபோல கண்ணாடிக்கு முன்னால் போய் நின்று சொல்லிச் சொல்லி அழுது தீர்க்கட்டால் பல தடவைகள் என.

    ஆதரவு இல்லாதோருக்கும், சாய்ந்து அழ தோள் இல்லாதோருக்கும் .. சில பிரச்சனைகளை யாரிடமும் சொல்ல முடியாமல் மனதில் புழுங்குவோருக்கும் இது மிகவும் உதவுமெல்லோ.

    பதிலளிநீக்கு
  49. சரி சரி அதிரா நீங்க முடிச்சுட்டுப் போங்க உங்களை டிஸ்ரோப் பண்ணல....ஏஞ்சல் வந்து தொடர்வாங்க...ஆனா அவங்க இன்னும் கொஞ்சம் பிஸிதான்...ஹ்ம்

    கீதா

    பதிலளிநீக்கு
  50. ///ஏகாந்தன் அண்ணா சரியாத்தான் சொல்லிருக்கார்...தேம்ஸ்ல இருக்கற பூஸானந்தாவின் ஆஸ்ரமம் குறித்து மக்கள் பீதியடைகின்றனராமே!! ஹா ஹா ஹா ஹா

    கீதா///

    ஹையோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அவசரப்பட்டு வதந்திகளை நம்பிக் கட்சி மாறிடாதீங்க கீதா:))... ஏகாந்தன் அண்ணன் ஜதி:)த் தீட்டம் தீட்டுறார் என் ஆச்சிரமத்தைக் கலைக்க:))...

    பாருங்கோ அவரே போஸ்ட் போட்டிருக்கிறார்... ஆரோ ஒருவர் ஏகாந்தன் அண்ணனிடம் தன் உள்ளக் குமுறல்களைக் கொட்டிச் சென்றிருக்கிறார் என..

    அப்போ நான் ஆச்சிரமம் அமைச்சால் இப்படியானோர் வந்து உள்ளக்குமுறலைக் கொட்டிச் செல்லலாமென்னும் என் நல்ல எண்ணம் டப்போ கீதா?:))... ஹையோ இண்டைக்கு நெல்லைத்தமிழனுக்கும் உடல் நிலை சரியில்லை என்பதால் மீ சேஃப்ஃப்ஃப்ஃப்ஃப்:))..

    கடவுள் அப்பப்ப எனக்கு நல்லதையும் செய்து தாறார்:) மனிசன் சிலநேரம் நல்ல்வர்தான் கீதா:)) ஹா ஹா ஹா.

    //ஆஆஆ!! புலியூர் பூஸானந்தாவா இப்படிப் பேசுவது!!! ஹா ஹா ஹா ஹா//

    அது கீதா உலகக் கணப்பெடுப்பை எடுத்துச் சொன்னேன்:)).. மனம் கெட்டதை மறக்காமல் இருப்பதனால்தானே.. கொலை கொள்ளை... என்னமோ பழிவாங்கல் எல்லாம் நடக்குது.. இல்லை எனில் பழி வாங்கும் எண்ணமே வராதே.. ஒதுங்கிப் போய் விடுவார்களே..

    பதிலளிநீக்கு
  51. ///ஏஞ்சல் வந்து தொடர்வாங்க...ஆனா அவங்க இன்னும் கொஞ்சம் பிஸிதான்...ஹ்ம்

    கீதா//

    நோஓஓஓஓஓஒ இதை நான் ஒத்துக்க மாட்டேன்ன்ன் ஸ்பை கமெரா பூட்டி வச்சிருக்கிறேன் அஞ்சு வீட்டுக்கு:)).. ஓவரா ஸ்லீப் பண்ணுறாபோல தெரியுது பண்ணிட்டு அதுக்குப் பேர் பிஸியாம் ஹையோ கீதா படிச்சதும் சுடச்சுடக் கிழிச்சு.. எங்காவது புதைச்சு அதுக்கு மேல ஒரு மாங் கன்றையும் நட்டிடுங்கோ:)) மரம் எனில் பிடுங்க மாட்டா அவ:)) ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
  52. ///கோமதி அரசு said...
    ஊசி இணைப்பு அருமை.
    அதிராவின் கையெழுத்து அழகு.//

    மிக்க நன்றி கோமதி அக்கா.. பாருங்கோ கீதா இதைப்பற்றிப் பேசவே இல்லை கர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
  53. ///கோமதி அரசு said...
    அதிரா சொல்வது போல் அழுது அதிராவின் சிரிப்பு வெடிகளை படித்து ஆறுதல் அடையலாம்//

    ஞான சம்பந்தர் மாணிக்க வாசகரின் பாடல்களும் அருமை... சின்ன வயதில் அடிக்கடி பாடும் தேவாரங்களில் இதுவும் ஒன்று.. காதலாகி..

    பதிலளிநீக்கு
  54. ///அழும் பெண்ணின் நம்பிக்கை சரியானது.
    நல்ல சாமியார் , நல்லதே சொல்லி நல்வழி காட்டினார்.
    நல்லதே பகிரும் தளம் அல்லவா? ///

    உண்மைதான்.. மிக்க மிக்க நன்றிகள் கோமதி அக்கா அனைத்துக்கும்.

    பதிலளிநீக்கு
  55. வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ..
    சிலருக்கு வீட்டாக்களைக் கண்டாலே செல்லம் ஓவராகி:).. எனக்கு வருத்தம் எனச் சொல்லத் தொடங்கிடுவினம் ஹா ஹா ஹா.. இவ்ளோ காலமா நெல்லைத்தமிழன் நல்லாத்தான் இருந்தார்.. இப்போ ஊர் போகிறேன் என்றதும் உடம்பு நலமில்லை எனச் சொல்லத் தொடங்கிட்டார்ர் ஹா ஹா ஹா இனி உடல் நலமில்லை எனினும் ஊரோடு இருப்பதால் நோ வொரீஸ்ஸ்ஸ்ஸ்.. ரெஸ்ட் எடுங்கோ எல்லாம் சரியாகிடும்.

    ///நெ.த. said...
    நல்ல கையெழுத்தில் அஅதிர்வினால் தத்துவம் அருமை.//

    ஹா ஹா ஹா மிக்க நன்றி.

    //வாழும் விதத்தில் வாழ்ந்தால் இருக்கும் இடமே சுகம். என்னவோ மேலோகத்தில் பாலும் தேனும் பாய்ந்தோடும், நமக்குக் கவலையில்லை என நினைக்கிறோம். எங்கும் நம் செயல்கள்தான் நமக்கான வரவைத் தீர்மானிக்கின்றன. வாழ்த்துகள்.//

    நீங்க பாதி ஞானியாகிட்டீங்க:) அதனால உங்களுக்குப் புரியுது... ஆனா இக்கரைக்கு அக்கரைப் பச்சை என எண்ணி.. இருப்பதை விட்டு விட்டுப் பறப்பதற்கு ஆசைப்படுவோர் தானே அதிகம்...

    மிக்க நன்றி நெல்லைத்தமிழன்..
    take care...[அஞ்சு சொல்ல முன் மீ ஜொள்ளிட்டேன் ஆக்கும்:))]

    பதிலளிநீக்கு
  56. //KILLERGEE Devakottai said...
    பிறகு வருகிறேன்//

    வாங்கோ வாங்கோ பிறகெண்டால் எப்ப்போ எனச் ஜொள்ளவே இல்லையே:))

    ///எல்லாம் சரி அந்தப்பெண் யாரு ?
    வெகுகாலமாக ஜேம்ஸ் ஊரணியில் குதிக்கப்போவதாக பீடா விட்டவர் இல்லை என்று நம்பி விட்டேன்.//

    ஹையோ கில்லர்ஜிக்கு டவுட் வந்திட்டுதே:) இது நாட்டுக்கு நல்லதில்லையே:).. கர்ர்ர்ர்ர்ர்:) அது தேம்ஸ் ஆக்கும் க்கும் க்கும்:))... அது அந்தக் குட்டிப் பெண் ரொம்பக் குட்டி... அதிராவை விடக் குட்டிப் பெண் ஆக்கும்:))

    ///பட்டங்கள் கிலோ கணக்கில் வாங்கி விட்டமைக்கு வாத்துகால்//

    என்னாது வாத்திட காலோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இதை நான் சுமந்துகொண்டு தேம்ஸ் கரையால சுமந்து போனால்.. என்னைப் போலீஸ் பிடிச்சு லொக்கருக்குள்:) போட்டுப் பூட்டிடப் போகினமே ஏதோ நான் வாத்தைக் கில் பண்ணிட்டேன் என:))... ஹையோ எனக்கு வாத்தும் வாணாம் காலும் வாணாம்ம்ம்ம்:) என் ஆச்சிரமமே போதும்:))..

    சே..சே.. தியானம் பண்ண மட்டும்தான் கஸ்டமாக்கிடக்கென மனதை ஜமாதானப் படுத்தினால்:) ஒரு மனிசர் நிம்மதியா வோக் போகவும் முடியுதில்லையே பயம்மாக்கிடக்கேஎ:)).. ஹா ஹா ஹா மிக்க நன்றி கில்லர்ஜி... மறந்திடாதீங்கோ.. நீங்கதான் நிறைய உதவிகள் செய்பவர் எனக் கேய்விப்பட்டென்.. அதனால எங்கட ஆச்சிரமத்துக்கும் நன்கொடைகள் தாராளமா எதிர்ப்பார்க்கப் படுகிறது:)).. கப்பலில் அனுப்பி வைச்சாலும் ஓகேதான்:)..

    பதிலளிநீக்கு
  57. கண்ணீர் விட்டு அழுவதைவிட கடிதம் எழுதுவது மிகவும் நல்லதாக இருக்குமோ?இன்னர் எஞ்ஜினீயரிங் கோர்ஸ் நன்றாக இருக்கும் போலுள்ளதே? நான் கேள்விப்பட்டதே இல்லை.
    கதை என்ற பெயரில் அருமையான விஷயங்களை வைத்து புனையப்பட்டிருக்கிறது.பாராட்டுகள் அதிரா.

    பதிலளிநீக்கு
  58. //Kamala Hariharan said...//

    வாங்கோ வாங்கோ..

    //நல்ல சிறப்பான கதை. சகோதரி அதிரா அவர்கள் எழுதிய கதை மனதை நெகிழச் செய்து விட்டது.
    //
    மிக்க நன்றி, காதில் கேட்கும், படிக்கும் தகவல்களைத்திரட்டி.. என் கற்பனையையும் அதில் கலந்துதான் பல சமயம் கதை எழுதுகிறேன்.

    ///வரிகளின் தாக்கம் மனதில் அலைபாய்ந்து அழச்செய்கிறது. ஆம். உண்மை.
    அழுகை மனபாரத்துக்கு சிறந்த மருந்து//

    மிக்க மிக்க நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  59. இல்ல பு.பூஸானந்தா உபதேசம் பண்ணி காப்பாற்றியது அருமையா?:).. இல்ல பு.பூஸானந்தாவின் தியானம் கலந்தது அருமையோ?:)..//

    பு பூ வின் தியானம் கலைந்ததுதான் அருமை!! அது அப்பெண்ணைக் காப்பாற்றியதால்!! தலைக்குப் பின்னாடி ஒளி வட்டம் சுத்த இன்னும் நிறைய காலம் இருக்கு புபூ க்கு!!! ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  60. ///ஹா ஹா ஹா ஹா இப்படி ஊசி கேப்பில் கூட நம்மைச் சொல்லிக்கோணூம் இல்லையா அதிரா...

    கதை வித்தியாசமா சிந்திச்சிருக்கீங்க..அதிரா! நல்லாருக்கு!! (அது சரி சமீபத்தில் நிறையப் புராணக் கதைகள் படிச்சீங்களோ!!! ஹிஹிஹிஹிஹி..)

    கீதா//

    மிக்க நன்றிகள் கீதா அனைத்துக்கும்.. இண்டைக்கு நீங்களும் மீயும் தான் அதிகம் பேசியிருக்கிறோம்ம்...
    “பார்வையாளர்... தேவை இல்லை.. பங்காளிகளே தேவை:))”.... ஹா ஹா ஹா கோசம் போட வாங்கோ கீதா.. ஹா ஹா ஹா:))..

    எனக்குப் புராணக் கதைகள் பெரிதாக பிடிப்பது குறைவு.. தத்துவம் நிரம்பியவையே அதிகம் விரும்புவேன்.. எனக்கு, நான் நினைக்கிறேன் எங்கட அண்ணன் தான் ரோல் மொடல்... .. சின்ன வயதில் இருந்தே அவர் தன் கொப்பியில், படிக்கும் மேசையில், மேசைமேல் சுவரில் எல்லாம் தத்துவ வரிகள் எழுதி ஒட்டி வச்சிருப்பார்.. அதனை எழுத்துக் கூட்டிப் படிச்சுப் பார்ப்பேன்.. அவருக்கும் கண்ணதாசன் அங்கிள்மேல் + தத்துவங்களில் அதிக நாட்டம் உண்டு... அடுத்து இன்னொருவர் எங்கள் அத்தான் .. அக்காவின் கணவர்.. ஆனா அவர் சொந்த மாமியின் மகன் என்பதால் சின்ன வயதிலிருந்தே நம்மோடு சகோதரன்போல வே பழகுவார்[அக்கா மட்டும் அப்போ பேச மாட்டா ஷையாம்:)) ஹா ஹா ஹா].... எங்கள் குடும்பத்தில் நாம் அதிகம் உறவாடுவது மச்சான், மச்சாள் களோடுதான்..[எனக்கு மச்சான் மச்சாள்கள் நிறையப்பேர் உண்டு] அவரும் எனக்கு, சின்ன வயதிலேயே அதிக தத்துவக் கதைகள்.. கண்ணதாசன் அங்கிளின் புத்தகங்கள் அறிமுகப்படுத்தி விட்டவர்.

    இப்படி குட்டியிலிருந்தே எனக்கு கண்ணதாசன் அங்கிள் எனில் சொல்ல முடியாத விபரிக்க முடியாத ஒரு அன்பு.. பாசம் உருவாகி விட்டது... அவர் உயிரோடு இருந்திருந்தால் நிட்சயம் சந்தித்திருப்பேன்ன்ன்.. இதுவரை என் வாழ்க்கையில் இப்படி ஆரையாவது போய்ச் சந்திக்கோணும் என எவரையும் எண்ணியதில்லை நான்...

    கண்கள் பார்க்காமல், நேரில் சந்திக்காமல்... காதல் வருவதில்லை இப்படி ஒரு பாடல் இருக்குதெல்லோ.. ஆனா எனக்கு அவரின் எழுத்துப் பார்த்தே காதல் வந்திருக்கே:)) இனிப் பாட்டை மாத்தி எழுதச் சொல்லோணும் ஹா ஹா ஹா.. மிக்க நன்றி கீதா..

    பதிலளிநீக்கு
  61. ///Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...
    கதையை ரசித்தேன்...//

    வாங்கோ வாங்கோ மிக்க நன்றி..

    ///பெற்ற விருதுகளை சற்று அதிகமாகவே..//

    ஹா ஹா ஹா ஹையோ என்ன இது புது வம்பாக்கிடக்கூஊஊஊஊ:)) “பிச்சை வாணாம்...... போதும்” கதையாகிட்டுதே என் கதை:)) ஹா ஹா ஹா..

    மிக்க நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  62. //பரிவை சே.குமார் said...
    அருமை... ரசித்தேன்.///

    வாங்கோ குமார் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  63. //ராஜி said...
    அருமை, ரசித்தேன்//

    வாங்கோ ராஜி.. என்ன கொஞ்சக் காலம் ஆளையே காணோம்ம்.. நீங்களும் பிஸியாகிட்டீங்கபோல.. உலகம் சுத்துற ஸ்பீட் அதிகமாகிக்கொண்டே போவதுபோல இருக்கு.. அதனால நாம் அதிகம் பிஸியாகி விடுவதுபோல பீல் பண்ணுவேன் நான் அப்ப அப்ப.

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  64. ///காமாட்சி said...
    கண்ணீர் விட்டு அழுவதைவிட கடிதம் எழுதுவது மிகவும் நல்லதாக இருக்குமோ?இன்னர் எஞ்ஜினீயரிங் கோர்ஸ் நன்றாக இருக்கும் போலுள்ளதே? நான் கேள்விப்பட்டதே இல்லை.
    கதை என்ற பெயரில் அருமையான விஷயங்களை வைத்து புனையப்பட்டிருக்கிறது.பாராட்டுகள் அதிரா.//

    வாங்கோ காமாட்ஷி அம்மா... ஓம் அப்படி ஒரு மெடிரேஷன் இருக்காம்... அது நல்ல விசயம்தானே.. சிலதை வெளியே சொல்ல முடியாமல்/விரும்பாமல் மனதில் வைத்துப் புழுங்கி மனநிலை பாதிப்படைவதை விட.. இது அடுத்தவருக்குத் தெரியாமல் கடிதமாக எழுதி பின்பு பலதடவை நாமே படித்து விட்டுக் கிழித்து விட்டு மீண்டும் அதை எழுத வேண்டுமாம்... இப்படிப் பல தடவைகள் செய்யோணுமாம்..

    இதில் என்ன சொல்கிறார்கள் எனில்.. முதல் தடவை எழுதும்போது நிறையவே அழுது கண்ணீர் சிந்தி.. நிறைய எழுதுவோமாம்.. 2ம் தடவை எழுதும்போது நமக்கு கண்ணீர் கொஞ்சம் குறையுமாம்.. சில வரிகள் தேவையில்லை அதெல்லாம் பெரிய விசயமிலை என நம் மனதே தீர்மானிக்குமாம்.. இப்படி பல பல தடவைகள் அதை மீண்டும் மீண்டும் எழுதினால் கடசியாக இதெல்லாம் ஒரு கவலையா.. இதைவிட உலகில் எவ்வளவோ இருக்கே என எண்ணும் மனநிலை வந்திடுமாம்.. ஒரு விதத்தில் ஞானியாகிடுவோம் போல ஹா ஹா ஹா..

    மிக்க நன்றி காமாட்ஷி அம்மா.

    பதிலளிநீக்கு
  65. இனிய காலை வணக்கம்ஸ் எல்லாருக்கும் :)
    இந்த கமெண்ட்டோ கியூரியசோ மேனியா தெரியுமா எல்லாருக்கும் :)
    அது ரிவர்ஸ் ஆர்டரில் பதிவை படிக்குமுன்னே பின்னூட்டத்தை படிப்பது
    ஆகவே முதலில் கண்ணில் பட்டது
    கில்லர்ஜீயின் கமெண்ட் //அந்த பெண் யார் ??//

    அது நானில்லை நானாயிருந்தா முதலில் பூனையை சாரி :)பூசானந்தாவை தேம்ஸில் தள்ளிட்டு உங்ககிட்டருந்து அந்த பொற்கிழியை வாங்கி இருப்பேன்

    பதிலளிநீக்கு
  66. //பு பூ வின் தியானம் கலைந்ததுதான் அருமை!! அது அப்பெண்ணைக் காப்பாற்றியதால்!! தலைக்குப் பின்னாடி ஒளி வட்டம் சுத்த இன்னும் நிறைய காலம் இருக்கு புபூ க்கு!!! ஹா ஹா ஹா

    கீதா//

    ஹா ஹா ஹா இப்போதானே சுவீட் 16 நடக்குதாம் கீதா:))

    பதிலளிநீக்கு
  67. // தேம்ஸ் ஆற்றங் கரையிலே, அந்த பென்னாம் பெரிய ஆல மர நிழலிலே.. ஒரு மான் தோலிலே... சுவாமி புலாலியூர்ப் பூஸானந்தா அவர்கள்... அமர்ந்து, தியானத்தில் இருக்கிறார்..//
    நோ :) மான்தோலை காணோமே அங்கே படத்தில் இருப்பது cushion :)இதில ஒரு மெழுகுவர்த்தியை திருட்டுத்தனமா ஊதி அணைச்சிட்டு பார்க்கிறமாதிரியே இருக்கு அந்த படம் :)

    பதிலளிநீக்கு
  68. அச்சச்சோ இந்த முசுப்பாத்தியில இடையில ஏகாந்தன் அண்ணனை மிஸ் பண்ணிட்டனே ஹா ஹா ஹா வாங்கோ வாங்கோ..

    //ஏகாந்தன் Aekaanthan ! said...
    புபூ-வின் தத்துவங்கள் தனிப்புத்தகமாக வெளிவந்திருக்கிறதா என சிலர் விஜாரிக்க் ஆரம்பித்திருக்கிறார்கள் ! அவருக்கு ஆசிரமம் ஒன்று தேம்ஸ் கரையில் கட்டுவதற்கு ரகசிய முயற்சி மேற்கொள்ளப்படுவதாக///

    ஓ அப்பூடியா செய்தி பரவுது:)) ஹையோ இதைக் கேட்டு நேக்கு லெக்ஸ்சும் ஆடல்ல காண்ட்ஸ்சும் ஓடல்ல:)) காதில ரசமலாயாகப் பாயுதே வார்த்தைகள்:))... ஹையோ இதை ஆரவது குறுக்க நிண்டு கெடுத்துப் போடுவினமோ எனவும் பயம்மாக் கிடக்கூஊஊஊஊஊ:))..

    /// ஒரு வதந்தி பரவிவருகிறதே.. உண்மையாகிவிடுமோ எனவும் மேலும் சிலர் அஞ்சுகிறார்களாம்.
    புபூ-வைப்பற்றி ஃப்ளாஷ் செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன..////

    ஆஆஆஆஆவ்வ்வ் வச்சிட்டாங்கையா ஆப்பூஊஊஊஊஉ:)) அது அது வசந்திதான்:)) சே..சே.. நல்ல நேரம் அதுவுமா டங்கு ஸ்லிப் ஆகுதே:)) ஏகாந்தன் அண்ணன் அது வதந்திதான் நம்பிடாதீங்கோ:)) அதிலயும் முக்கியமா கீழுள்ள வதந்திகளை எங்கட ட்றம்ப் அங்கிள்:) காதுக்கு எட்டாமல் பார்த்துக் கொள்ளுங்கோ பிளீஸ்ஸ்:) உங்களுக்கு இன்னும் நிறையக் கீரை வடைகள் யுட்டு யுட்டுத்தருவேஎன்ன்ன்ன்ன்ன்ன்:))

    ஹா ஹா ஹா மிக்க நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  69. ///துரை செல்வராஜூ said...
    என்னவெல்லாம் ஜொல்லி
    ஜமாளிக்க வேண்டியிருக்கிறது!?...

    எல்லாம் காலக் கெரகம்!...

    பூஸாரே...பூஸார்!...///

    ஆஆவ்வ்வ்வ்வ்வ்வ் ஹையோ வேலியில சிவனே என:) தன்பாட்டில் போகும் “கெரகத்தை”:) எல்லாம் ஓடிப்போய் எடுத்து வீட்டுக்குள்ள விட்டிடக்கூடா துரை அண்ணன்:)).. ஹையோ இன்று என் கிரகநிலை எப்பூடியோ தெரியல்லியே...:))

    பதிலளிநீக்கு
  70. என்னது எங்கள்புளொக் இப்பூடி ஆடுதே:) ஏதும் நிலநடுக்கமா இருக்குமோ?:))... ஹையோ என் செக்:) லாண்டட்ட்ட்ட்ட்ட்ட்ட்:)).. என் லக்சறி லைஃப் முடிஞ்சிடப்போகுதே:)) ஆச்சிரமத்துக்கே நெருப்பு வச்சாலும் வச்சிடுவா.. இன்சூரன்ஸ் வேறு இன்னும் எடுக்கலியே:)) எதுக்கும் மானே தேனே என நுனி நாக்கில பேசி மயக்கிட வேண்டியதுதான்:))..

    //Angel said...
    //
    நோ :) மான்தோலை காணோமே அங்கே படத்தில் இருப்பது cushion :)இதில ஒரு மெழுகுவர்த்தியை திருட்டுத்தனமா ஊதி அணைச்சிட்டு பார்க்கிறமாதிரியே இருக்கு அந்த படம் :)///

    ஆஆஆஆ வாங்கோ அஞ்சு டார்லிங் வாங்கோ.. இண்டைக்கு வெள்ளனவே எழும்பிட்டீங்கபோல:)).. உங்களைப்பற்றி விசாரிச்சேன் காணல்லியே என:).. வேறொன்றும் பேசல்ல இங்கு உங்களைப் பற்றி:))

    பதிலளிநீக்கு
  71. / அட லூசுப் பெண்ணே.//

    இது சிம்பானந்தாவின் ட்ரேட்மார்க் வசனம் :) அவருக்கு தெரியுமா நீங்க பயன்படுத்தியது ??

    // உன் துன்பங்களுக்கெல்லாம் என்னால் முடிஞ்ச வரை விடுதலை பெற்றுத் தருகிறேன், அதன் பின்னர் நீ வாழ்வா சாவா என்பதை முடிவு செய்..//

    ஹாஹா அருவி பட ஸீன் மாதிரி இருக்கே :)


    //பூஸானந்தாவின் புன்னகை தவழும் தெய்வீக முகத்தைப் பார்த்து அப் பெண்ணுக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது//

    இதையெல்லாம் படிக்க வைச்ச ஆண்டவனை ஒன்னும் சொல்ல மாட்டேன் ஆனா இங்கே பதிவிட்டு என்கண்ணில் பட வச்சதுக்கு ஸ்ரீராம் வீட்டுக்கு ஒரு பெட்டி நிறைய ஆப்பிரிக்க கொசுக்கள் அனுப்பப்படும் என்பதை சந்தோஷத்தோடு அறிவிக்கிறேன்

    பதிலளிநீக்கு
  72. // விதியின் சுழற்சியை மீறமுடியாத நேரங்களிலெல்லாம் இப்படி அழ விரும்புவது என் பழக்கம், ஆனால் முடியவில்லையே//

    ம்க்கும் :) நான் சொல்றேன் ஈஸியா ஒரு வழி அந்த பொண்ணுக்கு உங்க பிளாக்கில் இருக்கும் ஆயுபுவன் சேசே :) ஆர்யபவன் லிங்க்ஸ் எல்லாம் குடுத்து விடுங்க அழுத்திட்டே இருப்பா :)
    ஏன்னா விதியின் சுழற்சி எங்களை அங்கே கட்டிப்போட்டு அசையவிடாம வச்சிருக்கே :)

    பதிலளிநீக்கு
  73. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  74. //
    நான் ஒரு வலை பின்னினேன், அதில் நானே சிக்கிக் கொண்டேன்.
    நான் ஒரு காடு வளர்த்தேன், அதிலிருந்து வெளியேற எனக்கே வழி தெரியவில்லை. நான் ஒரு கிணறு வெட்டினேன், அதில் நானே விழுந்து விட்டேன்.
    ஆக்கியதும் நானே.. என்னை அழித்துக் கொண்டதும் நானே//


    வலை பின்னியது வசந்தி :) சேசே சிலந்தி காடு வளர்த்தது ஜாதவ் பயேங் கிணத்தில் விழுந்தது தவளை ..
    அந்த பொண்ணுக்கு எதோ சின்ரோம் முதலில் அனுப்புங்க என்கிட்டே நான் ட்ரீட்மெண்ட் தரேன் :)

    பதிலளிநீக்கு
  75. //
    பாம்பின் அழகை நான் ரசிக்கிறேன். புலியின் மீது அழகான கோடுகள் இருக்கின்றனவே, அவற்றை நான் தடவிப் பார்க்கிறேன்.

    ஆனால் சுவாமி.., பாம்பு என்னைக் விழுங்குகிறது, புலி என்னைக் கடிக்கிறது. நான் என்ன செய்வேன், என்னைத் தனியாக இருக்க விடுங்கள்.. மீ அழப்போகிறேன்...//

    இந்த வரிகள் என்னை மிகவும் (பல்லாயிரம் முறை ) சிந்திக்க வைத்தது ##
    நிறையபேர் அன்புக்காக அமைதிக்காக நல்லது செய்ரோம்னு தானே குழியில் விழறாங்க எல்லாரையும் தங்களைப்போல் அன்பான அப்பாவிகளா நினைப்பதாலேயே இந்த பிரச்சினைகள் :(

    பதிலளிநீக்கு
  76. @ athira : இன்னர் எஞ்சினியரிங் என ஒரு கோர்ஸ் இருக்காம்.. அதில் அவர்கள் சொல்வது...//
    @ காமாட்சி: இன்னர் எஞ்ஜினீயரிங் கோர்ஸ் நன்றாக இருக்கும் போலுள்ளதே? நான் கேள்விப்பட்டதே இல்லை.//

    ’இன்னர் இஞ்ஜினீயரிங் – மகிழ்ச்சிக்கான ஒரு யோகியின் வழித்துணை’ – (Inner Engineering – A Yogi’s Guide to Joy) என்பது ஸத்குரு ஜக்கி வாசுதேவ் எழுதிய புத்தகம். மாறிவரும் வாழ்வியல்சூழல் காரணமாக அதிகரித்துவரும் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கான
    வழிமுறைகளைச் சொல்கிறது. ’இன்னர் இஞ்ஜினீயரிங்’ என இஷா யோகா மையம் ஒரு ஆன் –லைன் கோர்ஸையும் இதற்காகவே நடத்துகிறது.

    பதிலளிநீக்கு
  77. //
    உன்னை இப்போ தேம்ஸ் இல் தள்ளினால்கூட நீ சாக மாட்டாய்:), நீந்தி வந்திடுவாய்:).. தைரியமாகப் போ பெண்ணே.. போய் உன் படிப்பைக் கவனி:), குடும்பத்தோடு நலமோடு வாழ்..!!! “இதுவும் கடந்து போகும்”:)...//

    பூசானந்தாவுக்கு டிக்கெட் போட்டு இந்தியாக்கு அனுப்பனும் ப்ளஸ்டூ ரிசல்ட் வர நேரம் :) உங்கள் சேவை எங்களுக்கு தேவை மியாவ்

    //
    இன்றைய தியானம் கலைந்து விட்டதே என்பதை விட, என்னால் ஒருவரைக் காப்பாற்ற முடிந்ததே.. இதை விடவா தியானம் பெரிது எனும் மகிழ்வோடு சுவாமி புலாலியூர்ப் பூஸானந்தாவும், தன் மான் தோலைச் சுருட்டி எடுத்துக் கொண்டு ஆச்சிரமத்தை நோக்கிச் செல்கிறார்:)..//

    சூப்பர்ப் ..மிகவும் எளியமுறையில் துன்பங்களை கடக்கும் வழியை உங்கள் பாணியில் சொல்லிட்டீங்க மியாவ் .அழகான அறிவுரைக்கதை ..

    இப்போ எனக்கும் அழணும் அதனால் உங்க பச்சைக்கல் நெக்லஸ் போட்டு மான்தோலில் அமரவும் ஓடி வரேன் :)

    பதிலளிநீக்கு
  78. @கீதா

    // அதுவும் ஞானியானவர்!!! ஹும் காலம் கெட்டுப் போச்சு!! ஹா ஹா ஹா ஹா...ஏஞ்சல் கைன்ட்லி நோட் திஸ் பாயின்ட்!!!

    கீதா//

    நோட்டட் :) கொஞ்சம் தலை சுத்துச்சு ஆனா வல்லாரை ஜூஸ் குடிச்சி தெளிஞ்சிட்டேன்

    பதிலளிநீக்கு
  79. ஊசி இணைப்பு அருமை
    அந்த கையெழுத்து அழகோ அழகு முத்துக்களும் வைரங்களும் ஜொலிக்கிறாப்போல் இருக்கு

    @மியாவ் நீங்க எழுத சொன்ன மாதிரியே எழுதிட்டேன்

    பதிலளிநீக்கு
  80. அப்போ நான் ஆச்சிரமம் அமைச்சால் இப்படியானோர் வந்து உள்ளக்குமுறலைக் கொட்டிச் செல்லலாமென்னும் என் நல்ல எண்ணம் டப்போ கீதா?:))... //

    ஹா ஹா ஹா ஹா..இல்லை இல்லவே இல்லை ஏகாந்தன் அண்ணனிடமும் பலரும் தங்கள் கதைகளைச் சொல்லுகின்றனர் இல்லையா அதான் புபூவிடம் அவரும் ஐடியா கேட்கலாம்னு தோனுது....ஹிஹிஹி...ஆ ஆ ஆ ஆ...ஏகாந்தன் அண்ணா அடிக்க வருவதற்குள் மீ ஓடிப் போய்டறேன்....

    கீதா

    அதிரா

    பதிலளிநீக்கு
  81. @ கீதா: புபூவிடம் அவரும் ஐடியா கேட்கலாம்னு தோனுது....ஹிஹிஹி...//

    ஆக, புபூ-வின் தோளில் துப்பாக்கியை வைத்து என்னைக் குறிபார்க்கிறீர்கள்! அரசியலில் இருக்கவேண்டியவர்கள் எங்கள் ப்ளாகில்! ஒருவேளை, ஒருவேளை, 2019-தேர்தலுக்கு சீட் ஆஃபர் ஏதும் வந்திருக்கிறதோ?

    பதிலளிநீக்கு
  82. அந்த சாமியார் தன் தோளில் சார்த்தி உன் கவலைகளை நான் போக்குவேன் அழாதே என்று தடவிக் கொடுத்து ஆறுதல் சொல்ல வில்லையா இப்போதைய சாமியார்களப்படித்தானே

    பதிலளிநீக்கு
  83. அதிரா.. செம பிஸி. பின்னால் வருகிறேன். அதற்குள் பின்னூட்டப் பெட்டி மூடாமலிருந்தால் சரி.

    பதிலளிநீக்கு
  84. ///Angel said...
    அது நானில்லை நானாயிருந்தா முதலில் பூனையை சாரி :)பூசானந்தாவை தேம்ஸில் தள்ளிட்டு உங்ககிட்டருந்து அந்த பொற்கிழியை வாங்கி இருப்பேன்//

    ஹலோ மிஸ்டர்:) இப்போ ஆரூஊஊஊஊ பொற்கிளி தாறாங்க கர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஒரு பொற்கிளிக்காக ஒரு அருமந்த உசிரை:) தேம்ஸ்ல தள்ளப்போறாவாமே:)..

    பதிலளிநீக்கு
  85. பொற்கிளியா?...
    பொற்கிழியா!...

    ஒரே கிலியா இருக்கு!...

    பதிலளிநீக்கு
  86. ///துரை செல்வராஜூ said...
    பொற்கிளியா?...
    பொற்கிழியா!...

    ஒரே கிலியா இருக்கு!...//

    ஹா ஹா ஹா துரை அண்ணன் சத்தியமா இந்த வேறுபாடு எனக்குத் தெரியாது இதுபற்றி முன்பும் கீசாக்காவோடு அமளிப்பட்டோம் ஆனா ஆரும் விளக்கம் சொல்லல்லே:)).. கிளி எனத்தானே எழுதுவோம் அப்போ பொன்னால் செய்யப்பட்ட கிளி பொன் + கிளி=பொற்கிளி இப்படித்தான் நான் நினைக்கிறேன்.. ழி எதுக்கு எழுதுறாங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொற்கிழி என்றால்
      (உண்மையிலேயே) பொற்காசுகள் நிறைந்த பட்டுத் துணி முடிச்சு அல்லது பை..

      நீக்கு
  87. //////Angel said...
    இது சிம்பானந்தாவின் ட்ரேட்மார்க் வசனம் :) அவருக்கு தெரியுமா நீங்க பயன்படுத்தியது ?///

    //ஹாஹா அருவி பட ஸீன் மாதிரி இருக்கே :)//

    ஹலோ மிஸ்டர்:) .. கீசாக்காமாதிரி எனக்கு சினிமா தெரியாது எனக்கு சினிமாப் பிடிகாது என சொல்லிச் சொல்லியே ஓவராப் படம் பார்க்கிறீங்கபோல கர்ர்ர்:)).. நல்லவேளை கீசக்கா பட்டுக் குஞ்சுலுவோடு பிஸி:))

    பதிலளிநீக்கு
  88. //////Angel said...
    இதையெல்லாம் படிக்க வைச்ச ஆண்டவனை ஒன்னும் சொல்ல மாட்டேன் ஆனா இங்கே பதிவிட்டு என்கண்ணில் பட வச்சதுக்கு ஸ்ரீராம் வீட்டுக்கு ஒரு பெட்டி நிறைய ஆப்பிரிக்க கொசுக்கள் அனுப்பப்படும் என்பதை சந்தோஷத்தோடு அறிவிக்கிறேன்///

    ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஒரு இங்கிலீசு கொசுவை அனுப்பலாம்:), இத்தாலியன் கொசுவை அனுப்பலாம்:).. ஏன் அமெரிக்கன் கொசுவைக் கூட அனுப்பலாம்:)).. இது எதுக்கு ”அப்புறிக்கன்” கொசு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஸ்ரீராம் பாவமில்லையா?:)..

    ஹா ஹா ஹா சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ்:) மீ ரொம்ப நல்ல பொண்ணூஊஊஊஊஊ:))

    பதிலளிநீக்கு
  89. ///Angel said...

    ம்க்கும் :) நான் சொல்றேன் ஈஸியா ஒரு வழி அந்த பொண்ணுக்கு உங்க பிளாக்கில் இருக்கும் ஆயுபுவன் சேசே :) ஆர்யபவன் லிங்க்ஸ் எல்லாம் குடுத்து விடுங்க அழுத்திட்டே இருப்பா :)
    ஏன்னா விதியின் சுழற்சி எங்களை அங்கே கட்டிப்போட்டு அசையவிடாம வச்சிருக்கே :)///

    ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இது என்னை ஆச்சிரமம் கட்ட விடாமல் ஜதீ:) வேலை செய்வதைப்போல என் கிச்சினையும் இழுத்து மூட ஐடியாப் பண்ணுறா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. நான் என் புடிங்:) ரெசிப்பி விரைவில போட்டே தீருவேன்ன்ன்ன்... இது அந்த ஆலமர வலதுபக்க விழுதின் மேல் ஜத்தியம்ம்ம்ம்ம்:))

    பதிலளிநீக்கு
  90. //////Angel said...
    அந்த பொண்ணுக்கு எதோ சின்ரோம் முதலில் அனுப்புங்க என்கிட்டே நான் ட்ரீட்மெண்ட் தரேன் :)//

    ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) குட்டி வயசில அது எவ்ளோ டத்துவமா அள்ளி வீசுது:) புலாலியூர்ப் பூஸானந்தாவே ஆடிப்போய் இருக்கிறார்.. அதுக்குப் போய் வருத்தம் அது இது எண்டுகொண்டு கர்ர்:))

    பதிலளிநீக்கு
  91. /////////Angel said...
    இந்த வரிகள் என்னை மிகவும் (பல்லாயிரம் முறை ) சிந்திக்க வைத்தது ##
    நிறையபேர் அன்புக்காக அமைதிக்காக நல்லது செய்ரோம்னு தானே குழியில் விழறாங்க எல்லாரையும் தங்களைப்போல் அன்பான அப்பாவிகளா நினைப்பதாலேயே இந்த பிரச்சினைகள் :(////

    அப்பாடா... ஒரே தத்துவ மழி பொழியோ பொழியெனப் பொழிஞ்சு:) அஞ்சுவை என் ட்றக் ல கொண்டு வந்திட்டேன்ன்ன்ன்:)) இனி ஈசியா காசிக்குக் கூட்டிப் போயிடலாம் போல இருக்கே:)..

    அது உண்மைதான் அஞ்சு.. எல்லோரோடும் அன்பா இருக்கோணும்.. எல்லோருக்கும் உதவி செய்யோணும் என்பினம்... ஆனா அதுக்கும் கண்ணதாசன் அங்கிள் ஜொள்ளியிருக்கிறார்ர்..

    “உதவி செய்கிறேன் பேர்வழி எனச் சொல்லிக் கொண்டு எல்லோருக்கும் செய்யாதே.. யாருக்குச் செய்கிறோம் என்பது முக்கியம்” என...

    மிக்க நன்றி அஞ்சு... மறுபடியும் உங்களை எப்போ ஜந்திக்கலாம்?:))..

    பதிலளிநீக்கு
  92. //ஏகாந்தன் Aekaanthan ! said...
    ’இன்னர் இஞ்ஜினீயரிங்’ என இஷா யோகா மையம் ஒரு ஆன் –லைன் கோர்ஸையும் இதற்காகவே நடத்துகிறது.///

    ஏகாந்தன் அண்ணன் இப்போ நம் நாடுகளை விடவும் வெளிநாட்டில்தான் அதிகமாக இவை நடத்தப்படுகிறது... இதற்கான வகுப்புக்கள் கனடாவில் நடக்கிறதாம்.. நிறையப் பேர் போய்க் கலந்து கொள்கிறார்களாம்...

    இன்னொன்று ஜொள்ளட்டோ? இல்ல ஜொன்னா அடிக்க வருவீங்க:)).. இருந்தாலும் சொல்லிடுறேன்:))..

    ப்பிரதர்:)) நித்தியானந்தாவின் மெடிரேஷன் வகுப்புக்கள்கூட அங்கு நடக்கிறதாம்:)..[நாட்டுக்குள் போக விசா கிடைக்காத காரணத்தால் ஸ்கைப்பில் வந்து சொல்லுவாராம்:)] அவர் எப்படிப்பட்டவராக இருந்தாலும் ... செயல்கள் எப்படி இருப்பினும்.. அவரின் மெடிரேஷன் மிகவும் திறமையானதாம் என பேசக் கேட்டேன்.... அன்னம் போல வாழப் பழகிட்டினமோ கனடா வாழ் மக்கள்ஸ்ஸ்ஸ்:)) ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:))..

    பதிலளிநீக்கு
  93. /////////Angel said...
    பூசானந்தாவுக்கு டிக்கெட் போட்டு இந்தியாக்கு அனுப்பனும் ப்ளஸ்டூ ரிசல்ட் வர நேரம் :) உங்கள் சேவை எங்களுக்கு தேவை மியாவ் //

    ஆவ்வ்வ்வ்வ் போடுங்கோ போடுங்கோ அப்பூடியே மீ காசிக்கும் போய் என் நேர்த்தியை நிறைவு பண்ணிடுறேன்:) நீங்க எனக்குத் துணையா காசிக்கு வருவீங்கதானே அஞ்சு?:).

    ///சூப்பர்ப் ..மிகவும் எளியமுறையில் துன்பங்களை கடக்கும் வழியை உங்கள் பாணியில் சொல்லிட்டீங்க மியாவ் .அழகான அறிவுரைக்கதை ..

    இப்போ எனக்கும் அழணும் அதனால் உங்க பச்சைக்கல் நெக்லஸ் போட்டு மான்தோலில் அமரவும் ஓடி வரேன் :)///

    ஒரு டவுட்டோடயே படிச்சேன்ன் நம்மளப் புகழுறாவே இது புதுசா இருக்கே என:)).. இது “ஆடு நனையுதே என ஓநாய் அழுத கதை” யாவெல்லோ இருக்குது ஜாமீஈஈஈஈஈஈ:) கர்ர்ர்ர்ர்ர்:))

    பதிலளிநீக்கு
  94. ///Angel said...
    ஊசி இணைப்பு அருமை
    அந்த கையெழுத்து அழகோ அழகு முத்துக்களும் வைரங்களும் ஜொலிக்கிறாப்போல் இருக்கு

    @மியாவ் நீங்க எழுத சொன்ன மாதிரியே எழுதிட்டேன்///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நில்லுங்க.. ஸ்ரீராம் வீட்டுக்கு அனுப்பிய அப்புறிக்கன் நுளம்ஸ் ஐ:)) அப்பூடியே ரிவேஸ் ல உங்க வீட்டுக்கு வரப்பண்ணிடுறேன் மெடிரேஷன் மூலம்:))

    பதிலளிநீக்கு
  95. ஆப்பிரிக்கக் கொசுவோ... அது எப்படி இருக்கும்? ஏஞ்சல் விடுமுறை முடித்து ஃபுல்ஃப்ளோவில் வந்திருக்கிறார்!

    பதிலளிநீக்கு
  96. //அதிரா.. செம பிஸி. பின்னால் வருகிறேன். //

    ஜீவி ஸார்... பார்த்து வாங்க... ஏன் இந்த விபரீத முயற்சி!!

    பதிலளிநீக்கு
  97. ///ஹா ஹா ஹா ஹா..இல்லை இல்லவே இல்லை ஏகாந்தன் அண்ணனிடமும் பலரும் தங்கள் கதைகளைச் சொல்லுகின்றனர் இல்லையா அதான் புபூவிடம் அவரும் ஐடியா கேட்கலாம்னு தோனுது....ஹிஹிஹி...ஆ ஆ ஆ ஆ...ஏகாந்தன் அண்ணா அடிக்க வருவதற்குள் மீ ஓடிப் போய்டறேன்....

    கீதா///

    ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் கீதா ..நீங்க ஏகாந்தன் அண்ணனைத் தப்பாவே புரிஞ்சு:) பயப்படுறீங்க:)) அவர் என்ன ஜொன்னார்ர்ர்??:)) அதானே என்ன ஜொன்னார்ர்ர்ர்ர்:)).. அதாவது வந்து... உங்கட ஆச்சிரம் கட்டும் வேலையைத் தடுக்க ஜதித்திட்டம் போட்டு நிறைய வசந்திகள்.. சே..சே. வதந்திகள் உலாவீனம்:) எதுகும் ஜாக்கிரதையா இருங்கோ என வோன் பண்ணியிருக்கிறார்:) அதை விட்டுப் போட்டுப் பயப்பிடுறீங்க கர்ர்ர்ர்ர்ர்:))

    ஹா ஹா ஹா ஹையோ ஆண்டவா எப்பூடியெல்லாம் கிட்னியைக் கசக்கிப் பிழிய வேண்டிக் கிடக்கே:)) பதில் குடுக்க.

    பதிலளிநீக்கு
  98. ///ஏகாந்தன் Aekaanthan ! said...
    @ கீதா: புபூவிடம் அவரும் ஐடியா கேட்கலாம்னு தோனுது....ஹிஹிஹி...//

    ஆக, புபூ-வின் தோளில் துப்பாக்கியை வைத்து என்னைக் குறிபார்க்கிறீர்கள்! அரசியலில் இருக்கவேண்டியவர்கள் எங்கள் ப்ளாகில்! ஒருவேளை, ஒருவேளை, 2019-தேர்தலுக்கு சீட் ஆஃபர் ஏதும் வந்திருக்கிறதோ?///

    ஹா ஹா ஹா சே..சே.. அப்பூடியெல்லாம் செய்வோமா ஏகாந்தன் அண்ணன்:)) நீங்க இப்பூடி டப்பு டப்பா முடிவெடுத்து பிறகு ஆச்சிரமத்துக்கு அன்பளிப்புக்கள் சேர்க்கும் வேலையை விட்டிடாதீங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்:))... எனக்கு அரசியல் வேண்டாம்:)) ஒரு ஆச்சிரமம்தான் வேணும்.. எல்லோரையும் ந் ஜானி ஆக்கோணும் நான்ன்ன்ன்ன்:)) ஹா ஹா ஹா....:))

    பதிலளிநீக்கு
  99. ///G.M Balasubramaniam said...
    அந்த சாமியார் தன் தோளில் சார்த்தி உன் கவலைகளை நான் போக்குவேன் அழாதே என்று தடவிக் கொடுத்து ஆறுதல் சொல்ல வில்லையா இப்போதைய சாமியார்களப்படித்தானே///

    வாங்கோ வாங்கோ... சே..சே.. சே:).. நீங்க ஒட்டு மொத்த சாமியாரையும் தப்பாவே பார்க்கிறீங்க:)) புலாலியூர்ப் பூஸானந்தா அப்பூடி இல்லை:)) நம்பி வரலாம்:)).. ஹா ஹா ஹா மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  100. //ஜீவி said...
    அதிரா.. செம பிஸி. பின்னால் வருகிறேன். அதற்குள் பின்னூட்டப் பெட்டி மூடாமலிருந்தால் சரி.//

    வாங்கோ வாங்கோ.... நித்திரையாகமுன் வந்திடுங்கோ:))

    ///ஸ்ரீராம். said...
    //அதிரா.. செம பிஸி. பின்னால் வருகிறேன். //

    ஜீவி ஸார்... பார்த்து வாங்க... ஏன் இந்த விபரீத முயற்சி!!///

    ஹா ஹா ஹா இப்போதானே எனக்கு பல்ப் எரிஞ்சுது:)) ஹா ஹா ஹா ரிவேர்ஸ் ல வரப்போறாரோ ஹா ஹா ஹா:))... அப்போ ஸ்ரீராமுக்கு அப்புறிக்கன் கொசூஸ் ஐ அஞ்சு அனுப்பியதில் டப்பே இல்லை:)) ஹையோ மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்:))

    பதிலளிநீக்கு
  101. தேம்ஸ் நதிக் கரையில் கூடவா இதெல்லாம்?.. ஆலமர நிழல்... மான் தோல்.. சாமியார்... என்று என்னன்னவோ கேட்க நினைத்தால், பு.பூ.வின் அந்த அழகுக் கையெழுத்தைப் பார்த்ததும் அத்தனையும் மறந்து போச்சே!.. மாயமா, மந்திரமா?.. பு.பூ..வின் மகிமையே மகிமை!

    பதிலளிநீக்கு
  102. // அப்போ ஸ்ரீராமுக்கு அப்புறிக்கன் கொசூஸ் ஐ அஞ்சு அனுப்பியதில் டப்பே இல்லை:)) ஹையோ மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்:)) //

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்......

    பதிலளிநீக்கு
  103. ///ஸ்ரீராம். said...
    ஆப்பிரிக்கக் கொசுவோ... அது எப்படி இருக்கும்?///

    ஹா ஹா ஹா அஞ்சு ஓடிக் கமோன்ன்ன்ன்ன்:)) அது எப்பூடி இருக்கும் என ஜொள்ளுங்கோ அப்போதானே கடிக்க விடுவார்:)) இல்லை எனில் அந்த எலக்றிக் ஃபான் ஐ வீசிக் கொன்றிடப்போறாரேஎ..:) ஹையோ பிறகு மீயும் ஜாட்சி சொல்ல வரவேண்டி வந்திடப்போகுதே ஜாமீஈஈஈஈஈஇ:))..

    ///ஏஞ்சல் விடுமுறை முடித்து ஃபுல்ஃப்ளோவில் வந்திருக்கிறார்!///

    ஹா ஹா ஹா இது நேற்று ட்றுத் சொன்னதைப்போல:)) ஈஸ்டருக்கு கழி சாப்பிட்ட எபெக்ட் ஆக இருக்குமோ?:) கடவுளே எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:)) புதன் வேறு ரிவேர்ஸ்ல சுத்துதாமே... ஹா ஹா ஹா:))

    பதிலளிநீக்கு
  104. அது மியாவ் அண்ட் ஸ்ரீராம் :)
    ஆப்ரிக்கன் கொசு ஒண்ணுதான் கடிச்சா டீப் ஸ்லிப்புக்கு போக வைக்கும் :)
    tsetse fly அது பேர் :)

    பதிலளிநீக்கு
  105. //ஜீவி said...
    தேம்ஸ் நதிக் கரையில் கூடவா இதெல்லாம்?.. ஆலமர நிழல்... மான் தோல்.. சாமியார்... என்று என்னன்னவோ கேட்க நினைத்தால், பு.பூ.வின் அந்த அழகுக் கையெழுத்தைப் பார்த்ததும் அத்தனையும் மறந்து போச்சே!.. மாயமா, மந்திரமா?.. பு.பூ..வின் மகிமையே மகிமை!////

    வாங்கோ வாங்கோ ஹா ஹா ஹா:)) சில ஆட்களைக் கடிச்சே மயக்குதாம் கொசுக்கள்:)) மீ... கை எழுத்தைக் காட்டி மாயம் செய்திட்டேனோ ஹா ஹா ஹா மிக்க நன்றி...

    பதிலளிநீக்கு
  106. ///Angel said...
    அது மியாவ் அண்ட் ஸ்ரீராம் :)
    ஆப்ரிக்கன் கொசு ஒண்ணுதான் கடிச்சா டீப் ஸ்லிப்புக்கு போக வைக்கும் :)/////

    அப்போ சற்றடே நைட்டுக்கு மட்டும் கடிக்கச் சொல்லுங்கோ அஞ்சு:)) ஹையோ எனக்கென்னமோ ஆச்சு இண்டைக்கு:)).. சண்டே ட்ரபிக் ஜாம் ஆனதைப்போல கொசுக்கடிச்சாலும் ஏதும் பூவுகள் பழங்கள் போஸ்ட்டாக வரக்கூடுமெல்லோ:))...

    பதிலளிநீக்கு
  107. //துரை செல்வராஜூ said...
    பொற்கிழி என்றால்
    (உண்மையிலேயே) பொற்காசுகள் நிறைந்த பட்டுத் துணி முடிச்சு அல்லது பை..///

    ஓஓஓஒ சத்தியமா இதை ஆரும் சொல்லித்தரல்லியே எனக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. மிக்க நன்றி துரை அண்ணன்...

    பதிலளிநீக்கு
  108. இப்படிக்கு,
    பல பல அரிய பெரிய விருதுகளை வாங்கிக் குவித்தவர்:), தமிழ்ப் பண்டிதர்:) + வித்தகர்:), கதாசிரியர்- அதிரா:).// இன்னும் என்னென்ன பட்டங்கள் மிச்சம் மீதி இருக்கோ.. சந்நிதியானுக்குதான் வெளிச்சம். தமிழ்பண்டிதர் க்கு பொற்கிழி/கிளி தெரியவில்லையோ...
    துன்பம் வரும்போது எப்படி அதனை எதிர்கொண்டு கடக்க நல்ல ஒரு கதை. கவலை, வேதனைகள் இருந்தால் அழுதால் மனப்பாரம் குறைந்து தெளிவாகும் மனம். இங்கு யோகா,தியானம்,சிரிப்பு தெரபி என வகுப்புகள் வந்துவிட்டது.

    நீங்க சொன்ன மாதிரி இங்குள்ளவர்கள் அழுவது குறைவுதான். அத்தோடு தும்மல் விடயம். எனக்கும் ஒரு மாதிரியாக இருக்கு அவர்களின் செயல். ஆனா அவங்க எங்களை ஒருமாதிரி பார்ப்பாங்க கொஞ்சம் சத்தமா தும்மினாலும்.
    உங்க எழுத்து நடையில் ஒரு சூப்பர்ப் கதை. இன்னும் நிறைய கதை எழுத வாழ்த்துக்கள் கதாசிரியர் அதிராவுக்கு..

    பதிலளிநீக்கு
  109. ஓ வாங்கோ அம்முலு வாங்கோ எதிர்பாரா அதிர்ச்சி தர வந்திருக்கிறீங்க:)..

    //இன்னும் என்னென்ன பட்டங்கள் மிச்சம் மீதி இருக்கோ.. சந்நிதியானுக்குதான் வெளிச்சம். ///

    ஹா ஹா ஹா எல்லாத்தையும் சொல்லி கண்ணூறு படுத்த மீக்கு விருப்பமில்லை அம்முலு:)) அத்தோடு எனக்குப் பாருங்கோ தற்புகழ்ச்சி பிடிக்காதாக்கும்:))..

    //தமிழ்பண்டிதர் க்கு பொற்கிழி/கிளி தெரியவில்லையோ.//
    அது வந்து அந்த வகுப்புக்கு மட்டும் மீ அப்செண்ட்டூஊஊஊஊஊ:)).

    //இங்கு யோகா,தியானம்,சிரிப்பு தெரபி என வகுப்புகள் வந்துவிட்டது. //
    ஓம் அம்முலு இப்போ வெளிநாடுகளில்தான் இவற்றுக்கு அதிகம் மதிப்புப்போல:).. ஹொட் யோகாவும் இருக்கு.. போயிருக்கிறீங்களோ? போக முடிஞ்சால் போய்ப் பாருங்கோ..

    //ஆனா அவங்க எங்களை ஒருமாதிரி பார்ப்பாங்க கொஞ்சம் சத்தமா தும்மினாலும். /// இந்த விசயத்தில் நம்மவர்கள் மரியாதை இல்லாமல் நடப்பார்கள்.. வீட்டுக்குள் எனில் ஓகே வெளியில் எனில் அடக்கி வாசிப்பதுதான் அருவருப்பில்லாத செயல்...

    நாங்கள் ஒரு தடவை தங்கியிருந்த ஒரு பேகர் இன ஆன்ரி வீட்டின், அன்ரியின் தங்கையும் கணவரும் விசிட்டிங் வந்திருந்தனர்... கணவர் கொஞ்சம் நகைச்சுவையானவர்...

    அப்போ அவருக்கு தும்மல் வந்திட்டுது... வஞ்சகமில்லாமல்:)) பெரீய சத்தமாகத் தும்மிட்டார்ர் அப்போ மனைவி சொன்னா, என்ன இது கொஞ்சம் அமைதியாத்தான் தும்முங்களன் என.. அதுக்கு அவர் சொன்னார்.. “இந்த வீட்டில எனக்கு தும்மக்கூட ஒரு சுகந்திரம் இல்லையா” என ஹா ஹா ஹா..

    மிக்க நன்றிகள் அம்முலு.

    பதிலளிநீக்கு
  110. ஆதிரா கதை நன்று பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  111. //Asokan Kuppusamy said...
    ஆதிரா கதை நன்று பாராட்டுகள்//

    வாங்கோ வாங்கோ மிக்க நன்றி.

    ஊசிக்குறிப்பு:
    எனக்கு விசிறி போடத் தேவையில்லை:)) விசிறியை எடுத்து விடுங்கோ:)) தலை சுத்துதோ?:) ஹா ஹா ஹா.. ஆதிரா இல்லை அதிரா...

    பதிலளிநீக்கு
  112. //தமிழ்பண்டிதர் க்கு பொற்கிழி/கிளி தெரியவில்லையோ.//
    அது வந்து அந்த வகுப்புக்கு மட்டும் மீ அப்செண்ட்டூஊஊஊஊஊ:)).//

    ஹாஹா :) இவங்கதானாம் தமிழில் டி சேசே டீ குடிச்ச புலவி

    பதிலளிநீக்கு
  113. /ஓஓஓஒ சத்தியமா இதை ஆரும் சொல்லித்தரல்லியே எனக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. மிக்க நன்றி துரை அண்ணன்...//

    கர்ர் :) ஏற்கனவே இதை கீதாக்கா பக்கம் நாங்க விக்கிட்டோம் :) விளக்கிட்டோம்

    யாரும் சொல்லிதரல்லியாம் :)))))))))

    பதிலளிநீக்கு
  114. @miyaaw :)
    https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF

    பதிலளிநீக்கு
  115. ///ஹாஹா :) இவங்கதானாம் தமிழில் டி சேசே டீ குடிச்ச புலவி//

    ஹா ஹா ஹா கர்ர்ர்ர்:)) ஹலோ மிஸ்டர்:)) என் இமேஜ் ஐ ஒருமாதிரி மேலெ மேலே கொண்டு வந்து ஆச்சிரமம் கட்டும் நிலைமைக்கு வரும்போது:) டமேஜ் ஆக்கும் முயற்சியில் இறங்கக்கூடா ஜொள்ளிட்டேன் கர்ர்ர்ர்ர்:))..

    ///கர்ர் :) ஏற்கனவே இதை கீதாக்கா பக்கம் நாங்க விக்கிட்டோம் :) விளக்கிட்டோம்

    யாரும் சொல்லிதரல்லியாம் :)))))))))///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நான் கேட்டிருந்தேன் ஆனா ஆரும் பதில் போட்டமாதிரி இல்லையே.. ஒருவேளை லேட்டா பதில் போட்டு மீ பார்க்காமல் விட்டிட்ட்டேன்போல:)).. நம்பாட்டில் என் ஆச்சிரமத்துக்கு நேரில் வரவும் பிளீஸ்ஸ்ஸ்ஸ்:))

    பதிலளிநீக்கு
  116. ஹா ஹா ஹா ஹா ஹா ஹாஆஆஆஆஆஆ.. என் வேண்டுகோளையும் கொஞ்சம் பார்க்கவும் இங்கு:)

    https://ta.wiktionary.org/w/index.php?search=பொற்கிளி&title=சிறப்பு:Search&fulltext=1&searchToken=27mbjehqes2e96bsmk17ewtu0

    பதிலளிநீக்கு
  117. ஹலோவ்வ்வ் மியாவ் எங்களை யாரும் பேய் பேய் பேய்க்காட்டவே முடியாதாக்கும்

    இந்த கீதாக்கா போஸ்டிங் கமெண்ட்ஸில் பாருங்க :)

    http://sivamgss.blogspot.co.uk/2017/06/blog-post_23.html

    பதிலளிநீக்கு
  118. ///Angel said...
    ஹலோவ்வ்வ் மியாவ் எங்களை யாரும் பேய் பேய் பேய்க்காட்டவே முடியாதாக்கும்

    இந்த கீதாக்கா போஸ்டிங் கமெண்ட்ஸில் பாருங்க :)///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இதைத்தானே மிஸ்டர்:) நானும் விளக்கமா தெளிவா சொல்லியிருக்கிறேன்ன் மேலே.. அதாவது நீங்களும் கீசாக்காவும் என் “ளி” யை வச்சு வெளாடியிருக்கிறிங்களே தவிர அங்கு விளக்கம் ஏதும் சொல்லல்லியே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. இன்று துரை அண்ணன் தான் விளக்கமா சொல்லியிருக்கிறார்ர். என் நியாபக சக்தியை சோதிக்கப் பார்க்கிறா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நாம ஆரூஊஊஊஊ:))

    பதிலளிநீக்கு
  119. ///
    https://media3.giphy.com/media/abonYnUKXMFLa/giphy.gif
    ///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) கண்ணாடியைப் பூட்டிப் போட்டு, அந்தப்பக்கமா நிண்டு வீரம் காட்டுதோ ஜெரி கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
  120. //துரை அண்ணன் தான் விளக்கமா சொல்லியிருக்கிறார்ர்//

    ஹயோ துரை அண்ணா இந்த பூஸ் இவ்ளோ பட்டம் அதுவும் ஆயிரம்பேர் முன்னிலையில் வழங்கிய பட்டம்னுலாம் பூசானந்தா பில்டப் கொடுத்தாங்களே அவங்களுக்கு இந்த பொற்கிழி தெரியாதான்னு கேளுங்க :)

    பதிலளிநீக்கு
  121. @miyaaw :)

    https://media0.giphy.com/media/y9QemIlaYYWdi/giphy.gif

    பதிலளிநீக்கு
  122. ஆதிரா,
    இவ்வளவு அரட்டைகளைத் தாண்டி வருவதே சிரமம். எங்களூரில் தேம்ஸ் இல்லை.
    இருந்தாலும் விழுவதாக இல்லை.

    சோகமில்லாமல் சுகமாக இருங்கள்.

    பதிலளிநீக்கு
  123. யோகா செய்வதாயின்
    குருவைத் தேடு
    பொத்தகம் பார்த்துச் செய்யாதே
    எனலாம் - ஆனால்
    கண்ணதாசனின் எண்ணங்களைப் படிக்க
    குரு தேவையில்லை
    கண்ணதாசனின் பதிவுகளில்
    இளையோடியுள்ள இலக்கியங்களை அறிய
    குருவைத் தேடு
    என்பது போல
    பல பொத்தகங்களப் படித்து
    அறிவைப் பெருக்கலாம் - ஆனால்
    சில பொத்தகங்களப் படித்து
    அறிவைப் பெற குரு தேவை தான்!

    பதிலளிநீக்கு
  124. நான் வீடு மாற்றுவதில் பிஸி. அதனால் இன்றுதான் அதிராவின் கதையை படிக்க முடிந்தது. கதை சூப்பர்! என்னடா இது அதிராவின் நடைபோல(style) இல்லையே என்று ஆலோசித்தேன், கண்ணதாசனின் உபயம் என்பதை ஒப்புக் கொண்ட நேர்மையை பாராட்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  125. என் பதில் தாமதமாகிவிட்டமைக்கு என்னை எல்லோரும் மன்னிக்கவும் பிளீஸ்:) நானே மேசை மேல் ஏறி நிற்கிறேன்:)..

    @anju
    ////https://media0.giphy.com/media/y9QemIlaYYWdi/giphy.gif////

    ஹா ஹா ஹா கர்ர்ர்ர் ஓவர் ஆசை உடம்புக்கு கேடு:)... இது ஜெரி யின் கனவுதானே?:)

    பதிலளிநீக்கு
  126. வாங்கோ வல்லிம்மா:).. பந்திக்கு முந்துவதைப்போல கொமெண்ட் போடுவதிலும் முந்திட்டால் தான் தடை தாண்டத் தேவையில்லை ஹா ஹா ஹா...

    தேம்ஸ் இல்லாட்டில் என்ன?:) காவேரிக் கரையிருக்கு... கரையினிலே மரமிருக்கு:)... அங்கு ஒரு ஆச்சிரமம் போட்டிடுவோம்...:). மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  127. வாங்கோ லிங்கம் அண்ணன்.. நீங்களும் நல்ல கருத்தைச் சொல்லியிருக்கிறீங்க...மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  128. வாங்கோ பானுமதி அக்கா... எதுக்கு வீடு மாறுறீங்க.. இல்ல க. அங்கிளின் வசனங்களை ரைப் பண்ணினேன் இடையில்.. சரி சரி வீடு மாறியதும் எங்களுக்குப் பார்ட்டி வையுங்கோ.. மியாவும் நன்றி.

    பதிலளிநீக்கு

  129. அட அதிரா கதை...


    நல்லா இருக்கு...நேர்மறை எண்ணங்கள் கொண்டு வாழ வேண்டும் அதானே..


    எல்லா கமெண்ட் யும் தாண்டி வரதுக்குள்ள...கதையே கொஞ்சம் மறந்து போயிங்...

    நாங்களும் கோடை விடுமுறை , ஊர் சுற்றல் ன்னு கொஞ்சம் பிஸி ..அதான் இம்பூட்டு லேட்...

    பதிலளிநீக்கு
  130. படிச்சுட்டேன். எல்லோரும் எல்லாமும் சொல்லியாச்சு! அதனாலே நான் எதுவும் சொல்லலை! :)

    பதிலளிநீக்கு
  131. வாங்கோ அனு வாங்கோ.. உண்மைதான் கோடை வந்தாலே எல்லோரும் புற்றால் புறப்பட்ட ஈசல்கள் ஆகிடுறோம்... மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!