வெள்ளி, 15 டிசம்பர், 2023

வெள்ளி வீடியோ : விழித்தீண்டல் உயிர் கிள்ளும் விரல் தீண்டல் உள்ளம் கிள்ளும் அதுதானே நீ சொல்வது

வீரமணி சோமு பாடலுக்கு வீரமணி கிருஷ்ணா இசையமைக்க கே வீரமணி பாடியுள்ள இன்னொரு அருமையான அய்யப்பன் பாடல்.

கன்னிமூல கணபதி பகவானே சரணம்…
கந்தனே சிங்கார வேலனே சரணம்…
அன்னை மாளிகைப்புறத்தம்ம தேவியே சரணம்…
அரிஹர சுதன் ஐயன் ஐயப்ப சுவாமியே…  ஐ சரணம் ஐயப்பா 

மாமலை சபரியிலே மணிகண்டன் சன்னிதானம்…

மாமலை சபரியிலே மணிகண்டன் சன்னிதானம்…
மாபெரும் பக்தர்களும் வணங்கிடும் சன்னிதானம்…
கோமகன் குடிகொண்டு குறைதீர்க்கும் சன்னிதானம்…
பூமகள் மைந்தனின் புண்ணிய‌ சன்னிதானம்…  (மாமலை)

பதினெட்டு படிமீது விளங்கிடும் சன்னிதானம்…
பதினெட்டு படிமீது விளங்கிடும் சன்னிதானம்…
விதியையும் மாற்றி வைக்கும் வீரனின் சன்னிதானம்…
கவலையைப் போக்கிடும் கணபதி சன்னிதானம்…
கவலையைப் போக்கிடும் கணபதி சன்னிதானம்…
அவனியெல்லாம் காத்திடும் ஐயப்பன் சன்னிதானம்…  (மாமலை)

நாகரின் சன்னிதானம் வாவரின் சன்னிதானம்…
நாகரின் சன்னிதானம் வாவரின் சன்னிதானம்…
நாளெல்லாம் நம்மையென்றும் கட்டி




===============================================================================================

1999 ல் வெளியான திரைப்படம் 'என் சுவாசக் காற்றே..'

முதலில் ஏ ஆர் ரஹ்மானும் அவர் நண்பர்களுடன் சேர்ந்து தயாரிக்க முன்வந்து பின்னர் விலகிக்கொள்ள, அதுமட்டுமல்லாது இசையையும் ஓரளவோடு விட்டு விட்டு நகர, மிச்சத்தை சபேஷ் முரளி முடித்தனராம்.

அர்விந்த் சாமி, இஷா கோபிகர், பிரகாஷ் ராஜ், ரகுவரன் நடித்த படத்துக்கு இசை ஏ ஆர் ரெஹ்மான்.  இந்தப் பாடலை எழுதி இருப்பவர் வைரமுத்து,

எனக்கு பாடலின் ஆரம்பத்தில் வரும் பெண்குரல் கொஞ்சல் மட்டும் கொஞ்சம் எரிச்சலூட்டும்.  மற்றபடி பாடல் மிக அழகான பாடல்.  என்ன ராகம் என்று அவர்கள் சொல்லவில்லை.  கீதா ரெங்கன்தான் சொல்ல வேண்டும்!

சரணங்களில் SPB குரல் இழைவதும், குழைவதும் பிரமாதமாய் ரசிக்க வைக்கும்.

கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
நல்லான் தீம்பால் நிலத்து உக்காங்கு
எனக்கும் ஆகாது என் ஐக்கும் உதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குல் என் மாமைக் கவினே
தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய்
தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய்
தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய்
தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய்
ஒரு விரல் வந்து என்னைத் தீண்டியதே
என் நரம்போடு வீணை மீட்டியதே
மனம் அவ​ன்தானா இவன் என்று திடுக்கிட்டதே
தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய்
ஒரு விரல் வந்து உன்னைத் தீண்டியதோ
உன் நரம்போடு வீணை மீட்டியதோ
உன் உயிர்க்குள்ளே காதல் அம்பைத் தொடுத்திட்டதோ
விழியோடும் தீண்டல் உண்டு விரலோடும் தீண்டல் உண்டு
இரண்டோடும் பேதம் உள்ளது  
விழித்தீண்டல் உயிர் கிள்ளும் விரல் தீண்டல் உள்ளம் கிள்ளும்
அதுதானே நீ சொல்வது
நதியோரப் பூவின்மேலே ஜதிபாடும் சாரல் போலே
என்னில் இன்பதுன்பம் செய்குவதோ
ஒரு கன்னம் தந்தேன் முன்னே மறு கன்னம் தந்தாய் பெண்ணே
ஏசுனாதர் காற்று வந்து வீசியதோ
உறவின் உயிரே உயிறே என்னைப் பெண்ணாய்ச் செய்க
அழகே அழகே உன் ஆசை வெல்க
தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய்
ஒரு விரல் வந்து என்னைத் தீண்டியதே
என் நரம்போடு வீணை மீட்டியதே
மனம் அவந்தானா இவன் என்று திடுக்கிட்டதே
கடலோடு முத்தம் தந்தும் கலையாத வானம் போல
உடலோடு ஒட்டிக்கொள்ளவோ
உடலோடு அங்கும் இங்கும் உறைகின்ற ஜீவன் போல
உன்னோடு கட்டிக்கொள்ளவோ
உனைத் தேடி மண்ணில் வந்தேன் எனைத்தேடி நீயும் வந்தாய்
உன்னை நானும் என்னை நீயும் கண்டுகொண்டோம்
பல பேர்கள் காதல் செய்து பழங்காதல் தீரும்போது
பூமி வாழப் புதிய காதல் கொண்டுவந்தோம்
பனியோ பனியின் துளியோ உன் இதழ்மேல் என்ன
பனியோ தேனோ நீ சுவைத்தால் என்ன
தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய்
ஒரு விரல் வந்து என்னைத் தீண்டியதே
என் நரம்போடு வீணை மீட்டியதே  
மனம் அவந்தானா இவன் என்று திடுக்கிட்டதே
தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய்
தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய்
தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய்
படி தாண்டாய்... படி தாண்டாய்...
படி தாண்டாய்... படி தாண்டாய்..

38 கருத்துகள்:

  1. என் சுவாசக் காற்றே!
    திரைப்படத் தலைப்பாம்! கொடுமையப்பா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படைத்தலைப்புகளை ஆராய புகுந்தால் இப்படி நிறைய கிடைக்கும்.  அதை விடுத்து பாடலை ரசிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.  SPB  குரல்வளத்தையும், குழைவையும் கேட்கும்படி சிபாரிசு செய்கிறேன்.

      நீக்கு
    2. நமக்கு பாடல் வரிகள் தாங்க குறி..
      ஷமிக்கணும்..

      நீக்கு
  2. தீண்டாய் ..
    தாண்டாய்..
    மெய் தீண்டாய்..
    படி தாண்டாய்..
    உனைத் தேடி..
    எனைத் தேடி.
    அவ்வளவு தாங்க..
    ஒரு பாட்டை ஒப்பேத்தியாச்சு..
    ஒரு கன்னம், மறு கன்னம்ன்னு ஒரு இடம் வரும்.
    அதையெல்லாம் கண்டுக்காதீங்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாடலையும் கேட்டேன், ஸ்ரீராம்.
      SPB ஈடுபாட்டுக்கு இதெல்லாம் எம்மாத்திரம்? 'பூ'ன்னு ஊதித் தள்ளிட்டார்ங்கறது என் அபிப்ராயம்.

      நீக்கு
  3. முதல் பாடல் அருமையான பாடல் எத்தனை முறை கேட்டிருக்கிறேன்...போன வாரம் பகிர்ந்திருந்த பாடல் முதல்ல போட்டா அடுத்தாப்ல இந்தப் பாட்டும் வந்திடும் கோயிலில் சபரிமலை சீசனில் இப்பாடல்கள் தான் ஒலிக்கும். அது போல திருவனந்தபுரத்தில் இருந்த வரை கேட்டவை. காலையில் அமைதியான சூழலில் இவற்றைக் கேட்கும் போது மனதிற்கு அத்தனை இதம்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாடலின் ஆரம்பமே கம்பீரமாய் இருக்கும். சன்னிதானம் ஐயப்பன் சன்னிதானம் வரி ஸ்பெஷல். ஆமாம், அது என்ன ராகம் கீதா?

      நீக்கு
    2. ஒவ்வொரு கருத்து வரதுக்கும் ரொம்ப சமயம் எடுக்கிறது. கருத்து போகுமா போகாதா? இல்லை இழுத்துக் கொண்டு வந்து போடுங்கன்னு சொல்லணுமான்னு தெரியாம காத்திருந்து ஹப்பா கடைசில வருது.

      ஆமாம், ஸ்ரீராம் இந்தப் பாட்டுல ஆரம்பம் கம்பீரம் அதுவும் வீரமணி அவர்களின் குரலைக் கேட்கணுமா....கணீர்! எட்டு ஊருக்கு இல்ல பல ஊர் தூரம் கேட்கும்.

      ராகம் - புன்னகையை இப்படிச் சொல்வதுண்டு அந்தச் சொல்!!! அந்தச் சொல்லில் ஆரம்பிக்கும் சினிமா பாட்டும் உண்டு! உங்களுக்கு ஈசியா புரிஞ்சுடும் ஸ்ரீராம்.

      கீதா

      நீக்கு
  4. இரண்டாவது பாட்டும் எனக்கு மிகவும் பிடித்த பாட்டு. குறிப்பாக இசை அமைப்பு, ராகம்.

    ஸ்ரீராம், என்னை என்னவோ Authentic னு நினைச்சு சொல்லிருக்கீங்க!!! ஹாஹாஹாஹா....உங்களை வீட்டுல எப்படிக் கூப்பிடுவாங்களோ அதே ராகம் தான்! உங்க பெயரிலேயே இருக்கும் ராகம்தான்!

    அருமையான ராகம். பளிச்சுனு இந்தப் பாட்டில் தெரிகிறது. பதநிபம ரிகரிஸா இந்த ராகத்தின் எஸன்ஸ்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒவ்வொரு வரியின் முடிவிலும் இந்த பதநிபம ரிகரிஸா வில்தான் முடிகிறது.

      கீதா

      நீக்கு
    2. நீங்கள் சொன்ன உடன் சட்டென பிடிபடுகிறது! எந்தரோ மகானுபாவலு...

      நீக்கு
    3. ஆமாம் அதேதான் ஸ்ரீராம்.

      கீதா

      நீக்கு
  5. எனக்கும் இதில் முதலில் வருவது பிடிப்பதில்லை, ஸ்ரீ-----ராம்!!!!!!!

    எஸ்பிபி குழைத்து குழைத்துப் பாடுவதற்கேற்ற வரிகள்!! இன்னும் படத்தில் தியேட்டரில் இல்லைனா வீட்டில் எந்த சத்தமும் இல்லாமல், சவுன்ட் சிஸ்டம் வைத்து மிதமான வால்யூமில் கேட்டீங்கனா...சுகம்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாடும் பெண் குரல் - சித்ரா?

      கீதா

      நீக்கு
    2. ஆமாம்..  சித்ராதான்.  பாடல் இனிமை.

      நீக்கு
    3. முதலில் வருவது சங்க காலப் பாடல். அது மட்டும்தான் தெரியும். மற்றபடி தெரியாது...அதைச் சொல்லும் குரல் யாரோ? ஆனா முதலில் சிணுங்குவது செயற்கையாக இருக்கு.

      கீதா

      நீக்கு
  6. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  7. முதல் பாடல் அருமையான பாடல்..

    ஐயப்ப பக்தி விளைத்த பாடல்களுள் இதுவும் ஒன்று..

    காலத்தை வென்ற பாடல்..
    எத்தனையோ முறை கேட்டிருக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  8. சங்கப் பாடல்..
    (அகத்துறை - பாலைத் திணை)

    வெள்ளிவீதியார் இயற்றிய பாடல்..

    நன்றி:
    தமிழ் இணையம்

    பதிலளிநீக்கு
  9. என்னைச் சுற்றிப் பறந்த வண்டே சும்மா நீ போகாதே.. புத்தம் புது மலரின் தேனை சுவைத்துப் போவாயே..

    என்று வந்திருக்கின்ற
    ஆயிரக் கணக்கான
    பாடல்களுக்கெல்லாம் இந்த அகத்துறை உணர்வே அடிப்படை..

    பதிலளிநீக்கு
  10. வெள்ளிவீதியார் சங்ககால பெண்பாற்புலவர்களில் 
    ஒருவர். சங்கப் பாடல்களில் பதினைந்து பாடல்கள் இவரால் பாடப்பட்டவை..

    சங்ககால ஔவையாரும் இவரைக் குறித்துப் பாடியிருக்கின்றார் என்று விக்கி சொல்கின்றது..

    பதிலளிநீக்கு
  11. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  12. முதல் பாடல் அடிக்கடி கேட்ட பாடல், இரண்டாவது பாடல் இப்போதுதான் கேட்கிறேன். பாடல் காட்சியில் இடம்பெறும் இடங்கள் மிக அழகாய் இருக்கிறது. கோவில்கள் வரலாற்று சிற்பங்கள், திருக்குளம் எல்லாம் அருமை.

    பதிலளிநீக்கு
  13. கொயம்பு நன்னாத் தான் இர்க்கி!..

    ஆனாங் -
    மசாலா அட்த்த வூட்டுது ஆச்சே..

    (கொயம்பு - குழம்பு)

    பதிலளிநீக்கு
  14. முதல் பாடல் கேட்டு ரசிக்காதவர்களே இருக்க முடியாது.

    இரண்டாவது பாடலை இப்போதான் கேட்கிறேன்.

    பதிலளிநீக்கு
  15. சின்னஞ் சிறிசுகளுக்கான அகத்துறைப் பாடல்..

    /// ஏசுனாதர் காற்று வந்து வீசியதோ.. //.

    தெறம.. தெறம!..

    பதிலளிநீக்கு
  16. முதல் பாடல் பல்லாயிரம் முறைகள் கேட்டு ரசித்து இருக்கிறேன் ஜி

    பதிலளிநீக்கு
  17. சனிப் பெயர்ச்சியா? இன்று புதிய பதிவு இல்லையா??

    பதிலளிநீக்கு
  18. முதல்பாடல் கேட்டிருக்கிறேன்.

    இரண்டாவது கேட்டதில்லை. இன்றுதான் கேட்டேன் அருமை.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!