திங்கள், 17 ஆகஸ்ட், 2009

புங்கையும் புன்னையும் ..

புங்கை மரமும், புன்னை மரமும் ஒன்றேயா அல்லது வெவ்வேறா?
விஷயம் அறிந்தவர்கள் comment பதியுங்கள்!


4 கருத்துகள்:

  1. புன்னை என்று தனியாக ஒரு மரம் இருக்கிறதா, அல்லது பின்ன இலை, பின்னம்பூ என்று நாம் ஆதி காலத்தில் அறிந்த பின்னையும் புன்னையும் ஒன்றா எனத் தெரியவில்லை. பின்னமரத்தில் பூக்கும் மொட்டுக்கள் அசலாக வெண் முத்துப் போல் உருண்டையும் வேன்மையுமாக மிக அழகாக திடமாக இருக்கும். பின்னங்காய் என்பது ஒரு பெரிய நெல்லிக்காய் அளவில் கிட்டத் தட்ட அதே அளவு விதையுடன் இருக்கும். அதை குடைந்து துளை செய்து விசில் அடித்து விளையாடுவோம்.
    புங்கங்காய் என்பது இரண்டு S இணைத்த மாதிரி இருக்கும். இதை இடுப்பில் கட்டும் கறுப்புக் கயிற்றில் கோத்து அந்தக் காலத்துக் குழந்தைகளுக்கு கட்டி விடுவார்கள் ஜட்டிக்கு பதிலாக.

    பதிலளிநீக்கு
  2. பின்னை புன்னை இரண்டும் சற்றே மாறுபட்ட ஆனால் ஒரே தாவர இனம் என்றும் புங்கை என்பது முற்றிலும் வேறான ஒரு தாவரம் என்றும் அறிவு அடித்து சொல்கிறார்..

    பதிலளிநீக்கு
  3. // புங்கை என்பது முற்றிலும் வேறான ஒரு தாவரம் என்றும் அறிவு அடித்து சொல்கிறார். //

    வலிக்குதா?
    @@@
    அறிவு - நன்றி.
    என் வீட்டு வாசலில், மற்றும் இங்கு காணப் படும் பல மரங்கள், புங்கை மரம் என்று தெரிந்துகொண்டேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!