ஞாயிறு, 17 மார்ச், 2019

ஞாயிறு : சுடச்சுட செய்தி ரெடி



காலை எழுந்தவுடன் இந்த ஊர் கோவில்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கும் ஆசை 7 இல் 3 பேருக்கு வர, ஹோட்டல் மேனேஜர் சிபாரிசின் பேரில் கணேஷ் மந்திர் போய்வருவது என்று ரோடில் இறங்கினால் ...........



பின்னால் கண்காணிக்கும் ரகசிய கேமிரா!!


எல்லா வீதிகளும் வெறிச்...


நம் வழக்கம் போல் கண்ணில் பட்ட பெரிய கட்டடங்களை ..... க்ளிக்... க்ளிக்.... க்ளிக்....


இல்லை, இல்லை ... அருகே செல்ல செல்லப் படம் எடுத்துக் கொண்டே ..


ஆமாம் இவ்வளவு கேபிள் சுற்றி வைத்திருக்கிறார்களே...  பழுது பார்ப்பவர் பாவம்..  அந்தக் கம்பமும் பாவம்


பறந்து விரிந்த மரங்களை விட கூம்பாக வளர்ந்த மரங்கள் கவனத்தை ஈர்க்கின்றனவோ?  நிழல் தரா மரங்கள்!



நம் ஊரிலும் தெருக்கள் இப்படி மண்ணே இல்லாமல் இருந்தால் ..



சுடச்சுட செய்தி ரெடி



மெயின் ரோடை விட இங்கு அதிகம் விற்கிற மாதிரி



'அங்கே ரொம்ப நேரமா என்ன பார்க்கறீங்க' என்றால் 'எதை எடுக்கிறது என்றே தெரியவில்லை' என்கிறார்களே என்று கிட்டே....


போய்  பார்த்தால் .......


ஆ... அதோ தெரியுது நாம் தேடி வந்த ...



மந்திரா? மசூதியா?


பிரசாதம் ரெடி !



கடைகள் ஆரம்பம்..  அடடே..  நம்மூர் போலவே ஷேர் ஆட்டோ..  டாட்டா மேஜிக்!


இந்தக் கடைக்காரர் இன்னும் வர்லை


32 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் எல்லோருக்கும்.

    மாஸ்க் தானே அது அழகா இருக்கு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் கீதா. இல்லை என்றுதான் நினைக்கிறேன். இல்லை ஆமாமோ!

      நீக்கு
  2. பாவம்... இடங்கள் அறியாமல் நீங்களும்தான் கஷ்டப்பட்டு தலைப்பு கொடுக்கறீங்க ஶ்ரீராம். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை வாங்கண்ணே!! வணக்கம்....நானும் கேட்க நினைத்தேன் ஸ்ரீராமிடம்....அதற்குள் நீங்க சொல்லிட்டீங்க!!

      கீதா

      நீக்கு
    2. பிள்ளையார் கோயில்ல ஒரு போர்ட் தெரியுதே அதைக் கொஞ்சம் பெரிதாக்கிப் பார்க்கலாம் இடம் என்னனு தெரியுதானு பார்த்தா ஹா ஹா ஹா ஹா அது ஃபேஷன் விளம்பர மாடலுக்கு விளம்பரம் எங்கு கற்றுத் தரப்படும் நு!!

      ஒரு வேளை பிள்ளையார் சுழி போட்டு அவர் பெளெஸ் பண்ணனும்னு அங்க மாட்டிருப்பாங்களோ?!! ஹிஹிஹி...

      கீதா

      நீக்கு
    3. இல்லை நெல்லை... இன்று பெரும்பாலும் எல்லாம் கேஜியே கொடுத்திருப்பது.. நான் ஓரிரு வார்த்தைகள் மட்டுமே!

      நீக்கு
    4. அப்படீன்னா கேஜிஎஸ்ஸிடம் தலைப்புகளை ரசித்தேன் என்று சொல்லிடுங்க

      நீக்கு
  3. பிள்ளையார் கோயில் ரொம்ப அழகா இருக்கு...வடிவம் எல்லாம் ஆனால் பாருங்கள் இடையிடையே கம்பிகள் வயர்கள் எல்லாம் ஃபோட்டோ எடுக்க முடியாமல்...

    ரகசிய கேமரா ஹா ஹா ஹா ஹா கேப்ஷன் செம ரசித்தேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
  4. சுடச் சுடச் செய்தி// அந்தப் படம் டாக்டர் ஆர் பி ரோடுனு சொல்லுது...

    அங்கே என்ன// பூ பார்த்துட்டு இருக்கற படம் அவங்க நிற்கிற ரோடு ஹட்டிகான் போகும் ரோடுனு போர்ட் சொல்லுது..

    ஹப்பா கஷ்டப்பட்டு என்ன இடம்னு தெரிஞ்சுக்க பார்த்தா இம்புட்டுத்தான் கிடைச்சுச்சு!!!!!!

    இப்படி மண்ணு இல்லாம// அந்தப் படம் கொஞ்சம் கேரளத்து வீடுகள் உள்ள பகுதில இருக்கற சாலை போல இருக்கு..

    கீதா



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மண்ணு இல்லை சரி... மழை பெய்தால் தண்ணீர் உள்ளே இறங்குமோ?!!

      நீக்கு
    2. கண்டிப்பா இறங்காது ஸ்ரீராம்...ஒரு வேளை இடையில் இடைவெளி இருந்தால் போகுமோ..

      கேரளத்தில் தரை மண்ணாகத்தான் இருக்கும் ஆனால் தெரு இப்படிக் குறுகலாக வீட்டுத் தோட்டங்களுடன் இருக்கும்...வலது பக்கம் இருக்குப் பாருங்க அப்படியே...

      கீதா

      நீக்கு
  5. படங்களோடு வாசகங்களையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  6. காட்சிகளும் வர்ணனைகளுமாக.....

    அழகு.. அருமை...

    பதிலளிநீக்கு
  7. காலை வணக்கம் சகோதரரே

    முதல் படம் "வெறிச்"சென்று அழகாக உள்ளது. மூன்றாவதும் அழகான தனிமை காணும் பாதைகள். வெறுமையும் ஒரு அழகு தானே!

    எல்லா படங்கள், அதன் பின்னணியாக அதற்கேற்ற வாசகங்கள் அருமை. பூக்கள் கட்டி வைத்திருப்பது கவர்கிறது. அது கேந்தியா? நாலாவது படம் மசூதி என நினைக்கிறேன். சுடச்சுட செய்தி தரும் படங்கள் தலைப்பை ஏற்றுக்கொள்கிறது. மந்திர் வெளித் தோற்றமே அழகாக உள்ளது. மிக ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  8. அட!!!!!!!!!!!!!!!!!!!!!! என்ன இது? சீனா சாருக்கு அஞ்சலி?????????? கடவுளே! :(

    பதிலளிநீக்கு
  9. //நம் ஊரிலும் தெருக்கள் இப்படி மண்ணே இல்லாமல் இருந்தால் ..// நீங்களே சொல்லிட்டீங்க மழை பெய்தால் தண்ணீர் உள்ளே இறங்கணும்னு! அப்புறம் மண் இல்லாமல் எப்படி? குழந்தைகள் முதல் பெரியவங்க வரை மண்ணில் வெறும் காலோடு நடக்கச் சொல்லிப் பழக்கணும். காலுக்கும் நல்லது. மண்ணின் அருமையும், பெருமையும் புரியும். வரேன் அப்புறமா!

    பதிலளிநீக்கு
  10. அழகு மிகுந்த அழுக்கில்லாத சாலைகள். மாலைகள் அழகு. ஞாயிற்றுக்கிழமை கிழமை. பங்களூர் மாதிரி. இருக்கிறது. அந்தப் பிள்ளையார் கோவிலின் பிரதிமைகள் எல்லாம் கண்ணைப் பறிக்கின்றன.வாழத்துகள். அனைவருக்கும் இனிய நாளுக்கான வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  11. அன்பு சீனா சாருக்கு அஞ்சலிகள்...

    படங்களையும் அவற்றுக்கான தலைப்புகளையும் ரசித்தேன்

    பதிலளிநீக்கு
  12. இப்பத்தான் இடது புறம் பார்க்கிறேன் ஸ்ரீராம் சீனா ஐயாவுக்கான அஞ்சலியை....

    எங்களின் ஆழ்ந்த அஞ்சலியும் தெரிவித்துக் கொள்கிறோம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுவும் நாம் நேற்றே தெரிவித்ததாலும்....இடப்பக்கம் பார்க்கும் வழக்கமே எனக்கு இல்லை (அப்சர்வேஷம் ரொம்ப குறைவு...) என்பதால் டக்கென்று இங்கு இருந்தது தெரியவில்லை ஸ்ரீராம்.

      ஸாரி...மன்னிக்கவும்

      கீதா

      நீக்கு
  13. வலைச்சரத்தில் இரு முறை ஆசிரியராகப் பங்கெடுத்திருக்கிறோம். அப்போதுதான் வலையுலகில் நிறைய தளங்கள் இருப்பதும் தெரிய வந்தது. நாங்களுமே அப்போதுதான் வலையுலகில் நுழைந்த நேரம். எங்களுக்கு அனுபவமும் இல்லை எப்படி வலைச்சரத்தில் ஆசிரியராகத் தொடர வேண்டும் அதுவும் ஒரு வாரம் என்ற பிரமிப்பு. வலைகள் பல அறிமுகப்படுத்த வேண்டும் என்றதும் தேடிய போதுதான் புதிய அறிமுகங்களும் கிடைத்தன என்றால் மிகையல்ல.

    இரண்டாம் முறை திரு பிரகாஷ் அவர்கள் தொடர்பு கொண்டார்.

    மிகவும் அன்பான மனிதர் சீனா ஐயா.

    வலைச்சரம் மூலம் தான் எங்கள் வலைத்தளம் கூட பலரை அடைந்தது என்றும் சொல்ல வேண்டும். நம் தளம் அங்கு அறிமுகமாகியிருந்தால் மிக்க மகிழ்ச்சியாகவும் இருக்கும்.

    அப்படியான ஐயா அவர்கள் மறைந்தது மிகவும் அதிர்ச்சி.

    எங்களின் ஆழ்ந்த அஞ்சலிகளையும் இங்குப் பதிவு செய்கிறோம்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  14. படங்கள் எல்லாம் மிக மிக அழகாக இருக்கின்றன. தலைப்பும்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  15. படங்கள் எல்லாம் அழகு.
    பிரசாத தட்டில் அழகாய் வாழைபழங்களை சுற்றி வைத்து இருக்கிறார்கள், நடுவில் கலர் பூந்திகளா?
    பூமாலை படம் அழகு. மசூதி, பிள்ளையார் கோவில் எல்லாம் அழகு.

    பதிலளிநீக்கு
  16. வலைச்சரத்தில் நம் பதிவுகள் அறிமுகபடுத்தபடும் போது மகிழ்ந்த காலங்கள் நினைவில் வந்து போகிறது.
    வை.கோ சார் இரண்டு முறை என்னை அழைத்தார் வலைச்சரத்தில் பங்கு கொள்ள சொல்லி, சீனா சார் ஒரு முறை அழைத்தார். மூன்று, நான்கு முறை வலைச்சர ஆசிரியர் பொறுப்பு வகித்து இருக்கிறேன்.
    அதனால் நிறை வலைத்தளங்களை படிக்க வாய்ப்பு கிடைத்தது.
    சீனா சாரின் இழப்பு வருந்த வைக்கிறது.
    அவர் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  17. பதில்கள்
    1. சீனா ஸாரின் மறைவு மிக்க வருத்தத்தைக் கொடுத்தது. அன்னாரின் ஆத்மா சாந்தி அடையப் பிரார்த்திக்கிறேன். அவரின் குடும்பத்தினருக்கு என் அனுதாபங்கள்.

      நீக்கு
  18. படங்களும், கேப்ஷன்களும் சிறப்பு.
    வெறிச்சென்று இங்கும் வீதிகள் புகைப்படங்களில் அழகாக இருக்கும்.
    மழைத்தண்ணீர் பூமிக்குள் இறங்க முடியாமல் கான்க்ரீட், அல்லது இப்படிப்பட்ட ப்ளாக்குகள் போடுவதால்தான் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்து விட்டது என்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களும்,அதற்கேற்ற தலைப்புகளும் மிக்க அருமையாக உள்ளது. அன்புடன்

      நீக்கு
  19. படங்களும் அதற்கான வாசகங்களும் சிறப்பு.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!