ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

கார் கண்காட்சி முடிந்து .. இனி காரிலிருந்து கண்ட காட்சிகள்.

செல்லும் வழியில் காமிரா கண்களில் பட்டவை .. 




ஒரு வீடு ஒரு வேலி !



நீல நிறத்தில் இருப்பது என்ன? 



1/4, 1/2, 1



எத்தனை பயணிகள்?







மலைப்பிரதேசத்தின் நன்மைகளில் ஒன்று ..சுத்தமான சாலை 


டீ கடை? 




நர்சரி 







ஒட்டகச் சிவிங்கி தலையைக் காணோமே! 



பச்சை நிறமே , பச்சை நிறமே! 







ஓல்ட் ஒயின் நியூ ஷெட்?







ஏதோ ஸ்வரக் கோர்வை மாதிரி இல்லை? நி ச ரி க த ம 


போர்டு கொஞ்சம் பெரியதோ?











மிளகு நிலம் ! 



பிச்சை சாருக்கு தெரியுமா கூகிளுக்கு இங்கே ஒரு ப்ரான்ச்  டீக்கடை இருக்கு என்று? 







அப்போ மீதி இடங்களில் விற்கப்படுபவை unhealthy யா! 



அந்த ஜாங்கிரி எல்லாத்தையும்  பிச்சுப் பார்த்து என்ன எழுதியிருக்குன்னு சொல்லுங்க! 







பார்(க்)கா(தீ)ர் ! 



வேலியா , நீலியா ?







எளநீ !



ஹரி ஓம் .. 



அவைகள் எப்படி எல்லா டிகிரிகளிலும் சாய்ந்து உள்ளன? 







ஓம் பராசக்தி ! சிம்மவாஹிணி !


===

56 கருத்துகள்:

  1. இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண் விடல்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. அனைவருக்கும் இனிய நாளுக்கான வாழ்த்துகள்.இறைவன் நம்மைக் காப்பான்.

    பதிலளிநீக்கு
  3. சாலைகளும் மரவரிசைகளும்,பசுமை நிறைந்த
    தென்னை மரங்கள்
    சாலையோரக் கடைகள் எல்லாமே அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இறைவன் இயற்கையின் வடிவில் இருக்கிறான் என்று தாகூர் சும்மாவா சொன்னார்!

      நீக்கு
    2. ரெண்டு ரஸகுல்லா சாப்ட்றதுல உள்ள இடைவெளில ஏதாவது சொல்லீருவோம்னு சொல்லியிருப்பாரோ தாகூர் !

      நீக்கு
    3. இதில் ஏதேனும் மறைபொருள் இருக்கா தலைவா?

      நீக்கு
  4. கொடுக்கப்பட்ட தலைப்புகளும் சுவை.நீலி:)

    பதிலளிநீக்கு
  5. வீடும் வேலியும் அருமை.
    பச்சை கட்டிடம்,
    பச்சை தோட்டம், க்ரீன் ஹவுஸ்.
    கலைந்த ஜாங்கிரி எழுத்துகள்.
    டீக்கடை எங்கேன்னு கேட்கிறாரோ.

    பதிலளிநீக்கு
  6. ஸிம்ம வாஹினி நம்மை ரக்ஷிக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதே, அதே! ஸ்ரீசக்ரராஜ சிம்மாசனேஸ்வரி ஸ்ரீலலிதாம்பிகையே ..

      நீக்கு
  7. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், வாழ்த்துகள், பிரார்த்தனைகள். நண்பர் கேகேஆர்.ரஹ்மான் அவர்களும் அவர் மனைவியும் கொரோனாவிலிருந்து நல்லபடியாக நலம் பெற்று வரச் சிறப்புப் பிரார்த்தனைகள். (வாட்சப்பில் இருக்கார்) மற்றும் உலக க்ஷேமத்துக்காகவும் நம் நண்பர்கள் அனைவருக்காகவும் பிரார்த்தனைகள். இனியாவது ஊரடங்கின் பிடியிலிருந்து அனைவரும் வெளிவந்து மகிழ்வான வாழ்க்கை வாழவும் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  8. அந்த இரண்டாம் படம் "ஒரு வீடு, ஒரு வேலி" படம் நாங்க ராஜஸ்தானுக்கு முதல் முறை போனப்போ இருந்த ராணுவக் குடியிருப்பு வீட்டைப் போல் உள்ளது. அதைச் சுற்றிலும் இப்படித் தான் வேலி அமைந்திருக்கும். பீர்க்கங்காய்க் கொடி ஒன்று வேலியில் தானாகக் கிளம்பிச் சக்கைப் போடு போட்டது.

    பதிலளிநீக்கு
  9. காரிலிருந்து கண்ட காட்சிகள் அனைத்தும் அருமையான காட்சிகள். பொதுவாகத் தமிழ்நாடு தாண்டினாலே ஃப்ளெக்ஸ் பானர்கள், போஸ்டர்கள், கட்சிக் கொடிகள், குப்பைகள் பார்க்க முடியாது. ஆகவே கர்நாடகத்தில் மலைச்சாலைகள் சுத்தமாக இருப்பதில் வியப்பெல்லாம் இல்லை. "பெண்"களூரில் சர் சிவிராமன் நகரில் சில, பல நாட்கள் தங்கினப்போப் பார்த்து வியந்த ஒரு விஷயமும் கூட. ஆனால் "பெண்"களூரின் மற்றப் பகுதிகள் பற்றித் தெரியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் இருக்கும் பகுதி urban மற்றும் rural பகுதிகள் கலந்த விசித்திர கலவை!

      நீக்கு
  10. அந்த வேலி, நீலி, சிம்மவாஹினி எல்லாம் அருமை. ஜாங்கிரியைப் பிய்ச்சுப் பிய்ச்சுச் சாப்பிட்டு விட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிப்புக்கு ஆசைப்படும் நெல்லைத்தமிழன் வருவாரேன்னு நினைச்சுப் பார்த்திருக்க வேணாம்? அதனாலத்தான் ஜாங்கிரியைக் காணோமேன்னு ஏமாற்றமடைந்தேன் போலிருக்கு

      நீக்கு
    2. ஹாஹாஹா, சின்ன வயசில் இருந்தே ஜாங்கிரி கவனிக்கவும், ஜாங்கிரி (ஜிலேபி இல்லை) பிடித்த இனிப்புப் பண்டம். துளித்துளியாய்ப் பிய்ச்சுச் சாப்பிடறதில் உள்ள சுகம்! ஆஹா! இப்போச் சாப்பிட்டே நாளாச்சு/ வருஷமாச்சு! :(

      நீக்கு
    3. ஓ அந்த இனிப்பு நாட்கள்!

      நீக்கு
    4. எனக்கு ஜாங்கிரியைப் பிய்க்கவே மனசு வராது.

      நீக்கு
  11. நீல நிறத்தில் இருப்பது என்ன என்று தஞ்சைக் காரங்களுக்குத் தெரியலைனா வேற யாருக்குத் தெரியும்? சோழவளநாடு சோறுடைத்து என்ற சொல்லுக்கு அவங்கதானே காரணம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம் .. காரணம் ஏன் கண்ணே ?

      நீக்கு
    2. //நீல நிறத்தில் இருப்பது என்ன?//

      உழும் கருவி. ஏர் உழுக, நாற்று நட, அறுவடை செய்ய எல்லாம் இப்போது மெஷின் செய்கிறதே!

      நீக்கு
    3. அட? ஆமா இல்ல! அதை எப்படிக் கவனிக்காமல் விட்டேன்! கோமதி அரசுவை வழிமொழிகிறேன்.

      நீக்கு
    4. 'தஞ்சைக்காரங்களுக்குத் தெரியலைனா என்று நெ த சொன்னவுடனேயே கண்டுபிடித்துவிட்டேன்!

      நீக்கு
  12. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  13. காரில் போகும் போது எடுத்த படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  14. இப்படித்தான் இருக்க வேண்டும்..
    கண்ணில் படும் நல்ல காட்சிகள் எதையும் விடக்கூடாது....

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் சகோதரரே

    படங்களுக்கேற்ற சுருக்கமான வரிகளில் விமர்சனம் ரசிக்கும்படி அமைந்துள்ளது.

    கார் கண்காட்சியும், காரிலிருந்தபடி கண்ட கண்காட்சிகளும் மிக நன்றாக உள்ளன. பசுமை நிறைந்த மரங்கள், வெண்மேககள் சூழ்ந்த கட்டிடங்கள் படங்களும் அருமையாக உள்ளது. சின்ன சின்ன கோவில்களும், வேலி தாண்டாத வீடுகளும் அழகாக உள்ளன.

    காலையில் பார்க்கும் போது நிறைய படங்கள் உள்ளன மாதிரி இருந்தனவே..இப்போது ஒன்றிரண்டு குறைந்த மாதிரி எனக்கு மட்டுந்தான் தோன்றுகிறதோ.? இல்லை, அந்த நீலியின் வேலையாய் இருக்குமோ.:) நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த முறை விமரிசனம் கொடுத்திருப்பது கேஜி அவர்களே என நம்புகிறேன். ஸ்ரீராம் எனில் கவிதைத் தனம் வந்திருக்கும். கௌதமன் எனில் கொஞ்சம் குகுவோட வேலை இருக்கும். நகைச்சுவை இருக்கும்.

      நீக்கு
    2. ஆக இதில் க வும் இல்லை; கு வும் இல்லை என்கிறீர்களா!

      நீக்கு
  16. சுவாரஸ்யமான சாலைக் காட்சிகள்.

    பதிலளிநீக்கு
  17. கார்க் காட்சியைவிடக் காரிலிருந்து கண்ட காட்டிகள் அருமை... எனக்குப் பிடிச்சது அந்த பிங்கி ஹவுஸ்:).

    பதிலளிநீக்கு
  18. படங்களும் படங்களுக்கான விளக்கங்களும் நன்று.

    தொடரட்டும் பதிவுகள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!