கிளினிக்கில் சர்க்கரை நோய்க்காக மருத்துவரைப் பார்த்து விட்டு பாஸும் மாமியாரும் வீடு வந்த சேர்ந்த ஐந்து நிமிடத்தில் க்ளினிக்கிலிருந்து ஃபோன்.
உள்ளே வந்துகொண்டே எடுத்துக் பேசினார் பாஸ்.
"மேடம்... உங்க கிட்ட கொடுத்திருக்கற ஊசியைத் திருப்பிக் கொண்டு வாங்களேன். ரொம்ப தூரம் போயிட்டீங்களா?"
அங்கேயே ஒரு ஊசியை போட்டுக்கொண்டு அடுத்த வாரத்துக்கு இன்னொரு ஊசியை கையில் வாங்கி வந்திருந்தார்கள். வீட்டுக்கருகில் ஊசி போட, தெரிந்த ஆட்கள் இருந்தார்கள்.
"வீட்டுக்கே வந்துட்டேன். ஏன்?" என்றார் பாஸ்.
"ஜென்ட்சுக்கு போடற ஊசியை உங்களுக்குக் கொடுத்துட்டோம். உடனே திருப்பிக் கொண்டு வாங்களேன்" "அய்யய்யோ... ஜெண்ட்ஸுக்கு போடற ஊசியா? அப்போ அங்க அம்மாவுக்குப் போட்ட ஊசி? அதைச் சரியாப் போட்டீங்களா" பாஸ் பதறினார்.
"அதெல்லாம் சரியாத்தான் போட்டோம். கொடுத்ததுதான் தப்பாஇருக்கு. உடனே கொண்டு வர்றீங்களா?"
"உடனே வர முடியாது.. நாளைக்குக் காலை அல்லது சாயந்திரம்.."
"இல்லை மேடம்.. உடனே கொண்டு வாங்களேன்..."
"அதெப்படிங்க உடனே முடியும்? இப்பதான் வீடு வந்தோம்... எவ்வளவு தூரம்... ஆட்டோ சார்ஜ் வேஸ்ட்"
கேட்டுக் கொண்டிருந்த எனக்கு ஆச்சர்யமாயிருந்தது.
போனதோ சர்க்கரை நோய்ச் சிகிச்சைக்கு. எதுவும் ஹார்மோன் ஊசி போடக் கூட வாய்ப்பில்லை. அதென்ன ஆண் ஊசி, பெண் ஊசி?
தரப்பட்டுள்ள ஊசி மருந்தை எடுத்துப் பார்த்தபோது B1, B6, B12 ஊசி எனத் தெரிந்தது. இதில் என்ன ஆண், பெண்?
பில்லைக் கேட்டால் பில் தரவில்லை என்று பதில் வந்தது. எதற்கு எவ்வளவு பணம் எடுத்துக் கொண்டுள்ளார்கள் என்றும் தெரியவில்லை.
"வேறு ஏதும் ஊசி போட்டார்களா?" என்று கேட்டேன்.
"இல்லை, அங்கும் இதிலிருந்துதான் போட்டார்கள்" என்றார் பாஸ்.
அழைப்பு வந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு பி காம்ப்ளெக்ஸ் ஊசியில் ஆண், பெண் பேதம் என்ன, என்ன சொல்கிறீர்கள் என்று கோபமாகக் கேட்டவுடன் உண்மையை ஒத்துக் கொண்டார். அந்தக் குறிப்பிட்ட ஊசி ஒன்றுதான் இருந்திருக்கிறது. அதை அவருக்கு அல்லது அவர்களுக்கு ரொம்பவும் தெரிந்த கஸ்டமர் ஒருவருக்கு அந்த மருந்து அன்று மாலைக்குத் தேவையாய் இருந்திருக்கிறது. ஆர்டர் போட்டால் மறுநாள்தான் கிடைக்கும். வருகிற காசை விட மனமில்லை!
அதையும் அவர் அப்படிச் சொல்லவில்லை. அவர் ஏற்கெனவே பணம் கொடுத்து விட்டதாகவும் அவருக்குத் தருவதற்குப் பதில் எங்களுக்குத் தந்து விட்டதாகவும் சொல்லி,
எங்களைக் கொண்டு வந்து தர முடியுமா என்று கேட்டவர், நான் கேள்வி கேட்டதும் கொஞ்ச நேரத்தில் அவரே வந்து வாங்கிக் கொள்வதாய்ச் சொல்லி இருக்கிறார்.
===============================================================================================
- போபால் : மத்திய பிரதேசத்தில், தண்ணீர் பஞ்சத்தால் மனைவி பிரிந்து சென்றதை கணவர் கண்ணீருடன் நிருபர்களிடம் சொன்னதை அடுத்து, பல ஆண்டு பிரச்னைக்கு தீர்வு கிடைத்துள்ளது.
- போபால் : மத்திய பிரதேசத்தில், தனக்கு மூன்றாவது குழந்தை இருப்பதை மறைத்த ஆசிரியையின் வேலை பறிபோனது.
- அலகாபாத் : 'அதீத மது போதையில் ஆண் நண்பர் வீட்டுக்குச் சென்று, பிரச்னையை தானே வரவேற்றுள்ளார்' என, பாதிக்கப்பட்ட பெண் குறித்து அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
- பாட்னா: பீஹாரில் காதலனுடன் சென்றதால் மகளை கொலை செய்துவிட்டு நாடகமாடிய தந்தையை போலீசார் கைது செய்தனர்.
- ஜார்ஜியா: ஹிந்து மதம் மற்றும் ஹிந்துக்கள் குறித்து அவதூறு பேசினாலோ வேறு சூழலை கெடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டாலோ கடும் தண்டனை விதிக்கும் சட்ட மசோதா அமெரிக்காவில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
- குனோ பூங்காவில் டிரைவராக வேலை பார்க்கும் சத்ய நாராயண் குர்ஜார் என்பவர், பிளாஸ்டிக் கேனில் தண்ணீரை எடுத்துச் சென்று, பெரிய உலோக பாத்திரத்தில் அதை நிரப்பி, மரத்தின் அடியில் வைத்துள்ளார். பூங்காவில் இருக்கும் 'ஜுவாலா' என பெயரிடப்பட்ட பெண் சிவிங்கி புலியும், அதன் குட்டிகளும் அந்த தண்ணீரை குடித்தன. தண்ணீர் வைத்ததால், ம.பி.,யில் உள்ள குனோ தேசிய பூங்கா டிரைவரின் வேலைக்கு சிக்கல் ஏற்பட்டது.
- பீஜிங்:சீனாவில் பலத்த சூறாவளி வீசுவதால், 800க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ரயில் சேவையும் பாதிக்கப்பட்ட நிலையில், உடல் எடை 50 கிலோவுக்கு குறைவான நபர்கள் வெளியே வர வேண்டாம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- அலிகார் : உத்தர பிரதேசத்தில், திருமணத்துக்கு 10 நாட்களுக்கு முன், மகளுக்கு நிச்சயிக்கப்பட்ட இளைஞருடன் அவரது தாயார் ஓட்டம் பிடித்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
- சென்னை : விரைவு ரயில்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதல் சுமைகளை எடுத்துச் செல்லும் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
- வாஷிங்டன்: மோசடி குற்றச்சாட்டின் பேரில் இந்தியர் 200 பேரை அமெரிக்க நிறுவனம் பணி நீக்கம் செய்தது. இவர்களில் பெரும்பாலோர் தெலுங்கு பின்னணியைச் சேர்ந்தவர்கள்.
- வர்த்தக போர் தீவிரம்; சீன பொருட்களுக்கு 245 சதவீதம் வரி விதித்து டிரம்ப் அதிரடி
- மும்பை: நாசிக் அருகே உள்ள மன்மாட் முதல் மும்பை வரை இயக்கப்படும் பஞ்சவாடி எக்ஸ்பிரஸ் ரயிலில் இந்தியாவின் முதல் முறையாக ஏ.டி.எம்., இயந்திரம் அமைக்கப் பட்டுள்ளது. இந்த ஏ.டி.எம்., இயந்திரத்தில் பணம் எடுத்து ரயில்வே அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை வெற்றி அடைந்தது.
=========================================================================================
==================================================================================================
இருமொழியா மும்மொழியா என்ற பஞ்சாயத்து இன்னும் ஓய்ந்தபாடில்லை. ஆனால் பலருக்கும் தெரியாத ஒரு மொழி உள்ளது. அதைத் தற்போது இருவர் மட்டும் பேசுகிறார்கள் என்பதுதான் வியப்பான செய்தி அந்த மொழியின் பெயர் மாதிகா.
கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் கரிவள்ளூர் கிராமப் பஞ்சாயத்துக்கு உட்பட்டது கூக்காணம் எனும் கிராமம். அதன் ஒதுக்குப்புறமான பகுதியில் 87 வயதாகும் கே பி நாராயணன் என்பவரும் அவருடைய உறவுக்காரப் பெண்ணான ராஜபுத்ரியும் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரு மட்டுமே இப்போது மாதிகா மொழியைப் பேசுகிறார்கள். தெலுங்கு துளு கன்னடம் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளின் கலவைதான் மாதிகா. இந்த மொழிக்கு எழுத்து வடிவம் இல்லை. எனவே அழிவின் விளிம்பில் இருக்கிறது.
இந்த மொழி பேசும் சமூகத்தினர் வெகு காலத்துக்கு முன்னர் கர்நாடகாவில் மலைப்பாங்கான பகுதிகளிலிருந்து புலம்பெயர்ந்து கேரளாவின் வடக்கு மலபார் பகுதிகளில் குடியேறியிருக்கின்றனர். இவர்கள் முதலில் ஆதிவாசிகள் பட்டியலில் இருந்திருக்கிறார்கள். பின்னர் அட்டவணை சமூகப்பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்டிருக்கிறார்கள். மேற்படி இந்த இருவரின் காலத்துக்குப் பிறகு மாதிகா மொழியைப் பேசும் நபர் ஒருவரும் இருக்கப்போவதில்லை என்பதுதான் கசப்பான உண்மை.
தகவல் நன்றி ஜி வி ரிதன்யா சினேகிதி, JKC ஸார்.
==================================================================================================
==============================================================================================
===============================================================================================
நடிகர்த்திலகத்தின் இன்னொரு சாதனை - அதிகம் பேர் அறியாதது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 350 படங்களுக்கு மேல் நடித்தவர், பல வேடங்களில் நடித்தவர், நடிப்பின் சிகரம் என்றெல்லாம் போற்றப்படுகிறார். ஆனால் அவர் சப்தமே இல்லாமல் பல சாதனைகளை செய்திருக்கிறார். அதில் முக்கியமானது முதல் நூறாவது பட நாயகன் சிவாஜி.
சிவாஜிக்கு முந்தைய காலகட்ட நடிகர்கள் 50 படங்கள் வரை நடித்தது பெரிய. விஷயமாக இருந்தது. நடிகர் திலகம் சிவாஜி தான் முதல் 100 படங்களில் நடித்த ஹீரோ. சிவாஜியின் நூறாவது படம் 'நவராத்திரி'. இந்தப் படத்தில் சிவாஜி 9 வேடங்களில் நடித்தார். படமும் 100 நாட்களுக்கு மேல் ஓடியது. சிவாஜிக்கு பிறகு எம்ஜிஆர், ஜெமினி கணேசன், ரஜினி, கமல் உள்ளிட்ட பல ஹீரோக்கள் நூறு படங்களில் நடித்தனர்.
அதோடு சிவாஜியின் இன்னொரு சாதனையும் உண்டு. இன்றைக்கு ஒரே நாளில் ஒரே நடிகர் நடித்த இரண்டு படங்கள் வெளிவந்தால் அது அதிசயமாக பார்க்கப்படுகிறது. ஆனால் ஒரு முறை இரு முறை அல்ல 17 முறை சிவாஜி நடித்த இரண்டு படங்கள் ஒரே நாளில் திரைக்கு வந்திருக்கிறது.
\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\
ஒரு பத்திரிகையாளரின் அனுபவம்............ ஜோகிந்தர் சிங்கிற்கு என்ன பதில் சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. அரசின் மறைமுக உதவியோடு இலங்கைக்குச் செல்லவும், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனைச் சந்திக்கவும் நான் விரும்பவில்லை. அதே நேரத்தில், அப்படியொரு வாய்ப்பு கிடைக்குமானால் அதை ஏன் தவிர்க்க வேண்டும் என்றும் எனக்குள் இருந்த பத்திரிகையாளன் கேள்வி எழுப்பினான்.
யோசித்து பதிலளிக்கிறேன் என்று கூறி அவரிடமிருந்து விடைபெற்றேன். ஒரு அதிகாரியை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார் சிபிஐ இயக்குநர் ஜோகிந்தர் சிங். அந்த அதிகாரி எனக்குத் தேவையான எல்லா உதவிகளையும், ஏற்பாடுகளையும் செய்து தருவார் என்று என்னிடம் தெரிவித்தார். அன்று இரவு முழுவதும் ஜோகிந்தர் சிங்குக்கும் சிபிஐ. அதிகாரிக்கும் நான் என்ன பதில் சொல்வது என்று தெரியாத குழப்பத்தில் தவித்தேன்.
இக்கட்டான பிரச்னைகள் எனக்கு வரும்போது அதற்கு விடைதேடி நான் செல்கின்ற இடங்கள் மூன்று. முதலாவது முன்னாள் பிரதமர் சந்திரசேகர்ஜி; அடுத்தது பிரணாப் முகர்ஜி; மூன்றாவது, அப்போது வெளியுறவுத் துறைக்கு அமைச்சராக இருந்த ஐ.கே.குஜ்ரால். அரசுமுறை பயணமாக இலங்கைக்குச் சென்றிருந்ததால் அவரை சந்திப்பது என்பதும், அறிவுரை கேட்பதும் இயலாது.
காலை சுமார் 10 மணிக்கு கிரேட்டர் கைலாஷில் இருந்த பிரணாப் முகர்ஜியின் வீட்டுக்குச் சென்றேன். வழக்கமாக தொலைபேசியில் அவர் இருப்பதை உறுதிசெய்துவிட்டுதான் நான் போவது வழக்கம். அன்று வழக்கத்துக்கு மாறாக முன் அனுமதி பெறாமலேயே அவரை சந்திக்கச் சென்றேன்.
என்னுடைய அதிருஷ்டம் அவர் வீட்டில் இருந்தார். அவரை சந்திக்க பார்வையாளர்கள் யாரும் வந்திருக்கவில்லை. உள்ளே தனது அலுவலக அறையில் அவர் படித்துக் கொண்டிருக்கிறார் என்று உதவியாளர் தெரிவித்தார். அப்போது அவரைத் தொந்தரவு செய்ய விரும்பாததால் நான் காத்திருந்தேன்.
சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலான காத்திருப்புக்குப் பிறகு, அவரது அறையில் இருந்து அழைப்பு மணி அடிக்கப்பட்டது. நான் காத்திருப்பதைத் தெரிவிக்கும்படி உதவியாளரிடம் சொல்லி அனுப்பினேன்.
சில நிமிடங்களில் அழைத்தார். வழக்கம் போல 'கம்.. கம்..' என்று மகிழ்ச்சியுடன் என்னை அவர் வரவேற்றபோது, நீண்ட நாள் இடைவெளி கலைந்ததுபோல இருந்தது.
அவரது மேஜைக்கு முன்னால் அமர்ந்த என்னிடம் அவர் கேட்ட முதல். கேள்வி என்னைத் திடுக்கிட வைத்தது.
'விடுதலைப் புலிகள் பிரச்னை தமிழ்நாட்டில் மீண்டும் தலைதூக்கியிருக்கிறது என்று தோன்றுகிறதே, என்ன நடக்கிறது?'
'அப்படியெல்லாம் விடுதலைப் புலிகளின் நடமாட்டம் அதிகரித்துவிடவில்லை. அவர்களுக்கு ஆதரவும் பெருகிவிடவில்லை. அதே நேரத்தில் தமிழ்நாட்டில் இலங்கை வாழ் தமிழர்களின் நலன் குறித்த கவலை இல்லாமல் இல்லை. திமுகவும், முதல்வர் கருணாநிதியும் மீண்டும் ஒருமுறை ஈழப் பிரச்னையில் சிக்கிக்கொள்ளத் தயாராக இல்லை என்பதுதான் எனது கருத்து.'
'நேற்று பேரவையில் முதல்வர் கருணாநிதி பேசியதையெல்லாம் நான் படித்தேன். பாமக போன்ற கட்சிகள் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், தமிழ் ஈழத்தை வலியுறுத்தியும் பேசுவது திமுகவின் வாக்கு வங்கியில் சரிவை ஏற்படுத்தும் என்று அவர் நிச்சயமாக அஞ்சுவார். மத்திய அமைச்சரவையில் திமுக இடம்பெற்றிருப்பதால் அவரால் முன்புபோல, வெளிப்படையான விடுதலைப் புலிகள் ஆதரவு நிலையை எடுக்க முடியாது.'
'முதல்வர் கருணாநிதியே அதனால்தான் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசினால் கைது செய்யப்படுவார்கள் என்று எச்சரித்திருக்கிறார். வை. கோபாலசாமி பிரிந்துவிட்ட நிலையில் திமுக தீவிரமான இலங்கைத் தமிழர் ஆதரவு நிலைபாட்டை எடுக்காது. அதே நேரத்தில் விடுதலைப் புலிகளுக்கும் அதன் தலைவர் பிரபாகரனுக்கும் இளைஞர்கள் மத்தியில் ஆதரவு இருக்கிறது என்பதையும் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.'
'இளைஞர்கள் மத்தியில் என்றால், பரவலாகவா அல்லது குறிப்பிட்ட சிலரிடம் மட்டுமா?'
'திராவிடர் கழகம், மதிமுக, பாமக போன்றவற்றில் இருக்கும் இளைஞர்கள் பிரபாகரனைத் தலைமைப் பண்புக்கு முன்னுதாரணமாக நினைக்கிறார்கள்' என்று சொல்லி நிறுத்தினேன்.
பிரணாப் முகர்ஜி சாவகாசமாக தனது பைப்பில் புகையிலையை நிரப்பி, பற்ற வைத்து, புகையை உறிஞ்சினார். சிறிது நேரம் ஏதோ யோசித்தபடி இருந்தார். நான் இடைமறிக்க விரும்பவில்லை. மூன்று, நான்கு நிமிடங்களுக்குப் பிறகு என்னை அவர் ஏறெடுத்துப் பார்த்தபோது நான் மெதுவாக பேசத் தொடங்கினேன்.
'நான் உங்களிடம் யோசனை கேட்பதற்காகத்தான் இங்கு வந்திருக்கிறேன். நான் என்ன கேட்க நினைத்து வந்தேனோ, அதே விஷயம் குறித்து நீங்கள் பிரஸ்தாபித்தது என்னை ஆச்சரியப்படுத்துகிறது...'
'என்ன பிரச்னை, என்னிடம் என்ன யோசனை கேட்க வந்தாய்?'
நான் போஃபர்ஸ் ஆவணங்கள் குறித்துத் தெரிந்துகொள்வதற்காக சிபிஐ அலுவலக நிருபர்கள் கூட்டத்துக்கு போனதில் தொடங்கி, இயக்குநர் ஜோகிந்தர் சிங்கை சந்தித்தது, அவர் என்னைத் தனியாக அழைத்துப் பேசியது, என்னிடம் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை சந்திக்கும்படி கேட்டுக்கொண்டது என்று அனைத்தையுமே தெரிவித்தேன்.
'ஜோகிந்தர் சிங்கின் வேண்டுகோளை ஏற்றுக்கொள்வதா, கூடாதா என்று நீங்கள்தான் எனக்கு வழிகாட்ட வேண்டும்' என்று நான் சொன்னபோது, பிரணாப்தா புன்னகைத்தார்.
'அவர்கள் சொன்னதையெல்லாம் நீ அப்படியே நம்பி இலங்கைக்குப் போய் பிரபாகரனை சந்திக்க நினைப்பது எனக்கு வியப்பாக இருக்கிறது.
போய் பிரபாகரனை சந்திக்க நினைப்பது எனக்கு வியப்பாக இருக்கிறது. அவர்கள் உன்னை ஆழம்பார்க்கிறார்கள். பிரபாகரனுடன் தொடர்பில் இருக்கும்
உனது நண்பர்கள் யார் யார் என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள். அடுத்தகட்டமாக உன்னை பலியாடாக அனுப்பினாலும் நான் ஆச்சரியப்பட மாட்டேன்..' என்று சொல்லி நிறுத்தினார் பிரணாப் முகர்ஜி.
எனக்கு குப்பென்று வியர்த்துவிட்டது. இப்படியெல்லாம் நான் நினைக்கவே இல்லை. அவரது அனுபவமும், அரசியல் நுட்பமும் எத்தகையது என்பதை அப்போது உணர்ந்தேன். அவரே மேலும் பேசினார்.
'விடுதலைப் புலிகளை நீ சாதாரணமாக எடைபோட்டு விடாதே. இந்தியா போன்ற மிகப் பெரிய நாட்டில், முன்னாள் பிரதமரையே அத்தனை பாதுகாப்புகளையும் மீறி அவர்களால் படுகொலை செய்ய முடிந்தது என்றால், எந்த அளவுக்கு அந்த அமைப்பு கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஜோகிந்தர் சிங்கும், இந்திய அரசும்
உனக்குப் பின்னால் இருக்கிறது என்கிற சின்ன சந்தேகம் ஏற்பட்டாலும், நீ பிரபாகரனையே சந்திக்கும் அளவுக்கு நெருங்கினாலும் உயிரோடு திரும்ப மாட்டாய்..'
'அப்படியானால் நான் சந்திக்க விரும்பவில்லை என்று சொல்லி விடுகிறேன்.
'சொல்லிவிடுகிறேன் அல்ல. மிகவும் அழுத்தமாகவும், தீர்மானமாகவும்
அப்படியொரு ரிஸ்கை எடுக்க நான் தயாராக இல்லை என்று சொல்லிவிடு. ஒருவேளை உன்னை மீண்டும் தனியாக அழைத்து வற்புறுத்தவோ, அல்லது 'யாருடைய ஆலோசனை கேட்டு இப்படி முடிவெடுத்தாய் 'என்று கேட்டாலும் தைரியமாக எனது பெயரை நீ ஜோகிந்தர் சிங்கிடம் தெரிவிக்கலாம் அவர் என்னை தொடர்பு கொண்டால் நான் பேசிக் கொள்கிறேன்'
இப்படி பக்க பலமாக எனக்கு பிரணாப் முகர்ஜி இருக்கிறார் என்கிற தைரியம் நிஜமாக நெகிழ வைத்தது. அவர் இருக்கும் நிலைக்கு என்னை போன்ற சாதாரணமான ஒரு பத்திரிக்கையாளருக்கு ஆதரவாக இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. நான் நாற்காலியில் இருந்து எழுந்து அவரது காலை தொட்ட போதும் என் கண்கள் கலங்கிவிட்டன.
அவர் புன்னகைத்தபடியே என் முதுகில் தட்டினார். 'இதில் எல்லாம் சிக்கிக் கொள்ளக் கூடாது' என்று தெரிவித்தார். நான் மீண்டும் நாற்காலிக்கு சென்று அமர்ந்தேன்
பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - கி வை - தினமணி ஆகஸ்ட் 24
================================================================================================
பொக்கிஷம்
-


=========================================================================================
வாட்ஸாப் குடும்பக் குழுமத்தில் உறவொன்று பகிர்ந்த படம் . சுவாரஸ்யமாக இருந்ததால் இங்கும் பகிர்கிறேன்!
ஒரு சாதாரண புகைப்படம் எப்படி பார்ப்பவர்களை குழப்ப முடியும் என்பதற்கு உதாரணம் இந்த படம்!!!
கொஞ்சம் உற்று நோக்கினால் அல்லது zoom செய்து பார்த்தால் உண்மை தெரியும்!!! வெறும் துணி ஒருவரை மிதக்க வைக்கும் விந்தை படத்தை எடுத்த பெயர் தெரியாத போட்டோகிராபர் வாழ்க!!!
================================================================================================
ஜோக்ஸ்
இணையத்திலிருந்து எடுத்துத் தொகுக்கப்பட்டவை
===========================================================================================
ஆண் ஊசி பெண் ஊசி பகுதியை மிகவும் ரசித்தேன்
பதிலளிநீக்குகேட்கிறவன் கேணையனாக இருந்தால்... நினைவு வந்தது
டார்ஜீலிங்கிலிருந்து
ஆமாம். சுலபமாக பயமுறுத்தி விடலாம் என்று புதுமையாக யோசித்திருக்கிறார் மருந்தகப் பெண்கள்! டாக்டருக்கு தெரியுமோ தெரியாதோ...
நீக்குவாங்க நெல்லை!
காலை வணக்கம்.
பதிலளிநீக்குவாங்க ஜீவி ஸார்... வணக்கம்.
நீக்குஒரே நாளில் இரண்டு படங்கள் வெளியாகி இரண்டுமே வெள்ளி விழா கண்ட சாதனையும் சிவாஜிக்கு உண்டு
பதிலளிநீக்குஅந்த நாள் படங்கள் வெளியான விதமும் ஓடிய நாட்களும் வேறு ரகம்! இப்போது?!!
நீக்குசுவாரசியமான படம் பீச்சில் படுத்திருக்கும் பெண்
பதிலளிநீக்குஆம். விஷயம் புரிந்தபின் ஜூம் செய்யாமலேயே சூட்சுமம் விளங்கும்!
நீக்குபெரிசு பண்ணாமலேயே தெரிஞ்சுருச்சு ஸ்ரீராம்.
நீக்குகீதா
Yessu...
நீக்குகொஞ்ச நேரத்துக்கு மேல் பார்ப்பது சிரமமாக இருக்கு. பின்னர் வரேன்.
நீக்குவாசித்துக் கொண்டே வரும் பொழுது குட்டிக் கவிதையைப் பார்த்ததும் கும்மாளமிட்ட மனதின் சந்தோஷத்திற்கிடையே
பதிலளிநீக்குஅசட்டுக் கேள்வி ஒன்றும் எழுந்தது.
"அப்பப்போ கவிதை எழுத ஏன் தோன்றுகிறது, ஸ்ரீராம்?"
அழகிய (சிங்கர்) கேள்வி!
நீக்குஎன் பதில்... கொழுப்புதான்!
சமயங்களில் படித்தது ஜீரணம் ஆகாமல் வாந்தி எடுக்கிறோம் போல!!! ஹிஹிஹி...
"ஊசி வாங்கலியோ ஊசி?"
பதிலளிநீக்குஎன்று அந்தக் காலத்தில்
வீட்டுத் தெரு வாசலில்
பாசிப் பவழமும் விற்ற
பெண் குரல் மனதில் படிந்தது.
"ஆஹா! என்னவொரு
பொற்காலமும் அது? என்ற
நினைப்பும் வாழ்க்கையின்
இழப்பாய் ஆழ்மனத்தில் தைத்தது.
நீங்கள் ஜெகசிற்பியனின்
நரிக்குறத்தி கதை படித்திருக்கிறீர்களோ, ஸ்ரீராம்?
இப்போது இந்தக் கவிதையைச் சொன்னால் அந்த குல முன்னேற்றத்தைப் பொறுக்காதோர் என்று பட்டம் கட்டி விடுவர்!
நீக்குஆனாலும் இப்போது இல்லாமல், அப்போதிருந்த சில சுவாரஸ்யங்களில் அதுவும் ஒன்று.
// நரிக்குறத்தி கதை படித்திருக்கிறீர்களோ, ஸ்ரீராம்? //
படித்ததில்லை. லிங்க் கொடுங்களேன். அதுதான் குறத்தி மகன் திரைப்படமானதோ....
திரைப்படம் பார்த்ததில்லையே என்று இணையத் தேடலில் தேடினால்.. மகனை விட ம்சல்களே அதிகம்!
நீக்குதொலைக்காட்சி இன்றைய செய்திகளில் செய்தி வாசிப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின்
'தொடர் மலையினால்
பல்லிகளுக்கு இன்று விடுமுறை' செய்திகள் கூடவே நினைவுக்கு வந்து..
மும்மொழி, இருமொழி சர்ச்சைகள்.. அட சட்!..
குற ஜெமினியின் அட்டகாசம் பொறுக்காமல் மனைவி கே ஆர் விஜயா தன் மகனை வி எஸ் ராகவன் வீட்டில் வளரச் செய்வார். அவன் படித்து கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவான். வி எஸ் ராகவன் மகன் கமல் சுமாராகத்தான் படிப்பான் என்று கதை போகும்.
நீக்குதொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்கள் இருக்கட்டும், நம் மேதகு முதல்வரையும், மேதகு துணை முதல்வரையும் தப்பில்லாமல் பத்து வார்த்தை தமிழ் பேசச் சொல்லுங்கள் பார்ப்போம்!!!
அந்தத் திரைப்படம் ஜெசியின்
நீக்குஅற்புதக் கதையல்ல.
ஆனந்த விகடன் வெள்ளிவிழா சிறுகதைப்போட்டியில் முதல் பரிசு பெற்ற நரிக்குறத்தி
ஜெகசித்பியனின் அற்புத சொற்சித்திரம்!
சோக முடிவைக் கொண்ட கதையின்
ஆடிகோடாவும் பாடிகோடியும்
ஆற்று வெள்ளத்தில் திசைக்கொருவராய் பிரிந்து
ஒருவர் பெயரை இன்னொருவராய் மாற்றி மாற்றி அலமந்து கூவிக்கொண்டு இன்னும் நினைவில் நீந்துகின்றனர்!
அந்த ஜெஸியின் கதையைத் தேடி எடுத்து வாசித்து நம்ம எபி JC அவர்கள் ஒரு சனிக்கிழமையன்று பகிர்ந்து கொண்டால்?..
வழக்கம் போல ஏழு பின்னூட்டங்களைத் தாண்டாது என்பது இன்னொரு சோகம்!
சனிக்கிழமை பதிவிற்கு ஆசிரியர் குழுவும் வாசகராகிக் கலந்து கொண்டு உற்சாகமூட்டினால் என்ன என்று தொடர் யோசனை மின்னலடிக்கிறது.
நீக்குநான் அந்தக் கதை படித்ததில்லை ஜீவி ஸார். தேடிப்பார்க்கிறேன். சனிக்கிழமை.... ம்ம்... சனிக்கிழமைக்கு எண்ணம் கொடுத்த நீங்களும் ரெகுலராக வருவதில்லை.
நீக்குநான் ரெகுலராக எபியில் பின்னூட்டம் தான் போடுவதில்லை. அதற்கு காரணம் உண்டு. (!)
நீக்குஆனால் செவ்வாய், புதன், வியாழன், சனிக்கிழ்மை பகுதிகளை வாசித்து விடுவதுண்டு.
நன்றி. தொடர்ந்து பின்னூட்டமும் இட்டால் ரசிக்கலாம். சென்ற வாரம் செவ்வாய்க்கிழமை கீதா ரெங்கன் கதைக்கு உங்கள் பின்னூட்டம் வருமென்று எதிர்பார்த்தேன்!
நீக்குகாக்க காக்க
பதிலளிநீக்குகனகவேல் காக்க..
வாங்க செல்வாண்ணா... வணக்கம்.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா.. வணக்கம்+நன்றி.
நீக்குஆண் ஊசி,பெண் ஊசி.. சுவாரஸ்யம்! கவிதை சிறப்பு. பீச் மணலில் தூங்கும் பெண் அசத்தல்!
பதிலளிநீக்குசெய்திகளில்//அலகாபாத் : 'அதீத மது போதையில் ஆண் நண்பர் வீட்டுக்குச் சென்று, பிரச்னையை தானே வரவேற்றுள்ளார்' என, பாதிக்கப்பட்ட பெண் குறித்து அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.// என்னும் செய்தி முழுமையாக இல்லை.(ஜெயகுமார் சாரை நான் முந்திக் கொண்டு விட்டேன்:)))
நன்றி பானு அக்கா...
நீக்குநீங்கள் குறிப்பிட்டுள்ள செய்தியில் அந்த விஷயத்தை சுருங்கக் குறிப்பிட்டுள்ளேன். மேலும்.. 'லிங்க்'கைத் தொட்டால் முழுச் செய்திக்கு சென்று நீங்கள் அங்கேயே படிக்கலாம்!
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை.
முதல் பகுதியை ரசித்தேன். நானானால் உண்மையிலேயே அப்படி ஒரு ஊசி இருக்கிறதோவென சந்தேகப்பட்டிருப்பேன். நீங்கள் நிலைமையை சமாளித்த விதம் பாராட்டுக்குரியது.
/அப்புறம் நாங்கள் அந்த க்ளினிக்குக்கு செல்லவில்லை!/
நல்ல முடிவு. அந்த க்ளினிக் டாக்டரிடம் ஒரு புகார் செய்திருக்கலாம். அவர் காதுக்கும் இந்த விஷயத்தை போட்டு விட்டால், அதன் பின் இப்படி பயமுறுத்துவோர்க்கு கொஞ்சம் பயம் இருக்கும். (ஆனால், நாமெல்லாம் இப்படி செய்ய மாட்டோம். எனெனில் நாம் பெருந்தன்மை உள்ளம் படைத்தவர்கள்.) பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பெருந்தன்மை எல்லாம் இல்லை. அந்த டாக்டர் நமக்காக அவர்களைக் கடிந்து கொள்வது போல நடிப்பார். அவருக்கும் அது மாதிரி ஊழியர்கள் தேவை. இந்த மிஷன் பெயிலியர் ஆகியிருக்கலாம். வெவ்வேறு மிஷன்களில் வெற்றி கண்டிருப்பார்களே.. எல்லாம் ஒரே குட்டை;ஒரே மட்டை!
நீக்குஅந்த க்ளினிக் டாக்டரிடம் ஒரு புகார் செய்திருக்கலாம். அவர் காதுக்கும் இந்த விஷயத்தை போட்டு விட்டால், அதன் பின் இப்படி பயமுறுத்துவோர்க்கு கொஞ்சம் பயம் இருக்கும்.//
நீக்குகமலாக்கா....பெருந்தன்மை என்பதை விட இப்ப எல்லாருமே கூட்டுக்களவாணிங்க,. புகார் கொடுத்தாலும் ம்ஹூம்...எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டாங்க.
இந்த களவாணித்தனத்தை 1989லியே முளைக்கறத நேரில் கண்டிருக்கிறேன்.
ஸ்ரீராம் சொன்னதுதான்.
கீதா
அதே... அதே.... சபாபதே...
நீக்குகுழந்தைகளாக ஆடும்
பதிலளிநீக்குமண் துளிகள்
மழைக் காதலுனுடன்
செம்புலப் பெயல்நீராக
செல்லலாம் என்ற நினைப்பில்.
போட்டோ எடிட் செய்யப்பட்டதாகத் தோன்றுகிறதே தவிர, ட்ரிக் ஷாட் ஆக தோன்றவில்லை. 12 மணி வெயிலில், நிழல் விழாத சமயத்தில் சூடு மணலில் படுத்திருப்பது கஷ்டம். தலை முடியை கவனியுங்கள்.
பொக்கிஷம் பொக்கிஷம் தான். சுதந்திரம் கனவாக மாறுகிறது. ED CBI இவற்றை நினைக்கும்போது.
ஜோக்குகள் நிகழ் காலத்திற்கு வந்து விட்டன.
source ?
Jayakumar
வாங்க JKC ஸார்... போட்டோ ட்ரிக் ஷாட்தான். அதன் எளிதான வழியை நீங்கள் இன்னும் கண்டு கொள்ளவில்லையோ... மேலும் இதற்கு 12 மணி வெயில் அவசியமில்லை படமெடுக்க. நினைப்பது எப்படி வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளலாம்!
நீக்குபொக்கிஷத்தையும் ஜோக்ஸையும் அதனால்தான் தனித்தனியாக்கினேன்!
ஜோக்ஸ் ஸோர்ஸ் இணையம்! கொஞ்சம் இதைத் தொடரவா, பழைய ஜோக்ஸுக்கு போகவா?
அந்த மருந்து ஊசிப்போன மருந்து; அதைக் கொண்டுவாருங்கள் - ஊசிப்போகாத மருந்து தருகிறேன் என்று சொல்லியிருந்தால் .. !
பதிலளிநீக்குஎப்படி கண்டு பிடித்தீர்கள் என்று கேட்டிருக்கலாம்!
நீக்குபோனதோ சர்க்கரை நோய்ச் சிகிச்சைக்கு. எதுவும் ஹார்மோன் ஊசி போடக் கூட வாய்ப்பில்லை. அதென்ன ஆண் ஊசி, பெண் ஊசி?//
பதிலளிநீக்குஆச்சரியமாக இருக்கிறதே, நீங்க சொல்லியிருப்பது போல் ஹார்மோன் ஊசியும் இல்லை அப்படியே இருந்தாலும் ஊசிதானே பொதுதானே ஹார்மோனுக்கான மருந்து மட்டும்தானே மாறும்?
ஆச்சரியம்.
கீதா
கொஞ்ச நஞ்ச சம்பந்தமும் இல்லையே என்பதற்காக...
நீக்குஅவர்களுக்கு ரொம்பவும் தெரிந்த கஸ்டமர் ஒருவருக்கு அந்த மருந்து அன்று மாலைக்குத் தேவையாய் இருந்திருக்கிறது. ஆர்டர் போட்டால் மறுநாள்தான் கிடைக்கும். வருகிற காசை விட மனமில்லை!
பதிலளிநீக்குஅதையும் அவர் அப்படிச் சொல்லவில்லை. அவர் ஏற்கெனவே பணம் கொடுத்து விட்டதாகவும் அவருக்குத் தருவதற்குப் பதில் எங்களுக்குத் தந்து விட்டதாகவும் சொல்லி,//
அடப் பாவிங்களா!!!
ஸ்ரீராம் நீங்க நினைச்சிருப்பீங்களே....எனக்கே ஊசி குத்துறீங்களான்னு!!!!!!!
கீதா
ஹிஹிஹி.. சும்மா இருங்க கீதா...
நீக்குசம்பவம் உண்மை என்று தெரிகிறது. நிஜமாகவே மருத்துவ அறிவு இலலத அப்பாவிகள் ஏமாந்து போவாங்க.
பதிலளிநீக்குகீதா
ஆமாம். அப்படி பயமுறுத்திதானே மருத்துவ உலகம் பிழைக்கிறது!
நீக்குஃபேஸ்புக்கில் போட்டீங்களா? க்ளினிக் பத்தி விழிப்புணர்வு வருமே
பதிலளிநீக்குகீதா
அப்போ போட்டேன். அது நினைவு படுத்தியதும்தான் பிளாக்கில் பகிர்ந்தோமோ ன்னு செக் செய்து இந்த வியாழனை ஓடவிட்டு விட்டேன்!
நீக்குஏலம் போன நம் பர்...//
பதிலளிநீக்குபணத்தை வைச்சுக்கிட்டு என்ன பண்ணம்னு தெரியாதா ஆளுங்க!
கீதா
ம்ஹும்... பெருமூச்சுதான் வருகிறது...
நீக்கு"பசிவர அங்கே மாத்திரைகள்... - பட்டினியால்
இங்கு யாத்திரைகள்...
இருவேறுலகம் இதுவென்றால்
இறைவன் என்பவன் எதற்காக"
நல்ல கவிதை ஸ்ரீராம் டக்குனு எழுதிட்டீய்ங்களே!!!
நீக்குகீதா
Grrr... இது கண்ணதாசன் வரிகள். எம் எஸ் விஸ்வநாதன் இசையில் யேசுதாஸ் பாடல்.
நீக்குஸ்ரீராம், எனக்கு எங்க தெரிய போகுது இதெல்லாம்....
நீக்குநீங்க பாடல்களைக் கரைத்துக் குடித்தவர். மீ ஜீரோ அதில். கேட்டிருந்தாலும் நினைவுக்கு வருவது சிரமம் அடிக்கடி கேட்டாதானே!!! பாட்டில் வரிகள் மிஞ்சிப் போனால் முதல் இரு வரிகள் அவ்வளவுதான் நினைவுக்கு வரும்.
கூகுளில் போய் கேட்ட்டேன் இறைவன் உலகத்தைப் படைத்தானா....அந்தப் பாடலில் வரும் வரிகள்னு தெரிஞ்சுச்சு!! நம்ம அறிவு அம்புட்டுத்தான்...ம்ம்ம் என்ன பண்ண!!?
கீதா
எனக்கு மிகவும் பிடித்த, எல்லோருக்கும் பிடிக்கக் கூடிய அருமையான பாடல்.
நீக்குஆமாம் பாட்டு முழுசும் கேட்டேன் நல்லாருக்கு ஸ்ரீராம்....அருமையான பாடல்
நீக்குகீதா
சென்னை சிக்னல் சிஸடம் நல்லாருக்கே.
பதிலளிநீக்குஎன்னங்க இது...ஒரு பக்கம் குழந்தைய பெத்துக்கங்கன்றாங்க இன்னொரு பக்கம் மூன்றாவது பெத்துக் கொண்டால் வேலை இல்லைன்னு...
தங்களுடைய பொருளாதார வசதி, அதற்கும் அப்பாற்பட்டு, குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்க முடியுமா என்றும் யோசித்துச்செய்யலாம் .
கீதா
அந்தந்த ஊரின், அந்தந்த மதத்தின் களநிலவரம் அப்படி!
நீக்குசிவிங்கிப் புலிகளுக்குத் தண்ணீர் வைத்தது தையரியம்தான் அவருக்கு. அது பாய்ந்திருந்தால் அதனால்தான் கட்டுப்பாடுகள். டிரைவர் செய்த செயல் நல்ல செயல் என்றாலும் ஏதேனும் ஒன்று ஆகியிருந்தால் நிர்வாகம் பொறுப்பேற்க முடியாது இல்லையா....ஒன்று செய்திருக்கலாம் அந்த டிரைவர் நிர்வாகத்திடம் சென்று சொல்லியிருக்கலாம் இப்படி அங்கு தண்ணீர் வைக்க வேண்டும் என்று.
பதிலளிநீக்குகீதா
ஆமாம். அனா பினா வேலை.
நீக்குரயிலில் அதிகச் சுமைகளுக்குக் கூடுதல் கட்டணம் நல்ல விஷயம்.
பதிலளிநீக்குரயிலில் ஏடிஎம் - ஆஹா நல்ல விஷயம். இதுவும் நன்றாக வேலை செய்தால் நலல்து. அது சரி பல இடங்களுக்குப் பயணிக்கும் ரயிலில் எல்லா இடங்களிலும் நெட்வொர்க் கிடைப்பது சிரமமா இருக்கும் இல்லையோ? ஸ்டேஷன் வரப்ப ஏடிஎம் பயன்படுத்தினா சரியாகும்னு தோன்றுகிறது
கீதா
ஆமாம். அதிகச்சுமைன்னு அபராதம் போட்ட உடன் அப்படியே ஏ டி எம்மில் எடுத்துக் கொடுத்து விடலாம்!
நீக்குகருப்பட்டி ஐஸ்கிரீமா?!!!!
பதிலளிநீக்குஅந்த மொழி பெயர் மாதிகாவா? கர்நாடகா, கேரளா பார்டர் அதாவது மலபார் என்று சொல்லும் பகுதியில் புரியாத மொழி ஒன்று பேசுவது அறிந்தென் ஆனா மொழி மாதிகான்னு இப்ப தெரியுது.
பார்க்கப் போனா இரு மாநில எல்லைகளில் இருப்பவங்க பேசுறது சில சமயங்களில் புரிவது சிரமமா இருக்கும்.
கீதா
ஐஸ்க்ரீம் பஜ்ஜி எல்லாம் போடுகிறார்கள்.. இதென்ன பிரமாதம்!
நீக்குமாதிகான்னுதான் அங்கே இருந்தது. JKC ஸார் எடுத்துக் கொடுத்த செய்தி அது.
ஆ ஐக்ஸ்க்ரீம் பஜ்ஜியா!!!? பஜ்ஜி மேல ஐஸ்க்ரீம் போட்டுத்தருவாங்களா? ஜிலேபி ஐஸ்கிரீர்ம், குலாப்ஜாமூன் ஐஸ்ஜ்க்ரீம் போல?!
நீக்குகீதா
ஆமாம்.. கர்மம்.. ஐஸ்க்ரீமை மாவில் முக்கி எண்ணெயில் போட்டு எடுத்து...
நீக்குஎன்னது? ஐஸ்க்ரீமை மாவில் முக்கிப் போட்டு பஜ்ஜியா.....எண்ணைல பொரியுமா? உள்ள சில்லுனுல்ல இருக்கும். எப்படிப் பொரியும்? பஜ்ஜிய எடுத்தா எண்ணைதான் வரும் இப்படிப் பொரிச்சா? யோசித்துப் பார்க்க முடியலை. நேர்ல பார்க்கணும் எப்படி செய்யறாங்கன்னு?
நீக்குகீதா
கவிதை சூப்பர், ஸ்ரீராம். ரசித்தேன். நல்ல கற்பனை
பதிலளிநீக்குகீதா
நன்றி கீதா. பழசு!
நீக்குஅம்மன் கோவில் படிக்கட்டுச் சிற்பங்கள் அழகா இருக்கு ஸ்ரீராம் தெளிவாக வந்திருக்கே...
பதிலளிநீக்குகீதா
ஹிஹிஹி.. நன்றி கீதா.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குகுட்டி கவிதையென்றாலும் அர்த்தமுள்ள கவிதையை ரசித்தேன்.
அந்த மணலில் படுத்துள்ள பெண்ணின் போட்டோ ஷாட்டை அருமை. அப்படி போட்டோ எடுத்தவர் நல்ல திறமைசாலி. பகிர்வுக்கு மிக்க நன்றி.
உங்களுக்கு கலைமகள் இதழோடு பரிச்சயம் உண்டோ? இப்போது அது வாராந்திர இதழா? மாதாந்திர இதழா? பத்திரிக்கைகளின் பரிச்சயம் எனக்கு விட்டுப் போய் ரொம்ப நாளாகி விட்டது. சும்மா ஒரு கேள்வி. தெரிந்து கொள்ள கேட்டேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கலைமகள் மாதாந்திர இதழ் என்றுதான் நினைக்கிறேன். போட்டிக்கு அனுப்பப் போகிறீர்களா? அட்வான்ஸ் வாழ்த்துகள்.
நீக்குகவிதையை ரசித்ததற்கு நன்றி.
தகவல்களுக்கு நன்றி. வாழ்த்துக்களும் நன்றி. போட்டியில் வென்று வர வாழ்த்துக்கள் உதவினால் சரிதான். 😊.
நீக்குஎன்ன போட்டி, என்ன விஷயம் என்று எங்களுக்கும் சொல்லக்கூடாதா?!
நீக்குஆண் ஊசி
பதிலளிநீக்குபெண் ஊசி..
அடடே!..
:-))
நீக்குஊசி இல்லாமல் உலகம் இல்லை...
பதிலளிநீக்குஉலகம் இன்றி ஊசியும் இல்லை!!!
நீக்குசிவாஜி விஷயம் சுவாரசியம்.
பதிலளிநீக்குகீதா
சிவாஜி பல சாதனைகளுக்கு சொந்தக்காரர்.
நீக்குபிரணாப் முகர்ஜி, கி வை அந்தப் பத்திரிகையாளர்?
பதிலளிநீக்குவிஷயம் பல விஷயங்களைச் சொல்வது போல் இருக்கு திரில்லிங்காகவும். அரசியல் கள கதைக்கு நல்ல பாயின்ட்!
கீதா
உண்மை. அது ஒரு சுவாரஸ்யம்.
நீக்குபொக்கிஷப் படங்கள் நல்லாருக்கு. சமீபத்தில் யாதோ ரமணி அவர்கள், தங்கம்மாள் பாரதி என்று நினைக்கிறேன், அவர் தன் பாட்டி குறித்து சொல்லியிருந்ததைப் பகிர்ந்திருந்தார்.
பதிலளிநீக்குகீதா
அங்கு என் கமெண்ட் பார்த்தீர்களா?
நீக்குநானும் அதே விஷயம் எடுத்து வைத்திருந்ததோடு, அதனுடன் இணைந்த படத்தையும் சேமித்து வைத்திருந்தேன். அந்த விஷயத்தை எல்லோரும் ஆளாளுக்கு ஆங்காங்கே பகிர்ந்து விட்டார்களே என்று பொக்கிஷத்தில் படத்தை மட்டுமாவது இணைக்கலாம் என்று தேடினால்... காணோம்!
ஃபோட்டோ செம டெக்னிக். சூப்பர் ஷாட். பார்த்து ரசித்தேன்....யோசித்தேன்.
பதிலளிநீக்குகீதா
பேஸ்புக்கில் பல்வேறு விதமான போட்டோ தக்கனிக்குகளைக் காணும்போது எனக்கும் ஆசை வரும். நான் செய்வதெல்லாம் அசட்டுத்தனமாக முடியும்!
நீக்குபொக்கிஷ ஜோக்குகள் சிரித்தேன்... அதிலும் பல்டி... மல்டி!!
பதிலளிநீக்குகருப்பு வெள்ளையும்...
மேலே இருப்பவரையே தெரியாத அளவு ...சமூகவலைத்தள ஜோக்! இது சமீப கால புதுசு போல!
கீதா
ஆமாம். இதெல்லாம் புதுசு.
நீக்குஅடுத்த வாரமும் இதையே தொடரவா அல்லது பழைய ஜோக்ஸ் பகிரவா?
இதுவும் நல்லாருக்கு ஸ்ரீராம் இப்போதைய ஜோக்ஸும் பகிருங்கள்
நீக்குகீதா
நெல்லையில் கடையை யாருமே பார்க்கவில்லையா?
பதிலளிநீக்குஎது? நெல்லை கருப்பட்டி ஐஸ்கிரீமா? இப்படி ஒரு ஐஸ்கீரீமா? இதுவரை கேள்விபட்டத்திலை. இது நெல்லையில் உள்ள (எடுக்கப்பட்ட) போட்டோவா ? சகோதரர் நெல்லைத் தமிழர் கவனித்திருந்தால் உடனே சொல்லியிருப்பார்.
நீக்குநெல்லைன்னு பெயர் சொன்னால்தானே தெரியும்? அதுதான் கேட்டேன்!!!
நீக்குஆண் ஊசி பெண் ஊசி ஹா ஹா ஹா படிப்பறிவில்லாதோரை இப்படித்தான் ஏமாற்றுகிறார்கள் போலும், பதறி அடிச்சுக் கொண்டு வந்து திரும்ப தந்திடுவார்கள் என. எதிர்க் கேள்வி கேட்டமையால் வந்து வாங்கிப் போயிருக்கிறார்.
பதிலளிநீக்குசுகருக்கு மாத்திரை எடுப்போருக்கு விட்டமின் பி குறைபாடு ஏற்படும் வாய்ப்பு இருக்கு, இதுக்கு ஊசியை விட மாத்திரை வாங்கி தினமும் எடுத்திடலாம்.
சின்னவர் இன்டெர்ன்ஷிப் முடிச்சிட்டாரா?
நீக்குஜே கே ஐயா.. அது மூத்தவர், எல்லாம் முடிச்சு இப்போ டொக்டராக வேர்க் பண்ணத் தொடங்கிட்டார்.
நீக்குசின்னவர் எலெக்ரோனிக் எஞ்ஞினியரிங் + சொஃட்வெயார் டபிள் டிகிரி செய்கிறார், இன்னும் முடிக்கவில்லை.
அதென்னவோ சில நோயாளிகளுக்கு டாக்டர் தன்னை மீட்டர் (ஸ்டெத்) வச்சு பார்த்தால்தான் திருப்தி. அதேபோல ஊசி போட்டுக் கொண்டால்தான் சரியாகும் என்கிற (மூட) நம்பிக்கை!
நீக்குஆஹா கவிதை அழகு.. உண்மையில் மழைக்கு முன் ஒரு மண்வாசனையுடன் காத்தடிக்குமே... அது ஊர்களில் மட்டுமே அனுபவிக்க முடியும்.. சூப்பராக இருக்கும்.
பதிலளிநீக்குஆஹா.. அதே சுவாரஸ்யத்தோடு ரசித்ததற்கு நன்றி.
நீக்குசிவாஜி அங்கிள் பற்றிய தகவல்கள் நன்று.
பதிலளிநீக்குஅந்த மைதானப்படம் யூ..ஊஊஊம் பண்ணியும் புரியவில்லை எனக்கு:), அது போட்டோவாக இருக்க வாய்ப்பில்லை ஓவியமாக இருக்கலாமோ..
ஃபோட்டோதான் அது. புத்திசாலித்தனமாக யோசித்து எடுத்திருக்கிறார்கள்.
நீக்குஅதிரா, அந்த பெண் மைதானத்தில் படுத்து இருக்கிறது பக்கத்தில் கருப்பு துணியை அந்த பெண் வடிவத்தில் விரித்து நிழல் போன்ற மாயத்தோற்றத்தை கொடுத்து இருக்கிறார்கள்.
நீக்குஆஆஆஆஆஆஆவ்வ்வ்வ்வ் கோமதி அக்கா, எப்பூடி இப்பூடிக் கரெக்ட்டா கண்டுபிடிச்சீங்கள்:).. நீங்க சொன்னபின் மீண்டும் பார்த்தேன் சரிதான்.
நீக்குஹா ஹா ஹா ஜோக்ஸ் எல்லாமே சூப்பர்... அதிலும் கடசி ஜோக் ஹா ஹா ஹா... க.முடி.. வெ.முடி.. அதுவும் சூப்பர்...
பதிலளிநீக்கு(யாரோ கஷ்டப்பட்டு யோசித்து எழுதிய) ஜோக்கை ரசித்ததற்கு நன்றி அதிரா.
நீக்குஇங்கு ஸ்கூலில் ஹொலிடே முடிஞ்சு வந்தபின்னர் அல்லது ஏதும் சம்பவம் நடந்தால் பிள்ளைகளிடம் அதனைப் பற்றிச் சொல்லச் சொல்லிக் கேட்போம்... அப்போ பிள்ளைகளிடம் முதலில் சொல்வது...
பதிலளிநீக்கு"பொஸிடிவ் 1ஸ்ட் பிளீஸ்" என....
அதாவது எப்பவும் நல்ல விசயங்களைச் சொல்லிப்போட்டு, பின்பு குறைகளைச் சொல்வது நல்லதெனப் பழக்குவோம்...
ஹா ஹா ஹா இதை ஏன் இப்போ சொல்கிறேன் எனில்.. வருகிறேன் அடுத்த கொமெண்ட்டில்:)))
நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று இங்கு படிக்கும்போதே புரிந்தது. நானும் அடுத்த கொமென்ட்டிலேயே பதிலறேன்.
நீக்குஅதாவது இம்முறை வியாழக்கிழமை போஸ்ட்டை ஶ்ரீராம் ஏமாத்திப்போட்டார்:).. நியூஸ் றூம் மாதிரி மாத்திட்டார் கர்ர்ர்ர்ர்ர்:))..
பதிலளிநீக்குவியாழன் போஸ்ட் எனில்.. கிசுகிசு இருக்கும்:), சொல்வதெல்லாம் உண்மை:) இருக்கும் என நெம்ம்ம்ம்ம்ம்ம்பி வந்தால் கர்ர்ர்ர்ர்ர்:)).. சனிக்கிழமை போலாக்கிட்டார்.. இருப்பினும் ஓகே.. பிடிச்சவற்றைப் படிச்சிட்டேன்.. நான் அன்னம் போலாக்கும்... ஹா ஹா ஹா:)
நியூஸ் ரூம் பகுதி கனநாட்களாய் வருகிறதே.. நீங்கள்தான் வாறதில்லை .. நான் என்ன செய்யட்டும்! பொசிட்டிவ் செய்திதான் சனிக்கிழமைகளில்...
நீக்குசெய்திகள் பல்வேறு விதங்களில் மாறுதலாய், சுவாரஸ்யமாய் இருக்கக் கூடும். லிங்க் தொட்டு அங்கேயே சென்றும் படிக்கலாம்!
ஆஆ அப்படியோ... பழைய நினைப்பிலேயே இருக்கிறேன் போலும்:))
நீக்குஆட்சி பெண் ஊசி ......சிரித்துவிட்டேன்...இப்படியுமா ஏமாற்றுவார்கள்.
பதிலளிநீக்குநம்பருக்கு நாற்பத்தாறு லட்சம்.....பணம்படுத்தும்பாடு.....
பாரதியார் மகள்கள் பொக்கிசப்படம் அருமை.
ஜோக்ஸ் ரசனை. நியூஸ் ரூம் பலவித செய்திகளையும் தந்தது.
புத்திசாலித்தனமாய் ஹேண்டில் செய்கிறார்களாம்! என்ன சொல்ல! கடைசியில் அசடு வழிந்தார்கள்.
நீக்குநன்றி மாதேவி.
//"ஜென்ட்சுக்கு போடற ஊசியை உங்களுக்குக் கொடுத்துட்டோம். உடனே திருப்பிக் கொண்டு வாங்களேன்"//
பதிலளிநீக்குஆண், பெண் ஊசி அப்படி எல்லாம் இருக்கா என்று திகைத்து விட்டேன்
//விவரம் தெரியாதவர்கள் என்று நினைத்து என்னவெல்லாம் சொல்லி ஏமாற்றுகிறார்கள்!//
விஷயம் தெரியாதவர்கள் என்ன செய்வார்கள் எப்படி எல்லாம் ஏமாற்றுகிறார்கள்!
அடித்து பிடித்து பதறி, கொண்டு வந்து சேர்த்து விடுவார்கள் என்று நினைத்திருப்பார்கள்! கூடவே அவர்கள் விழிப்புணர்வையும் பாராட்டுவார்கள் என்றும் எதிர்பார்த்திருப்பார்கள்!
நீக்கு//தண்ணீர் வைத்ததால், ம.பி.,யில் உள்ள குனோ தேசிய பூங்கா டிரைவரின் வேலைக்கு சிக்கல் ஏற்பட்டது.//
பதிலளிநீக்குபறவைகள், விலங்குகளுக்கு பூங்கா காப்பகத்தில் உள்ள பொறுப்பாளர்களிடம் அனுமதி பெற்று தண்ணீர் வைத்து இருக்கலாம், இரக்கத்தால் வேலைக்கு சிக்கல் வந்து விட்டதே!
கண்டிக்காவிட்டால் அவர் உயிருக்கே அல்லவா சிக்கல் வந்துவிடும்!
நீக்குநெல்லைகருப்பட்டி காபி , ஜஸ்கீரீம் கடை நன்றாக நடக்கிறதா?
பதிலளிநீக்குமாதிகா மொழி கேள்வி பட்டது இல்லையே! அவர்கள் தங்கள்,மகன், மகள் பேரன் பேத்திகளுக்கு சொல்லி கொடுத்து இருக்கலாம்.
மழை துளி போல மண் துளி கவிதை அருமை.
தாராசுரம் படமும் உங்கள் வரிகளும் அருமை.
நடிகர்த்திலகத்தின் சாதனை பட்டியல் செய்தி நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தரும்.
பொக்கிஷபகிர்வுகள் அருமை.
வாட்ஸாப் குடும்பக் குழுமத்தில் உறவொன்று பகிர்ந்த படம் நன்றாக இருக்கிறது. தவத்தால் உடலை மிதக்கவிட்டது போன்று மாயத்தோறறம் தரும் படம்.
அரசியல்வாதி ஆஸ்பத்திரி, பூனை நகைச்சுவை ரசித்தேன்.
நெல்லை கடையில் எப்போதும் கூட்டம்! மாதிகா மொழி அவர்கள் சொல்வதுதான், நாம் கேட்பதுதான்! கவிதை பாராட்டுக்கு நன்றி. ,மற்றவற்றையும் ரசித்ததற்கு நன்றி கோமதி அக்கா.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குசிவாஜி பற்றிய தகவல்களை அறிந்து கொண்டேன். சிறப்பான மனிதர். அவர் புகழ் என்றும் நிலைத்து நிற்கும்.
செய்திகளை படித்தறிந்து கொண்டேன்.
தாராசுரம் கோவில் புகைப்படங்கள் அருமை. தங்களின் பொருத்தமான வசனங்களும்.
ஒரு மொழியை பேசும் இருவர் மட்டும் செய்தி வியப்பாக உள்ளது. அந்த இருவருக்கு மட்டும் அந்த மொழி எப்படி தெரிந்ததோ..? அதுவும் அவர்களுக்குப் பின் அந்த மொழி அவ்வளவுதான் எனும் போது வருத்தமும் எழுகிறது.
பொக்கிஷ பகிர்வில் பாரதியாரின் மகள்கள் படம் அருமை. அந்த காலத்தவர்களை நேரில் பார்க்கும் போது ஏற்படும் மன நிறைவை தருகிறது. அதிலும் அந்தக் கால பெண்கள் போடும் முறையில் பாவாடை தாவணி உடைகள் எங்களையும் அந்த காலத்திற்கே கொண்டு சென்றது.
நகைசுவைகள் அனைத்தும் அருமை. கடைசி நகைச்சுவை நன்றாக உள்ளது. தன் வீட்டில் குடியிருப்பவரையே மறந்துபோனால், மாதந்தோறும் வாடகையை எப்படி வசூலிப்பார்.அவர் வீட்டில் மனைவி ராஜ்ஜியமோ ? பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்
இருவர் மட்டுமே பேசுவது தனி மொழி என்கிற அந்தஸ்திற்குள் வருமா என்று தெரியவில்லை. நன்றி கமலா அக்கா.
நீக்குtest no 1
பதிலளிநீக்குநன்றி. தொடர்ந்து பின்னூட்டமும் இட்டால் ரசிக்கலாம். சென்ற வாரம் செவ்வாய்க்கிழமை கீதா ரெங்கன் கதைக்கு உங்கள் பின்னூட்டம் வருமென்று எதிர்பார்த்தேன்!//
பதிலளிநீக்குஸ்ரீராம், நானும் எதிர்பார்த்தேன்.
ஜீவி அண்ணா, நானும் எதிர்பார்த்தேன்.
கீதா