25.4.25

மணிவிழி மூடி கனவுகள் கோடி காண்பதும் உன்னாலே

 

1972 ல் ராம்குமார் பிலிம்ஸ் என்கிற நிறுவனம் (ஒருவேளை சிவாஜி ப்ரொடக்ஷன்ஸாரின் முதல் பெயராக இருக்கலாம்) தயாரிப்பில் வெளியான படம் 'திக்கு தெரியாத காட்டில்'

நாகேஷ் மற்றும்  வி எஸ் ராகவன் கதை.  முத்துராமன், ஜெயலலிதா, மேஜர் , நாகேஷ் நடித்திருந்த திரைப்படம்.  காட்டில் தொலைந்துபோகும் குழந்தை பற்றிய படம். 

வாலியின் பாடல்களுக்கு இசை எம் எஸ் விஸ்வநாதன்.

ஒரு சுவாரஸ்யம், இந்தப் படத்தை அப்படியே ஹிந்தியில் டப் செய்திருந்திருக்கிறார்கள்.  இதன் பாடல்களை இந்த சுட்டியில் இதே டியூனில் ஹிந்தியில் கேட்கலாம்!   

இதில் மூன்று SPB பாடல்கள். அதில் ஒன்றான 'கேட்டதெல்லாம் நான்  தருவேன்'பாடல்தான் இன்று..  உடன் குரல் கொடுத்திருப்பவர் P. சுசீலா.

மற்ற இரண்டு பாடல்கள் 'பாட்டுக்காரன் பாடிப் பார்க்கலாம் ', 'குளிரடிக்குதே கிட்ட வா கிட்ட வா'.  இந்த இரண்டு பாடல்களிலும் குழுவினரோடு SPB பாடி இருப்பார்.

முதல் பாடலில் விசேஷம் என்று நான் என்ன சொல்லுவேன்...   அதேதான்!

கேட்டதெல்லாம் நான் தருவேன் என்னை நீ மரகிக்காதே 

காலமெல்லாம் நான் வருவேன் என்னை நீ தடுக்காதே 

மணிவிழி மூடி கனவுகள் கோடி காண்பதும் உன்னாலே 
பனியிதழ் தேடி பல கதை பேசி வாழ்வதும் உன்னாலே  - கேட்டதெல்லாம் 

மணவறைக்கோலம் தனியறைப் பாடல் மலர்ந்ததும் இந்நாளே 
தலைவனின் நெஞ்சம் தவித்தது கொஞ்சம் கனிந்தது பெண்ணாலே 

ஒரு பொழுதேனும் பிரிவறியாமல் வாழ்வதும் நாம்தானே 
தாயோடு மகளும் தந்தையும் சேர்ந்து காண்பது நலம்தானே


=======================================================================================

இன்னொரு ரசிக்கத்தக்க பாடல் எம் எஸ் ராஜேஸ்வரி பாடி இருக்கும் 'பூப்பூவா பறந்து போகும்' பாடல்.  தொலைந்துபோன குழந்தை பாடுவதாக அமைந்துள்ள பாடல்.  இதுவும் இன்றைய பகிர்வில். 

பூப்பூவா பறந்து போகும்
பட்டுப்பூச்சி அக்கா
நீ பளபளன்னு போட்டிருப்பது
யாரு கொடுத்த சொக்கா

பூப்பூவா பறந்து போகும்
பட்டுப்பூச்சி அக்கா
நீ பளபளன்னு போட்டிருப்பது
யாரு கொடுத்த சொக்கா

 குதிச்சு குதிச்சு ஓடி போகும்
குள்ள முயல் அண்ணா
நீ குதிக்காமல் கொஞ்சம் நில்லு
கூட வரேன் ஒண்ணா

பூப்பூவா பறந்து போகும்
பட்டுப்பூச்சி அக்கா
நீ பளபளன்னு போட்டிருப்பது
யாரு கொடுத்த சொக்கா

பாவாடைப்போல் தோகை விரித்து
புள்ளி மயில் வாயேன்
என் புத்தகத்திலே குட்டி போடவே
பூஞ்சிறகொண்ணு தாயேன்

 தாண்டி தாண்டி கிளைக்கு கிளை
தாவி போகும் குரங்கே
நான் பாண்டி ஆடவே உன்னை வேண்டி கேட்கிறேன்
நீயும் இறங்கி ஓடிவா

 பூப்பூவா பறந்து போகும்
பட்டுப்பூச்சி அக்கா
நீ பளபளன்னு போட்டிருப்பது
யாரு கொடுத்த சொக்கா

 யானைக்குட்டி மாமா நீயும்
தும்பிக்கையை நீட்டு
உன் முதுகின் மேலே குந்திக்க போறேன்
காட்டை சுத்தி காட்டு

 மான் குட்டியே உன் உடம்பு முழுக்க
புள்ளி வச்சதாரு
நீ துள்ளி ஓடினா நானும் துரத்தி பிடிக்கிறேன்
நீயும் ஓடி ஒளிஞ்சிக்கோ

 பட்டு சிவப்பா போல் மூக்கு இருக்கிற
பச்சைக்கிளியே பாரு
இந்த பாப்பாவுக்கு பசி எடுக்குது
பழம் பறிச்சு போடு
இந்த பாப்பாவுக்கு பசி எடுக்குது
பழம் பறிச்சு போடு

 பூச்சி புழுவை கொத்தி திங்கிற
ஒத்தை கண்ணு காக்கா
நீ மறஞ்சு நிக்குறே வடையை திருடி திங்குற
நான்தான் பேச மாட்டேன் போ கா

பூப்பூவா பறந்து போகும்
பட்டுப்பூச்சி அக்கா
நீ பளபளன்னு போட்டிருப்பது
யாரு கொடுத்த சொக்கா
 


= = = = = = = = = =

வால் பதிவு: 

ஏப்ரல் மாதத்து படப் போட்டியாக 'மீன்' அறிவித்தோம். 23 ஆம் தேதி பதிவாக வாசகர்கள் அனுப்பிய மீன் படங்கள் வெளியிடப்பட்டு வோட் பதிவு இந்த வாரம் முழுவதும் நடந்துகொண்டு உள்ளது. 

அந்தப் பதிவிற்கும், இன்றைய தேதிக்கும் ஒரு வியப்பான சம்பந்தம் உள்ளது. என்ன தெரியுமா? 

திருமால் எடுத்த பத்து அவதாரங்களில், முதல் அவதாரமாகிய மச்ச அவதாரம் நிகழ்ந்தது, சித்திரை மாதம், தேய்பிறை திரயோதசி நாள் என்று இணையத்தில் ஒரு அற்புதமான குறிப்பு பார்த்தேன். 

இந்த வருடத்தின் சித்திரை மாதம், தேய்பிறை திரயோதசி - 25-04-2025 ஆகிய இன்றுதான்! 

இன்றுதான் முதல் அவதாரமாகிய மச்ச அவதாரம் நிகழ்ந்த நாள்! 


திருமால் பெருமைக்கு நிகரேது
உந்தன் திருவடி நிழலுக்கு இணையேது
பெருமாளே உந்தன் திருநாமம்
பத்து பெயர்களில் விளங்கும் அவதாரம்
திருமால் பெருமைக்கு நிகரேது


கடல் நடுவே வீழ்ந்த சதுர்வேதம்
தனைக் காப்பதற்கே கொண்ட அவதாரம்
கடல் நடுவே வீழ்ந்த சதுர்வேதம்
தனைக் காப்பதற்கே கொண்ட அவதாரம்.. 

மச்ச‌ அவதாரம்! 
= = = = = = = = = =


19 கருத்துகள்:

  1. பூப்பூவாப் பறந்துபோகும்.... பாடல் நிறைய தடவை கேட்டிருக்கிறேன்.

    ராஜேஸ்வரி அவர்கள் பாடிய பெரும்பாலான பாடல்கள் ஹிட் என நினைக்கிறேன். சிலவற்றைப் பகிரலாமே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை..   எம் எஸ் ஆர் பாடல்கள்..  பார்க்கிறேன்.  அதுசரி, முதல் பாடல் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே...   

      நீக்கு
  2. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள் அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    இன்றைய வெள்ளி பாடல் பகிர்வில் முதல் பாடல் அடிக்கடி கேட்டு ரசித்திருக்கிறேன். இரண்டாவதாக பகிர்ந்த எம். எஸ் ராஜேஸ்வரி அவர்களின் பாடலும் அடிக்கடி கேட்டிருக்கிறேன். முன்பு சிலோன் வானொலியில் இப்படத்தின் பாடல்களை அடிக்கடி ஒலிபரப்புவார்கள். படம் பெயர் கூட அப்படித்தான் அறிமுகம். ஆனால் தொலைக்காட்சி வந்த பின் அதில் போட்ட படங்களில் இதையும் பார்த்திருக்கிறேனா என்பது நினைவில் இல்லை. இன்றைய வெள்ளி பாடல் பகிர்வு இரண்டும் அருமை.

    மச்சாவதார நிகழ்வின் கதையை தெரிந்து கொண்டேன். மீன் படங்களின் போட்டி, தேர்வுகளுக்கு ஏற்றபடி இறைவனும் இந்த சித்திரை மாதத்தில் அவதரித்திருப்பது என்ற செய்தியை அறிவதும் வியப்புக்குரியது. எல்லாம் இறைவன் செயல். திருமால் பெருமைக்கு நிகரேது பாடல் அருமை. கேட்கும் போதே மனம் உருகும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  சிலோன் ரேடியோ அப்போதெல்லாம் நமக்கு ஒரு வரப்பிரசாதம்.  வரப்பிரசாதம் என்று ஒரு படமும் அதில் ஒரு யேசுதாஸ் - வாணி பாடலும் இருக்கு தெரியுமோ...   

      நீக்கு
    2. ஆம்.. "கங்கை நதியோரம் ராமன் நடந்தான்". இந்தப்பாடலும் எனக்குப் பிடித்தமான பாடல். அப்போதெல்லாம் பாடல்களை கேட்டுக் கொண்டே வீட்டு வேலைகள் செய்வது வழக்கம். கேட்கும் போதெல்லாம் அன்று முழுவதும் மனதுக்குள் ஓடிக் கொண்டேயிருக்கும். இப்போது பாடல்களை கேட்பதே அரிதாகி விட்டது. நீங்கள் வெள்ளிதோறும் எபியில் வெள்ளியன்று பகிரும் பாடல்களை மட்டும் கேட்டு ரசிக்கிறேன். அதற்கு நன்றி உங்களுக்கு. இந்தப் பாடலும் எபியில் ஏற்கனவே பகிர்ந்திருப்பீர்கள். இல்லையா?

      நீக்கு
    3. லிஸ்ட்டில் இருந்தாலும் பகிர்ந்த நினைவு இல்லை. 

      படத்துக்கு இசை இளையராஜாவும் கோவர்த்தனும்.  'கோவர்த்தனராஜா'

      நீக்கு
    4. /லிஸ்ட்டில் இருந்தாலும் பகிர்ந்த நினைவு இல்லை. /

      அப்படியென்றால் ஒரு வெள்ளிக்கு பகிரலாமே. ( முடிந்தால்) நன்றி.

      நீக்கு
  4. ராம்குமார் ப்ரொடக்ஷன்ஸ் // சிவாஜி வீட்டு துதான் என்று நினைக்கிறேன். முதல் பையன் ப்ரொடக்ஷனில்தானே இருக்கிறார் இல்லையா?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் பையன் பெயர் ராம்குமார்.  அவ்வளவுதான்.  இப்போதான் ராம்குமாரும் பிரபுவும் அடிச்சுக்கறாங்களே...

      நீக்கு
  5. முதல் பாடல் கேட்டிருக்கிறேன் ஸ்ரீராம் நிறைய. ஆனால் வரிகள் பார்த்ததும் டக்கென்று மனதில் ஓடவில்லை பாட்டைக் கேட்டதும் ஆஹா இந்தப் பாட்டா என்று.

    எஸ் பிபியின் இளம் குரல். வெண்ணை போன்று!

    பல வருஷங்களுக்குப் பிறகு கேட்டு ரசித்தேன் ஸ்ரீராம்

    //மணிவிழி மூடி கனவுகள் கோடி காண்பதும் உன்னாலே
    பனியிதழ் தேடி பல கதை பேசி வாழ்வதும் உன்னாலே//

    இந்த இடம் செம இல்லையா ஸ்ரீராம்?! ரொம்ப ரசித்தேன் மீண்டும் இதை பின்னால் போய் கேட்டேன்.

    ராகம் அருமையான ராகம் சாரங்கதரங்கிணி போல இருக்கு.

    இதே ராகம் ஒரு பாட்டு எடுக்க வருதே நினைவு வருதா ஸ்ரீராம்....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், எனக்கும் பிடிச்ச வரிகள் அவைதான்! 

      நானே கேட்கணும்னு நெனச்சேன், நீங்களே சொல்லிட்டீங்க  -  ராகம்.

      நீக்கு
    2. // இதே ராகம் ஒரு பாட்டு எடுக்க வருதே நினைவு வருதா ஸ்ரீராம்.... //

      இப்போ சைடுல கே ஜெ யேசுதாஸ் ஹிந்திப் பாடல்கள் ஓடிக்கிட்டு இருக்கு.  ஸோ, மனசு இதுல செல்லலை.  என்ன பாட்டுன்னு யோசிச்சுப் பார்க்கறேன். 

      உங்களுக்குத் தெரிஞ்சா நீங்களே சொல்லிடுங்க!

      நீக்கு
  6. அடுத்த பாட்டும் நிறைய கேட்டிருக்கிறேன் ஸ்ரீராம். பிடிச்ச பாடல். வண்ணத்துப் பூச்சியை பார்த்தாலே உடனே இந்தப் பாட்டுதான் நினைவுக்கு வரும்

    கீதா

    பதிலளிநீக்கு
  7. கௌ அண்ணா, Coincidence!

    அண்ணா அடுத்தாப்ல 'கூர்ம' போட்டி வைச்சுருங்க!

    கீதா

    பதிலளிநீக்கு
  8. இன்றைய பகிர்வுப் பாடல்கள் அனைத்தும் அருமை. கேட்டு இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  9. இரண்டு பாடல்களும் பிடித்த பாடல். முதல் பாடல் கேட்டு நாள் ஆச்சு.
    அடுத்தபாட்டு அடிக்கடி கேட்பேன். பதிவிலும் பகிர்ந்து இருக்கிறேன்.
    பட்டுப்பூச்சி பதிவில்.

    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. இன்றுதான் முதல் அவதாரமாகிய மச்ச அவதாரம் நிகழ்ந்த நாள்! //

    அப்படியா! சித்திரை மாதம் மச்ச அவதாரம் எடுத்து குளிர்ச்சியாக நீந்தி இருக்கிறார் இறைவன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!