26.9.25

அதை நேரிடையாக சொல்ல நான் நாணம் இல்லாதவள் அல்ல

 

இன்றைக்கு 42 ஆண்டுகளுக்கு முன்பு வந்த படம் சரணாலயம்!!  மோகன் நளினி நடித்த இந்தப் படத்தை இயக்கி இருப்பவர் R சுந்தரராஜன்.  பின்னாட்களில் இவர் தரமான சில படங்களையும் இயக்கி இருந்தார்.

இந்த வாரம் இந்தப் படத்திலிருந்து இரண்டு பாடல்கள்.  முதல் பாடல் மலேஷியா வாசுதேவன் குரலில் ஒலிக்கும் பாடல். வாலியின் பாடலுக்கு இசை எம் எஸ் விஸ்வநாதன்.

எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை
வண்ண இரு விழியால் இந்த பூங்கோதை
எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை
வண்ண இரு விழியால் இந்த பூங்கோதை
இதைவிட இலக்கியம் கிடையாது
இலக்கண வரம்புகள் இதற்கேது
இதைவிட இலக்கியம் கிடையாது
இலக்கண வரம்புகள் இதற்கேது

எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை
வண்ண இரு விழியால் இந்த பூங்கோதை

வாழை மடல் போல உடல் அழகும்
தங்கம் வார்த்த சிமிழ் போல உதடழகும்
வாழை மடல் போல உடல் அழகும்
தங்கம் வார்த்த சிமிழ் போல உதடழகும்
தஞ்சை கோயில் ரதம் போல நடை அழகும்
வந்து குலவும் வேளையில் மனம் கவரும்
கட்டழகு பெட்டகமோ கண் நிறைந்த சித்திரமோ
கால காலம் இங்கு எனக்காக

 எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை
வண்ண இரு விழியால் இந்த பூங்கோதை

 வானம் வளைக்காத கடற்கரையோ
இது வண்டு துளைக்காத பழக்குலையோ
வானம் வளைக்காத கடற்கரையோ
இது வண்டு துளைக்காத பழக்குலையோ
இன்னும் வாசல் திறக்காத அரண்மனையோ
கண்ணன் வந்து துயிலாத ஆலிலையோ
புத்தம் புது புத்தகமோ
புன்னகைக்கும் ரத்தினமோ
தேவ தேவி இவள் எனக்காக

 எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை
வண்ண இரு விழியால் இந்த பூங்கோதை

 பேசும் மணி வார்த்தை தமிழ்ச் சுவையோ
புதிர் போடும் விழி ஜாடை விடுகதையோ
பேசும் மணி வார்த்தை தமிழ்ச் சுவையோ
புதிர் போடும் விழி ஜாடை விடுகதையோ
நெஞ்சில் ஆசை அலை பாயும் புதுப்புனலோ
ஒரு ஆடை சுமந்தாடும் மதுக்குடமோ
பஞ்சணையில் கை அணைக்க
பையப் பைய மெய் அணைக்க
தாவித் தாவி வரும் கலைமானோ

 எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை
வண்ண இரு விழியால் இந்த பூங்கோதை
இதைவிட இலக்கியம் கிடையாது
இலக்கண வரம்புகள் இதற்கேது

 எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை
வண்ண இரு விழியால் இந்த பூங்கோதை

========================================================================================

பாண்டே உடனான விஜய் ஆண்டனி பேட்டி சமீபத்திகள் பார்த்தேன்.  இதைப் பார்க்கும்வரை விஜய் ஆண்டனி மேல் எனக்கு பெரிய அபிப்ராயம் எதுவும் இல்லை.  ஆனால் இதைப் பார்த்ததும் அவர்மேல் கொஞ்சம் மதிப்பு வந்தது.

அதிராத குரல்.  எளிமையான உரையாடல்.  செயற்கைத்தனம் இல்லாத உடல்மொழி 

"நான் காலேஜ் முடிஞ்சு வீட்டை விட்டு வெளிய வந்தப்பதான் உலகத்தைப் பார்த்தேன்.  அப்பவும் எதுவும் தெரியாது.  நம்பிக்கை மட்டும் இருந்தது.  நான் எல்லாத்தையும் மூடத்தனமான நம்புவேன். பிளைணடா நம்புவேன்.நடந்துச்சு வேற..."

"காலத்தையும் ஆட்களையும்?

"இல்லை சார்..  நான் என்ன முடிவு பண்றேனோ அதை..."

"விஜய் ஆண்டனி இந்த ஸீன்ல நடிப்பு பின்னிட்டாருப்பா அப்படீன்னு எதை சொல்லலாம்?  எப்ப சொல்லலாம்?"

"இல்லை.  வராது.  நீங்க இந்த ஜென்மத்துல அப்படி சொல்ல மாட்டீங்க..  எனக்கு என்ன வருதோ அதான்..  புத்திசாலிகளுக்குதான் இந்த உலகமா என்ன..  என்ன மாதிரி ஆட்களுக்கும் இடம் இருக்குதானே...  எனக்கு தெரிஞ்சதை நான் செய்யறேன்...."

"அப்பா இறக்கும்போது அம்மாவுக்கு 27 வயசு.  ஒன்பதாவதுதான் படித்திருந்தார்கள்.  கம்பாஷனேட் கிரௌண்டுல வேலை கிடைக்கும்ங்கறதே வேற சிலபேர் சொல்லிதான் தெரியும்.  அப்படியே வேலைக்கு போனாலும்  ஸ்வீப்பர் வேலை - பெருக்கற வேலைதான் - கிடைக்கும்.  பத்தாவது பாஸ் பண்ணினா ஜூனியர் அசிஸ்டன்ட் வேலை கிடைக்கும்னாங்க.  இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகு இத்தனை வருடங்களுக்குப் பின் அம்மா தனியாக இருந்து, பத்தாவது பாஸ் பண்ணினாங்க..  அப்போ நாங்க மூணு பேரும் ஒரே ஊர்ல மூணு ஹாஸ்டல்ல இருந்தோம்.  அம்மா YWCA,  நான் சேவியர்ஸ் ஹாஸ்டல்,  தங்கச்சி இஃகேனேசியஸ் கான்வென்ட் ஹாஸ்டலில்.."


"இத்தனை வருஷம் கழிச்சும் நீங்க இளமையாவே இருக்கீங்க..."

"அதுக்கு காரணம் டை தான் சார்.  நாம ரெண்டு பேருக்கும் ஒரே வயசு..  50 வயசு.  நீங்க சினிமா இண்டஸ்ட்ரில இருந்திருந்தா நீங்களும் இப்படி இருந்திருப்பீங்க..  இண்டஸ்ட்ரியே உங்களை மாத்தி விட்டுடும்..."

"தெரியாதுன்னு நீங்க நினைக்கும்போது, பார்க்கற எல்லாமே புதுசா இருக்கு, கத்துக்கணும்னு நினைக்கும்போது யங்காவே ஃபீல் செய்வோம்.  அது கூட ஒரு காரணமா இருக்கலாம்."

"ஒவ்வொரு இசை அமைப்பாளரையும் பார்க்கும்போதும் நாம் எவ்வளவு கம்மியாக இருக்கோம்னு தெரிஞ்சுதா?"

"தெரிஞ்சுது. இன்னிக்கி வரைக்கும்.  இப்பவும் தெரியாதுன்னுதான் சொல்வேன். மொசார்ட் யாருன்னு தெரியும். இளையராஜா யாருன்னு தெரியும். தெரியாதுங்கறதை வச்சுக்கிட்டு நான் இன்ஃபீரியரா ஃபீல் பண்ணவே இல்லை. இதை இப்படி சொல்வேன். அந்தப் பக்கம் அடுத்த பாட்டு ஹிட்டுன்னுதான் சொல்வேன்.

[இது மூன்று பாகம் இருக்கிறது என்று நினைக்கிறேன். விரும்புபவர்கள் இணையத்தில் தேடி மற்ற பகுதிகளையும் பார்க்கலாம்.]


=============================================================================================

சரணாலயம் படத்தில் அடுத்த பாடல் தலைவரும் சுசீலாம்மாவும் பாடியது.  நேற்று தலைவர் நினைவு தினம்.  இந்தப் பாடலும் வாலி எழுதியதுதான்.

P. சுசீலா : நெடுநாள் ஆசை ஒன்று
இந்த நெஞ்சினில் உதித்ததுண்டு
அதை நேரிடையாக சொல்ல
நான் நாணம் இல்லாதவள் அல்ல

SPB : : நெடுநாள் ஆசை ஒன்று
இந்த நெஞ்சினில் உதித்ததுண்டு
அதை நேரிடையாக சொல்ல
கண்ணை தூது விட்டேனடி மெல்ல

SPB : க ம ப நி நீத தாம மாக
P. சுசீலா : : கா ச சாநி நி தா ப
SPB : பத பத
P. சுசீலா : : பத பத
SPB : நி நி ஸ
P. சுசீலா :: ரி ரி க
SPB : ம ம ப
P. சுசீலா : : தா தா பா

SPB : கன்னி பூங்கொடி கைகள் நீட்டி
கிளையை தேடும் காட்சி கண்டேன்
கன்னி பூங்கொடி கைகள் நீட்டி
கிளையை தேடும் காட்சி கண்டேன்

P. சுசீலா : : மஞ்சள் சூரியன் மேற்கில் சாய்ந்து
மலையை கூடும் கோலம் கண்டேன்
மஞ்சள் சூரியன் மேற்கில் சாய்ந்து
மலையை கூடும் கோலம் கண்டேன்

SPB : அது போல் நானும் வந்து
இந்த மெல்லிடை அணைப்பது என்று
அது போல் நானும் வந்து
இந்த மெல்லிடை அணைப்பது என்று

P. சுசீலா : : அதை நேரிடையாக சொல்ல
நான் நாணம் இல்லாதவள் அல்ல

SPB : நெடுநாள் ஆசை ஒன்று
P. சுசீலா : : இந்த நெஞ்சினில் உதித்ததுண்டு
SPB : அதை நேரிடையாக சொல்ல
P. சுசீலா : : நான் நாணம் இல்லாதவள் அல்ல

P. சுசீலா : : ஆஹா ஆஹாஹா
P. சுசீலா : : ஆஹா ஆஹாஹா
இருவர் : ஹா…..

SPB : மா ம கா க
P. சுசீலா : : மா ம கா க
SPB : பாப மாமா
P. சுசீலா :: பாப மாமா
SPB : தாத பாபா
P. சுசீலா : : தாத பாபா
இருவர் : சா…..

SPB : இந்த வாலிபன் காதல் நெஞ்சை
இளைய ராணி ஏற்க வேண்டும்
இந்த வாலிபன் காதல் நெஞ்சை
இளைய ராணி ஏற்க வேண்டும்

இந்த வாலிபன் காதல் நெஞ்சை
இளைய ராணி ஏற்க வேண்டும்
இந்த வாலிபன் காதல் நெஞ்சை
இளைய ராணி ஏற்க வேண்டும்

P. சுசீலா : : எண்ண மாளிகை வாசல் தோறும்
இளமை தீபம் ஏற்ற வேண்டும்
எண்ண மாளிகை வாசல்தோறும்
இளமை தீபம் ஏற்ற வேண்டும்

SPB : மடி மேல் உன்னை தாங்க
இந்த மன்னவன் நினைவுகள் ஏங்க
மடி மேல் உன்னை தாங்க
இந்த மன்னவன் நினைவுகள் ஏங்க

P. சுசீலா : : அதை நேரிடையாக சொல்ல
நான் நாணம் இல்லாதவள் அல்ல

P. சுசீலா : : நெடுநாள் ஆசை ஒன்று
இந்த நெஞ்சினில் உதித்ததுண்டு

SPB : அதை நேரிடையாக சொல்ல
கண்ணை தூது விட்டேனடி மெல்ல


41 கருத்துகள்:

  1. விஜய் அன்டனியின் பேட்டியைப் பார்க்கணும். இவரை சென்னை ஏர்போர்டில் ஒரு பயணத்தின்போது சந்தித்தேன். படம் எடுத்துக்கொண்டேன். மிக இயல்பானவர். இவரைப் பற்றிய நல்ல எண்ணம் தோன்றியது (பாடகி சித்ரா, தொலைக்காட்சியில் பார்ப்பது போன்றவரில்லை. சிடு சிடு, அகங்காரம் கொண்டவர் என்ற அபிப்ராயம் அவரை என் பெண்ணுடன் ஏர்போர்டில் பார்த்தபோது தோன்றியது)

    வி.அ முதல் படம் பார்த்து பசங்க பயந்தார்கள். பிச்சைக்காரன் படம் நாங்க ரசித்துப் பார்த்தோம் (ப்ளூ ரே டவுன்லோடும் பார்த்தேன். பையனிடம் படம் சூப்பர் பார் என்று போட்டேன். கொஞ்ச நேரத்துல அழுதுகிட்டு, படம் பார்க்கமாட்டேன்னு சொல்லிட்டான். அவன் சென்டிமென்ட் உள்ளவன்)

    இவர் சவல்லும் தூய சவேரியார், இக்னேஷியஸ் கான்வென்ட் பாளையங்கோட்டையில் உண்டு. இவர் அந்த ஊர் கார்ரா எனப் பார்க்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை..   
      ஊடகங்களில் சகட்டு மேனிக்கு ஒருவரைப்பற்றி விமர்சனம் ஏதாவது எதிர்த்து எடுத்து  விடுவார்கள்.  அந்த வகையில் இவர் பற்றியும் சில விமர்சனங்கள் உண்டு.  ஆனால் இவரின் இந்த பேட்டி பார்த்ததும் கவரப்பட்டேன்.  அங்கு போனீர்கள் என்றால் இதன் மற்ற நாகங்களை உங்களுக்கு யு டியூபே சஜஸ்ட் செய்யும்.

      திருநெல்வேலி ஊர் பற்றியும் அதன் பாஷை பேசாதது குறித்தும் கூட கேள்வி பதிலில் இருக்கிறது.

      நீக்கு
    2. நெல்லை, வி ஆ எங்க ஊர்க்காரர் நாரோயில்

      கீதா

      நீக்கு
    3. கொஞ்சமா அசந்தா எல்லாரையும் உங்க ஊராக்கிடறீங்களே!!
      ' யாதும் ஊரே ; யாவரும் கேளிர்' தத்துவமா!

      நீக்கு
    4. உங்கள் ஊரா இருந்தால் என்ன? படிக்க எங்க ஊர் பாளையங்கோட்டைக்கு வந்துதானே ஆகணும்

      நீக்கு
    5. நல்லா இருக்கு போங்க உங்க ஊர் சண்டை

      நீக்கு
    6. ஸ்ரீராம் சிரித்துவிட்டேன். அவரே சொல்லியிருக்கிறார் முன்னர் எங்கோ பேசிய ஒரு காணொளியில்.

      நெல்லை அதென்ன? எல்லாத்துக்கும் பாளையங்கோட்டைக்கு வரணும்னு. எங்க ஊர்லயும் படிக்க நல்ல வசதிகள் உண்டாக்கும் நல்ல லைப்ரரியும் உண்டு. ரயில் பார்க்காமலேயே கல்லூரி முதுகலை எல்லாம் படித்துவிடலாமாக்கும்!!!

      அவர் பிறந்த ஊர் நாரோயில். ஆனால் படித்தது பற்றி இன்னும் சரியா தெரியலை வீடியோஸ் பார்த்தா தெரியும்னு நினைக்கிறேன்.

      கீதா

      நீக்கு
    7. அப்பாவின் தற்கொலை மரணத்திற்குப் பிறகுதான்....அவர் கல்லூரி செயின்ட் சேவியர்ஸ் பாளையங்கோட்டை. ஃபிசிஸ்க்ஸ், நெல்லை உங்க சப்ஜெக்ட் தான் படித்திருக்கிறார்.

      முன்ன பார்த்த பேட்டி ஒன்றில் அவர் சொல்லியிருந்த விஷயம், அவர் வேதநாயகம்பிள்ளையின் கொள்ளுப் பேரன்.

      கீதா

      நீக்கு
    8. // அவர் வேதநாயகம்பிள்ளையின் கொள்ளுப் பேரன். //

      ஆமாம். அதை அறிந்து வைத்திருக்கிறேன்!

      நீக்கு
  2. இன்றைக்குப் பகிர்ந்துள்ள பாடல்களைக் கேட்ட நினைவு இல்லை. பிறகுதான் காணொளி பார்க்கணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படிதான் சொல்றீங்க.. அப்புறம் அதைப் பற்றி ஒன்றும் சொல்ல மாட்டேன் என்கிறீர்கள்!!!

      நீக்கு
  3. கமலா ஹரிஹரன் மேடம் நலமா? உடல்நிலை சரியில்லை என எங்கோ குறிப்பிட்டிருந்த நினைவு. அவரது பேத்தியின் எலும்பு முறிவு சரியாகிவிட்டதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னும் சற்று நேரத்தில் கமலா அக்காவிடமிருந்து "வணக்கம் நெல்லை சகோதரரே..."  என்று தொடங்கி பதில் வரும்.  

      நீக்கு
    2. ஹா ஹா ஹா.

      "/வணக்கம் நெல்லை சகோதரரே..."/

      தமிழரை விட்டு விட்டீர்களே..! நேற்று கூட முதல் ஆளாக வந்தேனே . நீங்கள் பார்க்கவில்லை போலும். இறைவன் அருளால், பேத்தியின் கைக்கட்டு அவிழ்த்து இப்போது நலமாக உள்ளாள். அவ்வப்போது மணிக்கட்டில் வலி என்கிறாள். அந்த இறைவன்தான் என்றும் துணையாக இருக்க வேண்டும். நன்றி சகோதரரே.

      நீக்கு
    3. நன்றி கமலா அக்கா... வாங்க வணக்கம்.

      நீக்கு
    4. ஹாஹாஹா சிரித்துவிட்டேன் ஸ்ரீராம்!

      கீதா

      நீக்கு
    5. கமலாக்கா பேத்திக்கு ஃபிசியோ தெரப்பி கொடுத்திருப்பாங்கன்னு நினைக்கிறேன் வீட்டில் செய்யவும் சொல்லியிருப்பாங்கன்னு நினைக்கிறேன் சரியாகிவிடும் கமலாக்கா

      கீதா

      நீக்கு
  4. பதில்கள்
    1. முருகா..  முருகா...

      வாங்க செல்வாண்ணா.. வணக்கம்.

      நீக்கு
  5. எழுதுகிறாள் ஒரு கவிதை..

    பாடல் பிடித்தமான ஒன்று..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தலைவர் பாடலும் நன்றாய் இருக்குமே...  இதில் இன்னொரு பாடல் கூட உண்டு.  அதைப் பகிரவில்லை.

      நீக்கு
  6. விஜய் ஆ - அவர்களது பிச்சைக்காரன் உள்பட
    சில படங்கள் பார்த்திருக்கின்றேன்...

    இவரும் முருக பக்தராக நடிக்கின்றார்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் இவர் படம் எதுவும் பார்த்த நினைவு இல்லை!

      நீக்கு
    2. ஸ்ரீராம்.. இவர் முதல் படம் நான் என நினைவு. ஆள் மாறாட்டக் கதை த்ரில்லர். சூப்பர். பிச்சைக்காரனும் சூப்பர். மற்றபடி நடிப்பில் ஒரே மாதிரி முகபாவம்தான். அதனாலென்ன கதை இருக்கிறதல்லவா?

      நீக்கு
    3. இவர் நடித்த படம் ஏதோ ஒன்று கொஞ்சம் பார்த்திருக்கிறேன் என்று நினைக்கிறேன் ஒரே மாதிரி முக பாவங்கள் நடிப்பு வராதது பற்றி எல்லாம் அவரே சொல்லிக் கொண்டு விடுகிறார்

      நீக்கு
  7. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  8. முதல் பாட்டு ரொம்ப ரொம்ப வருஷம் கழித்துக் கேட்கிறேன். ம வாதே வின் குரல் என்ன அருமையான குரல். பாடல் கேட்டுக் கொண்டேதான் மேலே நெல்லைக்குப் பதில் கொடுத்தேன்.

    மீண்டும் பாடலைக் கேட்டேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்போதும் இளையராஜா பாடல்களில் தான் மலேசியா வாசுதேவன் ஜொலிப்பார். இது எம் எஸ் விஸ்வநாதன் இசையில்!

      நீக்கு
    2. ஆமாம் ல!!!! நீங்க சரியா நோட் பண்ணிருக்கீங்க ஸ்ரீராம். நீங்க இப்ப சொன்னதும்தான் ஆமாம்ல என்று தோன்றியது.

      கீதா

      நீக்கு
    3. வெகு சில பாடல்களில்தான் மற்ற இசை அமைப்பாளர்கள் பாடலில் பாடி இருக்கிறார்.

      நீக்கு
  9. நானும் பாண்டே - விஜய் ஆன்டனி வீடியோ பார்த்தேன் ஒன்றுதான் பார்த்திருக்கிறேன் வேலைகளின் நடுவில் அடுப்பில் கிளறும் சமயம் கொதிக்கும் சமயம் கொஞ்சம் கொஞ்சமாகக் கேட்டேன். மற்றவையும் இனிதான் பார்க்க வேண்டும்.

    ரொம்ப இயல்பானவர். வி ஆ.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அவரது கருத்துக்கள் சில கவர்கின்றன. குறிப்பாக அவர் எதிரிகளைப் பற்றி பேசும்போது

      நீக்கு
  10. அதிராத குரல். எளிமையான உரையாடல். செயற்கைத்தனம் இல்லாத உடல்மொழி //

    ஆமாம். செருப்பு போடுவதில்லை பல மேடைகளில் செருப்பில்லாமல் வருவதைப் பார்க்கிறேன். அதற்கும் ஏதோ சொல்லியிருந்தார் சட்டென நினைவுக்கு வரவில்லை.

    அவர் வாழ்வியல் கலையும் பேசுகிறார். ஒரு வேளை அவரது மகளின் மரணத்திற்குப் பிறகாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. மனதை அமைதியாகவும் உணர்வுகளைக் கையாளுதல் குறித்தெல்லாம்...

    பாண்டே உடனான வீடியோ ஒன்றில் (நான் அது மட்டும்தான் பார்த்தேன் அதுவும் முழுவதும் இல்லை) நடிப்பு பற்றி அவர் கேட்டதற்கு உண்மையான பதிலை ரொம்ப இயல்பாகச் சொன்னார். ஆமாம் என்னால் கமல் போலவோ சிவாஜி போலவோ நடிக்க வராது என்னால் இயன்றது அவ்வளவுதான். நான் ஒரு ஆவரேஜ் நடிகந்தான் ஆனால் என் படத்தில் கதை இருக்கும் என்று. நேரடியான கேள்விக்கு என்ன அழகான நேர்மையான பதில் இல்லையா?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகள் இப்போதும் அவருடன் இருப்பதாகவே உணர்கிறாராம். அவருடன் தினசரி பேசுகிறாராம்.

      நீக்கு
  11. "விஜய் ஆண்டனி இந்த ஸீன்ல நடிப்பு பின்னிட்டாருப்பா அப்படீன்னு எதை சொல்லலாம்? எப்ப சொல்லலாம்?"

    "இல்லை. வராது. நீங்க இந்த ஜென்மத்துல அப்படி சொல்ல மாட்டீங்க.. எனக்கு என்ன வருதோ அதான்.. புத்திசாலிகளுக்குதான் இந்த உலகமா என்ன.. என்ன மாதிரி ஆட்களுக்கும் இடம் இருக்குதானே... எனக்கு தெரிஞ்சதை நான் செய்யறேன்...."//

    இதுதான் இதுதான் இந்த வீடியோதான் பார்த்தேன்.

    அழகான பதில். வி ஆ வின் இந்த பதிலை நான் ரொம்ப ரொம்ப ரசித்தேன், ஸ்ரீராம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லா பகுதிகளும் பார்த்தீர்கள் என்றால் ரசிக்க இன்னும் நிறைய விஷயம் இருக்கு... ரொம்ப இயல்பு, நேர்மை...

      நீக்கு
  12. [இது மூன்று பாகம் இருக்கிறது என்று நினைக்கிறேன். விரும்புபவர்கள் இணையத்தில் தேடி மற்ற பகுதிகளையும் பார்க்கலாம்.]//

    ஆமாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் எல்லாம் பார்க்கணும் என்று நினைத்திருக்கிறேன். நேரம் எப்ப என்று பார்க்க வேண்டும்.

      கீதா

      நீக்கு
    2. மெதுவாக ஒவ்வொன்றாக பாருங்கள்

      நீக்கு
  13. நெடுநாள் ஆசை ஒன்று - பாடல் நிறைய கேட்டிருக்கிறேன், ஸ்ரீராம். அப்பவும் ரசித்த பாடல் இப்பவும் கேட்டுக் கொண்டே டைப்பிங்க்!!!! தலைவரின் கமகங்களில், நெடுநாள் என்று எடுக்கும் போதும் அதை நேரிடையாகச் சொல்ல......குழைதலில்... மனதை செலுத்திக் கொண்டே.

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!