கீதா சாம்பசிவம் ரெஸிப்பி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கீதா சாம்பசிவம் ரெஸிப்பி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

10.7.23

"திங்கக்"கிழமை :   ஜீரா போளி     - கீதா சாம்பசிவம் ரெஸிப்பி 

 வல்லி பதிவிலே ஸ்ரீராம் ஜீரா போளி சாப்பிட்டதில்லைனு சொல்லி இருக்கார். எங்க வீட்டிலே(புகுந்த வீடு)  இது சர்வ சாதாரணமாப்பண்ணிட்டே இருப்போம்/ இருந்தோம்.  

3.7.23

"திங்கக்"கிழமை :  இலைக்கறி, இலை போளி   - கீதா சாம்பசிவம் ரெஸிப்பி 

 மின் தமிழில் இலைக்கறி, இலை போளி போன்றவை குறித்து எழுதினதிலே இருந்து சேம்பு இலைக் கறி/வடை(மதுரையில் வடைனே சொல்வோம்) பத்தி எழுத நினைச்சேன்.  ஆனால் உடனே எழுத முடியாமல் மின்சாரம் படுத்தல், மற்ற சில, பல பிரச்னைகள்.

26.6.23

"திங்கக்"கிழமை :  சொஜ்ஜி அப்பம் - கீதா சாம்பசிவம் ரெஸிப்பி 

 சொஜ்ஜி அப்பம்: சொஜ்ஜி அப்பம்னா என்னனு கேட்காதீங்க. சொஜ்ஜி அப்பம் இரண்டு முறைகளில் செய்யலாம். ஒண்ணு வெல்லம் போட்டுச் செய்வது; இன்னொண்ணு சர்க்கரை போட்டுச் செய்வது. அதே போல் ஒண்ணு போளி போல் தட்டித் தோசைக்கல்லில் போட்டு எடுப்பது. இன்னொண்ணு எண்ணெயில் பொரித்து எடுப்பது. எண்ணெயில் பொரித்து எடுக்கும் சொஜ்ஜி அப்பங்களானாலும், போளி மாதிரி தட்டினாலும் மூன்று நாட்கள் வரை வைச்சுச் சாப்பிடலாம்.

9.1.23

"திங்க"க்கிழமை  :  பீட்ரூட் கறி - கீதா சாம்பசிவம் ரெஸிப்பி 

 பீட்ரூட் கறி. எங்க காடரர் வாரம் மூன்று நாட்கள் பீட்ரூட்டை எப்படியானும் உணவில் சேர்த்துடுவார். ஒரு நாளைக்கு பீட்ரூட் கறி, ஒரு நாளைக்கு பீட்ரூட் வெங்காயக் கூட்டு, (சாப்பாட்டோடு எப்படி இருக்குமோ?) ஒரு நாள் பீட்ரூட் ரசம். சப்பாத்தி என்றால் பீட்ரூட் குருமா. ஆக அவருக்கு எப்படியேனும் பீட்ரூட்டைக் கொண்டு வந்துடணும்னு ஒரே ஆவல்! என்னவோ போங்க!

26.12.22

"திங்க"க்கிழமை :  முத்துக்குழம்பு, சவரன் துவையல் - கீதா சாம்பசிவம் ரெஸிப்பி 

பொதுவாவே நம்மவருக்கு ஒரு (standard) திட்டமிட்ட சமையல்னா பிடிக்கிறதில்லை. மாத்திட்டே இருப்பார். நானுமே தினம் ஒன்று எனப் பண்ணும் ரகம் தான். இப்போப் புதுசா ஒரு "பழக்கம்" வந்திருக்கு நம்ம ரங்க்ஸுக்கு. அதான் சமையல் யூ ட்யூப் எல்லாம் பார்க்கிறது.

7.11.22

"திங்க"க்கிழமை  :  பரங்கிக்காய் அடை - கீதா சாம்பசிவம் ரெஸிப்பி 

 சாதாரண அடை தான். அதிலே இளம் கொட்டை எனப்படும் பிஞ்சுப் பறங்கிக் கொட்டையை நறுக்கிச் சேர்த்து வார்த்தால் தேங்காய்க்கீற்றுகள் போலவாசனையாகவும் ருசியாகவும் இருக்கும்.