சனி, 22 டிசம்பர், 2018

இதுவும் கொடுப்பான் இன்னமும் கொடுப்பான் என்ற கர்ணனைப் போல...





1)  முன்னர் போட்ட 10 ரூபாய் டாக்டர் சென்னைக்காரர் என்று ஞாபகம்.  அல்லது இரண்டாவது முறை போட்டால்தான் என்ன?  நல்லவர்களை மறுபடி மறுபடி நினைவு கூரலாம். 






2) இப்படி இதுவும் கொடுப்பான் இன்னமும் கொடுப்பான் என்ற கர்ணனைப் போல தர்ம காரியத்திற்கு கொடுத்துக் கொண்டே இருக்கும் இந்த தம்பதியினர் பெரிய பணக்காரர்கள் அல்ல மத்திய அரசு வழங்கும் பென்ஷன் பணத்தில் வாழ்க்கையை நடத்துபவர்கள்தான் எங்காவது போகவேண்டும் என்றால் கால் டாக்சியில் போனால் கூட காசு செலவாகும் என்று நினைத்து டவுன் பஸ்சில்தான் இப்போதும் போய்வந்து கொண்டு இருக்கின்றனர்.

ஏற்கெனவே இவர்கள் பற்றிய தகவல்களை சுருக்கமாகப் பார்த்திருக்கிறோம் என்று நினைவு.




3)  விளையும் பயிர்...

39 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, கீதாக்கா, பானுக்கா, தொடரும் அனைவருக்கும்

    வல்லிம்மா! இனிய மாலை வணக்கம்…

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன். சற்றே தாமதம்... தூக்கம் கண்களை சற்றே அதிகமாய்த் தழுவி விட்டது!!!!

      நீக்கு
    2. என்னாச்சு ஸ்ரீராம்...வேலைப்பளு? இன்று சனிக்கிழமை ஆஞ்சுவைப் பார்க்க போகலையோ? ஆனா புளியோதரை கிடைக்காது மார்கழி மாசம் வேற ஸோ பொங்கல் தான் கிடைக்கும் ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    3. வேலைப்பளுவா? ஜஸ்ட் தூக்கம்! சற்றே தாமதமான எழுகை!!

      ஆஞ்சியை இவளவு சீக்கிரம் பார்க்கப் போனால் திரைதான் தெரியும். கொஞ்சம் மெதுவாகத்தான் செல்லவேண்டும்!

      நீக்கு
    4. இன்றாவது உங்களுக்குப் புளியோதரை கிடைக்க ஆண்டாளும், கீதாக்காவின் ரங்குவும் அருளட்டும்!!!!!!!!!!!!

      கீதா

      நீக்கு
  2. துரை அண்ணா உங்கள் பிரச்சனை என்னாயிற்று? தலைமையகம் என்ன சொல்லுகிறது? பிரார்த்திக்கிறோம் நாங்கள் அனைவரும்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலையில் செல்லவேண்டும்..
      பிறகு விவரம் தருகிறேன்...

      நீக்கு
    2. நல்லதே நடக்கட்டும்.

      எது நடந்தாலும் எல்லாம் நன்மைக்கே.

      நீக்கு
    3. அதே அண்ணா ஸ்ரீராம் சொன்னதை டிட்டோ செய்கிறேன்....நாங்கள் எல்லோரும் பிரார்த்திக்கிறோம்...
      கீதா

      நீக்கு
  3. அன்பின் ஸ்ரீராம், கீதாக்கா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு..

    பதிலளிநீக்கு
  4. துரை சார் எப்படி இருக்கிறீர்கள்? Pls.let us know the developments.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலையில் அங்கு சென்று வந்த பிறகு தகவல் தருகிறேன்...

      தங்கள் அன்பினுக்கு நன்றி..

      நீக்கு
  5. இன்றைய பாசிட்டிவ் செய்திகள் போல உங்கள் பிரச்சனையும் பாசிட்டிவாகத் தீரட்டும்! இறைவன் அருளால்.

    கீதா

    பதிலளிநீக்கு
  6. என்னுடைய ஃபோனில் முதல் செய்தியை மட்டுமே திறக்க முடிகிறது.

    பதிலளிநீக்கு
  7. என்ன காரணமோ...
    தினமலர் செய்தி தளம் திறக்கவில்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். திறக்கவில்லை. காப்பிரைட் பாலிசி என்கிறது. சமீப காலமாக தினமலர் தளத்தில் கீழே ஒரு தகவல் ஓடும். குக்கீஸ் இருக்கின்றன. உங்களுக்கு சம்மதமா என்பதுபோல செய்தி இருக்கும். அவர்கள் இதைத் தடை செய்துவிட்டார்கள் போலும்.

      என்னைப்பொறுத்தவரை அவர்கள் கொடுக்கும் தகவலை நான் எடுத்து என் செய்தியாகப் போட்டால் தவறு. அவர்கள் பக்கத்துக்குதான் லிங்க் கொடுக்கிறேன். ஆயினும் அவர்களுக்கு அதில் சம்மதமில்லையோ என்னவோ...

      நீக்கு
    2. ஆமாம் ஸ்ரீராம் தளத்தின் லிங்க் தானே கொடுக்கறீங்க நாங்களும் அங்க போய்த்தானே பார்த்துக் கொண்டிருந்தோம்....ஆமாம் குக்கீஸ் நிறைய வரும்....

      இப்ப காப்பிரைட்.,...நீங்க சொல்லிருப்பது போல ஆகிடுச்சோ...

      கீதா

      நீக்கு
  8. எல்லாத்தையும் பார்த்தேன். வரவேற்ற வரவேற்கப் போகும் அனைவருக்கும் வணக்கம், நன்றி. அப்புறமா வரேன்.

    பதிலளிநீக்கு
  9. அனைவருக்கும் காலை வணக்கம்

    செய்திகள் அருமை

    பதிலளிநீக்கு
  10. போற்றுதலுக்கு உரியவர்கள்
    போற்றுவோம்

    பதிலளிநீக்கு
  11. தம்பி ஆதித்யன் பிரமிக்க வைக்கிறான். வாழ்த்துவோம்.

    பதிலளிநீக்கு
  12. பையன் ஆதித்த்யன் பற்றிய செய்தி பிரமிப்பு! தருகிறது. இப்படியான ஒரு பையன் திருவான்மியூர் என்று நினைவு அவனும் 7 ஆம் வகுப்போ இல்லை 8 ஆம் வகுப்போ அப்போதிருந்தே கம்பெனி தொடங்கி சம்பாதிக்கத் தொடங்கியதாக வாசித்த நினைவு.

    தினமலர் தளம் ஓபன் ஆகவில்லை. ஏகாந்தன் அண்ணன் தளமும் குக்கீஸ் சுடுமே!!! சுட்டுக் கொண்டிருந்தது. சமீப காலமாக அண்ணா ஞானியாக இருந்ததால் அந்தப் பக்கம் எட்டிப் பார்க்கலை (என் மர மண்டைக்கு எட்டாத மேட்டர்...ஹிஹிஹி)

    இந்தப் பத்து ரூபாய் டாக்டர் சென்னையும் பகிர்ந்திருக்கீங்க, ஈரோடோ அல்லது சேலமோ அங்கும் ஒரு டாக்டர் என்று பகிர்ந்த நினைவு...ஒரு ரூபாய் அல்லது பத்து ரூபாய் டாக்டர் தென்காசி என்று நினைவு அதுவும் பகிர்ந்திருக்கீங்க....ஆமாம் நல்லது செய்பவர்களை எத்தனை முறை பகிர்ந்தால் வாசித்தால் நல்ல மோட்டிவேஷன் தானே!!

    இந்த வயதான தம்பதியர் ஃபோட்டோ பார்த்ததுமே இங்கு முன்பே வந்திருந்த நினைவு வந்துவிட்டது. பகிர்ந்திருக்கீங்க...சேவை செய்வதற்கு மனம் இருந்தால் போதும்!!! என்பதைச் சொல்லும் தம்பதியர்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //..சமீப காலமாக அண்ணா ஞானியாக இருந்ததால்..//

      தற்காலிக ஞானமாக இருக்குமோ-'temporary visa status' மாதிரி! தற்காலிக ஞானமும் குக்கீஸ் மாதிரிதான். அவ்வப்போது எட்டிப் பார்க்கும்..

      எனக்கும் தினமலர் திறக்கவில்லை. சமீபத்தில் வண்ணாரப்பேட்டை 5ரூ. டாக்டர் மறைந்ததையும், அவருக்கு பொதுஜனங்கள் கொடுத்த அபார வழியனுப்புதலைப்பற்றியும், வழியில் முனீஸ்வரன் கோவில் பூஜாரி சூட ஆரத்தி காண்பித்த படத்தையும் பார்த்தேன்/ படித்தேன். ஸ்ரீராம் படிக்கலையே !

      சின்னப்பையன்கள் எல்லாம் கம்பெனி ஆரம்பிக்க, பெரிசுகள் காவிக்குத் தாவிவிடவேண்டியதுதான்..

      நீக்கு
    2. ஏகாந்தன் ஸார்... அஞ்சு ரூபாய் டாக்டர் ஜெயச்சந்திரன் மறைவு குறித்து படித்தேன். அதை பாசிட்டிவ் செய்திகளில் எப்படி சேர்ப்பது...!

      நீக்கு
    3. அவருடைய மறைவுபற்றிய செய்திதான் அது. இருந்தும், அதற்கு முன்னாலான அவருடைய நல்வாழ்க்கையை அண்டர்லைன் செய்ததே.. அன்னாரின் மறைவும் பாமரரின் மனதில் அவருடைய இருப்பைத்தானே தெரிவித்தது என்று நினைத்தேன்...

      நீக்கு
  13. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்.

    முதல் இரண்டு செய்திகளும் படித்த செய்திதான் இருந்தாலும் நல்லசெய்தியை மீண்டும் படிக்கலாம் என்றால் பக்கம் திறக்கமாட்டேன் என்கிறது. மூன்றாவது செய்தி படிக்காத செய்தி அதையும் படிக்கமுடியவில்லை.
    மீண்டும் படிக்க முடிந்தால் படிக்கிறேன்.
    எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  14. வழக்கம்போல அருமையான நேர்மறைச் செய்திகள். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  15. எல்லாச் செய்திகளும் தினமலர் காப்பிரைட் எனப் போட்டுவிட்டதால் படிக்க முடியவில்லை. தம்பதியர் குறித்து மட்டும் படித்த நினைவு இருக்கு. அனைவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  16. ஸ்ரீராம் இன்றைய பாசிட்டிவ் செய்திகளுக்குச் சம்பந்தமில்லாம நேற்றைய பதிவுக்கு இங்க சொல்லுறேன்..ஸாரின்ன..ஒரு வேளை அதிரா வந்தா பார்ப்பாங்களோனு..

    அவங்க சொல்லிருந்த ஒரு பாட்டு காப்பி யோ என்று சொல்லி அப்புறம் ஒரு ஜீவன் தான் கொடுத்திருந்தாங்க...அப்புறம் தான் நினைவுக்கு வந்தது ஒரு ஜீவன் தான் பாட்டு மெட்டு. நேற்றைய பாடலும் , ஒரு ஜீவன் தான் ரெண்டுமே சிவரஞ்சனி அதான் காப்பியோன்னு அதிரா கேட்டுருக்காங்க போல...

    காப்பி இல்லை....ரெண்டுமே ஒரே ராகத்தில் அமைந்த பாடல் ஆனால் நேற்றைய பாட்டின் சிவரஞ்சனி கொஞ்சம் வித்தியாசமானதுதான்...அதிரா....ஆனால் எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்துச்சு அதிரா...மெட்டு ராகம் ஒரே போன்று என்று நீங்கள் சொன்னது!!! அது உங்களுக்குள்ள இருக்கற இசை அறிவைச் சொல்லுது...கேள்விஞானம்!! (ஆஹா....நானே எடுத்துக் கொடுத்துட்டேனோ...இசை அறிவு, ஞானம் என்று...ஆஷா போன்ஸ்லே, ஞானி!!!!!!)

    கீதா

    பதிலளிநீக்கு
  17. மூன்று செய்திகளுமே அருமை.

    அந்தச் சின்னப்பையன் பற்றி அறிவேன். ஆனால் ஏனொ எழுதவில்லை சமீபகாலமாக எழுதுவது குறைந்ததால் எழுதாமல் விட்டுப் போன ஒன்று.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  18. விளையும் பயிருக்கு வாழ்த்துகள்
    நல்லவரை நினைவுக்கூர்வதில் தப்பில்லை.
    கர்ணனுக்கு ஒப்பான தம்பதிகளுக்கும் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  19. அனைத்து செய்திகளும் சிறப்பு. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  20. தினமலர் பக்கங்கள் இன்று திறக்கின்றன.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!