வியாழன், 7 மார்ச், 2019

நம்பியார், சோமு நூற்றாண்டு விழா


நாங்கள் வந்த வண்டியைத் தேடி ஓய்ந்தோம்.   

'ஆங்காங்கே சுற்றி வரும் ஜீப்களில் ஏறலாமா?' என்று அங்கே நின்ற ஒருபோலீஸ்காரரிடம் கேட்டபோது அவர் 'அன்பாக'ச் சொன்னார், "வாய் இருக்கு இல்லே?  கேட்டுப்பாருங்க" 

அவருக்கு என்ன டென்ஷனோ!

அப்புறம் ஒரு ஜீப்பை அணுகி 'தரிசனம் முடிந்து வெளிவருவோரை வண்டிகள் எங்கே பிக்கப் செய்யும்?' என்று கேட்டு அங்கு கொண்டுவிடச் சொல்லி ஏறி அமர்ந்தோம்.  ஒரு ஆளுக்கு இருபது ரூபாய் என்றார்.

அவரிடம் விவரம் கேட்க தெலுங்கில் அல்லாடினோம்.  நடுவில் எங்களுக்குள் பேசிய ஒரு வார்த்தைத் தமிழில் அவர் சுதாரித்து "தமிழா?  தமிழ்லயே பேசுங்க..." என்றார்.

நல்லவேளையாக அவருக்கு கொடுக்க எங்கள் கையில் பணம் இருந்தது.  வழியில் அவரிடம் விஷயத்தைச் சொன்னதும் அவர் கேட்டார்...

 "படிச்சவங்கதானே நீங்க?"

"அப்படிக் கேளுடா என் செல்லாக்குட்டி..."

அது சரி!

"டிரைவர் போன் நம்பர் இருக்கா?" என்றார்

"வேறொரு பெண் வாங்கி கொண்டாள்.  அவள்தான் உள்ளே சென்று விட்டாளே" என்றோம்.

திடீரென ஜீப்பருக்கு மின்னல் அடித்தது.  "உங்க நம்பர் உங்களுக்குத் தெரியுமில்ல?  அதற்கு அடித்தால் டிரைவர் எடுப்பாரில்லே?" என்று தனது மொபைலை எடுத்தார்.

"மொபைல் பைக்குள்...  பை வண்டிக்குள்... டிரைவர் வெளியில் நிற்கலாம், டீ குடிக்கச் சென்றிருக்கலாம்.  அங்கேயே இருந்தாலும் இந்த சத்தத்தில் வண்டிக்குள் போன் அடிப்பது அவருக்குக் கேட்க வழியிருக்காது"

போனை உள்ளே வைத்துக்கொண்டு வண்டியை தொடர்ந்து ஓட்டினார்.

இது மாதிரிக் காத்திருக்கும் வண்டிகள் மூன்று நான்கு இடங்களில் நிற்பார்கள் என்று சொல்லி, எங்கள் வண்டி அடையாளம் தெரியுமா என்று கேட்டார்.  தெரியும் என்றதும் பொறுமையாக எல்லா இடத்திலும் மெதுவாக ஓட்டி நாங்கள் தேட உதவினார். ராணுவ அணிவகுப்பில் செல்லும் வி ஐ பி போல வண்டியில் அமர்ந்து எங்கள் தனலக்ஷ்மி டிராவல்ஸைத் தேடினோம்.

அச்சச்சோ... இருங்க நானும் தேடிப் பார்க்கிறேன்...

நம் ராசி, கடைசி இடத்தில்(தான்) எங்கள் வண்டி அகப்பட்டது.  150 ரூபாய் வாங்கிக்கொண்டு நகர்ந்தார் அந்த நல்ல நண்பர்.

நாங்கள் அந்த எங்கள் வண்டியைப் பார்த்தபோது  மணி ஐந்தரை.

எங்கள் வண்டியின் ஓட்டுநர் எங்களைப் பார்த்ததும் பதறி விட்டார்.  'அந்தப் பெரியம்மா எங்கே?  என்று கேட்டார்.  ஏனெனில் முதல்நாள் அவரை திருச்சானூரிலேயே தொலைத்து விட்டுத் தேடி இருந்தோம்.  அந்த பயம் அவருக்கு!  அது நான் சொல்ல மறந்த சம்பவம்.    

"இனி நெட் சென்டர் போயி, பிரிண்ட் எடுத்து, உள்ளே போயும் அவர்கள் வரும் முன் உங்களால் வரமுடியாது. ஏற்கெனவே இரண்டுபேர் ஆதார் கொண்டு வரவில்லை என்று உள்ளே செல்ல முடியாமல் இங்கே வராகப் பெருமாளை தரிசித்து விட்டு வரப் போயிருக்கிறார்கள்.  நீங்களும் அப்படியே போய் தரிசனம் செய்து விட்டு கொடிக் கம்பத்துக்காய் போய் ஒரு நமஸ்காரம் செய்துவிட்டு வாருங்கள்" என்றார்.

வேண்டாம் என்று சொல்லச்சொல்ல அம்மாவும் கூட வருவேன் என்று அடம்பிடித்தார்.  அவரையும் அழைத்துக்கொண்டு திருக்குளத்தைத் தாண்டி நீண்ட தூரம் நடந்து நடந்து அங்கு சென்றோம்.  நாங்கள் வராகப்பெருமாள் கோவில் என்று நினைத்து முதலில் சென்றது லக்ஷ்மி ஹயக்ரீவர் கோவில்.  பின்னர் விசாரித்துக்கொண்டு எதிரே வராகப் பெருமாள் கோவில் சென்றோம்.  திருப்பதி பெருமாளுக்கே அவர்தான் இடம் கொடுத்தவராம்.

பார்த்தால் பெரிய கியூ வரிசை நின்றிருந்தது.  வரிசையில் நின்றிருந்தபோது இரண்டு சம்பவங்கள் நடந்தன.

ஒன்று வேகமாக வந்த ஒரு நபர், என் இளைய மகனிடம் "நீங்கள் உள்ளே செல்கிறீர்கள் இல்லையா?  இந்த நூறு ரூபாயை உண்டியலில்போட்டு விடுங்கள்" என்று சொல்லி நூறு ரூபாயைக் கையில் கொடுத்து விட்டுப் போய்விட்டார்.  நம்பிக்கை!  அவர் ஏன் உள்ளே வரவில்லை என்று(ம்) தெரியவில்லை.

இரண்டாவது விஷயம்...

சாதாரணமாக வீடுகளில் அப்பாக்கள் கோபமாக இருந்தாலும் அம்மாக்கள் கருணை செய்வார்கள் இல்லையா?  "அவர் கிடக்கார்...   வாடா...  வந்து ஒரு வாய் அள்ளிப் போட்டுக்கோ" என்பார்கள் இல்லையா?

அதுபோல, சரியாய் நாங்கள் வராகப்பெருமாள் கோவில் உள்ளே செல்ல முடியாமல் வெளியே வரிசையில் நின்றிருந்தபோது தாயார் வீதி உலா வந்தார்கள்!  சுகதரிசனம்.  அம்மாக்கள் கருணை மயமானவர்கள்.

அப்புறம் வராகப்பெருமாள் சன்னதிக்குள் சென்று, நினைவாய் நூறு ரூபாயை உண்டியலில் போட்டு, எங்கள் பணத்தையும் உண்டியலில் போட்டு  தரிசனம் முடித்து வெளிவந்து, வந்த வழி நடந்து, திருக்குளம் மறுபடி தாண்டி, கொடிக்கம்பம் அல்லது கொடிமரம்  (துவஜஸ்தம்பம்) அருகே சென்று நமஸ்காரம் செய்தபோது அங்கே உள்ளே சென்றவர்கள் ஒவ்வொருவராய் கண்ணில்பட்டார்கள்.  தரிசனம் முடிந்து திரும்பிக் கொண்டிருந்தார்கள்.

"எங்கேயும் நிற்கலை...   சரசரவென நகர்ந்து நகர்ந்து சென்று தரிசனம் செய்தோம்"

சரி...   சரி...  போனாப்போகுது...

வண்டி எங்கே நிற்கிறது என்று கேட்க, நம்பர் வாங்கிய அந்தப் பெண்ணை மற்றவர்கள் தேடிக்கொண்டிருக்க, நாங்கள் 'எங்களுடன் வாருங்கள்' என்று அழைக்க அருகே சென்றால், விலகிச் சென்றார்கள்.

திரும்ப வண்டிக்கு வரும்வழியில் தேநீர் அருந்தி விட்டு வந்தோம்.  வண்டி புறப்பட்டு சென்னையை அடைந்தபொழுது இரவு பதினோரு மணி.

எல்லோரும் நிறைய லட்டு வைத்திருந்தார்கள்.  ஒருவர் எங்களுக்கும் நான்கு லட்டுகள் கொடுத்தார்.  எனினும் எங்களிடமும் முதல் நாள் தாயார் கோவிலில் வாங்கிய ஏராள லட்டுகள் கைவசம் இருந்தன.

அப்புறம் மறுநாள் சந்தித்த ஒரு நண்பர், விஷயம் கேள்விப்பட்டு  "அங்கிருந்து ஒரு தொலைபேசியிருந்தால், அப்படியே உங்களை உள்ளே அழைத்துப்போக வைத்திருப்பேன்" என்றார்.

இதை நீங்க அப்பவே சொல்லி இருக்கணும்!

அவருக்கு பேசவேண்டும் என்று எனக்கு எப்படித் தெரியும்?

சென்னை வந்தததும் உடனே புக் செய்து மறுபடி சென்றுவிடவேண்டும் என்று பேசிக்கொண்டிருந்தார்கள் - நானும்தான்!  ஆனால் செல்லவில்லை.

இன்னொரு உறவு சிறப்பு தரிசனத்தில் உடனே ஏற்பாடு செய்கிறேன் என்றது.

அங்கேயே இலவச தரிசனத்தில் உள்ளே செல்லலாம், வண்டியில் வந்தவர்கள் வேண்டுமானால் நமக்காகக் காத்திருக்காமல் செல்லட்டும், நாம் தனியே வண்டி பிடித்து சென்னை சென்று விடலாம் என்றான் மகன்.  கையில் இருந்தது இருநூறு ரூபாய் பணம்!  சரிப்படவில்லை, செல்லவில்லை.

இதுதான் நான் திருப்பதி சென்றுவந்த கதை.

திருப்பதி சென்றுவந்தால் திருப்பம் வரும்பாங்களே...   இது பெரிய திருப்பமா இருக்கு!

பெருமாள் தரிசனத்துக்காக என்று செல்லாமல், கல்யாணத்துக்கு அல்லது வேறுவேலையாய்ப் போய் அப்படியே பெருமாளை தரிசிக்கலாம் என்று சென்றால் பெருமாள் தரிசனம் கொடுக்க மாட்டாராம்.  இன்னும் சிலர் சொன்ன வெர்ஷன் இது!

அக்டோபரிலேயே தரிசனத்துக்கு ஆன்லைனில் புக் செய்து விட்டோம்.  அவர்கள் பட்டியலில் எங்கள் பெயர் இருக்கிறது.  ஆதார் நம்பர் வைத்து தேட முடியா விட்டால் கூட எங்கள் குழுவினர் பெயர்களுடன் தேடியிருந்தாலே கிடைத்திருக்கும்.  எங்களிடம் ஆதார் கார்டும் இருந்தது.  கடைசி நிமிடத்தில் கவனித்து வேஷ்டியும் வாங்கி விட்டோம்.  ப்ரிண்டவுட் இல்லாத ஒரே காரணத்தினால் எங்களால் தரிசனம் செய்ய முடியாமல் போனது.  திருப்பதி போய் பெருமாள் தரிசனம் செய்யாமல் வருவார்களா என்றால், ஆம், நாங்கள் இருக்கிறோம் உதாரணத்துக்கு!  

ஆனால் வந்தபிறகு எங்கள் அனுபவத்தை ஷேர் செய்தபோது வெவ்வேறு காரணங்களுக்காக சிலபல பேர்களுக்கு இதேபோல தரிசனம் செய்ய முடியாமல் திரும்பியும் இருக்கிறார்கள் என்று தெரிந்தது.  அல்ப திருப்தி!

முதலிலேயே நாங்கள் நினைவாய் ப்ரிண்டவுட் எடுத்து வைத்திருந்திருக்கலாம்.  இல்லையானால் அழைத்துச் சென்ற அவர்களாவது 'நினைவாய் இப்படி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்' என்று சொல்லியிருக்கலாம்.  மறுநாள் எப்படி, இதில் கிளம்பப் போகிறோம் என்றே சொல்லாதவர்களை இப்படிச் சொல்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.  ஒரே வண்டியில் அவர்கள் ஆட்கள் யாராவது வந்திருந்தால் பேசியிருக்கலாம்.  அதுவும் இல்லை.  நடுவில் திருமண நிகழ்வுகளின் போதோ, அல்லது திருமண நிகழ்வு முடிந்து அறைக்குத் திரும்புபோதாவது ப்ரிண்டவுட்டை வெளியில் வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லியுருந்தால் கூட சுதாரித்திருக்கலாம்.  பெருமாள் ஏதாவது அற்புதம் செய்து எங்களை உள்ளே அழைத்திருக்கலாம்.  



எப்படியோ, நான்கைந்து பதிவுகள் எழுத உதவினார் பெருமாள். கதை முடிந்தது, கத்தரிக்காய் காய்த்தது!

=============================================================================================================


இந்த வருடம் (எனக்குத் தெரிந்து) இரண்டு பிரபலங்களுக்கு நூற்றாண்டு விழா.  

எம் என் நம்பியார், மதுரை சோமு. 

1935 இலிருந்து திரைப்படத்தில் நடிக்க வந்தவர் எம் என் நம்பியார். திரைபபடத்தில்தான் வில்லன்.  நிஜத்தில் ரொம்ப நல்லவர்.  பழுத்த ஆன்மீகவாதி.  கோபமே வராதவர்.  பிஸ்கட் கூடச் சாப்பிடாத அளவுக்கு நூறு சதவிகித சைவர்.



நம்பியார் பற்றி கடந்த வெள்ளிக்கிழமை பதிப்பில் ஹிந்து தனி அனுபந்தமே போட்டிருக்கிறது.  சில சம்பவங்களைத் தனியாகவும், நம்பியார் நூறு என்று 100 சுவாரஸ்யமான விஷயங்களையும் கொடுத்திருக்கிறது.

வரும் பத்தாம் தேதி சென்னையில் தனது தாத்தா எம் என் நம்பியார்  பற்றி அவரது பேரன் எழுதி இருக்கும் புத்தகம் வெளியிடப்படுகிறதாம்.



மதுரை சோமு அவர்களின் அப்பா கலெக்டர் ஆபீசில் ஹெட் கிளார்க்.  அம்மா நாட்டியக்கலைஞர்.  சித்தூர் சுப்ரமணியப்பிள்ளையின் முக்கியச் சீடரான மதுரை சோமுவின் பாணிக்கும், குரலுக்கும் நிறைய ரசிகர்கள் உண்டு.  கேஜிக்களின் அம்மா, என் பாட்டிக்கு மிகவும் பிடித்த பாடகர். 

மதுரை சோமுவின் இந்தப் பாடல் எனக்கு ரொம்பப்பிடிக்கும்.


==============================================================================================

சமீபத்தில் படித்த செய்தி ஒன்று...   அதிரா ரசிக்கக் கூடும்!





212 கருத்துகள்:

  1. வணக்கம்! பூஸார் நிறைய சொல்லியிருக்கிறார்...போல கடைசிப் படம் வேதனையாக இருக்கிறது..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா... படித்துப் பாருங்கள்!

      நீக்கு
    2. பூனை காப்பாற்றப்பட்டது மனதிற்கு நிம்மதியாக இருக்கிறது. முதலில் வேதனையாக இருந்தது அப்புறம் இச்செய்தியை ரசித்தேன் ஸ்ரீராம்.

      //திரைபபடத்தில்தான் வில்லன். நிஜத்தில் ரொம்ப நல்லவர். பழுத்த ஆன்மீகவாதி. கோபமே வராதவர். பிஸ்கட் கூடச் சாப்பிடாத அளவுக்கு நூறு சதவிகித சைவர்.//

      இச்செய்தி முன்பு எதிலோ வாசித்த நினைவு.

      சுட்டியைச் வாசிக்கிறேன் அப்புறம்.

      மதுரை சோமு பற்றிய தகவல்கல் புதியது. எனக்கும் சோமு அவர்களின் பாட்டுகள் பிடிக்கும். உச்சரிப்பு நன்றாக இருக்கும். நீங்கள் கொடுத்திருக்கும் பாடலை அப்புறம் கேட்கிறேன்..

      கீதா

      நீக்கு
    3. ஆஆஆவ்வ்வ்வ் சே சே நைட் முழிப்பிருந்து ஜம்ப நினைச்சு அப்படியே நித்திரையாகிட்டனே.... :)...

      நீக்கு
  2. இதைத் தான் அவன் அழைத்தால் தான் கிடைக்கும் எனச் சொல்வார்களோ! தெரியலை. ஆனால் எங்க மைத்துனர் திருமணம் கீழத்திருப்பதியில் நடந்தப்போ அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் நாங்கள் இருவருமே தனியாகச் செய்ததால் எங்களால் மேலே மலைக்குப் போக முடியாது என நாங்கள் முன்னேற்பாடாகத்தரிசனச் சீட்டு வாங்கிக்கலை. அதுக்கூ அப்புறமாப் போயிட்டு வந்தோம். கல்யாணத்திற்கு வந்த அனைவரும் போயிட்டு வந்தாங்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது வித்தியாசமான அனுபவம்! நீங்களே சீட்டு வாங்கவில்லை. ஆனால் நாங்கள் வாங்கியும்.....

      நீக்கு
  3. //வரும் பத்தாம் தேதி சென்னையில் தனது தாத்தாவைப் பற்றி எழுதி இருக்கும் புத்தகம் வெளியிடப்படுகிறதாம்.// இது எந்தத் தாத்தாவை பற்றி யாரோட பேரன் சொன்னது? மேலே நம்பியாரும் இருக்கார். கீழே சோமுவும்.

    பதிலளிநீக்கு
  4. எல்லாப்பூசார்களும் நல்லாவே ஜிந்திச்சிருக்காங்க! கடைசியில் தான் சோகம். வெறும் லட்டு போதுமா என்ன? ஆனால் திருச்சானூர் லட்டுக்களுக்கும் மேலே திருமலையில் கொடுக்கும்லட்டுக்களுக்கும் எக்கச்சக்க வித்தியாசங்கள், ருசி உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். திருச்சானூர் லட்டு அளவில் பெரிதாகவும், இளக்கமாகவுமிருந்தது.

      நீக்கு
  5. இன்று எம் என் நம்பியார் பிறந்த தினம் என்கிறது சினிமா தளம் ஒன்று!

    பதிலளிநீக்கு
  6. அடடா..... திருப்பதி வரை சென்று, முன்பதிவு செய்திருந்தும் பெருமாள் தரிசனம் கிடைக்காமல் போனதே.... சில சமயத்தில் இப்படித்தான் நடக்கும்.

    அவன் அழைப்பின்றி தரிசனம் கிடைக்காது என்று சொல்வது உண்டே. வைஷ்ணவி தேவி கோவில் தரிசனமும் இப்படித்தான். அவள் அழைப்பின்றி தரிசனம் கிட்டாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் வெங்கட். நிறைய நண்பர்கள், உறவுகள் இப்படிதான் சொன்னார்கள்.

      நீக்கு
  7. இனிய காலைக்கான வணக்கம் ஸ்ரீராம். நானும் ஒரு தடவை
    திருப்பதி கோவில் வாசல் வரை போய் திரும்பி வந்திருக்கிறேன். கவலை வேண்டாம்
    மீண்டும் செல்வீர்கள்.
    வயதானவர்களுக்குத் தனியாகத் தரிசனம் கொடுப்பார் பெருமாள்.
    நம்பியார் பற்றி இன்னோரு பதிவிலும் படித்தேன்.
    சோமு அவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். ஓராமா நீ நாமம்
    உருக்கும் ஆளாய்.
    உங்கள் பாடலைக் கேட்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //வயதானவர்களுக்குத் தனியாகத் தரிசனம் கொடுப்பார் பெருமாள்./// haahaahaahaa hihihihihihவவல்லி, இந்தச் சாக்கிலே ஶ்ரீராமை வயதானவர்னு சொன்னதுக்கு நன்னி ஹை! விவிசி, விவிசி, விவிசி

      நீக்கு
    2. இனிய காலை வணக்கம் வல்லிம்மா...

      உங்கள் முகநூல் எச்சரிக்கை (தளத்தில் புகைப்படங்கள் வெளியிடுவது பற்றி) கண்டு நானே உங்களிடம் வாட்ஸாப்பில் விவரம் கேட்க நினைத்தேன்.

      நீங்களும் தரிசனம் செய்ய முடியாமல் திரும்பி இருக்கிறீர்களா? அட!

      வயதானவர்களுக்கு குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் சிறப்பு தரிசனத்துக்கு வழி உண்டு. உடன் ஒருவர் செல்லலாம். அறிந்திருந்தேன்.

      வாழ்த்துக்கு நன்றி அம்மா.

      நீக்கு
    3. ஒரு வேளைக்கு 700 பேர்கள் சீனியர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கேடகரியில் செல்லலாம். சில நாட்கள் இரு தடவையாகவும், 11, 4 என்று ஞாபகம், சில நாட்களில் ஒரு முறையும். வருடத்திற்கு ஒரு முறையா தரிசனம் என்பது நிச்சயமா தெரியலை. சீனியர் என்பது 64 வயது. இதில் கண் தெரியாதவர்களுக்கு உடன் ஒருவர் செல்லலாம். நான் சென்றமுறை (கோவிலின் வெளியில் 2 மணி நேரம் காத்திருந்தகோது) நிறைய, கிட்டத்தட்ட நூறு பார்வையில்லாதவர்கள் தரிசனத்துக்குச் செல்வதைப் பார்த்துள்ளேன்.

      நீக்கு
    4. திருச்சானூரில் லட்டு 10 ரூபாய்க்கு தேவையான அளவு கிடைக்கும். அனேகமா எப்போதும். திருப்பதியில் 8-11 வரை கோவிலின் வலது புறம் லட்டு கவுன்டர் போகும் வழியில் ஒரு காம்ப்ளக்ஸில் ஒரு லட்டு 50 ரூ வீதம் 10 லட்டு வரை ஒருவர் டோக்கன் வாங்கிக்கொள்ளலாம்.

      நீக்கு
    5. //...நிறைய, கிட்டத்தட்ட நூறு பார்வையில்லாதவர்கள் தரிசனத்துக்குச் செல்வதைப் பார்த்துள்ளேன்.//

      நீங்கள் பார்த்திருந்தால்தான் என்ன! அதையெல்லாமா எழுதுவது? யாராவது பகுத்தறிவுப் பாசறைகளின் கண்ணில் இது பட்டால்?

      நீக்கு
    6. ஓ லட்டுக் கதை இங்கு தனியா ஓடுதோ ஹா ஹா ஹா:)..

      நீக்கு
    7. அன்பு ஸ்ரீராம், என் மூன்றாவது பயணத்தில் அது போல் ஆனது. திடீரென்று வயிற்றுக் கோளாறு.
      நான் காட்டேஜில் இருக்க மற்றவர்கள் சென்று வந்தார்கள்.அதற்கப்புறம் தடையே இல்லை. வருடத்திற்கு இரு முறை செல்ல முடிந்தது.
      @ கீதாமா ஹாஹா. நான் அவருடைய மாமியாருக்காகச் சொன்னேன்.

      நீக்கு
    8. மீள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வல்லிம்மா.

      நீக்கு
  8. //'அந்தப் பெரியம்மா எங்கே? என்று கேட்டார். ஏனெனில் முதல்நாள் அவரை திருச்சானூரிலேயே தொலைத்து விட்டுத் தேடி இருந்தோம். அந்த பயம் அவருக்கு! அது நான் சொல்ல மறந்த சம்பவம்.//

    உங்களுக்கும் இப்படி அனுபவம் ஏற்பட்டு இருக்கா?
    என் வேண்டுதலை இனி தள்ளி போட முடியாது என்று நானும் என் மகனும் மட்டும்
    (மகனை தூக்கி கொண்டு திருப்பதி வருவதாய் பிரார்த்தனை , அவன் ஏழாவது படிக்கும் போதுதான் பெருமாள் கூப்பிட்டார்) பக்கத்து வீட்டினரை நம்பி திருப்பதி சுற்றுலாபஸ்ஸில் பதிவு செய்து போன போது பட்ட இன்னல்கள்! பக்கத்து வீட்டு நண்பரின் அம்மா காணாமல் போய் விட்டார்கள். அவர்களை தேடி கண்டு பிடித்தோம்.

    மகனை பெருமாள் சன்னதியில் பக்கத்து வீட்டு நண்பருடன் தூக்கி இறக்கினேன். ஏழாவது படிக்கும் மகனை தூக்க முடியுமா?
    பெருமாள் நிறைய பதிவு எழுத அருள்புரிந்தார் உங்களை, என்னையும் சொல்லவைத்தார் இங்கு.
    உங்கள் மாமியாரின் ஆசை பெருமாளை சேவிக்க, அது முடியவில்லை என்பது வருத்தம் தான். இன்னொரு முறை அழைத்து சென்று விடுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அக்கா...

      சேர்ந்து வராமல் நடுவில் எங்கேயோ தங்கி நின்று விட்டு, அவர்கள் பாட்டுக்கு நல்லவேளையாய் வண்டியிருக்குமிடம் வந்து விட்டார்கள். நாங்களும் ஒரு யூகத்தில் அங்கே வந்தால் எங்களைத் தேடி பாஸ் சென்றிருப்பதாக ஓட்டுநர் தெரிவித்தார். அப்போதும் போன் எடுக்காமல் சென்றிருந்தார் பாஸ். கொஞ்ச தூரத்துக்கு ஒருவராய் நான், என் மகன்கள் நின்று கொஞ்சம் கொஞ்சமாய் முன்னேறி பாஸைக் கண்டுபிடித்து அழைத்து வந்தோம்.

      காலை முதல் சாப்பிடவில்லையே, அங்கே ஏதாவது கிடைக்குமா என்று பார்த்தால் .... ஊ...ஹூம்!

      நீக்கு
    2. அன்பு கோமதி என்னுடைய வேண்டுதல் அங்கப் பிரதக்ஷ்ணம்.
      நிறைவேறாவிட்டால் என்ன செய்வது என்று அவனிடமே விட்டு விட்டேன்.

      நீக்கு
    3. அங்கபிரதட்சணம் சீட்டு வாங்கினால் தரிசனம் எளிதாம். என் அலுவலகத்தில் ஒருவர் மாதத்துக்கு ஒருமுறை இருமுறை சென்று வருகிறார். இதோ... இன்றும் திருப்பதி சென்றுள்ளார். நாளை மறுநாள் லட்டுடன் வருவார். பெருமாளைப் பார்க்க முடியவில்லையே தவிர, லட்டு கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது!

      நீக்கு
  9. வயதானவர்களுக்கு சிறப்பு தரினம் வரிசையில் நிற்காமல் என்று கேள்வி பட்டேன், அவர்களுக்கு உதவியாக ஒருவர் உடன் போகலாம் என்றார்களே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி அரசு, சீனியர் சிடிசன் சலுகையில் நான் போயிட்டு வந்து எழுதி இருக்கேன். சுட்டியைப் பின்னர் தரேன். வயதானவர்கள் பட்டியலில் ஶ்ரீராம் தான் இருக்கார். :)))))) இப்போப் போயிட்டுப் பின்னர் வரேன்.

      நீக்கு
    2. சீனியர் சிடிசன் சலுகையில் போய் வந்த அனுபவ பதிவை ஸ்ரீராம் படிக்கவில்லையா?

      ஸ்ரீராம்தான் வயதானவ்ர் பட்டியலில் இருக்கிறார் என்றால் நீங்கள் ?
      குழந்தைகளுக்கு சிறப்பு சலுகை உண்டா கீதா?

      நீக்கு
    3. வயதானவர்கள் பட்டியலில் ஶ்ரீராம் தான் இருக்கார். :)))))) //

      ஆ ஆ ஆஆ ஆ வயதானவர்கள் பட்டியலில் தீர்க்கதரிசிதானே இருக்கிறார்!! (அவர் கண்ணில் கீதாக்காவின் இந்த வரி படவே கூடாது!!!!!) இது என்ன நியாயம் ஸ்ரீராமை அந்த லிஸ்டில் சேர்த்தது...முருகா!! என்ன கவி பாடினாலும்...........

      கீதா

      நீக்கு
    4. ஸ்ரீராம்தான் வயதானவ்ர் பட்டியலில் இருக்கிறார் என்றால் நீங்கள் ?//

      கோமதிக்கா ஆஹா மறந்துட்டீங்களா...கீதாக்கா கைக்குயந்தை!!!!!!!

      கீதா

      நீக்கு
    5. //கோமதிக்கா ஆஹா மறந்துட்டீங்களா...கீதாக்கா கைக்குயந்தை!!!!!!!//


      கீதா, குழந்தைகளுக்கு சிறப்பு சலுகை உண்டா என்று கேட்டு இருக்கிறேன் .

      நீக்கு
    6. கீதா அக்கா.. வயதானவர் பட்டியலில் நான் இல்லை என்றாலும் அம்மா வயதானவர். அவ்ருக்குச் சலுகையில் தரிசனம் கிடைத்தால் அவருடன் என் இளையவனை அனுப்ப எண்ணி இருந்தோம். அவர் முயற்சிக்கவே வேண்டாம் என்று மறுத்து விட்டார். ஆனால் அந்தச் சலுகையும் கூட குறிப்பிட்ட நேரங்களில்தான்.. எப்போதும் அல்ல!

      நீக்கு
  10. காலை வணக்கம்.... திருப்பதி தரிசனம் கிடைக்காமல் போனது வருத்தமே....இதுக்கா இவ்வளவு கஷ்டப்பட்டீங்க... மறுபடியும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தருவானாயிருக்கும்.

    கீழ்த்திருப்பதி லட்டு பச்சைக் கற்பூரம் ஜாஸ்தி. செய்யும் முறையே வேறு (என் மனைவி, பருப்பை அரைத்து, பொரிக்காமல் செய்வது என்பாள்). மேல் திருப்பதில பூந்தி பொரித்துச் செய்வது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை கீழத் திருப்பதி லட்டு உங்க ஹஸ்பன்ட் சொன்னதே.. ஆமாம் பருப்பை அரைத்துச் செய்வது ...நான் வீட்டில் செய்து பார்த்திருக்கேன். நன்றாகவே வந்தது ப க குறைவாகப் போட்டு. ஒரு சிட்டிகை அளவே...அது நிறையப் போட்டால் அதுதான் டாமினேட் செய்யும். நம்ம வீட்டுல கீழத்திருப்பதி லட்டு ரொம்பப் பிடிக்கும் எல்லோருக்கும். மகனுக்கு ரொம்பவே பிடிக்கும். அதனால் வீட்டில் செய்தேன்..நெய் தான்...அதனாலேயே அவன் இங்கு இல்லாததால் செய்வதில்லை.

      கீதா

      நீக்கு
    2. என்னதான் வீட்டுல செஞ்சாலும் கீ தி லட்டு அது லட்டுதான்...அதன் சுவையே வேறு...

      கீதா

      நீக்கு
    3. வணக்கம் நெல்லை...

      //திருப்பதி தரிசனம் கிடைக்காமல் போனது வருத்தமே....இதுக்கா இவ்வளவு கஷ்டப்பட்டீங்க... மறுபடியும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தருவானாயிருக்கும்.//


      நீங்கள் முன்னாலேயே யூகித்திருப்பீர்கள் என்று நினைத்தேன்!!! ஆம், கீழ்த் திருப்பதி லட்டு வேறுமாதிரிதான் இருந்தது.

      நீக்கு
  11. நம்பியார் வெளியூர் பயணங்களில் மனைவியைத் தன் செலவில் அழைத்துச் செல்லும் வழக்கம் உள்ளவர், மனைவி தரும் உணவைத் தவிர வேறு எதையும் ஷூட்டிங் போது உண்ணாதவர் என்றும் படித்திருக்கிறேன்.

    நல்லவனாய் வாழ்வது வேறு. நல்லவன் என்று பிறர் நினைக்கும்படியா வாழ்வது வேறு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லவனாய் வாழ்வது வேறு. நல்லவன் என்று பிறர் நினைக்கும்படியா வாழ்வது வேறு.//

      சூப்பர் செம பஞ்ச்! நெல்லை! அப்படியே கன்னா பின்னானு வழி மொழிகிறேன்...

      ஆமாம் நம்பியார் அவர் மனைவி சமைத்து மட்டுமே சாப்பிடும் பழக்கம் உடையவர். உணவுப் பழக்க வழக்கம் எல்லாம் ரொம்ப ஸ்டிரிக்ட். தன் உடல் நலத்தை நன்றாகப் பேணியவர். எத்தனை வருடங்கள் என்பது நினைவில்லை ஆனால் தொடர்ந்து பல வருடங்கள் சபரிமலை சென்றவர் குருசாமியாகவும் என்றும் வாசித்திருக்கிறேன்.

      கீதா

      நீக்கு
    2. ஆமாம் நெல்லை, நம்பியாரைப் பற்றி நீங்கள் சொல்லி இருப்பது நிஜம். இந்தத்தகவலும், இன்னும் நிறைய தகவல்களும் படிக்க சுவாரஸ்யமாய் நான் கொடுத்த லிங்க்கில் இருக்கின்றன.

      நீக்கு
  12. சாதாரணமாக வீடுகளில் அப்பாக்கள் கோபமாக இருந்தாலும் அம்மாக்கள் கருணை செய்வார்கள் இல்லையா? "அவர் கிடக்கார்... //வாடா... வந்து ஒரு வாய் அள்ளிப் போட்டுக்கோ" என்பார்கள் இல்லையா?

    அதுபோல, சரியாய் நாங்கள் வராகப்பெருமாள் கோவில் உள்ளே செல்ல முடியாமல் வெளியே வரிசையில் நின்றிருந்தபோது தாயார் வீதி உலா வந்தார்கள்! சுகதரிசனம். அம்மாக்கள் கருணை மயமானவர்கள்.//

    அருமை.

    அம்மாவை தரிசனம் செய்து விட்டீர்கள் அல்லவா ! அப்புறம் வேறு என்ன வேண்டும் ?
    இனி அடுத்த முறை உங்களை கஷ்டபடாமல் பெருமளை தரிசனம் செய்ய பெருமாளிடம் சிபாரிசு செய்து விடுவார்.
    கருணை மிகுந்த தாய்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இனி அடுத்த முறை உங்களை கஷ்டபடாமல் பெருமளை தரிசனம் செய்ய பெருமாளிடம் சிபாரிசு செய்து விடுவார். கருணை மிகுந்த தாய்.//

      நம்புகிறேன் அக்கா.

      நீக்கு
  13. உங்கள் திருப்பதி அனுபவ பகிர்வுக்கு பூசார்கள் சொல்வது அருமை. அதிரா ரசிப்பார்.
    நம்பியார், சோமு பற்றி படித்தேன். நம்பியார் நடித்த "திகம்பர சாமியார்" படம் மிக அருமையாக இருக்கும் நிறைய வேடங்களில் வந்து அசத்துவார், அவர்தான் கதாநாயகன்.

    சோமு அவர்களின் பாடல் எனக்கும் பிடிக்கும் அவரும் உருகி பாடி நம்மையும் உருக வைப்பார். மீண்டும் கேட்டு மகிழ்ந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா வந்து ரசிப்பதைப் படிக்கக் காத்திருக்கிறேன் ஆவலுடன் நானும்!

      மதுரை சோமுவின் இன்னும் பல பாடல்கள் எனக்குப் பிடிக்கும்.

      நீக்கு
    2. ஹா ஹா ஹா நித்திரையில் கண் முழிச்சதும்.. பூஸார் படம்.. டமாலெனக் குதிக்கச் சொல்லியது:))

      நீக்கு
  14. பூனை பிழைத்துக் கொண்டது மகிழ்ச்சி காப்பாற்றியவர்களுக்கு நன்றிகள், பாராட்டுக்கள்.
    அதிராவுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் ஆரம்பத்தில் பூஸாருடன் ஆரம்பித்து பூஸாருடன் இனிதாக நிறைவு செய்தமைக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உறைந்த பூனை பற்றிய செய்தி பகிர்ந்தும், கடைசியில் ஒரு பூனை டாட்டா காட்டுவது போல இன்றைய பதிவை நிறைவு செய்ய நினைத்து படங்கள் தேடினால், அழகழகாய் படங்கள்! உடனே அவற்றை எடுத்து மேலே பொருத்தி விட்டேன்!

      நீக்கு
  15. திருப்பதியின் திருப்பம் நன்று.
    எம்.என.நம்பியாரை தனிப்பட்ட வகையில் அவரது குணாதிசயம் எனக்கு பிடித்தமானது.

    இவரும்கூட தமிழ்நாட்டில் வந்துதான் பிரபலமானார்.

    சோமு அண்ணன் பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்தபாடல் முதல்முறையாக கேட்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கில்லர்ஜி. ஆம், இவரும் தமிழ்நாட்டில்தான் பிரபலம். நாராயணன் என்று சொன்னால் யாருக்கும் தெரியாது. நம்பியார் என்றால்தான் தெரியும்!

      நீக்கு
    2. சிவாஜி ராவ் என்றாலும் எல்லோருக்கும் புரியாது ஆரென:))

      நீக்கு
    3. ஸ்ரீராம்.... கேரளாவில் நாயர் என்றொரு இனம் உண்டு (ஜாதி). அதில் நாயர், நம்பியார் போன்ற சப் காஸ்ட் அடங்கும். நம்ம நாராயாணன் நம்பியார் அந்த நாயர் இனத்தைச் சேர்ந்தவர்.

      என்றைக்கேனும் கில்லர்ஜி, 'இந்த நடிகையைப் பிடிக்கும்' என்று சொல்லட்டும். அன்று வைத்துக்கொள்கிறேன் கச்சேரியை. சினிமா உலகில் 'தமிழன்' இதெல்லாம் பார்க்கக்கூடாது, யாரும் பார்த்ததேயில்லை. (தமிழன் தமிழன் என்று வாய் கிழியாமல் பேசுபவர்கள் உள்பட). நடிகைகள் எல்லாமே இறக்குமதிதான்.

      நீக்கு
  16. நம்பியார் அவர்களைப் பற்றி அப்போதே நல்ல விஷயங்கள் சொல்லப்பட்டன.. மக்கள் தான் நம்பவில்லை....

    மருதமலை மாமணியே என்று ஒரே நாளில் மருதாசலத்தைத் திரும்பிப் பார்க்க வைத்தவர் ஐயா சோமு அவர்கள்...

    வித்தகர் இருவரையும் நினைவு கூர்ந்ததில் மகிழ்ச்சி....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மக்கள் நம்பவில்லையா? சினிமாவை, பொய்யைதான் நம்பினரோ!

      "கோ.....டி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை?" என்று அவர் எடுக்கும் உயரமே தனி!

      நீக்கு
    2. வாவ்வ்வ்வ்வ் மருதமலை மாணியே.. ரொம்ப ரொம்ப *896754367289 தடவைக்கு மேல் பிடிக்கும்... சின்ன வயசிலேயே பாடுவேன்.. அப்போது... முருகா!! என ஒரு இடத்தில் பட்டென நிறுத்துவார் எல்லோ.. மீயும் அப்படியே பாடிவிட்டு நிறுத்துவேன்ன்:)) ஹா ஹா ஹா..

      நீக்கு
    3. தேவரின் 'தெய்வம்' படத்தில் வந்த பாடல். அந்தப் படத்தில் அறுபடை வீடுகளையும் காண்பிப்பார்கள். ஒவ்வொரு படைவீட்டிலும் அருமையான பாடலை எடுத்திருப்பார்கள். பெங்களூர் ரமணியம்மா, சூலமங்கலம், பித்துக்குளி போன்றவர்கள் பாடிய பாடல்கள்.

      நீக்கு
  17. 'அன்பாக'ச் சொன்னார், "வாய் இருக்கு இல்லே? கேட்டுப்பாருங்க" //

    ஹா ஹா ஹா ஹா ஹா…..துன்பம் வரும் வேளையிலே சிரிங்க!!!
    "படிச்சவங்கதானே நீங்க?"//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்….ஐ அப்ஜெக்ட் இது மாதிரி நிறையப் பேர் கேட்பதை…
    இது ஒரு அனுபவம் அவ்வளவே இதிலிருந்து நாம் கற்பதுதான் படிப்பு!!!

    //ராணுவ அணிவகுப்பில் செல்லும் வி ஐ பி போல வண்டியில் அமர்ந்து எங்கள் தனலக்ஷ்மி டிராவல்ஸைத் தேடினோம்.//

    ஹா ஹா ஹா ஹா ஹா இதை வாசித்ததும் சிரிப்பு தாங்கலை விஷுவலைஸ் வேற பண்ணிப் பார்த்தேன்!! ஹா ஹா..
    அச்சச்சோ நு சொல்லற பூஸார் நம்ம பூனாச்சுவோ? இல்லை அவர் உடன்பிறப்போ?!!!! முதல் இரண்டும் இணையம்னு தெரியுது….

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதில் இடம் பெற்றிருக்கும் பூனைகள் எல்லாமே இணையத்திலிருந்துதான் கீதா... கோமதி அக்காவுக்கு சொல்லியிருக்கும் பதிலில் விளக்கம் கொடுத்திருக்கேன் பாருங்க!

      நீக்கு
  18. ஸ்ரீராம் சோமுவின் ஃபேமஸ் பாட்டு இது அவரே எழுதிய பாடலும் கூட!!

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்...நீலமணி ராகம். அருமையான ராகம்...நலம்தானா நலம்தானா பாடல் இந்த ராகம் என்றுதான் தோன்றுகிறது...

    ..என் மாமாவின் கலெக்ஷனில் இருந்தது. சோமு அவர்களின் பாடல்கள்..ஊரில் இருக்கும் போதே கேட்ட பாடல்...அதில் வரிகள் செமையா இருக்கும்...

    அன்னையும் (பார்வதி) அறியவில்லை...தந்தையும் (சிவன்) நினைப்பதில்லை...மாமியும் பார்ப்பதில்லை --லக்ஷ்மி மாமியும் பார்ப்பதில்லை...மாமனும் (விஷ்ணுவும்) கேட்பதில்லை...அட்சரலட்சம் தந்த போஜராஜன் இல்லை (போஜராஜன் பற்றி ஒரு கதை உண்டு.)...யாருமே கண்டுக்கலை நு அவர் வரிகளை நான் ரசித்து சிரித்து இந்தப் பாட்டைக் கற்றுக் கொண்டேன்...ஏகலைவியாக!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதற்காக ‘ஏகலைவி கீதா’ என்று ஆரம்பித்துவிடாதீர்கள்! ஒரு ’தீர்க்கஅரிசி’யை சமாளிப்பதே.. !

      நீக்கு
    2. ஓ... நலம்தானா பாடலும் நீலமணி ராக பேஸா? இருங்கள் பாடிப்பார்க்கிறேன்... (நலம்தானா.. நலம்தானா...)

      நீக்கு
    3. //’தீர்க்கஅரிசி’யை///

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. அது அரிசி இல்லைஈஈஈஈஈஈஈ தரிசியாக்கும் கர்ர்ர்ர்:)) விடுங்கோ மீ காசிக்குப் போறேன்ன்ன்ன்ன்ன்ன்:)))..

      நீக்கு
    4. கீதா ரங்கன் - இது கண்ணதாசன் எழுதிய பாடல் என்று ஞாபகம். (மருதமலை மாமணியே). குன்னக்குடி இசை.

      மருதமலை மாமணியே பாடல் தர்பாரி கானடா என்று எங்கோ வாசித்த ஞாபகம் இருக்கே

      நீக்கு
  19. இந்த நூறு ரூபாயை உண்டியலில்போட்டு விடுங்கள்" என்று சொல்லி நூறு ரூபாயைக் கையில் கொடுத்து விட்டுப் போய்விட்டார்.//

    ஒரு மணி நேரத்துக்குள்ள போட்டுட்டீங்கதானே!!!!!!!!!!!!! ஹா ஹா ஹா ஹா புரிந்ததுதானே ஸ்ரீராம்!!!
    ஸ்ரீராம் இப்படிச் சிலர் நாம் வரிசையில் நிற்கும் போது கொடுபப்துண்டு. எனக்கும் அப்ப்டியான ஒரு அனுபவம் உண்டு. ஆனால் எனக்கு என்னன்னா ஹையோ அதை மறக்காமல் உண்டியலில் போடனுமேனு அதே நினைவில் கவலையாவே இருக்கும்.
    //சாதாரணமாக வீடுகளில் அப்பாக்கள் கோபமாக இருந்தாலும் அம்மாக்கள் கருணை செய்வார்கள் இல்லையா? "அவர் கிடக்கார்... வாடா... வந்து ஒரு வாய் அள்ளிப் போட்டுக்கோ" என்பார்கள் இல்லையா? அதுபோல, வரிசையில் நின்றிருந்தபோது தாயார் வீதி உலா வந்தார்கள்! சுகதரிசனம். அம்மாக்கள் கருணை மயமானவர்கள்.//


    ரசித்த வரிகள்…

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா... ஹா... ஹா....

      உங்களிடம் நூறு ரூபாயைக் கொடுத்து, அதை ஒரு மணி நேரத்திற்குள் முழுவதும் செலவழிக்கவேண்டும் என்று சொன்னால், என்ன செய்வீர்கள்? என்று அவர் கேட்கவில்லையே... உண்டியலில்தானே போடச் சொன்னார்....!

      நீக்கு
  20. "எங்கேயும் நிற்கலை... சரசரவென நகர்ந்து நகர்ந்து சென்று தரிசனம் செய்தோம்"//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நு தோனிருக்குமே!!!! ஹா ஹா ஹா ஹா

    அவருக்கு பேசவேண்டும் என்று எனக்கு எப்படித் தெரியும்?//

    அதானே!!!
    பூஸாரின் கமென்ட்ஸ் எல்லாமே ரசித்தேன்
    தரிசனம் கிடைக்கலை…பரவால்ல…..வேறு வாய்ப்பு கிடைக்கும்….நீங்க சொல்லியிருக்கறது எதுவேனாலும் நடந்திருக்கலாம்….பரவால்லா ஒரு பதிவாச்சும் தேத்த முடிஞ்சுச்சே……

    கத்தரிக்காயும் காய்ச்சுருச்சே!! சரி அப்ப திங்க பதிவு ஒன்னும் தேத்திருங்க!! ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நு தோனிருக்குமே!!!! ஹா ஹா ஹா ஹா //

      அதுதான் பெரிய பூனாச்சு "போனாப்போகுது"ன்னு ஆறுதல் சொல்லுது!!

      நீக்கு
  21. மதுரை சோமுவின் பாட்டு காலை வேளையில் இதமாய் இருந்தது. தனியாக இருக்கையில், இன்னும் சில கேட்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஏகாந்தன் ஸார். ஏகாந்தமாய்க் கேளுங்கள். ஏராளமாய்க் கேளுங்கள்!

      நீக்கு
  22. எங்க ஊர்க்காரர் எங்காவது கோவிலுக்கு போனால் ஆஞ்சினேயரை கும்பிடப்போறேன், வினாயகரை கும்பிடப்போறேன்னுலாம் சொல்லமாட்டார். என்னை ஆஞ்சிநேயருக்கு பார்க்கனும்போல இருக்கு, வரச்சொல்லி இருக்கார், முடிஞ்சா பார்க்கலாம்ன்னு ஆஞ்சி சொல்லி இருக்கார்ன்னுதான் சொல்வார். ஏன் இப்படி சொல்றீங்கன்னு கேட்டா, என்னதான் முட்டி மோதினாலும் இறைவன் மனது வைத்தால் மட்டுமே அவரை தரிசிக்க முடியும்ன்னு சொல்வாங்க. அவர் மனசு வைக்காம கோவில் கருவறை வாசல்வரை போயிட்டு கடவுளை தரிசிக்க முடியாமயும் போகலாம்ன்னு சொல்வார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், ஆமாம், அப்படிதான் சொல்வாங்க சகோதரி ராஜி... இப்பவும் அப்படிதான் சொன்னாங்க!

      நீக்கு
    2. ராஜி எழுதினதைப் படிக்கும்போது, எனக்கு சில மாதங்கள் முன்பு புஷ்கரத்துக்கு நெல்லை சென்றிருந்தது நினைவுக்கு வந்தது. அன்று நவ திருப்பதியில் முதல் கோவில் திருவைகுண்டம் போறோம். கூட்டமான கூட்டம். தரிசனத்துக்கு 2-3 மணி நேரம் ஆகும்னு தோன்றியது. அப்புறம் எப்படி நவ திருப்பதில மற்றத் தலங்களுக்கும் போவது? ரொம்ப வருத்தம் மூலவர் தரிசனம் கிடைக்கலையே என்று. வெளியில் வந்தோம்... அப்புறம் இறைவன் வழி காட்டினான். அவ்வளவு அளவிலாத கூட்டத்திலும் 6 நவ திருப்பதிகளை தரிசனம் செய்தோம், கூட்டத்துக்குள் புகாமல் வேறு வழியில்... இறைவனின் கருணை மனதில் வந்து போனது.

      நீக்கு
    3. ​"கிடைக்கறது கிடைக்காம இருக்காது, கிடைக்காதது கிடைக்காது" என்று அஞ்சுவின் சித்தப்பா வசனம் ஒன்று உண்டு நெல்லை!

      நீக்கு
  23. திருப்பதிக்கு சென்றும் பெருமாளை சேவிக்க முடியவில்லையா? அடடா!
    தி.சா.ராஜு என்று ஒரு எழுத்தாளர் இருந்தார். உங்களுக்கு தெரிந்திருக்கும். திருவையாறை சேர்ந்தவர். பட்டாளத்தில் பணியாற்றியவர். அவருடைய படைப்புகள் சாவி ஆசிரியராக
    இருந்த பொழுது தினமணிகதிரில் வரும். அவருக்கு காசு கொடுத்து டிக்கெட் வாங்கி கடவுளை தரிசிப்பதில் உடன்பாடு இல்லையென்பதால் திருப்பதி சென்றாலும், உள்ளே சென்று பெருமாளை தரிசிக்க மாட்டாராம்.
    பூனை படங்களும், கேப்ஷன்களும் பிரமாதம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருப்பமும் நேரவில்லை, விருப்பமும் கூடவில்லை பானு அக்கா!

      // தி.சா.ராஜு என்று ஒரு எழுத்தாளர் இருந்தார். உங்களுக்கு தெரிந்திருக்கும்.//

      கிர்ர்ர்ர்ர்ர்... இவரைப்பற்றி கடந்த ஜூலைக்குப்பின் இரண்டு மூன்று பதிவுகள் போட்டிருக்கிறேன்!

      நீக்கு
    2. //பூனை படங்களும், கேப்ஷன்களும் பிரமாதம்!//

      நன்றி.

      நீக்கு
    3. தி.சா.ராஜு பற்றி எழுதிய பதிவுகளின் சுட்டி கொடுங்க ஶ்ரீராம். "கால்காவுக்குச் செல்லும் கடைசி ரயில்" "திருமல்கிரி போஸ்ட் ஆஃபீஸ்" இரண்டும் படிச்சிருக்கீங்களா?

      நீக்கு
    4. 1) http://engalblog.blogspot.com/2018/10/blog-post_11.html

      2) http://engalblog.blogspot.com/2018/10/blog-post_18.html

      3) http://engalblog.blogspot.com/2018/10/blog-post_25.html

      நீக்கு
    5. நீங்கள் சொல்லும் இரண்டும் படித்த நினைவில்லை அக்கா... ஆனால் அந்தச் சிறுகதைத் தொகுப்பில் ஒரு ரயில் கதை இருந்தது. தலைப்பைப் பார்க்கவேண்டும்.

      நீக்கு
    6. krrrrrrrrrrr! நீங்க கொடுத்த சுட்டிகளில் காணப்படுபவர் சுப்ரமண்ய ராஜூ. பாலகுமாரனின் நண்பர். அகால மரணம் அடைந்தவர்.நானும், பானுமதியும் சொல்பவர் வேறே! தி.சா.ராஜூ. ராணுவ அதிகாரி!கடைசியாக கர்னலாகவோ என்னமோ இருந்து பணி ஓய்வு பெற்றவர்.ஓய்வு பெற்ற பின்னர் ஒரு முறை தற்செயலாக ரயில் பயணத்தில் சந்தித்தோம். ஆனால் சரியாகப் பேச முடியவில்லை. இப்போ இருக்காராஎன்னனு தெரியலை. என் சித்தப்பாவின் நெருங்கிய நண்பர். கணையாழி பத்திரிகையில் சித்தப்பா இருந்தப்போ இவருக்கும் கணையாழி டெஸ்பாட்ச் செய்திருக்கேன்.

      நீக்கு
    7. தில்லைஸ்தானம் அவர் ஊர்!

      நீக்கு
    8. ஆஹா... ஆமாம், ஆமாம்.. கன்பியூஸ் ஆயிட்டேன்... மன்னிச்சுக்கோங்க...

      நீக்கு
    9. http://old.thinnai.com/?p=60310301 ராணுவ வாழ்க்கையைப்பற்றி ஏராளமான கதைகளைப் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதியவர் தி.சா.ராஜூ. மொழிபெயர்ப்புக்காக சாகித்திய அகாதெமி விருதைப் பெற்றவர். அமுத நிலையம் 1964 ஆம் ஆண்டில் வெளியிட்ட ‘பட்டாளக்காரன் ‘ என்னும் தலைப்பிலேயே ஒரு சிறுகதைத் தொகுதியை வெளியிட்டது.
      தி.சா. ராஜு! ராணுவத்தில் பணிபுரிந்தவர்! சாகித்ய அகடமிக்காக, ஒரு பஞ்சாபி நாவலை மொழிபெயர்த்திருக்கிறார். ஒரு காந்தீயவாதி! மனிதமனங்களின் நுட்பமான உணர்வுகளை எழுத்தில் கொண்டுவந்தவர்.


      நீக்கு
    10. பார்க்கிறேன் அக்கா. என்னிடமே தி சா ராஜு புத்தகம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். முதலில் விளைவித்த குழப்பத்துக்கு மன்னித்துக்கொள்ளுங்கள்.

      நீக்கு
  24. நம்பியாருக்கும், மதுரை சோமுவுக்கும் இந்த வருடம் நூற்றாண்டு வருடமா? நம்பியார் வில்லனாக நடித்ததை விட, பின்னாளில் குணச்சித்திர வேடங்களில் நடித்தது பிடித்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் தமிழ் ஹிந்து, விகடன் உபயத்தில்தான் இவை தெரிந்தது. எனக்கு வில்லனையும் பிடிக்கும்!

      நீக்கு
  25. என்னை கர்னாடக இசை பக்கம் இழுத்தது மதுரை மணி ஐயர் பாட்டு. பின்னர் அதிகம் பிடித்தது மதுரை ஷண்முகவடிவு சுப்புலக்ஷ்மியின் பாடலும், மதுரை சோமுவின் பாடலும். சோமு அவர்களின் கற்பனை வளமும்,வீச்சும் பிரமிக்க வைக்கும்.

    இசை உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க அதிகம் சிரமப்பட்டவர் சோமு அவர்கள். சற்று கம்மிய குரல் கொண்ட, பிறப்பால் இசை வேளாளராக இருந்த இவர் நாதஸ்வரத்தை தேர்ந்தெடுக்காமல் வாய்ப்பாட்டை தேர்ந்தெடுத்த பொழுது, இசையுலகம் இவரை ஆதரிக்கவில்லை. பக்கவாத்தியக்காரர்கள் இவருக்கு பக்கவாத்தியம் வாசிக்க ஒப்புக்கொள்ள மாட்டார்களாம். ஆகவே, ஊர்,பேர் தெரியாத இளம் பக்கவாத்தியக்காரர்களை வைத்துக் கொண்டு கச்சேரி பண்ணுவாராம். ரசிகர்களின் ஆதரவால் இவர் வளர்ந்ததும், முன்னால் மறுத்தவர்கள் இவருக்கு பக்கவாத்தியம் வாசிக்க ஒப்புக்கொண்டனராம்.



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதுரை மணியையும், எம் எஸ் அம்மாவையும் பிடிக்காதவர்கள் யார்?

      //இசை உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க அதிகம் சிரமப்பட்டவர் சோமு அவர்கள்.//

      சித்தூர், ஜி என் பி ஆகியோரிடம் சில குறிப்பிட்ட ராகங்களை பாடச்ச்சொல்லிக்கே கேட்பாராம்.

      "அப்படிக்கேட்கும் ராகத்தை நம் பாணியில் கற்பனாஸ்வரம் அமைத்து பாடினால் சிறப்பு. முடியவில்லையா, அப்படியே பாடி விடலாம்" என்று விகடன் (1970) பேட்டியில் சொல்லி இருக்கிறாராம்.

      நீக்கு
  26. பூனை தப்பித்தது மனதிற்கு இதம்...

    திருப்பதி அனுபவம் திருப்தி இல்லாதது வருத்தம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி DD. கிடைப்பதுதான் கிடைக்கும்!

      நீக்கு
    2. //கிடைப்பதுதான் கிடைக்கும்!//
      ஆமா ஆமா மீயும் அப்பூடித்தான் அந்த வைர அட்டியல் மற்றரை நினைச்சு மனதைத்தேற்றிற்றேன்:)) ஹா ஹா ஹா:)..

      நீக்கு
  27. நான் சிறுமியாக இருந்தபொழுது, என் அம்மாவின் மாமா பையனுக்கு மெலட்டூரில் மிக விமரிசையாக பூணூல் போட்டார்கள். எங்கள் அம்மாவின் மாமா குடுபத்தினர் மெலட்டூர் பாகவத மேளாவைச் சேர்ந்தர்வர்கள் என்பதால் இசை ஞானம் அதிகம்.அவர்கள் குடும்ப நிகழ்ச்சிகளில் கச்சேரி இல்லாமல் இருக்காது. நான்கு நாட்கள் நடந்த பூணூல் நிகழ்ச்சியில் ஒரு நாள் மாலை மதுரை சோமு கச்சேரி. கச்சேரி நடந்து கொண்டிருந்தபொழுது திடீரென மழை பொழிய ஆரம்பித்து விட்டது. கச்சேரி கேட்டுக்கொண்டிருந்த எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்து சந்தோஷமாக சிரித்துக் கொண்டனர். எனக்கு பின்னர்தான் தெரிந்தது அவர் பாடிய ராகம் அமிர்தவர்ஷினி என்பதும், அதைப் பாடினால் மழை வரும் என்பதும். அந்தக் காலம் மழைக்காலமா? அல்லது நிஜமாகவே சோமு அமிர்தவர்ஷினி பாடியதால் மழை வந்ததா? என்றெல்லாம் எனக்குத் தெரியவில்லை, ஆனால் இந்த நிகழ்ச்சியும், அதை எல்லோரும் சிலாகித்து பேசியதும் நினைவில் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மெலட்டூரில் //

      மெலட்டூர் விஸ்வநாதன் என்றொரு எழுத்தாளர் இருந்தாரோ!

      அமிர்தவர்ஷினி பாடலுக்கு மழை... ஆனந்த வெள்ளமாயிருந்திருக்கும்.

      நீக்கு
    2. அந்தக் காலத்தில் பாட்டுப் பாடி மழை வருவது நடந்திருக்குதென்பது உண்மைதான் எனச் சொல்கிறார்கள்.

      நீக்கு
    3. ஆஹிரி ராகம் பாடினால் அன்னம் கிடைக்காது என்றும் சொல்வார்கள்!

      நீக்கு
  28. மதுரை சோமு, மீனாக்ஷி அம்மனை கேசாதி பாதம் வர்ணித்து ஒரு விருத்தம் பாடுவார். பாடும்பொழுது அவரும் உணர்ச்சிவசப்படுவார், நமக்கும் நெக்குருகும்.

    பதிலளிநீக்கு
  29. இன்று எனிளைய மகன் திருப்பதி செல்கிறான் அவனுக்கு ஆதார் கார் விஷயத்தை நினைவு படுத்தி இருக்கிறேன் திருமலையில் தேவஸ்தான பஸ்கள் இருக்குமே இலவச சேவையாக

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்னூறு ரூபாய் டிக்கெட் - ஆன்லைன் புக்கிங் என்றால் ஆதாரம் அவசியம். வேட்டியும் அவசியம்! நன்றி ஜி எம் பி ஸார். ஆனால் வேட்டி அங்கேயே விலைக்கோ, வாடகைக்கோ கிடைக்கும்!

      நீக்கு
    2. ஹா ஹா ஹா இந்த வேட்டிப் பிரச்சனை பெரிய பிரச்சனையாக இருக்கும்போலிருக்கே:)...

      அப்போ பெண்களுக்கும் விதிமுறை இருக்கோ அங்கு? அதாவது சாறி, பாவாடை தாவணி தவிர, ஜீன்ஸ் .. சுடிதார் அப்படிப் போடக்கூடாது என்பதுபோல?

      நீக்கு
    3. எஸ்விபிசி சானலில் திருமலா, திருப்பதி தரிசனம் விதிமுறைகள், உடை அணியும் முறை எல்லாமும் தினமும் வந்து கொண்டே இருக்கும். பெண்கள் ஜீன்ஸ், டீ ஷர்ட், ஷர்ட் அணியக் கூடாது. சல்வார், குர்த்தா, துப்பட்டாவுடன், சுடிதார், குர்த்தா, துப்பட்டாவுடன் அணியலாம். துப்பட்டா கட்டாயம் இருக்கணும்.

      நீக்கு
    4. //எஸ்விபிசி சானலில் திருமலா, திருப்பதி தரிசனம் விதிமுறைகள், உடை அணியும் முறை எல்லாமும் தினமும் வந்து கொண்டே இருக்கும். //

      டீவியே அதிகம் பார்ப்பதில்லை... அதிலும் இந்தச் சேனல்... ஹிஹிஹி...

      நீக்கு
  30. மீ தான்ன்ன் 1ஸ்ட்டூஊஊஉ அதாவது என் செக் ஐ முந்திட்டேன்ன்ன்ன்ன்ன்ன்:)... சரி விடுங்கோ போனாப் போகுது:)..

    எதுக்கு முதல் பூஸார் ஒரு கண்ணை மூடிட்டார்ர்ர்ர்:).. திருப்பதியில சாப்பிடும்போது ஆம்பாறு பட்டுவிட்டதோ?....
    எதுக்கும் கொம்பியூட்டரூடாக வருகிறேன்ன்ன்:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அதிரா... நீங்கள் சொன்ன டாஸ்க் முடிக்க முடியவில்லை என்கிற வருத்தம்தான்...........!!!

      நீக்கு
    2. ஹா ஹா ஹா அந்த வைர அட்டியல்தானே.. ஆவ்வ்வ் விடுங்கோ ஸ்ரீராம் விடுங்கோ.. பெருமாள் எங்கே போயிடப்போறார்ர்.. அடுத்த தடவை பெருமாளையும் பார்த்து, அட்டியலையும் பிடுங்கிடலாம். ஹையோ டங்கு ஸ்லிப்பாச்சு.. அட்டியலையும் பார்த்திடலாம்:)..

      நீக்கு
    3. ஹா... ஹா... ஹா... பெருமாள் ஏற்கெனவே என்மேல ஏதோ கடுப்புல இருக்காப்ல... இது வேறயா!!!

      நீக்கு
  31. //எதுக்கு முதல் பூஸார் ஒரு கண்ணை மூடிட்டார்ர்ர்ர்:)//

    :P ஸ்மைலி போடறார் அந்த பூனாச்சு!

    பதிலளிநீக்கு
  32. //"வேறொரு பெண் வாங்கி கொண்டாள். அவள்தான் உள்ளே சென்று விட்டாளே" என்றோம்.//

    ஹா ஹா ஹா முடியல்ல பெருமாளே.. என்னால முடியல்ல:)

    பதிலளிநீக்கு
  33. //அச்சச்சோ... இருங்க நானும் தேடிப் பார்க்கிறேன்...//

    நம் ராசி, கடைசி இடத்தில்(தான்) எங்கள் வண்டி அகப்பட்டது. 150 ரூபாய் வாங்கிக்கொண்டு நகர்ந்தார் அந்த நல்ல நண்பர்.//

    பூஸாரும் சேர்ந்து தேடியதால்தான் உங்கள் வாகனத்தைப் பிடிச்சீங்க இல்லை எனில்:)).. இதுக்குத்தான் ஒரு பூஸ் வேணும்கிறது:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனால் பூசார் பதிவில்தான் தேடுகிறார்... அங்கே எங்களுடன் தேடவில்லையே...!!!

      நீக்கு
  34. //அந்த பயம் அவருக்கு! /// அது நான் சொல்ல மறந்த சம்பவம். //

    ஹா ஹா ஹா உண்மையில் உங்களுக்கு நல்லா எழுத வருது ஸ்ரீராம்.. ஆனா என்னான்னா கொஞ்சம் சிரிக்காம பேசுறீங்க:)).. சிரிச்சுச் சிரிசுப் பேசினால் நீங்க எங்கயோ போயிடுவீங்க:)) ஹா ஹா ஹா:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஹா ஹா ஹா உண்மையில் உங்களுக்கு நல்லா எழுத வருது ஸ்ரீராம்..//

      நன்றி அதிரா...

      //ஆனா என்னான்னா கொஞ்சம் சிரிக்காம பேசுறீங்க:)).. சிரிச்சுச் சிரிசுப் பேசினால் நீங்க எங்கயோ போயிடுவீங்க:)) ஹா ஹா ஹா:). //

      முயற்சிக்கிறேன்!!!

      நீக்கு
  35. //பின்னர் விசாரித்துக்கொண்டு எதிரே வராகப் பெருமாள் கோவில் சென்றோம். திருப்பதி பெருமாளுக்கே அவர்தான் இடம் கொடுத்தவராம்.//

    ஆவ்வ்வ் அப்போ நீங்க பெரியவரைத்தான் பார்த்திருக்கிறீங்க.. இவரின் அனுமதி பெற்றால்தானாக்கும் பெருமாளைத்தரிசிக்க விடுவார்:)..

    இலங்கையில ஒரு சூரன்போர் தினத்தின்போது, எப்பவும் பிள்ளையாருக்கு பூஜை பண்ணிவிட்டுத்தானெ மெயினுக்குப் போவினம், அப்படி ஐயர் செய்ய வெளிக்கிட்டபோது, நேரம் ஆகிவிட்டதாம், அப்போ பரிபாலன சபையினர் சொன்னார்களாம், இனிப்போய் பிள்ளையாருக்குப் பூஜை பண்ணி, பிறகு மிகுதி முடிச்சு சூரனைத்தூக்க நேரமில்லை, அதனால பிள்ளையாருக்கு முடிவில பூஜை செய்யலாம் என, வேறு வழியின்றி ஐயரும் விட்டு விட்டாராம்..

    சூரன் போர் நடந்து கொண்டிருக்கும் சமயம் வடக்கு வீதியில் வரும்போது, அப்படியே முருகன் வள்ளி தெய்வானையுடன், அந்த வாகனத்திலிருந்து அப்படியே கீழே விழுந்துவிட்டாராம்... உடனே ஐயர் தலையில் அடிச்சுக் கொண்டு... நான் சொன்னேனே யாரும் கேட்கவில்லையே என ஓடிப்போய் பிள்ளையாருக்குப் பூஜை செய்தாராம்.. இது உண்மையில் நடந்த கதை.

    அக்கதை நினைவுக்கு வந்துது இந்த வசனம் பார்த்ததும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனால் இதை எல்லாம் தற்செயல் லிஸ்ட்டில்தான் சேர்ப்பேன் அதிரா.. பிள்ளையார் அந்த அளவு கோபக்காரர், பொல்லாதவரா!

      நீக்கு
    2. உண்மைதான் ஸ்ரீராம், என்னாலும் நம்ப முடியவில்லை, பிள்ளையார் சொஃப்ட்டானவர்தானே, ஆனா தனை விட்டுவிட்டு தம்பிக்கு முன்னுரிமை கொடுத்ததைப் பொறுக்கமுடியாமல்....
      பொதுவா பிள்ளையார் உடனே செய்ய மாட்டார்ர்.. ரொம்ப இழுத்தூஊஊஊஊஊ இழுத்துத்தான் செய்து முடிப்பார் என்பினம்,:), அதனாலதான் நான் வைரவரிடம் போகப்பழகினேன் ஹா ஹா ஹா அவர்தான் உடனேயே செய்து முடிப்பவராம்:)).. ஆனா இக்கோயிலில்.... ஒருவேளை அந்தக் குருக்களின் நம்பிக்க்கையை வெளிப்படுத்த அப்படி ஆச்சோ என்னவொ...

      நீக்கு
    3. அவர்கள் தங்களையும் குழப்பிக்கொண்டு நம்மையும் குழப்புகிறார்களோ...

      எதையும் முறைப்படிச் செய்யவேண்டும் என்று சொல்லிக்கொடும் பாடம் சமயங்களில் ஓவர்டோஸ் ஆகிவிடுகிறது!

      நீக்கு
    4. //பொதுவா பிள்ளையார் உடனே செய்ய மாட்டார்ர்.. ரொம்ப இழுத்தூஊஊஊஊஊ இழுத்துத்தான் செய்து முடிப்பார் என்பினம்,:),// யாரு அது, என்னோட நண்பரை இழுத்து இழுத்துச் செய்து முடிப்பார்னு சொல்றது! விக்னங்களைக் களைவதே அவன் வேலையாக்கும். ஆனானப்பட்ட பரமேஸ்வரனே திரிபுர சம்ஹாரத்துக்குப் போனப்போத் தேரின் அச்சை முறித்தார். அவர் என்ன சொல்றார்! என்னையும் கவனிங்கோனு தான்! அவரையே கவனிச்சால் போதும்! மற்றபடி அதிரடி சொன்ன விஷயம் நடந்தப்போ முருகனுக்குத் தான் கோபம் வந்திருக்கு! என் அண்ணனை மறந்துட்டாங்களேனு. அதான் தடாலடியாக் கீழே விழுந்திருக்கார். :)))))

      நீக்கு
    5. கீசாக்கா.. விக்கினங்களைக் களைய அவருக்கு ரைம் எடுக்குமாமே:)).. பின்ன குண்டர் எல்லோ:) உடனே எழுந்து ஓடி வேலை பார்க்க மாட்டார்போல ஹா ஹா ஹா:))

      நீக்கு
  36. //ஒன்று வேகமாக வந்த ஒரு நபர், என் இளைய மகனிடம் "நீங்கள் உள்ளே செல்கிறீர்கள் இல்லையா? இந்த நூறு ரூபாயை உண்டியலில்போட்டு விடுங்கள்" என்று சொல்லி நூறு ரூபாயைக் கையில் கொடுத்து விட்டுப் போய்விட்டார். நம்பிக்கை! அவர் ஏன் உள்ளே வரவில்லை என்று(ம்) தெரியவில்லை.///

    உண்மைதான், சிலசமயம் இப்படிச் சம்பவங்கள் நம்மை திடுக்கிட வைக்கும், இவ்ளோ நம்பிக்கை வைத்தாரே என, அதுக்காகவே .. இப்படியான சம்பவங்கள், இன்னும் இன்னும் நம்பிக்கையாளர்களாக நம்மை மாற வைக்கும்.

    “நான் முன்பும் சொல்லியிருக்கிறேன், சின்ன வயசில, அம்மா ஏசுவா, ஆனா அப்பா சொல்லும் வார்த்தை “ சும்மா பொய் சொல்லாதீங்கோ..என் மகள் தப்புச் செய்ய மாட்டாள்”... இப்படிக் காதில் விழும்போதெல்லாம் நான் நினைப்பது, “ஹையோ ஆண்டவா அப்பா என்மீது எவ்ளோ நம்பிக்கை வைத்திருக்கிறார், அதனால நான் மிகவும் கவனமாக நடக்கோணும்” என... ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம் மீதான அடுத்தவர்களின் நம்பிக்கையைக் காப்பாற்றுவது நம் பெரிய பொறுப்பாகி விடுகிறது.

      நீக்கு
    2. அதேதான் ஸ்ரீராம் என்னிடம் இப்படி யாராவது கொடுத்தால் பக் பக்குனு அதே நினைவாவே இருக்கும்...உண்டியலில் போடும் வரை...

      கீதா

      நீக்கு
    3. நாமெல்லாம் ரொம்ப நல்லவங்க... இல்லை கீதா?!!!!!

      நீக்கு
  37. //அதுபோல, சரியாய் நாங்கள் வராகப்பெருமாள் கோவில் உள்ளே செல்ல முடியாமல் வெளியே வரிசையில் நின்றிருந்தபோது தாயார் வீதி உலா வந்தார்கள்! சுகதரிசனம். அம்மாக்கள் கருணை மயமானவர்கள்.
    //

    ஆவ்வ்வ்வ் திருப்பதி போன இடத்தில ஒரு உண்மையைப் பார்த்திருக்கிறீங்க:)..

    //அம்மாக்கள் கருணை மயமானவர்கள்.///
    யா யாஆ... அம்மாக்கள் எண்டால் பெண்கள் என அர்த்தம் ஹா ஹா ஹா:)..

    “பெருமாளே அந்த வைர அட்டியலை நீங்களே வச்சுக்கொள்ளுங்கோ...:)”... பெருமாள் பெருமாள்தான்:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்:) பயத்தில அப்படிச் சொல்லேல்லை ஸ்ரீராம்:), அது என்னன்னா.. அம்மாக்கள் அன்புடையோர் எனப் பெருமாள் உங்களுக்குக் காட்டியமைக்காக, மீ பெருமளுக்கு அட்டியலை விட்டுக் குடுக்கிறேனாம்ம்ம்ம்ம் அப்பூடி வரும் இது:)) ஹையொ பெருமாள் கனவில வந்து கலைச்சாலும் கலைப்பார்ர்:))

      நீக்கு
  38. ///அப்புறம் வராகப்பெருமாள் சன்னதிக்குள் சென்று, நினைவாய் நூறு ரூபாயை உண்டியலில் ஊட்டு, //

    ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஸ்பெல்லிங் மிசுரேக்கூஊஊஊஊஊஊஊஊஉ:).. மீக்கு டமில்ல டி எல்லோ:)) ஹா ஹா ஹா:).

    அதனாலென்ன ஸ்ரீராம், இப்படி சிலசமயம் தரிசிக்க முடியாமல் போவது இயல்புதான்.

    சிலசமயம் தரிசிக்கும் எண்ணமே இல்லாமல் ஒரு நண்பர் வீட்டுக்குப் போவோம், நண்பர் எதேச்சையாக வாங்கோவன் பெருமாளைப் பார்த்துவிட்டு வரலாம் என்பார்.. எதிர்பாராமல் தரிசனம் கிடைக்கும்... இப்படியும் சிலர் வாழ்வில் நடப்பதுண்டுதானே.

    அதனால் இன்னொரு தடவை பார்த்திட்டால் போச்சு.. ராகு கேது மாற்றம் உலைச்சலைக் குடுத்திருக்குதோ என்னமோ..

    ///சென்னை வந்தததும் உடனே புக் செய்து மறுபடி சென்றுவிடவேண்டும் என்று பேசிக்கொண்டிருந்தார்கள் - நானும்தான்! ஆனால் செல்லவில்லை.//

    ஹா ஹா ஹா இது இயற்கைதானே.. சுடச்சுட நிறைய விசயங்கள் நினைப்போம்ம், பின்பு சூடு ஆறிட்டால் விட்டுவிடுவோம்.

    மிகுதிக்கு வருகிறேன் கொஞ்சத்தால......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஸ்பெல்லிங் மிசுரேக்கூ//

      ஆஹா... நன்றி திருத்தி விட்டேன்!

      தரிசனம் கிடைக்காததில் எனக்கு பெரிய வருத்தமில்லை அதிரா!

      நீக்கு
    2. அதேதான் இதில் வருத்தப்பட என்ன இருக்கிறது.. கோயில் வளாகத்துள் போனாலே பெரிய புண்ணியம்தானே.

      நாம் ஒரு நேர்த்திக்கடன் வச்சுப் போய் அது நிறைவாற்ற முடியாவிட்டாலாவது கொஞ்சம் கவலைப்படலாம்..

      நீக்கு
  39. //பெருமாள் தரிசனத்துக்காக என்று செல்லாமல், கல்யாணத்துக்கு அல்லது வேறுவேலையாய்ப் போய் அப்படியே பெருமாளை தரிசிக்கலாம் என்று சென்றால் பெருமாள் தரிசனம் கொடுக்க மாட்டாராம். இன்னும் சிலர் சொன்ன வெர்ஷன் இது!///

    ஹா ஹா ஹா இப்புடியான சந்தர்ப்பத்தில்தான், நம்மீது வேருப்போடு கோபத்தொடு பொறாமையோடு இருப்பவர்களை அறிஞ்சு கொள்ளலாம்... சிலர் இது எதுவும் இல்லாமல் லூஸ் போலவும் பேசுவினம்:)).

    //திருப்பதி போய் பெருமாள் தரிசனம் செய்யாமல் வருவார்களா என்றால், ஆம், நாங்கள் இருக்கிறோம் உதாரணத்துக்கு!//
    ஹா ஹா ஹா திருப்பதி என்றாலே பெருமாள் தரிசனம்தான் என்றில்லையே:)).. நெல்லைத்தமிழனைக் கேட்டால்ல்.. அந்த லட்டுக் கிடைச்சதுதான் பெரிய விசயம் என லட்டுப் பற்றியே பேசிக்கொண்டிருப்பார்:)).. ஹையோ படிச்சதும் கிழிச்சு, அந்த புக்கிங் ரிக்கெட்டை ஒளிச்சு:) வச்ச இடத்தில ஒளிச்சிடுங்கோ:)).. அப்போதான் யாருக்கும் கிடைக்காது:)).

    //எப்படியோ, நான்கைந்து பதிவுகள் எழுத உதவினார் பெருமாள். கதை முடிந்தது, கத்தரிக்காய் காய்த்தது!
    //
    ஹா ஹா ஹா கத்தரிக்காய் எங்கே காய்த்தது.. பூஸார்தான் நித்திரையாகிட்டார் உங்கள் பெருமாள் கதை கேட்டு:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனால் அதிரா... சுமார் ஐம்பது அறுபது பேர்கள், நம்மோடு வந்தவர்கள், தரிசனம் செய்துவிட்டு வரும்போது, ஒதுக்கப்பட்டவர்கள் போல தரிசனம் கிடைக்காமல் நின்ற எங்களுக்கு அந்த நிமிடம் எப்படி இருந்திருக்கும்! என்னதான் நம்மேல்தான் தவறு என்றாலும்!

      நீக்கு
  40. //திரைபபடத்தில்தான் வில்லன். நிஜத்தில் ரொம்ப நல்லவர். //
    அப்படித்தான் எல்லோரும் சொல்கிறார்கள்.. நமக்கென்ன தெரியும்.

    // பிஸ்கட் கூடச் சாப்பிடாத அளவுக்கு நூறு சதவிகித சைவர்.
    //
    ஓ.. பிஸ்கட் சொக்கலேட் பிட்சா அனைத்திலும் முட்டை இருக்கே... இதனால்தான் நான் பிடிக்கும் நவராத்திரியில் ஆரம்பிச்சு கந்த சஷ்டியில் முடியும் 35-40 நாள் விரதத்துக்கு நாம் இப்படியான எதுவும் தொடுவதில்லை.... அந்நேரம் மீயும் யுத்த:) ஜைவமாக்கும்ம்ம்:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிஸ்கட் சொக்கலேட் பிட்சா அனைத்திலும் முட்டை இருக்கே...//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதிரா முட்டை இல்லாமலும் இருக்கே. நான் அறிந்த வரை (கல்லூரியில் ஒரு சின்ன கோர்ஸ் கத்துக் கொண்ட போது...) பொதுவாக சாக்கலேட், பிட்சா வில், பிஸ்கட்டில் முட்டை போடாமத்தான் செய்யறது. ஒரு சிலவற்றில் அதுவும் வெரி ரேர் ரெசிப்பிஸ் மட்டும் தான் சேர்ப்பதுண்டு.... அப்படிச் சேர்த்திருந்தால் இங்கு ரெட் டாட் காணப்படும் கவரில். சேர்க்காதவற்றிற்கு பச்சை டாட் காணப்படும்...பேக்கரிகளிலும் சென்னையில் க்ரீன், ரெட் போட்டுத்தான் வைக்கிறார்கள் கேக், டொனட், க்ராய்சென்ட் எல்லாவற்றிலும். பொதுவா டொனட் அண்ட் க்ராய்சன்ட் கூட முட்டைய்ல்லாமல்தான் செய்வதுண்டு...

      பொதுவா பிஸ்கட், பேக்கரி ஐட்டம்ஸ் தவிர்ப்பது மைதா, க்ரீம் என்பதால்...

      கீதா

      நீக்கு
    2. கீதா முட்டை சேர்த்திருந்தால், இன்கிறீடியன்ஸ் இன் கண்டு பிடிக்கலாம், பொதுவா இப்போ அனைத்திலும் சேர்க்கிறார்கள்.. சொஃப்ட்டுக்காக என நினைக்கிறேன்...

      லிப்ஸ்ரிக்கில் கூட மீன் செதில்கள் கலக்கிறார்களாம் சைனிங் க்காக...

      நீக்கு
  41. ///மதுரை சோமுவின் இந்தப் பாடல் எனக்கு ரொம்பப்பிடிக்கும்.///

    Sriram Balasubramaniyam
    2 years ago
    லால்குடியும் உடன் இழைகிறார். அருமை.///

    ஹா ஹா ஹா கண்டு பிடிச்சிட்டேனெல்லோ:))..

    பாடல் இனிமைதான் ஆனா எனக்கு இந்த சங்கீதம் பிடிப்பதில்லை, இதை ஜேசுதாஸ் அங்கிள் பாடியிருந்தால் இன்னும் சூப்பராக இருக்கும்.

    சமீபத்தில் எனக்கொரு பாடல் கிசைச்சுது...

    வசீகரா உன் நெஞ்சினிக்க... பாடலை, கர்நாடக சங்கீதத்தில் ஒருவர் பாடுகிறார், ஆனா அதில் பெரிதாக வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாததுபோலவும்.. ஏதோ ஒன்று மிஸ்ஸிங் போலவும் இருந்துது.. இது நிஜப்பாடலா இல்லை வேறா எனக் கலங்கிய வேளை ..ரேடியோவில் அப்பாட்டு ஒரிஜினல் போச்சுதே... அவ்வ்வ்வ் சத்தியமா இது நேற்று நடந்த ஜம்பவம்...:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அதிரா அந்த வசீகரா பாடல் 1950 யில் பாடப்பட்டிருந்தால் எப்படி இருந்திருக்கும் ம்யூசிக் என்று சுத்துது...வாட்சப்பில். அதில் இன்ஸ்ற்றுமென்ட்ஸ் தான் வித்தியாசம் அதிரா வேறு ஒன்றுமில்லை. அந்தக்கால கருவிகளில் எப்படி இசையமைப்பார்களோ அது..

      அது பாடியிருப்பது வைக்கம் விஜயல்க்ஷ்மி..அதாவது வாட்சப்பில் வந்த வெர்ஷன். ஒரிஜினல் பாம்பே ஜெயஸ்ரீ செமையா இருக்கும் பாடல்...

      கீதா

      நீக்கு
    2. ஆம்... அந்தப்பாடல் வாட்ஸாப்பில் க்ரூப் குரூப்பாக சுற்றிக் கொண்டிருக்கிறது!

      நீக்கு
    3. //ஆமாம் அதிரா அந்த வசீகரா பாடல் 1950 யில் பாடப்பட்டிருந்தால் எப்படி இருந்திருக்கும் ம்யூசிக் என்று சுத்துது...வாட்சப்பில்.//

      அதேதான் கீதா..

      நீக்கு
  42. ///சமீபத்தில் படித்த செய்தி ஒன்று... அதிரா ரசிக்கக் கூடும்!//

    ஆவ்வ்வ் இந்த செய்தி, வீடியோ நியூசாக வெளிவந்து, என் சிஸ்டர் இன் லொ அனுப்பியிருந்தா பார்த்தேன்.. அஞ்சுவுக்கும் மெயில் பண்ணினேன் என நினைக்கிறேன்....

    என்ன ஒரு விதி பாருங்கோ.. நல்லவேளை இனி அப்பூஸாருக்கு மரணம் கிட்டடியில் இல்லை.

    பதிலளிநீக்கு
  43. மொத்தத்தில் பதிவு இன்று வழமைபோல் ஜூப்பர்ர்.., பூஸ் என்றாலே அழகுதான்:)) அதிலும் பூஸாரின் படங்களுக்கு குடுத்த கப்ஸன்ஸ் இன்னும் ஒருபடி மெருகேற்றுது.. ஹா ஹா ஹா என் செக் வந்து என் காலை வாரி விடுவதற்கும் மீ ஓடிடுறேன்ன்ன்:))... ஆளை இன்னும் காணல்லியே:)) எங்காவது கீசாக்காவை விட மோசமா வழுக்கி விழுந்திட்டாவோ..:) ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:) மீ ரொம்ப நல்ல பொண்ணூ சின்ஸ் சிக்ஸ் இயேர்:))

    பதிலளிநீக்கு
  44. பூஸார் எல்லாம் செம ஸ்ரீராம் செம க்யூட்....அதுக்கான வசனங்களும் அருமை...ரொம்ப ரசித்தேன்...அதே போல பதிவும் சூப்பர்!!!

    அந்த நம்பியார் சுட்டி மட்டும்தான் இனி பார்க்கனும்..

    கீதா

    பதிலளிநீக்கு
  45. இங்கே யாராச்சும் என்னை தேடினீங்களா :)
    கீதாக்கா கோமதி அக்கா கீதா ரெங்கன் லாம் நிச்சயம் தேடியிருப்பாங்க :)
    நெல்லைத்தமிழனும் தேடியிருப்பார் :) ஹையோ புது ரெசிப்பி தயாரிப்பில் இருக்கோனு பயத்திலதான் தேடியிருப்பார் :)
    இந்த ஸ்கொட்டிஷ் பூனையும் ஹிட் ஸ்ரீராமும் நிச்சயம் என்னை தேடியிருக்கவே மாட்டாங்க :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கு உடம்பு சரியில்லையோ மறுபடி அலர்ஜி பிரச்னையோனு நினைச்சேன். இரண்டு நாட்கள் முன்னர் அதிரடியோட ப்ளாகிலோ அல்லது என்னோட கம்ப்யூட்டர் ப்ளாகிலோ நீங்கவரலையேனு அதிரடியைக் கேட்டேன். அவர் பார்க்கலை போல! இன்னிக்கு வந்தது மகிழ்ச்சி! நலம் தானே!

      நீக்கு
    2. அக்கா இப்போதான் உங்க பக்கம் போறேன் :) அது LENT ஆரம்பிச்சு அதனால் திங்கள் கிழமைலருந்து சர்ச் க்ளீனிங் வேலைல பிஸியாகிட்டேன் ..இன்னிக்குதான் டைம் கிடைச்சது

      நீக்கு
    3. ஏஞ்சல்... உங்களுக்கு (சாம்பல்) புதன் முதல் லென்ட் பீரியட் தொடங்குகிறது என்று எனக்குத் தெரியும். சாதாரணமாகவே நீங்கள் பிஸி. அதனால் வருவார்களோ, மாட்டீர்களோ என்று நினைத்திருந்தேன். அதிரா கூறிய கட்டியங்கள் நீங்கள் வருவீர்கள் என்பதை அறிவித்தன. மகிழ்வுடன் காத்திருந்தேன்!

      அதென்ன ஹிட் ஸ்ரீராம்? அரணை?

      நீக்கு
    4. //கீதாக்கா கோமதி அக்கா கீதா ரெங்கன் லாம் நிச்சயம் தேடியிருப்பாங்க :)
      நெல்லைத்தமிழனும் தேடியிருப்பார் :)//
      அல்லோ மிஸ்டர்ர்ர்ர் ஆசை தோசை அப்பளம் வடை.. மிச்சத்தைச் சொல்லுங்கோ கீசாக்கா.. என்னமோ சொல்லுவாவே கீசாக்கா இப்பூடி நிறைய :))

      ஆருமே உங்களைத் தேடல்லியாக்கும்:)).. ச்சும்மா கற்பனை உலகில் மிதக்கக்கூடா.. என்னமோ எல்லோருமே தன்ர நினைப்பிலயே இருக்கிற மாஆஆஆஆஆஆறியே:) ஒரு நெனப்பூஊஊஊஊ ஹா ஹா ஹா ஹையோ வழி விடுங்கோ மீ காசிக்கு ரிக்கெட் புக் பண்ணோணும்:))

      நீக்கு
    5. ///
      Geetha Sambasivam7 மார்ச், 2019 ’அன்று’ பிற்பகல் 5:04
      உங்களுக்கு உடம்பு சரியில்லையோ மறுபடி அலர்ஜி பிரச்னையோனு நினைச்சேன்.//

      சோழியன் குடும்பி சும்மா ஆடாதாமே:)) எதுக்கு இவ்ளோ அக்கறை? ஆருக்குமே இல்லாத அக்கறை.. என் வயலுக்கு வந்தாவோ நற்று நட்டாவோ?:) களை பிடுங்கினாவோ.. இலை துள்ளி விளையாடும் அதிராவுக்கு மஞ்ஞ்ஞ்ஞ்ஞ்சள் அறை:)த்துக் குடுத்தாவோ கீசாக்கா?:)).. ஹா ஹா ஹா எனக்கு என்னமோஅ அச்சூஊஊஊஊஊ மீ தேம்ஸ்ல குளிக்கிறேன்ன் சே..சே குதிக்கிறேன் எனச் சொல்ல வந்தேன்ன்:).

      நீக்கு
    6. கீசாக்கா மேலே நான் சொன்னது நீங்க அஞ்சுவைத் தேடியமைக்கு:)) ஹா ஹா ஹா.. விளக்கமாச் சொல்லிட்டால் கேள்வி எழாதாக்கும்:))

      நீக்கு
    7. //அதென்ன ஹிட் ஸ்ரீராம்? அரணை?//
      அது நீங்க வலையுலகில் ஹிட் ஆகிட்டீங்க எனச் சொல்றாபோல:)).. இதுக்குப் போய் அரணை யா என்றெல்லாம் புயுச்:) சொல் பாவிச்சால் எனக்கு எப்பூடிப் புரியுமாக்கும்.. அஞ்சூஊஊஊஊஉ ஓடிக் கமோன்ன்.. கர்ர்:) எதையாவது மளமளவென எழுதிட வேண்டியது பின்பு நான் ரொம்ப பிஸீஈஈஈஈஈ எனப் பில்டப்புக் குடுத்துவிட்டு ஊர் சுத்துறது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா:)) ஹையோ ஹையோ:)

      நீக்கு
    8. நீங்கள் நம் நண்பர் சொக்கன் சுப்பிரமணியம் தளம் வரவில்லையா அதிரா?!!!

      நீக்கு
    9. இல்லயே ஸ்ரீராம்.. நான் போனதில்லை அங்கு..

      நீக்கு
    10. //அதென்ன ஹிட் ஸ்ரீராம்? அரணை?//

      YESSSSSSSSSSSSSS

      சித் ஸ்ரீராம் மாதிரி ஹிட் ஸ்ரீராம் :)


      நீக்கு
    11. ஹலோ மியாவ் கீதாக்கா தேடினான்கா உங்களை கேட்டா பதில் சொல்லாம போயிருக்கிங்க கர்ர்ர்ர் :) இனிமே ஐ ஆம் நோட் யுவர் செக் :)

      நீக்கு
  46. ஹை இன்னிக்கு ஒரே பூனாச்சா இருக்கே இங்கே :)
    முதல் படம் பூஸார் எல்லாருக்கும் ஐ லவ் யூ சொல்றார் :)
    பூனைகள் இப்படி கண்ணடிச்சா ரொம்ப அன்பை வெளிப்படுத்தறாங்கன்னு எங்க வீட்டு குட்டி எலி சொல்லுச்சு :)

    பதிலளிநீக்கு
  47. / அங்கேயே இருந்தாலும் இந்த சத்தத்தில் வண்டிக்குள் போன் அடிப்பது அவருக்குக் கேட்க வழியிருக்காது"//
    அவ்வ்வ் :) தவறி போன் சைலண்டில் இருந்திருந்தா :) கேட்காதே
    திருப்பதி கோயிலுக்குள் இத்தனை மற்ற கோயில்களும் அருகில் இருக்கா !!
    அப்போ நல்லது தான் உங்களுக்கு எதற்காவது செல்லக்கிடைத்ததே .
    இது நம்பிக்கை நூறு ரூபாய் மாதிரி இங்கே நிறைய பேரை பார்த்திருக்கேன் 50 பவுண்ட் தாளை நிறைய பேர் என்கிட்டே கொடுத்து தட்டில் போட சொல்வாங்க மோஸ்ட்லீ வெள்ளைகாரங்க .
    //அவர் கிடக்கார்... வாடா... வந்து ஒரு வாய் அள்ளிப் போட்டுக்கோ" என்பார்கள் இல்லையா?//

    ஹாஹா அதுவும் மகன்களானா அம்மாங்க ஊட்டியே விடுவாங்க :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டிரைவர் கம்பார்ட்மெண்டுக்கும், நாங்கள் அமர்ந்திருந்த கம்பார்ட்மெண்டுக்கும் நடுவே ஒரு தடை உண்டு. மேலும் அங்கிருக்கும் வெளிச்சத்தத்தில் நம் போன் ஒலியா அவர் காதில் கேட்கும்!

      நீக்கு
  48. ///
    எல்லோரும் நிறைய லட்டு வைத்திருந்தார்கள். ஒருவர் எங்களுக்கும் நான்கு லட்டுகள் கொடுத்தார். எனினும் எங்களிடமும் முதல் நாள் தாயார் கோவிலில் வாங்கிய ஏராள லட்டுகள் கைவசம் இருந்தன.//

    ஆனா எங்களுக்கு ஒரு லட்டை கூட கண்ணில் காட்டவில்லை ஹிட் ஸ்ரீராம் அவர்களே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏஞ்சலின்... ஸ்ரீராமைப் பற்றி உங்களுக்குத் தெரிந்தது இவ்வளவுதான். அவர் நிறைய சொல்லுவார், மதுரை பிரேமவிலாஸ் முந்திரி அல்வா, திருப்பதி லட்டு...... என்று ஏராளமாக... அவரைப் பார்க்கப் போனாலும் இதிலெல்லாம் கொஞ்சம் கிள்ளித் தருவாரா என்பதே சந்தேகம்..... ஏகப்பட்ட முந்திரி அல்வாக்கள் வந்தபோது ஒரு 100 கிராம் சும்மா சில கிலோமீட்டர் தள்ளி இருக்கும் எனக்கு கொரியர் பண்ணியிருக்கலாமே.... ம்ஹூம்

      இதுக்கு கீதா ரங்கன் எவ்வளவோ பரவாயில்லை. இனிப்பு படங்களை வாட்சப்பில் அனுப்பிவைத்துவிடுவார். ஹாஹா

      நீக்கு
    2. //கோவிலில் வாங்கிய ஏராள லட்டுகள் கைவசம் இருந்தன.//

      ஹாஹா ஆமாம் நெல்லைத்தமிழன் இவர் ஸ்ரீராம் அத்தினி லட்டையும் அப்புறம் கிடைக்கிற ஸ்வீஎட்டெல்லாம் ஒளிச்சி வச்சிருக்கார் :) அதனால்தான மூணு பேர் இவர் தூங்குற நேரம் ஒளிஞ்சி பார்க்கிறாங்க அபேஸ் செய்ய :)

      நீக்கு
    3. திருப்பதியிலிருந்து திரும்பிய அந்த மூன்று நாட்கள் எங்களால் வேறு எதையும் நினைக்க முடியவில்லை! இல்லா விடில், லட்டுகளை ஒரு படம் எடுத்து வைத்திருப்பேன்!

      நீக்கு
    4. நெல்லைத்தமிழன்... உங்கள் போஸ்டல் அட்ரஸ் கொடுங்கள்... மதுரையிலிருந்து கொரியர் பண்ணச் சொல்கிறேன்!!!

      நீக்கு
    5. அப்பூடிப் போடுங்கோ ஸ்ரீராம்.. அத்தோடு ஒரு செல்பியும் அனுப்பி வைக்கச் சொல்லுங்கோ நெ.தமிழனை.. போஸ்ட்மானுக்கு ஈசியா இருக்குமெல்லோ ஆளைக் கண்டுபிடிச்சுக் குடுக்க:).

      நீக்கு
    6. ​ஹா... ஹா... ஹா... செல்பி கொடுத்தால்தான் போஸ்ட்மேன் டெலிவரி தருவாரோ!

      நீக்கு
    7. அதிரா, ஏஞ்சலின் - அப்பவும் பாத்தீங்களா? தன்னிடம் இருக்கும்போது அனுப்பாமல், மதுரையிலிருந்து அனுப்பச் சொல்லுவாராம்..... Apart from jokes,

      ஸ்ரீராம்.. நான் முதலிலேயே கெஸ் பண்ணலை... மலைக்குப் போயாச்சுனா எப்படியும் அவன் தரிசனம் கொடுத்துடுவான்னு எண்ணம். உங்க சிச்சுவேஷன்ல, எல்லோரோடும் சேர்ந்து போய் சேர்ந்து திரும்புவதால்தான் வேறு வாய்ப்புகளையே யோசிக்கமுடியாமல் போய்விட்டது. நிச்சயம் உங்கள் மாமியாருக்கு அவன் தரிசனம் கிடைக்கும். கீழ்த்திருப்பதி பஸ் ஸ்டாண்டிலேயே தின தரிசனத்துக்கு டோக்கன் தருவாங்க. அதையும் நீங்க வாங்கிவச்சுக்கோங்க.

      உங்க இடுகைகளைப் படித்தபிறகு எனக்குத் தோன்றியது... இந்த திருப்பதி டிரிப் சொல்லிக்கும்படியா உங்களுக்கு அமையலை.

      நீக்கு
  49. பூசாரின் படங்களும் அதற்கேற்ற கேப்ஷனும் சூப்பர்ப் :)
    //

    அச்சச்சோ... இருங்க நானும் தேடிப் பார்க்கிறேன்...//
    இதுதான் ரொம்பஆ பிடிச்ச படம் :)

    பதிலளிநீக்கு
  50. நம்பித்தாத்தா விவரங்கள் பல அறியாதவை ..சோமுத்தாத்தா குரல் உடன் லால்குடியும் இழைகிறார்னு நீங்க ரசித்ததையும் படித்தேன் :)


    அந்த லாஸ்ட் நியூஸ் பூஸார் அனுப்பினார் :) ஆனா எனக்கு ரொம்ப கோவம் ஓனர்ஸ் மேலே என்னதான் வெட் கிட்டே தூக்கிட்டு ஓடினாலும் அக்குழந்தையை வீட்டுல வச்சிருந்தா இப்படி நடந்திருக்காது :( ஆனா இனி வீட்டுக்குள்ளே வைப்பாங்கனு சொல்லியிருக்காங்க செய்தில படிச்சேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே... பாடல் கேட்கும்போது இதை எல்லாம் வேறு பார்ப்பீர்களா? நானே அதிரா சொன்னதும்தான் பார்த்தேன்! நினைவில்லை.

      நீக்கு
    2. //ஸ்ரீராம்.7 மார்ச், 2019 ’அன்று’ பிற்பகல் 7:18
      அடடே... பாடல் கேட்கும்போது இதை எல்லாம் வேறு பார்ப்பீர்களா? நானே அதிரா சொன்னதும்தான் பார்த்தேன்! நினைவில்லை.//

      நாங்களெல்லாம் மாமியாருக்குப் பேன் பார்த்துக் கொண்டே வேலியில் போகும் ஓணான் என்ன கலர் எனச் சொல்லுவோமாக்கும் ஸ்ரீராம்.. ஹா ஹா ஹா:)) ஹையோ என் வாய் இன்று அடங்கவே மாட்டுதாமே:)). ஏ அண்ணன் அரிசி எண்டார்ர்:)).. அதுபோலவே பொரியுதே:).. என் வாய்க்குச் சொன்னேன்:))..

      எல்லோரும் ஒளிச்சிருந்து வோச்சிங்:) அதிரா மட்டும் இப்போ தனியா கம்பி மேலெ.. அய்ய்ய் ஜாலி:))

      நீக்கு
    3. @அஞ்சு
      // ஆனா எனக்கு ரொம்ப கோவம் ஓனர்ஸ் மேலே என்னதான் வெட் கிட்டே தூக்கிட்டு ஓடினாலும் அக்குழந்தையை வீட்டுல வச்சிருந்தா இப்படி நடந்திருக்காது :( ஆனா இனி வீட்டுக்குள்ளே வைப்பாங்கனு சொல்லியிருக்காங்க செய்தில படிச்சேன்//

      இந்தக் கொடுமையைக் கேட்க இங்கின ஆருமே இல்லையாஆஆஆஆஆஆஆ?:)).. தான் மட்டும் ஊர் சுத்துவாவாம்:) வீட்டிலயே இருக்க மாட்டாவாம்ம்.. ஆனா பூஸாரை வீட்டுக்குள் வச்சிருக்கோணுமாம் கர்ர்ர்ர்ர்ர்ர்:)).. இதை இப்பவே பிபிசி நியூஸ்ல வாசிக்கச் சொல்லப்போறேன்ன்ன்ன்:)).. இப்பூடிக் கொடுமை எல்லாம் பார்த்துக் கொண்டு என்னால ச்ச்சும்மா இருக்க முடியாதூஊஊஊஊ:))..

      நீக்கு
    4. //நாங்களெல்லாம் மாமியாருக்குப் பேன் பார்த்துக் கொண்டே வேலியில் போகும் ஓணான் என்ன கலர் எனச் சொல்லுவோமாக்கும் ஸ்ரீராம்.. //

      ஹா.... ஹா..... ஹா....

      நீக்கு
    5. //அடடே... பாடல் கேட்கும்போது இதை எல்லாம் வேறு பார்ப்பீர்களா? நானே அதிரா சொன்னதும்தான் பார்த்தேன்! நினைவில்லை.///

      முந்தியும் இப்படி உங்க கமெண்டை பார்த்தேன் :) அன்னிக்கு பிசினாலே சொல்லாம விட்டேன் :))

      நீக்கு
    6. ஆஆஆஆஆஆ புளொக் ஒரு பக்கம் சரியும்போதே நினைச்சேன்ன் அஞ்சு லாண்டிங் என:)) ஹையோ ஸ்ரீராம் உங்கட புளொக்குக்கு இன்ஸ்ச்சூரன்ஸ் இருக்கோ தெரியல்லியே.. புளொக் சரிஞ்சாஅல் அதுக்கு மீயையும் பிடிக்கக்கூடா:)) இப்பவே ஜொள்ளிட்டேன்ன்ன்:))..

      நீக்கு
    7. வீட்டிலயே இருக்க மாட்டாவாம்ம்.. ஆனா பூஸாரை வீட்டுக்குள் வச்சிருக்கோணுமாம் கர்ர்ர்ர்ர்ர்ர்:)).. இதை //

      கர்ர்ர்ர் நான் என் பொண்ணு ஜெசி PAWS மழைல நனைஞ்சு ஈரமாகக்கூடாதுன்னு ஷூ ஸ்பெஷலா செய்ய ஆர்டர் கொடுக்க போறேன் தெரியுமா :)

      நீக்கு
    8. முதல்ல ஜெஸி இடம் பெமிசன் வாங்கிட்டீங்களோ?:).. உங்கட ஆசையை எல்லாம் ஜெஸியை வச்சு நிறைவேத்தப் பார்க்கிறா கர்ர்ர்:))

      நீக்கு
  51. வணக்கம் சகோதரரே

    இவ்வளவு தூரம் பல கஸ்டமான விளிம்புகளை தொட்டும், கடைசியில் கொடிமர நமஸ்காரம் மட்டும் கிடைக்கிற மாதிரி செய்து விட்டானே அந்த பரந்தாமன். வாரவாரம் திருப்பதி பயணம் படித்து வந்த எனக்கே மனசு மிகவும் கஸ்டப்பட்டது. அலைந்து திரிந்த தங்களுக்கெல்லாம் எப்படி இருந்திருக்கும்? சே.. படித்ததிலிருந்து மனதே சரியில்லை.! என்ன செய்வது? "எல்லாம் நன்மைக்கே" என்ற பாணியில் ஏற்றுக் கொள்ளவேண்டியதுதான்.. தங்களுக்கு அடுத்த தடவை திருப்பதி செல்லும் சமயம் சீக்கிரமாக வந்து, நல்ல மகிழ்ச்சியான பயணமாக அமைந்து, சிரமம் ஏதுமின்றி தரிசனம் கிடைக்க வேண்டுமென் நானும் அந்த ஏழுமலையானை வேண்டிக் கொள்கிறேன். அனைத்தும் நலமேயாகட்டும்.


    நம்பியார் பற்றிய செய்திகள் அருமை.. படங்களில்தான் அவர் வில்லனாக நடிப்பார். இயல்பாகவே நிஜ வாழ்க்கையில் அவர் மிகவும் நல்லவர் என பத்திரிகைகளின் வாயிலாக கேள்விப் பட்டுள்ளேன்.

    மதுரை சோமு பற்றிய தகவலும் அருமை. அவர் பாடல்கள் நன்றாக இருக்கும். நானும் கேட்டு ரசித்திருக்கிறேன்.

    பூசாரின் படங்கள் அனைத்தும் அழகாக இருக்கின்றது. கடைசி செய்தி மனதை வருத்தியது. ஆனால் பூனையின் உயிர் பிழைக்க வைத்த கடவுளுக்கு நன்றி.

    இந்த தடவையும், தங்கள் கவிதைகள் எதையும் காணோமே.! கதம்பம் அருமையாக இருந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா...

      உங்கள் வருத்தமும், வாழ்த்தும் என்னை நெகிழ்த்தி விட்டன. நன்றி.

      என் கவிதைகளைக் கேட்கும் உங்களுக்காகவாவது அடுத்த முறை ஒன்றாவது பகிரவேண்டும்!

      நன்றி அக்கா.

      நீக்கு
  52. உங்கள் திருப்பதி அனுபவம் இப்படி கொஞ்சம் சோகமாக முடிந்துவிட்டதே. இருந்தாலும் பரவாயில்லை மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்காமலா போகும்? கிடைத்திடும். அப்போது இந்த அனுபவம் உங்களைக் கவனமாக வழிநடத்தும்.

    நம்பியார் குறித்த செய்திகள் கொஞ்சம் அறிந்ததுண்டு. சுட்டியிலும் சென்று வாசித்தேன். ஸ்வாரஸ்யம் மட்டுமில்ல பல தகவல்கள். படத்தில் வில்லனாக வந்தாலும் நிஜ வாழ்க்கையில் நல்ல மனிதர்.

    மதுரை சோமு அவர்களின் பாடல்கள் திரைப்படத்தில் கேட்டதுண்டு. அதே பாடல்களை ரேடியோவிலும் கேட்டதுண்டு. மருதமலை மாமணியே முருகைய்யாவை மறக்க முடியுமா?

    அந்த பூனை பற்றிய செய்தி முதலில் அடடா என்று சொல்ல வைத்தது. வாசித்ததும் காப்பாற்றப்பட்டது மகிழ்ச்சி.

    அனைத்தும் நன்றாக இருந்தது ஸ்ரீராம்ஜி.

    படங்கள் எல்லாம் நன்றாக இருந்ததோடு அதற்கான உங்கள் வரிகள் ரசிக்க வைத்தது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சோகமெல்லாம் இல்லை துளஸிஜி... அந்த இரண்டு மூன்று நாட்கள் மட்டும் ஒரு மாதிரி அவமானமாக, அசட்டுத்தனமாக இருந்தது. பின்னர் சரியாகி விட்டது!

      அனைத்தையும் ரசித்ததற்கு நன்றி.

      நீக்கு
  53. ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா வேர்க் ஆல வந்ததும் வராததுமா கடகடவெனப் பதில் போட்டு விட்டு ஈசிச்செயாருக்குப் போயிட்டார் ஸ்ரீராம் ஹா ஹா ஹா:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மறுபடியும் ஒரு ரவுண்டும் வந்துட்டேன் அதிரா!

      நீக்கு
    2. ஹா ஹா ஹா மறுபடியும் வருவேன் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக் கொண்டு என, நீங்கதான் வட்ஸப்ல எனக்குப் போட்டீங்களே ஸ்ரீராம்:)).. ஹா ஹா ஹா ஹையோ ஒரு குடும்பத்திலயாவது குழப்பத்தை உண்டுபண்ணி விடாட்டில் நேக்கு வாயால தண்ணி இறங்காதூஊஊஊஉ:))

      நீக்கு
  54. ஸ்ரீராம் நீங்க கொடுத்திருந்த நம்பியார் சுட்டிக்குப் போனா ஓவியா பொண்ணு வந்து நிக்குது!! அம்மாடி! பயந்தே போனேன்!!!

    கீழே போவதற்குள் ஏகப்பட்ட மின்னல்கள் பளிச் பளிச் நு இழுக்க....ஹப்பா ஒரு வழிய ஒவ்வொன்னா படிச்சுட்டேன்.

    புத்தகத்துக்கு ஜெயின் முகவுரை சூப்பர்.

    80 வயதுக்குப் பிறகுதான் முடியே நரைக்கத் தொடங்கியதாம்....லேசாகத் தொப்பையும் வந்ததாம்...ஆச்சரியாமான தகவல்கள்..

    நாகேஷிடம் அவர் சொன்ன ரகசியம் தெரிஞ்சுச்சே!!

    எம்ஜி ஆர் செய்த துரோகம் என்று நம்பியார் சொல்லியிருந்ததை ரசித்தேன்..நல்ல நகைச்சுவை உணர்வு!. 100 துளிகள் இனிதான் வாசிக்கவேண்டும்

    நம்பியாரின் பேரன் தாத்தா பகிர்ந்ததையும் தன் நினைவுகளையும் தொகுத்து எழுதிய புத்தகத்தின் துளிகள் அருமை...

    இன்று எல்லாமே செம ஸ்வாரஸியம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படிச்சுட்டீங்களா... சமர்த்து....!

      நன்றி கீதா.

      நீக்கு
    2. ஆஆஆஆஆஆஆஅ கீதாவும் கம்பி மேலே:).. அஞ்சுவைக் காணமே இன்னும்:))

      நீக்கு
  55. வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் இது 194 ஊஊஊஊஊஊஊஊஊஊ:))

    பதிலளிநீக்கு
  56. ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் இது 200 ஊஊஊஊஊஊஊஊஉ அவ்வ்வ்வ்வ்வ்:)) சந்தோசம் பொயிங்குதே.. சந்தோசம் பொயிங்குதே...

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!